Chapter 10

Thirukkottiyur - (எங்கள் எம்)

திருக்கோட்டியூர்
Thirukkottiyur - (எங்கள் எம்)
Thirukkoshtiyur, known as the ornament of the Pandya Nadu, is also referred to as Goshteepuram. It is said that the Devas held a council in this village to plan the destruction of Hiranyakashipu, who tormented the three worlds. This place is impenetrable by Asuras. The son of Koorathāzhvār, Parasara Bhattar, stayed here for many days. This is also where + Read more
பாண்டிய நாட்டிற்குத் திலகமாய் விளங்குவது திருக்கோட்டியூர். இதற்குக் கோஷ்டீபுரம் என்றும் பெயர். மூவுலகையும் துன்புறுத்திய இரணியனை அழிப்பதற்குத் தேவர்கள் இவ்வூரில் ஆலோசனை நடத்தினார்களாம். அசுரர்கள் உள்ளே புகமுடியாத இடம் இது. ஆழ்வானின் குமாரர் பட்டர் பலநாட்கள் இங்கு எழுந்தருளியிருந்தார். + Read more
Verses: 1838 to 1847
Grammar: Āsiriyaththuṟai / ஆசிரியத்துறை
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
  • PT 9.10.1
    1838 ## எங்கள் எம் இறை எம் பிரான் * இமையோர்க்கு நாயகன் * ஏத்து அடியவர்
    தங்கள் தம் மனத்துப் * பிரியாது அருள் புரிவான் **
    பொங்கு தண் அருவி புதம் செய்யப் * பொன்களே சிதற இலங்கு ஒளி *
    செங்கமலம் மலரும் * திருக்கோட்டியூரானே 1
  • PT 9.10.2
    1839 எவ்வ நோய் தவிர்ப்பான் * எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் * நில மகள்
    செவ்வி தோய வல்லான் * திரு மா மகட்கு இனியான் **
    மௌவல் மாலை வண்டு ஆடும் * மல்லிகை மாலையோடும் அணைந்து * மாருதம்
    தெய்வம் நாற வரும் * திருக்கோட்டியூரானே 2
  • PT 9.10.3
    1840 வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை * எமக்கு
    ஒள்ளியான் உயர்ந்தான் * உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் **
    துள்ளு நீர் மொண்டு கொண்டு * சாமரைக் கற்றைச் சந்தனம் உந்தி வந்து அசை *
    தெள்ளு நீர்ப் புறவில் * திருக்கோட்டியூரானே 3
  • PT 9.10.4
    1841 ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் * ஈசற்கு இசைந்து * உடம்பில் ஓர்
    கூறு தான் கொடுத்தான் * குல மா மகட்கு இனியான் **
    நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி * இன் இள வண்டு * நல் நறும்
    தேறல் வாய்மடுக்கும் * திருக்கோட்டியூரானே 4
  • PT 9.10.5
    1842 வங்க மா கடல் வண்ணன் * மா மணி வண்ணன் விண்ணவர் கோன் * மதுமலர்த்
    தொங்கல் நீள் முடியான் * நெடியான் படி கடந்தான் **
    மங்குல் தோய் மணி மாட வெண் கொடி * மாகம்மீது உயர்ந்து ஏறி * வான் உயர்
    திங்கள் தான் அணவும் * திருக்கோட்டியூரானே 5
  • PT 9.10.6
    1843 காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் * சரம் செல உய்த்து * மற்று அவன்
    ஏவலம் தவிர்த்தான் * என்னை ஆளுடை எம் பிரான் **
    நா வலம் புவி மன்னர் வந்து வணங்க * மால் உறைகின்றது இங்கு என *
    தேவர் வந்து இறைஞ்சும் * திருக்கோட்டியூரானே 6
  • PT 9.10.7
    1844 கன்று கொண்டு விளங்கனி எறிந்து * ஆ நிரைக்கு அழிவு என்று * மா மழை
    நின்று காத்து உகந்தான் * நில மா மகட்கு இனியான் **
    குன்றின் முல்லையின் வாசமும் * குளிர் மல்லிகை மணமும் அளைந்து * இளம்
    தென்றல் வந்து உலவும் * திருக்கோட்டியூரானே 7
  • PT 9.10.8
    1845 பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து * அரி மாச் செகுத்து * அடியேனை ஆள் உகந்து
    ஈங்கு என்னுள் புகுந்தான் * இமையோர்கள் தம் பெருமான் **
    தூங்கு தண் பலவின் கனி * தொகு வாழையின் கனியொடு மாங்கனி *
    தேங்கு தண் புனல் சூழ் * திருக்கோட்டியூரானே 8
  • PT 9.10.9
    1846 கோவை இன் தமிழ் பாடுவார் * குடம் ஆடுவார் தட மா மலர்மிசை *
    மேவும் நான்முகனில் * விளங்கு புரி நூலர் **
    மேவும் நான்மறை வாணர் * ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் *
    தேவ தேவபிரான் * திருக்கோட்டியூரானே 9
  • PT 9.10.10
    1847 ## ஆலும் மா வலவன் கலிகன்றி * மங்கையர் தலைவன் * அணி பொழில்
    சேல்கள் பாய் கழனித் * திருக்கோட்டியூரானை **
    நீல மா முகில் வண்ணனை * நெடுமாலை இன் தமிழால் நினைந்த * இந்
    நாலும் ஆறும் வல்லார்க்கு * இடம் ஆகும் வான் உலகே 10