PT 8.6.10

இவற்றைப் பாடுக: தேவர்களும் வணங்குவர்

1707 கருமாமுகில்தோய்நெடுமாடக் கண்ணபுரத்தெம்மடிகளை *
திருமாமகளால்அருள்மாரி செழுநீராலிவளநாடன் *
மருவார்புயற்கைக்கலிகன்றி மங்கைவேந்தனொலிவல்லார் *
இருமாநிலத்துக்கரசாகி இமையோரிறைஞ்சவாழ்வாரே. (2)
1707 ## கரு மா முகில் தோய் நெடு மாடக் * கண்ணபுரத்து எம் அடிகளை *
திரு மா மகளால் அருள்மாரி * செழுநீர் ஆலி வள நாடன் **
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி * மங்கை வேந்தன் ஒலி வல்லார் *
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி * இமையோர் இறைஞ்ச வாழ்வாரே 10
1707 ## karu mā mukil toy nĕṭu māṭak * kaṇṇapurattu ĕm aṭikal̤ai *
tiru mā makal̤āl arul̤māri * cĕzhunīr āli val̤a nāṭaṉ **
maruvu ār puyal kaik kalikaṉṟi * maṅkai ventaṉ ŏli vallār *
iru mā nilattukku aracu āki * imaiyor iṟaiñca vāzhvāre-10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1707. Kaliyan, the generous king of Thirumangai in flourishing Thiruvāli, composed ten pāsurams on the lord of Thirukannapuram surrounded with tall palaces over which dark clouds float. If devotees learn and recite these poems, they will rule this large world as the gods praise them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கரு மா முகில் தோய் கறுத்த மேகங்கள் சூழ்ந்த; நெடு மாட பெரிய மாளிகைகளையுடைய; கண்ணபுரத்து திருக் கண்ணபுரத்து; எம் அடிகளை பெருமானைக் குறித்து; திரு மா மகளால் திருமகள் மூலமாக; அருள்மாரி அருள்மாரி என்ற பெயர் பெற்ற; செழு நீர் நிறைந்த நீருடைய; ஆலி வள நாடன் திருவாலி நாட்டுத்தலவரும்; மருவு ஆர் காளமேகம் போன்ற; புயல் கை ஔதார்யமுடையவரும்; மங்கை திருமங்கைக்கு; வேந்தன் பிரபுவுமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களை; ஒலி வல்லார் ஓத வல்லார்கள்; இரு மாநிலத்துக்கு இரண்டு லோகங்களுக்கும்; அரசுஆகி அரசர்களாகி; இமையோர் நித்தியமுக்தர்கள் திருவடிகளை; இறைஞ்ச வணங்குபவர்களாக; வாழ்வாரே வாழ்வரே