PT 7.8.2

வேதப்பொருளை அருளியவன் ஆமருவியப்பன்

1619 முன்இவ்வுலகேழும்இருள்மண்டியுண்ண
முனிவரொடுதானவர்கள்திசைப்ப * வந்து
பன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம்
பரிமுகமாய்அருளியஎம்பரமன்காண்மின் *
செந்நெல்மலிகதிர்க்கவரிவீசச்
சங்கமவைமுரலச்செங்கமலமலரையேறி *
அன்னமலிபெடையோடும்அமரும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1619 முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண *
முனிவரொடு தானவர்கள் திசைப்ப * வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் *
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின் **
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் *
சங்கம் அவை முரலச் செங் கமல மலரை ஏறி *
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 2
1619 muṉ iv ulaku ezhum irul̤ maṇṭi uṇṇa *
muṉivarŏṭu tāṉavarkal̤ ticaippa * vantu
paṉṉu kalai nāl vetap pŏrul̤ai ĕllām *
pari mukam āy arul̤iya ĕm paramaṉ kāṇmiṉ- **
cĕnnĕl mali katirk kavari vīcac *
caṅkam avai muralac cĕṅ kamala malarai eṟi *
aṉṉam mali pĕṭaiyoṭum amarum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-2

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1619. When the eon ended and all the seven worlds were covered with darkness and the sages and the Asurans were terrified, our highest god took the form of a horse and brought all the four Vedās up from the ocean and taught them to the sages. See, the god of the gods stays happily in rich Thiruvazhundur where the ears of good paddy swing in the wind like fans and conches in the water sound and male swans sit with their mates on the lovely lotuses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செந்நெல் செந்நெற் பயிரின்; மலி கதிர் நிறைந்த கதிர்கள்; கவரி வீச சாமரம் வீச; சங்கம் அவை முரல சங்குகள் ஒலிக்க; செங் கமல மலரை அழகிய தாமரையின்; ஏறி மேல் ஏறி; அன்னம் அலி அன்னங்கள்; பெடையோடும் பெடையோடு; அமரும் செல்வத்து வீற்றிருக்கும் சிறப்புடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; முன் முன்பு; இவ் உலகு ஏழும் இந்த ஏழு உலகங்களையும்; இருள் அஞ்ஞான அந்தகாரம்; மண்டி உண்ண மிகுந்து உண்ண; முனிவரொடு முனிவர்களும்; தானவர்கள் அசுரர்களும்; திசைப்ப பிரமித்து நிற்க; வந்து பரமபதத்திலிருந்து வந்து; பன்னு கலை பரந்து விரிந்த; நால் வேத நான்கு வேதங்களின்; பொருளை எல்லாம் பொருளை எல்லாம்; பரி முகம் ஆய் ஹயக்ரீவமூர்த்தியாய்த் தோன்றி; அருளிய அருளிய; எம் பரமன் எம்பெருமானை; காண்மின் கண்டு களியுங்கள்

Āchārya Vyākyānam

தேவாதி ராஜனே இவர் அமரர் கோவே என்றும் பலகாலும் அருளிச் செய்கிறார் – பாற் கடல் ஷீராப்தி நாதன் அனுபவம் =கீழ் அங்கு நின்றும் போந்து விபாவமான ஹயக்ரீவன் இதில் வேத பிரதானம் செய்து அருளி

முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம்  பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின் செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச்

+ Read more