Chapter 4

Thiruvarangam 1 - (உந்திமேல் நான்முகனை)

திருவரங்கம் 1
Thiruvarangam 1 - (உந்திமேல் நான்முகனை)
Thiruvarangam is commonly known as Srirangam. It is often referred to as the earthly Vaikuntha. This temple is highly esteemed as 'Koyil' by Sri Vaishnavas. Located amidst the Kaveri River, this sacred place houses the deity Sri Ranganatha and the goddess Sri Ranganayaki. The lord is seen reclining on Adisesha, the divine serpent. Additionally, he holds the unique honor of being the deity glorified by the ten āzhvārs.
திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்று கூறுவது வழக்கம். பூலோக வைகுண்டம் என்று இதைக் கூறுவார்கள். ஸ்ரீவைஷ்ணவர்கள் கோயில் என்றே இதனைச் சிறப்பித்துச் சொல்வார்கள். காவிரி நதிக்கு இடையில் இத்தலம் இருக்கிறது. பெருமாள் ஸ்ரீரங்கநாதர். தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பெருமாள் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக்கொண்டு இருக்கிறார். இவருக்குப் பதின்மர் பாடும் பெருமாள் என்றும் ஒரு பெருமை உண்டு.
Verses: 1378 to 1387
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will rule this world and then go to Vaikuṇṭam
  • PT 5.4.1
    1378 ## உந்திமேல் நான்முகனைப் படைத்தான் * உலகு உண்டவன்
    எந்தை பெம்மான் * இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் **
    சந்தினோடு மணியும் கொழிக்கும் * புனல் காவிரி *
    அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் * தென் அரங்கமே 1
  • PT 5.4.2
    1379 வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் * மணி நீள் முடி *
    பை கொள் நாகத்து அணையான் * பயிலும் இடம் என்பரால் **
    தையல் நல்லார் குழல் மாலையும் * மற்று அவர் தட முலை *
    செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் * தென் அரங்கமே 2
  • PT 5.4.3
    1380 பண்டு இவ் வையம் அளப்பான் சென்று * மாவலி கையில் நீர்
    கொண்ட * ஆழித் தடக் கைக் * குறளன் இடம் என்பரால் **
    வண்டு பாடும் மது வார் * புனல் வந்து இழி காவிரி *
    அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 3
  • PT 5.4.4
    1381 விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் * நகர் பாழ்பட *
    வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு * இடம் என்பரால் **
    துளைக் கை யானை மருப்பும் அகிலும் * கொணர்ந்து உந்தி * முன்
    திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் * தென் அரங்கமே 4
  • PT 5.4.5
    1382 வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் * வான் புக *
    அம்பு தன்னால் முனிந்த * அழகன் இடம் என்பரால் **
    உம்பர் கோனும் உலகு ஏழும் * வந்து ஈண்டி வணங்கும் * நல்
    செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 5
  • PT 5.4.6
    1383 கலை உடுத்த அகல் அல்குல் * வன் பேய் மகள் தாய் என *
    முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் * வாழும் இடம் என்பரால் **
    குலை எடுத்த கதலிப் * பொழிலூடும் வந்து உந்தி * முன்
    அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் * தென் அரங்கமே 6
  • PT 5.4.7
    1384 கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் * சகடமும் காலினால் *
    துஞ்ச வென்ற சுடர் ஆழியான் * வாழ் இடம் என்பரால் **
    மஞ்சு சேர் மாளிகை * நீடு அகில் புகையும் மறையோர் *
    செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் * தென் அரங்கமே 7
  • PT 5.4.8
    1385 ஏனம் மீன் ஆமையோடு * அரியும் சிறு குறளும் ஆய் *
    தானும் ஆய * தரணித் தலைவன் இடம் என்பரால் **
    வானும் மண்ணும் நிறையப் * புகுந்து ஈண்டி வணங்கும் * நல்
    தேனும் பாலும் கலந்த * அன்னவர் சேர் தென் அரங்கமே 8
  • PT 5.4.9
    1386 சேயன் என்றும் மிகப் பெரியன் * நுண் நேர்மையன் ஆய * இம்
    மாயையை ஆரும் அறியா * வகையான் இடம் என்பரால் **
    வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து * ஆர் புனல் காவிரி *
    ஆய பொன் மா மதிள் சூழ்ந்து * அழகு ஆர் தென் அரங்கமே 9
  • PT 5.4.10
    1387 ## அல்லி மாதர் அமரும் * திரு மார்வன் அரங்கத்தை *
    கல்லின் மன்னு மதிள் * மங்கையர் கோன் கலிகன்றி சொல் **
    நல் இசை மாலைகள் * நால் இரண்டும் இரண்டும் உடன் *
    வல்லவர் தாம் உலகு ஆண்டு * பின் வான் உலகு ஆள்வரே 10