PT 5.10.6

இராமன் இருக்கும் இடம் இது

1443 தம்பியொடுதாமொருவர்தன்துணைவி காதல்துணையாகமுனநாள் *
வெம்பியெரிகானகம்உலாவுமவர்தாம் இனிதுமேவுநகர்தான் *
கொம்புகுதிகொண்டுகுயில்கூவமயிலாலும் எழிலார்புறவுசேர் *
நம்பிஉறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.6
1443 தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் * துணை
ஆக முன நாள் *
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் * இனிது
மேவும் நகர் தான் **
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் * எழில்
ஆர் புறவு சேர் *
நம்பி உறைகின்ற நகர் * நந்திபுரவிண்ணகரம்
நண்ணு மனமே 6
1443 tampiyŏṭu tām ŏruvar taṉ tuṇaivi kātal * tuṇai
āka muṉa nāl̤ *
vĕmpi ĕri kāṉakam ulāvum avar-tām * iṉitu
mevum nakar-tāṉ ** -
kŏmpu kuti kŏṇṭu kuyil kūva mayil ālum * ĕzhil
ār puṟavu cer *
nampi uṟaikiṉṟa nakar * nantipuraviṇṇakaram-
naṇṇu maṉame-6

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1443. The lord who as Rāma went to the hot forest with his beloved wife and his brother Lakshmana stays happily in Nandipuravinnagaram where cuckoo birds sing from the branches and peacocks dance in the beautiful groves. O heart, think of that place and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தாம் ஒருவர் தாம் ஒருவரான ராமன்; தம்பியொடு தம்பி லக்ஷ்மணனையும்; தன் காதல் தன் பிரியமான; துணைவி துணைவி ஸீதையையும்; துணை ஆக துணை ஆகக்கொண்டு; முன நாள் முன்பொரு நாள்; வெம்பி எரி எரிகின்ற; கானகம் உஷ்ணமான காட்டிலே; அவர் தாம் இனிது இனிது; உலாவும் உலாவுமவர்; கொம்பு கிளைகளிலிருந்து; குதி கொண்டு குதித்து; குயில் கூவ குயில்கள் கூவ; மயில் ஆலும் மயில்கள் ஆட; எழில் ஆர் அழகிய; புறவு சேர் சோலைகளையுடைய; மேவும் பெருமான்; நகர் தான் இருக்கும் நகர் தான்; நம்பி உறைகின்ற கல்யாணகுணங்களுடைய பெருமான்; நகர் இருக்கும் நகரான; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! மனமே! அடைந்திடுவாயாக

Āchārya Vyākyānam

ராவண வதத்துக்கு ஹேது இதில்

தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள் வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர் நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே ——5-10-6-

தம்பி இத்யாதி – சௌகுமார்யத்துக்கு அத்விதீயரான தம்பியோடு கூட வெம்பி யெரி கானத்திலே உலாவினார் ஆய்த்து- (எவ்வாறு

+ Read more