Chapter 8

A Lullaby for Rama - (மன்னு புகழ்)

தாலாட்டு
A Lullaby for Rama - (மன்னு புகழ்)

The āzhvār refers to Sowrirajan, who resides in Thirukannapuram, as Rama.


pravēśam (Introduction)

In the preceding chapter, our revered Periyāzhvār lamented, through the voice of the blessed Dēvakī, the profound sorrow of having missed the divine childhood pastimes of Lord Kṛṣṇa. But was this poignant sense of separation confined only to

+ Read more

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சவுரிராஜனையே ஆழ்வார் இராமனாகக் குறிப்பிடுகிறார்.

Verses: 719 to 729
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will become dear to the Lord
  • PMT 8.1
    719 ## மன்னு புகழ்க் கௌசலை தன் * மணி வயிறு வாய்த்தவனே *
    தென் இலங்கைக் கோன் முடிகள் * சிந்துவித்தாய் செம்பொன் சேர் **
    கன்னி நன் மா மதில் புடைசூழ் * கணபுரத்து என் கருமணியே *
    என்னுடைய இன்னமுதே * இராகவனே தாலேலோ (1)
  • PMT 8.2
    720 புண்டரிக மலர் தன் மேல் * புவனி எல்லாம் படைத்தவனே *
    திண் திறலாள் தாடகைதன் * உரம் உருவச் சிலை வளைத்தாய் **
    கண்டவர் தம் மனம் வழங்கும் * கணபுரத்து என் கருமணியே *
    எண் திசையும் ஆளுடையாய் * இராகவனே தாலேலோ (2)
  • PMT 8.3
    721 கொங்கு மலி கருங்குழலாள் * கௌசலை தன் குல மதலாய் *
    தங்கு பெரும் புகழ்ச்சனகன் * திரு மருகா தாசரதீ **
    கங்கையிலும் தீர்த்த மலி * கணபுரத்து என் கருமணியே
    எங்கள் குலத்து இன்னமுதே * இராகவனே தாலேலோ (3)
  • PMT 8.4
    722 தாமரை மேல் அயனவனைப் * படைத்தவனே தயரதன் தன் *
    மா மதலாய் * மைதிலிதன் மணவாளா ** வண்டினங்கள்
    காமரங்கள் இசை பாடும் * கணபுரத்து என் கருமணியே *
    ஏமருவும் சிலை வலவா * இராகவனே தாலேலோ (4)
  • PMT 8.5
    723 பார் ஆளும் படர் செல்வம் * பரத நம்பிக்கே அருளி *
    ஆரா அன்பு இளையவனோடு * அருங்கானம் அடைந்தவனே **
    சீர் ஆளும் வரை மார்பா * திருக் கண்ணபுரத்து அரசே *
    தார் ஆரும் நீண் முடி * என் தாசரதீ தாலேலோ (5)
  • PMT 8.6
    724 சுற்றம் எல்லாம் பின் தொடரத் * தொல் கானம் அடைந்தவனே *
    அற்றவர்கட்கு அருமருந்தே * அயோத்தி நகர்க்கு அதிபதியே **
    கற்றவர்கள் தாம் வாழும் * கணபுரத்து என் கருமணியே *
    சிற்றவை தன் சொல் கொண்ட * சீராமா தாலேலோ (6)
  • PMT 8.7
    725 ஆலின் இலைப் பாலகனாய் * அன்று உலகம் உண்டவனே *
    வாலியைக் கொன்று அரசு * இளைய வானரத்துக்கு அளித்தவனே **
    காலின் மணி கரை அலைக்கும் * கணபுரத்து என் கருமணியே *
    ஆலி நகர்க்கு அதிபதியே * அயோத்திமனே தாலேலோ (7)
  • PMT 8.8
    726 மலை அதனால் அணை கட்டி * மதிள் இலங்கை அழித்தவனே *
    அலை கடலைக் கடைந்து * அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே **
    கலை வலவர் தாம் வாழும் * கணபுரத்து என் கருமணியே *
    சிலை வலவா சேவகனே * சீராமா தாலேலோ (8)
  • PMT 8.9
    727 தளை அவிழும் நறுங் குஞ்சித் * தயரதன் தன் குல மதலாய் *
    வளைய ஒரு சிலை அதனால் * மதிள் இலங்கை அழித்தவனே **
    களை கழுநீர் மருங்கு அலரும் * கணபுரத்து என் கருமணியே *
    இளையவர்கட்கு அருள் உடையாய் * இராகவனே தாலேலோ (9)
  • PMT 8.10
    728 ## தேவரையும் அசுரரையும் * திசைகளையும் படைத்தவனே *
    யாவரும் வந்து அடி வணங்க * அரங்க நகர்த் துயின்றவனே **
    காவிரி நல் நதி பாயும் * கணபுரத்து என் கருமணியே *
    ஏ வரி வெஞ்சிலை வலவா * இராகவனே தாலேலோ (10)
  • PMT 8.11
    729 ## கன்னி நன் மா மதில் புடை சூழ் * கணபுரத்து என் காகுத்தன்
    தன் அடிமேல் * தாலேலோ என்று உரைத்த * தமிழ் மாலை **
    கொல் நவிலும் வேல் வலவன் * குடைக் குலசேகரன் சொன்ன *
    பன்னிய நூல் பத்தும் வல்லார் * பாங்காய பத்தர்களே (11)