PMT 1.1

கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!

647 இருளிரியச்சுடர்மணிகளிமைக்கும்நெற்றி
இனத்துத்தியணிபணமாயிரங்களார்ந்த *
அரவரசப்பெருஞ்சோதியனந்தனென்னும்
அணிவிளங்குமுயர்வெள்ளையணையைமேவி *
திருவரங்கப்பெருநகருள்தெண்ணீர்ப்பொன்னி
திரைக்கையாலடிவருடப்பள்ளிகொள்ளும் *
கருமணியைக்கோமளத்தைக்கண்டுகொண்டுஎன்
கண்ணிணைகளென்றுகொலோகளிக்கும்நாளே? (2)
647 ## இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி *
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த *
அரவு அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் *
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி **
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி *
திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் *
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு * என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1)
647 ## irul̤ iriyac cuṭar maṇikal̤ imaikkum nĕṟṟi *
iṉattutti aṇi paṇam āyiraṅkal̤ ārnta *
aravu aracap pĕruñ coti aṉantaṉ ĕṉṉum *
aṇi vil̤aṅkum uyar vĕl̤l̤ai aṇaiyai mevi **
tiruvaraṅkap pĕru nakarul̤ tĕṇṇīrp pŏṉṉi *
tiraik kaiyāl aṭi varuṭap pal̤l̤ikŏl̤l̤um *
karumaṇiyaik komal̤attaik kaṇṭukŏṇṭu * ĕṉ
kaṇṇiṇaikal̤ ĕṉṟukŏlo kal̤ikkum nāl̤e (1)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

647. When will the day come when my two eyes behold the dark god who shines like a komalam jewel and rests on His beautiful white shining snake bed, with a thousand shining foreheads of the king of snakes, that remove the darkness with their bright diamonds? He rests in Srirangam as the clear water of the Ponni river washes His feet. When will my two eyes see Him and feel happy?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
திருவரங்க ஸ்ரீரங்கமெனும்; பெரு நகருள் பெரிய நகரத்தில்; இருள் இரிய இருள் சிதறி ஒழியும்படி; சுடர்மணிகள் ஒளி விடுகின்ற மணிகள்; இமைக்கும் விளங்கும்; நெற்றி நெற்றியையும்; இனத்துத்தி சிறந்த புள்ளிகளுடன்; அணி அழகான; பணம் படங்கள்; ஆயிரங்கள் ஆர்ந்த ஆயிரங்கள் உடைய; அரவு அரச நாக ராஜன்; பெரும் சோதி மிக்க தேஜஸ்ஸையுடைய; அனந்தன் என்னும் அனந்தாழ்வானாகிற; அணி விளங்கும் அழகு மிளிரும்; உயர் உயர்ந்த; வெள்ளை வெண்மையான; அணையை படுக்கையிலே; மேவி சயனித்து; தெண்ணீர் தெளிந்த நீர் கொண்ட; பொன்னி காவிரி ஆறு; திரை அலைகளாகிற; கையால் கைகளாலே; அடி வருட திருவடிகளை வருடிவிட்டபடி இருக்க; பள்ளி கொள்ளும் சயனித்திருக்கும்; கருமணியை நீலமணி போன்ற; கோமளத்தை பெருமானை; என் கண்ணிணைகள் என் இரு கண்களானவை; கண்டு கொண்டு பார்த்துக்கொண்டு; களிக்கும் நாளே! மகிழ்ந்திடும் நாள்; என்று கொலோ எந்நாளோ