TKT 1

மாலைக் கண்டு கொண்டேன்; இனி விடுகிலேன்

2032 நிதியினைப்பவளத்தூணை நெறிமையால்நினையவல்லார் *
கதியினைக்கஞ்சன்மாளக் கண்டுமுன்அண்டமாளும் *
மதியினைமாலைவாழ்த்தி வணங்கிஎன்மனத்துவந்த *
விதியினைக்கண்டுகொண்ட தொண்டனேன்விடுகிலேனே. (2)
2032 ## nitiyiṉaip paval̤at tūṇai * nĕṟimaiyāl niṉaiya vallār *
katiyiṉaik kañcaṉ māl̤ak * kaṇṭu muṉ aṇṭam āl̤um **
matiyiṉai mālai vāzhtti * vaṇaṅki ĕṉ maṉattu vanta *
vitiyiṉaik kaṇṭu kŏṇṭa * tŏṇṭaṉeṉ-viṭukileṉe-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2032. I bow and praise him, the wise Thirumāl, a treasure, a coral pillar, my fate. He killed Kamsan to protect the world. If the devotees think of him as a true path, he will give them Mokshā, and I am his devotee and he has entered my heart. I will not leave him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நிதியினை நிதிபோன்றவனும்; பவளத் தூணை பவழத் தூண் போல் இனியவனும்; நெறிமையால் முறையாக அவனை; நினைய வல்லார் சிந்திப்பவர்களுக்கு; கதியினை கதியாயிருப்பவனும்; முன் முன்பு; கஞ்சன் மாள கம்சனை முடித்து; கண்டு அண்டம் உலகங்களை; ஆளும் காத்தவனும்; மதியினை அடியார்களுக்கு அருள்பவனுமான; மாலை வாழ்த்தி திருமாலை வாழ்த்தி; வணங்கி வணங்கும்படி; என் மனத்து வந்த என் மனத்தில் வந்து நின்ற; விதியினை என் பாக்யத்தை எம்பெருமானை; கண்டுகொண்ட கண்டுகொண்ட; தொண்டனேன் தொண்டனான நான்; விடுகிலேனே இனி ஒருநாளும் விடமாட்டேன்

Āchārya Vyākyānam

அவதாரிகை-

கிழிச் சீரையோடே தனத்தைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை திரு மந்திர முகத்தாலே காட்டிக் கொடுக்கக் கண்டு தம்முடைய பூர்வ வ்ருத்தத்தையும் பேற்றின் கனத்தையும் அனுசந்தித்துத் தலை சீய்க்கிறார் –

பெரிய திருமொழியில்– திருப் பிரிதி -தொடங்கி-ஒரு சுற்றம் -அளவும் உகந்து அருளின தேசங்களை அனுசந்தித்தார் –

ஒரு சுற்றத்துக்கு மேல் -மாற்றம் உள்ள அளவும்

+ Read more