தனியன் / Taniyan

திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤

தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர *
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன்வருமூர் *
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் *
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே

taruccantap pŏḻil taḻuvu tāraṇiyiṉ tuyartīra *
tiruccanta viruttam cĕy tirumaḻicaip paraṉvarumūr *
karuccantum kārakilum kamaḻ koṅkum maṇanāṟum *
tiruccantattuṭaṉ maruvu tirumaḻicai val̤ampatiye
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤

Word by word meaning

தரு கற்பக மரம்; சந்தம் சந்தன மரம் ஆகியவற்றால் நிறைந்த; பொழில் தழுவு சோலைகளால் சூழ்ந்த; தாரணியின் உலகிலுள்ளவர்களுடைய; துயர்தீர துயரம் தீர; திருச்சந்த விருத்தம் திருச்சந்த விருத்தம் என்னும்; செய் திவ்யபிரபந்தத்தை அருளிச்செய்த; திருமழிசைப் பரன் திருமழிசைப் பிரான்; வருமூர் அவதரித்த ஊர் எது என்றால்; கருச்சந்தும் சந்தன மரங்களும்; கார் அகிலும் கருத்த அகிற்கட்டைகளும்; கமழ் கோங்கும் மணம் கமழும் கோங்குமரங்களும்; மணம் நாறும் பரிமளம் வீசப்பெற்ற; திருச்சந்தத்துடன் திருமகள் ஆர்வத்தோடு; மருவு பொருந்தி வாழும்; திருமழிசை திருமழிசை என்னும்; வளம் பதியே செல்வம் மிக்க திருப்பதியேயாகும்

திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க * - உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் * மாநீர் மழிசையே
வைத் தெடுத்த பக்கம் வலிது

ulakum maḻicaiyum ul̤l̤uṇarntu * tammil
pulavar pukaḻkkolāl tūkka * - ulakutaṉṉai
vaittĕṭutta pakkattum * mānīr maḻicaiye
vait tĕṭutta pakkam valitu
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤

Word by word meaning

புலவர் வேதம் அறிந்த ரிஷிகள்; உலகும் திருமழிசை தவிர மற்ற எல்லா உலகங்களையும்; மழிசையும் திருமழிசையையும்; தம்மில் தனித்தனியே; உள் உணர்ந்து தம் மனதில் ஆராய்ந்து; புகழ்க்கோலால் புகழை அளக்கும் துலாக்கோலை; தூக்க நாட்டி நிறுக்க; உலகு தன்னை உலகங்களை எல்லாம்; வைத்து எடுத்த வைத்து நிறுத்தப்பட்ட; பக்கத்தும் தட்டைக்காட்டிலும்; மாநீர் சிறந்த நீர்வளம் மிக்க; மழிசையே திருமழிசையை; வைத்தெடுத்த வைத்து நிறுத்தப்பட்ட; பக்கம் வலிது தட்டே வலிமை மிக்கதாய் இருந்தது