TCV 59

திருக்குடந்தையுள் வாழும் கோவலன்

810 சாலிவேலிதண்வயல் தடங்கிடங்குபூம்பொழில் *
கோலமாடநீடு தண்குடந்தைமேயகோவலா! *
காலநேமிவக்கரன் கரன்முரன்சிரம்மவை *
காலனோடுகூட விற்குனித்தவிற்கை வீரனே!
810 cāli veli taṇ vayal * taṭaṅkiṭaṅku pūmpŏzhil *
kola māṭam nīṭu * taṇ kuṭantai meya kovalā **
kālanemi vakkaraṉ * karaṉ muraṉ ciram avai *
kālaṉoṭu kūṭa * vil kuṉitta vil-kai vīraṉe (59)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

810. You, a hero, bent your bow, killed the Asurans Vakkaran, Karan and Muran and sent their heads to Yama. You, a cowherd, stay in flourishing Kudandai with ponds and blooming groves and rich fields protected by many fences.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சாலி வேலி நெற் பயிர்களை வேலியாக உடைய; தண் வயல் குளிர்ந்த வயல்களும்; தடங்கிடங்கு பெரிய அகழிகளும்; பூம்பொழில் பூத்து நிற்கும் தோட்டங்களும்; கோல மாடம் நீடு அழகாக ஓங்கின மாடங்களும் உடைய; தண் குடந்தை மேய குளிர்ந்த குடந்தையில் இருக்கும்; கோவலா கண்ணனே!; காலநேமி வக்கரன் காலநேமி தந்தவக்கரன்; கரன் முரன் கரன் முரன் ஆகிய அசுரர்களின்; சிரம் அவை தலைகளை; காலனோடு கூட யமலோகம் போய்ச் சேரும்படியாக; வில் குனித்த வில்லை வளைத்த; வில் கை வீரனே! வில்லாளியான வீரன் நீயன்றோ?

Āchārya Vyākyānam

59 -பாட்டு -அவதாரிகை –

பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் – பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில் கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா

+ Read more