Chapter 5

Indra’s Palace - (இரு விசும்பில்)

இந்திரனின் அரண்மனை
Verses: 2726 to 2738
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 5.14
    2726 இரு விசும்பில் மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் *
    மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல் *
    மன்னும் மணி விளக்கை மாட்டி * மழை கண்ணார் 14
  • PTM 5.15
    2727 பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் *
    துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப *
    அன்னம் உழக்க நெரிந்து
    உக்க வாள் நீலச் * சின்ன நறுந் தாது சூடி * ஓர் மந்தாரம் 15
  • PTM 5.16
    2728 துன்னு நறு மலரால் தோள் கொட்டி *
    கற்பகத்தின் மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர *
    இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல் *
    நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த * தாங்கு அரும் சீர் 16
  • PTM 5.17
    2729 மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் *
    பொன் அரும்பு ஆரம் புலம்ப * அகம் குழைந்து ஆங்கு 17
  • PTM 5.18
    2730 இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார் *
    அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் *
    இன் அமுதம் மாந்தி இருப்பர் * இது அன்றே 19
  • PTM 5.19
    2731 அன்ன அறத்தின் பயன் ஆவது * ஒண் பொருளும்
    அன்ன திறத்ததே ஆதலால் * காமத்தின்
    மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் 20
  • PTM 5.20
    2732 மான் நோக்கின் *
    அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் *
    மன்னு மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் *
    தென் உரையில் கேட்டு அறிவது உண்டு * அதனை யாம் தெளியோம்
    மன்னும் வட நெறியே வேண்டினோம் * 21
  • PTM 5.21
    2733 வேண்டாதார்
    தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் *
    அன்னது ஓர் தன்மை அறியாதார் * 22
  • PTM 5.22
    2734 ஆயன் வேய்
    இன் இசை ஓசைக்கு இரங்காதார் * மால் விடையின்
    மன்னும் மணி புலம்ப வாடாதார் * 23
  • PTM 5.23
    2735 பெண்ணைமேல்
    பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு *
    உன்னி உடல் உருகி நையாதார் * 24
  • PTM 5.24
    2736 உம்பர்வாய்த்
    துன்னு மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் *
    தம் உடலம் வேவத் தளராதார் * 25
  • PTM 5.25
    2737 காமவேள்
    மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய *
    பொன் நெடு வீதி புகாதார் * 26
  • PTM 5.26
    2738 தம் பூ அணைமேல்
    சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் *
    இன் இளவாடை தடவத் தாம் கண் துயிலும் *
    பொன் அனையார் பின்னும் திரு உறுக * 27