PTM 3.5 2717 தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் * மன்னிய தாமரை மா மலர் பூத்து * அம் மலர்மேல் முன்னம் திசைமுகனைத் தான் படைக்க * 5
PTM 3.6 2718 மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் * அம் மறை தான் மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் * நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? * 6
PTM 3.7 2719 நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது * ஓர் தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் * என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி * துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் * வெம் சுடரோன் 7
PTM 3.8 2720 மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் * இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து * தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் * இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் * என்னவும் கேட்டு அறிவது இல்லை * உளது என்னில் 8
PTM 3.9 2721 மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் * அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் * வீடு என்னும் தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே * 9 அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து * ஆங்கு அன்னவரைக் கற்பிப்போம் யாமே * அது நிற்க 10