PTM 11.44 2756 அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே * மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய் * முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய் * அன்ன திரு உருவம் நின்றது அறியாதே * என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் * பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு * மன்னு மறிகடலும் ஆர்க்கும் * மதி உகுத்த இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும் * தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ? * 44
PTM 11.45 2757 தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து * மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் * இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே * முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து * பின்னும் அவ் அன்றில் பேடை வாய்ச் சிறு குரலும் * என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்? 45
PTM 11.46 2758 கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய * கொல் நவிலும் பூங் கணைகள் கோத்துப் பொத அணைந்து * தன்னுடைய தோள் கழிய வாங்கி * தமியேன்மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் * பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே 48
PTM 11.47 2759 பேதையேன் கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின் * நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே * மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் * என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் * மன்னும் மலர் மங்கை மைந்தன் * கணபுரத்துப் 49
PTM 11.48 2760 பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் * என் இவைதான்? வாளா எனக்கே பொறை ஆகி * முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர் * மன்னு மருந்து அறிவீர் இல்லையே? 50
PTM 11.50 2762 மாலைவாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் * இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே * கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும் * என் இதனைக் காக்குமா? சொல்லீர் 52
PTM 11.51 2763 இது விளைத்த மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் * மா மதிகோள் முன்னம் விடுத்த முகில் வண்ணன் * 53