PT 8.2.1

என் மகளின் கைவளை கழன்று விட்டதே!

1658 தெள்ளியீர்! தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் *
வெள்ளியீர்! வெய்யவிழுநிதிவண்ணர் * ஓ!
துள்ளுநீர்க் கண்ணபுரம்தொழுதாளிவள்
கள்வியோ! * கைவளைகொள்வதுதக்கதே? (2)
1658 ## தெள்ளியீர் தேவர்க்கும் * தேவர் திருத் தக்கீர் *
வெள்ளியீர் வெய்ய * விழு நிதி வண்ணர் ** ஓ
துள்ளு நீர்க் * கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? * கை வளை கொள்வது தக்கதே? 1
1658 ## tĕl̤l̤iyīr tevarkkum * tevar tirut takkīr *
vĕl̤l̤iyīr vĕyya * vizhu niti vaṇṇar ** o
tul̤l̤u nīrk * kaṇṇapuram tŏzhutāl̤ ival̤
kal̤viyo? * kai val̤ai kŏl̤vatu takkate?-1

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1658. Her mother says, O faultless god of the gods with the lovely color of a precious jewel who know everything, my daughter worships Kannapuram surrounded with crashing water. Is she a thief like you? Is it right for you to make her bangles grow loose?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தெள்ளியீர்! தெளிந்த அறிவு உடையவரே!; தேவர்க்கும் தேவர்! தேவர்களுகெல்லாம் தேவனே!; திருத் தக்கீர்! திருமகளுக்குத் தகுதியானவனே!; வெள்ளியீர்! சுத்தமான ஸ்வபாவத்தை உடையவரே!; வெய்ய விழு நிதி காய்ச்சின சிறந்த பொன் போன்ற; ஓ! வண்ணர்! நிறமுடையவரே!; துள்ளு நீர் கரைபுரண்டு பெருகும் நீரை உடைய; கண்ணபுரம் கண்ணபுரப் பெருமானை; தொழுதாள் இவள் இப்படித் தொழுத இவள்; கள்வியோ? கள்வியாக இருக்கமுடியுமோ? இவளுடைய; கை வளை கைவளைகளை; கொள்வது கொள்ளை கொள்வது; தக்கதே? தகுந்தது தானோ?

Āchārya Vyākyānam

கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள் நமக்குக் கை வளை கொள்ளத் தகாமை என்  -என்று சௌரிப் பெருமாள் கேட்க – தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள் கீழ் –

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

1-தெள்ளியீர் -ஸர்வஞ்ஞத்வம் -இவள் கை வளை கொள்வது தக்கதே- 2-தேவர்க்கும்

+ Read more