Chapter 8
Āzhvār requests Him to cut his association with the mortal body - (மாற்றம் உள)
பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்
Addressing the Lord Nambi, the āzhvār pleads for the grace that leads to salvation. The suffering of worldly existence is severe (as expressed through metaphor). To alleviate this suffering, one must seek refuge at the divine feet of the Supreme Lord. The āzhvār fervently prays to the Lord to remove the obstacles posed by the physical body and grant him the grace to experience and enjoy the divine presence. He falls at the Lord's divine feet, beseeching Him for this liberation.
நம்பியை நோக்கி, உய்யும் வகையருள் எனல். பிறவித் துன்பம் மிகவும் கொடிது. (உவமை வாயிலால் உரைத்தல்) பரமனின் திருவடிகளில் சரணம் புகுந்தே இத்துன்பத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். உன்னை அனுபவிப்பதற்குத் தடையாக உள்ள இந்தத் தேக சம்பந்தத்தை நீக்கி அருளவேண்டும் என்று பகவானை முன்னிலைப்படுத்தி, அவனுடை திருவடிகளில் விழுந்து வேண்டுகிறார் ஆழ்வார்.
Verses: 2022 to 2031
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma
- PT 11.8.1
2022 ## மாற்றம் உள * ஆகிலும் சொல்லுவன் * மக்கள்
தோற்றக் குழி * தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம் **
ஆற்றங்கரை வாழ் மரம்போல் * அஞ்சுகின்றேன் *
நாற்றம் சுவை * ஊறு ஒலி ஆகிய நம்பீ 1 - PT 11.8.2
2023 சீற்றம் உள * ஆகிலும் செப்புவன் * மக்கள்
தோற்றக் குழி * தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி **
காற்றத்திடைப்பட்ட * கலவர் மனம்போல் *
ஆற்றத் துளங்கா நிற்பன் * ஆழி வலவா 2 - PT 11.8.3
2024 தூங்கு ஆர் பிறவிக்கள் * இன்னம் புகப் பெய்து *
வாங்காய் என்று சிந்தித்து * நான் அதற்கு அஞ்சி **
பாம்போடு ஒரு கூரையிலே * பயின்றால்போல் *
தாங்காது உள்ளம் தள்ளும் * என் தமரைக்கண்ணா 3 - PT 11.8.4
2025 உரு ஆர் பிறவிக்கள் * இன்னம் புகப் பெய்து *
திரிவாய் என்று சிந்தித்தி * என்று அதற்கு அஞ்சி **
இரு பாடு எரி கொள்ளியின் * உள் எறும்பேபோல் *
உருகாநிற்கும் * என் உள்ளம் ஊழி முதல்வா 4 - PT 11.8.5
2026 கொள்ளக் குறையாத * இடும்பைக் குழியில் *
தள்ளிப் புகப் பெய்திகொல் * என்று அதற்கு அஞ்சி **
வெள்ளத்திடைப்பட்ட * நரி இனம்போலே *
உள்ளம் துளங்காநிற்பன் * ஊழி முதல்வா 5 - PT 11.8.6
2027 படை நின்ற * பைந்தாமரையோடு * அணி நீலம்
மடை நின்று அலரும் * வயல் ஆலி மணாளா **
இடையன் எறிந்த மரமே * ஒத்து இராமே *
அடைய அருளாய் * எனக்கு உன் தன் அருளே 6 - PT 11.8.7
2028 ## வேம்பின் புழு * வேம்பு அன்றி உண்ணாது * அடியேன்
நான் பின்னும் * உன் சேவடி அன்றி நயவேன் **
தேம்பல் இளந் திங்கள் * சிறைவிடுத்து * ஐவாய்ப்
பாம்பின் அணைப் * பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ 7 - PT 11.8.8
2029 ## அணி ஆர் பொழில் சூழ் * அரங்க நகர் அப்பா! *
துணியேன் இனி * நின் அருள் அல்லது எனக்கு **
மணியே மணி மாணிக்கமே * மதுசூதா! *
பணியாய் எனக்கு உய்யும் வகை * பரஞ்சோதீ 8 - PT 11.8.9
2030 ## நந்தா நரகத்து அழுந்தாவகை * நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு * இன் அருள் செய்வாய் **
சந்தோகா தலைவனே * தாமரைக் கண்ணா! *
அந்தோ அடியேற்கு * அருளாய் உன் அருளே 9 - PT 11.8.10
2031 ## குன்றம் எடுத்து * ஆ நிரை காத்தவன் தன்னை *
மன்றில் புகழ் * மங்கை மன் கலிகன்றி சொல் **
ஒன்று நின்ற ஒன்பதும் * வல்லவர் தம்மேல் *
என்றும் வினை ஆயின * சாரகில்லாவே 10