Chapter 10

Messengers of the princess - (திருத்தாய் செம்போத்தே)

தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்
Messengers of the princess - (திருத்தாய் செம்போத்தே)
In this section, Parakala Nayaki, filled with an intense longing to be united with the Lord, calls upon birds like the crow, parrot, and cuckoo. She pleads with them to call out and invite the Lord to come to her. The verses are structured as if she is beseeching these birds to help convey her message and bring the Lord to her.
பறவைகளை நோக்கி மாயனே அழை எனல். பகவானை அடையவேண்டும் என்று பேரார்வம் கொண்ட பரகால நாயகி, காக்கை, கிளி, குயில் முதலியவற்றை விளித்து, பகவான் என்னிடம் வந்து சேருமாறு கூவி அழையுங்கள் என்று வேண்டிக் கொள்ளுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.
Verses: 1942 to 1951
Grammar: Veṇṭuṟai / வெண்டுறை
  • PT 10.10.1
    1942 ## திருத்தாய் செம்போத்தே *
    திரு மா மகள் தன் கணவன் *
    மருத் தார் தொல் புகழ் * மாதவனை வர *
    திருத்தாய் செம்போத்தே 1
  • PT 10.10.2
    1943 கரையாய் காக்கைப் பிள்ளாய் *
    கரு மா முகில் போல் நிறத்தன் *
    உரை ஆர் தொல் புகழ் * உத்தமனை வர *
    கரையாய் காக்கைப் பிள்ளாய் 2
  • PT 10.10.3
    1944 கூவாய் பூங் குயிலே *
    குளிர் மாரி தடுத்து உகந்த *
    மா வாய் கீண்ட * மணி வண்ணனை வர *
    கூவாய் பூங் குயிலே 3
  • PT 10.10.4
    1945 கொட்டாய் பல்லிக் குட்டி *
    குடம் ஆடி உலகு அளந்த *
    மட்டு ஆர் பூங் குழல் மாதவனை வர *
    கொட்டாய் பல்லிக் குட்டி 4
  • PT 10.10.5
    1946 ## சொல்லாய் பைங் கிளியே *
    சுடர் ஆழி வலன் உயர்த்த *
    மல் ஆர் தோள் * வட வேங்கடவனை வர *
    சொல்லாய் பைங் கிளியே 5
  • PT 10.10.6
    1947 கோழி கூ என்னுமால் *
    தோழி நான் என் செய்கேன்? *
    ஆழி வண்ணர் * வரும் பொழுது ஆயிற்று *
    கோழி கூ என்னுமால் 6
  • PT 10.10.7
    1948 காமற்கு என் கடவேன்? *
    கரு மா முகில் வண்ணற்கு அல்லால் *
    பூ மேல் ஐங்கணை * கோத்துப் புகுந்து எய்ய *
    காமற்கு என் கடவேன்? 7
  • PT 10.10.8
    1949 ## இங்கே போதும்கொலோ *
    இன வேல் நெடுங் கண் களிப்ப? *
    கொங்கு ஆர் சோலைக் * குடந்தைக் கிடந்த மால் *
    இங்கே போதும்கொலோ? 8
  • PT 10.10.9
    1950 ## இன்னார் என்று அறியேன் *
    அன்னே ஆழியொடும் *
    பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை *
    இன்னார் என்று அறியேன் 9
  • PT 10.10.10
    1951 ## தொண்டீர் பாடுமினோ *
    சுரும்பு ஆர் பொழில் மங்கையர் கோன் *
    ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் *
    தொண்டீர் பாடுமினோ 10