குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன் நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-4-
——————————————–
வியாக்யானம் – குலம் தான் -இத்யாதி – குலங்கள் எங்கும் பிறந்து இறந்து திரிந்தேன் – அநு லோம பிரதி லோம ரூபத்தாலே பிறந்த பிறவிக்கு ஓர் எல்லை இல்லையாய் ஆயிற்று