Chapter 7

Kannan as a toddler - (தொடர் சங்கிலிகை)

தளர்நடைப் பருவம்
Kannan as a toddler - (தொடர் சங்கிலிகை)
Raising a child who doesn't know how to walk is a mother's duty, and it's a mother's joy to see them take their first steps. Kanna, you are indeed a great walker and you walk so beautiful. Everyone says so! Can you show that great walking skill to me? Place your tender feet on the ground and take steps like a baby elephant!" says Yashoda. Those who sing these songs with devotion will be blessed with a son as illustrious as Lord Krishna.
நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! "கண்ணா, நீ யல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி: என்று எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடையழகை எனக்குக் காட்டமாட்டாயா? உன் மெல்லடித் தாமரைகளைத் தரைமீது மெல்ல வைத்து 'யானைக்குட்டி போல்' நடந்து வா!" என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணனைப் போன்று புகழ்மிக்க மகனைப் பெறுவார்கள்.
Verses: 86 to 96
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting devotees as children
  • PAT 1.7.1
    86 ## தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்னத் * தூங்கு பொன்மணி ஒலிப்ப *
    படு மும்மதப் புனல் சோர * வாரணம் பைய நின்று ஊர்வது போல் **
    உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப * உடை மணி பறை கறங்க *
    தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி * தளர்நடை நடவானோ (1)
  • PAT 1.7.2
    87 செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் * சிறுபிறை முளைப் போல *
    நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே * நளிர் வெண்பல் முளை இலக **
    அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட * அனந்தசயனன் *
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் * தளர்நடை நடவானோ (2)
  • PAT 1.7.3
    88 மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் * சூழ் பரிவேடமுமாய்ப் *
    பின்னல் துலங்கும் அரசிலையும் * பீதகச் சிற்றாடையொடும் **
    மின்னில் பொலிந்த ஓர் கார்முகில் போலக் * கழுத்தினில் காறையொடும் *
    தன்னில் பொலிந்த இருடிகேசன் * தளர்நடை நடவானோ (3)
  • PAT 1.7.4
    89 கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறிக் * கணகண சிரித்து உவந்து *
    முன் வந்து நின்று முத்தம் தரும் * என் முகில்வண்ணன் திருமார்வன் **
    தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து * என்னைத் தளிர்ப்பிக்கின்றான் *
    தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே * தளர்நடை நடவானோ (4)
  • PAT 1.7.5
    90 முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் * மொடுமொடு விரைந்து ஓட *
    பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன் * பெயர்ந்து அடியிடுவது போல் **
    பன்னி உலகம் பரவி ஓவாப் * புகழ்ப் பலதேவன் என்னும் *
    தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான் * தளர்நடை நடவானோ (5)
  • PAT 1.7.6
    91 ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் * உள்ளடி பொறித்து அமைந்த *
    இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல் * இலச்சினை பட நடந்து **
    பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின்மேல் * பின்னையும் பெய்து பெய்து *
    கரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை * தளர்நடை நடவானோ (6)
  • PAT 1.7.7
    92 படர் பங்கைய மலர்வாய் நெகிழப் * பனி படு சிறுதுளி போல் *
    இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி * இற்று இற்று வீழநின்று **
    கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல் * உடை மணி கணகணென *
    தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி * தளர்நடை நடவானோ (7)
  • PAT 1.7.8
    93 பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே * அருவிகள் பகர்ந்தனைய *
    அக்குவடம் இழிந்து ஏறித் தாழ * அணி அல்குல் புடை பெயர **
    மக்கள் உலகினில் பெய்து அறியா * மணிக் குழவி உருவின் *
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் * தளர்நடை நடவானோ (8)
  • PAT 1.7.9
    94 வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் * வேழத்தின் கருங்கன்று போல் *
    தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் * சிறு புகர்பட வியர்த்து **
    ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து * ஒன்றும் நோவாமே *
    தண் போது கொண்ட தவிசின் மீதே * தளர்நடை நடவானோ (9)
  • PAT 1.7.10
    95 திரை நீர்ச் சந்திர மண்டலம் போல * செங்கண்மால் கேசவன் * தன்
    திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி * திகழ்ந்து எங்கும் புடைபெயர **
    பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் * பெரியதோர் தீர்த்த பலம்
    தரு நீர் * சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் * தளர்நடை நடவானோ (10)
  • PAT 1.7.11
    96 ## ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய * அஞ்சனவண்ணன் தன்னை *
    தாயர் மகிழ ஒன்னார் தளரத் * தளர்நடை நடந்ததனை **
    வேயர் புகழ் விட்டுசித்தன் * சீரால் விரித்தன உரைக்கவல்லார் *
    மாயன் மணிவண்ணன் தாள் பணியும் * மக்களைப் பெறுவர்களே (11)