இரண்டாம் திருவந்தாதி தனியன்கள் / 2nd Thiruvandāthi taṉiyaṉkal̤

என் பிறவி தீர இறைஞ்சினேன், இன்னமுதா *
அன்பே தகளியளித்தானை *
நன் புகழ் சேர் சீதத்தார் முத்துகள் சேரும் *
கடல் மல்லைப் பூதத்தார் பொன்னங்கழல்

ĕṉ piṟavi tīra iṟaiñciṉeṉ, iṉṉamutā *
aṉpe takal̤iyal̤ittāṉai *
naṉ pukaḻ cer cītattār muttukal̤ cerum *
kaṭal mallaip pūtattār pŏṉṉaṅkaḻal
திருகுருகைப்பிரான் பிள்ளான் / tirukurukaippirāṉ pil̤l̤āṉ

Word by word meaning

இன்னமுதா இனிய அமுதமான; அன்பே தகளி அன்பே தகளி என்ற இரண்டாம் திருவந்தாதியை; அளித்தானை அருளிச்செய்த; நன் புகழ் சேர் சிறந்த புகழை உடைய; சீதத்தார் குளிர்ந்த; முத்துக்கள் சேரும் முத்துக்கள் நிறந்த; கடல்மல்லை திருக்கடல்மல்லையில் அவதரித்த; பூதத்தார் பூதத்தாழ்வாரின்; பொன்னங்கழல் பொன் போன்ற அழகிய திருவடிகளை; என் பிறவி தீர என் பிறவி தீர; இறைஞ்சினேன் வாழ்த்தி வணங்கினேன்