திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்