திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரையல்லா திறைஞ்சேன் *
தனத்தாலும் ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் *
பாதங்கள் யாமுடைய பற்று

maṉattālum vāyālum vaṇ kurukūr peṇum
iṉattāraiyallā tiṟaiñceṉ *
taṉattālum etuṅ kuṟaivileṉ ĕntai caṭakopaṉ *
pātaṅkal̤ yāmuṭaiya paṟṟu
சொட்டைநம்பிகள் / cŏṭṭainampikal̤
Manaththaalum

Word by word meaning

குறைவிலேன் குறையும் எனக்கு இல்லை; மனத்தாலும் மனதினாலும்; வாயாலும் வாக்கினாலும், சரீரத்தாலும்; பேணும் வைத்த மாநிதி என்று பணியவும்; வண்குருகூர் சிறந்த திருகுருகூரை; இனத்தாரை சேர்ந்தவர்களைத் தவிர; அல்லாது மற்றவர்களை; இரைஞ்சேன் வணங்கமாட்டேன்; எந்தை எங்கள் ஸ்வாமியான; சடகோபன் நம்மாழ்வாருடைய; பாதங்கள் திருவடிகளை; யாமுடைய பற்று பற்றுவதினால்; தனத்தாலும் செல்வத்தினாலும்; ஏதும் எந்தவித