திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடையபற்று

pāṇṭiyaṉ kŏṇṭāṭap paṭṭar pirāṉ vantāṉĕṉṟu
īṇṭiya caṅkamĕṭuttūta - veṇṭiya
vetaṅkal̤oti viraintu kiḻiyaṟuttāṉ
pātaṅkal̤ yāmuṭaiyapaṟṟu
பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar

Word by word meaning

பாண்டியன் கொண்டாட பாண்டிய மன்னன் கொண்டாட; பட்டர்பிரான் வைணவர்களின் தலைவன்; வந்தான் என்று வந்தான் என்று; ஈண்டிய சங்கம் எடுத்து அநேக வெற்றிச் சங்குகள்; ஊத முழங்க; வேண்டிய காலத்துக்கு தேவைப்பட்ட; வேதங்கள் வேதார்த்தங்களை; ஓதி அதன் பொருளை தெள்ளத் தெளியச்சொல்லி; விரைந்து கிழி விரைந்து பொற்கிழியை; அறுத்தான் அறுத்தவனின்; பாதங்கள் அந்தத் திருவடிகளை; யாமுடைய நம்முடைய புகலிடம் என்று; பற்று பற்றுங்கள்