TCV 85

என்னைப் பாசங்களில் ஈடுபடுத்தி மயக்காதே

836 நச்சராவணைக்கிடந்த நாத! பாதபோதினில் *
வைத்தசிந்தைவாங்குவித்து நீங்குவிக்கநீயினம் *
மெய்த்தன்வல்லையாதலால் அறிந்தனன், நின்மாயமே *
உய்த்துநின்மயக்கினில் மயக்கலென்னைமாயனே!
836 நச்சு அராவணைக் கிடந்த * நாத பாத போதினில் *
வைத்த சிந்தை வாங்குவித்து * நீங்குவிக்க நீ இனம் **
மெய்த்தன் வல்லை ஆதலால் * அறிந்தனன் நின் மாயமே *
உய்த்து நின் மயக்கினில் * மயக்கல் என்னை மாயனே (85)
836 naccu-arāvaṇaik kiṭanta * nāta pāta-potiṉil *
vaitta cintai vāṅkuvittu * nīṅkuvikka nī iṉam **
mĕyttaṉ vallai ātalāl * aṟintaṉaṉ niṉ māyame *
uyttu niṉ mayakkiṉil * mayakkal ĕṉṉai māyaṉe (85)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

836. O lord resting on the snake bed, I know your magic. You know how to make my mind that is interested in other worldly things leave them and be devoted to your lotus feet. You are truly clever. If you make me fascinated with you, what kind of fascination is that? O Māyan, give me your grace so I am not involved in worldly things.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நச்சு விஷத்தை கக்கும்; அராவணை பாம்புப் படுக்கையிலே; கிடந்த நாத சயனத்திருப்பவனே!; பாத உன் பாதங்களாகிற; போதினில் தாமரையிலே; வைத்த சிந்தை வைக்கப்பட்டுள்ள மனதை; வாங்குவித்து அதிலிருந்து திருப்பி; நீங்குவிக்க வேறு விஷயங்களில் போக்க; நீ இனம் நீ இன்னமும்; மெய்த்தன் உண்மையில்; வல்லை வல்லவனே என்பதை; அறிந்தனன் அறிந்திருக்கும்; ஆதலால் அடியேனான என்னை; நின் மாயமே ஆச்சரியசக்தியுடையவனே!; உய்த்து நின் உன்னுடைய; மயக்கினில் மாயச்செயலாலே; மயக்கல் உலக இன்பத்தில் தள்ளி; என்னை மாயனே! தயவுசெய்து மயக்காதே

Āchārya Vyākyānam

85 -பாட்டு அவதாரிகை –

என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த  போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் – முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி – இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் **மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன்

+ Read more