தனியன் / Taniyan

இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்

muṉṉai viṉaiyakala mūṅkiṟ kuṭiyamutaṉ
pŏṉṉaṅ kaḻaṟkamalap potiraṇṭum, - ĕṉṉuṭaiya
cĕṉṉik kaṇiyākac certtiṉeṉ, tĕṉpulattārk
kĕṉṉuk kaṭavuṭaiyeṉ yāṉ
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar
RNA.1-1
RNA.1-2

Word by word meaning

அணியாக ஆபரணமாக; சேர்த்தினன் பொருந்த வைத்துக் கொண்டேன்; யான் இப்படி அமுதனாரின் திருவடிகளைச் சூடபெற்ற நான்; தென்புலத்தார்க்கு யம கிங்கரர்கள்; என்னுக்கு என் அருகே வருவதற்கு; கடவுடையேன் எந்தக் காரணமும் இல்லை; முன்னை வினை முன் செய்த பாபங்கள்; அகல தொலைய; மூங்கிற்குடி மூங்கிற்குடி என்னும் குலத்தில்; அமுதன் தோன்றிய திருவரங்கத்தமுதனாரின்; பொன்னான் பொன் போன்றதுவும்; கமலப் போது தாமரை போன்றதுமான; கழல் இரண்டும் திருவடிகள் இரண்டும்; என்னுடைய சென்னிக்கு என்னுடைய தலைக்கு

இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங்கத் தமுது, ஓங்கும் அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

nayantaru periṉpa mĕllām paḻutĕṉṟu naṇṇiṉarpāl
cayantaru kīrtti irāmāṉuca muṉi tāl̤iṇai mel,
uyarnta kuṇattut tiruvaraṅkat tamutu, oṅkum aṉpāl
iyampum, kalittuṟai antāti ota icai nĕñcame!
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar
RNA.2-1
RNA.2-2
RNA.2-3

Word by word meaning

திருவரங்கத்து அமுது திருவரங்கத்தமுதனார்; நெஞ்சமே! ஓ மனமே!; நயம் தரு விஷயங்களால் உண்டாகும்; பேரின்பம் எல்லாம் சிற்றின்பங்கள் யாவும்; பழுது என்று வீணானது என்று அவைகளை ஒழித்து; நண்ணினர்பால் பெருமானைப் பணிந்தவர்களுக்கு; சயம் தரு கீர்த்தி வெற்றி என்னும் மோக்ஷம் உண்டாக்கும்; இராமாநுசமுனி இராமானுஜருடைய; தாள் இணைமேல் திருவடிகளைக்குறித்து; உயர்ந்த குணத்து சிறந்த குணசாலியான; ஓங்கும் அன்பால் தம் சிறந்த பக்தியால்; இயம்பும் அருளிச்செய்த; கலித்துறை கட்டளைக் கலித்துறையால் ஆன

இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்,
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே

cŏlliṉ tŏkai kŏṇṭuṉataṭip potukkut tŏṇṭu cĕyyum,
nallaṉpar ettamuṉ nāmamĕllāmĕṉṟaṉ nāviṉul̤l̤e
allum pakalum amarum paṭi nalku aṟucamayam
vĕllum parama, irāmāṉuca! itĕṉ viṇṇappame
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar
RNA.3-1
RNA.3-2
RNA.4-1
RNA.4-2

Word by word meaning

அந்தாதி ஓத இசை நூற்றந்தாதியை நீ அநுஸந்திப்பாயாக; அறுசமயம் ஆறுமதங்களையும்; வெல்லும் பரம கண்டித்தருளின; இராமாநுச! இராமாநுஜரே!; உனதடிப் போதுக்கு உங்கள் திருவடிகளிலே; தொண்டு செய்யும் தொண்டு செய்யும்; நல்அன்பர் பரம பக்தர்கள்; சொல்லின் தொகை சொல், தொகை, தொடைகளாலான; கொண்டு ஏத்தும் இப்பாசுரங்களைத் கொண்டு துதிக்கும்; உன் நாமம் எல்லாம் தங்கள் திருநாமங்களெல்லாம்; என்றன் நாவினுள்ளே என்தன் நாவினுள்ளே; அல்லும் பகலும் எப்பொழுதும்; அமரும்படி பொருந்தியிருக்கும்படி; நல்கு அருளவேண்டும்; இது என் விண்ணப்பமே இதுவே என் விண்ணப்பம்