பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

எங்கள் கதியே! இராமானுச முனியே! *
சங்கை கெடுத்தாண்ட தவராசா! *
பொங்கு புகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும் *
தங்கு மனம் நீ யெனக்குத்தா

ĕṅkal̤ katiye! irāmāṉuca muṉiye! *
caṅkai kĕṭuttāṇṭa tavarācā! *
pŏṅku pukaḻ maṅkaiyar koṉīnta maṟaiyāyiramaṉaittum *
taṅku maṉam nī yĕṉakkuttā
எம்பார் / ĕmpār
YengalGadiyeh

Word by word meaning

எங்கள் கதியே! எங்களுக்குப் புகலிடம் போன்றவரே!; இராமானுச முனியே! இராமானுச முனிவரே!; சங்கை ஸந்தேகங்களை; கெடுத்து ஆண்ட போக்கி காப்பாற்றிய; தவ ராசா! மகா தபஸ்வியே!; பொங்கு புகழ் உலகெங்கும் பரவிய புகழுடையவரான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வார்; ஈந்த தந்து அருளின; மறை ஆயிரம் வேத ரூபமான திருமொழி ஆயிரத்தையும்; அனைத்தும் மற்றுமுள்ள எல்லா பிரபந்தங்களையும்; தங்கு மனம் தரிக்கக்கூடிய மனதையும்; நீ எனக்குத் தா தாங்களெ தந்து அருள வேண்டும்; இராமானுசரிடம் எம்பாரின் பிரார்த்தனை