தனியன் / Taniyan

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி: ஆவித்யம் நிஹதம் தம:

kalayāmi kalitvamsam kavim loka tivākaram
yasya kopi: prakāsāpi: āvityam nihatam tama:
திருக்கோட்டியூர் நம்பி
PT.T-1-2
Kalayaami

Word by word meaning

यस्य गोभि: (யஸ்ய கோபி:) எவருடைய பாசுரங்களின்; प्रकाशाभि: (ப்ரகாஸாபி:) ஒளியினால்; आविद्यं (ஆவித்யம்) அஞானமாகிற இருள்; निहतं तम: (நிஹதம் தம்:) நீக்கப்பட்டதோ அப்படிப்பட்டவர்; लोकदिवाकरम् (லோக திவாகரம்) உலகத்துக்கே சூரியன் போன்றவரும்; कलिध्वंसं (கலித்வம்ஸம்) கலியின் கொடுமையைத் தொலைத்தவருமான; कविं (கவிம்) திருமங்கை ஆழ்வாரை; कलयामि (கலயாமி) வணங்குகிறேன்

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

வாழி பரகாலன் வாழி கலிகன்றி *
வாழி குறையலூர் வாழ் வேந்தன் - வாழியரோ *
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் *
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல்

vāḻi parakālaṉ vāḻi kalikaṉṟi *
vāḻi kuṟaiyalūr vāḻ ventaṉ - vāḻiyaro *
māyoṉai vāl̤ valiyāl mantiraṅkŏl̤ *
maṅkaiyar koṉ tūyoṉ cuṭarmāṉa vel
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār
VaazhiParakalan

Word by word meaning

பரகாலன் புற மதத்தினருக்கு யமன் போன்ற; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; கலிகன்றி கலியைக் கெடுத்த; வாழி திருமங்கை ஆழ்வார் வாழ்க; குறையலூர் வாழி குறையலூர் வாழும்படி; வாழ்வேந்தன் அதன் அரசனான; வாழியரோ திருமங்கை ஆழ்வார் வாழ்க; மாயோனை எம்பெருமானிடத்திலிருந்து; வாள்வலியால் தமது வாளின் வலிமையால்; மந்திரங்கொள் திருமந்திரத்தைப் பெற்றவரும்; தூயோன் அகப்புறத் தூய்மை உடையவருமான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வாரின்; சுடர்மான ஒளிமயமான பெருமையை உடைய; வேல்! வாழி வேல் வாழ்க

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லவமுதம் *
தமிழ் நன்நூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரண சாரம் *
பரசமயப் பஞ்சுக்கனலின் பொரி *பரக்காலன் பனுவல்களே

nĕñcukkirul̤kaṭi tīpam aṭaṅkā nĕṭum piṟavi
nañcukku nallavamutam *
tamiḻ naṉnūl tuṟaikal̤ añcukkilakkiyam āraṇa cāram *
paracamayap pañcukkaṉaliṉ pŏri *parakkālaṉ paṉuvalkal̤e
ஆழ்வான் / āḻvāṉ
PT.T-3-4
Nenjukku

Word by word meaning

பரகாலன் திருமங்கை ஆழ்வாரின்; பனுவல்களே அருளிச்செயல்கள் எப்படி என்றால்; நெஞ்சுக்கு மனதில் உண்டான; இருள் இருளை; கடி தீபம் போக்கக்கூடிய திருவிளக்காம்; அடங்கா ஒன்றுக்கும் அடங்காத; நெடும் பிறவி நீண்ட ஸம்ஸாரத் துயறம் போன்ற; நஞ்சுக்கு விஷத்தை அறுப்பதற்கான; நல்ல அமுதம் நல்ல அமுதமாம்; தமிழ் தமிழில்; நன்னூல் நல்ல நூல்களில் சொல்லப்பட்ட; துறைகள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்கிற; அஞ்சுக்கு ஐந்து இலக்கணங்களுக்கும்; இலக்கியம் இலக்கியமாம் இவை; ஆரண சாரம் வேதங்களின் ஸரமானவை; பர சமய பஞ்சுக்கு வேற்று மதங்களாகிய பஞ்சுக்கு; அனலின் பொறி நெருப்புப் பொறியாம்

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

எங்கள் கதியே! இராமானுச முனியே! *
சங்கை கெடுத்தாண்ட தவராசா! *
பொங்கு புகழ் மங்கையர் கோனீந்த மறையாயிரமனைத்தும் *
தங்கு மனம் நீ யெனக்குத்தா

ĕṅkal̤ katiye! irāmāṉuca muṉiye! *
caṅkai kĕṭuttāṇṭa tavarācā! *
pŏṅku pukaḻ maṅkaiyar koṉīnta maṟaiyāyiramaṉaittum *
taṅku maṉam nī yĕṉakkuttā
எம்பார் / ĕmpār
YengalGadiyeh

Word by word meaning

இராமானுச முனியே! இராமானுச முனிவரே!; சங்கை ஸந்தேகங்களை; கெடுத்து ஆண்ட போக்கி காப்பாற்றிய; தவ ராசா! மகா தபஸ்வியே!; பொங்கு புகழ் உலகெங்கும் பரவிய புகழுடையவரான; மங்கையர்கோன் திருமங்கை ஆழ்வார்; ஈந்த தந்து அருளின; மறை ஆயிரம் வேத ரூபமான திருமொழி ஆயிரத்தையும்; அனைத்தும் மற்றுமுள்ள எல்லா பிரபந்தங்களையும்; தங்கு மனம் தரிக்கக்கூடிய மனதையும்; நீ எனக்குத் தா தாங்களெ தந்து அருள வேண்டும்; இராமானுசரிடம் எம்பாரின் பிரார்த்தனை; எங்கள் கதியே! எங்களுக்குப் புகலிடம் போன்றவரே!

பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று *
கோலிப்பத விருந்த் கொற்றவனே! *
வேலை அணைத்தருளுங்கையாலடியேன் வினையை *
துணித் தருள வேணும் துணிந்து

mālait taṉiye vaḻi paṟikka veṇumĕṉṟu *
kolippata virunt kŏṟṟavaṉe! *
velai aṇaittarul̤uṅkaiyālaṭiyeṉ viṉaiyai *
tuṇit tarul̤a veṇum tuṇintu
எம்பார் / ĕmpār
PT.T-5

Word by word meaning

மாலை எம்பெருமானை; தனியே தனி வழியிலே சென்று; வழி பறிக்க வழி பறிக்க; வேணும் என்று வேண்டும் என்று; கோலிப்பதி இருந்த மரத்தடியில் மறைந்திருந்த; கொற்றவனே! திருமங்கை மன்னனே!; வேலை அணைத்து வேலை அணைத்து; அருளும் கையால் அருளும் கையால்; அடியேன் வினையை அடியேன் பாபங்களை; துணிந்து துணித்து; அருள வேணும் அருள வேண்டும்