நாச்சியார் திருமொழி தனியன்கள் / Nāchiyār Thirumozhi taṉiyaṉkal̤

அல்லி நாள் தாமரை மேலாரணங்கினின் துணைவி *
மல்லி நாடாண்ட மட மயில் - மெல்லியலாள் *
ஆயர் குல வேந்தனாகத்தாள் * தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு

allināḻ tāmaraimēl āraṇaṅgin in tuṇaivi⋆
mallināḍāṇḍa maḍamayil melliyalāḻ ⋆
āyar kulavēndan āgattāḻ⋆
ten puduvai vēyar payanda viḻakku
திருக்கண்ண மங்கை ஆண்டான் / tirukkaṇṇa maṅkai āṇṭāṉ
NAT-2

Word by word meaning

அல்லி நாள் அன்று அலர்ந்த; தாமரை மேல் தாமரைப் பூவின் மேல்; ஆரணங்கின் சிறந்த ஸ்வபாவமுடைய; இன் துணைவி திருமகளுக்கு, இனிய தோழியாகவும்; மல்லி நாடாண்ட மல்லி நாட்டை ஆ ண்ட; மடமயில் அழகிய மயில் போன்றவளாயும்; மெல்லியலாள் மென்மையான ஆண்டாள்; ஆயர்குல ஆயர்குல; வேந்தன் தலைவனான கண்ணனின்; ஆகத்தாள் திருமேனியில் விருப்பம் கொண்டவளாய்; தென்புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில்; வேயர் பயந்த பெரியாழ்வாரின் மகளாக வேயர்குல; விளக்கு விளக்காக இருந்தாள்