தனியன் / Taniyan

அமலனாதிபிரான் தனியன்கள் / Amalanādipirān taṉiyaṉkal̤

ஆபாத சூடமநுபூய ஹரிம் ஸயாநம்
மத்யேக வேரது ஹி துர் முதி தாந்தராத்மா *
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந் தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநந்தம்

āpāta cūṭamanupūya harim sayānam
matyeka veratu hi tur muti tāntarātmā *
atraṣṭrutām nayanayor viṣayān tarāṇām
yo niccikāya manavai munivāhanantam
பெரிய நம்பிகள் / pĕriya nampikal̤
Aaa-Paadha-chooda-1
Aaa-Paadha-chooda-2
Aaa-Paadha-chooda-3

Word by word meaning

य: எந்த திருப்பாணாழ்வார்; कवेरदुहितु: திருக்காவேரியின்; मध्ये நடுவில்; शयानं हरिं சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதரை; आपादचूडम् திருவடி முதல் திருமுடி வரை; अनुभूय கண் குளிர அனுபவித்து; मुदित अन्तरात्मा மகிழ்ந்த சிந்தையராய்; विषयान्तराणां அப்பெருமானைத்தவிர வேறு விஷயங்களை; नयनयो अद्रष्टतां தம் கண்கள் காண்மாட்டாமையை; निश्चिकाय அறுதியிட்டு அருளினாரோ; मुनिवाहनं லோகஸாரங்க முனியை வாஹனமாகக்கொண்ட; तं அப்படிப்பட்ட திருப்பாணாழ்வாரை; मनवे வணங்கக்கடவேன்

அமலனாதிபிரான் தனியன்கள் / Amalanādipirān taṉiyaṉkal̤

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை யுந்தி *
தேட்டருமுதர பந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய் *
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து *
பாட்டினாற் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே

kāṭṭave kaṇṭa pāta kamalam nallāṭai yunti *
teṭṭarumutara pantam tirumārvu kaṇṭam cĕvvāy *
vāṭṭamil kaṇkal̤ meṉi muṉiyeṟit taṉi pukuntu *
pāṭṭiṉāṟ kaṇṭu vāḻum pāṇar tāl̤ paraviṉome
திருமலை நம்பிகள் / tirumalai nampikal̤
Kaattave-Kanda

Word by word meaning

முனி ஏறி லோகஸாரங்க முனிவரின் தோள் மீது ஏறி; தனிப்புகுந்து தனியே உள்ளே புகுந்து; காட்டவே காண்பித்தவாறே; கண்ட கண்டு வணங்கிய; பாட்டினால் பாசுரங்களையும் பாடிக்கொண்டு ஆனந்தித்து; பாத கமலம் தாமரை போன்ற திருவடிகளும்; நல்லாடை உந்தி பீதாம்பரமும், நாபியும்; தேட்டரும் உதர பந்தம் அரிய அரை நாணும்; திருமார்பு திருமகள் வாழும் மார்பும்; கண்டம் கழுத்தும்; செவ்வாய் சிவந்த அதரமும்; வாட்டரில் கண்கள் சோர்வு இல்லாத கண்களும்; மேனி ஆகிய இவற்றோடு திருமேனியை; கண்டு வாழும் பாணர் அனுபவித்த ஆழ்வாரின்; தாள் திருவடிகளை; பரவினோமே துதித்து வணங்கப் பெற்றோம்