திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள் / Thiruvāymozhi Nutrandāthi taṉiyaṉkal̤

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்,
சொல்லும் பொருளும் தொகுத்து உரைத்தான்,-நல்ல
மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்,
தணவா நூற்றந்தாதி தான்

allum pakalum aṉupavippār taṅkal̤ukkuc,
cŏllum pŏrul̤um tŏkuttu uraittāṉ,-nalla
maṇavāl̤a māmuṉivaṉ māṟaṉ maṟaikkut,
taṇavā nūṟṟantāti tāṉ
மணவாள மாமுனிகள் / maṇavāl̤a māmuṉikal̤

Word by word meaning

அல்லும் பகலும் இரவும் பகலும் எப்பொழுதும்; அனுபவிப்பார் நெஞ்சு இருள் இரும்படி அனுபவிக்க; தங்களுக்கு விரும்புபவர்களுக்காக; சொல்லும் இனிமையான சொற்களையும்; பொருளும் பொருளையும்; தொகுத்து தொகுத்து; உரைத்தான் உரைத்தான்; நல்ல நனமையை விரும்பிய; மணவாள மா முனிவன் மணவாள மா முனிகள்; மாறன் நம்மாழ்வார் அருளிச்செய்த; மறைக்கு வேதமான திருவாய்மொழிக்கு; தணவா மிகவும் பொருந்திய; நூற்றந்தாதி தான் நூற்றந்தாதியை ஸங்கிரகமாக அருளிச்செய்தார்