திருவாய்மொழி தனியன்கள் / Thiruvāymozhi taṉiyaṉkal̤

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் *
ஆன்ற தமிழ் மறைகளாயிரமும் *
ஈன்ற முதல் தாய் சடகோபன் * மொய்ம் பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்

vāṉ tikaḻum colai matil̤araṅkar vaṇpukaḻ mel *
āṉṟa tamiḻ maṟaikal̤āyiramum *
īṉṟa mutal tāy caṭakopaṉ * mŏym pāl val̤artta
itattāy irāmuṉucaṉ
பட்டர் / paṭṭar
Vaanthigazhum-1
Vaanthigazhum-2

Word by word meaning

வான் திகழும் ஆகாசத்தளவு ஓங்கி வளர்ந்த; சோலை சோலைகளையும்; மதிள் மதிள்களையும் உடைய; அரங்கர் ஸ்ரீரங்கத்தில் சயனித்திருக்கும் பெருமானின்; வண்புகழ் கல்யாண குணங்களை; மேல் ஆன்ற பற்றி அமைந்த; தமிழ் மறைகள் தமிழ் வேதமான, திருவாய்மொழி; ஆயிரமும் ஆயிரம் பாசுரங்களையும்; ஈன்ற முதல் தாய் பெற்றெடுத்த தாயார்; சடகோபன் நம்மாழ்வார் ஆவார்; மொய்ம்பால் மிடுக்குடனே; வளர்த்த அதை போஷித்து வளர்த்து; இதத்தாய் அருளின தாயார்; ராமானுசன் இராமானுசன் ஆவார்