தனியன் / Taniyan

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

kurumuka maṉatītya prāka vetāṉaceṣāṉ
narapatiparikluptam cūlkamātātukāmaka
cvacuramamaravantyam raṅkaṉātacya cākṣāt
tvijakulatilakam tam viṣṇucittam namāmi
நாதமுனிகள் / nātamuṉikal̤
TPL.1.0.1.1
TPL.1.0.1.2

Word by word meaning

गुरुमुखम् ஒரு குருவிடமும் பயிலாமலே; अनधीत्य எம்பெருமான் கிருபையாலேயே; नरपतिपरिक्लृप्तं வல்லபதேவனால் ஏற்படுத்தப்பட்ட; शुल्कं आदातुकामः வித்வத் சபையில் பரிசை பெற விரும்பிய; अशेषान् वेदान् அனைத்து வேதங்களையும்; प्राह விளக்கி, விஷ்ணுவே பரம் பொருள் என்று ஸ்தாபித்து; अमरवन्द्यं தேவர்களால் வணங்கப்பட்டவரும்; रंगनाथस्य ஸ்ரீரங்கநாதருக்கே; साक्षात् श्वशुरम् மாமனாரானவரும்; द्विजकुलतिलकं அந்தணத் தலைவருமான; विष्णुचित्तं तं விஷ்ணுசித்தரை, பெரியாழ்வாரை; नमामि வணங்குகிறேன்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

miṉṉār taṭa matil̤ cūḻ villiputtūrĕṉṟu ŏrukāl
cŏṉṉār kaḻaṟkamalam cūṭiṉom - muṉṉāl̤
kiḻiyaṟuttāṉĕṉṟuraittom, kīḻmaiyiṉiṟ cerum
vaḻiyaṟuttom nĕñcame vantu
பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar
TPL.1.0.2.1
TPL.1.0.2.2
TPL.1.0.2.3
TPL.1.0.2.4

Word by word meaning

சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்; மின்னார் தட ஒளிமயமான பெரிய; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; வில்லிபுத்தூர் வில்லிபுத்தூர்; என்று ஒருக்கால் என்று ஒருமுறையாகிலும்; சொன்னார் சொன்ன அடியார்களின்; கழல் கமலம் பாத கமலங்களை; சூடினோம் தலையில் சூடினோம்; முன்னாள் முன்பு பாண்டியமன்னன் ஏற்படுத்திய; சபையில் விஷ்ணுவே பரம் பொருள் என்று கூறி; கிழி அறுத்தான் பொற்கிழியை அறுத்தவர் பெரியாழ்வார்; என்று உறைத்தோம் என்று உறைத்தோம்; நெஞ்சமே வந்து நெஞ்சமே உன் அநுகூலத்துக்காக; கீழ் மேனிச் சேரும் நரகத்தில் சேரும்படியான; வழி மார்க்கத்தை; அறுத்தோம் அறுத்தோம் என்கிறார்

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடையபற்று

pāṇṭiyaṉ kŏṇṭāṭap paṭṭar pirāṉ vantāṉĕṉṟu
īṇṭiya caṅkamĕṭuttūta - veṇṭiya
vetaṅkal̤oti viraintu kiḻiyaṟuttāṉ
pātaṅkal̤ yāmuṭaiyapaṟṟu
பாண்டிய பட்டர் / pāṇṭiya paṭṭar

Word by word meaning

பாண்டியன் கொண்டாட பாண்டிய மன்னன் கொண்டாட; பட்டர்பிரான் வைணவர்களின் தலைவன்; வந்தான் என்று வந்தான் என்று; ஈண்டிய சங்கம் எடுத்து அநேக வெற்றிச் சங்குகள்; ஊத முழங்க; வேண்டிய காலத்துக்கு தேவைப்பட்ட; வேதங்கள் வேதார்த்தங்களை; ஓதி அதன் பொருளை தெள்ளத் தெளியச்சொல்லி; விரைந்து கிழி விரைந்து பொற்கிழியை; அறுத்தான் அறுத்தவனின்; பாதங்கள் அந்தத் திருவடிகளை; யாமுடைய நம்முடைய புகலிடம் என்று; பற்று பற்றுங்கள்