ஸ்ரீவைஷ்ணவம் · தென்கலை நோக்கு

வேதம் தமிழ் செய்த மாறன் — பாகம் 2

01

நுழைவாயில்

1.1. மதக் கோட்பாடுகளை நன்கு ஆராய்ந்து விளக்கு வதற்கான சான்றாதாரங்கள், வேதங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள், ஸ்ம்ருதிகள், பகவத்கீதை, ப்ரஹ்மஸூத்ரம், ஆகமங்கள், மற்றும் ஆழ்வார்களது அருளிச்செயல்கள் போன்றவைகள். இவற்றுள் மேம்பாடுடையன வேதங்களே. ‘‘வேதா3ச் சா2ஸ்த்ரம் பரம் நாஸ்தி’’(நரஸிம்ஹபுராணம். 18-33). வேதங்களைக் காட்டிலும் மேம்பட்ட சாஸ்த்ரம் ஒன்று மில்லை. வேதங்கள் பகவானுடைய மூச்சுக்காற்று என்று புகழப்படுகின்றன; மதிமயக்கம், வஞ்சகம், ஆய்வின்மை, ஆற்றலின்மை ஆகிய அழிவுகள் அற்றவை வேதங்கள்.

1.2. வேதாந்த ஞானத்திற்கு அடிப்படையாக வைதிக மதத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளது உபநிஷத்துக்கள் ஆகும். இவற்றின் கருத்துக்களைத் தெள்ளத் தெளிவாக அறிவதற்குப் பயன்படுபவன ‘ப்ரஹ்மஸூத்ரங்கள்’. இவை மிகமிகச் சுருக்கமாக அமைந்துள்ளன. ஆதலால் ஆசார்யர்கள், தங்கள் தங்கள் மதத்திற்கிணங்க பாஷ்யம் அருளிச்செய்துள்ளனர்.

1.3. வேதங்களை ஆதாரமாகக் கொண்டு ஆதிகாலம் முதல் இயங்கி வந்த வைதிக மதத்திற்கு மாறாக ஸாங்க்யர், பௌத்தர், ஜைனர் போல்வாருடைய மதங்கள் இடைக் காலத்தில் அவ்வப்போது பரவி வந்துள்ளன. இந்தப் புதிய மதங்களின் கோட்பாடுகளை ஆராய்ந்து, மறுத்து வைதிக மதத்தை நிறுவ வேண்டியிருந்தது. இவ்வாறு பணி செய்த ஆசார்யர்கள் சங்கர பகவத்பாதர், ஸ்ரீராமானுஜர், மத்வாசார்யர் போன்றோர்.

1.4. வேதங்களை ஆதாரமாகக் கொண்டபோதிலும் இம்மூவரது கருத்துக்கள் வேறுபட்டன. ப்ரளய காலத்தில் சேதன அசேதனங்கள் (ஜீவர்களும் இல்பொருள்களும்) யாவும் நுண்ணிய நிலையில் பகவானது திருவயிற்றுள் ஒடுக்கி வைத்துக் காக்கப்படுகின்றன. படைப்பின் போது அவை உருவும் பெயரும் பெறுகின்றன; இவற்றுள் பகவான் உறைந்து இவற்றை இயக்குகின்றான். ஆதலால் ‘‘சேதன அசேதனங்களுடன் எப்போதும் தொடர்புடையவன்’’ என்ற அடைமொழி - விஶேஷணம் இவனுக்கே அமைந்துள்ளது; இவனை விட்டுப் பிரித்துக் கூறுவதற்கில்லை. இந்த விஶேஷணம் வாய்ந்து இவன் விஶிஷ்டன் ஆகிறான். இந்த அரிய கருத்தினால் இப்பெருமானை விவரிக்கும் மதம் விஶிஷ்டாத் வைதம் எனப்பெறும்.

1.5. ப்ரளய காலத்தில் பகவான் சேதன அசேதனங் களுக்கு உறைவிடமாகிறான்; படைப்பின் போது இவற்றுள் உறைகின்றான். ஆத்மாக்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு விளங்குகின்றான். இவன் ஆத்மாக்களை சரீரமாக உடையவன் அதனால் சரீரி. இத்தொடர்பே விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத் தின் அடிப்படை. சரீரத்தில் உறைந்து அதை இயங்கச்செய்யும் ஆத்மாவுக்கு சரீரத்தின் குற்றங்கள் ஒட்டாது. இது போல் ஆத்மாக்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் பகவானிடம் அணுகமாட்டா. எம்பெருமான் சேதன அசேதனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் இவன் இழிவுகளுக்கு எதிர் நிலை. தனக்கேயான கல்யாண குணங்கள் வாய்ந்தவன். இவை இரண்டும் எம்பெருமானைப் பற்றி அறிவதற்கு ஆதாரமான அடையாளங்கள் - உபயலிங்கம் (லிங்கம் - அடையாளம்).

1.6. ஸ்ரீபாஷ்யத்தின் கம்பீரமான உரைநடை, சாஸ்த்திரங்களை ஆராயும் செம்மை, தேர்வை வெளியிடும் நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்பம் நல்கவல்லன.

02

ஸ்ரீபாஷ்ய மங்களச்லோகத்தின் உள்ளுறைப் பொருள் விளக்கம்

அகி2லபு4வந ஜந்ம ஸ்தே2ம ப4ங்காதி3லீலே
விநத விவித4பூ4தவ்ராத ரக்ஷைகதீ3க்ஷே |
ஶ்ருதிஶிரஸி விதீ3ப்தே ப்3ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
ப4வது மம பரஸ்மிந் ஶேமுஷீ ப4க்திரூபா ||
(ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்த மங்கள ச்லோகம்)

(2.1). ‘‘அனைத்து அண்டங்களுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாராதிகளை லீலையாக உடையவனும்; வணங்கின பற்பல பக்தர்களையும், ப்ரபந்நர்களையும், அவர்கள் ஸம்பந்தம் பெற்றவர்களையும் ரக்ஷிப்பதில் ப்ரதான ஸங்கல்பமுள்ளவனும்; வேதாந்தத்தில் விசேஷித்து ப்ரகாசிப் பவனுமான ப்ரஹ்மமென்று ப்ரஸித்திபெற்ற ஸ்ரீநிவாஸ னிடத்தில் எனக்கு பக்திரூபமான ஜ்ஞானம் நிலைபெற்றிருக்க வேண்டும்.’’

இந்த ஶ்லோகத்தினால் ச்ரிய:பதியான எம்பெருமான் பக்கலில் பக்திரூபாபந்நஜ்ஞானத்தை ஸ்ரீபாஷ்யகாரர் விரும்புவதாக மேலெழக் காணும் பொருள். இதிலுள்ள ஐந்து சிறப்புச்சொற்றொடர்களாலும் நம்மாழ்வாருடைய பெருமை களை விளக்கி, அவர் திறத்துப் பக்தியுண்டாம்படி பிரார்த்திப் பதாக உள்ளுறை பொருள். எம்பெருமான் அனைத்து அண்டங்களையும் படைத்து, அளித்து, அழிப்பதை லீலையாகவுடையவன்; தன்னை வணங்கின வெவ்வேறு வகைப்பட்ட ஜீவராசிகளுக்கு முக்தியளிப்பதாகிற ரக்ஷணத்தைச் செய்வதையே விரதமாகக் கொண்டவன்; ‘‘வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு’’ (பெரியாழ்வார்திருமொழி 4-3-11) என்று பெரியாழ்வார் அருளிச்செய்தபடி வேதாந்தங்களால் நிலைநாட்டப்பட்டவன்; தன்வடிவாலும், திருக்குணங்களாலும் மிகப் பெரியவன்; திருமகள் கொழுநன்; இத்தகைய பெருமை வாய்ந்த பரமபுருஷன் பக்கலில் மதிநலமுண்டாக வேணுமென்பது எம்பெருமான் பரமான பொருள். இத்தால் சாஸ்த்ரார்த்தத்தை குறிப்பிட்டபடி என்று கொள்ள வேண்டும்.

2.2. இனி நம்மாழ்வார் பரமான பொருள் கேளீர்:

‘‘அகி2லபு4வந ஜந்ம ஸ்தே2ம ப4ங்காதி3லீலே‘‘ - இந்த விசேஷணம் ஆழ்வார்க்கு ஆகும்போது இரண்டு படியாகக் பொருள் கூறலாம். அகில புவனங்களினுடைய ஜன்ம ஸ்தேம பங்கங்களுக்கு (ஆதி) காரண பூதனான எம்பெருமானோடே லீலாரஸம் அநுபவிப்பவர் ஆழ்வார். ‘‘அகி2ல பு4வந ஜந்மஸ்தே2ம ப4ங்காநாம் ய: ஆதி3: (ஸர்வேச்வர:) தேந ஸஹ லீலா யஸ்ய தஸ்மிந்’’ என்று கொள்ளக்கடவது. ‘‘என்னுடைய பந்துங்கழலும் தந்து போகுநம்பீ’’ (திருவாய். 6-2-1) ‘‘விளையாடப்போது மினென்னப் போந்தோமை’’ (திருவாய். 6-2-8) என்றிவை முதலான பலபல பாசுரங்களினால் ஆழ்வார்க்கும் எம்பெரு மானுக்கும் நிகழ்கின்ற லீலைகளைச் சொற்களால் விவரிக்க இயலாது. இதுவொரு கருத்து, மற்றொரு கருத்தாவது, அகி2லம் - பு4வநஜந்மஸ்தே2ம ப4ங்காதி3லீல: யஸ்ய - என்று கொண்டு, எம்பெருமானையே எல்லாமாகவுடையவர் ஆழ்வார்; (அதாவது) ‘‘உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்’’ (திருவாய். 6-7-1) எம்பெருமான் என்றிருந்தவர் நம்மாழ்வார் என்றதாகிறது. இப்படியிருந்தவர் ஆழ்வாரொருவரேயாதலால் இந்தக் கருத்தும் மிகப் பொருந்தும். இதுவே சிறப்புடைய கருத்தாகும்.

‘‘விநத விவித4பூ4தவ்ராத ரக்ஷைகதீ3க்ஷே’’ - விநத விவித பூத வ்ராதரக்ஷகத்வம் எம்பெருமானுக்குச் சொல்லப் பட்டாலும் ‘அநதிக்ரமணீயம் ஹி சரணக்3ரஹணம்’ (எவராலும் தவிர்க்க இயலாததல்லவா, திருவடிகளைப் பற்றுவது.) என்கிற நியாயத்தாலும் மந்த்ரரத்நப்ரக்ரியை யாலும் அந்த ரக்ஷண பாரத்தை எம்பெருமானுடைய திருவடிகளே வஹிக்கும். அந்தத் திருவடிகளுக்கு ஸ்ரீசடகோப னென்றும் ஸ்ரீசடாரியென்றும் நம்மாழ்வாருடைய திருநாமமே யாயிற்று. ஆகவே இந்த விசேஷணம் நம்மாழ்வாரிடத்திலே மிக எளிதாக அந்வயிக்கக் குறையில்லை.

பாதுகாஸஹஸ்ரத்தில் ப்ரபாவ பத்ததியில் (42) ‘‘ஜக3தாம் அபி4ரக்ஷணே த்ரயாணாமதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ:’’ (மூவுலகையும் காப்பாற்றும் பெரிய பொறுப்பு எம்பெருமான் திருவடிகளுக்கு, எம்பெருமான் திருவடிகளை ரக்ஷிப்பதும் பாதுகையின் பொறுப்பு) என்ற ச்லோகம் இங்குப் பொருத்தமாக அநுஸந்தேயம். இந்த விசேஷணத்தில் ஆழ்வார் விஷயமான பொருள் எவ்வாறு கிடைக்கின்றது என்பதை பலவாறும் விவரிக்கலாம். அவற்றின் ஒரு சிலவற்றையே கீழே அனுபவத்தில் கொள்வோம்.

ஶ்ருதிசிரஸி விதீ3ப்தே’ ச்ருதி சிரஸ்ஸாவது உபநிஷத்து; அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார். எங்ஙனேயென்னில்; ‘‘தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸஸ்ஸமிந்த4தே’’ (விஷ்ணுஸூக்தம்.6) - (அப்பரமபதத்தை மேதாவிகளும், விசேஷமாக துதிப் பவர்களும், மிகவும் ஜாக்ரதையுடையவர்களுமான முக்தர்கள் ஒளிவிடச்செய்கிறார்கள்). இத்யாதிகளான உபநிஷத் வாக்யங்கள் ஆழ்வாரையன்றோ ஓதுகின்றன. விப்ராஸ: என்றது விப்ரா: என்றபடி. ‘‘ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா:’’ என்கிறபடியே விப்ரத்வ ஸித்திபெற்றவர் ஆழ்வார். (விபந்யவ:) ‘பண ஸ்துதௌ’ என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமான சொல்லாகையாலே விசேஷித்து ஸ்துதிகர்த்தாக்களென்றபடி.

‘‘தேவிற்சிறந்த திருமாற்குத்தக்க தெய்வக் கவிஞன், பாவிற் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டி தனே’’ (சடகோபரந்தாதி. சிறப்புப்பாயிரம்) என்றபடி எம்பெருமானுக் குத் தகுந்த துதியினைச் செய்பவர் ஆழ்வார். (ஜாக்ரு வாம்ஸ:) ‘‘கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே’’ (திருவிருத்தம். 97) என்று சொல்லி இந்நிலத்திலே உறக்கமற்றிருப்பவர் ஆழ்வாரே. ‘ஸமிந்ததே’ என்றவிடத்து (ஸம்) என்கிற உபஸர்க்கத்தை நோக்கியே இங்கும் (விதீப்தே) என்று ஸோபஸர்க்கமாக (தகுந்த இடைச்சொல்லாக) அருளிச்செய்தது.

இதற்கு மற்றொரு பொருளுமுண்டு; ச்ருத்யாம் தீப்த:, ச்ருதிசிரஸி விதீப்த: என்கிறதாகக் கொள்க. ச்ருதியென்றது திருவாய்மொழி; அதில் தீப்தர் ஆழ்வார்; பதிகந்தோறும் நிகமனப்பாசுரத்திலே ‘‘குருகூர்ச் சடகோபன்’’ என்று விளங்குபவரென்கை. இனி, ச்ருதி சிரஸ்ஸாவது கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்யப்பிரபந்தம். அது திருவாய்மொழியின் முடிவிலே நியமேந அநுஸந்திக்கப்படுவதால் ச்ருதி சிரஸ்ஸாயிற்று. அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார்; அந்த ப்ரபந்தம் முழுவதும் ஆழ்வார் விஷயமே யாதலால் அதில் விதீப்தரென்னக் குறையில்லையே.

(ப்ரஹ்மணி) ‘‘ஸர்வத்ர ப்ருஹத்த்வகுணயோகேந ஹி, ப்ரஹ்மசப்த:’’ என்ற ஸ்ரீபாஷ்யத்தின்படி ப்ரஹ்ம மென்றது மிகப்பெரிய வஸ்துவென்றபடி. ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் ‘‘புவியுமிருவிசும்பும் நின்னகத்த, நீயென்செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய், அவிவின்றி யான் பெரியன், நீ பெரியை யென்பதனை யாரறிவார்’’ (பெரியதிருவந்தாதி.75) என்கிற பாசுரத்தினால் - மிகப் பெரியவனான எம்பெருமானையும் தம்முள் ஒரு மூலையிலடக்கியிருக்கையாகிற பெருமை தமக்கே யுள்ளதென்று ஸோபபத்திகமாக (சொல்லும் விஷயத்தை நிலைநாட்டும் பொருட்டு) நிரூபித்திருப்பதனால் ஆழ்வாரை ப்ரஹ்மமென்னத் தட்டில்லை. ஆழ்வார் தம்முடை ப்ரஹ்மத் வத்தைத் தாமே உபபாதித்தருளியிருப்பது விசேஷம். அப்பாசுரத்தின்படி எம்பெருமான் ப்ரஹ்மமாகவும், ஆழ்வார் பரப்ரஹ்மமாகவும் தேறுவதால் இங்கு ‘பரஸ்மிந் ப்ரஹ்மணி’ என்றது ஆழ்வார்க்குப் பொருந்தும்.

(ஸ்ரீநிவாஸே) ‘ஸ து நாகவர: ஸ்ரீமாந்’ (விஷ்ணு தர்மம்-68) ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ (ஸ்ரீராம. யுத்த.16.17) ‘லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந:’ (ஸ்ரீராம.பால. 31-4) இத்யாதி ஸ்தலங்களில் பகவத் கைங்கர்ய ருசியும் பகவத் பக்தியுமே ஸ்ரீயாகச் சொல்லப்படுகையாலே அந்த ஸ்ரீயானது ஆழ்வார் பக்கலிலே குறையற்றதாகையாலே ஸ்ரீநிவாஸத்வம் ஆழ்வார்க்கும் அநபாயம் (பிரிவுறாதது). ஆக இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்திலே தமக்கு பக்தியை வேண்டினாராயிற்று.

மங்களச்லோக விவரணம் முற்றிற்று.

03

ஸ்ரீ

3. அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த ஸ்ரீபாஷ்ய த்ரவிடாகமாத்யதசகத்வந்த்வ ஐககண்ட்யத்தின் அடிப்படையிலான விளக்கக்குறிப்புகள்:----

3.1. ப்ரஹ்மஸூத்ரங்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கம், சாரீரகமீமாம்ஸா பாஷ்யம் எனப்படுகிறது. இதில், நான்கு அத்யாயங்கள் உண்டு. ‘ஸமந்வயாத்யாயம்’ எனப்படும் முதல் அத்யாயத்தில், ‘ப்ரஹ்மம் ஒன்று மட்டுமே அண்டத் தின் காரணம்’ என்று காட்டித்தரப்படுகிறது. இரண்டாம் அத்யாயமான ‘அவிரோதாத்யாயம்’ என்பது, ‘ப்ரஹ்மமே அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணம் மற்றும் மூலப் பொருள்’ என்பதை விளக்குகிறது. ஸாதனையைக் கூறும் மூன்றாம் அத்யாயம் ‘ஸாதனாத்யாயம்’, ப்ரஹ்மத்தை அடையும் வழிமுறைகளைக் கூறுகிறது. பலத்தைக் கூறுவது நான்காம் அத்யாயமான ‘பலாத்யாயம்’, இது முக்திய டைந்தவன் அடையும் பேற்றை விவரிக்கிறது.

3.2. வேதாந்தத்தின் விழுப்பொருளைத் தமிழ்மொழி யில் விளக்குவது நம்மாழ்வார் அருளிச்செய்த ‘‘திருவாய் மொழி’’. சாரீரகமீமாம்ஸா பாஷ்யத்தின் நான்கு அத்யாயங் களுக்கு இணையான பொருள், திருவாய்மொழிப் பாசுரங்களில் அமைந்துள்ளது என்பது நம் பூர்வர்களின் அறுதியிட்ட முடிவாகும். இதனையே ‘ஐககண்ட்யம்’ என்று ஸம்ஸ்க்ரு தத்தில் குறிப்பிடுவர்.

3.3. நம்பிள்ளை தமது ‘ஈட்டுப் பேருரையில்’ பலவிடங்களில் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு இணை யான வேதச் சொற்றொடர்களையும்,ப்ரஹ்மஸூத்ரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் தம்முடைய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி’ மற்றும் ‘அதிகரண ஸாராவளி’ போன்ற நூல்களில் திருவாய்மொழிக்கும் ஸ்ரீபாஷ்யத்திற்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமை யைப் பரக்கப் பேசியுள்ளார். அழகியமணவாளப் பெருமாள் நாயனார், ஸ்ரீபாஷ்யகாரர் ப்ரஹ்மஸூத்ரங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்திடும் போது திருவாய்மொழிப் பாசுரங்களை கைவிளக்காகக் கொண்டுதான் பொருள் அருளிச்செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ‘த்ராவிட ஆம்நாயம்’ (திராவிட வேதம்) என்ற உயர்வினைப் பெற்றது திருவாய்மொழி.

3.4. ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்று ஸ்ரீமந்நாத முனிகள் நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறார். ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்ற இந்த நூலில் நம்பிள்ளை ஈட்டுப் பேருரையின் உதவி கொண்டு எந்தெந்த இடத்தி லெல்லாம் ஆழ்வார் வேதாந்தத்தின் விழுமியபொருளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும், காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருந்த வாதூலகுலத்திலுதித்த ஸ்ரீவேங்கட தேசிகர் சிஷ்யரான அழகியமணவாளச்சீயர் அருளிச் செய்த ‘ஸ்ரீபாஷ்ய த்ரவிடாகமாத்யதசகத்வந்த்வ ஐககண்ட்யம்’ மற்றும் ஸ்ரீநிகமாந்த தேசிகனின் அதிகரண ஸாராவளி ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படவுள்ளது.

4. ஸ்ரீபாஷ்யமும் திருவாய்மொழியும்

4.1. முதல்திருவாய்மொழியும், இரண்டாம் திருவாய் மொழியும், சாரீரகமீமாம்ஸா சாஸ்த்ரத்தின் நான்கு அத்யாயங் களுக்குச் சமமானவை. சாரீரகார்த்தந்தான் ப்ரஹ்மகாரணத் வமும், ததபாத்யத்வமும், முமுக்ஷுபாஸ்யத்வமும் முக்த ப்ராப்யத்வமும் ஆக அமைந்திருக்கும். ‘‘காரணத்வம பா3த்4யத்வமுபாயத்வமுபேயதா:’’ - சாரீரக சாஸ்த்ரத்தில், எம்பெருமானது காரணத்வமும், அவனை எக்காரணத்தாலும் இல்லை செய்ய இயலாது என்பதும், அவனது உபாயத்வமும், உபேயத்வமும் நான்கு அத்4யாயங்கள் வாயிலாகச் சொல்லப்படுகிறது.

4.2. முதல் இரண்டு திருவாய்மொழியும், வேதாந்த சாஸ்திரத்திற்கு இணையாக இருப்பதை ‘வீடுமின் முற்றவும்’ ப்ரவேசத்திலே ‘‘மோக்ஷ சாஸ்த்ரமென்பது தத்வபரமாயும், உபாஸனபரமாயும் இருப்பது’’ என்று நம்பிள்ளை ஈட்டில் அருளிச்செய்துள்ளார். இதில், தத்வபரமாக ‘சொல்ல’ வேண்டியதெல்லாம் முதல் பத்து முதல் திருவாய்மொழியில் சொல்லியாகிவிட்டது. உபாஸன பரமாக இருப்பதெல்லாம், ‘‘வீடுமின் முற்றவும்’’ என்று தொடங்கும் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியில் சுருக்கமாக சொல்லப் பட்டுள்ளது என்கிறார்.

4.3. வேதாந்தாசார்யரும், தம்முடைய ‘த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்நாவளி’யில் இவ்வாறு அருளிச் செய்கிறார்:-

‘‘ஆதெ3ள ஶாரீரகார்த்த2 க்ரமமிஹ விஶத3ம் விம்ஶதிர் வக்தி ஸாக்3ரா’’ (அவதாரிகை. 5) - திருவாய்மொழியில் முதல் இருபது பாட்டுக்கள் வேதா3ந்த ஶாஸ்த்ரார்த்த2 முறையைத் தெளிவாகச் சொல்லுகிறது.

4.4. மேலும் ஆச்சான் பிள்ளை இவ்வாறு அருளிச் செய்கிறார்:-

‘‘புரா ஸூத்ரைர் வ்யாஸஶ் ஶ்ருதிஶதஶிரோர்த்த2ம் க்3ரதி2தவாந், விவவ்ரே தம் ஶ்ராவ்யம் வகுளத4ரதா மேத்ய ஸ புந: I உபா4வேதௌ க்3ரந்தெ2ள க4டயிதுமலம் யுக்திபி4ரஸௌ, புநர்ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்3ரஹ்ம முகுர: II’’- ‘‘முன்பு வ்யாஸர், ப்ரஹ்ம ஸூத்ரங்களால் வேதாந்தத்தின் பொருளைக் கூறினார். அவரே பின்பு, மகிழ்மாலைமார்பினரான நம்மாழ்வாராகத் தோன்றி, செவிக்கினிய செஞ்சொற்களாலே அப்பொருளை விளக்கினார். ப்ரஹ்மஸூத்ரம், திருவாய்மொழி ஆகிய இரண்டு க்3ரந்தங் களையும் யுக்திகளால் சேர்ப்பிப்பதற்காக, ப்ரஹ்மத்தின் முகம் காட்டும் கண்ணாடி போன்றவரான ராமாநுஜமுநிவராக வ்யாஸர் மீண்டும் தோன்றினார்’’. இவ்வாறு தெளிவாக்கப் பட்டிருப்பதால், முதல் இரண்டு திருவாய்மொழிகளில், சாரீரக மீமாம்ஸையின் சாரம் தரப்பட்டுள்ளது என்பது உறுதி படுத்தப்படுகிறது.

4.5. இனி, முதல் திருவாய்மொழி, முதல் இரண்டு அத்யாயங் களோடு ஒத்திருப்பது காட்டப்படுகிறது.

முதல் பாசுரமான,

1. உயர்வற உயர்நலம் உடையவன்யவனவன்* மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்* அயர்வறுமமரர்கள் அதிபதி யவனவன்* துயரறுசுடரடி தொழுதெழுஎன்மனனே.

என்ற திருவாய்மொழி 1-1-1 பாசுரத்தின் நான்கு வரிகளும் சதுஸ்ஸூத்ரியின், முதல் நான்கு ஸூத்ரங்களின் ‘அதா2தோ ப்3ரஹ்மஜிஜ்ஞாஸா’ (1-1-1), ‘ஜந்மாத்3யஸ்ய யத:’ (1-1-2), ‘சாஸ்த்ரயோநித்வாத்’ (1-1-3), ‘தத்து ஸமந்வயாத்’ (1-1-4) பொருளாக அமைந்துள்ளது.

இரண்டாம் பாட்டான,

2. மனனகமலமற மலர்மிசையெழுதரும்* மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்* இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்* இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே.

(திருவாய்.1-1-2) என்பது, ஈக்ஷத்யதிகரணம் 1-1-5 (ஸூத்ரங்கள் 8) ஆநந்தமயாதிகரணம் 1-1-6 (ஸூத்ரங்கள் 8) மற்றும் அந்தரதி4கரணம் 1-1-7 (ஸூத்ரங்கள் 2) ஆகியவற்றின் பொருளை விளக்குவதாக உள்ளது.

3. இலனதுஉடையினது எனநினைவரியவன்* நிலனிடைவிசும்பிடை உருவினன்அருவினன்* புலனொடுபுலனலன் ஒழிவிலன்பரந்த*அந் நலனுடையொருவனை நணுகினம்நாமே. (திருவாய். 1-1-3)

என்னும் மூன்றாம் பாட்டு , ஆகாஶாதி4கரணம் 1-1-8 (ஸூத்ரம் 1), ப்ராணாதிகரணம் 1-1-9 (ஸூத்ரம் 1), ஜ்யோதிரதிகரணம் 1-1-10 (ஸூத்ரங்கள் 4), இந்த்3ர ப்ராணாதி4கரணம் 1-1-11 (ஸூத்ரங்கள் 4) ஆகியவற்றின் பொருளைத் தருகிறது.

4. நாமவனிவனுவன் அவளிவளுவளெவள்* தாமவரிவருவர் அதுவிதுவுதுவெது* வீமவையிவையுவை அவைநலம் தீங்கவை* ஆமவையாயவை ஆய்நின்றஅவரே. (திருவாய்.1-1-4) 5. அவரவர்தமதமது அறிவறிவகைவகை* அவரவர்இறையவர் எனவடியடைவர்கள்* அவரவர்இறையவர் குறைவிலர்இறையவர்* அவரவர்விதிவழி அடையநின்றனரே. (திருவாய். 1-1-5)

  1. நின்றனர்இருந்தனர் கிடந்தனர்திரிந்தனர்* நின்றிலர்இருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்* என்றுமொரியல்வினர் எனநினைவரியவர்* என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே. (திருவாய்.1-1-6)

என்று தொடங்கும் பாசுரங்கள் மூன்றும், திரிபாத்யார்த்தமாக (முதல் அத்யாயத்தின் மற்ற/அடுத்த மூன்று பாதங்களின் அர்த்தமாக) உள்ளது.

12. ஸர்வத்ர ப்ரஸித்த்யதிகரணம் 1-2-1 (ஸூத்ரங்கள் 8), 13. அத்த்ரதிகரணம் 1-2-2 (ஸூத்ரங்கள் 4), 14. அந்தராதிகரணம் 1-2-3 (ஸூத்ரங்கள் 6), 15. அந்தர்யாம்யதிகரணம் 1-2-4 (ஸூத்ரங்கள் 3), 16. அத்2ருஶ்யத்வாதி3கு3ணகாதி4கரணம் 1-2-5(ஸூத்ரங்கள் 3), 17. வைஶ்வாநராதி4கரணம் 1-2-6 (ஸூத்ரங்கள் 9),

முதல் அத்யாயம் இரண்டாம் பாதம் முற்றிற்று.

18. த்3யுப்4வாத்3யதி4கரணம் 1-3-1(ஸூத்ரங்கள் 6), 19. பூமாதிகரணம் 1-3-2 (ஸூத்ரங்கள் 2), 20. அக்ஷராதி4கரணம் 1-3-3 (ஸூத்ரங்கள்3), 21. ஈக்ஷதிகர்மாதி4கரணம் 1-3-4 (ஸூத்ரம் 1), 22. த4ஹராதி4கரணம் 1-3-5 (ஸூத்ரங்கள் 10), 23. ப்ரமிதாதி4கரணம் 1-3-6 (ஸூத்ரங்கள் 2), 24. தே3வதாதி4கரணம் 1-3-7 (ஸூத்ரங்கள் 5), 25. மத்4வதி4கரணம் 1-3-8 (ஸூத்ரங்கள் 3), 26. அபஶூத்3ராதி4கரணம் 1-3-9 (ஸூத்ரங்கள் 7), (23) ப்ரமிதாதி4கரணஶேஷம் 1-3-6 (ஸூத்ரங்கள் 2), 27. அர்த்தா3ந்தரத்வாதி3 வ்யபதே3ஶாதி4கரணம்1-3-10 (ஸூத்ரங்கள்3),

முதல் அத்யாயம் மூன்றாம் பாதம் முடிவுற்றது.

28. ஆநுமாநிகாதி4கரணம் 1-4-1 (ஸூத்ரங்கள் 7), 29. சமஸாதி4கரணம் (1-4-2) (ஸூத்ரங்கள் 3), 30. ஸங்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம் 1-4-3 (ஸூத்ரங்கள் 3), 31. காரணத்வாதி4கரணம் 1-4-4 (ஸூத்ரங்கள் 2), 32. ஜக3த்3வாசித்வாதி4கரணம் 1-4-5 (ஸூத்ரங்கள் 3), 33. வாக்யாந்வயாதி4கரணம் 1-4-6 (ஸூத்ரங்கள் 4), 34. ப்ரக்ருத்யதி4கரணம் 1-4-7 (ஸூத்ரங்கள் 6), 35. ஸர்வவ்யாக்2யநாதி4கரணம் 1-4-8 (ஸூத்ரம் 1), நான்காவது பாதமும், முதல் அத்யாயமும் முடிவுபெற்றன.

இவ்வாறாக இந்த முதல் ஆறு பாசுரங்கள், சாரீரகமீமாம்ஸையின் முதல் அத்யாயத்தின் பொருளை விளக்குவதாக உள்ளன.

7. திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை* படர்பொருள் முழுவதுமாய் அவையவைதொறும்* உடல்மிசைஉயிரெனக் கரந்துஎங்கும்பரந்துளன்* சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே. (திருவாய்.1-1-7) என்னும் ஏழாம்பாசுரம் இரண்டாம் அத்யாயம் முதல் பாதத்தின் பொருளாக உள்ளது.

36. ஸ்ம்ருத்யதிகரணம் 2-1-1 (ஸூத்ரங்கள் 2), 37. யோக3ப்ரத்யுக்த்யதி4கரணம் 2-1-2 (ஸூத்ரம் 1), 38. விலக்ஷணத்வாதி4கரணம் 2-1-3 (ஸூத்ரங்கள் 9), 39. சிஷ்டாபரிக்3ரஹாதி4கரணம் 2-1-4 (ஸூத்ரம்1), 40. போக்த்ராபத்த்யதிகரணம் 2-1-5 (ஸூத்ரம் 1), 41. ஆரம்ப4ணாதிகரணம் 2-1-6 (ஸூத்ரங்கள் 6), 42. இதரவ்யபதே3ஶாதி4கரணம் 2-1-7 (ஸூத்ரங்கள் 3), 43. உபஸம்ஹாரத3ர்ஶநாதி4கரணம் 2-1-8 (ஸூத்ரங்கள் 2), 44. க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம் 2-1-9 (ஸூத்ரங்கள் 6), 45. ப்ரயோஜநவத்த்வாதி4கரணம் 2-1-10 (ஸூத்ரங்கள் 5),

  இரண்டாவது அத்யாயம் முதல் பாதம் முடிவுற்றது.

8. சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்* வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்* புரமொருமூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து * அரனயனென உலகழித்தமைத்துளனே. (திருவாய்.1-1-8) என்னும் எட்டாம் பாட்டும்,

9. உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்* உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்* உளனெனஇலனென இவைகுணமுடைமைடயில் * உளனிருதகமையொடு ஒழிவிலன்பரந்தே. (திருவாய்.1-1-9) என்னும் ஒன்பதாம் பாட்டும், தர்க்க பாதார்த்தமாகவும், (இரண்டாம் அத்யாயம் இரண்டாம் பாதம்)

46.ரசநாநுபபத்யதிகரணம் 2-2-1 (ஸூத்ரங்கள் 9), 47. மஹத்தீ4ர்க்காதி4கரணம் 2-2-2 (ஸூத்ரங்கள் 7), 48. ஸமுதா3யாதி4கரணம் 2-2-3 (ஸூத்ரங்கள் 10), 49. உபலப்3த்4யதி4கரணம் 2-2-4 (ஸூத்ரங்கள் 3), 50. ஸர்வதா2நுபபத்த்யதி4கரணம் 2-2-5 (ஸூத்ரம் 1), 51. ஏகஸ்மிந்நஸம்ப4வாதி4கரணம் 2-2-6 (ஸூத்ரங்கள் 4), 52. பஶுபத்யதி4கரணம் 2-2-7 (ஸூத்ரங்கள் 4), 53. உத்பத்த்யஸம்ப4வாதி4கரணம் 2-2-8 (ஸூத்ரங்கள்4),

இரண்டாம் அத்யாயம் இரண்டாம் பாதம் முடிவுற்றது.

10. பரந்ததண்பரவையுள் நீர்தொறும்பரந்துளன்* பரந்தஅண்டமிதென நிலவிசும்பொழிவற* கரந்திசிலிடந்தொறும் இடம்திகழ்பொருள்தொறும்* கரந்தெங்கும்பரந்துளன் இவையுண்டகரனே. (திருவாய்.1-1-10) மற்றும் பலனைக் கூறும் 11-ம் பாட்டும் 3-ஆம் பாதமாகிய வியத் பாதம் மற்றும் 4-ஆம் பாதமாகிய ப்ராணபாதம் ஆகியவற்றின் பொருளாகவும் உள்ளன.

54. வியத3தி4கரணம் 2-3-1 (ஸூத்ரங்கள் 9), 55. தேஜோதி4கரணம் 2-3-2 (ஸூத்ரங்கள் 8), 56. ஆத்மாதி4கரணம் 2-3-3 (ஸூத்ரம் 1), 57. ஜ்ஞாதிகரணம் 2-3-4 (ஸூத்ரங்கள் 14), 58. கர்த்ரதி4கரணம் 2-3-5 (ஸூத்ரங்கள் 7), 59. பராயத்தாதி4கரணம் 2-3-6 (ஸூத்ரங்கள் 2), 60. அம்ஶாதிகரணம் 2-3-7 (ஸூத்ரங்கள் 11),

இரண்டாவது அத்யாயம் மூன்றாவது பாதம் முடிவுற்றது.

61. ப்ராணோத்பத்த்யதி4கரணம் 2-4-1 (ஸூத்ரங்கள் 3), 62. ஸப்தக3த்யதி4கரணம் 2-4-2 (ஸூத்ரங்கள் 2), 63. ப்ராணாணுத்வாதி4கரணம் 2-4-3 (ஸூத்ரங்கள் 2), 64. வாயுக்ரியாதி4கரணம் 2-4-4 (ஸூத்ரங்கள் 4), 65. ஶ்ரேஷ்டா2ணுத்வாதி4கரணம் 2-4-5 (ஸூத்ரம்1), 66. ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2நாதி4கரணம்2-4-6 (ஸூத்ரங்கள்2),

  1. இந்த்3ரியாதி4கரணம் 2-4-7 (ஸூத்ரங்கள் 2), 68. ஸம்ஜ்ஞாமூர்த்திக்லுப்த்யதி4கரணம் 2-4-8 (ஸூத்ரங்கள் 3),

இரண்டாவது அத்யாயமும் நான்காம் பாதமும் நிறைவு பெற்றன.

4.6. ‘‘உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்’’ (திருவாய். 1-1-1) என்கிற முதல் வரி. ‘‘சாரீரக மீமாம்ஸை’’ முதல் அத்யாயத்தின் முதல் பாதமான ‘ஜிஜ்ஞாஸாதி கரண’த்தின் பொருளைத் தருகிறது. இது எவ்வாறெனில், பூர்வமீமாம்ஸை, கர்மங்கள் ஆற்றும் வகையைக் கற்பிக்கிறது. இந்த கர்மங்களின் பலன், நிரந்தரமானவை அல்ல.

‘‘அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ்யயாஜந: ஸுக்ருதம் ப4வதி’’ (ஆபஸ்தம்ப ச்ரௌத ஸூத்ரம் 2-1-134) - சாதுர்மாஸ்ய யாகத்தைச் செய்பவர்களுக்கு அழிவில்லாத புண்யம் கிடைக்கிறது. ஆனால், இத்தகைய யாகங்களில் ஈடுபடுபவர்களுக்கு, பிறவி என்பது மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், இந்த யாகங்களால் அவன் அடைந்த அழியாத பலன்களும் கூட, உயர்ந்த இலக்கை அடைவிக் காது. இதற்கான விருப்பம் அநுமதிக்கத்தக்கதே என்பதை விளக்குவதே முதல் அதிகரணத்தில் அமைந்துள்ள முதல் ஸூத்ரத்தின்-அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா - 1-1-1, குறிக்கோள்.

‘‘உயர்வற உயர்நலம் உடையவன்’’ (1-1-1) என்பதால், எல்லையற்ற இன்பத்தைத் தரும், நிரந்தரமான பலனைத் தரும் குணத்தையும், செல்வத்தையும் உடைய ஒருவனைச் சொல்லி, ‘‘யவன்’’ என்பதால், ‘‘ஆநந்தோ3 ப்3ரஹ்ம’’ (தை.ப்ருகு. 6-1)- ஆனந்தம் ப்ரஹ்மம் என்ற ப்ரமாணங் களால் அவன் சிறப்பிக்கப்பட்டிருப்பது தெரிவிக்கப்படுகிறது. ஸித்த வஸ்துவான பரப்ரஹ்மம் வேதாந்தத்தால் மட்டுமே அறியப்படவேண்டும் என்பது தெளிவுபடுத்தப் படுகிறது.

‘‘உயர்வற’’ (1-1-1) என்பதால், ‘கர்மத்திற்கேற்ற பலனைத் தரும் ப்ரஹ்மா தொடக்கமான தேவர்களுடைய பரிவு மற்றும் அங்கீகாரம் ‘‘தேவையில்லை’’ என்பது தெரிவிக்கப் படுகிறது. கர்மங்களின் நிலையற்ற பலன் பல வேதச் சொற்றொடர்களால் தெரிவிக்கப்படுகிறது. எனவே ‘‘உயர்வற உயர் நலம் உடையவன் எவன்’’ (1-1-1) என்பதால், பலன் தரும் காரணத்தை தன்னிடமே கொண்டிருப்பது (விசிஷ்டஹேது) தெரிவிப்பதால், இது சாரீரக மீமாம்ஸை முதல் ஸூத்ரத்தின் (அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா - 1-1-1) பொருளை உள்ளடக்கியது என்பது அறியப்படுகிறது.

மேலும், ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ (1-1-1) என்பதால் ப்ரஹ்மத்தின் வியக்கத்தக்க மிகப்பெரியதாக இருக்கும் தன்மையை விளக்குகிறது. பாசுரத்தின் நான்காவது அடி ‘அவன் துரயறு சுடரடி தொழுதெழு’ (1-1-1) அந்த ப்ரஹ்மத்தின் திருவடிகளை வணங்கி வாழ்ச்சி பெற வேண்டும் என்னும் ஞானத்தை வழங்குவதாலும், இந்த முதல் வரி, முதல் அதிகரணத்தின் (ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1) பொருளாக அமைந்துள்ளது.

முதல் திருவாய்மொழி பாசுரத்தின் இரண்டாம் அடி. ‘மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்’ (திருவாய். 1-1-1) என்பது. ஜந்மாத்யாதிகரணத்தால் (ப்ரஹ்மஸூத். 1-1-2) அறியப்படும் பொருளாக உள்ளது (ப்ரமேயமாக உள்ளது).

ப்ரஹ்மத்தைஅறிவதற்கு, வேதாந்தச்சொற்றொடர்கள் சான்றாதாரங்களாக அமைந்திருந்தபோதிலும், அவை, ப்ரஹ்மத்தின் குண நலன்களைக் காட்டித்தராது. உதாரணமாக ‘‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே’’, (தை. ப்ருகு. 1-2)-எதிலிருந்து இந்த பூதங்களெல்லாம் பிறக்கின்றனவோ, போன்ற சொற்றொடர்கள், ‘ப்ரஹ்மம் அண்டம் தோன்று வதற்குக் காரணமாக உள்ளது’ போன்ற பண்புகளை தெரிவிக்காது. எனவே, ‘ப்ரஹ்ம ப்ரதிபத்தி’ ஸித்திக்காது (ஜன்மகாரணத்வாதிகளை).

ப்ரஹ்மம், ஜகத் காரணமாக இருப்பது அதன் விசேஷணமா, உபலக்ஷணமா என்று ஆராய்ந்தால், இரண்டுமே அல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கருத்தாகும் (பூர்வபக்ஷி). இதற்கு உரிய பதில் அளிக்கப் பட்டு, இந்த இரண்டாலும் ப்ரஹ்மத்திற்கு ஜகத் காரணமாக இருக்கும் தன்மை ஸித்திக்கும் என்பது விளக்கப்படுகிறது. தேவதத்தன் கருமையாயும் இளைஞனாகவும், சிவந்த கண்களையுடையவனாயும், சீரான உருவத்தையுடைய வனாயும் இருப்பவன் (‘தே3வத3த்த: ஶ்யாமோ யுவா லோஹிதாக்ஷ:), என்பதில் பல பண்புகளால் தேவதத்தன் அடையாளம் காணப்படுவது போலவும் ‘‘குறைக்கொம் பானது, கொம்பில்லாதது, முழுக்கொம்பு டையது மாடு என்று சொன்ன பொழுது மாடு என்கிற சொல் ஒன்றேயிருந்தாலும் (க2ண்டோ3 முண்ட3: பூர்ணஶ்ருங்கோ3 கெ3ள:), பசு அடையாளம் காணப்படுவது போலவும், ஜகத்திற்குக் காரணமாக இருப்பது போன்றவை, ப்ரஹ்மத்தின் அடையாளங்களாக அறியப்படுகின்றன.

இந்த அடையாளங் களால், ப்ரஹ்மத்தை அறிந்து, ‘ப்ரஹ்மப்ரதிபத்தி’ செய்யக் கூடுமாகையாலே, ‘‘ப்ரஹ்மம் என்பது என்ன?’’ என்று ஆராயத்தகும் என்பதே, ‘ஜந்மாத்யாதிகரண’ (ப்ரஹ்மஸூத்ரம். 1-1-2)த்தால் அறியப்படும் பொருளாகும்.

‘மயர்வற மதிநலம் அருளினன் யவன்’ (திருவாய்.1-1-1) என்பதால், அஞ்ஞானம் (அறியாமை) அந்யதாஞானம் (ஒன்றை மற்றொன்றாக அறிவது) மற்றும் விபரீத ஞானம் (தவறான அறிவு) ஆகியவற்றால் ஏற்படும் ‘மயர்வை’ப் போக்கியபடியை தெரிவிக்கிறது. மேலும், பக்தி ரூபமான ஞானத்தை அவன் அருளியதும் தெரிவிக்கப் படுகிறது. இதனால் எம்பெருமானின் கருணை அறியப் படுகிறது.

‘‘காரணம் து த்4யேய: ஸர்வைஶ்வர்யஸம்பந்ந: ஶம்பு4ராகாஶமத்4யே த்4யேய:’’ (அதர்வஶிகை. 2) - (அந்த ஜகத்காரண) காரணனே தியானிக்கத்தக்கவன். ஸர்வைஶ்வர்யத்துடன் கூடியவனும் ஸர்வேஶ்வரனுமான ஶம்பு ஹ்ருதயாகாஶமத்தியில் தியானிக்கத்தக்கவன்.

என்கிறபடி, இவ்வாறு அருள் புரிவதற்கும், மயர்வற மதி நலம் அருள்வதற்கும், ஜகத் காரணனாய் இருக்க வேண்டும் என்பதனால், இது ப்ரஹ்மம் ஜகத்காரணமாக இருக்கும் லக்ஷணத்தைத் தெரிவிக்கிறது. எனவே, இந்த வரி ஜந்மாத்யாதிகரண (ப்ரஹ்மஸூத்.1-1-1)த்தின் பொருளைத் தன்னுள் அடக்கியதாகும்.

மேலும், ‘‘மயர்வற’’ என்பதால், அஜ்ஞானம் போக்கடிக்கப்பட்டது சொல்லப்படுவதால்,

‘‘அவித்யா நிவ்ருத்திரேவ ஹி மோக்ஷ:’’ - அஜ்ஞானம் கழிவதே மோக்ஷமாகும். என்கிறபடி, ஜ்ஞானம் முக்திக்குக் காரணமாக இருப்பது சொல்லப்படுகிறது. இந்த முக்தியானது, ‘‘ஜக3து3த்ப4வஸ்தி2தி ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாத3ய: ‘‘ - உலகத்தை உருவாக்குவது, காப்பது, அழிப்பது, ஸம்ஸாரத் தைத் தாண்டுவிப்பது’, என்கிறபடி, பிறப்பு, இறப்பை இயல்பாகக் கொண்ட ஸம்சாரத்திலிருந்து விடுதலையையும், ப்ரார்த்திப்பதால், இதைத்தருவது ப்ரஹ்மத்தின் செயலே என்று அறியப் படுகிறது. எனவே, அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருப்பது போல, ஜீவனுக்கு முக்தியளிப்பதும் ப்ரஹ்மத்தின் ஒரு லக்ஷணமாக அமைந்துள்ளது. இதே பொருள், ச்ருதப்ரகாசிகையில் பட்டரால் அருளிச் செய்யப் பட்டுள்ளது.

‘‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே I யேந ஜாதாநி ஜீவந்திI யத் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தி I தத்3விஜிஜ்ஞாஸஸ்வ I தத்3ப்3ரஹ்ம’’ (தை-ப்ரு 1-2) - ‘எவனிட மிருந்து இவையெல்லாம் மீண்டும்’. இவற்றால் மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் லீலைகள் - ‘முடிவற்ற, அற்புதமான, அசையும் மற்றும் அசையாத பொருட்களால் அமைக்கப் பெற்று, அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்ப தற்கான கருவிகள், அனுபவிப்பதற்கான இடம் ஆகியவற்றை சிறப்பியல்புகளாகப் பெற்று, அண்டத்தின் தோற்றம், நிலைநிற்கும் செயல் மற்றும் லயம் (அழிவு) ஆகியவற்றை நிர்வகிப்பது ஆகியவை விளக்கப்பட்டன.

இப்படி, ப்ரஹ்மமானது அண்டத்தின் தோற்றம், நிலைப்பு மற்றும் அழிவிற்குக் காரணமாக இருப்பதாகிய பண்பை விட்டுவிட்டு ,மோக்ஷத்திற்கு காரணமாக இருப்பதை ஆழ்வார் ஏன் அருளிச் செய்கிறார்? என்னும் கேள்வி எழுகிறது. ஜகத் காரணமாக இருப்பது மட்டுமே ப்ரஹ்மத்தின் லக்ஷணமென்று கூறவேண்டிய கட்டாயம் இல்லை. எல்லாமே அதன் பண்புகள்தான் என்று விளக்குவதற்காக, மோக்ஷத்திற்குக் காரணமாக இருக்கும் இயல்பை மட்டும் அருளிச் செய்தார்.

மேலும், வேதாந்த சாஸ்திரத்திற்கு உபயோகம் எனப்படுவது, மோக்ஷத்தை அறிவிப்பதேயாகும். எம்பெருமான் தமக்கு மோக்ஷத்தை தந்தருளுகையால் அதையே ஆழ்வார் அருளிச் செய்தார் என்னலுமாம். ப்ரஹ்மம், ஜகத்காரணமாக இருப்பதைக் கூறுகையில், அது சித், அசித் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த அண்டத்தைப் படைத்த அதன் அதிசயிக்கத்தக்க அளப்பரியத் தன்மையை விவரிக்குமே தவிர, மோக்ஷஸாதனமாக இருப்பது அறியப் படாது என்பது ச்ருதப்ரகாசிகா பட்டரின் திருவுள்ளம்.

எனவே, இங்கே ஆழ்வார், ‘‘மயர்வற மதி நலம் அருளினன்’ (1-1-1) என்கையில்,, ‘‘ஸம்சார விமோசன காரணத்தை அறிவிப்பதால், இந்த பாசுரவரி, ‘ஜந்மாத்யாதி கரண’(ப்ரஹ்மஸூத். 1-1-2)த்தின் இணையான பொருளைக் கொண்டது.

இப்பாசுரத்தின் மூன்றாம் வரி, ‘‘அயர்வற அமரர்கள் அதிபதி எவனவன்’’ (1-1-1) என்பதாகும். இது ‘ஶாஸ்த்ரயோ நித்வாத்’(ப்ரஹ்மஸூத். 1-1-3) அதிகரணத்தின் பொருளைத் தெரிவிப்பதாகும்.

ஒரு பொருளை விளைவிப்பதற்கு கர்த்தாவாக அல்லது காரணமாக ஒன்றும், மூலப்பொருளாக ஒன்றும் இருத்தல் வேண்டும். இவற்றில் கர்த்தாவாக இருக்கும் தன்மை, நிமித்த காரணம் என்றும், மூலப்பொருளாக இருக்கும் தன்மை, உபாதான காரணம் என்றும் அறியப் படுகின்றன. ப்ரஹ்மம் அண்டத்தின் நிமித்த காரணமாக இருப்பது,

‘‘க்ஷித்யாதி3கம் ஸகர்த்ருகம்; கார்யத்வாத் க4டவத்’’ - ‘‘பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டது, கார்யமாக இருப்பதினாலே, கடத்தைப்போலே’’, ஆகிய அநுமான வாக்கியங்களாலே ப்ரஹ்மத்தின் நிமித்த காரணத்வம் ஸித்திக்கும். அதாவது, ஓர் மண்குடத்தைக் காண்கையில், இதை உருவாக்கிய குயவன் ஒருவன் உள்ளான் என்பது அநுமானித்தால் அறியப்படுகிறது. அதே போல, இந்த அண்டத்தைக் காண்கையில், இதை உருவாக்கிய ஒருவன் இருக்கிறான் என்று அநுமானிக்கப்படுகிறது. இதனால், ப்ரஹ்மத்திற்கு நிமித்த காரணம் அநுமானிக்கப்படுகிறது.

உலகியலில் குடம் உருவாக்கத் தேவையான மண்ணும், உருவாக்கும் குயவனும் வேறு வேறாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்த நியதியின்படி, ‘அண்டத்திற்கு உபாதான காரணம் எது’ என்னும் கேள்வி எழ, இதை வேதாந்தங்கள் காட்டித் தருவதில்லையாகையாலே, ப்ரஹ்மத்தைக் குறித்த விசாரம் ஆரம்பிக்கத் தக்கதல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

மேலும், குயவனும், குடமும் போல, ப்ரஹ்மமும், அண்டமும் என்று கொள்வோமாகில், ப்ரஹ்மம் ஓர் சாதாரண ஜீவாத்மாக இருப்பதாக அறிய வேண்டிவரும். ‘‘ஈஶ்வரன்’’ என்று அறிய இயலாது. எனவே, ப்ரஹ்மத்திற்கு நிமித்த காரணமாக இருக்கும் தன்மையை அநுமானத்தால் உறுதி செய்ய முடியாது.

‘‘குயவனும், குடமும்’’ என்பது போல, நேரில் காணும் ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தாலும் நிலை நிறுத்த இயலாது. வேதாந்தத்தால் மட்டுமே இயலும். எனவே, ப்ரஹ்மத்தைக் குறித்த விசாரம் ஆரம்பிக்கத்தக்கதே என்பதை காட்டித் தருவதே ‘‘சாஸ்த்ரயோநித்வாதிகரணம் (1-1-3)’’.

ஆழ்வார், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்’ (1-1-1) என்பதால், எம்பெருமான், நித்யஸூரிகளின் தலைவனாக இருப்பதை அருளிச் செய்கிறார். நித்ய ஸூரிகளால் வணங்கப்படுவது ப்ரமாணத்திற்கு ஏற்றதோ, எதிரானதோ அல்ல. இப்படி சாதகங்களும் பாதகங்களும் இல்லாத ப்ரமாணமாக, நித்யஸூரிகளின் சேஷியாக இருப்பதை அருளிச்செய்வதால்,

‘‘தத்ஸாமாந்யாதி3 தரேஷு ததா2த்வம்’’- ‘‘அது பொதுவாகையால், மற்றவைகளுக்கு அவ்வாறே’’, என்கிற நியாயத்தால், ஸர்வஜ்ஞன் (எல்லாம் அறிந்தவன்) போன்ற குணங்களுடன் கூடிய ப்ரஹ்மம், ஜகத் காரணமாக இருப்பதற்கு வேதாந்தம் மட்டுமே ப்ரமாணம் ஆகவேண்டும், என்று அருளிச்செய்கிறார். எனவே, வேண்டிய பொருளைத் தருவதும், எதிரான பொருளை தராததும் சாஸ்த்திரம், என்னும் அர்த்தத்தைக் காட்டும் ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்’ (1-1-1) என்ற வரி, ‘‘ஶாஸ்த்ரயோநித்வாதி’’ கரணத்தின் (ப்ரஹ்மஸூத். 1-1-3) பொருளைக் காட்டித் தருகிறது என்று கொள்வதில் தட்டில்லை. ‘‘அதி4கபதி: - அதி4பதி:’’ என்று அந்தப் ‘பதி’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் நிமித்தகாரணமாயிருக்கும் தன்மையை அருளிச்செய்தார். இப்படி நிமித்த காரணமாயும் உபாதான காரணமாயிருக்கும் தன்மைகளை ‘அதிபதி’ என்று அருளிச்செய்கையாலே ப்ரமாணாந்தர அப்ராப்த ப்ரமாணாந்தர அவிருதார்த்தக (முரண்பாடற்ற) சாஸ்த்திர ப்ராமாண்யத்தை இச்சந்தை குறிப்பிடுகிறது. ஆக இவையெல்லாவற்றாலும் இது ஶாஸ்த்ரயோந்யதிகரண ப்ரமேயம்.

பாசுரத்தின் நான்காமடியான, ‘‘துயரறு சுடரடி தொழுதெழு’’ (1-1-1) என்பது ஸமந்வயாதிகரணத்திற்கு (ப்ரஹ்மஸூத்.1-1-4) இணையான பொருளைக் கொண்டது. ‘அர்த்தா2ர்த்தீ2 ராஜகுலம் க3ச்சே2த்’’, ‘‘மந்தா3க்3நிர்நாம்பு3 பிபே3த்’’, ‘‘ஸ்வர்க3காமோ யஜேத’’ (தை.ஸம்ஹி 2-5), ‘‘ந களஞ்ஜம் ப4க்ஷயேத்’’ - ‘‘பொருளை விரும்புமவன் ராஜ குலத்திற்குப் போகக்கடவன்’’ ‘‘அக்னி மந்தமா யிருப்பவன் ஜலத்தைக் குடிக்கக்கூடாது’’ ‘‘ஸ்வர்க்கத்தை விரும்புமவன் ஜ்யோதிஷ்டோம யாகம் செய்யக்கடவன்’,’ ‘‘களஞ்ஜத்தைச் சாப்பிடக்கூடாது’’(உள்ளிப்பூண்டைத் தின்னலாகாது), இது முதலிய வாக்யங்களில் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளால் (செய்கை, செய்யாதொழிகை, இவற்றால்) ஸாத்யமான இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவ்ருத்தி இவைகளின் வடிவாகக் காணப் பட்டுள்ளது. இது போன்ற வேத வாக்யங்கள், ‘‘இதைச் செய்யலாம்’’, ‘‘இதைச் செய்யக்கூடாது’’ என்பவற்றைக் கற்றுத்தருபவை. இவை, சில விஷயங்களைக் கற்றுத் தருவதான உபயோகத்தை உடையவை. ஆனால், ஸித்த வஸ்துவான ப்ரஹ்மத்தை அறிவிக்கும் சொற்றொடர்களுக்கு இது கிடையாது. எனவே, வேதாந்த சாஸ்திரம் ஆரம்பிக்கத் தக்கதல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் வாதமாகும்.

ப்ராப்தமாக, பயனாக, ஓர் நிதிபோல் இருக்கும் ப்ரஹ்மமே ஸ்வயம் ப்ரயோஜனமானது-அது தானே பலனாக அமையும் வடிவை உடையது-அதைக் காட்டித்தரும் வேதாந்த வாக்யங்களே, அந்த உபயோகத்தைக் கற்பிக்கும் சான்றாதாரங்களாகும்.

விரும்பப்படுபவை, வெறுக்கப்படுபவை ஆகிய வற்றை, பெறவோ நீக்கவோ வழிமுறைகளைக் கற்பிக்கும் வாக்யங்கள், இவற்றை நடைமுறைப்படுத்த உதவுபவையே தவிர, நேராக தாமே ஓர் பயனைத் தருபவை அல்ல.

ஆகையால், அனைத்து கல்யாண குணங்களும் குறைவின்றி பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் ப்ரஹ்மமே பயனாக இருக்கையில், அதைக் காட்டித்தரும் சாஸ்திரம் ப்ரமாணமாக ஸித்திக்கையாலே, இந்த சாஸ்திரம் ஆரம்பிக் கத்ததே என்று காட்டித்தருவதே, ஸமந்வயாதிகரணத்தின் (ப்ரஹ்மஸூத்ரம்.1-1-4) பொருள்.

  ஆழ்வார், ‘துயரறு சுடரடி தொழுதெழு’ (1-1-1) என்பதால் ‘துன்பங்களையெல்லாம் போக்கும் ஒளிமயமான திருவடிகளில் கைங்கர்யம் செய்து வாழ்ச்சி பெறுங்கள்’ என்று உபதேசிக்கிறார். எனவே, ‘‘உலகளந்தபொன்னடியே அடைந்துய்ந்தேன்’’ (பெரியதிருமொழி 5-8-9) என்று கொண்டாடப்படும் திருவடிகளே பயனாய், அவற்றை வணங்கி வழிபடுவதே புருஷார்த்தமாய் ப்ரார்த்தித்து, ஒப்பற்றவனான எம்பெருமானே மிக உயர்ந்த பயன் என்று அறிவிப்பதால், இந்த பாசுர அடி, சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கது என்று கூறும் ஸமன்வயாதிகரணத்திற்கு (ப்ர.ஸூத்.1-1-4) இணையானது.

  எனவே, திருவாய்மொழியின் முதல் பாட்டு, ‘‘சாஸ்த்ர விசாரத்தை ஆரம்பிக்கலாம்’’ என்று அறிவிக்கும் ‘‘சதுஸ்ஸூத்ரி’’யின் பொருளை அறிவிப்பதாக அமைந்துள்ளது.

ப4க்தாம்ருதாத்3யகா3தா2யாஸ் சதுஸ்ஸூத்ர்யேககண்ட2தா I நிரூபிதா வேத3மௌளி த்3வயநிஷ்ட2ஸதாம் முதே3 II .

பக்தர்களுக்கு அம்ருதம் போன்றதான திருவாய் மொழியின் முதற்பாட்டானது, ஸாரீரகஸாஸ்த்ரத்தின் முதல் நான்கு ஸூத்ரங்களின் பொருளாயிருப்பது, ஸம்ஸ்க்ருத, த்ராவிட வேதாந்தங்களில் ஊன்றிய நல்லோர்களின் உகப்பிற்காக நிரூபிக்கப்பட்டது.

  4.7. இதற்கு மேல், அடுத்த இரண்டு பாசுரங்கள் (1-1-2, 1-1-3), ‘‘ஈக்ஷதேர் நாஶப்3த3ம்’’ (ப்ர.ஸூத் 1-1-5) என்பதிலிருந்து தொடங்கி, அதிகரணங்கள், பாதங்கள் தரும் விளக்கத்திற்கு இணையானதாகயிருக்கும் என்பது விளக்கப் படுகிறது.

‘‘மனனகமலமற’’ (திருவாய் 1-1-2) என்று தொடங்கும் பாசுரம், ஸாமான்ய சொற்கள் பரமாத்மாவின் சிறப்புடைய வடிவைக் காட்டித்தருகின்றன என்பதை விளக்கும் ஈக்ஷத்யதிகரணம் 1-1-5 , ஆநந்தமயாதிகரணம் 1-1-6, அந்தரதி4கரணம் 1-1-7, ஆகியவற்றால் விளக்கப்படும் பொருள்களுக்கு இணையாக கொள்ளப் படுகிறது.

‘இலனதுயுடையனது’ (திருவாய் 1-1-3) என்று தொடங்கும் மூன்றாம் பாசுரம் ஆகாஶாதி4கரணம் 1-1-8, ப்ராணாதிகரணம் 1-1-9, ஜ்யோதிரதிகரணம் 1-1-10 மற்றும் இந்த்3ரப்ராணாதி4கரணம்(1-1-11) ஆகியவற்றிர்க்கு இணையான பொருளைத் தருவதாக உள்ளது.

‘மனனகமலமற’ (திருவாய்.1-1-2) என்னும் பாட்டு ஈக்ஷத்யதிகரணம் 1-1-5 , ஆநந்தமயாதிகரணம் 1-1-6, ஆகியவற்றின் பொருளைத் தருவதாக அமைந்துள்ளது. ஈக்ஷத்யதிகரணத்தில், ‘‘ஸதே3வ ஸோம்யேதமக்3ர ஆஸீத் ஏகமேவாத்3 விதீயம்’’ (சாந்.உப. 6-2-1) (’ஸத்’ என்பது மட்டிலுமே முதலில் இங்கு இருந்தது; அது தனியாக இருந்தது; இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை) என்பது போன்ற சொற்றொடர்கள் அண்டத்தின் காரணம், முக்குணங்கள் கலந்த, அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானமே ஒழிய, இந்த குணங்கள் இல்லாத ப்ரஹ்மம் அல்ல என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று.

ஜகத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருக்கும் ‘‘ஸங்கல்பம்’’ என்பது ப்ரதானத்திற்கு இல்லையாதலாலும், ப்ரஹ்மத்திற்கு அது உள்ளதாலும், சித், அசித்துடன் கூடிய ப்ரஹ்மம்; ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களை உடைய அசித்தை தன் உடலாக அது கொண்டிருப்பதாலும், அது ஜகத்காரணமாகக் கூடும். எனவே, ‘‘ஸத்’’ என்பதற்குப் பொருள், அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானமன்று, பரமாத்மா தான் என்பது ஸித்தாந்தமாக அமைகிறது.

ஆநந்தமயாதிகரணத்தில், ஜகத்திற்குக் காரணமான ‘ஆனந்தமயன்’ ‘ஜீவனே’ என்பது என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. இதற்காகக் கூறப்படும் காரணங்கள்:-

‘‘தஸ்மாத்3வா ஏதஸ்மாத் விஜ்ஞாநமயாத்I அந்யோ(அ)ந்தர ஆத்மா(ஆ)நந்த3மய:’’ (தை.ஆந. 5-2). ‘அதிலிருந்து, உண்மையில் விஜ்ஞானத்தால் அமைக்கப்பெற்ற இதனுள், உள்ளுக்குள் உறையும் ஆநந்தத் தால் அமைக்கப்பெற்ற ஆத்மாவிலிருந்து’ (’மநோமயனுக்கு மேற்பட்டவனாய் ஓர் அவயவியாக வர்ணிக்கப்பட்ட விஜ்ஞானமயனைக் (அறிவே வடிவானவனைக்) காட்டிலும் வேறாய் ஸூக்ஷ்மமாயுள்ள (நுண்ணியதான) ஆத்மா ஆநந்தமயன்’) ஆகையால், ஜீவனுடனான வேறுபாடு குறிப்பிடப்படுவதால், மந்திரத்தில் விவரிக்கப்பட்ட ஆநந்தமயன் எனப்படுபவன் ஜீவனே.

‘‘தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா’’ (தை.ஆந. 5-1) - ‘உண்மையில் இவன் உடலுக்கு உள்ளடங்கிய ஆத்மா’’ என்பதில் உடலின் தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘அநேந ஜீவேநா(ஆ)த்மநா(அ)நுப்ரவிஶ்ய’’ (சா2.உப. 6-3-2) - (நானேயாக இருக்கும் இந்த ஜீவனால் வ்யாபித்து, உள்நுழையப்பெற்று) என்பதால், ஜீவ பரமாத்மாக்களின் ஐக்யமும் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக கர்ம வசப்பட்ட ஜீவாத்மாவிற்கு, மித மிஞ்சிய ஆநந்தம் ஏற்படாது என்பதாலும், ‘‘சாரீரன்’’ என்பது, ‘கர்மத்தால் ஏற்பட்ட உடலைக் குறிப்பிடாது, இந்த அண்டமே உடலாக இருப்பதைக் குறிப்பிடும்’ என்பதாலும், சரீர ஆத்ம ஸம்பந்தம் அந்த ஒருநிலைபட்டபடியைச் சொல்லுகிறதே தவிர, ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்ல வில்லை என்பதாலும், ‘ஆநந்தமயன்’’ என்னும் சொல் ஜீவனைக் குறிக்காது. முற்றிலும் வேறுபட்டவனான பரமாத்மாவையே குறிக்கும் என்பது ஸித்தாந்தமாக கொள்ளப்படுகிறது.

அந்தரதி4கரணத்தில் (1-1-7) பொதுவாக, ஜீவாத்மா ஜகத்திற்கு ‘காரணன் ஆகமாட்டான்’ என்றாலும், அதிக அளவில் புண்யத்தை சேமித்து வைத்திருக்கும் ஆதித்யன் போல்வார் அண்டத்தின் காரணமாகக் கூடுமே என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்றாகும். இதற்குக் காரணமாகக் கூறப்படுவதாவது:-

‘ய ஏஷோ (அ)ந்தராதி3த்யே ஹிரண்மய: புருஷோ த்3ருஶ்யதே ஹிரண்யஶ்மஶ்ரு: ஹிரண்யகேஶ ஆப்ரணகா2த் ஸர்வ ஏவ ஸுவர்ண: I (சாந். 1-6-5) தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவமக்ஷிணீ தஸ்யோதி3தி நாம ஸ ஏஷ ஸர்வேப்4ய: பாப்மப்4ய உதி3த: உதே3தி ஹ வை ஸர்வேப்4ய: பாப்மப்4யோ ய ஏவம் வேத3I (சாந்.1-6-8) தஸ்ய ருக் ச ஸாம ச கே3ஷ்ணௌ ..... இத்யதி4தை3வதம்’’ (சா2.உப. 1-6-7) - (இங்கு காணப்படும் ஒருவன் சூரியனுக்கு உள்ளே இருப்பவன், பொன்னால் ஆக்கப்பெற்று, பொன்போன்ற மீசையுடன், பொன்னிற முடியுடன், விரல் நகங்களின் நுனிவரை பொன்னால் ஆக்கப்பெற்றவனும், ஆவான். அவன் இரண்டு கண்கள், சூரிய கிரணங்களால் அலர்த்தப்பட்ட தாமரை மலர்கள் போல் உள்ளன. அவன் பெயர், ‘உத்’ (உயர்ந்தது).

இந்த ஒருவன், எல்லா பாவங்களிலிருந்தும் (விடுபட்டவன்) உயர்ந்தவன். எல்லா பாவங்களிலிருந்தும் (விடுபட்டு) உயர்ந்தவனாக அறியப்படுபவன். ரிக் மற்றும் சாமம் இரண்டும் அவனைத் துதிக்கும் பாடகர்கள். இது அவன் இறைவனாக இருப்பதுடன் தொடர்புடையது) போன்ற சாந்தோக்ய உபநிஷத் சொற்றொடர்களால் காரணமாக இருக்கக்கூடிய ஒன்றிற்கு, உடல் உறுப்புகள் இருப்பது அறிவிக்கப்படுகிறது. இது கர்ம வசப்பட்ட ஜீவனுக்கே இருக்கக்கூடியது. எனவே, அவனே ஜகத் காரணன் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

‘‘ஸ ஏஷ ஸர்வேப்4ய: பாப்மப்4ய உதி4த:’’ (சா2.உப. 1-6-7) - ‘இவன், இந்த ஒருவன், எல்லா பாவங்களிலிருந்தும் மேல் எழுந்தவன்!’ பாவங்கள் அழிக்கப் பெற்றிருப்பது என்பது, கர்மங்கள் அழிக்கப்பெற்றிருப்பது. அதாவது, கர்ம வயப்பட்டிருப்பதின் சாயல் கூட (பயனற்று) இல்லாமல் இருப்பது. ஜீவர்கள் மகிழ்ச்சியையும் துயரத்தையும் தம் கர்மத்திற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வதால் கர்மவயப் பட்டவர்கள் என்பதால், அபஹதபாப்மத்வம்-எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டிருத்தல்-போன்ற குணங்கள், பரமாத்மாவிற்கே உரியவை. அவனுக்குக் கர்மவசத்தால் ஏற்படும் உடல் இல்லாத போதிலும், அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹம் உண்டென்பது ச்ருதி வாக்யத்தால் அறியப்படுகிறது. எனவே, ஜகத்காரணமாக இருப்பது, அளவிற்குட்பட்ட புண்யத்தை உடைய ஜீவாத்மாவல்ல. இவனை விட வேறுபட்டு மிக உயர்ந்தவனான பரமாத்மாவே என்பது ஸித்தாந்தமாகக் கொள்ளப்படுகிறது.

ஆழ்வார், இரண்டாம் பாசுரத்தில், ‘‘பொறியுணர் வவையிலன்’’ (1-1-2) என்பதால், பரமாத்மா, ‘அசித்தாலான இந்திரியங்களின் தொடர்பு அற்றவன்’ என்பதைத் தெரிவிக்கிறார். இது, அசித் சம்பந்தமற்ற ஈச்வரனின் இயல்பைத் தெரிவிக்கும் ஈக்ஷத்யதிகரணத்தின் ( 1-1-5) பொருள் என்று அறியலாம்.

‘‘மனனகமலமற மலர்மிசையெழுதரும் மனனுணர் வளவிலன்’’ (1-1-2) என்பதால், ‘ஜீவர்கள் தமக்கிருக்கும் அவித்யையை, யோகாப்யாசங்களால் கழித்து, மேல் நோக்கி எழும் மானஸ ஞானத்தை அடைகிறார்கள். இதனால் இந்த ஞானத்திற்கு விஷயமாக இருப்பவன், ஆத்மா அல்லன் அவனைக் காட்டிலும் வேறுபட்ட ப்ரஹ்மம் என்பதை அறிகிறார்கள், என்பதைக் காட்டித்தரும் இந்தச்சொற்றொடர் ஆநந்தமயாதிகரணத்தின் (1-1-6) பொருளை அறிவிப்பதாக உள்ளது.

‘‘உணர்முழுநலம்’ (1-1-2) என்பதால், பரமாத்மா, ஞானம் மற்றும் ஆநந்தம் ஆகிய கணக்கற்ற குணங்களைப் பெற்றிருப்பதை அருளிச்செய்கிறார். இதனால், அசேதன மான ப்ரதானத்திற்கு இல்லாத ஸங்கல்பமும், சேதனனான ஜீவாத்மாவிற்கில்லாத அளவிட இயலாத ஆநந்தமும் அறிவிக்கப்படுகிறது. எனவே, ஈக்ஷதேர் நாஶப்3த3ம் - 1-1-5 ,(ஸத்வித்யையிலே சொல்லப்படும் Ôஸத்Õ என்னும் ஜகத்காரணப்பொருள்), ஶப்தத்தால் (சொல்லால்) மாத்திரம் அறியப்படாததான மூலப்ரக்ருதி ஆகாது; (அதற்கு) ஸங்கல்பம் சொல்லப்படுவதால் (உறுதியான நினைவு சொல்லப்படுவதால்).

மற்றும், ஆநந்த3மயோ(அ)ப்4யாஸாத் - 1-1-13 ,(தைத்திரீயாநந்த3வல்லியில்) ஆநந்த மயனாக குறிப்பிடப்படுமவன் (பரமபுருஷனே); Òதேயே ஶதம்Ó என்று அவனுடைய ஆனந்தத்தை மேன்மேலே பெருக்கிப் படிக்கையால், என்பவற்றின் பொருள் இந்தப் பாசுரச் சொற்றொடரால் புரிந்து கொள்ளப்படுகிறது.

‘‘எதிர்நிகழ்கழிவினும் இனனிலனெனனுயிர் மிகுநரை யிலனே’’ (திருவாய்.1-1-2) என்னும் பாசுரச் சொற் றொடரால், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பரமாத்மா குறிப்பிடப்படுகிறான். ‘தாமரை மலர்’ போன்ற திருக் கண்களை படைத்திருக்கை, எல்லா பாவங்களும் அழிக்கப் பெற்றிருக்கை, போன்றவற்றால் சுட்டிக்காட்டப்பட்டு, ஆதித்ய மண்டலத்தின் நடுவில் எழுந்தருளியிருப்பவன், உயிர்களைப் படைக்கும் ஆற்றல் பெற்ற ஓர் ஜீவனல்லன். அவன் பரமாத்மாவே என்று உறுதிப்படுத்தும் அந்தரதி கரணத்தின் (1-1-7) பொருள் இந்த வரிகளில் காணப்படுகிறது.

ஈக்ஷத்யதிகரணத்தில், (1-1-5) ‘அசித்தான ப்ரதானம் ஜகத் காரணமல்ல’ என்பது நிலை நிறுத்தப்பட்டது. ஆநந்தமயாதி கரணத்தில் ‘ஆநந்தமயன் என்பவன் ஜீவாத்மாவல்ல’ என்பது நிலை நிறுத்தப்பட்டது. இந்த பாசுர வரியில், ஆநந்தமயாதி கரணத்தின் பொருள் முதலில் எடுத்துரைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆராய்கையில், புத்தி கூர்மை படைத்தவர்களுக்கு, ஸித்த வஸ்துவான ஜீவாத்மா ஜகத் காரணமல்ல என்பதை முதலில் கூறினால் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதாலாகும்.

ஆனால் ஸூத்ரகாரர், அசித்தான ப்ரதானம் ஜகத் காரணமல்ல என்று முதலில் அருளிச் செய்கைக்குக் காரணம் இந்த உண்மையைக் கூட அறிய இயலாத எளியவர்கள் ஜகத் காரணத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்காகவாகும். முதலில் அசித்தைக் காட்டி பின்பு, அதைவிட நுண்ணிய தான ஜீவனைக் காட்டி, இவ்விரண்டுமே ஜகத்காரணமல்ல என்று தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு ஆழ்வார் ஒரு முறையாலும், ஸூத்ரகாரர் இன்னொரு முறையாலும் கூறியிருப்பது ஒரே விஷயத்தைப் பற்றியதே. இவ்விரண்டிற்குமிடையே விரோதமில்லை. எனவே, ‘மனனகமலமற’ (1-1-2) என்று தொடங்கும் இந்தப் பாசுரம் ஈக்ஷத் அதிகரணம் (1-1-5), ஆநந்தமயாதிகரணம் (1-1-6) மற்றும் அந்தரதிகரணம் (1-1-7) ஆகிய மூன்று அதிகரணங்களுக்கும் இணையானது என்பது காட்டித் தரப்பட்டது.

இனி, ‘‘இலனது உடையனிது’’ (திருவாய். 1-1-3) என்கிற மூன்றாம் பாட்டு, ஆகாஶாதிகரணம் (1-1-8) தொடங்கி நான்கு அதிகரணங்களுக்கு இணையான பொருளைத் தருவது என்பது தெளிவாக்கப்படுகிறது.

ஆகாஶாதிகரணத்தில்(1-1-8), ஆகாஶஸ்தல்லிங்கா3த் - 1-1-23 ஸூத்ரத்தில், ‘‘அஸ்ய லோகஸ்ய கா க3திரிதி ஆகாஶ இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ஆகாஶாதே3வ ஸமுத்பத்3யந்தே ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்தி ஆகாஶோ ஹ்யே வைப்4யோ ஜ்யாயாநாகாஶ: பராயணம்’’ (சா2.உப. 1-9-1) - ‘இந்த மனிதர்களுக்கு இலக்கு (சேருமிடம்) எது? அவர் சொன்னார் ‘உண்மையில் ஆகாசம்’. இந்த இருப்பினங்கள் எல்லாமே உறுதியாக ஆகாசத்திலிருந்தே புறப்பட்டு வந்தன. அங்கேயே நிலைபெற செல்கின்றன. ஆகாஶம் மட்டுமே உறுதியாக இவற்றைக் காட்டிலும் மேம்பட்டது. ஆகாசம் மிக உயர்ந்த இலக்கு (சேருமிடம்). என்கிற சாந்தோக்ய உபநிஷத் வாக்யத்தில், ‘ஆகாஶம்’ என்னும் சொல்லால் அறியப்படுவது, எல்லோரும் நன்கறிந்த ஆகாசமே. ஏனெனில், ‘ஆகாஶம்’ என்பதால் இந்த வானமே அதிகமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது பரமாத்மாவல்ல என்பது என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

எல்லா சொற்களாலும் புரிந்து கொள்ளப்பட்டு ப்ரபஞ்சத்திற்குக் காரணமாக இருக்கை. ‘‘பராயணம்’’ எனப்படுகிற ப்ராப்ய ப்ராபகங்களாக இருக்கை. (நெறியாக வும், குறியாகவும் இருக்கை) போன்ற பண்புகள், நன்றாக அறியப்பட்ட ஆகாஶத்திற்கு பொருந்தாதாகையால், இந்த பெயர் பரமாத்மாவிற்கே பொருந்தும்.

‘‘ஆகாஶதே ஆகாஶயதி’’ (ஒளிரும் தன்மையுடைய ப்ரஹ்மம், ‘ஆகாசம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப்படுவது பொருத்தமானதே. (வடமொழியில் ‘ஆகாசம்’ என்னும் சொல் ‘காஸ்’ என்னும் வேரிலிருந்து தோன்றுகிறது. இதன் பொருள் ‘ஒளிர்வது’, ‘ஒளிர்விக்கச் செய்வது’ என்பவை)-('The word Akasa is derived from the root 'kas', to shine, and is interpreted to mean that which is Iuminous to itself and also that which causes other things to shine.). அது தானும் ஒளிர்விட்டுக்கொண்டு, மற்ற பொருள்களையும் ஒளிரச் செய்கின்றது). என்கிற வ்யுத்பத்தியாலே (சொற்பிறப்பியல்), ஆகாஶம் என்பது சாதாரணமான வானமல்ல. பரமாத்மாவே என்பது ஸித்தாந்தமாயிற்று.

ப்ராணாதிகரணத்தில் (1-1-9), அத ஏவ ப்ராண: - (1-1-24) என்ற ஸஜத்ரத்தில் Òஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ப்ராணமேவாபி4ஸம்விஶந்தி, ப்ராணமப்4 யுஜ்ஜிஹதேÓ (சாந்தோக்யம் 1\&11\&4) இந்த எல்லா பூதங்களும் ப்ராணனிலேயே லயிக்கின்றன; ப்ராண னிலிருந்து வெளிக் கிளம்புகின்றன.) என்னும் சொற்றொடர் காணப்படுகிறது.

இ¢ங்கு ப்ராணன் எனப்படுவது எல்லா ஜீவராசிகளும் வாழக் காரணமான பிராண வாயுவே என்று பூர்வபக்ஷிகள் (எதிர்வாதிகள்) கருதினார்கள். எல்லா பூதங்களும் பிராணவாயுவாலேயே உயிர்வாழ்வதாலும், செயல்படுவ தாலும் அதற்கு ஆகாசத்தைக் காட்டிலும் ஜகத்காரணமா யிருக்கத் தகுதியுண்டு என்று அவர்கள் கருத்து) கல், கட்டை போன்றவற்றிலும், ஜீவாத்மாவின் இயல்பிலும் நன்றாக அறியப்பட்ட ப்ராணனின் இயக்கம் (சுவாசித்தல்) காணப்படாமையால், ‘ப்ராணன்’ என்னும் சொல்லால் அறியப்படுவது, நன்கு அறியப்பட்ட ப்ராணன் (மூச்சுக் காற்று) அல்ல; பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

ஜ்யோதிரதிகரணத்தில் (1-1-10), ஜ்யோதிஶ் ஶரணாபி4 தா4நாத் (1-1-25) ஸூத்ரத்தில், ‘‘அத2 யத3த: பரோ தி3வோ ஜ்யோதி: தீ3ப்யதே விஶ்வத: ப்ருஷ்டே2ஷு ஸர்வத: ப்ருஷ்டே2ஷு அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு இத3ம் வாவ தத்3யதி3த3மஸ்மிந்நந்த: புருஷே ஜ்யோதி:’’ (சா2.உப. 3-13-7) - (சாந்தோக்யம் 3-13-7) (வ்யஷ்டி பதார்த்தங் களுக்கும் (பஞ்ச பூதங்களால் ஆன), ஸமஷ்டி (பஞ்ச பூதங்களின் கலப்பற்ற) பதார்த்தங்களுக்கும் அப்பால், பரமபதத்தின் மேலே, தமக்கு மேலில்லாத மிகச் சிறந்த லோகங்களிலே யாதொரு சோதியானது ஒளிவிடுகின்றதோ, அதுவே இம்மனிதனுக்குள் விளங்கும் ஜாடராக்நி என்னும் சோதியாகும் - (Jadaragni - This is an epithet of Agni or Fire. Here, this word denotes the digestive heat of the stomach in accordance with the scriptural passage - ''This Fire which is within man and by which food is digested - that is the Vaisvanara.") என்று சாந்தோக்யத்தில் ஓர் சொற்றொடர் காணப்படுகிறது. இதில் ஒப்பற்ற ஒளியுடையதாக ஓதப்படும் சோதியானது, மனிதனுடைய வயிற்றிலுள்ள ஜாடராக்னியோடு ஒன்றென ஓதப்படுவதால் உலகில் பிரஸித்தமான அக்னி ஸூர்யன் முதலான அசேதநமான சோதிகளிலொன்றே ஆக வேண்டும்.)

என்கிற சாந்தோக்ய உபநிஷத் சொற்றொடரில், ‘‘ஜ்யோதி’’ என்னும் சொல்லால் காட்டித்தரப்படுவது, நடைமுறையில் நன்றாக அறியப்பட்ட ‘‘ஒளியே’’ என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். பரமாத்மாவைக் குறிக்கும் அடையாளக் குறியீடுகள், இதில் இல்லை என்பது காரணமாக கூறப்படுகிறது. இது பொதுவாக அறியப்படும் ஒளியைக் குறிப்பதல்ல, ஒளிக்கெல்லாம் ஒளியூட்டும் ஒப்புயர்வற்ற பரமாத்மாவையே குறிப்பிடுகிறது என்பது ஸித்தாந்தம்.

இந்த்ரப்ராணாதிகரணத்தில் (ப்ரஹ்மஸூத்ரம் 1-1-11), ப்ராணஸ்ததா2 (அ)நுக3மாத் - 1--1-29 ஸூத்ரத்தில், ப்ரதர்தனனுக்கு இந்திரன் வரமாகக் கூறிய வார்த்தை: ‘‘ஸ ஹோவாச ப்ராணோ(அ)ஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ’’ (கௌ. 3-14) - ‘அவன் (இந்திரன்) கூறியதாவது; ‘‘நானே ப்ராணன், ப்ரஜ்ஞாத்மா; என்னை வாழ்வாகவும் அழிவற்றதாகவும் வணங்குவாயாக’’

போன்ற சொற்றொடர்களில் அறிவிக்கப்படும் இந்திரன், ஜீவாத்மாவே. ஏனெனில் ‘இந்திரன்’ என்பது, ஜீவனாகிய இந்திரனைக் குறிப்பது பழக்கத்தில் உள்ளது. மேலும், ‘‘மாமுபாஸ்வ’’ (கௌ. 3-14) - ‘என்னை வழிபடுவாயாக’. மிகச் சிறந்த நன்மையாவது, உண்மையில் அழிவற்ற தன்மையைப் பெறுவது. அண்டத்திற்கே காரணமான பொருளை வணங்குவதே, அழியாத தன்மை யைப் பெற்றுத்தரும் என்பது இவ்வாறு அறியப்படுகிறது. என்று அவன் தன்னை வணங்கச் சொல்கிறான் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். ‘‘ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்தோ3 (அ)ஜரோ(அ)ம்ருத:’’ (கௌ. 3-62) - ‘இந்த ப்ராணனே, ப்ரஜ்ஞாத்மா, ஆநந்தம், சிதையாதது, அழியாதது’. இந்தச் சொற்றொடர், ஆநந்தம் (பேராநந்தம்), அஜரா (மூப்பற்ற) மற்றும் அம்ருதா (அழிவற்ற) ஆகியவற்றுடன் ஸாமாநாதிகரண்யத்தில் பேசப்படுகிறது.

ப்ரஜ்ஞாத்மாவாக இருத்தல், ஆநந்தமயனாக இருத்தல், மூப்பற்று இருத்தல், அழிவற்று இருத்தல் போன்றவன், தேவனான இந்திரனிடம் பொருந்தாது. மேலும், ‘‘மாமுபாஸ்வ’’ என்பது, பரமாத்மாவின் சரீரமாக இருக்கும் இந்திரனாகக் குறிப்பிடுமே தவிர ஜீவனான இந்திரனை அல்ல, எனவே, இந்தச் சொற்றொடர்களால் அறியப் படுபவன் சேதனான இந்திரனல்ல, ஜகத் காரணனான பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

ஆழ்வார், ‘‘இலனதுஉடையனிதுஎனநினைவரியவன்’’ (திருவாய்.1-1-4) என்பதால், தொலைவிலுள்ள ஒன்றைக் காட்டி, ‘‘அதை உடையவன் அல்லன்’’ என்று கூறி, அருகில் உள்ள ஒன்றைக் காட்டி, ‘‘இதை உடையவன்’’ என்று நினைக்கவும் கூட அரியவன் என்று சொல்லிவிட்டு, ‘‘நிலனிடை விசும்பிடை உருவினன்’’ (1-1-3) என்பதால், இந்த பூலோகம், நடுப்பகுதி மற்றும் மேலுலகங்கள் ஆகிய வற்றில் வசிக்கும், எல்லா சேதன அசேதனங்கள் தன்னுடைய தாக உடையவனான பரமாத்மாவைக் குறிப்பிடுகிறார்.

‘‘அஸ்ய லோகஸ்ய கா க3திரிதி ஆகாஶ இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ஆகாஶாதே3வ ஸமுத்பத்3யந்தே ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்தி ஆகாஶோ ஹ்யே வைப்4யோ ஜ்யாயாநாகாஶ: பராயணம்’’ (சா2.உப. 1-9-1) - ‘இந்த மனிதர்களுக்கு இலக்கு (சேருமிடம்) எது? அவர் சொன்னார் ‘உண்மையில் ஆகாசம்’. இந்த இருப்பினங்கள் எல்லாமே உறுதியாக ஆகாசத்திலிருந்தே புறப்பட்டு வந்தன. அங்கேயே நிலைபெறச் செல்கின்றன. ஆகாஶம் மட்டுமே உறுதியாக இவற்றைக் காட்டிலும் மேம்பட்டது. ஆகாசம் மிக உயர்ந்த இலக்கு (சேருமிடம்).

Òஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ப்ராணமே வாபி4ஸம்விஶந்தி, ப்ராணமப்4 யுஜ்ஜிஹதேÓ (சா.உப. 1\&11\&4) இந்த எல்லா பூதங்களும் ப்ராணனிலேயே லயிக்கின்றன; ப்ராணனிலிருந்து வெளிக் கிளம்புகின்றன. என்னும் சொற்றொடர் காணப்படுகிறது. இ¢ங்கு ப்ராணன் எனப்படுவது எல்லா ஜீவராசிகளும் வாழக் காரணமான பிராண வாயுவே என்று பூர்வபக்ஷிகள் (எதிர்வாதம் செய்பவர்கள்) கருதினார்கள். எல்லா பூதங்களும் பிராணவாயுவாலேயே உயிர்வாழ்வதாலும், செயல்படுவ தாலும் அதற்கு ஆகாசத்தைக் காட்டிலும் ஜகத்காரணமா யிருக்கத் தகுதியுண்டு என்று அவர்கள் கருத்து.

‘‘பாதோ3(அ)ஸ்ய ஸர்வா பூ4தாநி த்ரிபாத3ஸ்ய அம்ருதம் தி3வி’’ (சா2.உப. 3-12-6) - ‘எல்லா இருப்பினங்களும் இதன் பாதம். அதன் (மற்ற) அழிவற்ற பாதங்கள் ஸ்வர்க்கத்தில் (பரமபதத்தில்) உள்ளன.

இது போன்ற ச்ருதி சொற்றொடர்களால் குறிப்பிடப் பட்ட ஆகாஶம் (வானம்), ப்ராணன், ஜ்யோதி போன்ற சொற்களால், எல்லாவற்றிற்கும் காரணமாக பரமாத்மா இருப்பது, சுட்டிக் காட்டப்படுவதை ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்.

‘‘உருவினன் அருவினன்’’ (திருவாய்.1-1-3) என்பதால், அவன் சித், அசித் பொருள்களுக்கு சேஷி என்பது விளக்கப்படுகிறது. ஆனால், அது ஜகத்காரணமாக இருப்பதைக் காட்டித் தரவில்லையே, எனில், சேஷியாக இருப்பவனுக்கு ப்ரபஞ்சம் கார்யமாக இருப்பதுவும் கூடும் என்று விளக்கப்படுகிறது. ஜ்யோதிரதிகரணத்தில் (1-1-10) காணப் படும் ‘‘பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி’’ (சா2.உப. 3-12-6)என்பதில் இந்த ப்ரபஞ்சத்திற்கே பரமாத்மா சேஷியாக இருப்பது குறிப்பிடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பாசுர வரிகளை அருளிச் செய்தார் ஆழ்வார். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அதிகரணங் களுக்குச் சமமான அர்த்தத்தைக் கொண்டது, இந்த பாசுரம் என்பது தேர்ந்த பொருளாகிறது.

‘‘அந்நலனுடை ஒருவனை’’ (திருவாய். 1-1-3) என்பதால், தனக் கொப்பார் இல்லாத ஆநந்த குணத்தை உடையவன் என்பதும், ‘‘ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்தோ3(அ)ஜரோ(அ)ம்ருத:’’ (கௌ. 3-62) - ‘இந்த ப்ராணனே, ப்ரஜ்ஞாத்மா, ஆநந்தம், சிதையாதது, அழியாதது’. இந்தச் சொற்றொடர், ஆநந்தம் (பேராநந்தம்), அஜரா (மூப்பற்ற) மற்றும் அம்ருதா (அழிவற்ற) ஆகியவற்றுடன் ஸாமாநாதிகரண்யத்தில் பேசப்படுகிறது.

இந்த ச்ருதி சொற்றொடர் காட்டித்தரும் ஆநந்தம், மூப்பின்மை, அழிவற்ற தன்மை ஆகியவை, ‘இந்திரன், ‘ப்ராணன்’ போன்ற சொற்களால் குறிப்பிடப்படும், பரமாத்மாவிற்கே பொருந்தும் என்று காட்டப்பட்டது, என்பது இந்த பாசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இது ‘இந்திரப்ராணாதிகரணத்தின் (1-1-11) பொருளை உணர்த்துவது என்று கொள்ளலாம்.

‘‘நணுகினம் நாமே’’ (திருவாய். 1-1-3) - ‘நாம் அடையப்பெற்றோம்’ என்பதால், பெற்ற பலன், பரமாத்மாவின் உபாஸனத்தால் கிடைத்தது என்பது அறிவிக்கப்படுகிறது. ‘‘ப்ராணோ(அ)ஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம் மாமாயு ரம்ருதமித்யுபாஸ்வ’’ (கௌ. 3-14) - ‘என்னை மட்டுமே உண்மையில் அறிந்துகொள்’ ‘நானே ப்ராணன், ப்ரஜ்ஞாத்மா, என்னை வாழ்வாகவும், அழிவற்றதாகவும் வழிபடுவாயாக’. என்னும் சொற்றொடரின் பொருளாகிய இந்திரனை உடலாகக் கொண்ட பரமாத்மா வழிபடப்பட வேண்டும் என்பதும் இந்தப் பாசுரத்தில் உள்ளது.

எனவே, இந்த மூன்றாம் பாசுரம் (திருவாய்.1-1-3) ஆகாஶாதிகரணம் (1-1-8) ப்ராணாதிகரணம் (1-1-9) ஜ்யோதிரதிகரணம் (1-1-10) மற்றும் இந்த்ரப்ரணாதிகரணம் (1-1-11) ஆகிய நான்கு அதிகரணங்கள் தரும் அதே பொருளைத் தருகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆம்நாயமௌளியுக3ளீவிஹாராணாம் ஸதாம் முதே| நிரூபிதாஆத்3யபாத3ஸ்ய கா3தா2த்ரயமார்த்த2தா ||

ஸம்ஸ்க்ருத, த்ராவிட வேதாதங்களில் ஸஞ்சரிக்கக் கூடிய நல்லோர்களின் உகப்பிற்காக, திருவாய்மொழியின் மூன்று பாட்டுக்களும், ஸாரீரக சாஸ்த்திரத்தின் முதல் அத்யாயத்தின் முதற் பாதத்தோடு ஒரே பொருள் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டது

  திருவாய்மொழியின் முதல் மூன்று பாசுரங்களுக்கும் ஸ்ரீபாஷ்யம் முதல் அத்யாயம் முதல் பாதத்தில் காணப்படும் அர்த்த விசேஷங்களுக்கும் உள்ள கருத்தொற்றுமை இதுகாறும் விளக்கப்பட்டது.

4.8. இனி நான்காம் பாசுரம் தொடங்கி மேல் மூன்று பாசுரங்கள் (திருவாய். 1-1-4, திருவாய். 1-1-5, திருவாய், 1-1-6) ஆகியவை முதல் அத்யாயத்தின் மற்ற பாதங்களுடன் ஒத்திருப்பது காட்டித்தரப்படுகிறது.

நான்காம் பாசுரமான, ‘‘நாம் அவன் இவன்’’ என்பது, இரண்டாம் பாதத்தில் விளக்கப்படும் ‘‘ஜகத்சரீரத்வத்தை’’ (பரமாத்மா இந்த அண்டத்தைத் தன் உடலாகத் தரித்திருப்பது) விளக்குகிறது. இந்த இரண்டாம் பாதம் ஜகத் சரீரத்வத்தை கூறுபவை ‘த்3விதீயே ஜக3ச்ச2ரீரகத்வம்’ என்று ஶ்ருதப்ரகாசிகா பட்டரும், ஸ்ரஷ்டா தே3ஹீ ஸ்வநிஷ்டே நிரவதி4மஹிமா (அ)பாஸ்தபா3த4: ஶ்ரிதாப்த: ஸ்வாத்மா தேரிந்த்3ரியாதே3 ருசிதஜநநக்ருத் ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ | நிர்தோ3ஷத் வாதி3ரப்4யோ ப3ஹுப4ஜநபத3ம் ஸ்வார்ஹ கர்மப்ரஸாத்3ய: பாபச்சி2த்3 ப்3ரஹ்மநாடீ3 க3திக்ருத3திவஹந் ஸாம்யத3ஶ்சாத்ர வேத்3ய: || (அதிகரண ஸாராவளி -19). (இதன் விரிவான பொருளை ‘வேதம் தமிழ் செய்த மாறன் பாகம் 1, பக்கங்களில் கண்டுகொள்வது) என்று நிகமாந்த தேசிகனும் விவரித் துள்ளனர். முதல் அத்யாயத்தின் நான்கு பாதங்களுக்கும், அடைதே பொருள் சொல்லுமிடத்தில், இரண்டாம் பாதத்தின் பொருளான, பரமாத்மா ‘‘தேஹீ’’ என்பதை, ஸ்ரீமத்வேங்கட நாதர் அருளிச் செய்கிறார்.

இரண்டாம் பாதம் முதல் அதிகரணத்தில், ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’’ (சாந். 3-14-1) - ‘இவையெல்லாம் உண்மையில் ப்ரஹ்மம்’என்னும் சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் அறியப்படும் ப்ரஹ்மம் ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். குற்றங்களற்ற பரமாத்மாவிற்கு, குறைகள் நிறைந்த சித், அசித் வடிவமான பண்பு ஏற்புடையதாகாது என்பதாலும், ஜீவாத்மாவிற்கு எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருக்கும் பண்பு ஏற்கும் என்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது.

ஸர்வ ஜகத்காரணம் ப்ரஹ்மத்திற்கே பொருந்தும். தேவர், மனிதர் போன்ற உடல்களில் ஜீவன் உறைவது, கூடுமானாலும், அவனுக்கு ஜகத்காரணம் கூடாது. எனவே, இந்தச் சொற்றொடரில் காணப்படும் ப்ரஹ்மம் என்ற சொல்லால் அறிவிக்கப்படுவது, பரமாத்மாவே; ஜீவனல்ல என்பது ஸித்தாந்தமாகிறது.

இரண்டாம் அதிகரணத்தில் (அத்த்ரதி4கரணம் 1-2-2), ‘யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே4 ப4வத ஓதந:I ம்ருத்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: II ‘‘ (கடோ2பநிஷத் 2-25) - ‘எவனுக்கு ப்ராஹ்மணரும் க்ஷத்ரியருமாகிற இரு வர்க்கமும் உணவாகின்றனரோ, யமன் எவனுக்கு ஊறுகாயாகிறானோ என்று கடவல்லியில் உணவையும் ஊறுகாயையும் உண்பவனாக ஒருவன் ஓதப்படுகிறான். கர்மபல அநுபவ முடைய ஜீவனே உணவு முதலானவற்றை உண்ண முடியும். ஆகையால் இங்கு ஓதப்படுபவன் ஜீவனேயாக வேண்டும்’.

என்பது போன்ற கடவல்லி வாக்யத்தில் ‘‘ஓதந:’’ என்பதால் அறியப்படுபவன் ஜீவனாகவே இருக்கவேண்டும். கர்மவசத்தால் அநுபவங்களைப் பெறுபவன் ஜீவாத்மாவே. ஆகையால். இவ்வாக்யத்தில் காட்டித்தரப்படுபவன், ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். இது கர்மமடியாகவரும் அநுபவம் அல்ல. ‘‘கர்த்ருத்வத்தால்’’ வருவது. இது பரமாத்மாவின் இயல்பு, எனவே, இங்கே சொல்லப்படுவது பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

மூன்றாம் அதிகரணத்தில் (அந்தராதி4கரணம் 1-2-3), ‘‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே I ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத3ம்ருதமப4யம் ஏதத்3ப்3ரஹ்ம’’ (சாந். 4-15-1) -’(யோகிகளால்) கண்ணிலே யாவனொரு புருஷன் பார்க்கப்படுகிறானோ, இவனே ஆத்மா என்றும், இவனே அம்ருதம் என்றும், இவனே ப்ரஹ்மம்’.

என்னும் சாந்தோக்ய உபநிஷத் வாக்யத்தில் குறிப்பிடப்படுபவன் ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். ஜீவனானவன், ‘கண்களில் வசிக்கிறான்’ என்பது பொதுவாக அறியப்படுகிறது. ஒருவர் மரணமடைந்து விட்டால், உயிர் (ஜீவன்) பிரிந்து விட்டதை, கண்களைப் பார்த்தே முடிவு செய்கிறோம். எனவே இவன் ஜீவன் தான் எனப்படுகிறது. ‘‘ரஶ்மிபி4ரேஷோ(அ)ஸ்மிந் ப்ரதிஷ்டி2த:’’ (ப்3ருஹ.உப. 7-5-1) - ‘இந்த ஒளிக்கற்றை யால், இதுவே இதனுள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது’, என்று ச்ருதி கூறுவதால், இது ஜீவனே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

‘‘ஏஷ ஆத்மேதி ஹோவாச, ஏதத3ம்ருதம் ஏதத3ப4யம் ஏதத்3ப்3ரஹ்மேதி (சாந். 4-15-1) ஏதம் ஸம்யத்3வாம இத்யாசக்ஷதே I ஏதம் ஹி ஸர்வாணி வாமாந்யபி4ஸம்யந்தி ............ (சாந். 4-15-2) ஏஷ உ ஏவ வாமநி: I ஏஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதிI" - ‘இவனே ஆத்மா என்றும், இவனே அம்ருதமென்றும், இவனே ப்ரஹ்மமென்றும், இவனை ஸம்யத்வாமன் என்றும் சொல்கிறார்கள். விரும்பத்தக்க குணங்களெல்லாம் இவனை அடைந்திருக்கின்றனவன்றோ. எவன் இதை அறிகிறானோ அவனையும் விரும்பத்தக்க குணங்கள் வந்தடைகின்றன. இவனேயன்றோ ‘வாமனி’ எனப்படுகிறான்; இவனேயன்றோ எல்லா வாமங்களையும் (அழகிய குணங்களையும்) (அடியார் களுக்கு) வரவழைக்கிறான். இதை அறிந்தவனும் எல்லா வாமங்களையும் (தன்னைச் சேர்ந்தவர்களுக்கும்) அளிப்பவன் ஆகிறான்.) என்று படிக்கப்பட்டது. இது போன்ற சொற்றொடர்களால் காட்டித்தரப்படும் கல்யாண குணங்கள் பரமாத்மாவிற்கே உள்ளதாலும்,’’யஶ்சக்ஷுஷி திஷ்ட2ந் ... யமயதி’’-(எந்தப் பரமாத்மா கண்ணினுள் நின்று நியமிக்கிறானோ) என்று பரமாத்மா விழியை இருப்பிடமாகக் கொண்டிருப்பது ச்ருதியால் அறியப்படுவதாலும், கண்ணில் வசிப்பவன் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

நான்காம் அதிகரணத்தில் (அந்தர்யாம்யதிகரணம் 1-2-4), ‘‘ய:ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய: ப்ருதி2வீமந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா (அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. 5-7-7) ‘‘எவன் பூமியில் நிலை நிற்கிறானோ, எவனை பூமி அறியாதோ, எவனுக்கு பூமியானது சரீரமோ, எவன் பூமியை உள்ளிருந்து கட்டுப் படுத்துகிறானோ, இந்த உள்ளிருந்து கட்டுப் படுத்துவன் உன்னுடைய அழிவற்ற ஆத்மா’’, இது போன்ற வாஜஸநேயக சொற்றொடர்கள், அந்தர்யாமியாக இருப்பவன் புலன்களால் உணரும் ஜீவன் என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. பரமாத்மா ஒருவனே அனைத்தையும் நியமிக்கிறான் என்பது அசாதாரண தர்மமாகையால்,

‘‘த்3ரஷ்டா ....... ஶ்ரோதா’’ (ப்ருஹ. 5-7-27) - ‘காண்பவன், கேட்பவன்’. இப்படி காண்பவன் மட்டுமே உள்ளிருந்து நியமிப்பவனாக அறிவுறுத்தப்படுவதாலும், கீழ்க்கண்டவாறு மற்றொரு காண்பவன் மறுக்கப் படுவதாலும். ‘‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’’ (ப்ருஹ. 5-7-27) - ‘இவனைத்தவிர (மற்றொரு) காண்பவன் இல்லை’. இவ்வாறாக அறிந்து கொண்ட பிறகு, இவ்வாறு பதில் கூறப்படுகிறது: ‘தெய்வங்களையும், அண்டங் களையும் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவனின் (நியமிப்பவனின்) குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால்’, புலனுறுப்புகள் இல்லாமலேயே, பரமாத்மா உணர்கையாலும் அந்தர்யாமி, ஜீவனல்ல; பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

ஐந்தாம் அதிகரணத்தில்- அத்2ருஶ்யத்வாதி3 கு3ணகாதி4 கரணம் 1-2-5, ‘யத்ததத்3ரேஶ்யமக்3ராஹ்யம்’’ (முண்ட. 1-1-6)-’எதைக் காண இயலாததோ (க்ரஹிக்க முடியாத தோ)’, இவற்றால் மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் இயல்பு வர்ணிக்கப் படுகிறது. ‘அக்ஷராத் பரத: பர:’’ (முண்ட. 2-1-2) - ‘மிக உயர்ந்த ஒன்று, அழிவிற்கு அப்பாற்பட்டது’ என்று ஸமஷ்டி புருஷன் (அண்ட ஸ்ருஷ்டிக்கு முற்பட்டுள்ள ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் முதலிய தத்வம்) முன்மொழியப்படுகிறது. இந்த அழியாத ஒன்றிக்கு அப்பாற் பட்ட, இருப்பிடத்தை அறிபவன். தரப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டவன்.’’அத்3ரேஶ்யமக்3ராஹ்யம்’’(முண்ட. 1-1-6) போன்ற சொற்களால் அறியப்படுவது ஜீவாத்மா மற்றும் ப்ரக்ருதி என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். ஆனால், முண்டக உபநிஷத்தின் அதே பகுதியில், ‘‘ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித்’’ (முண்ட. 1-1-10) - ‘எல்லாம் அறிந்தவன் எல்லா அறிவும் படைத்தவன்’ என்கிற சொற்கள் பரமாத்மாவிற்கே உரிய குணங்களைக் காட்டுவதால், ‘அத்3ரேஶ்யமக்3ராஹ்யம்’’ என்னும் சொல் பரமாத்மா வையே குறிக்கும் என்பது ஸித்தாந்தம்.

ஆறாவது அதிகரணத்தில், (வைஶ்வாநராதி4 கரணம் 1-2-6)

‘‘ஆத்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4 யேஷி தமேவ நோ ப்3ரூஹி’’ (சாந். 5-11-6) - (நீர் இந்த வைஶ்வாநராத்மாவையே இப்போது உபாஸிக்கிறீர்; அவனையே எங்களுக்கு உரைப்பீராக என்னும் ச்ருதி வாக்கி யத்தில், வைச்வாநரன் எனப்படுபவன் பரமாத்மா அல்ல. ஏனெனில், இது ஜாடராக்நி, இரண்டாம் பூதமாகிய அக்நி. ஓர் தேவதையைக் குறிக்கும் சொல் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.’’கோ ந ஆத்மா கிம் ப்3ரஹ்ம’’ (சாந். 5-11-1) - ‘யார் நம்முடைய ஆத்மா? மற்றும் எது ப்ரஹ்மம்?’ போன்ற சொற்றொடர்களால் எல்லா உயிர் களுக்கும் பரமாத்மா ஆத்மாவாக இருப்பது காட்டப் படுவதால், இந்த அண்டம் அவனுடைய சரீரமாக இருப்பது அறியப்படுவதாலும், ஜாடராக்நி போன்றவற்றை குறிக்க, ‘‘வைச்வாநரன்’’ என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்ட போதிலும், இவ்விடத்தில் இது பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

இந்த பாதத்தில் சொல்லப்பட்ட ‘ஜகத் சரீரத்வம்’ இந்தச் சொற்றொடர்களால் காட்டித்தரப்படுகிறது.

முதல் அதிகரணம் (ஸர்வத்ர ப்ரஸித்த்யதிகரணம் 1-2-1) :- ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’’ (சாந். 3-14-1) - ‘இவையெல்லாம் உண்மையில் ப்ரஹ்மம்’

இரண்டாம் அதிகரணம் (அத்த்ரதிகரணம் 1-2-2):- ‘‘கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்ட2ந்தீ’’- இதய குகையில் உள்ளே இருந்து. ‘‘தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மநுப்ரவிஷ்டம்’’ (கடோ2பநிஷத் 1-12) - ‘அவனைக் காண்பது அரிது, மறைக்கப்பட்டிருப்பவன், தொடர்ந்து நுழைபவன்’. என்பதால், இவன் சரீரம் சௌபரியைப் போன்றதன்று. இவன், ஸ்வரூபத்தால் எல்லா உடல்களிலும், ஹ்ருதயம் என்னும் குகையில் வசிப்பது கூறப்பட்டது.

மூன்றாம் அதிகரணம் (அந்தராதிகரணம் 1-2-3):-

‘‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே I ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத3ம்ருதமப4யம் ஏதத்3ப்3ரஹ்ம’’ (சாந். 4-15-1) - (யோகிகளால்) கண்ணிலே யாவனொரு புருஷன் பார்க்கப்படுகிறானோ, இவனே ஆத்மா என்றும், இவனே அம்ருதம் என்றும், இவனே ப்ரஹ்மம்’. என்பதால், இந்திரியங்களும் பரமாத்மாவின் சரீரம் என்பது காட்டப்பட்டது.

நான்காம் அதிகரணம் (அந்தர்யாம்யதிகரணம் 1-2-4) :-

‘‘ய:ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய: ப்ருதி2வீமந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா (அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. 5-7-7) - ‘எவனொரு வன் அண்டத்தில் வசிக்கிறானோ, அவன் அண்டத்தின் உள்ளிருக்கிறான். எவனை அண்டம் அறியாதோ, எவனுக்கு அண்டம் உடலோ, எவன் அண்டத்தை உள்ளிருந்து நியமிக்கிறானோ, அவனே உன் ஆத்மா, உள்ளிருந்து நியமிப்பவன், அழிவற்றவன்’. இவ்வாறு யாரோ ஒருவன், தெய்வத்தன்மை வாய்ந்தவற்றுள் வசிப்பது குறிப்பிடப் படுகிறது - நீர், நெருப்பு, அந்தரம் (நடுப்பகுதி), காற்று, சூரியன், திசைகள், சந்திரன், தாரகைகள், வானம், இருட்டு மற்றும் வெளிச்சம். அவனுக்குச் சொந்தமான எல்லா பருப்பொருள்கள் - ப்ராணன், வாக்கு, கண், செவி, மனம், தோல், உணர்வு, விதை. இப்படி, பல பொருள்களில் உள்ளிருந்து, இவ்வாறு இருப்பது, அந்தப் பொருள்களுக்குத் தெரியாமல், அப்பொருள்களைத் தன் உடலாகக் கொண்டு அவற்றை நியமிப்பது இவ்வாறு வெளிப்படுத்தப் படுகிறது.இந்திரியங்களுக்கு மட்டு மல்லாமல், எல்லா தத்வங்களுக்கும் பரமாத்மா சரீரி என்பது காட்டப்பட்டது.

ஐந்தாம் அதிகரணம் - அத்2ருஶ்யத்வாதி3கு3ணகாதி4கரணம் 1-2-5 :- எல்லா தத்துவங்களின் தொகுப்பும், உருவத்தால், ப்ரஹ்மத்தின் சரீரம் என்று.

ரூபோபந்யாஸாத் ச (1-2-24) - (உலகம் முழுவதையும் அக்ஷரத்திற்கு) ஶரீரமாகச் சொல்லுகையாலும் (அக்ஷரம் பரமாத்மாவே.)

‘‘அக்3நிர்மூர்த்தா4 சக்ஷுஷி சந்த்3ரஸூர்யௌ தி3ஶஶ்ஶ்ரோத்ரே வாக்3விவ்ருதாஶ்ச வேதா3: I வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மாII’’ (முண்ட 2-1-4) - என்ற வர்ணனைக்குப் பொருளாவது:- ‘அவன் சிரம் (தலை) மேலுலகம் (சொர்க்கம்); அவன் விழிகள் சூரியன் மற்றும் சந்திரன்; அவன் செவிகள் திசைகளாகும். அவன் பேச்சு வேதங்களாகும். அவன் ப்ராணன் காற்றாகும். அவன் இதயமே இந்த அண்டம், அவன் பாதங்கள் இந்த பூமி; அவன், எல்லா இருப்பினங்களை உள்ளிருந்து ஆள்பவன்’ என்பதாகும். இத்தகைய ஓர் வடிவம், எவன் எல்லாவற்றின் உள்ளுறை ஆத்மாவாக உள்ளானோ, அந்த மிக உயர்ந்த ஆத்மாவிற்கே உரியதாக இருக்க இயலும்.

ஆறாம் அதிகரணம் - வைஶ்வாநராதி4கரணம் 1-2-6 :- பரமாத்மாவின் இந்த, ‘‘ஜகத் சரீரத்வம்’’ மோக்ஷத்தை விரும்புபவர்களால், உபாஸிக்கத் தக்கது எனப்பட்டது.

‘‘ஆத்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4 யேஷி தமேவ நோ ப்3ரூஹி’’ (சாந். 5-11-6) - (நீர் இந்த வைஶ்வாநராத்மாவையே இப்போது உபாஸிக்கிறீர்; அவனையே எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி, ‘‘யஸ்த்வேதமேவம் ப்ராதே3ஶமாத்ரமபி4 விமாநமாத் மாநம் வைஶ்வாநரம் உபாஸ்தே’’ (சாந். 5-18-1) - (எவனொருவன் எங்குமிருப்பவனாகையாலே அளவற்ற வனான வைஶ்வாநரானவனை ஓரிடத்திலிருப்பவனாக உபாஸிக்கிறானோ, அவன் ஸர்வலோக ஸர்வபூத ஸர்வாத்மாக்களிலும் அந்நத்தை உண்கிறான், என்பதீறாக வைஶ்வானரன் என்று ஒரு தத்துவம் ஓதப்பட்டது.

ஆறு அதிகரணங்கள் கொண்ட முதல் அத்யாயம் இரண்டாம் பாதத்தில் சொல்லப்பட்ட ஜகத்சரீரத்வத்தை, ஆழ்வார்,

நாமவனிவனுவன் அவளிவளுவளெவள் தாமவரிவருவர் அதுவிதுவுதுவெது வீமவையிவையுவை அவைநலம் தீங்கவை* ஆமவையாயவை ஆய்நின்றஅவரே. (திருவாய்.1-1-4) என்ற பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். தந்தாமாயும், தூரத்தில் இருப்பவனாகியும், அருகில் இருப்பவனாகியும், வேறு எங்கோ இருப்பவனாகியும், ஆகிய ஆண்களும், தூரத்திலிருப்பவளும், அருகில் இருப்பவளும், எங்கோ இருப்பவளும், யார் என்று கேட்கப்படுபவளும், ஆகிய பெண்களும்; பன்மையில் விளிக்கப்படும் அவர்கள், இவர்கள் உவர்கள் எனப்படுப வர்களும், ஆண், பெண் ஆகிய அடையாளமில்லாத அது, இது, உது என்று சொல்லப்படும் பொருள்களாயும், நல்லதாயும், தீயதாயும் உள்ள பொருள் களாயும், ஆகிய இத்தனையுமாகி, மூன்று காலங்களிலும் இருக்கக் கூடியவன், பரமாத்மா என்று ஸாமாநாதிகரண் யத்தாலே, இந்த ஜகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் இடையே நிலவும் சரீர-ஆத்ம பாவத்தை அருளிச் செய்வதால், இப்பாசுரம்-இரண்டாம் பாதத்தோடு கருத்தொற்றுமை கொண்டதாயிற்று.

அவரவர்தமதமது அறிவறிவகைவகை அவரவர்இறையவர் எனவடியடைவர்கள் அவரவர்இறையவர் குறைவிலர்இறையவர்* அவரவர்விதிவழி அடையநின்றனரே.

(திருவாய். 1-1-5) என்ற பாசுரத்தில், மூன்றாம் பாதத்தில் தரப்பட்டுள்ள பொருளை அருளிச் செய்கிறார். இந்த இரண்டிலும், பரமாத்மா எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருப்பது காட்டித்தரப் படுகிறது. இப்பாதம், இந்த கருத்தைச் சொல்வதை ‘‘த்ருதீயே ஸர்வாத்மத்வப்ரகார:’’- ‘‘முதல் அத்யாயத்தின் மூன்றாம் பாதமானது, பரமாத்மா எல்லா வற்றுக்கும் ஆத்மாவாயிருக்கும் வகையைச் சொல்லுகிறது’’, என்று ச்ருதப்ரகாசிகையில் பட்டர் அருளிச் செய்துள்ளார்.

மூன்றாம் பாதம், முதல் அதிகரணத்தில் (த்3யுப்4வாத்3ய தி4 கரணம் 1-3-1), ‘‘யஸ்மிந் த்3யௌ: ப்ருதி2வீ ச அந்தரிக்ஷமோதம் மநஸ்ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: I தமேவைகம் ஜாநதா2த்மாநம் அந்யாவாசோ விமுஞ்சத2 அம்ருத ஸ்யைஷ ஸேது:’’ (முண்ட. 2-2-5)- ‘எவனிடம் தேவலோகமும் பூமியும், அந்தரிக்ஷமும், மனமும் எல்லா இந்திரியங்களும் சேர்ந்திருக்கின்றனவோ, அந்த ஆத்மா ஒருவனையே அறியுங்கள்; மற்ற வார்த்தைகளை விடுங்கள்; இவன் மோக்ஷத்திற்கு வழியாவான்’. என்பதால் அறியப் படுபவன், பூவுலகம், இடைப்பட்ட பகுதி, மேலுலகம் ஆகியவற்றைத் தாங்குபவதாலும், மனம், ப்ராணன் ஆகிய வற்றுடன் தொடர்புடையதாலும் நாடிகளை தரித்திருப் பதாலும் பல பிறப்புகளை அடைவதாலும், ஜீவனே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

‘‘தமேவம் வித்3வாநம்ருத இஹ ப4வதி I நாந்ய: பந்த்தா2 அயநாய வித்3யதே’’ (தை.ஆரண்யகம் 3-12-17, புருஷ ஸூக்தம்-17) - ‘அவனை இவ்வாறு அறிந்தவனாகி, அவன் (அறிந்தவன்) இங்கே அழிவற்ற வனாகிறான். இதைத்தவிர முக்திக்கு (விடுதலைக்கு) வேறு வழியில்லை’.

அழிவற்ற தன்மையை அடைவிக்கும் பாலமாக இருப்பதும், எல்லாவிதமான ஞானத்தை உடையவனும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவனுக்கு, மனம், ப்ராணன், நாடிகள், ஆகியவற்றைத் தரிப்பது கூடும் என்பதாலும், கர்மவசப்படாமல், பல பிறவிகளை அடைவது இவனுக்கும் உண்டாகையாலே, பரமாத்மாவே இதில் ஆதாரமாகக் கூறப்படுபவன் என்பது ஸித்தாந்தம்.

இரண்டாம் அதிகரணத்தில் (பூமாதிகரணம் 1-3-2 ),

‘‘யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யத் ஶ்ருணோதி நாந்யத்விஜாநாதி ஸ பூ4மா I அத2 யத்ர அந்யத் பஶ்யதி அந்யத் ஶ்ருணோதி அந்யத்3விஜாநாதி தத3ல்பம்’’ (சாந். 7-24-1) - ‘எதை அறியும்போது வேறொன்றைக் காண்பதும் கேட்பதும், அறிவதுமில்லையோ அதுவே பெரிது; எதை அறியும்போது வேறொன்றைக் காணவும், கேட்கவும், அறியவும் செய்கிறானோ அது சிறிது’ என்கிற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியத்தில் காணப்படுபவன், ‘பூம’ என்னும் குணத்தை உடைய, ஜீவனாக இருக்கவேண்டும்.

‘‘தரதி ஶோகமாத்மவித்’’ (சாந். 7-1-3) - ‘ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைத் தாண்டிச் செல்கிறான்’என்று முமுக்ஷு ஜீவனிடத்தில் ஆத்மோபதேஶம் நிறைவடை வதாலும், முக்தி அடைந்த நிலையில், அவன் அடையும் ஆனந்தம் ‘பூமா’ என்னும் சொல்லால் குறிப்பிடப்படுவதால், இவ்வாக்கியத்தில் அறியப்படுபவன், ஜீவனே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

‘‘யஸ்ஸத்யேநாதிவத3தி’’ (சாந். 7-16-1) - ‘எவனொருவன் அதிகப்படியான துணிவுடன் உண்மையைப் பேசுகிறானோ’ என்னும் வாக்கியத்தால் ‘ஸத்ய’’ என்பதால் ஆத்மோபதேஶம் பரமாத்மாவிடமே இறுதிப் பயனைப் பெறும். மேலும், பரமாத்மாவின் ஆநந்தம், ‘‘பூமா’’ என்பதாக அறியப் படுவதாலும், ‘‘பூமா’’ எனப்படுவது பரமாத்மா என்பது ஸித்தாந்தம்.

மூன்றாம் அதிகரணத்தில் (அக்ஷராதி4கரணம் 1-3-3),

‘‘ஸஹோவாச ஏதத்3வை தத3க்ஷரம் கா3ர்கி3 ப்3ராஹ்மணா அபி4வத3ந்தி அஸ்தூ2லம் அநண்வஹ்ர ஸ்வம் அதீ3ர்க4மலோஹித மஸ்நேஹமச்சா2யம்’’ (ப்ருஹ. 5-8-7) - (யாஜ்ஞவல்க்யர் கூறினார். இதையே அக்ஷரமென்று ப்ரஹ்மஜ்ஞானிகள் கூறுகின்றனர்; அது பருமனில்லாதது; அணுவல்லாதது; குட்டையல்லாதது; நீளமல்லாதது; சிவப்பில்லாதது; பசையில்லாதது; நிழலற்றது ...) எனப்படும் வாஜஸநேய வாக்கியத்தால் அறியப்படும் ‘‘அக்ஷரம்’’ ஜீவனாகவே இருக்கவேண்டும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

ஏனெனில், ‘‘அக்ஷராத்பரத: பர:’’ (முண்ட. 2-1-2) - ‘மிக உயர்ந்தது, அக்ஷரத்திற்கு அப்பாற்பட்டது’. ‘‘அவ்யக்தமக்ஷரே லீயதே’’ (ஸுபாலோ. - 2), ‘வெளிப்படாதது, அழியாத அதனுள் அமிழ்கிறது’, எனப்படும் சொற்றொடர்களின் பொருள் ஜீவனைக் குறிக்கின்றன. மூன்று காலங்களிலும் நிலைபெற்று, எல்லாவற்றிற்கும் ஆதரமாக இருந்து தரிப்பவனும், ‘‘ஆகாஶ’’, ‘‘அக்ஷரம்’’ என்னும் சொற்களால் அறியப்படுபவனும் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

நான்காம் அதிகரணம் (ஈக்ஷதிகர்மாதி4கரணம் 1-3-4 ) :--

‘‘ய: புநரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யநேந ஏவாக்ஷரேண பரம்புருஷம் அபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பந்ந: I யதா2 பாதோ3த3ரஸ்த்வசா விநிர்முச்யதே ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர்முக்த: ஸஸாமபி4: உந்நீயதே ப்3ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத் ஜீவக4நாத் பராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதேII’’ (ப்ரஶ்நோ. 5-5) - ‘மூன்று மாத்திரைகளையுடைய இந்த ‘ஓம்’ என்னும் அக்ஷரத் தாலேயே இந்தப் பரமபுருஷனை எவன் த்யானிக்கிறானோ அவன் தேஜோமயமான சூரியனில் சேர்ந்தவனாய், பாம்பு சட்டையை விட்டுவருவதுபோல் பாபத்தினின்று நீங்கி வந்தவனாய், ஸாமகானம் செய்பவர் களாலே ப்ரஹ்ம லோகத்தை அடைவிக்கப் படுகிறான். தேஹேந்த்ரியங்களைக் காட்டிலும் மேலான, ஜீவனைக் காட்டிலும் மேலான ஹ்ருதயவாஸி புருஷனைக் காண்கிறான் அவன்’ இந்த வாக்கியத்தில் காட்டப்படும் பரமபுருஷன் நான்முக ப்ரஹ்மனே என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. ஏனெனில், இவனுக்கு, பூலோகம், நடுப்பகுதி ஆகியவற்றை ஸங்கல்பிக்கும் திறமை உள்ளது.

‘‘யத்தத் ஶாந்தமஜரமம்ருதமப4யம்’’ (ப்ரச்ந. 5-7) - ‘எந்த ஒன்று, அமைதி நிறைந்ததோ, வயதுவரம்பற்றதோ, அழிவற்றதோ, அச்சமற்றதோ’ என்று அழிவற்றதன்மை பேசப்படுகையாலும், முக்தனுக்கு பலனாக ப்ரஹ்மலோகம் அல்லாததாலும்,

‘‘யத்தத்கவயோ வேத3யந்தே’’ (ப்ரச்ந. 5-7) - ‘எதை அறிஞர்கள் அறியப் பெறுகிறார்களோ’. ‘கவய:’ - அறிவு நிறைந்தவர்கள் (ஞானிகள்). இப்படிப்பட்ட ஞானிகள் காணத்தக்கது விஷ்ணுவின் இருப்பிடம் மட்டுமே. என்று நித்யஸூரிகளால் ஸேவிக்கப்படும் இடம் ப்ரஹ்மலோகம் அல்லாததாலும், இதில் கூறப்படும் பரமபுருஷன், பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

ஐந்தாம் அதிகரணத்தில் (த4ஹராதி4கரணம் 1-3-5),

‘‘அத2 யதி3த3மஸ்மிந் ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தர ஆகாஶ: தஸ்மிந் யத3ந்த: தத3ந்வேஷ்டவ்யம் தத்3வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்’’ (சாந். 8-1-1) - ‘ப்ரஹ்மத்தின் உறைவிடமான இந்த தேஹத்தில் தாமரை போன்று சிறிய (ஹ்ருதயமென்னும்) ப்ரஹ்மத்தின் இருப்பிடம் உள்ளது. இதனுள் நுண்ணியதான ஆகாஶம் உள்ளது. அதற்குள்ளி ருப்பது தேடத்தக்கது; அதுவே அறியத்தக்கது’ போன்ற சாந்தோக்ய சொற்றொடரில், இதயம் என்னும் தாமரையில் வசிப்பது ஜீவனாகவோ அல்லது பொதுவாக அறியப்படும் ஆகாஶ(வான)மாகவோ இருத்தல் வேண்டும் என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று.

‘‘ஏஷ ஆத்மா(அ)பஹதபாப்மா விஜரோ விம்ருத்யு: விஶோக: விஜிக4த்ஸ: அபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப:’’ (சாந். 8-1-5) - ‘இவன் இயற்கை யிலேயே ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருப்பவனாய்), பாபமற்றவனாய், ஜராமரணமற்றவனாய் (மூப்பு, இறப்பு அற்றவனாய்), ஶோகமற்றவனாய், பசிதாகமற்றவனாய், தடை படாத காமத்தையும் ஸங்கல்பத்தையுடையவனாயிருப் பவன்’. இந்தச் சொற்றொடர்கள் ஒருவரை, ‘தஹராகாசம் என்பது ‘மிக உயர்ந்த ப்ரஹ்மமே’ என்பதை, புரிந்து கொள்ள வைக்கும்.

ப்ரஜாபதியின் வாக்கியத்தால், ஜீவன் எல்லா பாவங்களும் அழியப்பெற்ற, ‘‘அபஹதபாப்மா’’வாக இருப்பது அறிவிக்கப்படுவதும் இதற்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது. இந்த, ‘‘அபஹதபாப்மா’’வாக இருப்பது, பொதுவாக அறியப்படும் ஆகாஶத்தில் இல்லாததாலும், ப்ரஜாபதியின் வாக்கியத்தில், ஜீவனுக்கு இது இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தஹரவாக்யத்தில் அறிவிக்கப் பட்டிருக்கும் அபஹதபாப்மத்வம் இவனுக்கு இல்லாமை யாலும், ஆகாஶம் என்னும் சொல்லால் பரமாத்மா அறியப் படுவதாலும், தஹராகாஶம் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

ஆறாவது அதிகரணத்தில் (ப்ரமிதாதி4கரணம் 1-3-6 ):-

‘‘அங்கு3ஷ்ட2மாத்ர: புருஷோ மத்4ய ஆத்மநி திஷ்ட2தி I ஈஶாநோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே I ஏதத்3வைதத்’’ (கடோ. 4-12) - கட்டை விரல் பருமனுள்ள புருஷன் சரீரத்தின் நடுவில் நிற்கிறான். முக்காலத்திலுமுள்ள அனைத்துக்கும் ஈச்வரனான அவன் அத்தகைய இருப்பில் வெறுப்படைவதில்லை என்னும் கடவல்லி வாக்கியத்தில் அறியப்படுபவன் ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும், கட்டுப்படுத்துபவன் பரமாத்மாவேயாகை யால், இந்த அங்குஷ்டமாத்ர புருஷன் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது அதிகரணங் களில் (தே3வதாதி4கரணம் 1-3-7, மத்4வதி4கரணம் 1-3-8, அபஶூத்3ராதி4கரணம் 1-3-9), ப்ரஹ்மத்தை அறிய யார் யாருக்கு அதிகாரம் உள்ளது அல்லது இல்லை என்பது விசாரிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் அதிகரணத்தில் (அர்த்தா3ந்தரத்வாதி3வ்யபதே3ஶா தி4கரணம் 1-3-10),

‘‘ஆகாஶோ ஹ வை நாமரூபயோ: நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம தத3ம்ருதம் ஸ ஆத்மா’’ (சாந். 8-14-1) - ‘ஆகாஶமே நாமரூபங்களை நிர்வஹிப்பது; அவையில்லாமல் இருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்ம மாகவும், அம்ருதமாகவும் ஆத்மாவாகவுமிருப்பது’ என்னும் சாந்தோக்ய உபநிஷத் வாக்கியத்தில் ‘‘ஆகாஶம்’’ எனப்படுபவன், ஜீவாத்மாவைக் குறிக்கிறது என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்று. ஏனெனில்,

‘‘அஶ்வ இவ ரோமாணி விதூ4ய பாபம் சந்த்3ர இவ ராஹோர்முகா2த் ப்ரமுச்ய I தூ4த்வா ஶரீரமக்ருதம் க்ருதாத்மா ப்3ரஹ்மலோகமபி4 ஸம்ப4வாமிII’’ (சாந். 8-13-1) - ‘குதிரை மயிர்களை உதறுவதுபோலும், சந்திரன் ராஹுவின் முகத்திலிருந்து விடுபடுவதுபோலும் சரீரத்தை உதறிவிட்டு க்ருதார்த்தனாய் நித்யமான ப்ரஹ்மலோகத்தை அடையக் கடவேன்’. ஆற்றப்பட்ட கர்மத்துடன் (க்ருதாத்மா) நான் ப்ரஹ்ம லோகத்தின் முடிவற்ற தன்மையை (அக்ருதம்) அடையக் கடவேன்.

என்பதில் ஜீவன், முக்தனாவதற்கு முன்பு, கர்ம வசப்பட்டு, நாம ரூபங்களோடு இருந்தான் என்பதால், இது அவனுக்கே பொருந்தும் எனப்படுகிறது. ஜீவாத்மாவுடன் அநுப்ரவேசம் செய்து, நாம ரூபங்களை அடைபவன் பரமாத்மாவாக இருப்பதால் இந்த சொற்றொடரில் ‘ஆகாஶம்’ என்பதால் அறியப்படுபவன் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.

‘ப்3ரஹ்மலோகமபி4 ஸம்ப4வாமி(நி)’’ (சாந்.உப. 8-13-1) - ‘நான் ப்ரஹ்ம லோகத்தை அடையக்கடவேன்’ என்பது ச்ருதி வாக்கியம். இவ்வாறாக, இந்த மூன்றாம் பாதத்தில், பரமாத்மா எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருக்கிற இயல்பு, பலவகைகளில் நிரூபிக்கப்பட்டது. இந்த பண்பை- ‘‘ஸர்வாத்மத்வ ப்ரகாரத்தை’’-ஆழ்வார், ‘‘அவரவர்’’ என்று தொடங்கும் திருவாய்மொழி 1-1-5 பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

இப்பாசுரத்தில் (திருவாய்.1-1-5), பலவிதப்பட்ட அதிகாரிகள் (மக்கள்) தம்முடைய ருசிக்கு ஏற்றவாறு, அதிலுள்ள வேறுபாட்டிற்கு ஏற்ப ரஜஸ், தமஸ் மற்றும் மிஶ்ர ஸத்வர்களாக இருக்கிற தேவதைகளை வணங்குகிறார்கள். இந்த தேவதைகள் தம்மை வணங்குபவர்களுக்கு ஏற்ற பலனைத் தருவதில் எந்த குறையும் அற்றவர்கள். இதற்குக் காரணம், எல்லோரையும் தன் உடலாகக் கொண்டிருக்கும் பரமாத்மா, அவரவர் வணங்கும் தேவதைகளுக்கு அந்தர் யாமியாக இருந்து, அவரவர் விரும்பும் பலனைத் தருகிறான் என்பதாகும்.

முதல் அதிகரணத்தில் (த்3யுப்4வாத்3யாயதநம் ஸ்வஶப்3தா3த் - 1-3-1 ), காட்டித்தரப்படும் குற்றங் களற்ற பண்பை ‘‘இறையவர்’’(திருவாய். 1-1-5) என்பதால் காட்டித்தருகிறார். இறையவர் என்பதால் ஈச்வரனாக இருப்பது குறிப்பிடப்படுவதால், குற்றமற்ற தன்மைகள் விளக்கம் பெறுகின்றன.

இரண்டாம் அதிகரணத்தில் (பூமாதிகரணம் 1-3-2) பரமாத்மாவின் அதிசயமான ஆநந்தம் விளகக்ப்படுகிறது.

‘‘தஸ்யேயம் ப்ருதி2வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்’’ (தை.ஆந) ‘‘இப்படிப்பட்டவனுக்கு செல்வம் நிறைந்த இந்த பூமி வசப்படும்’’.

மூன்றாம் அதிகரணத்தின் (அக்ஷராதி4கரணம் 1-3-3) பொருளான நியமிக்கும் சேஷியாக இருப்பது ஆகிய பண்புகளும் ‘‘இறையவர்’’(திருவாய். 1-1-5) என்பதால், அறியப்படுகிறது. ‘‘அவரவர் விதிவழி அடைய நின்றனரே’’ (திருவாய். 1-1-5) என்பதால் தேவர்களுக்கு அந்தர்யாமியாக இருப்பது காட்டித்தரப்படுகிறது.

நான்காம் அதிகரணத்தின் ( ஈக்ஷதிகர்மாதி4கரணம் 1-3-4 ) பொருளான, முக்தனுக்கு பலனாக இருப்பதும், ‘‘இறையவர்’’ (திருவாய். 1-1-5) என்பதால் காட்டப்பட்டது.

‘‘ந பஶ்யோ ம்ருத்யும் பஶ்யதி ந ரோக3ம் நோத து3:க்க2தாம் I ஸர்வம் ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ:II’’ (சாந். 7-26-2) - ‘காண்பவன் மரணத்தைக் காண்பதில்லை. அல்லது நோய்களையும், அல்லது துன்பத்தையும் காண்பதில்லை. உண்மையில் எல்லா வற்றையும் காண்கிறான். எல்லா இடங்களிலிருந்தும் எல்லாவற்றையும் பெறுகிறான்’ என்பது ப்ரமாணம்.

இங்கே, ‘‘இறையவர்’’ (திருவாய்.1-1-5) என்பதால், ‘‘இந்த தேவதை’’ என்று சிறப்பித்துக் கூறாததால், இது ஸர்வ சேஷியான எம்பெருமானைக் குறிப்பதாகும். கலிவைரி தேசிகர், ‘‘அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர் களுக்கும் வேறுபாடு இல்லாமல் எல்லோர்க்கும் இறைவன் இவன்’’ என்று பொருளுரைக்கிறார்.

ஐந்தாவது அதிகரணத்தில் (த4ஹராதி4கரணம் 1-3-5) விவரிக்கப்படுவது, பரமாத்மாவின் ஆச்சர்யமான போக்ய குணம் (அநுபவிக்கும் தன்மை). இந்த குணம், அவன் எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் கொண்டு விளக்கப்படுகிறது .

‘‘யாவந்வா அயமாகாஶ: தாவாநேஷோ(அ)ந்தர் ஹ்ருத3ய ஆகாஶ:’’ (சாந். 8-1-3) - ‘உண்மையில் இந்த ஆகாசம் எந்த அளவோ, இதயத்தின் உள்ளே இருக்கும் இந்த ஆகாசத்தின் அளவும் அதுவே’.

‘‘உபே4 அஸ்மிந் த்3யாவா ப்ருதி2வீ அந்தரேவ ஸமாஹிதே உபா4வக்நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்3ரம ஸாவுபெ4ள வித்4யுந்நக்ஷத்ராணி’’ (சாந். 8-1-3) - ‘மேலுலகும், கீழுலகும் உண்மையில் ஒன்றாக உள்ளே வைக்கப்பட்டுள்ளன. தீயும், காற்றும், சந்திரனும், சூரியனும். மின்னலும், நக்ஷத்ரங்களும்’ என்பதால், தஹராகாசத்தைச் சொல்லி, அது அக்நி, வாயு, சூரியன், சந்திரன் ஆகியவற்றைத் தாங்குவதைச் சொல்லி,

‘‘யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் தத3ஸ்மிந் ஸமாஹிதம்’’ (சாந். 8-1-3) - இங்கே எது உள்ளதோ, அதுவும், எது இல்லையோ அதுவும் எல்லாம் நன்றாக இதற்குள் வைக்கப்பட்டிருக்கிறது’ என்பதால், இந்த தஹராகாஶத்தை உபாஶனம் பண்ணுகிறவர்களுக்கு இவ்வுலக, மறுவுலக பலன்கள் கிடைக்கும் என்பது விவரிக்கப்பட்டது. இந்த இரண்டு சொற்றொடர்களின் பொருளையே, ‘‘இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே’’(திருவாய்.1-1-5) என்று ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்டது.

ஆறாவது அதிகரணத்தில் (ப்ரமிதாதி4கரணம் 1-3-6), அந்தர்யாமியாக இருப்பவன், தாயின் சகிப்புத் தன்மையையும், தந்தையின் கண்டிப்பையும் உடையவன் என்பது, விளக்கப்படுகிறது. இந்த பண்புகளால், தேவதாந் திரங்களை வணங்குபவர்களையும், அந்தந்த தேவதாந்திரங் கள் மூலம் ரக்ஷிக்கிறான் என்பதும் இப்பாசுரத்தால் (திருவாய். 1-1-5) காட்டப்பட்டது.

யார் அதிகாரி? யார் இல்லை? என்பதை விவரிக்கும் ஏழு, எட்டு, ஒன்பது (தே3வதாதி4கரணம் 1-3-7, மத்4வதி4கரணம் 1-3-8, அபஶூத்3ராதி4கரணம் 1-3-9) அதிகரணங்களின் சாரம், ‘அவரவர் தமதமது’’ (திருவாய். 1-1-5) என்பதால் விவரிக்கப்படுகிறது.

பத்தாவது அதிகரணத்தில் (அர்த்தா3ந்தரத்வாதி3 வ்யபதே3ஶா தி4கரணம் 1-3-10), பரமாத்மா தானாகவும், தேவதாந்தரங்கள் மூலமாகவும் ரக்ஷிப்பவன் என்பது விளக்கப் பட்டது. இந்த பொருள் இந்த பாசுரத்தில் (திருவாய். 1-1-5) விளக்கப்படுகிறது.

இவ்வாறாக, அனைத்திற்கும் ஆத்மாவாக பரமாத்மா இருப்பதை விளக்கும் இந்த மூன்றாம் பாதமும், ‘‘அவரவர் இறையவர்’’ என்னும் திருவாய்மொழி 1-1-5ஆம் பாட்டும் கருத்தொற்றுமை உடையவை என்பது காட்டித்தரப்படுகிறது.

முதல் அத்யாயம் நான்காம் பாதத்திற்கு இணையான பொருளைத் தருவது,

நின்றனர்இருந்தனர் கிடந்தனர்திரிந்தினர் நின்றிலர்இருந்திலர் கிடந்திலர்திரிந்திலர் என்றுமொரியல்வினர் எனநினைவரியவர்* என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே. (திருவாய்.1-1-6) என்னும் பாசுரமாகும். இந்த நான்காம் பாதத்தில், எல்லா பொருள்களும் ப்ரஹ்மத்தின் காரியமாகவும், அதன் சரீரமா கவும், அதனால் நியமிக்கப்படுவதாகவும் இருப்பதால், அதன் காரியமாகவும், அதன் சரீரமாகவும் அதனால் நியமிக்கப் படாததும் எதுவும் இல்லை என்பது விளக்கப்படுகிறது.

இதே பொருள், திருவாய்மொழி 1-1-6ஆம் பாசுரத்திலும் அருளிச் செய்யப்படுவதால், இரண்டிற்கும் கருத்தொற்றுமை உண்டு. இந்த பாதத்தின் பொருளை, ‘‘அதத்கார்ய-அதச்ச2ரீர- அததா3த்மகஸ்த்வ ஸம்ப4வ:’’ ‘‘ப்ரஹ்மத்தினால் படைக்கப் படாததும், ப்ரஹ்மத்தை சரீரமாகக் கொள்ளாததும், ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாததுமான வஸ்து கிடையாது என்பது சொல்லப் படுகிறது’’,என்று ச்ருதப்ரகாசிகா பட்டரும், ‘‘நிரவதி மஹிமா’’ (அதிகரணஸாராவளி. 19), ‘‘எம்பெருமான் உலகத்தைப் படைப்பவன், உலகத்தை தேஹமாக் உடையவன், உலகிற்கு ஆதாரமானவன், அளவற்ற பெருமையை உடையவன்’’, என்ற சொல்லால் தேசிகரும் அருளிச் செய்துள்ளார்கள்.

நான்காம் பாதம் முதல் அதிகரணத்தில் (ஆநுமாநிகாதி4 கரணம் 1-4-1 ), தத2தீ4நத்வாத3ர்த்த2வத் - ப்ரஹ்ம ஸூத்ரம். 1-4-3 - ப்ரஹ்மத்திற்கு அதீனமாயிருப்பதால் (ஆத்மாதி கள் எல்லாம் பயன் பெறும்.) தத3தீ4நத்வாத் - (பரமபுருஷனுக்கு) வசப்பட்டிருக் கையால், அர்த்த2வத் - (மூலப்ரக்ருதி) பயனுடையதாகிறது; என்னும் ஸூத்ரத்தால், ஜகத்திற்கு ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பது சொல்லப்பட்டது.

இரண்டாம் அதிகரணத்தில் (சமஸாதி4கரணம் -1-4-2),

‘‘அஜாமேகாம் லோஹிதஶுக்லக்ருஷ்ணாம்
ப3ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா:
அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோ(அ)நுஶேதே
ஜஹாத்யேநாம் பு4க்தபோ4கா3மஜோ(அ)ந்ய:
(ஶ்வே. 4-5)

 சிவப்பு (ரஜஸ்), வெளுப்பு (ஸத்வம்), கறுப்பு (தமஸ்) என்னும் மூன்று நிறங்களை (குணங்களை) உடையதாய், தன்னைப்போன்ற பல பிரஜைகளை உண்டாக்குவதாய், பிறப்பற்றதான ஒன்றோடு (மூல ப்ரக்ருதியோடு) பிறப்பற்ற ஒருவன் (ஸம்ஸாரி ஜீவன்) உகப்புடன் கூடியிருக்கிறான்; அநுபவிக்கப்பட்ட இதை (மூலப்ரக்ருதியை) பிறப்பற்ற மற்றொருவன் (முக்த புருஷன்) விட்டுச்செல்கின்றான் என்று படிக்கப் படுகின்றது. இங்கு ‘அஜா’ (பிறப்பற்றது) என்று மூல ப்ரக்ருதியைப் படிப்பதாலும், பல பொருள்களைத்தானே தன் இச்சையாலே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதாலும் இம்மந்திரம் ப்ரஹ்மாத்மக மல்லாத ஸ்வதந்த்ர (தன்னிச்சையான) ப்ரக்ருதியையே காரணமாகக் கூறுகின்றது என்பது விளங்கும்; என்னும் ஶ்வேதாஶ்வதர மந்திரத்தின், ‘இந்த அண்டம் ப்ரஹ்மத்தின் கார்யம் இல்லை’’ என்னும் ஐயப்பாடு தோன்றுகிறது.

தைத்தரீயத்தில் இந்த ஐயப்பாடு நீக்கப்படுவது விவரிக்கப்படுகிறது. மூன்றாவது அதிகரணத்தில் (ஸங்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம் 1-4-3) சாங்கியர்கள் கூறும், ‘‘யஸ்மிந் பஞ்ச பஞ்சஜநா ஆகாஶஶ்ச ப்ரதிஷ்டி2த:I தமேவம் மந்ய ஆத்மாநம் வித்3வாந் ப்3ரஹ்மாம்ருதோ(அ)ம்ருதம்II’’ (ப்ருஹ. 6-4-17) - ‘எந்த ஆத்மாவிடத்தில் ஐயைந்து (இருபத்தைந்து) தத்துவங்களும் ஆகாசமும் நிலை நிற்கின்றனவோ, பெரிதாய், அழிவற்றதான அவ்வாத்மாவை இவ்வண்ணம் அறியும் மனிதனும் முக்தியடைகிறான்’. [Explanatory Note: The term pancajanas is regarded by the Sankhyas as meaning ''groups, each of which consists of five. ''The five groups of five are: (i) the senses, (ii) the organs of action, (iii) the five elements, (iv) the five rudimentary elements, and (v) the remaining five principles of the Sankhyas. According to Sri Ramanuja, the term stands for ''sense organs'' - tvak or skin, eye, ear, anna or nose and tongue, and mind.]

என்பதால், ‘ஜகத், ப்ரஹ்மத்தின் காரியமல்ல’ என்பது தோன்றும் என்று ஐயப்பட்டு, அதைக் கண்டித்து, ‘அண்டம் ப்ரஹ்மத்தின் காரியம்’ என்று நிலை நிறுத்தப்படுகிறது.

‘‘தமேவம் மந்ய ஆத்மாநம் வித்3வாந் ப்3ரஹ்மாம்ருதோ (அ)ம்ருதம்II’’ (ப்ருஹ. 6-4-17) ‘பெரிதாய், அழிவற்றதான அவ்வாத்மாவை இவ்வண்ணம் அறியும் மனிதனும் முக்தியடைகிறான்’ என்பதே இந்த அதிகரணத்தின் (ஸங்க்2 யோபஸங்க்3ரஹாதி4கரணம்1-4-3) முக்யமான வாக்யம்.

நான்காம் அதிகரணத்தில் (காரணத்வாதி4கரணம் 1-4-4) ‘‘அஸத்’’ மற்றும் ‘‘அவ்யக்தம்’’ போன்ற சொற்கள் ப்ரக்ருதியைக் குறிப்பதல்ல; அது ப்ரளய காலத்தில் ப்ரஹ்மத்தின் நிலையை குறிப்பிடுபவை என்பது விளக்கப் பட்டது.

ஐந்து மற்றும் ஆறாவது (ஜக3த்3வாசித்வாதி4கரணம் 1-4-5, வாக்யாந்வயாதி4கரணம் 1-4-6) அதிகரணங் களில், ஜீவன், காரணனோ, ஆத்மாவோ அல்ல. மாறாக இந்த சொற்கள் ப்ரஹ்மத்தைக் குறிப்பவை என்பது விளக்கப்பட்டது.

ஏழாவது அதிகரணத்தில் (ப்ரக்ருத்யதி4கரணம் 1-4-7 ), ‘ஜகத்திற்கு ப்ரஹ்மமே காரணம்’ என்பது நிலை நிறுத்தப்பட்டது.

எட்டாவது அதிகரணத்தில் (ஸர்வவ்யாக்2யநாதி4 கரணம் 1-4-8), அழிவற்ற தன்மையை அடைய, ப்ரஹ்மமே தியானிக்கப்படவேண்டுமென்பது அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு இந்த அண்டமானது, பரமாத்மாவின் அதீனம், அதன் காரியம், அதை ஆத்மாவாக உடையது. அதைத் தவிர வேறு ஒன்றின் அதீனமாகவோ, கார்யமாகவோ, வேறு ஒன்றை ஆத்மாவாக உடையவையோ அல்ல என்பதை ஸூத்ரகாரர் நிலை நிறுத்துகிறார். இதே பொருள் ஆழ்வாரின், ‘‘நின்றனர் இருந்தனர்’’என்னும் திருவாய்மொழி பாசுரம் 1-1-6இல் அருளிச்செய்யப் பட்டுள்ளது.

நிற்பது, இருப்பது, கிடப்பது, திரிவது என்று செயல்பாட்டில் ஈடுபடுவது மட்டுமில்லாமல், இந்த செயல்பாட்டில் ஈடுபடாமல் இருப்பதும் கூட ஜீவர்களின் தன்மையல்ல. இவை எல்லாம், ப்ரஹ்மத்தின் செயல். அதன் அதீனம், அதன் கார்யம் என்று ஸாமாநாதிகரணத்தால் ஆழ்வார் அருளிச்செய்வதால், இந்த பாசுரம் (1-1-6) முதல் அத்யாயத்தின் நான்காம் பாதத்தின் பொருளோடு கருத்தொற்றுமை கொண்டதாக உள்ளது.

‘‘எந்திடரே’’ என்பதால், இறுதி அதிகரணத்தால் (ஸர்வவ்யாக்2யநாதி4கரணம் 1-4-8) அறியப்படும் ப்ரமாண அர்த்தங்கள் நியமிக்கப்பட்டன.

ஸாரீரகாத்3யாத்4யாயேந கா3தா2ஷட்கஸார்த்த2தா I யதிராண்மதநிஷ்டா2நாம் தி3ங்மாத்ரம் த3ர்ஸித முதே3 II

‘‘சாரீரக சாஸ்த்திரத்தின் முதல் அத்யாயத்தோடு, திருவாய்மொழி முதல் பத்தின் ஆறு பாட்டுக்களோடு உள்ள பொருள் ஒற்றுமை யதிராஜருடைய மதத்தில் ஊன்றிய வர்களின் உகப்பின்பொருட்டு சிறிது காட்டப்பட்டது’’.

  இவ்வாறாக, திருவாய்மொழியின் முதல் ஆறு பாசுரங்கள், ஸ்ரீபாஷ்யத்தின் முதல் அத்யாயத்துடன் கருத் தொற்றுமைகொண்டதாக அறியப்படுகிறது.

4.9. இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்திற்கும் (ஸ்ம்ருதிபாத3ம்),

திடவிசும்பெரிவளி நீர்நிலம்இவைமிசை
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்

உடல்மிசைஉயிரெனக் கரந்துஎங்கும்பரந்துளன்*
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே.

திருவாய்மொழி 1-1-7பாசுரத்திற்கும் கருத்தொற்றுமை உண்டு என்பது காட்டித் தரப்படுகிறது. இந்த முதல் பாதத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர மற்றவைகளுக்கு அண்டத்தின் காரணமாகும் தகுதி உண்டு என்னும் கருத்து விலக்கப் படுகிறது. இதை

தத்ர பரைருத்3பா4விதாஸ்ச தோ3ஷா: பரிஹ்ருதா: ந| (ஸ்ரீபாஷ்யம்-2-ஆம் அத்யாயம் முதல் பாதம்)-’’அங்கு (2-ஆம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்) பிற மதத்தவர்களால் கூறப்பட்ட தோஷங்கள் கழிக்கப்பட்டன’’, என்று பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார்.

முதல் பாதத்தில் பத்து அதிகரணங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு? காரணத்தை முன்னிட்டு, ப்ரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாக வைக்கப்படுகிறது. இவை தகுந்த காரணங்களால் கண்டிக்கப்படுவது ஸித்தாந்தமாகிறது.

1. ஸாங்க்ய ஸ்ம்ருதிகளுக்கு விரோதமான கருத்துக்களால் ப்ரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

‘‘விரோதே4 த்வநபேக்ஷம் ஸ்யாத்’’ (பூர்வ. மீமாம்ஸா. 1-3-3) - ‘(வேதச்சொற்றொடர்களுக்கு) முரண்பாடு காணப்படுகையில் ஸ்ம்ருதியானது கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. ஸாங்க்ய ஸ்ம்ருதி, வேதத்திற்கு புறம்பானதால், அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதல்ல என்பது ஸித்தாந்தம்.

2. சதுர்முக ப்ரஹ்மன், ஜகத் காரணனன் என்று கூறும் யோக ஸ்ம்ருதியுடன் பொருந்தாததால் பரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்று. சதுர்முக ப்ரஹ்மன் காரணன் என்பது வேதப்ரமாணம் அல்லாததால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதில்லை என்பது ஸித்தாந்தம்.

3. மண் காரணமாகவும், குடம் காரியமாகவும் இருப்பது போல், ப்ரஹ்மம் காரணமாகவும், அண்டம் காரியமாகவும் இருப்பது பொருத்தமில்லாததால், ப்ரஹ்மம் ஜகத்காரண மல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

சாணத்திலிருந்து தேள் உற்பத்தியாகிறது. இதில், காரண காரியங்களுக்குப் பொருத்தம் காணப்படவில்லை. இதைப்போல, காரண காரியங்களுக்கிடையே பொருத்தம் இருந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயமில்லை என்பது ஸித்தாந்தம்.

4. பரமாணுவே ஜகத்காரணம் என்பது நிலை நிறுத்தப்படவேண்டும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்..

பல மதங்கள் கடைபிடிக்கும் இந்த ‘பரமாணுவே ஜகத் காரணம்’ என்னும் கோட்பாடு, வெறும் தர்க்கத்தை அடிப் படையாகக் கொண்டது. இது ப்ரஹ்மத்தை காரணமாகச் சொல்லும் வேதச் சொற்றொடர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது ஸித்தாந்தம்.

5. சித், அசித் வடிவமான அண்டத்தை கார்யமாக உடையதால், இவற்றால் ஏற்படும் இன்ப துன்பங்கள் ப்ரஹ்மத்தை பாதிக்கும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

ப்ரளய காலத்தில், சித், அசித்தோடு கூடிய ப்ரஹ்மம் ஸூக்ஷ்ம நிலையில் காரணமாவதாலும், அதுவே ஸ்தூல நிலையில் (பருத்த நிலையில்) சித் அசித்துடன் கூடிய காரியமாக பரிணமிக்கையில், இன்ப துன்ப வடிவிலான குற்றங்கள் ப்ரஹ்மத்தைப் பாதிக்காது என்பது ஸித்தாந்தம்.

6. காரணத்திற்கும் காரியத்திற்கும் ஒருபடிப்பட்ட தன்மை கூடவே கூடாது என்பது நையாகிகர்கள் முன் வைக்கும் எதிர்வாதம்.

கார்யத்திற்கும், உபாதானமாகிற (மூலப்பொருள்) காரணத்திற்கும் ஒற்றுமை உண்டு என்பது வேதத்தால் அநுமதிக்கப்பட்டது. காரணத்தின் வகைப்படுத்தப்பட்ட வடிவமே காரியம் என்பது ஸித்தாந்தம்.

7. ப்ரஹ்மம் என்பது ஜீவனிலிருந்து வேறுபடாத தாகையால், இன்ப துன்பங்கள் அதை பாதிக்கும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

ப்ரஹ்மனும் ஜீவனும் ஒன்றாக இருந்தபொழுதிலும், இருவருக்கும் ஸ்வரூபத்தில் (பண்பில்) ஒற்றுமை கிடையாது. எனவே, இன்ப துன்பங்கள் ப்ரஹ்மத்தை தீண்டாது என்பது ஸித்தாந்தம்.

8. உலகத்தில் எந்த ஓர் தொழிலை செய்பவனுக்கும், அவன் உபயோகிக்க, உபகரணங்கள் தேவை. இதைப் போல, உபகரணங்களின் தேவை காணப்படாததால், ப்ரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

பால் தயிராவதற்கு எந்த உபகரணமும் தேவை யில்லை. இதே போல் ப்ரஹ்மம் எந்தவிதமான உபகரணங் களின் துணையில்லாமல் அண்டத்தை உண்டாக்கும் என்பது ஸித்தாந்தம்.

9. ப்ரஹ்மம் கார்யமாக பரிணமிக்கும்போது அவயவங் களுடன் உள்ளது. இது காரணமான நிலையில் ப்ரஹ்மம் அவயவங்களற்றது என்பதுடன் பொருந்தாது என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

ப்ரஹ்மம் விசித்திரமான சக்தியைப் பெற்றிருப்பதால், ‘‘அவயமற்றது’’ என்னும் தன் ஸ்வரூபம் கெடாமலேயே அவயவங்களுடன் கூடிய காரியமான அண்டமாக மாற இயலும் என்பது ஸித்தாந்தம்.

10. எல்லா விருப்பங்களும் ஈடேறப்பெற்ற ப்ரஹ்மம், எந்த காரணத்திற்காக அண்டத்தைப் படைக்கவேண்டும்? எனவே, ப்ரஹ்மம் ஜகத்காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.

பரிபூர்ணனான ப்ரஹ்மத்திற்கு, இந்த ஜகத்ஸ்ருஷ்டி வெறும் லீலையே என்பது ஸித்தாந்தமாக வைக்கபட்டது.

இந்த பத்து அதிகரணத்தின் பொருளை வேதாந்த தேசிகர், தம்முடைய ஸாராவளியிலே இவ்வாறு அருளிச் செய்கிறார்:-

‘‘ஸாங்க்2ய ஸ்ம்ருத்யா விரோதா4த்4விதி4மத விஹதே: கார்யவைரூப்யதோ(அ)ஸ்மிந் ஏகார்த்தே2 (அ)நேக தந்த்ரோ தி3த விஹதிதயா தே3ஹ போ4கா3 வியுக்த்யா I கார்யோ பாதா3ந பே4தா3த் ஸ்வஹித விஹதித: காரகஸ்தோமஹாநே: க்ருத்ஸ்நாம்ஶாத்யூஹ பா3தா3த் க்ருதி விப2லதயா வ்யர்த்தி2 தம் ப்ரத்யவித்4யத் II (22), (வேதாந்தவாக்யங்களோடு) கபிலஸ்ம்ருதிக்கு விரோதம் வருகையாலும், ஹிரண்யகர்பரால் செய்யப்பட்ட யோக சாஸ்த்ரத்தோடும் விரோதிக்கையாலும், படைக்கப்படும் உலகமும், ப்ரஹ்மமும் பொருந்தா மலிருப்பதாலும், பற்பல மதங்களோடு விரோதிக்கையாலும், அண்டத்தை ஸரீரமாகக் கொண்டதால் ப்ரஹ்மத்திற்கு பாதகம் ஏற்படுகையாலும், கார்யத்திற்கும் காரணத்திற்கும் ஒருபடிப்பட்ட தன்மை கூடாதாகையாலும், ஜீவனிலிருந்து ப்ரஹ்மம் வேறுபடாமை யால் தோஷங்கள் ஏற்படுகையாலும்,

ப்ரஹ்மத்திற்கு உபகரணங்கள் தேவைப்படாமை பொருந்தா தாகையாலும், ப்ரஹ்மம் உலகமாக ஆவது, ஒரு பகுதியா? முழுமையாகவா? என்ற கேள்வியில் இரண்டுமே பொருந்தா தாகையாலும், ப்ரஹ்மம் உலகைப் படைப்பது எதற்காக? தன் ப்ரயோஜநத்திற்காகவா, பரப்ரயோஜநத் திற்காகவா, இரண்டுமே பொருந்தாதாகையாலும் எழுந்த ப்ரஹ்மத்தின் ஜகத்காரண ஸந்தேஹங்களை ஸூத்ரகாரரான வ்யாஸர் (இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்) கண்டித்தார்.

இந்த முதல் பாதத்தின் பொருளைத் தம்முடைய திருவாய்மொழி பாசுரம் (1-1-7)இல்

திடவிசும்பெரிவளி நீர்நிலம்இவைமிசை*
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்*
உடல்மிசைஉயிரெனக் கரந்துஎங்கும்பரந்துளன்*
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே’’

என்று அருளிச் செய்கிறார், ஆழ்வார். ‘உறுதியான ஆகாசம், ஒளி, காற்று, நீர், மண் ஆகிய எல்லாவற்றிற்கும் காரணமாக, அந்த பொருள்கள் எல்லாவற்றிலும், உடல்களில் ஆத்மா நுழைந்து இருப்பதைப்போல உட்பிரவேசித்து நியமிப்பவனாய், அவற்றில் காணப்படாதவனாய், அவற்றில் முழுமையாக வசித்து அவற்றின் தோஷங்களால் பாதிக்கப் படாதவனாய், வேதத்தால் அறியப்படுபவனாக இருக்கும் தேவனாக பரமாத்மாவை ஆழ்வார் காட்டித்தருகிறார்.

முதல் பாதம், (ஸ்ம்ருதிபாதம் 2-1) இரண்டாம் பாதம் (தர்க்கபாதம் 2-2) மற்றும் மூன்றாம் பாதம் (வியத்பாதம் 2-3) ஆகிய பாதங்களில், ஸாங்க்யயோகம் போன்றவை முன் வைக்கும் காரணங்கள், வேதத்திற்குப் புறம்பானவை என்று கண்டித்து, வேதம் ப்ரஹ்மத்தை ஜகத்காரணமாக காட்டித் தருவதை, ‘சுடர் மிகு சுருதியுள்’ (1-1-7) என்னும் சொற்றொடரால் ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

மூன்றாம் அதிகரணத்தில் (விலக்ஷணத்வாதி4 கரணம் 2-1-3), ‘‘ஆகாசம்’’ போன்ற வற்றிற்கும் ஜகத் காரணமாக இருப்பது பொருந்தாது. அவற்றிற்கும் காரணமாய் இருப்பது ப்ரஹ்மமே என்பது அறிவிக்கப்படுகிறது. இதையே ஆழ்வார் ‘‘திடவிசும் பெரிவளி’’ என்று விவரிக்கிறார்.

‘‘ஆகாஶாத் வாயு:’’(தை.ஆந.1-2) - ஆகாசத் திலிருந்து வாயு உண்டாகிறது. என்று காற்றிற்கு ஆகாயத் துடன் வடிவத்தில் ஒற்றுமை இல்லாவிட்டாலும், ஆகாயம் காரணமாக சொல்லப்பட்டது. இதை ஸாங்கியர்கள் கோட் பாடு அநுமதிக்கிறது. இதைப் போலவே ஜகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் வடிவத்தில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் கார்ய காரணபாவம் கூடும் என்பதை, ‘‘திடவிசும்பு’’ (1-1-7) என்னும் இந்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார், ஆழ்வார்.

பாஷ்யகாரர் இந்த விஷயத்தை, சாணத்திலிருந்து, தேள் உருவாவதை உதாரணமாகக் காட்டுகிறார். ஆகாசத் திலிருந்து காற்று உற்பத்தியாவதை உதாரணமாகக் காட்டுவதைக் காட்டிலும், இது எளிமையானது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கும் புரியும் என்பதே பாஷ்யகாரரின் திருவுள்ளம்.

‘த்3ருஶ்யதே து’ - 2-1-6- (ஈ முதலானவற்றிலிருந்து அவற்றிலும் மிகவும் வேறுவகைப்பட்ட புழு முதலானவை உண்டாவது காணப்படுகிறது; (ஆகையால் ப்ரஹ்மத்திட மிருந்து மிகவும் வேறுவகைப்பட்ட உலகம் உண்டாவதில் குறையில்லை).

என்பது சாஸ்த்ரங்களுக்கும் ப்ரத்யக்ஷமாக காணப் படுபவைகளுக்கும் பொதுவானது.

‘த3ர்ஶநாச்ச’ 3-1-20 - ச்ருதியிலும் (பஞ்சமா ஹுதியில்லா மலே சிலர்க்கு தேஹமுண்டாவதாகக்) காண்கையாலும் (இது தெளிவாகும்).

‘ஸ்ம்ருதேஶ்ச’ 4-3-10 - ஸ்ம்ருதியிலிருந்தும் (இவ்வர்த்தம் விளங்குகிறது).

‘‘க்ருதாத்யயேநுஶயவாந் த்3ருஷ்ட ஸ்ம்ருப்4யாம் யதே2தமநேவம் ச’’ - 3-1-8, - செய்யப்பட்ட கர்மம் (பலமநுபவிக் கப்பட்டு) முடிந்தபின், கர்மஶேஷத்தோடு கூடியவனாகவே (ஜீவன் திரும்பி வருகிறான்); ச்ருதி ஸ்ம்ருதிகளிலிருந்து (இது அறியப் படுகிறது); (ஒரு பகுதி) சென்ற வழியாகவும், (மற்றொரு பகுதி) வேறுவழியாகவும் (திரும்பி வருகிறான்), போன்ற ஸூத்ரங்களில், இந்த சொற்கள் ‘ச்ருதி பரமாகவே’ உள்ளன.

உபஸம்ஹாரத3ர்ஶநாதி4கரணத்தில் (2-1-8) - உபஸம்ஹாரத3ர்ஶநாத்நேதி சேந்ந க்ஷீரவத்3தி4 2-1-24 - (உலகில் கார்யப்பொருள் களை உண்டாக்கும்போது உபகரணங்களை) உதவியாகக் கொள்வதைக் காண்கிறோ மாகையால். - (அத்தகைய உபகரணங்களற்ற பரம்பொருள்) காரணமாகமாட்டாது; எனில், இவ்வா க்ஷேபம் பொருந்தாது; பால் உபகரணங்களின் உதவி யில்லாமல் தயிராகுமிடத்திற் போலே (உபகரணமற்ற ப்ரஹ்மமும் காரணமாகலாம்) இது உலகில் பிரஸித்தம்., பாலானது தானாக தயிர் ஆவதைப்போன்றது, ப்ரஹ்மம் அண்டத்தைப் படைப்பது.

‘தே3வாதி3வத3பி லோகே’ 2-1-25 -தம் தம் உலகில் தேவர் முதலானார் (ஸங்கல்பமாத்திரத்தினால் ஸ்ருஷ்டிப்ப தாக சாஸ்திரங்களிலிருந்து அறியப்படுவது) போலே; (ப்ரஹ்மமும் ஸங்கல்பத்தினால் உலகை ஸ்ருஷ்டிக்கக் குறையில்லை). மேலிரண்டு ஸூத்ரங்களாலும் இத்தை அறிவிக்கிறார்.

உலகியல் விஷயமான பால் தயிராவதை, உதாரண மாகக் காட்டி, ப்ரஹ்மம் அண்டத்திற்குக் காரணம் என்பதை நிரூபிப்பதைக் காட்டிலும், வேத ப்ரமாணங்கள் சிறந்தவை என்பதை, ‘‘தே3வாதீ3நாம் வேதா3வ க3தக்தீநாம் த்3ருஷ்டாந்ததயோபாதா3நம், ப்3ரஹ்மணோ வேதா3வக3த க்தே: ஸுக2க்3ரஹணாயேதி ப்ரதி பத்தவ்யம்’’ (ஸ்ரீபாஷ்யம் 2-1-25) - ‘‘தேவதைகள் ஸங்கல்பத்தினாலே அவரவர்களுக்கு வேண்டியதை ஸ்ருஷ்டிக்கிறார்கள் என்பதை வேதத்தின் மூலமாக அறிவதைப் போலே என்று சான்றாதாரம் காட்டியது, ப்ரஹ்மமும் ஸங்கல்பத்தினாலேயே இவ்வுலகைப் படைக்கிறது என்பதும் வேதத்தின் மூலமாகவே அறியவருகிறது தெளிவாகக் காட்டுவதற்காகவாம்’’, என்று பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்கிறார். இதே பொருளை, அதாவது ,கார்யத்திற்கும் காரணத்திற்கும் உருவ ஒற்றுமை இல்லா விட்டாலும், கார்யம் ஏற்படும் என்பதை, ‘‘திடவிசும்பு’’ (திருவாய். 1-1-7) என்பதில், ஆழ்வார் காட்டித் தருகிறார்.

ஐந்தாம் அதிகரணத்தில் (போக்த்ராபத்த்யதி கரணம் 2-1-5 ), சித், அசித் வடிவத்திலான அண்டத்தின் தோஷம், இவற்றின் உள்ளுறையும் ப்ரஹ்மத்தைத் தீண்டாது என்பதை- ‘‘உடல்மிசை உயிரெனக் கரந்து’’ (திருவாய். 1-1-7) என்பதால் காண்பிக்கிறார் ஆழ்வார். உடலிலே, உயிரானது (ஜீவன்) மறைந்திருந்து, உடலை நியமித்துக் கட்டுப் படுத்துவதைப் போல், பரமாத்மா மறைந்திருந்து இந்த முழு அண்டத்தை நியமித்துக் கட்டுப்படுத்துகிறான் என்று தெளிவாகக் காட்டித்தருகிறார்.

ஆறாவது அதிகரணத்தில் (ஆரம்ப4ணாதிகரணம் 2-1-6) கார்யத்திற்கும் உபாதானத்திற்கும் (மூலப்பொருளி ற்கும்) உள்ள ஒற்றுமை காட்டித் தரப்படுகிறது. இதே கருத்தை ஆழ்வார் ‘‘திடவிசும் பெரிவளி------ முழுவதுமாய்’’ (திருவாய். 1-1-7) என்று ஸாமாநாதிகரணத்தால் அருளிச் செய்கிறார்.

ஏழாம் அதிகரணத்தில் (இதரவ்யபதே3ஶாதி4 கரணம் 2-1-7), கரணங்கள் (பொறிகள்) இருப்பதாலும், இல்லாததாலும் ஏற்படும் குற்றம், ப்ரஹ்மத்தைத் தீண்டாது என்பது, ‘‘உடல்மிசை உயிரெனகரந்து’’ (திருவாய். 1-1-7) என்பதால் உணர்த்தப்படுகிறது. இத்தால், ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் உடலுக்கும் உயிருக்கும் இடையே அமைந்துள்ள தொடர்பினைப் போன்றதாகும்.

எட்டாம் அதிகரணத்தில் (உபஸம்ஹாரத3ர்ஶநாதி4 கரணத்தில் 2-1-8), ‘அண்டத்தைப் படைக்க ப்ரஹ்மத்திற்கு எந்தவிதமான உபகரணமும் தேவையில்லை; அதற்கு வெறும் ஸங்கல்பமே போதும்’ என்பது விளக்கப்பட்டது. இந்த கருத்தை ஆழ்வார், ‘‘இவையுண்ட சுரனே’’ (திருவாய். 1-1-7) என்று அருளிச் செய்கிறார். அதாவது, ‘‘சுரன்’’ எனப்படும் பரமாத்மா ஆச்சர்யமான சக்தி படைத்தவன்; அவனுக்கு உபகரணங்கள் தேவையில்லை; ‘ஸங்கல்பமே போதும்’ என்று அருளிச் செய்யப்பட்டது. இந்த கருத்தை, பாஷ்யகாரர், ‘‘யதா2 தே3வாத3ய: ஸ்வே ஸ்வே லோகே ஸங்கல்பமாத்ரேண ஸ்வாபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி, ததா2(அ)ஸௌ புருஷோத்தம: க்ருத்ஸ்நம் ஜக3த் ஸங்கல்பமாத்ரேண ஸ்ருஜதி’’- தேவதைகள் தமக்கு உரிய உலகங்களில், தாம் விரும்பும் பொருள்களை, வெறும் சங்கல்பத்தாலேயே படைப்பதைப்போல, இந்தப் புருஷோத்தமனும், இந்த முழு அண்டத்தை வெறும் சங்கல்பத்தாலேயே படைக்கிறான். என்ற ஸூத்ர வாக்கியத்தாலும் ( தே3வாதி3வத3பி லோகே - 2-1-25) அருளிச் செய்துள்ளார்.

ஒன்பதாம் அதிகரணத்தில் (க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4 கரணம் 2-1-9 ), ‘‘எல்லா விருப்பங்களும் ஈடேறப்பெற்ற பரமாத்மா, வெறும் லீலைக்காக இந்த அண்டத்தைப் படைக் கிறான்’’ என்பது சொல்லப்பட்டது. இதை, ‘‘இவையுண்ட சுரனே’’ (திருவாய். 1-1-7) என்று அருளிச் செய்கிறார், ஆழ்வார். ‘‘அமரா நிர்ஜரா தேவாஸ்த்தித3ஶா விபு3தா4ஸ் ஸுரா:’’- ‘‘அமர:, நிர்ஜர:, தே3வ:, த்ரித3ஶ:, விபு3தா4:, ஸுர: ஆகியவை தேவர்களைக் குறிக்கும் சொற்கள்’’, என்று நாமாலிங்காநுஶாஸனம் (அமரகோசம்) இருக்கையாலே, என்பதில் ‘ஸுரா’ என்றால், ‘தேவன்’ என்று பொருள் படுகிறது. தேவன் யார் என்பது,

‘‘தி3வு-கிரீடா விஜிகீ3ஷா வ்யவஹார த்4யுதி ஸ்துதி மோத3 மத3 ஸ்வப்ந காந்தி க3திஷு’’(தாதுபாடம்) ‘‘திவு’’ என்னும் வினை, விளையாட்டு, வெல்வதில் விருப்பம், பேச்சு, ப்ரகாசம், ஸ்தோத்ரம், சந்தோஷம், கர்வம், ஸ்வப்நம், ஒளி, செல்லுதல் ஆகிய பொருள்களில் வரக்கூடியது. - என்னும் தாதுபாடத்தால், ‘‘க்ரீடாத்வம்’’- விளையாட்டு - ‘தேவன்’ என்பதன் பொருள் என்று உறுதிபடுத்தப்படுகிறது. எனவே, ‘சுரன்’ என்பது ‘தேவன்’-’தேவன்’ என்பது, விளையாட்டை உடையவன்’ என்னும் நியாயத்தால் ஆழ்வார் பரமாத்மா அண்டத்தைப் படைப்பது லீலைக்காக என்பதை இந்த வரியில் காட்டித்தருகிறார்.

பத்தாவது அதிகரணமும் (ப்ரயோஜநவத்த்வாதி4 கரணம் 2-1-10 ), ‘ஜகத் ஸ்ருஷ்டி பரமாத்மாவின் லீலை வடிவானது’ என்பதைக் கூறுகிறது. இதை,

‘‘தம: ......... ஏகீ ப4வதி’’ (ஸுபால.- 2) - தமஸ் ஒன்றாகிறது. ஆகையால், அவ்யக்தத்தைத் தன் உடலாகக் கொண்ட மிக உயர்ந்த ப்ரஹ்மத்திடமிருந்து மட்டுமே, எல்லாப் பொருள்களின் தோற்றம் என்பது அறியப்படுகிறது. என்று ஸுபாலோபநிஷத் காட்டித்தருகிறது.

இவ்வாறு திருவாய்மொழி 1-1-7ஆம் பாசுரத்திற்கும், ஸ்ரீபாஷ்யம் இரண்டாம் அத்யாயம் முதல் பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது அறியப்படுகிறது.

5.0. ஸ்ரீபாஷ்யத்தின் இரண்டாம் அத்யாயத்தின் (அவிரோதா4த்4யாய:) இரண்டாம் பாதம் ‘‘தர்க்க பாதம்’’ எனப்படுகிறது. இதற்கும் திருவாய் மொழி 1-1-8 மற்றும் 1-1-9 பாசுரங்களுக்கும் கருத்தொற்றுமை உள்ளது காட்டப்படுகிறது. இந்த இரண்டாம் பாதத்தில், முக்யமாக பிற தர்சனங்களின் கண்டனம் காணப்படுகிறது. இதை பாஷ்யகாரர்,’’ஸ்வபக்ஷரக்ஷணாய பரபக்ஷா: ப்ரதிக்ஷிப் யந்தே’’ (ப்ர.ஸூத்.2-2-1)- இந்தப் பாதத்தில் விசிஷ்டாத் வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டு வதற்காக மற்ற பல மதங்கள் சான்றாதாரங்களின் அடிப்படையைக் கொண்டு மறுக்கப்படுகின்றன, என்று அருளிச் செய்கிறார். ஆழ்வாரின் திருவாய்மொழி 1-1-8, 1-1-9ஆம் பாசுரங்களும் இதையே காட்டித்தருகின்றன.

சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்
வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்

புரமொருமூன்றெரித்து அமரர்க்கும்அறிவியந்து*
அரனயனென உலகழித்தமைத்துளனே. (1-1-8)

உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்
உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்

உளனெனஇலனென இவைகுணமுடைமையில்*
உளனிருதகைமையொடு ஒழிவிலன்பரந்தே. (1-1-9)

இந்த இரண்டாம் பாதத்தில், எட்டு அதிகரணங்கள் உண்டு. 1. ரசநாநுபபத்யதிகரணம் (2-2-1), 2. மஹத் தீ4ர்க்காதி4கரணம் (2-2-2), 3. ஸமுதா3யாதி4கரணம் (2-2-3), 4. உபலப்3த்4யதி4கரணம் (2-2-4), 5. ஸர்வ தா2நுபபத்த்யதி4கரணம் (2-2-5), 6. ஏகஸ்மிந்ந ஸம்ப4வாதி4கரணம் (2-2-6), 7. பஶுபத்யதி4 கரணம் (2-2-7), 8. உத்பத்த்யஸம்ப4வாதி4கரணம் (2-2-8), இதில் ஒவ்வொன்றும் ஓர் புற சமயத்தின் தவறான கண்ணோட்டத்தைக் கண்டிக்கிறது.

1. ‘ப்ரக்ருதியே ஜகத் காரணம்’ என்று கூறும் சாங்கிய மத கோட்பாடு மறுக்கப்படுகிறது.

2. ‘பரமாணுக்களே ஜகத்காரணம்’ என்னும் வைசேஷி கர்களின் கொள்கை, அது தர்க்க ரீதியாக நிலை பெறாதது என்பதால் ஒதுக்கப்படுகிறது.

3. ‘பரமாணுக்களே அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணம்’ என்னும் வைபாஷிக சௌத்ராந்திர பௌத்தர்களின் கொள்கை மறுக்கப்படுகிறது.

4. ‘வெளிப்பொருள் என்பது எதுவுமே இல்லை. எல்லாமே விஞ்ஞானம்தான்’ என்னும் யோகாசாரர்களின் (பௌத்தர்களில் ஒரு பிரிவு) கூற்று தள்ளப்படுகிறது.

5. ‘தத்வம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று’ என்று வாதிடும் மாத்யாமிக பௌத்தர்களின் சூன்ய வாதம் இதில் காணப்படும் முரண்பாடுகளால், கண்டிக்கப்படுகிறது.

6. ‘‘சப்த பங்கி’’ எனப்படும் ஏழு மடங்கான விதி முறையைக் கொண்டு ஜைனர்கள் விளக்க முற்படுவது நிலை நிற்காது என்பதால் மறுக்கப்படுகிறது.

7. வேதத்திற்குப் புறம்பான சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் குறையுள்ள தத்துவ கோட்பாடுகளும் உடைய பாஶுபத மதம் ஒதுக்கப்படுகிறது.

8. ஜீவனின் தோற்றம் குறித்து எழும் சில மறுப்புக் களை, தகுந்த விளக்கங்களோடு விளக்கி பாஞ்சராத்ர ஆகமம் சான்றாதாரமாக விளங்கும் தன்மையை நிலை நிறுத்துகிறது இந்த அதிகரணம்.

இந்த பாதத்தில் (2-2) காணப்படும் விஷயங்களின் சுருக்கத்தை, வேதாந்த தேசிகர் கீழ்க்கண்டவாறு தம்முடைய அதிகரணஸாராவளியில் அருளிச் செய்கிறார். *

பாதே3(அ)ஸ்மிந் காபிலஸ்தை2: கணபு4க3பி4மதைர் பெ3ளத்3த4வைபா4ஷி காத்3யைர்யோகா3சாராபி4தா4நைஸ் ஸுக3தமத ரஹஶ்ஶூந்யவாத3ப்ரஸக்தை: I அர்ஹத்ஸித்3 தா4ந்தப4க்தை: பஶுபதி ஸமய ஸ்தா2யிபி4 ஶ்சாவரோத4ம் க்ஷிப்த்வா (அ)தோ2 பஞ்சராத்ரம் ஶ்ருதிபத2மவத3த் பஞ்சமாம்நாயத3ர்ஶீ II (44)

இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில், மஹா பாரதமான ஐந்தாம் வேதத்தை அறிந்த வ்யாசர், கபில மதத்தைச் சார்ந்தவர்கள், கணாத மதத்தைச் சார்ந்தவர்கள், வைபாஷிகர்கள், பௌத்தர்கள், யோகா சாரர்களாகிற பௌத்தர்கள், மாத்யாமிகர்களாகிற ரஹஸ்யமான சூந்ய வாதத்தைக் கைக் கொண்டவர்கள், ஜைநஸமயக் காரர்கள், பாஸுபதமதத்தில் ஊன்றியவர்கள் ஆகியவர்க ளோடு ஏற்பட்ட வாதத்தில் ஏழு அதிகரணங்களால் அவர்களை நிரஸித்து, மேலே உத்பத்த்யஸம்பவாதி கரணத்தில், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமமானது வேத மார்க்கத்தில் நிலை நின்றதாகத் தெளிவாக ஸ்தாபித்தார்.

மேற்கூறிய மதக்கோட்பாடுகளில் ஸாங்கியர்களும், வைசேஷிகர்களும், பாசுபதர்களும் வேதத்தை அங்கீகரிப் பவர்கள். மற்ற மதங்கள் வேதத்தை ப்ரமாணமாக ஏற்ப தில்லை. வேதச் சொற்றொடர்களுக்கு தம்முடைய மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி பொருள் கூறுவர்.

இந்த இரண்டு வகைப்பட்டவர்களுள் முதல் வகையைச் சேர்ந்தவர்களை, திருவாய்மொழி ‘‘சுரரறி வருநிலை’’(1-1-8) பாசுரத்தில் குறிப்பிடுகிறார் ஆழ்வார். இரண்டாம் வகைப்பட்டவர்களை, ‘‘உளனெனில் உளன்’ என்னும் திருவாய்மொழி (1-1-9) பாசுரத்தில் காட்டித் தருகிறார்.

சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்
வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்

புரமொருமூன்றெரித்து அமரர்க்கும்அறிவியந்து*
அரனயனென உலகழித்தமைத்துளனே. (1-1-8)

என்று, ‘‘ப்ரஹ்மன் முதலானவர்களாலும் அறிய இயலாத மூலப்ரக்ருதி தொடக்கமான அனைத்து அண்டங்களுக்கும் காரணமாய் இருந்து, அவற்றை யெல்லாம் அழிக்கும் பராத்பரனான ஈச்வரன், ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் இருந்து கொண்டு, த்ரிபுரத்தை ஸம்ஹாரம் செய்து, ஜகத் ஸம்ஹாரமும் செய்கிறான். சதுர்முகனுக்கு அந்தர்யாமியாக இருந்து, ஜகத்தைப் படைத்து, தேவர்களுக்கு ஞானத்தையும் அளிக்கிறான்’’ என்று இப்பாசுரத்தால், ‘ப்ரஹ்மம் ஜகத்திற்கு ஆத்மாவாக இருப்பதையும், க்ஷேத்ரஜ்ஞர்களான (ஜீவர்கள்) ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய படைத்தல், அழித்தல் ஆகியவையும், பகவானுடைய அதீனம்’ என்று அருளிச் செய்கிறார்.

இதனால் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்டிராத ப்ரதானத்தை ஜகத் காரணமாகக் கூறும் ஸாங்க்ய மத கோட்பாடும், ருத்ரனுக்கு ஜகத் காரணத்தைக் கூறும் பாசுபத மத கோட்பாடும், பரமாணுவை அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணமாகக் கூறும் மதங்களும் கண்டிக்கப்படுவது தெளிவாகிறது.

‘‘சுரரறி....முதலாய்’’ (திருவாய். 1-1-8) என்பதால், ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் முதலிய தத்வங்களுக்கும் பரமாத்மாவே காரணம் என்று அருளிச் செய்யப்படுகிறது.

‘‘அவை-பரபரன்’’ (திருவாய். 1-1-8) என்பதால், இந்த அண்டம் முழுவதையும் ஸம்ஹாரம் செய்பவன் ஈச்வரன் என்றும். ஸாங்கிய மதம் ஈச்வரனை அங்கீகரிக்காவிடில், ப்ரதானம் மட்டுமே தன்னடைவே பரிணமிக்கையில், அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவு என்பவை, ஏற்படாது. எனவே, இந்த மதம் ஏற்கத்தக்கதல்ல என்று விளக்கும்.

‘வ்யதிரேகாநவஸ்தி2தேஶ்சாந பேக்ஷத்வாத்’ 2-2-3 - (சேதனனால் அதிஷ்டிக்கப்படுவதை) எதிர்பாராமையால், - ஸ்ருஷ்டியிலும் வேறான நிலையான லயநிலையில் நில்லாமல் (ப்ரக்ருதிக்கு எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்பட்டுக் கொண்டு) இருக்கவேண்டி வருமாகையாலும் (ஸ்வதந்த்ர ப்ரக்ருதி ஜகத்காரணமாக முடியாது). என்று இந்த ஸூத்ரத்தின் பொருள் இந்தப் பாசுர (1-1-8) வரிகளில் காட்டப் படுகிறது.

அவயவங்களற்ற பரமாணுக்களுக்கு, ஜகத் காரணம் கூடாதென்கிற நையாயிக மத கண்டனமும், ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் ஆகியவற்றிற்கு ஈச்வரனே காரணம் என்பதும் இப்பாசுர (1-1-8) வரிகளால் அருளிச் செய்யப்பட்டது.

பாசுபதர்கள் ருத்ரனுக்கு பரத்வத்தைக் கூறுவதை மறுத்திடும் வகையில், ஆழ்வார், ‘‘அரனயனென.....உளன்’’ (திருவாய். 1-1-8) என்று, பகவான் அந்தர்யாமியாக இருப்ப தாலேயே, ருத்ரன் இவற்றைச் செய்கிறான் என்பதைத் தெளிவாக்குகிறார்.

பகவான், ருத்ரனுக்கும், நான்முகனுக்கும் அந்தர்யாமி யாக இருந்து, அழித்தல், படைத்தல் ஆகியவற்றை நடத்து வதை அருளிச்செய்கிறார், ஆழ்வார். இதற்குக் காரணம் அறிவில் குறைந்தவர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது ஆழ்வார் திருவுள்ளம். பாஷ்யகாரர், ‘‘ருத்ரனை மட்டும் குறிப்பிட்டதற்குக் காரணம், ருத்ரனைச் சொன்னால் அது தன்னிடையே சதுர்முகனையும் சொன்னதாகும்’’ என்னும் கருத்தால் விளக்கப்படுகிறது.

இனி இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களை,

உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்
உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்

உளனெனஇலனென இவைகுணமுடைமையில்*
உளனிருதகைமையொடு ஒழிவிலன்பரந்தே. (திருவாய்மொழி 1-1-9)

பாசுரத்தில் விவரிக்கிறார் ஆழ்வார். அவர்களை நோக்கி, ‘‘நீ ஒருகால் ஈச்வரனுடைய இல்லாமையை, ‘உளன்’ என்கிற சொல்லால் நிரூபிக்க முயன்றால், அவன் உள்ளான் என்னும் உண்மையே தேறுமே ஒழிய, உன் மதம் கூறும் இல்லாமை தேறாது. ஒருகால் நீ ‘ உளன் அலன்’ என்னும் சொல்லால் இல்லாமையை சாதிக்க நினைத்தால், உலகத்தில் ‘இல்லை’ என்னும் சொல்லுக்கு பருத்த (ஸ்தூல) நிலை போய், நுண்ணியதாக (ஸூக்ஷ்ம) இருப்பதைக் குறிக்குமே ஒழிய, நீ விரும்பும் ஶூந்யத்வம் சித்திக்காது.’’ என்கிறார்.

‘இப்படி உள்ளதும், இன்மையும் குணமாக இருப்பதை, ‘தன்னுடையது, எதிர்தரப்பினரது’ என்று கொண்டால், ‘இருப்பது’ ஆகிய குணங்களுடன் கூடிய ப்ரஹ்மம் சித்திக்கும். இதனால், நீங்கள் உங்கள் மதம் கூறாத பொருளை அங்கீகரிக்க வேண்டி வரும். எனவே, எல்லையற்ற குணங்களை உடைய எம்பெருமானையும் அங்கீகரிக்கலாம்’ என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார்.

பௌத்தமதத்தின் வைபாஷிக பிரிவைச்சேர்ந்தவர் கள், ‘‘காற்று, நீர், நெருப்பு, மண் ஆகியவை அவையவைக்கு உரிய பரமாணுக்கள் ஒன்றாகச் சேருவதால் உருவாகின்றன. அதிலிருந்து சரீரமும், உடலும் தோன்றுகின்றன’’ என்று கூறுகிறார்கள். இப்படி ஏற்பட்ட உடலில் வசிக்கும், விஞ்ஞானமே ஆத்மா என்கிறார்கள். இவற்றிலிருந்து ஜகத்தின் எல்லா வஸ்த்துக்களின் கூட்டங்கள் ஏற்படாது என்பது,

‘‘ஸமுதா3ய உப4யஹேதுகே(அ)பி தத3ப்ராப்தி: (2-2-17) \& பரமாணுவைக் காரணமாகக்கொண்டதான பூமி முதலானவற்றின் ஸமுதாயத்திலும், பூமி முதலான பூதங்களைக்காரணமாகக் கொண்ட சரீரேந்திரிய ஸமுதாயத்திலும், ஸ-முதாயமாகும் தன்மை சேராது’’ என்று அருளிச் செய்யப்பட்டது.

இந்த பரமாணுக்கள், கணநேரத்திற்கே நீடிக்கும் க்ஷணிகமானவை எனப்படுவதால், இவற்றிலிருந்து நிலையான இருப்பினங்களும் ஞானமும் ஏற்படுவது கடினம் என்பதால், இந்த வாதங்கள் சாரீரகத்தில் நிரஸிக்கப்பட்டன. இப்படி, இருப்பது, இல்லாதது, பருத்தநிலை மற்றும் நுண்ணிய நிலைகளுடன் கூடிய வஸ்துவின் அழிவற்ற தன்மையை, ஆழ்வார், ‘‘உளனெனில்’’ (திருவாய். 1-1-9) என்னும் வரிகளில் அருளிச் செய்தார்.

(பௌத்தமதத்தைப் பற்றிய சில குறிப்புகள்: பௌத்தர்கள்: 1.வைபாஷிகர், 2.ஸௌத்ராந்திகர், 3.யோகாசாரர், 4.மாத்யமிகர் என நான்கு வகைப்பட்டவர்கள். அவர்களில் வைபாஷிகர் - பூமி முதலியவைகள் கண்கூடாகப் பார்க்கப்படுகின்றன என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஸௌந்ராந்திகர் - த்ரவ்யங்கள் கண்கூடாகத் தெரிவதில்லை. விஜ்ஞாநத்தைக் கொண்டு வெளியில் த்ரவ்யமிருப்பதாக கருதலளவையின் அடிப்படையில் ஊஹிக்கிறோமென்கிறார். யோகாசாரர் - உள் விஜ்ஞாநம் மட்டுமே உள்ளது. வெளிப் பொருள்களே இல்லை என்கிறார். மாத்யமிகர் - விஜ்ஞாநம் இல்லை. ஸூந்யம் தான் தத்வம் என்கிறார். இவர்கள் கொள்கைகள் இனி விவரிக்கப்படுகிறது.

புத்தருடைய முதல் உபதேசம் சூந்யவாதம். அவருடைய உபதேசத்தை அவ்விதமே ஏற்றுக் கொண்டவன் மாத்யமிகன். இவன் குருவின் உபதேசத்தைக் கேட்டு மேலும் தெளிவுபெறக் கேள்விகள் கேட்காததால் உயர்ந்தவனல்லன். ஆசார்யர் உபதேசித்ததில் ஈடுபாடு கொண்டு அடக்கமாக இருந்ததால் தாழ்ந்தவனுமல்லன். இவன் நடு நிலைமை யுள்ளவனாக மத்யமனாக இருப்பதால் மாத்யமிகன் எனப்படுகிறான்.

ஒருவன் வெளிப் பொருள்கள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு, விஜ்ஞானம் இல்லை என்பதை எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்? என்று கேள்வி கேட்டான். ஆகையால் ஒரு விஷயத்தில் யோகம், மற்றொரு விஷயத்தில் பர்யநுயோகம் என்பது கேள்வியாகும். ஸம்மதி (தியானம்), ஆசாரம் (தூய்மை) இரண்டும் உடையவரா என்ற கேள்வியை எழுப்புவதால் அவனை யோகாசாரன் என்கிறார்கள்.

மற்றொருவன் - விஜ்ஞானம் என்பது ஒரே விதமாக இருப்பதில்லை. கடம் - குடம், படம், நீலம், மஞ்சள் என்றவாறு - அதாவது கட ஜ்ஞாநம், படஜ்ஞாநம் என்று பல ஆகாரங்கள் இருக்கின்றன. விஜ்ஞாநத்திற்கு இவ்வாகாரங்கள் வெளியி லுள்ள பொருள்களால்தானே வந்திருக்க வேண்டும். ஆகையால் வெளிப் பொருள்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று விவாதித்தான். புத்தர் அதை அங்கீகரித்தார். ஆனால் அவைகள் கண்ணால் பார்த்து அறியக் கூடியவைகளல்ல. அநுமா னத்தினால் ஊஹித்து அறியக்கூடியவை என்று உபதேசித்தார். அதைக் கேட்டதும் புத்தரைப் பார்த்து, இந்த உபதேச ஸூத்ரத்திற்கு முடிவு எங்கே? என்று கேட்டான். அதனால் ஸௌத்ராந்திகன் எனப்படுகிறான்.

வேறு ஒருவன் முன் சொன்னதை மறுத்து, கண்களால் காண இயலாமல் அநுமானமே உண்டாகாதே என்று கண்களால் காண இயலாத அநுமானம் (கருதலளவை) என்ற சொல் விபாக்ஷை - மாறுபட்டதான பாஷை என்றான். இதனால் புத்தபாஷைக்கு மாறுபட்டதான பாஷையைச் சொன்னதினால் வைபாஷிகன் எனப்பட்டான். இவனை பௌத்தனல்லன் என்று சொல்ல வொண்ணாது. இவனும் யோகாசாரனைப் போலவும், ஸௌத்ராந்திகனைப்போலவும் தாங்கள் ஒப்புக் கொண்ட பொருள்கள் எல்லாம் க்ஷணிகங்கள்(க்ஷணிகம்-ஒரு கணப் பொழுது) என்றான். ஒரு க்ஷணத்திற்கு மேல் இராமல், பிறந்து அழிகின்றன என்று சொல்லுவதால் இவனும் பௌத்தமதத்தைச் சேர்ந்தவனே யாகும்.)

‘‘ப்ரதிஸங்க்2யா(அ)ப்ரதிஸங்2யா நிரோதா4ப்ராப்திர விச்சே2தா3த்’’ (2-2-21), என்னும் ஸூத்ர பாஷ்யத்தில்,’’ஸத உத்பத்திவிநாஶௌ நாமாவஸ்தா2ந்தராபத்திரேவ, அவஸ்தா2யோகி3 து த்3ரவ்யமேகமேவ ஸ்தி2ரமிதி காரணாத3நந்யத்வம் கார்யஸ்ய உபபாத3யத்3 பி4ரஸ்மாபி4:, ‘‘தத3நந்யத்வம்’’ (ப்ரஹ்ம.ஸூத்ரம். 2-1-15) இத்யத்ர ப்ரதிபாதி3த: I நிர்வாணஸ்ய தீ3பஸ்ய நிரந்வய விநாத3ர்நாத் அந்யத்ராபி விநாஶோ நிரந்வயோ (அ)நுமீயத இதி சேந் ந, க4டராவா தெ3ளம்ருதா3தி3 த்3ரவ்யாநுவ்ருத்த்யுபலப்3த்4யா ஸதோ த்3ரவ்யஸ்யா வஸ்தா2ந்தரா பத்திரேவ விநா இதி நிஶ்சிதே ஸதி ப்ரதீ3பாதெ3ள ஸூக்ஷ்ம த3ஶா பத்த்யா(அ)பி அநுபலம்போ4பபத்தே: தத்ராப்ய வஸ்தா2ந்தரா பத்திகல்பநஸ்யைவ யுக்தத்வாத் II’’ - மேலும், அந்தப் பொருளின் ஒருபடித்தான தொடர்ச்சி நிறுத்தப்படுவதாகிய இயல்பு - நுண்ணிய அழிவு, ‘பொருளின் ஒருபடித்தான தொடர்ச்சியின் முழுமையான அழிவு - ஒவ்வொரு கணமும் நிகழும் காணப்பெறாத அழிவு’. இவற்றை, ‘‘கணநேர நிலைப்பு’’ என்னும் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள். ‘ப்ரதிஸங்க்யா அழிவு’ மற்றும் ‘அப்ரதிஸங்க்யா அழிவு’ என்று பேசுகிறார்கள். இந்த இரண்டுமே இயலாதது. இதுவே இங்கு பெறப்படும் பொருளாகும்.

முழுமையான துண்டிப்பு காணப்படாததால் - ‘இருப்பவைகளை (நிலை பெற்றிருப்பவைகளை) முழுமை யாக துண்டிப்பது இயலாததால்’ - இந்த இயலாமை இவ்வாறானது - இருப்பைப் பெற்றிருக்கும் ஓர் பொருளின் தோற்றம் மற்றும் அழிவு என்பவை. (அந்தப் பொருள்) வேறொரு பெயர் மற்றும் நிலைக்கு மாறுவதைத் தவிர வேறல்ல. ஏனெனில், ஓர் நிலையுடன் தொடர்பு கொண்ட ஓர் பொருள் ஒன்று மட்டுமே, உறுதியாக இருப்பது. இது, ‘கார்யம் என்பது காரணத்தைக் காட்டிலும் வேறுபட்டதல்ல’ என்பதை முன் மொழிகையில். எங்களால் விளக்கப்பட்டது. இந்தச் ஸூத்ரத்தின் தொடர்பில்:

‘‘தத3நந்யத்வம்’’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2-1-5) - ‘காரணமான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் (கார்யமான உலகம்) வேறுபடாமலேயுள்ளது’.

இவ்வாறு விவாதிக்கப்படுமாகில், ‘‘அணைக்கப்பட்ட விளக்கின் திறத்தில், முழுமையான அழிவு அறியப்படுவ தால், வேறு ஓர் இடத்தில் உள்ள அழிவு கூட முழுமை யானது என்று முடிவெடுக்கப்படும்’’.

[Explanatory Note: The theory of momentariness requires that the persistence of anything in time must be deemed illusory. It is supposed that destruction overtakes everything in the world every moment, but it is subtle and unobserved. When a pot is seen to exist for a number of moments, a series of similar momentary pots are seen in reality and not one pot. The destruction of a pot by a blow with a hammer is different. It is gross and visible. (The two types of destruction are included by the Buddhists in the 75 dharmas or categories into which they analyse the world. Unobserved destruction includes failure to notice things when the attention is engaged elsewhere. Deliberate destruction as a category refers to the final destruction of bondage.) ]

இல்லை என்று, நாங்கள் பதிலளிக்கிறோம். ‘அழிவு என்பது வேறு ஓர் நிலையை அடைவதைத் தவிர வேறு அல்ல’ என்று உறுதி செய்யப்பட்ட பிறகு, இருப்பைப் பெற்றிருக்கும் ஓர் பொருளின் திறத்தில், பொருளின் தொடர்ச்சி அறியப்படுவதால் - மண் போன்றவற்றின் தொடர்ச்சி குடம், சிறு தட்டு போன்றவற்றில் - வேறு ஓர் நிலையின் ஊகம் முற்கோள் காட்டப்படுவது, விளக்கு போன்றவற்றின் திறத்தில் சரியானதே. ஏனெனில், அங்கே நுண்ணிய நிலையை ஊகிப்பதால், ‘அறியாதது’ என்பது கணக்கிடப்படும்.

[Explanatory Note: Against Ramanuja's argument that destruction means only the passing of a substance into another state, the Buddhists cite the example of a lamp going off. The destruction there is complete, and we should infer a similar but unobserved destruction in the case of pots etc. The reply to this is that the observed persistence of clay in the conditions of pots, potsherds etc. cannot be explained away to suit a mere theory. It will however be legitimate to assume from the persistence of clay that the lamp-flame also persists in a subtle condition. From what is seen, what is unseen can be conceived; but what is seen should not be ignored or denied. ]

என்று, விளக்கப்பட்டிருப்பது, ‘‘உளனெனில் உளன்’’ (1-1-9) என்னும் இவ்வரிகளைக் கொண்டு வ்யாக்யானம் செய்தது தெளிவாக உள்ளது. எனவே, இந்த அதிகரணத்தில் (ஸமுதா3யாதி4கரணம் 2-2-3) அறியப்படும் பொருள், இந்த பாசுரத்தில் (1-1-9) அமைந்துள்ளது என்பது தெளிவு.

சௌத்ராந்திக மதத்தினர் கொள்கைப்படி, வெளியே உள்ள பொருள், நேரடியாக அறியப்படுவதில்லை. ஆனால் அந்தப் பொருளைக் குறித்த அறிதிறனால், அது அறியப் படுகிறது என்பதாகும். இதற்கு அவர்கள் கூறும் விளக்கம்:- ஓர் பொருளை நேரிடையாக அறிவதற்கு இரண்டு கணங்கள் ஆகும்-ஒரு கணத்தில் பார்ப்பது, ஒரு கணத்தில் அறிவது- ஆனால், இவர்கள் கொள்கைப்படி எல்லாமே க்ஷணிக மானதால், இந்த முறையில் பொருள்களின் நேரடி அறிவு ஏற்படாது, என்பதாகும். எனவே, பொருள்கள் அறிவில் ஏற்படும் மனப்பதிவுகளே அறிதலுக்கும் காரணம் என்பது இவர்கள் கூற்று.

எந்தப் பொருளையும் தன்னுடைய மனப் பதிவுகளுக்கு நேராக எடுத்துச் செல்ல (தெரிவிக்க) இயலாது என்பதால், இந்த கோட்பாடு மறுக்கப்படுகிறது. அறிபவனின் அறிவு, கணநேரத்தில் அழிந்து விடுமாகில் அவனால் அறியப்படுவதும் கண நேரத்தில் அழிந்துவிடும். அப்பொழுது, பொருளின் வடிவம் அறிவில் பதிவை ஏற்படுத்தும் என்று சொல்ல இயலாது. சாரீரகத்தில் இவ்வாறு மறுக்கப்பட்டதை, ஆழ்வார், ‘‘அவனுருவம் இவ்வுருவுகள்’ (திருவாய். 1-1-9) என்று அருளிச்செய்கிறார். கண் முதலிய இந்திரியங்களால் அறியப்பட்ட பொருள்களே அறிவால் உணரப்படுகிறது என்பது ஆழ்வாரால், காட்டித்தரப்பட்டது.

யோகாசார மதத்தினர், வெளியே, பொருள்கள் என்பதே கிடையாது; வெறும் விஞ்ஞானம் மட்டுமே உள்ளது என்கிறார்கள். அறிபவனோ, அறியப்படும் பொருளோ கிடையாது; தொடர்ந்து வரும் எண்ணங்கள் மட்டுமே உள்ளன என்கிறார்கள். வெளியே பொருள்கள் இருப்பதை மறுக்க இயலாது என்பதாலும், இந்த வெளிப்பொருள்கள் கனவில் காணப்படுவது போன்றவை அல்ல என்பதாலும், இந்தக் கொள்கை தள்ளப்படுகிறது. ‘நான் அறிகிறேன்’ என்பது உள்மனத்தைப் பற்றியதாகும். அறியப்படும் பொருள் வெளியே உள்ளது. இந்த ‘அறிவும்’, ‘இருத்தலும்’ யோகாசாரர்கள் சொல்வதுபோல் ஒன்றாக இருக்கவே இயலாது என்பதால் தள்ளப்படுகிறது. வெளியே, பொருள் என்பதன் இருப்பு இருந்தே ஆகவேண்டும் என்று சாரீரகத்தில் சொல்லப் பட்டதை, ஆழ்வார் ‘‘அவனுருவம், அவனருவம், ஒழிவிலன்பரந்தே’’ (திருவாய். 1-1-9) என்று அருளிச் செய்கிறார்.

நாபா4வ உபலப்3தே4: (2-2-27), (அறிவு தவிர்ந்த வெளிப்பொருள்கள்) இல்லையென்பது, தவறு; (அவ்வறிவுக்கு விஷயமாக அப்பொருள்கள்) காணப்படுகையால். என்கிற ஸூத்ரத்தில், வெளியே பொருள்கள் இல்லாத சமயத்தில், அதன் உபயோகம் குறித்த அறிவு ஏற்படாது என்று சொல்லப்பட்டதை, ஆழ்வார், ‘உருவம்’’ (1-1-9) என்னும் சொல்லால் காட்டித்தருகிறார்.

‘‘உருவம்’ என்றாலேயே ஸ்தூலமாக-பருத்த நிலையில் உள்ள ஓர் பொருள் என்பதைக் குறிப்பிடும், இந்திரியங்களால் அறியப்படும் ஒன்றிற்கே, ஸ்தூல நிலை உள்ளது. இப்படி இந்திரியங்களால் அறியப்படாவிட்டால், அதன் தன்மை குறித்த அறிவு இல்லாமலேயே போகும். எனவே, ‘வெளியே பொருள்’ என்பது இருந்தே ஆக வேண்டும் என்பதை, ‘உருவம்’ (1-1-9) என்பதால் அருளிச் செய்கிறார், ஆழ்வார்.

ஆனால் பிள்ளை ‘‘ஸர்வசூந்யவாதியை நிரஸிக்கிறார் இப்பாட்டாலே’’ என்றும், ‘ஸர்வதாநுபபத்தே:’ (ப்ரஹ்ம ஸூத்ரம். 2-2-30), எவ்வகையிலும் பொருந்தாதாகையாலும் (ஸர்வசூந்யவாதம் ஒட்டாது), ‘‘இந்த அண்டத்தில் காணப்படும் எல்லாமே, ‘ஸத்’ என்பதும் அல்ல. ‘அஸத்’ என்பதும் அல்ல’’ என்று கூறும் ‘மாத்யாமிக’ மத கண்டனமும் இந்தப்பாசுரத்தில் (1-1-9) காட்டப்பட்டுள்ளது. ‘‘வீடுமின் முற்றின்’’ ப்ரவேசத்திலே ‘‘முதல் திருவாய்மொழி பூர்வத் விகார்த்தம்’’ என்று அவர்தாமே அருளிச் செய்கையாலே, இந்த ப்ரதம தசகத்திலே தத்ஸூசநம் ஆவச்யகம், காதாந்தரத்திலே வைபாஷிகாதி மதநிரஸனம் அநவஸரக்ரஸ்தமாயிருக்கும். இப்பாட்டில் பதங்களும் பூர்வோக்த ப்ரக்ரியையாலே வைபாஷிகதாதிமத நிராஸ ஸூசகங்கள் என்னுமிடம் ஸ்வரஸதஸம்ப்ரதிபந்நம். வைபாஷிக மத நிராஸ ஸூத்ரபாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளைக் உட்கொண்டு ப்ரவ்ருத்தம் என்னுமிடம் பூர்வமேவ உபபாதிதமாகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை.

ஜைன மத கண்டனமும், இந்தப் பாசுரத்தில் (1-1-9) காட்டப்படுகிறது. இவர்கள் கோட்பாட்டில், ‘ஸத்’ எனப்படும் இருப்பு ‘அஸத்’ எனப்படும் இல்லாமை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் பொருள்களில் நிகழும் எனப்படுகிறது. இப்படி ‘ஸத்’ மற்றும் ‘அஸத்’ என்னும் இரண்டு நிலைகளும் ஒரு பொருளுக்கு, ஒரே சமயத்தில் ஏற்படாது என்பதால், இந்த மதக் கொள்கை ஒதுக்கப்படுகிறது. இந்தக் கருத்தையே ஆழ்வார், ‘‘உளனெனில் உளன் அவனுருவம் இவ்வு ருவுகள் உளனலனெனில் அவனருவம் இவ்வுருவுகள்’’ (திருவாய். 1-1-9) என அருளிச்செய்தார்.

‘பாஞ்சராத்ர ஆகமம் ப்ரமாணமல்ல’ என்னும் கருத்தை தகுந்த, விளக்கங்களுடன் இல்லையெனச் செய்தார் ஸ்ரீபாஷ்யகாரர். பாஞ்சராத்ர ஆகமத்திற்கு வேதத்திற்கு நிகரான அதிகாரத் தன்மை உண்டு என்பது சாரீரகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த கருத்தை ஆழ்வார், ‘சுடர்மிகு சுருதியுள்- உளன்’’ ‘‘உளனெனில் உளன் அவனுருவம் இவ்வு ருவுகள் உளனலனெனில் அவனருவம் இவ்வுருவுகள்’’ (1-1-7, 1-1-9) என்னும் வரிகளில் அருளிச் செய்துள்ளார்.

இவ்வாறாக திருவாய்மொழி 1-1-8 மற்றும் 1-1-9 பாசுரங்களுக்கும் இரண்டாம் அத்யாயம் இரண்டாம் பாதமான தர்க்க பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது காட்டப்பட்டது.

பரந்ததண்பரவையுள் நீர்தொறும்பரந்துளன்
பரந்தஅண்டமிதென நிலவிசும்பொழிவற

கரந்தசிலிடந்தொறும்இடம்திகழ்பொருள்தொறும்*
கரந்தெங்கும்பரந்துளன் இவையுண்டகரனே.

கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே. (திருவாய்மொழி1-1-10,11)

ஆகியவை முறையே, சாரீரகத்தில் இரண்டாம் அத்யாயம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களுடன் கருத்தொற்றுமை கொண்டிருப்பது அடுத்தபடியாக விவரிக்கப்படுகிறது. இந்த அண்டமானது, ப்ரஹ்மத்தின் காரியம் என்று இந்த இரண்டு பாதங்கள் நிரூபிப்பதை இந்த இரண்டு பாசுரங்கள் வெளிப்படுத்துகின்றன என்பதால், கருத்தொற்றுமை உண்டு.

இரண்டாம் அத்யாயம், மூன்றாம் பாதம் ‘‘வியத் பாதம்’’ எனப்படுகிறது. இதன் முதல் அதிகரணத்தில் ‘‘வியத்’’ எனப்படும் ஆகாசத்திற்கு தோற்றம் என்பது உண்டா என்று ஆராயப்படுகிறது. சாந்தோக்ய சொற்றொடர்களால், ஆகாயம் ப்ரஹ்மத்தின் காரியம் இல்லையோ என்னும் ஐயப்பாடு எழுகின்றது. தைத்திரீய உபநிஷத்தில், ‘‘ஆகாஶஸ் ஸம்பூ4த:’’ (தை.ஆந. 1-2), (பரமாத்மா விடமிருந்து) ஆகாசம் உண்டாயிற்று ஆகாசம் தோற்றத்தை உடையது என்று காட்டித்தரப்பட்டிருப்பதாலும், சாந்தோக்யத்தில் வேறு இடங்களில் ஆகாசத்திற்கு தோற்றம் குறிப்பிடப் படுவதாலும், ஆகாசம் ப்ரஹ்மத்தால் தோற்று விக்கப்பட்டதால் அது ப்ரஹ்மத்தின் கார்யம் என்று உறுதிபடுத்தப்பட்டது.

இரண்டாம் அதிகரணத்தில் (தேஜோதி4கரணம் 2-3-2), இந்த ஆகாசத்திலிருந்து, காற்றும், அதிலிருந்து ஒளியும், என்னும் வரிசையில் ஒரு பூதத்திலிருந்து மற்றொன்று தோன்றிற்றா என்னும் கேள்வி எழ, இது அவ்வாறல்ல. ஆகாசத்தை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தி லிருந்தே அவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின என்பது உறுதிபடுத்தப்பட்டது.

தேஜோ(அ)தஸ் ததா2ஹ்யாஹ, (ப்ர.ஸூத். 2-3-10)

ப்3ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ப்3ரஹ்ம கார்யத்வமுக்தம், இதா3நீம் வ்யவஹித கார்யாணாம் கிம் கேவலாத் தத்தத3நந்தர காரணபூ4தாத்3வஸ்துந உத்பத்தி:, ஆஹோஸ்வித் தத்தத்3ரூபாத் ப்3ரஹ்மண இதி சிந்த்யதே I கிம் யுக்தம்? கேவலாத் தத்தத்3வஸ்துந இதிI குத:? தேஜஸ்தாவத், அத:- மாதரிஶ்வந ஏவோத்பத்3யதே ‘‘வாயோரக்3நி:’’ (தை. ஆநந்த. 1-1) இதி ஹ்யாஹ II

எல்லா அசேதனப்பொருள்களும் ப்ரஹ்மத்திற்குக் கார்யமாயிருக்கையால், பரம்பொருள் ஜகத்காரணமாகிறது என்று முன் அதிகரணத்தில் கூறப்பட்டது. எல்லாப் பொருள்களுக்கும் ப்ரஹ்மம் நேரே காரணமாகிறதா. அல்லது - முப்பாட்டன் பாட்டனுக்கு நேரே காரணமாகி, தகப்பனுக்கும், தனக்கும் (முறையே) பாட்டன் மூலமாகவும், தகப்பன் மூலமாகவும் பரம்பரையாக காரணமாவதுபோல், ப்ரஹ்மமும் இடைப்பட்ட கார்யப் பொருள்களுக்கு முந்திய காரணப் பொருளின் மூலம் பரம்பரையாக காரணமாகிறதா என்னும் ஐயப்பாடு எழுந்தவளவில், தேஜஸ் முதலான அத்தகைய பொருள்களுக்கு ப்ரஹ்மம் நேரே காரண மாவதில்லை, வாயு முதலான முந்திய காரணப்பொருள்களின் மூலம் பரம்பரையாக காரணமாகவே ஆகிறது என்னும் எதிரியின் வாதத்தைத் தள்ளி, அவ்விடங்களிலும் - அவ்வக்காரணப் பொருள்களை சரீரமாகக்கொண்டு ப்ரஹ்மம் நேரேயே காரணமாக ஆகிறது என்று ஸித்தாந்தம் செய்யப்படுகிறது இவ்வதிகரணத்தில்.

முதலில் ‘தேஜஸ்’ என்னும் அக்நி தத்துவத்தை எடுத்துக் கொண்டால், அது தனக்கு முந்திய ‘வாயு’ எனப்படும் காற்றிலிருந்தே உண்டாகிறதேயொழிய, ப்ரஹ்மத்திடமிருந்து நேரே உண்டாவதில்லை. ஏனெனில். ‘‘வாயோரக்3நி:’’ (தை.ஆந.1.1) (வாயு விடமிருந்து அக்னி உண்டாகிறது) என்றன்றோ ச்ருதி கூறுகிறது. ஆக இப்படி ச்ருதி கூறுகையால். ப்ரஹ்மத்திடமிருந்து பரம்பரையாகப் பிறந்த வாயு விடமிருந்து அக்னி உண்டாகிறது என்று கொள்ள வேண்டுமேயொழிய, ப்ரஹ்மத்திடமிருந்து நேரே அக்னி பிறக்கிறது என்று கொள்ள முடியாது.

மூன்றாம் அதிகரணத்தில் (ஆத்மாதி4கரணம் 2-3-3), ‘‘தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ பூ4ம்யாம்’’ (நாராயண உபநிஷத் 1.1) - ‘‘நீரினால் ஜீவர்களைப் படைத்தான் (பரமாத்மா)’’, என்று ஜீவனை ஸ்ருஷ்டித்ததாக ச்ருதி சொல்வதால் ஜீவனுக்கும் உற்பத்தி உண்டு என்று தெரிகிறது. இதுபோன்ற ச்ருதி சொற்றொடர்களால், ஜீவாத்மாவிற்கு தோற்றம் உண்டோ என்னும் ஐயப்பாடு ஏற்படுகிறது.

‘‘ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்’’ (கடோ. 2-18) - ‘அறிவாளியான ஒருவன் பிறப்பதுமில்லை; இறப்பது மில்லை’, போன்ற ஸ்ம்ருதி சொற்றொடர்களால், ஜீவனுக்கு தோற்றமும் அழிவும் இல்லாதது காட்டப்படுவதால், ஜீவன் நித்யமானவன் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. அதன் ஞானத்தில் சுருக்கமும். விரிவும் ஏற்படக்கூடுமே ஒழிய அது ஸ்வரூபத்தால் நித்யமானது என்று அறியப்படுகிறது.

நான்காம் அதிகரணத்தில் (ஜ்ஞாதிகரணம் 2-3-4),

‘யோ விஜ்ஞாநே திஷ்ட2ந்’’ (ப்ருஹ. 5-7-26) - ‘எவன் விஜ்ஞானத்தில் வசிக்கிறானோ’.’’விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே’’ (தை. ஆந. 5-1) - ‘விஜ்ஞானம் வேள்வியை விரிவுபடுத்துகிறது(பரப்புகிறது). ‘‘ஜ்ஞாந ஸ்வரூபமத்யந்த நிர்மலம்’’ (ஸ்ரீவி.பு. 1-2-6) - ஜ்ஞானத்தில் இயல்பு மிகவும் தூய்மையானது. போன்ற சொற்றொடர்களால், ஜீவன் வெறும் ஞானமே வடிவானவன் என்பது அறியப்படுகிறது. ஆனால், ‘‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’’ (ப்ருஹ. 6-5-15) - ‘அன்பானவனே! எதனால் ஒருவர் அறிபவனை அறிவார்?’ போன்ற சொற்றொ டர்களால், ஜீவன் அறிபவன் என்பது உணர்த்தப்படுகிறது. அறிபவனான இந்த ஜீவனின் ஸ்வரூபமே, அறிதலாகிய ஞானம். ஆத்மா ‘‘ஜ்நாதா’’. அவன் ‘பண்பு’ ஞானம். இவன் அணுவளவானவன்; விபு அல்ல (எங்கும் வ்யாபித்தவன் அல்ல) என்பதும் இந்த அதிகரணத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.

ஐந்தாவது அதிகரணத்தில், (கர்த்ரதி4கரணம் - 2-3-5)

‘‘ஹந்தா சேந்மந்யதே ஹந்தும் ஹதஶ்சேந் மந்யதே ஹதம், உபெ4ள தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ‘‘ (கட.2-19) - ‘ஒருகால், கொல்பவன் நினைத்தால்’. இவை போன்றவற்றில், கொல்வது போன்ற செயல்களுக்கு, ஆத்மாவானவன் முகவரல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது- இது, ஆத்மா நிலையானவன் (அழிவில்லாதவன்)என்பதால், அவன் கொல்லப்படு வதற்குத் தகுதியற்றவனாக இருப்பதால், இது போன்ற ச்ருதி சொற்றொடர்களால், ஆத்மாவிற்கு ‘‘கர்த்ருத்வம்’ - கர்த்தாவாக இருக்கும் தன்மை- இல்லையோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. ஸ்வர்க்கம் மோக்ஷம் போன்ற பலன்களைப் பெற, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டிருப்பதை மேற்கொள்வதால், ஜீவனுக்கு, ‘‘கர்த்ருத்வம்’’ உண்டு என்பது அநுமதிக்கப் படவேண்டும். ஸம்சாரத்தில் கட்டுண்ட அவன் செயல்கள் குணங்களால் ஏற்படுபவை, அவன் சுய ஸ்வரூபத்தால் ஏற்படுபவை அல்ல. எனவே, கர்த்ருத்வம் அவன் ஸ்வரூபம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

  ஆறாம் அதிகரணத்தில் (பராயத்தாதி4கரணம் 2-3-6), ஜீவனுக்கு கர்த்ருத்வம் பரமாத்மாவாலேயே அருளப்பட்ட போதிலும், ஜீவனுக்கு தன் கர்மத்திற்கேற்ப ஓர் செயலைத் தொடங்கும் அளவிற்கு மட்டுமே, கர்த்ருத்வத்தில் சுதந்திரம் உள்ளது என்பது விளக்கப்படுகிறது.

ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாதீனமானதே யாகும். ஏனெனில்: வேதச்சொற்றொடர்கள் - ‘ஜீவன் பரமாத்மாவால் நியமிக்கப்பட்டே காரியங்களைச் செய்கிறான்’ என்றன்றோ கூறுகின்றன. எந்தச் சொற்றொடர்கள் அப்படி கூறுகின்றனவெனில்; ‘‘அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா’’ - (தைத்-ஆர-3.11.3) (ஸர்வாந்தர்யாமியான பகவான் ஜனங்களை உள்நுழைந்து நியமிக்கிறான்) ‘‘ய ஆத்மநி திஷ்ட2ந் ஆத்மநோ(அ)ந்தர: யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ஶரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ த ஆத்மா(அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. 5.7.22) (எவனொருவன் ஜீவாத்மாவின் வெளிப்புறம் நிற்கிறானோ, ஜீவனின் உட்புறமும் இருக்கிறானோ, எவனை ஜீவன் அறிவதில்லையோ எவனுக்கு ஜீவன் சரீரமோ, எவன் ஜீவனை உள்நுழைந்து நியமிக்கிறானோ மரணமற்ற அவ்வந்தர்யாமியே உனக்கு ஆத்மா வாகிறான்.) முதலான ச்ருதிகள் பரமாத்மாவே ஜீவனை எப்போதும் நியமிப்ப தாகக் கூறுவதைக் காணலாம்.

ஆகையால், ஜீவனுடைய கர்த்ருத்வம் - பரமாத்மா தீநமேயாக வேண்டும். ‘‘ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி3 ஸந்நிவிஷ்ட: மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச’’ (பகவத்கீதை. 15.15) (எல்லா ஜீவர்களின் ஹ்ருதயத் திலும் நான் வாழ்கிறேன்; என்னாலேயே ஜீவனுக்கு நினைவு, அறிவு, மறதி முதலியவை அனைத்தும் ஏற்படுகிறது.) ‘‘ஈஶ்வர: ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶே (அ)ர்ஜுந திஷ்ட2தி, ப்4ராமயந் ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா’’ (பகவத் கீதை. 18-61)(அர்ஜுனா! ஸர்வேச்வரனான வாஸுதேவன் எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய ப்ரதேசத்திலும் - ப்ரக்ருதியாகிற யந்திரத்தில் ஏறியிருக்கும் அவற்றை ஸத்வாதி குணமயமான ப்ரக்ருதி கார்யமான சரீரேந்திரியங்களைக் கொண்டு அந்தந்த ஸத்வாதி குணத்திற்கு அநுகுணமாகச் செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு நிற்கிறான்.) என்று கீதையிலும் இவ்வர்த்தமே கூறப்பட்டது. ஆகையால் ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாதீநமானது என்றே கொள்ள வேண்டும் என்பது ஸித்தாந்தமாகும்.

ஏழாம் அதிகரணத்தில் (அம்ஶாதிகரணம் 2-3-7), ஜீவன், ப்ரஹ்மத்தின் ஓர் பகுதியுமன்று; மாயைக்கு உட்பட்ட ப்ரஹ்மம் ஜீவனன்று. அவன் ப்ரஹ்மத்தோடு பேத அபேதங்கள் இன்றி, அவனுடைய அம்சமாக இருப்பவன் என்பது வாதிகளால் விளக்கப்பட்டது.

ஜீவன் பரமாத்மாவைக் காட்டிலும் மிகவும் வேறுபட்டவனே. ‘‘ஜ்ஞாஜ்ஞௌ த்3வாவஜாவீஶ நீஶௌ’’ (ச்வே.1.9) (ஈச்வரனும், ஜீவனுமான இருவரும் முறையே ஸர்வஜ்ஞனும், அஜ்ஞனுமாகவும், நியமிப்ப வனும், நியமிக்கப்படுபவனுமாகவும் உள்ளனர்.) முதலான ச்ருதிகள் ஜீவனைப் பரமாத்மாவைக் காட்டிலும் மிகவும் வேறானவனாகவன்றோ காட்டுகின்றன. அவ்விருவரையும் ஒன்றாகவும் சில ச்ருதிகள் காட்டு கின்றனவே, எனில், ‘‘ஆதி3த்யோ யூப:’’ என்று யூபஸ்தம்பத்தை ஸூர்யனாகவே கூறும் ச்ருதியானது கண்கூடாகக் காண்பதற்கு மாறுபட்டதாகையால், ‘‘ஆதித்யனைப் போல் பிரகாசமுடையது யூபஸ்தம்பம்’’ என்று அதற்கு அமுக்யமாகப் பொருள் கொள்வதுபோல், முற்கூறிய பல பேதச்ருதிகளுக்கு முரணாயிருக்கையால் அபேதச்ருதி களுக்கு ‘‘ப்ரஹ்மத்துக்கு ஜீவன் பரதந்த்ரன்’’ என்று அமுக்யமாகவே பொருள் கொள்ள வேண்டும். இல்லாவிடில், ‘‘அக்3நிநா ஸிஞ்சேத்’’ (நெருப்பால் நனைக்க வேண்டும்) என்னும் சொற்றொடர் போலே ச்ருதிசொற்றொடர்கள் முன்னுக்குப்பின் முரணாகிவிடும். இது த்வைதிகளின் வாதமாகும்.

ப்ரஹ்மமே மாயையால் மயங்கி ஜீவனாகத் தோற்றமளிக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில்: ‘‘அயமாத்மா ப்3ரஹ்ம’’ (ப்ருஹ.6.5.4) (இந்த ஜீவாத்மா ப்ரஹ்மமே) ‘‘தத்த்வமஸி’’ (சாந்.6.8.7) (நீ ப்ரஹ்மமே யாகிறாய்) முதலான அபேத ச்ருதிகளில் ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒன்று என்றல்லவோ உபதேசிக்கப்படுகிறது. த்வைதிகள் ப்ரமாணமாக எடுக்கும் பேத ச்ருதிகள் - கண்கூடாகக் காண்பதினால் தோற்றும் பேதத்தை, அபேத ச்ருதிகளால் தள்ளுவதற்காக அநுவதிக்கின்றனவேயொழிய, பேதத்தை விதிப்பவை யல்ல என்பது அத்வைதிகளின் வாதமாகும்.

முற்கூறிய இரண்டு பக்ஷங்களும் தவறு. உண்மையான உபாதியினால் ப்ரஹ்மமே ஜீவனாகத் தோற்றுகிறது என்றே அபேதச்ருதிகளிலிருந்து விளங்குகிறது. பொய்யான மாயையினால் ப்ரஹ்மம் மயங்குகிறது என்று அத்வைதிகள் கூறுவது ஒட்டாது. பொய்யான மாயையால் ஸுகது:க்காநுபவரூபமான ஸம்ஸார பந்தம் ஏற்படுகிறது என்பதும், பிறகு வாக்யார்த்த ஜ்ஞானத்தால் அவ்வநுபவம் நீங்குகையாகிற மோக்ஷம் ஏற்படுகிறது என்பதும் பொருந்தாதன்றோ. அபேதச்ருதி களுக்கு முரணா யிருப்பதால், பேதச்ருதிகள் உபாதிகல்பிதமான பேதத்தைச் சொல்லுவத ாகவே அமுக்யமாகப் பொருள் கொள்ளவேண்டும் என்பது பேத அபேத வாதிகளின் கூற்றாகும்.

இந்த மூன்று பக்ஷத்திற்கும் கீழ்கண்டவாறு பதிலளிக்கப்படுகிறது. ஜீவன் ப்ரஹ்மத்தின் அம்சம் என்று ஸித்தாந்திகள் கூறுவதும் பொருந்தாது. ஒரு பொருளின் ஒரு பகுதியன்றோ அம்சம் (கூறு) எனப்படுகிறது. அவயவமற்றதான ப்ரஹ்மத்தைப் பகுதி பகுதியாகப் பிரிப்பது ஒட்டாதாகையால், ஜீவன் ப்ரஹ்மத்தின் ஒரு பகுதியாகிற அம்சமாக முடியாது. மேலும், ஜீவனை ப்ரஹ்மத்தின் அம்சமென்று கொண்டால் ஜீவனின் குற்றங்களெல்லாம் பரமாத்மாவினுடையவையாக வேண்டி வரும். ஆகையால், ஜீவன் ப்ரஹ்மத்தின் அம்சம் என்பது பொருந்தாது.

பரமாத்மாவை ஸத்ய ஸங்கல்பன், ஸர்வஜ்ஞன், குற்றமற்றவனென்றெல்லாம் வேதம் முழங்கா நிற்க, அவனுக்கு அஜ்ஞானமோ தேஹாதிகளின் சேர்க்கையால் மற்றும் குற்றங்களோ கொள்ளத்தகாவாகையாலே ஜீவனும் பரமாத்மாவும் வேறே. ஆனால் அபேத ச்ருதியும் கெடாதபடி அந்த பேதத்தைக் கொள்ள வேண்டும். ஆக ஜீவாத்மா உடல், பரமாத்மா அவனுக்கும் ஆத்மா, ஆக ஜீவாத்மா உடலாய் விசேஷணமாய் அம்சமெனப்படுகிறான். நீலமான பொருளிலே நைல்யம் அம்சம், மதுரமான பொருளுக்கு இனிப்பு ஓரம்சம் என்னுமாபோலே சேதந அசேதந விசிஷ்டமான பரமாத்மா என்ற தத்துவத்தில் சேதனன் அம்சமாகிறான். இப்படியிசைவது பேதச்ருதி யாலும் அபேதச்ருதியாலுமாம். அபேதச்ருதியை யுபேக்ஷிக்கலாகாது. ‘செம்படவர்கள் ப்ரஹ்மம், ஊழியர்கள் ப்ரஹ்மம், சூதாடுகின்றவர்கள் ப்ரஹ்மம்’ என்றெல்லாம் மிகவும் நீசரானவர்களோடும் ஒன்றாம் தன்மை சொல்லப் பட்டிருக்கிறதால். ஆகையால் சரீராத்ம பாவமென்கிற தொடர்பினைக் கொண்டு யாவருக்கும் அந்தர்யாமி என்று அவனது பெருமையைக் குறைக்காமல் அவனுக்கு மேன்மையைச் சொல்வதிலே நோக்கு வேதத்திற்கென்க.

நான்காம் பாதம் ‘‘ப்ராண பாதம்’’ என்றழைக்கப் படுகிறது. இதன் முதல் அதிகரணத்தில் (ப்ராணோத் பத்த்யதி4கரணம்-2-4-1), ஜீவனுக்கு அநுபவத்திற்கு உதவும் இந்திரியங்கள் நித்யமானவை; அவற்றிற்கு தோற்றமும் அழிவும் கிடையாது என்பது மறுக்கப்படுகிறது. இவை நிலையானவை என்று கூறும் வாக்கியம் (சொற்றொடர்) ஜகத் காரணனாக ப்ரஹ்மத்தையே கூறுகின்றன என்பதாலும், ச்ருதி, இந்திரியங்களின் தோற்றத்தை குறிப்பிடுவதாலும், இவை நித்யமானவை அல்ல என்று நிரூபிக்கப்படுகிறது.

இரண்டாம் அதிகரணத்தில் (ஸப்தக3த்யதி4கரணம் 2-4-2), இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழு அல்ல மனதையும் சேர்த்து 11 என்று நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாம் அதிகரணத்தில் ( ப்ராணாணுத்வாதி4 கரணம் - 2-4-3), இந்திரியங்கள், ‘‘விபு’’ என்பதை மறுத்து, அவை ஒருவர் மரணமடைகையில், ஜீவனுடன் சேர்ந்து புறப்பட்டுச் செல்வதால், அதற்கு இயக்கம் உள்ளது. எனவே அது அணுவானது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

நான்காம் அதிகரணத்தில் (வாயுக்ரியாதி4கரணம் - 2-4-4), முக்ய ப்ராணன் என்பது வெறும் காற்றல்ல; மூச்சு விடுகையுமன்று, அது ஓர் சிறப்பிக்கப்பட்ட இருப்பினம் என்பது நிலை நிறுத்தப் பட்டது.

ஐந்தாம் அதிகரணத்தில் (ஶ்ரேஷ்டா2ணுத்வாதி4 கரணம்-2-4-5), இந்த முக்ய ப்ராணன் ஜீவனுடன் உடலை விட்டு புறப்பட்டுச் செல்வதால், இது விபுவன்று அணுவே என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆறாம் அதிகரணத்தில் (ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2 நாதி4கரணம்- 2-4-6), இந்திரியங்கள் மற்றும் ப்ராணன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஜீவனே ஆனபொழுதும் (அதிஷ்டானம்), இந்த சக்தி அவனுக்கு பரமாத்மாவால் வழங்கப்படுவது விளக்கப்படுகிறது.

ஏழாம் அதிகரணத்தில் (இந்த்3ரியாதி4கரணம் 2-4-7), ப்ராணன் என்பது இந்திரியங்களில் ஒன்றல்ல; அது பதினொரு இந்திரியங்களைக் காட்டிலும் வேறுபட்டது என்பது காட்டப்படுகிறது.

எட்டாம் அதிகரணத்தில் (ஸம்ஜ்ஞாமூர்த்திக்லுப்த் யதி4கரணம்- 2-4-8 ), நாமரூபங்களோடு கூடிய அண்டம் ஹிரண்யகர்பனால் (சதுர்முகப்ரஹ்மனால்) படைக்கப் படுகிறது என்பது மறுக்கப் பட்டு-அதுவும் ப்ரஹ்மத்தின் செயலே என்பது விளக்கப்பட்டது.

இவ்வாறு, இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதங்களால் நிர்ணயிக்கப்பட்ட பொருளை, ஆழ்வார்,

பரந்ததண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டமிதென நிலவிசும்பொழிவற

கரந்தசிலிடந்தொறும் இடம் திகழ்பொருள்தொறும்*
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்டகரனே.

என்னும் திருவாய்மொழி 1-1-10-ஆம் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.

‘‘விரிந்து பரந்ததாக உள்ள கடலில் இருக்கும் ஒவ்வொரு நீர்த்துளியிலும், மிகச் சிறியதாக உள்ள அந்த துளி இந்த அண்டம் போல் பெரிதாகத் தோன்றும்படி மிக நுண்ணிய வடிவுடன், தான் இருக்கும் இடத்தில் எந்தவித நெருக்கப்படும் செயலும் இல்லாமல் அதனால் ஏற்படும் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் இருக்கும் பரமாத்மா, பூமி, ஆகாயம் என்று வேறுபாடு இல்லாமல், மிகச் சிறிய பொருளிலும், மிகப்பெரிய பொருளிலும், அந்தந்த பொருளுக்கு ஒளியூட்டுபவனாக இருக்கும் ஆத்ம வஸ்துக்களிலும் மிளிர்ந்து கொண்டு, இந்தப் பொருள்களைக் காட்டிலும் தனக்குள்ள தனித்தன்மை மாறாமல் இருந்து, இந்த ஜகத்தை நிலைபெறச்செய்கிறான். இவன் அசைக்க இயலாத ப்ரமாணமான வேதத்தால் அறியப்படுபவன்’’ என்று திருவாய்மொழி பாசுரம் 1-1-10-இல் அருளிச்செய்கிறார்.

திருவாய்மொழி பாசுரம் 1-1-11ஆம் பலச்ருதி பாசுரத்தில்,

கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே.

என்பதால், ‘‘நிலைபெற்று நிற்பவையான ஆகாயம், ஒளி, காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றைத் தரித்து, அவற்றின் செயல்கள் இடையூறின்றி நடத்தும் திறமை உடையவனும், அதற்கான பொறுமை உடையவனுமான மிக உயர்ந்தவன் திருவடிகளைக் குறித்து, ஆழ்வார் அருளிச் செய்த இந்த பொருள் நிறைந்த பாசுரங்கள் ஆயிரத்துள், இத்திருவாய் மொழி முக்தியை அளிக்கவல்லது’’ என்பது தெரிவிக்கப் படுகிறது.

இந்த பாசுரத்தின் முதற்பகுதியில், இந்த அண்டம் ப்ரஹ்மத்தின் காரியமாக இருப்பதை அருளிச்செய்து விட்டு, அடுத்த பதிகத்தில் முதல் திருவாய்மொழியான, ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2-1) என்பதால், அறிவிக்கப்போகும் பரத்வஞானம் மோக்ஷ சாதனமாக இருப்பதை இத்திருவாய் மொழி பாசுரத்தின் (1-1-11) பிற்பகுதியில் தெரிவிக்கிறார்.

இரண்டாம் அத்யாயம், மூன்றாம் பாதமான, ‘வியத்பாத’த்தின் முதல் அதிகரணத்தில் (வியத3தி4கரணம் 2-3-1) காணப்படும் பொருள், ‘‘நிலவிசும் பொழிவற’’ (1-1-10) என்பதால், மண் போன்றவற்றைப் போல ஆகாசத்தின் தோற்றமும் ப்ரஹ்மத்தின் செயல் என்பது தெளிவாக்கப் படுகிறது.

‘‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ: ஸம்பூ4 த:’’ (தை.ஆந.1-2) (அத்தகைய இந்தப் பரமாத்மா விடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று) என்னும் தைத்தரீய உபநிஷத் வார்த்தை, மற்றும் சாந்தோக்ய உபநிஷத் வார்த்தைகள் சிலவற்றிலும் ஆகாசத்திற்குத் தோற்றம் உண்டு என்று கூறுவதால், மண் போன்ற வற்றைப்போல, ஆகாசத் திற்கும் தோற்றம் உண்டு. அது ப்ரஹ்மத்தின் காரியம் என்னும் அதே பொருள், இப்பாசுர வரிகளால் (1-1-10) அறிவிக்கப் படுகிறது. எனவே, தைத்தரீய உபநிஷத் மற்றும் சாந்தோக்ய உபநிஷத் வார்த்தைகளின் நிர்வாகம் இந்த வரிகளில் தோன்றுவதால், இது முதல் அதிகரணத்தின் பொருளைத் தருகிறது என்பதில் ஐயமில்லை.

இரண்டாம் அதிகரணம் (தேஜோதி4கரணம்- 2-3-2), மற்ற பூதங்கள் ஆகாசத்திலிருந்து தோன்றுவதை மறுத்து, அவை அனைத்தும் ப்ரஹ்மத்தின் செயலே என்கிறது. இந்த பொருள் ‘‘பரந்ததண் பரவையுள்’’ (1-1-10) என்று தொடங்கும் பாசுரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாம் அதிகரணம் ( ஆத்மாதி4கரணம் 2-3-3), ஜீவனுக்கு தோற்றம் உண்டு என்பதை மறுக்கிறது. இந்தப் பொருளாவது, ‘‘இடம் திகழ் பொருள் தொறும்’’ (1-1-10) என்னும் பாசுர வரிகளில் அடங்கியுள்ளது. ‘இடந்திகழ்’ என்பதால், ஆத்மா தான் வசிக்கும் இடத்தில் வ்யாபிக்கக்கூடிய தன்மை பெற்றது என்பது அறியப் படுகிறது. இப்படி வ்யாபகமான பொருளுக்கு அழிவு கிடையாது என்பது அறியப்படுகிறது. இந்த உண்மையை, ஸ்ரீகிருஷ்ண பகவானே ஸ்ரீமத் பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறான்:-

‘‘அவிநாஶி து தத்3வித்3தி4 யேந ஸர்வமித3ம் ததம் | விநாஶமவ்யயஸ்யாஸ்ய ந கஶ்சித் கர்த்துமர்ஹதி || (பகவத்கீதை. 2-17)

இந்த கீதை ச்லோகத்திற்கு பாஷ்யகாரர் இவ்வாறு விளக்கம் தருகிறார்:- ‘‘ஆத்மநஸ்த்வவிநாஶித்வம் கத2மித்யத்ராஹ (அவிநாஶி து இதி) தத் - ஆத்மதத்வம் அவிநாஶீதி வித்3தி4; யே ந - ஆத்மதத்வேந சேதநேந, தத்3வ்யதிரிக்தமித3ம் அசேதநத்வம் ஸர்வம் ததம் - வ்யாப்தம்; வ்யாபகத்வேந நிரதிஶய ஸூக்ஷ்மத்வா தா3த்மநோ விநாஶாநர்ஹஸ்ய தத்3வ்யதிரிக்தோ ந கஶ்சித் பதா3ர்த்தோ2 விநாஶம் கர்த்துமர்ஹதி; தத்3வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூ2லத்வாத்; நாஶகம் ஹி ஶஸ்த்ர ஜலாக்3நிவாய்வாதி3கம் நாஶ்யம் வ்யாப்ய ஶிதி2லீகரோதி; முத்3க3ராத3யோ(அ)பி ஹி வேக3வத் ஸம்யோகே3ந வாயுமுத்பாத்3ய தத்3த்3வாரேண நாஶயந்தி; அத: ஆத்மதத்வம் அவிநாஶி’’- ஆத்மாவானது ப்ராப்யமாகையாலும், அதன் நித்தியத் தன்மையை அறிவதே சோகம் நீங்குவதற்கு முக்கிய காரண மாகையாலும், ப்ரதிஜ்ஞை செய்த கிரமத்திலே விவரிக்காமல் முதலில் ஆத்ம நித்யத்வத்தை நிரூபித்தருளுகிறான் கண்ணன்.

மேலும், தேஹம் அநித்தியமானது என்பது அர்ஜுனனையுள்ளிட்ட அனைவரும் நன்கு அறிந்ததாகும். ஆத்மாவின் நித்தியத்தன்மையை அறிவாளிகளைக்கூட ஐயமுறவைப்பது. ஆகையால் அதை முந்துற விளக்குகிறான். (அவிநாசி து தத்3 வித்3தி4) அவ்வாத்மதத்வத்தை அழிவற்றதாக அறிவாயாக. ‘து’ என்ற சொல்லாலே அழிவுள்ளதான தேஹத்தைக்காட்டிலும் ஆத்மாவுக்குள்ள வேறுபாடு உணர்த்தப்படுகிறது. (தத்) ஜீவாத்ம ஸமூஹம் முழுவதையும் குறிக்கிறது. (அவிநாசி) ‘‘ந விநஷ்டும் சீலம் அஸ்யேத்யவிநாசி’’ என்று வ்யுத்பத்தி. அழியாமையையே இயற்கையாகக்கொண்டது ஆத்மா என்றபடி.

ஆத்மா அழியாததென்பதை எப்படியறிவது? எனில்: (யேந ஸர்வமித3ம் ததம்) ஆத்மதத்துவத்தினால் அதைக் காட்டிலும் வேறுபட்ட அசேதன தத்துவம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளமையாலே என்கை. (ஸர்வம் இத3ம்) ‘இவையெல்லாம்’ என்று கையாலே காட்டுகையாலே தமக்குத்தாமே பிரகாசிக்காமல், பிறர்க்கே ஒளிவிடும் ப்ராக் திர வியங்களான அசேதன தத்துவங்கள் காட்டப்படுகின்றன. அதற்குப் பிரதிகோடியாக (யேந) என்று எடுக்கப்படுவது தனக்குத்தானே பிரகாசிக்கும் ப்ரத்யக் த்ரவ்யமான சேதநஸமூஹமேயாக முடியும். (ததம்) ஆத்ம ஸமூஹமானது எள்ளில் எண்ணெய்போலவும், கட்டையில் நெருப்பைப் போலவும், கறந்தபாலில் நெய்யைப் போலவும். அசேதந ஸமூஹம் முழுவதையும் வியாபித்திருக்கிறது என்று கருத்து. ஆத்மா அணுவாயினும், அநந்தமான ஆத்மாக்களின் கூட்டம் முழுவதும் சேர்ந்து அநந்தமான அசேதன ஸமூஹத்தை வியாபிக்கக் குறையில்லையன்றோ. அன்றிக்கே, ஒவ்வோ ராத்மாவும் அசேதநஸமூஹம் முழுவதையும் தேசகால பேதத்தாலே வியாபிக்கத் தகுதியுள்ளது என்னும் கருத்திலே சொல்லுகிறதாகவுமாம்.

ஆத்மதத்துவமானது வியாபகமாகவும், அசேதந தத்துவமானது அதனால் வியாபிக்கப்படுவதாக வுமிருப்ப தாலே ஆத்மா எப்படி நித்தியமாகிவிடமுடியும்? என்னும் கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது உத்தரார்த்த4ம் (அவ்யயஸ்ய அஸ்ய) அசேதனப் பொருள்கள் அனைத்தை யும் வியாபித்திருப்பதாகக் கூறியதிலிருந்து அவற்றைக் காட்டிலும் ஆத்மதத்துவம் மிகவும் ஸூக்ஷ்மமானது என்று ஏற்படு கிறபடியால் ஸ்தூலமான அவற்றாலே அழிக்கத்தகாத இவ்வாத்மதத்துவத்திற்கு. (கச்சித்) அவ்வாத்மதத்துவத்தைக் காட்டிலும் வேறுபட்டதாய், அதனால் வியாபிக்கப்படுவதாய், அதைக் காட்டிலும் ஸ்தூலமாயிருப்பதான அசேதனப்பொருள் எதுவும். (விநாசம் ந கர்த்தும் அர்ஹதி) அழிவைச்செய்ய வல்லமையுடையதன்று.

ஆத்மதத்துவம் ஸூக்ஷ்மமான தாகையாலும். அசேதன தத்துவம் ஸ்தூலமாகையாலும், உலகில் ஸூக்ஷ்மவஸ்துவே ஸ்தூல வஸ்துவின் உட்புகுந்து அதை அழிப்பதைக் காண்கையாலும், அசேதனப்பொருள் எதுவும் ஆத்மாவை அழிக்க சக்தியுடையதல்ல என்று கருத்து. ஸூக்ஷ்மவஸ்துவே ஸ்தூலவஸ்துவை அழிக்கும் என்பதை எங்கே காண்கிறோம்? எனில்; ஆயுதங்கள், நீர், நெருப்பு, வாயு முதலானவை தம்மைக்காட்டிலும் ஸ்தூலமான பொருள்களை உட்புகுந்து வியாபித்து அவற்றை உருக்குலையச்செய்து அழிப்பதைக் காண்கிறோமன்றோ.

இப்படி ஜீவன் வ்யாபித்திருப்பதால், அவன் நித்யமானவன் என்பது தேறுகிறது. இந்த அர்த்தத்தைக் காட்டும் இப்பாசுரவரி, ‘‘இடந்திகழ் பொருள் தொறும்’ (1-1-10) என்பது. மூன்றாம் அதிகரணத்தின் (ஆத்மாதி4 கரணம் 2-3-3) ஸாரமாக அமைந்துள்ளது.

நான்காம் அதிகரணம் (ஜ்ஞாதிகரணம் 2-3-4), ஜீவனின் ஞானத்தைப் பேசுகிறது. இதன் பொருளும், ‘‘திகழ் பொருள் தொறும்’’ (1-1-10) என்பதால் விவரிக்கப்படுகிறது. ஏனெனில், ‘‘திகழ் பொருள்’’ என்பதற்கு ‘ஜ்ஞாநத்வாஶ்ரய மானவஸ்து’ என்பது பொருளாகும். அதாவது ஞானத்திற்கு இருப்பிடமாக இருப்பவன் என்கிறபடி.

‘‘ஜ்ஞாதா’’ என்றால், ‘அறிபவன்’ என்று பொருள்படும். அறிபவன் என்னலாம். ஆழ்வார் இவ்வாறு அருளிச் செய்யாது, ‘‘திகழ்பொருள்’’ என்று அறிபவனுடைய அறிவு மட்டுமே தோன்றும்படி அருளிச் செய்வதற்குக் காரணம் என்னவென்றால், - ‘‘ஜ்ஞாதா’’ என்றால் அறிவதை பண்பாக உடையவன் என்பது மட்டுமே தோன்றும். அவன் அறிவே வடிவானவன் என்பது தோன்றாது. எனவே, இந்த இரண்டும் தோன்றுவதற்காக ஆழ்வார் இவ்வாறு அருளிச் செய்தார் என்பதே ஏற்புடைய பொருளாகும்.

‘‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’’ (தை.ஆந. 1-1) - ‘ஸத்யமும் ஜ்ஞானமும் முடிவற்றதுமான ப்ரஹ்மம்’ என்னும் ச்ருதி வாக்யத்தின் வ்யாக்யானத்தில், ச்ருதப்ரகாசிகை யில் இவ்வாறு அறிவிக்கப்படுகிறது

ஐந்தாம் அதிகரணம் (கர்த்ரதி4கரணம் 2-3-5) ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்பதைக் கூறுகிறது. ‘‘ஜ்ஞாதா என்றபோதே கர்த்தா, போ4க்தா என்னுமிடம் தன்னடைவே தேறுகிறது’’ என்று அருளிச்செய்கிறார், நம்பிள்ளை. இதன்படி ஜ்ஞானமே வடிவான ஜீவனுக்கு, கர்த்ருத்வமும் உண்டு என்பது தேறும். இந்த அர்த்தத்தையும் காட்டித்தருகிறது ‘‘திகழ்பொருள் தொறும்’’(திருவாய். 1-1-10) என்னும் சொற்றொடர்.

ஆறாம் அதிகரணம் (பராயத்தாதி4கரணம்- 2-3-6), ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவால் அளிக்கப்பட்டதை நிலை நிறுத்துகிறது. இத்துடன் கருத்தொற்றுமை கொண்ட வரி: ‘‘திகழ்பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன்’’ (திருவாய் 1-1-10) என்பதாகும். ஜீவனுக்கு கர்த்ருத்வம் ஏற்படுவது, அவனுக்குள் பரமாத்மா ஊடுருவி உள்ளுறை வதாலாகும். இதைக் காட்டித்தருவது,

பராத்து தச்ச்2ருதே: - 2-3-40, என்னும் ஸூத்ரத்திலுள்ள, ‘‘அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா’’ (தை. ஆர. 3-11-3) - ‘ஸர்வாந்தர்யாமியான பகவான் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான்’.

‘‘யஆத்மநி திஷ்ட2ந் ஆத்மநோ(அ)ந்தரோ யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ரீரம் ய ஆத்மாந மந்தரோ யமயதி ஸ த ஆத்மா(அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. மாத்யந்தின. 15-7-26) - ‘எவனொருவன் ஜீவாத்மாவின் வெளிப்புறம் நிற்கிறானோ, ஜீவனின் உட்புறமும் இருக்கிறானோ, எவனை ஜீவன் அறிவ தில்லையோ எவனுக்கு ஜீவன் சரீரமோ, எவன் ஜீவனை உள்நுழைந்து நியமிக்கிறானோ மரணமற்ற அவ்வந்தர்யாமியே உனக்கு ஆத்மா வாகிறான்’. போன்ற ச்ருதி வாக்கியங்களாகும்.

ஏழாம் அதிகரணம் ( அம்ஶாதிகரணம் 2-3-7), ஜீவன், ப்ரஹ்மத்தின் பகுதியுமல்ல, மாயைக்குட்பட்ட ப்ரஹ்மமுமல்ல; அவன் ப்ரஹ்மத்தின் ஓர் அம்சம் என்று காட்டித்தருகிறது. இந்த சரீராத்ம பாவத்தை, ‘‘இடந்திகழ் பொருள்தொறும் கரந்தெங்கும் பரந்துளன்’’ (திருவாய். 1-1-10) என்று, வ்யாபகம் வ்யாபிக்கும் பொருள், ஆகிய இரண்டையும் காட்டித்தரும் இந்த பாசுரவரி வெளிபடுத்துகிறது.

இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதம் (ப்ராணபாதம்), இரண்டு (ஸப்தக3த்யதி4கரணம் - 2-4-2), மூன்று (ப்ராணாணுத்வாதி4கரணம் - 2-4-3), நான்கு (வாயுக்ரியாதி4கரணம் - 2-4-4) , ஐந்து (ஶ்ரேஷ்டா2 ணுத் வாதி4கரணம்- 2-4-5), ஆறு (ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2 நாதி4கரணம் 2-4-6 ) மற்றும் ஏழாம் (இந்த்3ரியாதி4கரணம் 2-4-7) அதிகரணங்களில், இந்திரியங்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. முதல் அதி கரணத்தில் (ப்ராணோத்பத்த்யதி4கரணம் 2-4-1) இந்திரியங்களின் நிலையானதன்மை மறுக்கப் பட்டு, இதைக் கூறும் ச்ருதி வாக்யங்கள், பரமாத்மா ப்ரளய காலத்தில் உள்ள நிலையை விவரிக்கின்றன என்பது விளக்கப்பட்டது. இந்த பொருளே, ‘‘இவையுண்ட கரனே’’ (திருவாய். 1-1-10) என்னும் பாசுர வரியில் காட்டப்படுகிறது.

எட்டாம் அதிகரணத்தில் (ஸம்ஜ்ஞாமூர்த்திக்லுப்த் யதி4கரணம் 2-4-8 ), அண்டத்தைத் தோற்றுவிப்பது சதுர்முக ப்ரஹ்மன் அல்லன். கர்த்தவான பரமாத்மா என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த பொருளை,

கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே.

இந்த பாசுரத்தில் ‘அநுப்ரவேசம்’ மற்றும் ‘ஸாமாநாதி கரண நிர்ணயத்தால் சரீர சரீரி பாவம்’ தோன்றுமே தவிர, ‘கார்ய காரண பாவம்’ தோன்றாதே எனப்படலாம். இதனால், மேற்கூறிய அதிகரணங்களின் பொருளை இப்பாசுரம் கொண்டிருப்பது எப்படி என்று ஐயப்படலாம். இந்த ஐயப்பாடு நீக்கப்படுகிறது.

‘‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகர வாணி’’ (சாந். 6-3-2) - ‘உட்புகுந்த பிறகு, உயிருள்ள இந்த ஒன்றால், நான், பெயர் மற்றும் வடிவத்தை வகைப்படுத்தக் கடவேன்.

‘‘தத் ஸ்ருஷ்ட்வா I ததே3வாநுப்ராவித் I தத3நுப்ரவிஶ்ய I ஸச்ச த்யச்சாப4வத் II’’ (தை.ஆந. 6-2,3) - [(பரம்பொருளானது) உலகை ஸ்ருஷ்டித்து, அதையே உள் நுழைந்து வியாபித்தது; அதை வியாபித்த பின் விகார மற்றதான சித்தாகவும், விகாரமுடைய அசித்தாகவு மாயிற்று]. போன்ற ச்ருதி வாக்கியங்கள் அநுப்ரவேசத்தால் ஸ்ருஷ்டி ஏற்படுவதைக் காட்டித் தருகின்றன. ஸ்ருஷ்டியைக் கூறுமிடங்களில் அநுப்ர வேசமும், அநுப்ரவேசத்தைக் கூறுமிடங்களில் ஸ்ருஷ்டியும் அறியப்படும் என்பது ஸ்ரீபாஷ்யத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, அநுப்ரவேசத்தால் ஸ்ருஷ்டி ஏற்படுகிறது என்பது இப்பாசுரங்களில் (திருவாய். 1-1-10, 1-1-11) சுருக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம்.

அநுப்ரவேசத்தால் சரீர சரீரி பாவம் ஏற்படுகிறது. அநுப்ரவேசத்தால் ஸ்ருஷ்டி என்பதால் காரண கார்ய பாவமும் தோன்றுகிறது

இவ்வாறு திருவாய்மொழி 1-1-10 மற்றும் 1-1-11 ஆகிய பாசுரங்கள், இரண்டாம் அத்யாயம், மூன்று, மற்றும் நான்காம் பாதங்களுடன் கருத்தொற்றுமை கொண்டவை என்பது அறியப்படுகிறது.

எனவே, ப்ரஹ்மத்திற்கு காரணத்வத்தைச் சொல்லும் ஸ்ரீபாஷ்யத்தின் இரு அத்யாயங்களின் பொருளை, ஆழ்வார் முதற்பத்து, முதற்திருவாய்மொழி, பதினொன்று பாசுரங்களின் வாயிலாக வெளியிட்டருளினார். *

திருவாய்மொழி- முதல் பத்து இரண்டாம் பதிகம் (1-2)

6.0. ‘‘வீடுமின் முற்றவும்’’ மற்றும் சாரீரக மீமாம்ஸை மூன்று மற்றும் நான்காம் அத்யாயங் களுக்கிடையிலான கருத்தொற்றுமை (ஐககண்ட்யம்).

மூன்றாம் அத்யாயம் (ஸாத4நாத்4யாயம்), ப்ரஹ்மத்தை அடைவதாகிய பலனைப் பெறுவதற்குரிய சாதனைகளைக் கூறுகிறது. எனவே இது ‘ஸாதனாத்யாயம்’ எனப்படுகிறது. இந்த இரண்டாம் திருவாய்மொழியும் இதையே உபதேசம் செய்வதால், இரண்டிற்கும் கருத்தொற்றுமை உண்டு.

6.1. நம்பிள்ளை, இத்திருவாய்மொழியின் உபாஸனத் தைக் (நெறி) கூறும் மூன்றாம் அத்யாயத்தின் பொருள் என்று அருளிச் செய்தாரே தவிர, மூன்று மற்றும் நான்காம் அத்யாயங்கள் காட்டித்தரும் உபாய மற்றும் உபேயத்தை (நெறி மற்றும் பலன்) கூறுவதாக அருளிச் செய்யவில்லை. இதற்குக் காரணம் ‘உபாஸனை’ என்பது பலத்தையும் காட்டித்தரும் பொருளைக் கொண்டது என்று நம்பிள்ளை அருளிச் செய்தார். உபாஸனை என்பது, ஞானத்திற்கு இணையானது. ப்ரஹ்மத்தை அடைகிற வடிவிலான பலமும் ஞானத்தால் ஏற்படுவது, எனவே இரண்டையும் இங்கே ஒருங்கே அருளிச்செய்தார் நம்பிள்ளை.

6.2. இதே கருத்தை வேதாந்த தேசிகரும் தம்முடைய ரஹஸ்யத்ரயஸாரத்தில் (9. உபாயவிபாகாதிகாரம்) அருளிச் செய்கிறார். ‘‘இவர்களுக்கு கர்தவ்யமான (செய்யவேண்டிய) உபாயமாவது ஒரு ஜ்ஞானவிகாஸவிசேஷம் (ஜ்ஞானத்தின் ஒரு வகை மலர்ச்சி). இத்தாலே ஸாத்யமாய் ப்ராப்திரூபமான உபேயமாவது-ஒரு ஜ்ஞானவிகாஸ விசேஷம் (ஜ்ஞானத்தின் ஒரு வகை மலர்ச்சி). இவற்றில் உபாயமாகிற ஜ்ஞானவிகாஸ விசேஷம் கரண ஸாபேக்ஷமாய் (இந்த்ரியங்களை எதிர்பார்ப்பதாய்) சாஸ்த்ர விஹிதமுமாய் (சாஸ்த்திரத்தில் விதிக்கப்பட்டதாய்), ஸத்யத்வாதிகளான ஸ்வரூபநிரூப தர்மங்களோடே கூடின அவ்வோவித்யாவிசேஷ- ப்ரதிநியத- குணாதிகளினாலே (அந்த அந்த ப்ரஹ்மவித்யைக்கே உரிய குணம் முதலியவைகளால்) நியதப்ரஹ்ம- விஷயமுமா யிருக்கும் (அந்த அந்த குணங்களோடு கூடியதும் இதர வித்யைகளில் சொல்லப்பட்ட குணங்களில்லாததுமான ப்ரஹ்மத்தைப் பற்றியது). உபேயமாகிற ஜ்ஞானவிகாஸ விசேஷம் கரண நிரபேக்ஷமுமாய் (இயல்பாகவே ஏற்பட்டதாயும்), குணவிபூத்யாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ணப்ரஹ்ம விஷயமுமாயிருக்கும்.’’

6.3. முதல் பத்து, இரண்டாம் திருவாய்மொழி, முதல் பாசுரம் ‘‘வீடு செய்மினே’’ (1-2-1) என்பதில் தொடங்கி, ‘‘திண்கழல்சேரே’’(1-2-10) என்பது வரையிலும், ஆழ்வார், பாசுரங்கள் தோறும் முக்திக்கான வழியை அந்த வாக்கியங் களின் முக்கியப் பொருளாகவும், அததற்குரிய பலன் களுக்கான பொருளை முக்கியமற்றதாகவும் அருளிச் செய்துள்ளார்.

6.4. ‘‘ஸ்வர்க்க3 காமோ யஜதே’’ - என்னுமிடத்தில் ஸ்வர்க்கத்தை அடைவதற்கான ஸாதனம், வாக்கியத்தின் பொருளாக, முக்கியமானதாகவும், ஸ்வர்க்கத்தை அடைவதான பலன் பதார்த்தமாக (சொல்லிற்கான பொருளை) முக்கிய மற்றதாகவும் அறிவிக்கப்படுவதால் இந்த வாக்யம் ‘‘ஜ்யோதிஷ்டோமரூப ஸாதனத்தை’ காட்டுகிறதென்பது பூர்வர்கள் கூறிய முறையிலேயே நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார். ஆகையால் பலத்தைத் தருவதைக் குறித்து ஆழ்வார் அருளிச் செய்ததையே நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்.

எனவே, வீடுமின் முற்றவும்* வீடுசெய்து * உம்முயிர்
வீடுடையானிடை *
வீடுசெய்ம்மினே. (திருவாய். 1-2-1)

என்கிற திருவாய் மொழி, உபாய உபேயங்களைக் கூறும் இந்த சாரீரகமீமாம்ஸை. பொருளோடு கருத்தொற்றுமை கொண்டது என்பது ஏற்புடையது.

6.5. இத்திருவாய்மொழியில், முதல் பாசுரம் ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2-1) என்பது மூன்றாம் அத்யாயத்தின் (ஸாதனாத்யாயம்), முதல் பாதத்தின் (வைராக்3யபாதம்), பொருளை உணர்த்துவதாகவும், இரண்டாம் பாட்டு, ‘‘மின்னின் நிலையில’’ (1-2-2) மற்றும் மூன்றாம் பாசுரம் ‘‘நீர் நுமது’’ (1-2-3), இரண்டாவது பாதத்தின் (உப4யலிங்க3 பாதம்) பொருளுக்கு இணையானதாகவும், நான்காம் பாசுரம் தொடங்கி, மேலே நான்கு பாசுரங்கள், ‘‘இல்லதும் உள்ளதும்’’ (1-2-4), ‘‘அற்றது பற்றெனில்’’ (1-2-5) ‘‘பற்றிலன் ஈசனும்’’ (1-2-6) மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7), மூன்றாம் பாதமான, கு3ணோபஸம்ஹார பாதத்தின் பொருளாகவும், எட்டாம் பாசுரம், ‘‘உள்ளம் உரை செயல்’’ (1-2-8) என்பது, நான்காம் பாதமாகிய ‘‘அங்கபாத’ அர்த்தமாகவும் உள்ளது. இவ்வாறாக, முதல் எட்டு பாசுரங்கள் சாரீரகமீமாம்ஸா பாஷ்யத்தின் மூன்றாம் அத்யாயத்தில் கூறப்பட்டவையோடு கருத்தொற்றுமை கொண்டவை.

6.6. ஒன்பதாம் பாசுரம் ‘‘ஒடுங்க அவன்கண்’’ (1-2-9) மற்றும் பத்தாம் பாசுரம் ‘‘எண்பெருக்கு’’ (1-2-10) ஆகியவை, நான்காம் அத்யாயம் நான்காம் பாதங்களின் பொருளை உள்ளடக்கியவை.

6.7. ‘‘நிகமநப்பாட்டு’’ எனப்படும், பலனைக் கூறும் 11ஆவது பாசுரம் ‘‘சேர்த்தட’’ (1-2-11) என்பது, இத்திருவாய் மொழியின் ஸாரமான பரமாத்மாவின் ஸௌலப்யம் போன்ற குணங்களை சுருக்கமாகக் காட்டித்தருவதாக உள்ளது.

6.8. சாரீரகத்தில், மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதம் ‘‘வைராக்ய பாதம்’’ எனப்படுகிறது. இதன் முதல் அதிகரணம்(தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்- 3-1-1) கர்மபலனை அநுபவிக்க வேண்டிய ஜீவனானவன், ஓர் உடலைத் துறந்து மற்றொரு உடலை அடைகையில், பூத ஸூக்ஷ்ம சரீரத்தோடு (நுண்ணிய உடலோடு) செல்கிறான் என்பது பஞ்சாக்நிவித்யையின் சான்றாதாரத்தோடு நிரூபிக்கப் படுகிறது. மேலும்,

‘பா4க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா2 ஹி த3ர்ஶயதி’ - (3-1-7) ‘‘தேவர்கள் ஸோமராஜாவை உண்கி றார்கள் என்று கூறியது அமுக்யமே; பரமாத்மாவைப் பற்றிய உண்மையறிவு அற்றவனாகையால் (தேவர்களுக்கு உபகரணமாகிற அந்நமாகிறான் என்றது.) வேதவாக்யமும் அப்படியே ஓதுகிறது’’ என்கிற ஸூத்ரத்திலே தேவலோகம், பித்ருலோகம் ஆகியவற்றை விளக்கி, ஸ்வர்க்கலோக அநுபவம், நிலையற்றது என்பதும் காட்டித்தரப்படுகிறது.

இரண்டாம் அதிகரணத்தில் ( க்ருதாத்யயாதி4 கரணம்- 3-1-2), ஜீவனானவன் மீண்டும் இப்பூவுலகில் பிறக்கையில், மீதமிருக்கும் கர்மத்தோடு இறங்குகிறானா, எவ்வித கர்மமும் மீதமில்லாமல் இறங்குகிறானா என்பது விசாரிக்கப்படுகிறது. ‘‘ரமணீய சரணர்கள்’’ எனப்படும் நற்கர்மம் செய்தவர்கள், ‘‘ரமணீயயோநி’’ எனப்படும் நற்குடியில் பிறக்கிறார்கள். ‘‘கபூயசரணர்கள்’’ எனப்படும் தீய கர்மத்தை செய்தவர்கள் ‘‘குத்ஸித யோநி’ எனப்படும் தாழ்ந்த குடியில் பிறக்கிறார்கள், என்று ச்ருதி கூறுவதால், ஜீவனானவன், மீதமுள்ள கர்மத்தோடு இறங்குகிறான் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஸூக்ஷ்ம தேஹத்திற்குக் காரணமாக இருக்கும் இந்த கர்மம், முக்தியடையும் வரையிலும் தொடர்கிறது’’ என்று விவரிக்கப்பட்டது, இந்த ஸம்சார மண்டலத்தின் தாழ்ச்சியைக் காட்டித்தருவதாக உள்ளது.

மூன்றாம் அதிகரணத்தில் (அநிஷ்டாதி3கார்யதி4 கரணம்- 3-1-3), பாவகர்மங்களைச் செய்தவர்கள் சந்திரலோகத்திற்குச் செல்கிறார்களா என்னும் கேள்வி எழ, இவர்களுக்கு ‘‘பித்ருயாணம்’’ என்னும் மார்க்கத்தில் பயணம் சொல்லப்படாததால், இவர்கள் சந்திரலோகம் செல்வதில்லை என்று நிர்ணயிக்கப்பட்டது. பாவ கர்மங்கள் செய்தவர் களுக்கு, யமலோகத்தில் யாதநா சரீரத்துடன் ரௌரவம் போன்ற நரகங்களின் அநுபவமும், புழு போன்ற பிறவிகள் கிடைக்கும் என்பதும் விளக்கப்பட்டு, ஸம்சாரத்தின் தாழ்ச்சி காட்டித் தரப்படுகிறது.

நான்காம் அதிகரணத்தில் (தத்ஸ்வாபா4வ்யாபத்த் யதி4கரணம்- 3-1-4), ஜீவனானவன், ஆகாசத்தின் வழியாக கீழ் இறங்குகையில், அவன், ஆகாசத்தின் தன்மையை அடைவதில்லை. தேவர், மனிதர் போன்ற உடல்களில் கிடைக்கும் ஸுக, துக்க அநுபவத்தைப் பெறுவதில்லை; ஆகாசத்திற்கு ஒத்த நிலையை அடைகிறானே தவிர, அதை உடலாகப் பெறுவதில்லை என்பது காட்டப்படுகிறது. ஸ்வர்க்கம் போன்ற லோகங்களை அடைபவர்கள் கூட, ஆகாசத்தை உடலாகப் பெறுவதில்லை. அத்துடன் நெருக்கம் மட்டுமே உள்ளது எனப்பட்டது.

ஐந்தாவது அதிகரணத்தில் (நாதிசிராதி4கரணம் 3-1-5), ஆகாசம், புகை, மேகம், மழை ஆகியவற்றில் பயணம் மேற்கொள்கையில், ஜீவனின் நிலை என்ன என்பது விசாரிக்கப்படுகிறது.

‘‘அதோ வை க2லு து3ர்நிஷ்ப்ரபதரம்’’ (சாந். 5-10-6) - (இதிலிருந்தே யன்றோ மிகவும் துன்பப்பட்டு (நீண்டகாலம் கழித்து) ஜீவன் வெளியேறுகிறான்.).

‘து3ர்நிஷ்ப்ரபதரம்’ - என்னும் சொல்லில் ‘த’ என்பது ‘ஒலிப்பில் உயிரொலியாக வேதத்தால் கொள்ளப்படுகிறது. ‘து3ர்நிஷ்ப்ரப (த) தரம்’ - ‘மேலும் அதிக சிரமத்தோடு வெளிவருவது - இதுவே பொருள்.

[Explanatory Note: 'Dusniprapatara' is explained as an irregular comparative form of the adjective, 'dusniprapata' (‘து3ர்நிஷ்ப்ரபதரம்’ ). The regular form is by the addition of the suffix, 'tarap', which would make it 'dusniprapatatara' (‘து3ர்நிஷ்ப்ரப (த) தரம்’ ). A syllable, 'ta' (‘த’) has been omitted. See the Bava Prakasika for a discussion on the grammar involved here.].

என்பதால், ஜீவன் இந்த இடங்களில் சிறிது காலமே வசிக்கிறான் என்பது நிர்ணயிக்கபப்ட்டது.

ஆறாவது அதிகரணத்தில் (அந்யாதி4ஷ்டி2தா தி4கரணம்- 3-1-6), ஸ்வர்க்கலோகம் சென்று மீண்டும் பூலோகம் திரும்பும் ஜீவாத்மா, நெல் போன்றவற்றில் புகுகிறான் என்பது ஆராயப்படுகிறது. இவன் நெல்லாகவே பிறக்கிறானா அல்லது நெல்லோடு சகவாசம் பண்ணுகிற வனாக பிறக்கிறானா என்னும் ஐயப்பாடு தோன்ற, நெல் போன்றவையாகவே பிறப்பது, ச்ருதி வாக்யங்களில் காணப்படாததால், அது ஒதுக்கப்பட்டு, நெல் போன்ற தான்யங்களிலும் நெருக்கம் கொண்டவனாகத் தோன்றி, ஓர் மனிதனால், உட்கொள்ளப்பட்டு, அவன் வீரியத்தின் வழியாக பெண்ணின் கர்பத்தை அடைந்து, அடுத்த உடலைப் பெறுகிறான் என்பது காட்டப்பட்டது.

சாரீரகத்தில் மூன்றாம் அத்யாயத்தில் முதல் பாதம் ஆறு அதிகரணங்களில் காட்டப்பட்ட பொருள், ஆழ்வார் அருளிச் செய்த ‘‘வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே’’ என்னும் பாசுரத்தில் காட்டப்பட்டது. ‘உலகியல் விஷயங்களில் பற்றை விடுங்கள்; அது தாழ்ச்சி நிறைந்தது; அதை விட்டு, பரமபத நிலையனான ஸர்வேச்வரனிடம் ஆத்மாவை ஸமர்ப்பியுங்கள்’ என்று அறிவு குறைந்தவர்களும் புரிந்து கொள்ளும்படி, சுருக்கமாக அருளிச் செய்தாராயிற்று.

ஸூத்ரகாரர் மிகவும் விரிவாகச் சொன்ன விஷயத்தை, ஆழ்வார் இவ்வளவு சுருக்கமாக சொல்வதற்குக் காரணம் என்ன என்று ஆராயப்படுகிறது. ஆழ்வார், ‘‘ஏ பாவம் பரமே!’’ (திருவாய்.2-2-2) என்கிறபடி எப்பொழுதுமே பகவத் அநுபவம் செய்யும் இவருக்கு ஸம்சாரத்தின் தாழ்ச்சியை விரிவாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ‘‘நல்குரவும் செல்வும்’’ (திருவாய். 6-3-1) என்னும் பாசுரத்தில் காட்டித் தரப்பட்டபடி எல்லா பொருள்களும் ப்ரஹ்மத்தை ஆத்மா வாகக் கொண்டு அநுபவிக்கத்தக்கதாக இருந்த பொழுதும், ஸம்சாரிகள் பக்கல் உள்ள கருணையாலே, அவர்கள் நன்மைக்காக, தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையால் ‘‘முற்றவும் வீடுமின்’’(1-2-1) என்று தமது கருணையால் இப்படி சுருக்கமாக வெளியிட்டருளினார் என்கிறபடி.

இப்பாதம் வைராக்யத்தை விதிக்கிறது. ஆழ்வார், அதை அருளிச் செய்யாமல், உபாயத்தை ஏன் அருளிச் செய்கிறார் என்றால், வைராக்யத்திற்கு உபாயம் அங்கம். பக்தியை உபாயமாகக் கொள்கையில், விஷயங்களில் வைராக்யம் தேவை. ப்ரபத்தியை உபாயமாகக் கொள்கையில், உபாயங்களை விடுதலாகிய வைராக்யம் தேவை. இந்த, ‘‘அங்காங்கி’’ பாவத்தையே ‘‘வீடு செய்து’’ (திருவாய். 1-2-1)என்று அருளிச் செய்கிறார், ஆழ்வார். எனவே, இந்தப் பாசுரத்திற்கும், மூன்றாம் அத்யாயம் முதல் பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது.

இரண்டாம் பாதம் (உபயலிங்கபாதம்) முதல் அதிகரணத்தில் (ஸந்த்4யாதி4கரணம்- 3-2-1), ஜீவனுக்கு கனவுகள் என்பவை ஜீவனால் ஏற்படுத்தப்படுகிறதா அல்லது பரமாத்மாவினாலா என்பது ஆராயப்படுகிறது. ஸம்சாரத்தில் கட்டுண்ட ஜீவனுக்கு, அவன் கர்மவசப்பட்டிருப்பதால், கனவுகளை படைக்கும் ஸங்கல்பம் இருக்கமுடியாத தாகையாலே, இது ஜீவனின் காரியமல்ல, பரமாத்மாவின் செயலே என்பது உறுதி படுத்தப்படுகிறது.

இரண்டாம் அதிகரணத்தில் ( தத3பா4வாதி4கரணம்- 3-2-2), கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் (ஸுஷுப்தி) ஓய்வு எடுக்கும் இடம் எது? ஹித நாடி என்னும் இடத்திலா, புரிதத்நாடியிலா அல்லது இதயத்தில் வசிக்கும் ப்ரஹ்மத்திடமா என்பது ஆராயப்பட்டு, இவை மூன்றும் இணைந்த இடமே, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமிடம் என்று நிச்சயிக்கப் பட்டது. (வீடு, கட்டில், மெத்தை - ஆகிய மூன்றுமே ஒருவர் உறங்கும் இடத்தைக் குறிக்கும், இதைப் போன்றதே ஜீவனின் உறங்கும் இடமும்).

மூன்றாம் அதிகரணத்தில் (கர்மாநுஸ்ம்ருதி ஶப்3த3 வித்4யதி4கரணம்- 3-2-3), உறக்கம் கலைந்து எழுபவன் அதே ஜீவனா, வேறு ஒருவனா என்னும் ஐயப்பாடு விலக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்திற்கு முன்பு தொடங்கிய கர்மம், விழித்தெழுந்த பிறகு அநுபவிக்கப்படுவதால், உறங்கிய அதே ஜீவன்தான் விழித்தெழுகிறான் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.

நான்காம் அதிகரணத்தில் (முக்3தா4தி4கரணம்- 3-2-4), மனிதன் மயக்கமடைவது மரணமா? இல்லையா? என்பது ஆராயப்படுகிறது. ப்ராணன் போன்றவை காணப்படுவதால், அது மரணமல்ல. உடல் பாகங்களில் மாறுபாடு காணப்படுவதால், அது உறக்கமும் அல்ல, மயக்கம் என்பது, ‘‘பாதி மரணம்’’, ‘‘அர்த்த-சம்பத்தி’’ என்று முடிவு கட்டப்பட்டது.

ஐந்தாவது அதிகரணத்தில் (உப4யலிங்கா3தி4 கரணம்- 3-2-5) ஜீவனானவன் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளில் இருக்கையில், பரமாத்மாவும் உடனிருப்பதால், பரமாத்மாவிற்கு இதனாலான தோஷங்கள் ஏற்படுமா? என்னும் கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்றிருப்பது, எல்லையற்ற கல்யாண குணங்களின் சுரங்கமாக இருப்பது ஆகிய இரு பண்புகளால் சிறப்பிக்கப்பட்ட பரமாத்மாவை, இந்த தோஷங்கள் தீண்டாது என்று உறுதிபடுத்தப்படுகிறது.

ஆறாம் அதிகரணத்தில் (அஹிகுண்ட3லாதி4கரணம் 3-2-6 ), அசித் வடிவான அண்டத்தின் நிலை என்ன என்பது ஆராயப்படுகிறது. ‘‘அம்ஶோ நாநாவ்யபதே3ஶாத்’’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2-3-42) - (ஜீவன் ப்ரஹ்மத்தின்) அம்ஶமாயிருப்பவனே; (சில ஶ்ருதிகளில் ஜீவன் ப்ரஹ்மத்தைக் காட்டிலும்) வேறுபட்டவன் என்று உபதேஶிக்கையாலும்.’’ என்கிற நியாயத்தாலே, உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவே (சரீர-சரீரி பாவம்) இங்கேயும் உள்ளது. அசித் வஸ்துவும் ப்ரஹ்மத்தின் உடலேயாகும். ஜீவனும் ப்ரஹ்மமும் முறையே அம்ஶமாகவும், அம்ஶியாகவும் இருப்பது போன்றே, அசித்தும் பரஹ்மமும் உள்ளன.

ஏழாவது அதிகரணத்தில் (பராதி4கரணம்- 3-2-7), ப்ரஹ்மம், ‘சேது’ (பாலம்) என்று வழங்கப்படுவதால், இந்த ப்ரஹ்மம் அடைவிக்கும் இன்னமும் உயர்ந்த வஸ்து ஒன்று உள்ளதோ என்னும் ஐயப்பாடு விலக்கப்படுகிறது.

‘‘யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ(அ)ஸ்தி கஶ்சித்’’ (ச்வே.3-9) (எந்தப் பரமாத்மாவைக்காட்டிலும் மேலானது வேறொன்று இல்லையோ, எவனைக்காட்டிலும் அணுவானவனும் பெரியவனும் இல்லையோ) என்கிற ச்ருதி வாக்கியத்தாலும் ப்ரஹ்மம் ‘சேது’ என்று அழைக்கப்படுவது, அவன் ஸம்சாரக் கடலைத் தாண்டுவிக்கும் பாலமாக, முக்தி பெற்றவர்கள் இந்தக் கடலில் மீண்டும் விழாமல் காக்கும் அணையாக இருப்பதால், எனவே, ‘‘ஜகத் காரணனான பரமாத்மாவைக் காட்டிலும் உயர்ந்ததான மற்றொரு பொருள் இல்லை’’ என்பது உறுதிசெய்யப்பட்டது.

இறுதியான எட்டாம் அதிகரணத்தில் (ப2லாதி4 கரணம்- 3-2-8), யாகம், தானம், ஹோமம் போன்ற உபாஸனங்களுக்குப் பலன் தருவது கண்களால் காணப்படாத ‘‘அபூர்வம்’’ என்னும் சக்தியா அல்லது பரமாத்மாவா என்னும் ஐயப்பாடு நீக்கப்பட்டு, எல்லா உபாஸனைகளுக்கும் பலனைத் தருவது பரமாத்மாவே, முக்தியளிப்பதும் அவனே என்று நிர்ணயிக்கப்பட்டது.

6.9. இந்த மூன்றாம் அத்யாயத்தில் முதல் பாதம் (வைராக்யபாதம்) பரமாத்மா தோஷங்களால் தீண்டப் படாமல் இருப்பதையும், இரண்டாம் பாதம் (உபயலிங்கபாதம்) அவனுடைய கல்யாண குணங்களைக் காட்டுவதாகவும் அமைந்திருப்பதை, தேசிகர் தம் அதிகரணஸாராவளியில் காட்டித்தருகிறார்,

‘‘பாதே3 த்வர்த்தா2ஷ் ஷட2ஸ்மிந் வபுரிஹ விஜஹத்3பூ4தஸூக்ஷ்மைஸ்ஸஹேயாத், பு4க்தஸ்வர்க்கா3வரோஹே(அ)ப்யநுஶய ஸஹிதோ மாத்ரயா பி4ந்நமார்க்க3: | சந்த்3ர ப்ராப்த்யாதி3 ந ஸ்யாந்நிரயபத2ஜுஷாமம் ப3ராதெ3ள ஸத்3ருக்த்வம். தஸ்மாச்சீ2க்3ரா வரோஹ: பரவபுஷி சிரம் வ்ரீஹிபூர்வே(அ)பி யோக3: ||’’

(மூன்றாம் அத்யாயம்-முதல்பாதம்-இறுதியில் அமைந்துள்ள 20வது ச்லோகம்-288) - மூன்றாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் (வைராக்யபாதத்தில்), ஆறு அர்த்தங்கள் நிரூபிக்கப்பட்டன. 1. இவ்வுலகில் சரீரத்தை விடும் ஜீவன், பூதஸூக்ஷ்மங்களோடுகூட மேலுலகிற்குச் செல்கிறான். 2. புண்யத்தின் பலனாக, ஸ்வர்க்கத்தை அடைந்தவன், அது கழிந்த பிறகு, மீதி கர்மங்களோடு, மேலேறிய வழியல்லாத வேறொரு வழியில் ஸம்சாரத்தை அடைகிறான். 3.பாபத்தைச் செய்து, நரகபலனை அடைந்தவர்களுக்கு சந்த்ரனை,அடைவது கிடையாது. 4.ஜீவனானவன் ஆகாசத்தின் வழியாகக் கீழே இறங்குகையில் ஆகாசத்தை உடலாகப் பெறுவது கிடையாது. ஆகாசத்துடன் நெருக்கம் மட்டுமே. 5. ஆகாசத்திலிருந்து ஜீவன் விரைவாகவே இறங்குகிறான். 6. நெல் போன்றவற்றில் ஜீவன் புகுந்திருக்கிறானேயன்றி, அதுவாக ஆவதில்லை.

‘‘பாதே3 ஸ்வப்நார்த்த2 ஹேது: தத3யமிஹ ஸுஷப்த்யா த்4ருதிஸ்ஸுப்தகோ3ப்தா, முக்4தே4 போ3தா4தி4 கர்த்தா த்வநக4 ஶுப4கு3ணோ (அ)சித் பி4ரம்ஶீ ஸதே3ஹ: | பாரம்யஸ்யைக ஸீமா ஸகலப2லத3 இத்யுச்யதே ப4க்தி பூ4ம்நே ஸத்யே ஹ்யேவம் கு3ணாதா3வத2 பரப4ஜநே ரூபபே4தா3தி3 சிந்த்யம் ||’’ (மூன்றாம் அத்யாயம்- இரண்டாம் பாதம்-இறுதியில் அமைந்துள்ள 32வது ச்லோகம்- 320).

மூன்றாவது அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில், தூக்க நிலையில் அநுபவிக்கப்படும் விஷயங்களை ஸ்ருஷ்டிப்பவன் பரமாத்மாவே; அவனே அந்த தூக்க நிலையில் ஜீவனுக்கு இருப்பிடமாக இருப்பவன்; தூக்க நிலையில் அவனுக்கு ஓய்வையும், பிறகு விழித்தலையும் கொடுத்து ரக்ஷிப்பவன்; தூக்க நிலையிலிருக்கும்போது விழித்தலையோ, மரணத்தையோ கொடுப்பவன் அவனே; எல்லாக் குற்றங்களுக்கும் எதிர்த்தட்டாயிருப்பவன்; பரதத்வத்தின் எல்லை நிலமாயிருப்பவன்; ஸகல பலங்களையும் கொடுப்பவன் என்றிப்படி உபாஸநத்தின் வளர்ச்சிக்காக பரமாத்மகுணங்கள் சொல்லப்பட்டன. இப்படியே மூன்றாம் பாதத்தில், உண்மையாக இருக்கக்கூடிய பரமாத்மவிக்ரஹகுணங்கள், பரமாத்ம உபாஸநத்திற்காக நினைக்கத்தக்கது.

இவற்றுள், திருவாய்மொழி பாசுரம், ‘‘மின்னின் நிலையில’’ (1-2-2) என்பது, முதல் நான்கு அதிகரணங் களுடனும் (3-2-1, 3-2-2, 3-2-3,3-2-4), திருவாய்மொழி பாசுரம் . ‘‘நீர் நுமது என்றிவை’’(1-2-3) என்பது, அடுத்த நான்கு அதிகரணங்களுடனும் (3-2-5, 3-2-6, 3-2-7, 3-2-8) கருத்தொற்றுமை கொண்டுள்ளது விளக்கப்படுகிறது.

முதல் நான்கு அதிகரணங்களில் உடல் மட்டுமே அநுபவிக்கும் கனவு எனப்படும் நிலையின், தோஷங்கள் விளக்கப்படுகின்றன. ஆழ்வார் ‘சிறிது நேரமே நிகழும் கனவு போன்றதே இந்த உடல்’ என்று அருளிச் செய்கிறார்.

ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தோன்றி மறையும் மின்னலோடு உடம்பின் நிலையாமை ஒப்பிட்டுப் பேசுகிறார். ‘‘மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள் என்னுமிடத்து இறை உன்னுமின்நீரே’’ (திருவாய் 1-2-2) என்று, ‘‘ஆத்மா நிலைத்திருக்கும் இந்த உடல், மின்னல் நிலைபெறும் நேரம் கூட நிலைபெறாதது; இதை நீங்கள் சிந்திக்கவேண்டும்’’ என்று உபதேசிக்கிறார்.

மேலும் கனவுகளைத் தோற்றுவிப்பவன், ஜீவன் அல்ல. ஏனெனில், கர்ம வசப்பட்ட அவனுக்கு, ‘ஸங்கல்பம்’ என்பது இல்லை. கனவுகளை நிர்வஹிப்பவன் பரமாத்மாவே. உடலுடன் கூடியிருக்கும் ஜீவனுக்கு, கனவுகளைப் படைக்கும் திறன் இல்லை என்பதை, ‘‘மன்னுயிராக்கைகள்’’ (திருவாய். 1-2-2) என்று ஸங்கல்பத்திற்கு விரோதியாக அமையும் உடல் தொடர்பைக் காட்டித்தருகிறார், ஆழ்வார்.

நான்காம் அதிகரணம் (முக்3தா4தி4கரணம் 3-2-4), ஆத்மா நித்யமானது என்பதைக் கூறுகிறது. இதையே ஆழ்வார், ‘‘மன்னுயிர்’’ (திருவாய். 1-2-2) என்று அருளிச் செய்கிறார் என்பது வ்யாக்யதாக்களின் ஒருமித்த கருத்து.

இங்கே நான்கு அதிகரணங்களும் (3-2-1 முதல் 3-2-4 வரை), பகவானுடைய பெருமையைப் பேசுவதால், அவனுக்குண்டான நியமிக்கும் தன்மையை, ‘‘இறை’’ (திருவாய். 1-2-2) என்பதால் சுட்டிக் காட்டுகிறார் ஆழ்வார்.

‘‘இறை உன்னுமின்’’(1-2-2) என்பதற்கு, பூர்வா சர்யர்கள், ‘‘இதை ஆராயுங்கள்’’ என்று பொருள் கூறினார்கள். பன்னீராயிரப்படியில் அழகியமணவாள ஜீயர் இதற்கு, ‘‘ஸ்வாமியை மநநம் பண்ணுங்கோள்’’ என்று பொருள் கூறினார். ‘இறை’ என்பதால் ‘ஸ்வாமித்வமும்’, ‘நியந்த்ருத் வமும்’ இரண்டும் பொருளாக அமையும் என்பதால் இவ்வாறு பொருள் கூறத்தட்டில்லை.

திருவாய்மொழி பாசுரம் ‘‘நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை சேர்மின், உயிர்க்கு அதன் நேர்நிறையில்லே’’ (1-2-3) என்பது, அடுத்த நான்கு அதிகரணங்களுடன் (3-2-5 முதல் 3-2-8 வரை), ஒத்த கருத்தைக் கொண்டுள்ளது அறியப்படுகிறது. இதில், ஆழ்வார்,: ‘‘நீங்கள் என்றும்’’ ‘உங்களுடையதென்றும்’ நினைக்கத் தோன்றும் அஹங்கார மமஹாரங்களை வாசனை யோடு விட்டு விட்டு, ஈச்வரனை வழிபட எண்ணுங்கள். ஆத்மாவிற்கு இதைவிடச் சிறந்தது ஒன்றுமில்லை’’ என்று அருளிச் செய்கிறார்.

ஐந்தாம் அதிகரணத்தில் (உப4யலிங்கா3தி4கரணம் - 3-2-5) வர்ணிக்கப்பட்ட பரமாத்மாவின் இரண்டு அடை யாளங்களான எல்லாப் பாவங்களும் விலக்கப்பெற்றிருக்கை, மற்றும் எண்ணற்ற கல்யாண குணங்கள் நிறைந்திருக்கை ஆகியவற்றை, ‘‘இறை’’ (1-2-3) என்னும் சொல்லால் காட்டித்தந்து, இவன், சித், அசித்தைக் காட்டிலும் வேறுபட்டி ருப்பது இந்தப் பண்புகளால்தான் என்பதை சுட்டிக்காட்டு கிறார்.

ஆறாம் அதிகரணத்தில் (அஹிகுண்ட3லாதி4கரணம்- 3-2-6), அசித் தத்வம், ப்ரஹ்மத்தின் பரிணாமமல்ல, ப்ரஹ்மத்திற்கு இணையான பொருளுமல்ல, ஜீவனைப் போலவே, ப்ரஹ்மத்திற்கு ப்ரகாரமாக இருப்பது என்பது காட்டப்பட்டது. இதே பொருளை ஆழ்வார், ‘‘நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை’’ (திருவாய். 1-2-3) என்பதால், அறிவிக்கிறார். எவ்வாறென்றால், ப்ரக்ருதியின் தொடர்பால் ஏற்படும் அஹங்கார மமகாரங்கள் விடத்தக்கவை என்பதால், ப்ரக்ருதியும் விடத்தக்கது. எனவே, அண்டத்தின் மூலப்பொருள் காரணமான (உபாதான காரணமான) ‘ப்ரஹ்மத்தின் பரிணாமமாக அசித் இருக்காது’ என்று தேறுகிறது. இது, ப்ரஹ்மத்திற்கு இணையானதாக ஆகாது. எனவே, இதுவும் சித் வஸ்துவான ஜீவனைப்போலவே ப்ரஹ்மத்திற்குச் சரீரமானதே. இதற்கும் சரீரமாக உள்ள பண்பே உள்ளது என்பதும்; ‘‘இறை’’ (திருவாய். 1-2-3) என்பதால் உணர்த்தப்பட்டது. இதனால், ஆறாம் அதி கரணத்தில் காட்டப்பட்ட ‘‘அசித் தத்துவத்தின்’’ ஸ்வரூபமும் இதனால் விளக்கப்பட்டது.

ஏழாம் அதிகரணத்தில் (பராதி4கரணம் 3-2-7), பரமாத்மாவைக் காட்டிலும் உயர்ந்ததான தத்வம் ஒன்று இல்லை என்பது நிலை நிறுத்தப்பட்டது. இதே கருத்தை ஆழ்வார், ‘‘இறை சேர்மின், உயிர்க்கு அதன் நேர்நிறை யில்லே’’ (திருவாய். 1-2-3) என்னும் வரியில் அருளிச் செய்கிறார். ‘‘இறை’’ என்பது ‘‘ஈஶன்’’ என்னும் சொல்லுக்கு இணையான பொருளைக் கொண்டது. ஜகத் காரணமான பொருளை இவர், ‘‘இறை’’ (திருவாய். 1-2-3) என்னும் சொல்லால் குறிப்பிடுவதால், இதற்கு மேலான பொருள் ஒன்று கிடையாது என்பது தெளிவாக்கப்பட்டது.

எட்டாவது அதிகரணத்தில் (ப2லாதி4கரணம் 3-2-8), இதர தேவதைகளை ஆராதிப்பவர்களுக்கும், அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருக்கும் பகவானே பலனளிக்கிறான், பூர்வ மீமாம்ஸகர்கள் கூறும்’’ஆபூர்வம்’’ எனப்படும் காணப்படாத தத்துவமல்ல என்பது காட்டப்பட்டது. இந்த அர்த்தத்தையும் ஆழ்வார், ‘‘இறை சேர்மின்’’ (திருவாய். 1-2-3) என்பதால் பகவானை ஆராதனை செய்வதையே விதித்து, ஆராதிக்கப்படும் பரமாத்மாவின் உகப்பே பலன், ‘அபூர்வத்தால்’ கிடைப்பது பலன் அல்ல என்று அறிவுறுத்துகிறார்.

எனவே, மூன்றாம் அத்யாயம் இரண்டாம் பாதத் திற்கும் (உபயலிங்கபாதம்) முதல் பத்து, இரண்டாம் திருவாய் மொழியில் இரண்டு மற்றும் மூன்றாம் பாசுரங் களுக்கும் (’மின்னின் நிலையிலே’, நீர்நுமதென்றிவை) கருத் தொற்றுமை தெளிவு படுத்தப்பட்டது.

மூன்றாம் அத்யாயத்தின் (ஸாதனாத்யாயம்) மூன்றாம் பாதம் ‘‘குணோபஸம்ஹார பாதம்’’ எனப்படுகிறது. இதற்கும் திருவாய்மொழி ‘‘இல்லதும் உள்ளதும்’’ (1-2-4), ‘‘அற்றது பற்றெனில்’’ (1-2-5), ‘‘பற்றிலன் ஈசனும்’’ (1-2-6), மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7), பாசுரங்களுக்கும் கருத்தொற்றுமை உண்டு.

முதல் அதிகரணத்தில் (ஸர்வவேதா3ந்தப்ரத்ய யாதி4கரணம் 3-3-1 ), பல ச்ருதிச் சொற்றொடர்களால் காட்டித்தரப்படும் த3ஹர வித்யை, வைஶ்வாநர வித்யை போன்றவை, ஒன்றேயா, வெவ்வேறா என்பது வினாவாக, அவற்றைத்தெரிவிக்கும் சொற்றொடர்களின் பொருளும், மேற்கொள்ளப்பட வேண்டிய வழி முறைகளும், வழி பாட்டிற்குரிய பொருள்களும், மற்றும் பெறப்படும் பலன்களும் ஒன்றாகவே இருப்பதால், எல்லா வித்யைகளும் ஒன்றே என்பது உறுதிபடுத்தப்படுகிறது.

இரண்டாம் அதிகரணத்தில் (அந்யதா2த்வாதி4 கரணம்-3-3-2), சாந்தோக்ய உபநிஷத் மற்றும் ப்ருஹ தாரண்யக உபநிஷத்தில் (வாஜஸநேயம்) அறியப்படும், உத்கீத2ம் - ஒன்றேயா அல்லது வெவ்வேறா என்னும் கேள்வி எழ, (சாந்தோக்யவாஜஸநேயங்களில் ச்ருதையான உத்கீதவித்யையில் ப்ராணத்ருஷ்ட்யுபாஸ்தி, சோதநாத் யவிசேஷத்தாலே ஏகமென்று சங்கித்து, ஒரு ஸ்தலத்தில் உத்கீதாவயவமான ப்ரணவத்தில் ப்ராணத்ருஷ்டியும், ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்நோத்கீதத்தில் ப்ராணத்ருஷ்டிமாய் இருக்கையாலே, ரூபபேதாத் வித்யாபேதம் என்று நிர்ணயித்தார் ) வழிபடப்படும் பொருளும், வழிபாட்டிற்கான காரணமும் வெவ்வேறாக இருப்பதால், இந்த இரண்டு உபநிஷத்துக் களில் காணப்படும் உத்கீதை2 வெவ்வேறு என்று நிர்ண யிக்கப்பட்டது.

மூன்றாம் அதிகரணத்தில் (ஸர்வாபே4தா3தி4கரணம்- 3-3-3), வாஜஸநேயம், சாந்தோக்யம் மற்றும் கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் காணப்படும் ப்ராணனின் வழிபாடு, வடிவ வேறுபாடுகளால் வெவ்வேறோ என்கிற ஐயப்பாடு எழ, வடிவத்தில் வேறுபட்டிருந்தாலும், வழிபட வேண்டிய குணங்களால் ஒன்றுபட்டிருப்பதால், இவற்றில் அறியப்பட்ட வித்யை ஒன்றே என்று நிலை நிறுத்தப்பட்டது.

நான்காம் அதிகரணத்தில் (ஆநந்தா3த்3யதி4 கரணம் -3-3-4), ப்ரஹ்மம் தியானிக்கப் படுகையில் எந்த குணத்துடன் கூடியதாக வழிபடப்பட வேண்டும் என்னும் கேள்வி எழ, ஸத்யம், ஞானம் மற்றும் அநந்தம் போன்ற குணங்கள் ப்ரஹ்மத்திடமிருந்து பிரிக்க இயலாததாகையால், எல்லா வித்யைகளாலும், இந்த குணங்களுடன் கூடிய ப்ரஹ்மமே வழிபடப்பட வேண்டும் என்பது நிலை நிறுத்தப்பட்டது.

ஐந்தாம் அதிகரணத்தில் (கார்யாக்2யாநாதி4கரணம் -3-3-5) சாந்தோக்யம் மற்றும் வாஜஸநேயங்களில் விதிக்கப்பட்டிருக்கும் ‘ஆசமநீயம்’’- அதாவது உணவு உட்கொள்வதற்கு முன்பு குறிப்பிட்டளவு நீரை மூன்று முறை உட்கொள்வது, உணவு உண்ட பிறகு குறிப்பிட்டளவு நீரை உட்கொள்வது ஆகியவை ப்ராண வித்யை மேற்கொள்பவர் களுக்கு விதிக்கப்பட்ட ஆணையா என்னும் கேள்வி எழ, இது விதிக்கப்பட்டதல்ல. இவ்வாறு உட்கொள்ளப்படும் நீர் ப்ராணனுக்கு ஆடையாக அமைகிறது என்று காட்டப்பட்டது.

ஆறாம் அதிகரணத்தில் (ஸமாநாதி4கரணம் - 3-3-6), வாஜஸநேயக அக்நி ரஹஸ்யத்திலும், ப்ருஹதாரண்யகத்தில் காணப்படும் சாண்டில்ய வித்யையிலும், ஓர் இடத்தில் பரமாத்மாவின் ஸத்ய ஸங்கல்பம் காணப்படுவதாலும், வேறோர் இடத்தில் ‘வஶித்வாதிகள்’ என்னும் குணம் காணப் படுவதால், இவை வெவ்வெறு வித்யைகளோ என்னும் ஐயப்பாடு நீக்கப்பட்டு, இவை இரண்டும் ஒன்றே என்று உறுதிபடுத்தப்படுகிறது.

ஏழாம் அதிகரணத்தில் (ஸம்ப3ந்தா4தி4கரணம்- 3-3-7), ‘‘ஆதித்யமண்டலத்திலும் அக்ஷியிலும் ஶ்ருதமான ஸத்யஶப்தவாச்யப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி ஶரீரத்வோ பாஸநம் துல்யமாகையாலே, ‘‘அஹம் அஹ:’’ என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேன அந்விதங்களாகின்றன என்று சங்கித்து, ‘அக்ஷ்யாதித்யஸ்தான ஸம்பந்தித்வாகார பேதத்தாலே ரூபம் பிந்நமாய், வித்யை பேதிக்கையாலே, இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள்’ என்று நிர்ணயித்தார்.’’ -

3-3-20 ஸூத்ரத்தில் காணப்படும் விளக்கம்:-

சூரியகோளத்திலும், கண்ணிலும் இருக்கும் ஸத்ய ப்ரஹ்மத்தை வழிபாட்டிற்குரிய பொருளாகக் குறிப்பிட்ட பின்பு, சரீரத்தைப் பெயராகக் கொண்டிருப்பதை - இரண்டு உபநிஷத்துக்கள்- ரகசிய பெயர்கள்- தேவதைகளைக் குறிப்பிடுவது- இதில் காணப்படுகிறது.

‘‘தஸ்யோபநிஷதஹரிதிஅதி4தை3வதம்’’ (ப்ருஹ. 7-5-3) - அவனுடைய ரகசியமான பெயர் ‘அஹ:-’ என்பது’, உடலைக் குறிப்பிடுவதாக இதில்: ‘‘தஸ்யோபநிஷத3ஹ மித்யத்4யாத்மம்’’ (ப்ருஹ. 7-5-3) - ‘அவனுடைய ரகசியமான பெயர் ‘அஹம்’ என்பது’.

(ப்ருஹதாரண்யகத்தில் படிக்கப்பட்டுள்ள அக்ஷி ஆதித்ய வித்யைகளில் உபாஸன சேஷமாக சொல்லப் பட்டுள்ள ‘‘அஹ:’’ ‘‘அஹம்’’ என்கிற ரஹஸ்ய நாமாக்களின் உபஸம்ஹாரத்தைப் பற்றியது. இங்கு அது விவரிக்கப் படுகிறது. ‘‘தத்யத்ஸத்யம் அஸௌ ஆதித்ய ஏஷ: ஏதஸ்மிந் மண்டலே புருஷ: யஶ்சா(அ)யம் தக்ஷிணே அக்ஷந் புருஷ: .....’’ (ப்ருஹ.7-4-1) (இதற்கு முன் ப்ராஹ்மணத்தில் ஸத்யத்வேந ஹ்ருதயோபாஸனத்தைக் கூறினார். இப்போது அக்ஷி ஆதித்யாந்தர்வர்த்தியான ப்ரஹ்மமானது நிர்விகாரத்வ ரூப (ஸத்யமாக இருப்பதால்) ஸத்யத்வேந வ்யா ஹ்ருதி ஶரீரகத்வேநச (ஸத்யனாயும் வ்யாஹ்ருதி ஶரீரக னாயும்) உபாஸனத்தை செய்ய வேண்டுமென்று கூறுகிறார்.

தத் ஸத்யமென்று ‘‘ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஶ்யதே’’ ‘‘ய ஏஷோ அந்ரக்ஷிணி புருஷோ த்ருஶ்யதே’’ என்று சாந்தோக்ய ச்ருதி ப்ரஸித்தம். அக்ஷந் அக்ஷிணி - கண்களில் என்று அர்த்தம் சொல்லி, ‘‘ய ஏஷ ஏதஸ்மிந் மண்டலே புருஷ: தஸ்ய பூ: இதி ஶிர: ஏகம் ஶிர: ஏகம் ஏததக்ஷரம், புவ: இதி பாஹூத்வௌ பாஹூத்வே ஏதே அக்ஷரே ஸுவரிதி ப்ரதிஷ்டா த்வே ப்ரதிஷ்டே த்வே ஏதே அக்ஷரே தஸ்ய உபநிஷத் அஹ: இதி ஹந்தி பாப்மாநம் ஜஹாதி ச ய ஏவம் வேத’’).

(ஆதித்ய மண்டலத்தில் இருக்கிற ஸத்ய புருஷனுக்கு பூ: என்கிற வ்யாஹ்ருதியானது ஶிரஸ். அதாவது அதை சிரஸ்ஸாக தியானம் செய்ய வேண்டுமென்று பொருள். சிரஸ்ஸு என்பது ஒன்றுதான். ஆகையால் பூ: என்கிற ஒரு எழுத்தை சிரஸ்ஸாக சொல்லிற்று: புவ: என்கிற வ்யாஹ்ருதியை ஸத்யபுருஷனுடைய கைகளாக த்யானம் பண்ண வேண்டும். கைகள் இரண்டாகையால் புவ: என்கிற இரண்டு அக்ஷரங்களை கைகளாக த்யானம் செய்ய சொல்லிற்று. ஸுவ: என்பதால் ஸத்யபுருஷனுடைய திருவடிகளாக தியானம் பண்ணவேண்டும். ஸுவ: என்கிற வ்யாஹ்ருதியானது இரண்டு அக்ஷரங்களை உடையதாக இருப்பதால் இரண்டு திருவடிகளாக தியானம் செய்யச் சொல்லிற்று. ஆதித்ய மண்டலாந்தரவர்த்தியான இந்த புருஷனுக்கு அஹ: என்று ரஹஸ்ய நாமா - ஸங்கேதப் பெயர். இவ்விதமாக ஆதித்ய மண்டலாந்தரவர்த்தியான புருஷனை எவன் உபாஸிக்கிறானோ அவன் பாபத்தைப் போக்கடிக் கிறான். பாபத்தை விடவும் செய்கிறான். அஹ: என்பதற்கு ‘ஹந்தி’, ‘ஜஹாதி’ என்கிற இரண்டு ரூபங்களும் உண்டாகை யால் இரண்டையும் சொல்லிற்று என்று கருத்து).

இவ்விதமே அக்ஷிரந்தர்வர்த்தியான ஸத்யபுருஷனை வ்யாஹ்ருதி ஶரீரகனாக உபாஸனம் பண்ணும்படியாக சொல்லி அக்ஷியந்தர்வத்தியான புருஷனுக்கு ‘அஹம்’ என்று ரஹஸ்யநாமா என்று சொல்லியிருக்கிறது. பாஷ்யத்திலுள்ள ‘உபநிஷதௌ’ என்பதற்கு ரஹஸ்யநாமாநி என்று பொருள்.).

எட்டாம் அதிகரணத்தில் (ஸம்ப்4ருத்யதி4கரணம்- 3-3-8), தைத்திரீய சாகை மற்றும் சாந்தோக்யத்தில் ப்ரஹ்மத்தின் தியானிக்கப்படவேண்டிய சிறப்பான பண்புகளாக குறிப்பிடப்பட்டிருக்கும், ஜ்யேஷ்டத்வம், ஸம்ப்ருதி(புகழத்தக்க வீர்யங்களைத் தாங்கிநிற்கை) மற்றும் த்யுலோக வ்யாப்யத்வம் (தேவலோகத்தைவ்யாபித் திருக்கை) ஆகியவை, மற்ற உபாஸனைகளுடன் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

ஒன்பதாம் அதிகரணத்தில் (புருஷவித்3யாதி4 கரணம் -3-3-9), இரு ஶாகைகளிலும் (தைத்திரீய உபநிஷத் மற்றும் சாந்தோக்யத்தி) ஓதப்பெற்ற இவ்வித்யைகள் புருஷவித்யை என்று ஒரே பெயரைப் பெற்றிருந்தபோதிலும், ஒன்றில் ஓதப்பெற்ற குணங்கள் மற்றொன்றில் ஓதப்படாமையால் வெவ்வேறானவையே என்றே கொள்ள வேண்டும்.

பத்தாம் அதிகரணத்தில் ( வேதா4த்3யதி4கரணம் 3-3-10 ), உபநிஷத்துக்களை ஓதத் தொடங்குகையில், ப்ரார்த்தனையாக ஓதப்படும் ஶாந்தி மந்த்ரம், ‘‘ஶம் நோ மித்ர: ஶம் வருண:’’ (தை.சீக்ஷா-1) (நமக்கு மித்ரன் (சூரியன் -பன்னிரண்டு ஆதித்யர்களில் ஒருவன்), வருணன் முதலான தெய்வங்கள் மங்களத்தை உண்டாக்கட்டும்) என்று தொடங்கும் மந்திரங்கள் உள்ளன. இது போன்றவை வித்யையின் அங்கங்களல்ல. எனவே வித்யை ஆரம்பிக்க இவை ஓதப்படவேண்டிய அவசியம் இல்லை என்பது காட்டப்பட்டது.

பதினொன்றாவதுஅதிகரணத்தில்(ஹாந்யதி4க ர ணம் 3-3-11), ப்ரஹ்மஜ்ஞானியானவன், மரணமடைகை யில், தன்னுடைய நற்கர்மங்கள் மற்றும் தீய கரமங்களை விடுவதாகிய ‘‘ஹாநி’’(இராமை) என்பதை த்யானிக்க வேண்டுமா அல்லது இந்த கர்மங்களை முறையே நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் மாற்றுவதாகிய, ‘‘உபாயந’’ என்பதை த்யானிக்கவேண்டுமா என்னும் கேள்வி எழ, ‘‘ஹாநி’’ என்பது ‘உபாயநத்தையும்’ (அடைதலையும்) உள்ளடக்கி யிருப்பதால், இரண்டுமே த்யானிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக்கப்பட்டது.

பன்னிரண்டாம் அதிகரணத்தில் (ஸாம்பராயாதி4 கரணம்-3-3-12), ப்ரஹ்மஞானியானவன் மரணமடை கையில், அவன் உடலை விட்டு நீங்கும் நேரத்திலேயே, தன் நற்கர்மம் மற்றும் தீய கர்மங்களைக் கைவிடுகிறானா? அல்லது பரமபதத்தின் எல்லையை அடைந்தபிறகு கைவிடுகிறானா? என்னும் ஐயப்பாடு எழ, ஜீவன் உடலை விட்டு புறப்பட்ட பிறகு, அவனுடைய புண்ய பாபங்களை அநுபவிக்க வாய்ப்பில்லாததால், இவை உடலைவிட்டு புறப்பட்ட உடனேயே நீங்கிவிடுகிறது என்று நிர்ணயிக்கப் பட்டது.

பதிமூன்றாம் அதிகரணம் (அநியமாதி4கரணம்- 3-3-13 ), அர்ச்சிராதி மார்க்கத்தில் பயணம், குறிப்பிட்ட சில வித்யைகளை மேற்கொள்ளும் உபாஸகர்களுக்கு மட்டுமே உரியதா என்னும் கேள்வி எழ, அல்ல, அது எல்லா ப்ரஹ்ம உபாஸனம் செய்யும் ப்ரஹ்ம வித்துக்களுக்கும் பொதுவானது என்று தெரிவிக்கப்பட்டது.

பதினான்காம் அதிகரணத்தில் (அக்ஷரத்4யதி4 கரணம்- 3-3-14), ப்ருஹதாரண்யகம் மற்றும் முண்டக உபநிஷத்துக்களால் கற்றுத் தரப்படும் அக்ஷர வித்யையில், அஸ்தூலம், அநண்வ, அஹ்ரஸ்வ, அதீ3ர்க4ம், அலோஹிதம், அஸ்நேஹம், அக்3ராஹ்ய போன்ற ப்ரஹ்மத்தின் குணங்கள் மற்ற வித்யைகளின் உபாஸனத்தை மேற்கொள்ளப் படுகையில் உள்ளடக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதற்கு, இவை ‘ஹேய-ப்ரத்யநீகத்வ குணங்கள்’. இவை ப்ரஹ்மத்தின் முக்யமான குணங்களான ஸத்யம், ஜ்ஞானம், அநந்தம் மற்றும் ஆநந்தத்துடன் சேர்த்து த்யானிக்கப்பட வேண்டியவையே என்பது நிலை நிறுத்தப்பட்டது.

பதினைந்தாவது அதிகரணத்தில் (அந்தரத்வாதி4 கரணம்-3-3-15), ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் யாஜ்ஞ வல்கியர், உஷஸ்த்த மற்றும் கஹோலா என்பவர்களுக்கு கற்றுத் தந்த ‘‘உஷஸ்த கஹோல வித்யை’’ இரண்டும் வெவ்வேறு வித்யைகள் அல்ல. ஒன்றே. ஏனெனில், அவை இரண்டும் வழிபாட்டிற்குரிய பொருளான ப்ரஹ்மத்தையே விவரிக்கின்றன என்பது தெளிவாக்கப்பட்டது.

பதினாறாவது அதிகரணத்தில் (காமாத்3யதி4 கரணம் 3-3-16), சாந்தோக்யத்திலும், ப்ருஹதாரண்யகத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இதயத்தில் வசிக்கும் தஹராகா ஶத்தை வழிபடும் முறையில், வழிபட வேண்டிய அதன் குணங்களில் சிறிது வேறுபாடு உள்ளதால், இந்த இரு உபநிஷத்துக்கள் போதிக்கும் வித்யை வேறு வேறோ என்னும் ஐயப்பாடு எழ அது நீக்கப்படுகிறது. ப்ருஹதாரண்யகத்தில் காணப்படும், ‘‘வஶிஸ்த்வா’’ என்பது, சாந்தோக்யத்தில் காணப்படும் ‘‘ஸத்ய ஸங்கல்பத்தின்’’ ஓர் வடிவே. எனவே, இவை இரண்டும் வெவ்வேறான வித்யைகள் அல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது.

17ஆவது அதிகரணத்தில் (தந்நிர்த்த4ராணா நியமாதி4 கரணம்-3-3-17), உத்கீத உபாஸனை வித்யைக்கு இன்றிய மையாததா என்பது விசாரிக்கப்பட்டு, அது வித்யையின் அவசியமான அங்கமல்ல என்பது காட்டப் பட்டது.

18ஆவதுஅதிகரணத்தில் (ப்ரதா3நாதி4கரணம் -3-3-18), தஹரவித்யையை விவரிக்கும், ப்ரஹ்மத்தின் வழிபாடு அது இதயத்தில் இருக்கும் ஓர் நுண்ணிய இடமாக த்யானிக்கப்படவேண்டும் என்று விதிக்கிறது. இங்கு ப்ரஹ்மத்தின் குணங்கள் மட்டும் த்யானிக்கப்பட வேண்டுமா? அல்லது சாந்தோக்ய உபநிஷத்தில் குறிப்பிடப்பட்ட எட்டு குணங்கள் கூடியதான ப்ரஹ்மத்தை வழிபடப்பட வேண்டுமா? என்னும் கேள்வி எழ, குணங்களுடன் கூடிய ப்ரஹ்மமே த்யானிக்கப்பபட வேண்டும் என்று காட்டப்பட்டது.

19ஆவது அதிகரணத்தில் (லிங்க3பூ4யஸ்த்வாதி4 கரணம்- 3-3-19), தைத்திரீய நாராயணத்தில், நாராயணன், பரப்ரஹ்மம், பரதத்வம், பரம்ஜோதி போன்ற சொற்களால் அறிவிக்கப்படுகிறான். இது, தஹரவித்யைக்கு மட்டுமே பொருந்துமோ என்று ஆராயப்பட்டு இது அவ்வாறு அல்ல, ‘‘நாராயணன் மிக உயர்ந்த தெய்வம், அவன் த்யானத்திற்கு உரிய பொருள் என்பது தஹரவித்யையையும் சேர்த்து எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது’’ என்பது நிலை நிறுத்தப் பட்டது. ஏனெனில் இந்தச் சொற்றொடர்கள், அடையாளக் குறியீடுகளை, மீண்டும் குறிப்பிடுவதால் வலிமை மிக்க சான்றுகள். இது, லிங்க3பூ4யஸ்த்வாத் தத்3தி4 ப3லீயஸ்தத3பி (3-3-43) என்ற ஸூத்ரத்தில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. (லிங்க3பூ4யஸ்த்வாத் - (தைத்திரீய நாராயணா நுவாகம் எல்லாப் பரவித்யையிலும் உபாஸிக்கப்படும் பரம்பொருள் எந்த தேவதை என்று நிர்த்தாரணம் செய்வது என்னும் விஷயத்தில்) அடையாளங்களாகிற சொற்றொடர் கள் அதிகமாயிருக்கையால் (அவ்விஷயம் தேறுகிறது.) தத் ஹி ப3லீய: - அந்த வாக்யமன்றோ (ப்ரகரணத்தைக் காட்டிலும்) வலிமைமிக்கது. தத் அபி - இந்த விஷயம் பூர்வ மீமாம்ஸையிலும் சொல்லப்பட்டது.)

20ஆம் அதிகரணத்தில் (பூர்வவிகல்பாதி4கரணம்- 3-3-20), அக்நிரஹஸ்யத்தில், மனதால் சில சடங்குகள் மேற் கொள்ளப்படுகையில் அவை அக்நியில் ஸமர்ப்பிக்கப்படும் பலியைப் போன்றதா? அல்லது மனதால் த்யானிக்கப்படும் வித்யையின் ஓர் பகுதியா? என்ற கேள்வி எழ, இவை த்யானத்தின் வடிவானவை என்று நிலை நிறுத்தப்படுகிறது.

21ஆம் அதிகரணத்தில் ( ஶரீரேபா4வாதி4கரணம்- 3-3-21), ஜீவாத்மாவின் உபாஸனம் விவாதிக்கப்படுகிறது. ப்ரஹ்மத்தை த்யானிக்கையில், ஜீவனை உபாஸிப்பதும் ஓர் பகுதியாக விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜீவன் த்யானிக்கப்படுகையில் அவன் கர்த்தா, போக்தா போன்ற குணங்களுடன் உடலுருக் கொண்டவனாக த்யானிக்கப்பட வேண்டுமா? அல்லது அவன் இயல்பான பண்புகளாகிய அபஹதபாப்மத்வம் மற்றும் ஸத்யஸங்கல்பத்வம் போன்ற குணங்களுடன் கூடியவனாக த்யானிக்கப்பட வேண்டுமா? என்னும் கேள்வி எழ, அவன், அவனுடைய உண்மையான வடிவிலேதான் வழிபடப்பட வேண்டும்; உடலுருக்கொண்ட வடிவில் அல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது.

22ஆம் அதிகரணத்தில் (அங்கா3வப3த்3தா4தி4 கரணம்- 3-3-22), சில உபநிஷத்சாகைகளில் விதிக்கப் பட்டிருக்கும் உத்கீத2 உபாஸனை, எல்லா சாகைகளுக்கும் பொருந்துமா? என்னும் கேள்வி எழ, ‘‘உத்3கீ3த2முபாஸீத’’ (சாந். 1-1-1)- ‘ஒருவர் உத்கீதத்தை வழிபட வேண்டும்’. என்பதால் எல்லா சாகைகளுக்கும் பொருந்தும் என்று பதிலளிக்கப்படுகிறது.

23-ஆம் அதிகரணத்தில் (பூ4மஜ்யாயஸ்த்வாதி4 கரணம்- 3-3-23), வைஶ்வாநர ஆத்மாவைக் குறித்த த்யானம் பேசப்படுகிறது. வைஶ்வாநர ஆத்மா த்யானிக்கப் படுகையில், அதன் பகுதிகளான த்யுலோகம், ஆதித்யன், வாயு, ஆகாஶ்ம் மற்றும் ப்ருத்வி ஆகியவை தனித்தனியாக த்யானிக்கப்பட வேண்டுமா என்னும் கேள்வி எழ, இவை எல்லாவற்றையும் பகுதிகளாகக் கொண்ட வைஶ்வாநர ஆத்மாவின் அண்டமளாவிய வடிவமே த்யானிக்கப்பட வேண்டும் என காட்டித்தரப்பட்டது.

24-ஆம் அதிகரணத்தில், (ஶப்3தா3திபே4தா3தி4 கரணம் 3-3-24), நாநா வித்3யா: (பலவகைப்பட்ட வித்யைகள் வித்யைகளுக்குள்)’’- ‘‘ஜக3தே3ககாரணத்வா பஹதபாப்மத்வா த்3யநுப3ந்த4 பே4தா3:’’ - அறியப்பட வேண்டும்’, ‘வழிபடப்பட வேண்டும்’ - ஆகிய சொற்கள், த்யானத்தைப் பலமுறை குறிப்பிடும் போதிலும், த்யானங்கள், ப்ரஹ்மத்தை மட்டுமே குறிப்பிடும் போதிலும், வித்யைகள் வேறுபட்டவை. இவை பல்வேறு சூழ்நிலைகளில் விவரிக்கப்பட்ட, ‘பண்புகளால் சிறப்பிக்கப் பட்ட ப்ரஹ்மம்’ ‘அண்டத்தின் ஒரே காரணமாயிருக்கை’, ‘எல்லாப் பாவங் களும் அழிக்கப்பட்டிருப்பது’ ஆகியவற்றை தியானிப்பதை, மீண்டும் மீண்டும் மேற்கொள்வதைக் கற்பிக்கின்றன. இவை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்ட தியானத்தின் இயல்பைக் கொண்டவை. தஹர வித்யை,சாண்டில்யவித்யை, ஸத் வித்யை, ஆநந்தமய வித்யை போன்ற பல வித்யைகளுக்குள் பேதமில்லை என்பது அறியப்படுகிறது. ஆனால், எந்த குணங்களுடன் கூடியதாக வழிபடப்பட வேண்டும் என்பதைக் குறித்து இந்த வித்யைகள் விதிக்கும் அதிகார ஆணைகளுக்குள் வேறுபாடு இருப்பதால், வித்யைகள் வெவ்வேறு என்று நிர்ணயிக்கப்படுகிறது.

25-ஆம் அதிகரணத்தில் (விகல்பாதி4கரணம் 3-3-25), எல்லா வித்யைகளாலும் அடையப்படும் பலன் ஒன்றாக இருப்பதால், ப்ரஹ்மத்தை, அடையத்தக்க வித்யைகள் ஒன்றுக்கொன்று மாற்று வழி என்பது காட்டித்தரப்பட்டது.

26-ஆம் அதிகரணத்தில் (யதா2ஶ்ரயபா4வாதி4 கரணம்3-3-26 ), சில உபாஸனைகளில் விதிக்கப் பட்டிருக்கும் உத்கீத2 உபாஸனை, எல்லா வித்யைகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது இல்லை என்பது காட்டித் தரப்பட்டது. ஏனெனில், இந்த உபாஸனை, ப்ரஹ்மத்தை உபாஸிப்பதற்கு துணையானதாக அறியப்படுவதில்லை.

இவ்வாறாக இந்த 26 அதிகரணங்களில், ஸூத்ரகாரர் நான்கு விஷயங்களை நிரூபிக்கிறார். இரண்டு, மூன்று, ஐந்து, ஏழு, பத்து மற்றும் இருபத்தி ஆறாம் அதிகரணங்களில், தாழ்ந்த பலன்களுக்காக மேற்கொள்ளப்படும் உபாஸனை களை விவரித்தார்.

இருபதாவது அதிகரணத்தில், ப்ரஹ்மத்தை உபாஸிக்கும் முறையை நிரூபித்தார்.

நான்கு மற்றும் பதினான்காவது அதிகரணங்களில் ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக குணங்கள் போலவே, அஸ்தூலத்வாதி குணங்களும் எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது என்று நிரூபித்தார்.

பத்தொன்பதாவது அதிகரணத்தில், அடையாளக் குறியீடுகள் மீண்டும் கூறப்படுவதால் நாராயணன் எல்லா வித்யைகளாலும் பரமாத்மா என்று அறியப்படுபவன் என்பதைத் தெரிவிக்கிறார்.

ஏழு மற்றும் பத்தாவது அதிகரணங்களில் பல்வேறு வித்யைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை விவரித்தார்.

இவ்வாறு ஸூத்ரகாரர் நிரூபித்த நான்கு வகையான விஷயங்கள், ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி ‘‘இல்லதும்உள்ளதும்’’(1-2-4),’’அற்றதுபற்றெனில்’’(1-2-5) ‘‘பற்றிலன்ஈசனும்’’(1-2-6) மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7) பாசுரங்களில் காணப்படுகின்றன.

இதில் பாசுரமாகிய ‘‘இல்லதும்உள்ளதும்’’(1-2-4), என்பதில், பரமாத்மாவின் ஸ்வரூப நிரூபக குணங்கள் எல்லா வித்யைகளிலும் கற்கப்படவேண்டும் என்பதை அருளிச் செய்தார்.

‘‘அற்றதுபற்றெனில்’’(1-2-5) என்பதில் அற்ப பலன்களுக்காக மேற்கொள்ளப்படும் உபாஸனைகளை செறுத்து நிலைநிற்கும்படி பகவத்விஷயத்தைக் கிட்டப் பார்க்கில் ஈச்வரனை ஆச்ரயிக்கவேண்டுமென்கிறார்.

‘பற்றிலன்ஈசனும்’’(1-2-6) பாசுரத்தில், வித்யை களுக்கிடையே உள்ள வேறுபாடு மற்றும் வேறுபாடற்ற தன்மைகளை அருளிச் செய்கிறார்.

‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7) பாசுரத்தில், பரமாத்மா எல்லாவற்றிற்கும் உடையவனாக இருப்பதை காட்டித் தருகிறார்.

‘‘இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்குபற்றற்றே’’ (1-2-4) என்ற பாசுரத்தில் ‘பரமாத்மாவின் ஸ்வரூபம், அசித் போன்றது அல்ல, சித் போன்றதும் அல்ல, இடைவெளியற்ற ஆநந்தமே உருவான வன் அவன். மற்ற பொருள்களில் விருப்பத்தைத் துறந்து பரமாத்மாவின் வடிவத்தை ஆச்ரயிப்பாயாக’’ என்று அறிவுறுத்துகிறார். ஆநந்த வல்லியிலும் ஆதர்வணிகத்திலும் காட்டித்தரப்படும் பரமாத்மாவின் ஆநந்தம், நுண்ணிய தன்மை, ஆகிய அவனுடைய ஸ்வரூப நிரூபக தர்மங்கள் எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது என்பது இப்பாட்டில் விளக்கப்படுகிறது.

‘‘அற்றதுபற்றெனில் உற்றது வீடு உயிர் செற்றது மன்னுறில் அற்றிறைபற்றே’’ (1-2-5) பாசுரத்தில், புலனுகர்ச்சியில் அநுபவம் போதும் என்று தோன்றும் காலத்தில், ஆத்மாவை அநுபவிக்க தோன்றும், அது அற்பமான ஆநந்தத்தைத் தரக்கூடியது. இது தாழ்ந்தது என்பதை உணர்ந்து இந்த அதிசயமான பலனில் பற்று அற வேண்டுமானால் ஸர்வேச்வரனை சரணடையுங்கள் என்று உபதேசிக்கிறார். உத்கீதை2 உபாஸனை போன்றவற்றில் ஆத்ம உபாஸனை உபதேசிக்கப்படுகிறது ப்ரஹ்மத்தின் உபாஸனை கூறப்படவில்லை. இப்படிப்பட்ட ஆத்மா உபாஸனை கூறும் வழிகள் கைவிடப்பட வேண்டும் என்பது இப்பாசுரத்தில் அறியப்படுகிறது.

கீதாபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர், உயர்ந்த பலனான ப்ரஹ்மத்தை அடைவதற்கு, உடலுடன் கூடி இருக்கை யிலேயே முயற்சிக்க வேண்டும் என்பதால், உடல் தொடர்பைத் துறந்து, ஆத்மாநுபவத்தில் ஈடுபட்டபிறகு, இது கூடாது என்பதால், விடத்தக்கது என்று விளக்கியதை இப்பாசுரத்தில் காட்டித்தருகிறார். ஆழ்வாரும், இப்பாசுரத்தால், ப்ரஹ்ம உபாஸனையைக் கூறாத வித்யைகள், விடத்தக்கவை என்பதை அருளிச் செய்கிறார். ‘‘இறை பற்று’’ (திருவாய். 1-2-5) என்பதால், அப்படிப்பட்ட உபாஸனைகளை விட்டுவிட்டு பரமாத்மாவையே சரணடைய வேண்டும் என்பதை காட்டித்தருகிறார்.

‘‘பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய், அவன் முற்றிலடங்கே’’(1-2-6) என்னும் பாசுரம், பரமாத்மாவை வழிபடும் வித்யைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு மற்றும் வேறுபாடற்ற தன்மையை, விளக்குவதாக உள்ளது. ‘‘ஈச்வரனான எம்பெருமான், தன்னை வழிபடுபவர்கள் அனைவர்க்கும் ஸமமானவனாக இருக்கிறான். நீயும் இதை உணர்ந்தவனாக, அவனுக்கு ஆற்றும் எல்லா கைங்கர்யங்களிலும் விருப்பம் உடையவனாக இரு’’ என்று உபதேசிக்கிறார் ஆழ்வார்.

ந்யாஸ வித்யையால் (சரணாகதியால்) அறியப்படுவது , பரமாத்மாவின் வாத்ஸல்யம், சௌசீல்யம், ஸௌலப்யம், ஸ்வாமித்வம் போன்ற குணங்களும், அவன், ஜீவாத்மாக் களுக்குள் வேறுபாடு காணாதவன் என்பதும் அறியப் படுகிறது. இதை ஆழ்வார், ‘‘பற்றிலன்’’ (திருவாய். 1-2-6) என்பதால் அருளிச் செய்கிறார். ‘அவன் ஸ்வாமி’ என்பதை, ‘‘ஈசன்’’ (திருவாய். 1-2-6) என்னும் சொல்லால் சுட்டிக் காட்டுகிறார். இதனால், ந்யாஸவித்யை, மற்ற வித்யைகளைக் காட்டிலும் வேறுபட்டது என்பது தோற்றுகிறது. தஹர, சாண்டில்ய, உபகோசல வித்யைகளைக்காட்டிலும் ந்யாஸ வித்யை வேறுபட்டிருப்பதும் இங்கே தெளிவு. தைத்திரீயம், ச்வேதாச்வதரம் ஆகிய உபநிஷத்துக்களில் விதிக்கப்பட்டுள்ள ந்யாஸவித்யையின் வடிவத்தில் ஒற்றுமை உண்டு என்பதால், இவற்றுள் வேறுபாடு இல்லை என்று அறியப்படுகிறது.

‘‘அவன் முற்றிலடங்கே’’ (1-2-6) என்று ந்யாஸ வித்யா பலமாக எல்லா கைங்கர்யங்களையும் விதிப்பதால், ‘‘விகல்போ(அ)விஶிஷ்டப2லத்வாத்’’ (3-3-57) - ‘‘(ப்ரஹ்மவித்யைகளில்) ஒவ்வொன்றே அனுஷ்டிக்கத் தக்கது; (ஒவ்வொன்றாலும்) அடையப்படும் பலம் வேறுபடாமையால்’’ என்கிற விகல்பாதிகரணத்தின் பொருள் இதனைத் தெளிவுபடுத்துகிறது.

ஸூத்ரகாரர், வேதத்தின் பல சாகைகளில் காணப்படும் அனேக வித்யைகளுக்கிடையே உள்ள பேத, அபேதங்களை, நிரூபணம் பண்ணாமல் விட்டு விட்டு, ந்யாஸவித்யையை ப்ரதானமாக விளக்கியருளினார். ஆழ்வாரும் கூட, ந்யாஸ வித்யைக்கும் மற்ற வித்யை களுக்கும் இடையே உள்ள பேத, அபேதங்களைக் காட்டி, இதனால் வித்யைகளுக்கிடையில் பேத, அபேதங்கள் தன்னிடையே தோன்றும் என்று இப்பாசுரத்தில் (திருவாய். 1-2-6) அருளிச்செய்கிறார்.

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாருக்கு, சிறப்புடையதோர் பெருமை உண்டு. வேதாசார்யரான பாதராயணர் கற்பித்த வேதாந்தங்கங்களை ஆராய்ந்து, அவர் விரிவாகக் கூறியவற்றைத் தாம் சுருக்கமாகவும், அவர் சுருக்கமாக சொன்னதை தாம் விரிவாகக் கூறுவதே இந்த பெருமை.

இதற்கு உதாரணம், ஸூத்ரகாரர் ஸம்சார தசையில் ஜீவன் பெறும் அநுபவங்களான ஸ்வர்க்கம் செல்லுதல், தாய் தந்தையருக்குக் குழந்தையாகப் பிறத்தல், ரௌரவம் போன்ற நரக அநுபவங்களைப் பெறுதல், ஆகியவற்றை விரிவாகச் சொன்னார். இதை ஆழ்வார், :’’வீடுமின் முற்றம்’ (1-2-1)’ என்று வெகு சுருக்கமாக, அருளிச் செய்தார். பாஸுபதாதி கரணத்தில், ஸூத்ரகாரர், பாஸுபத மதத்தைக் கண்டித்ததை, ஆழ்வார், ‘‘புரமொருமூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து, அரனயனென உலகழித்தமைத்துளனே’’ (திருவாய். 1-1-8) என்று, பசுபதி, ஹிரண்யகர்பன் (சதுர்முக ப்ரஹ்மா) ஆகியோருடைய பெருமையைக் கண்டிக்கிறார். இப்படி, ஸூத்ரகாரர் விரிவாகச் சொன்னதை, சுருக்கமாகச் சொல்கையும், சுருக்கமாகச் சொன்னதை விரிவாகச் சொல்வதும் இவருக்கு உள்ள அதிசயமான பண்பு. இதற்கு, ஆழ்வாருக்கும் ஸூத்ரகாரருக்கும் இடையே உள்ள கருத்தொற்றுமையே காரணமாகும்.

‘‘அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே’’ (1-2-7) பாசுரத்தில், எல்லா வித்யைகளாலும் அறியப்படும் பரமபொருள் ‘‘ஸ்ரீமந் நாராயணனே’’, ‘அவனே உயர்ந்த தெய்வம்’ என்னும் கருத்து அருளிச் செய்யப்படுகிறது. ‘‘பரமாத்மாவின் விபூதி பரந்து விரிந்து இருப்பதைக் கண்டு, நீயும் அந்த செல்வத்தில் ஒன்று என்று உணர்ந்து, அதற்குள் அடங்கு’’ என்று ஆழ்வார் உபதேசிக்கிறார். இப்பாசுரத்தில் (1-2-7), ப்ரஹ்மா, ருத்ரன், இந்திரன் போன்ற சிறப்புடைய புருஷர்களும், எம்பெருமானுடைய விபூதியில் அடங்கி யவர்கள்; அவனே விபூதிமான். பொதுவாக, ‘சம்பு’, ‘சிவன்’ போன்ற சொற்களால் அறியப்படுபவனும் நாராயணனே. இந்த பொருள்,

‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவஸ் ஸேந்த்3ரஸ் ஸோக்ஷர: பரமஸ்வராட்’’ (நாரயணஸூக்தம்) - அவன் ப்ரஹ்மனுக்கும் அந்தர்யாமி, அவன் சிவனுக்கும் அந்தர்யாமி, அவன் இந்திரனுக்கும் அந்தர்யாமி, அவன் கர்மத்திற்கு வசப்படாதவனும், மேலானவனுமான முக்தாத்மாவிற்கும் அந்தர்யாமி. உலகில் ஜ்ஞான சக்திகளை அதிகமாயுடை யவர்களான ப்ரஹ்மருத்ரேந்த்ரர்களும், முக்தாத்மாவும் இந்த பரமாத்மாவினுடைய விபூதிகளே என்று உரைக்கப்படுகிறது. அந்த பரமபுருஷனே பிரமனுக்கும், சிவனுக்கும் அந்தர்யாமி; அவன் இவர்களைக் காட்டிலும் மேலானவனும், அகர்மவச்யனுமான முக்தாத்மாவுக்கும் அந்தர்யாமி, இவ்வர்த்தத்தை,

அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்றெல்லாமும் அறிந்தனமே. (திருவாய்.9-3-2)

என்று ஆழ்வார் அருளிச்செய்துள்ளார். இங்கு ‘ஸ:’ ‘ஸ:’ என்று படித்ததை ஆழ்வாரும் ‘அவன்’ ‘அவன்’ என்று உணர்த்து வதைக் காண்மின்.

போன்ற வேதச் சொற்றொடர்களால் காட்டித்தரப் படுகிறது. இந்த அர்த்தமும், எல்லா வித்யைகளும் நாராயணனின் ரூபம், உபாஸிக்கத்தக்கதாக சொல்லி யிருப்பதும் இப்பாசுரத்தால் (1-2-7) அறியப்பட்டது.

இவ்வாறு ‘‘இல்லதும்உள்ளதும்’’(1-2-4), ‘‘அற்றதுபற்றெனில்’’ (1-2-5) ‘‘பற்றிலன் ஈசனும்’’ (1-2-6) மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7) ஆகிய நான்கு பாசுரங்களுக்கும் மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதமான குணோபஸம்ஹார பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அடுத்து, ‘‘உள்ளம் உரை செயல்’’ (1-2-8 ) பாசுரத்திற்கும் நான்காம் பாதமான அங்கபாதத்திற்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை காட்டித்தரப்படுகிறது.

இந்த நான்காம் பாதம், முதல் அதிகரணத்தில் (புருஷார்த்தா2தி4கரணம்- 3-4-1), கர்மம் நேரடியாக மோக்ஷ ஸாதனமாகுமா? கர்மம், வித்யையின் பகுதியா? அல்லது வித்யை, கர்மத்தின் பகுதியா? ஆகியவை ஆராயப்பட்டது. கர்மமே வித்யைக்கு அங்கம். எனவே, கர்மத்தால் மேற்கொள்ளப்பட்ட வித்யை, மோக்ஷஸாதனம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாம் அதிகரணத்தில் (ஸ்துதிமாத்ராதி4 கரணம் 3-4-2 ), உத்கீதை2 பெருமை படுத்தப்பட்டிருப் பதால், இவை இந்தப் பாடல்களில் துதிக்கத் தக்கவையா என்பது ஆராயப்பட்டு, இவை உத்கீத2 உபாஸனை விதிக்கும் அதிகார ஆணைகளே என்பது தெளிவாக்கப்பட்டது.

மூன்றாம் அதிகரணத்தில் (பாரிப்லவார்த்தா2தி4கரணம்- 3-4-3), ப்ரஹ்ம வித்யையின் பெருமையைப் பேசும் பாரிப்லவங்கள், சில உபநிஷத் சொற்றொடர்களில் காணப் படுகின்றன. இதுவும் உபாஸனையை விதிக்கும் அதிகார ஆணை போன்றதே என்பது தெளிவாக்கப்படுகிறது.

நான்காம் அதிகரணம்(அக்3நீந்த4நாத்3யதி4கரணம் 3-4-4 ), வேள்வித்தீயை மூட்ட (அக்நிஸந்தானம்) தகுதியற்ற ஸந்யாசிகளுக்கு, ப்ரஹ்மத்தை த்யானிக்கும் தகுதி உண்டா என்பது ஆராயப்படுகிறது. இவர்களுக்கு, அக்நியை தீண்டும் உரிமை இல்லாததால், கர்மத்தை உபாஸனைக்கு அங்கமாக ஆக்க இயலாது. ஆனாலும், அவர்கள் ஸந்யாச ஆச்ரமத்திற்கு உரிய கர்மங்கள் ஆற்று வதால், அவர்களும் உபாஸனையை மேற்கொள்வ தற்கு தகுதி பெற்றவர்களே என்று நிலை நிறுத்தப்படுகிறது.

ஐந்தாம் அதிகரணத்தில் (ஸர்வாபேக்ஷாதி4கரணம் - 3-4-5), க்ருஹஸ்தர்களின் நிலை விவரிக்கப்படுகிறது. இவர்கள், தங்களுடைய ஆச்ரமத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் யஜ்ஞம், தானம், தபஸ் போன்றவற்றை உபாஸனைக்குப் பயன்படும் வகையில் உபயோகிக்கலாம். ஏனெனில், இவர்களுக்கு வேள்வித்தீயை மூட்ட தகுதி உண்டு.

ஆறாம் அதிகரணத்தில் (ஸமத2மாத்3யதி4கரணம்- 3-4-6 ), க்ருஹஸ்தர்கள் தமக்கு விதிக்கப்பட்ட சடங்குகளை மேற்கொள்வதோடு நில்லாமல், ஶமம்- மன அமைதி, தமம்-புலனடக்கம், உபரதி-மனநிறைவு, மற்றும் திதிக்ஷு-பொறுமை, ஸமாஹி தத்வ-சமநோக்கு, ஆகியவற்றை தாம் கற்கும் வித்யைக்கு துணை போவதாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எழாம் அதிகரணத்தில் (ஸர்வாந்நாநுமத்யதி4 கரணம்- 3-4-7), ப்ரஹ்ம வித்திற்கு உணவின்றி உயிர் பிரியக்கூடிய அபாயம் நேர்கையில், கிடைக்கும் எந்த உணவையும் உட்கொண்டு உயிர் தரிக்கலாம். மற்ற நேரங் களில் எல்லா உணவையும் உட்கொள்ளக்கூடாது என்பது தெளிவாக்கப்பட்டது. இந்த விஷயத்திற்கு சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் உஷஸ்தரின் கதை உதாரண மாகக் காட்டப்பட்டது.

எட்டாம் அதிகரணத்தில் (விஹிதத்வாதி4கரணம் 3-4-8), மோக்ஷத்தில் விருப்பம் இல்லாத க்ருஹஸ்தர்களாலும், யஜ்ஞம், தானம், போன்ற கர்மங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அவை இவர்களுக்கு வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளன என்பது, காட்டித்தரப்படுகிறது.

ஒன்பதாம் அதிகரணத்தில் (விது4ராதி4கரணம் - 3-4-9 ), நான்கு ஆச்ரமங்களுள் எதிலும் சேராத அநாச்ரமியான விதுர்களுக்கும் (மனைவியை இழந்தவர் களுக்கும்) ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு, என்பது நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு உதாரணம்:- அநாச்ரமிகளான ரைக்வர் மற்றும் பீஷ்மரின் வாழ்க்கை, எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டது.

பத்தாவது அதிகரணத்தில் (தத்3பூ4தாதி4கரணம்- 3-4-10), ப்ரஹ்மச்சர்யம் போன்ற ஆச்ரமங்களில் உள்ளவர்கள், பாவச்செயல்களைச் செய்தால், அவர்கள் ப்ரஹ்மவித்யை தொடரக்கூடிய தகுதியை இழக்கிறார்கள். ஏனெனில், சாஸ்த்ரங்கள் அவர்கள் ப்ரஹ்ம வித்யையைத் தொடர தடை விதிக்கிறது என்பது காட்டப்பட்டது.

11- வது அதிகரணத்தில் (ஸ்வாம்யதி4கரணம் 3-4-11), உத்கீத2 உபாஸனை செய்ய விரும்பும் ஒருவர், அதற்கான யாகத்தை ஆற்றுவதற்குத் தகுதி பெற்ற சமய குருக்களின் உதவியோடுதான் மேற்கொள்ள வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டது.

12-வது அதிகரணத்தில் (ஸஹகார்யந்தரவித்4யதி4 கரணம்- 3-4-12 ) ‘மௌனம்’ என்பது தியானத் திற்கு உரிய பொருளை மனனம் செய்வது (மீண்டும் மீண்டும் சிந்திப்பது)-இந்தப் பண்பு, உபாஸகர்களுக்கு பாண்டித்யம் (ஆழ்ந்த அறிவு) மற்றும் பால்யத்வம் (பாலகனைப் போன்ற பண்பு) ஆகியவற்றுடன் சேர்த்து விதிக்கப்பட்டிருப்பது தெளிவாக்கப்படுகிறது.

‘‘தஸ்மாத் ப்3ராஹ்மண: பாண்டி3த்யம் நிர்வித்3ய பா3ல்யேந திஷ்டா2ஸேத் பா3ல்யம் ச பாண்டி3த்யம் ச நிர்வித்3யா (அ)த2 முநி:’’ (ப்ருஹ.5-5-1) (வைராக்யம் அவச்ய மாகையால் வேதாத்யயனம் செய்த அந்தணன் வேதார்த்தத்தைக் கேட்டறிந்து (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமையாகிற) பால்யத்துடன் நிற்கவேண்டும். பால்யத்தையும் பாண்டித்ய த்தையும் அடைந்தபிறகு சிறந்த மனனத்தையுடைய முநியாக வேண்டும்) என்னும் சொற்றொடர் காணப்படுகிறது, என்பதில் ‘முநி’ என்பதால், மனன ரூபமாகிய மௌனம் பேசப்படுகிறது.

‘‘ஶ்ரோதவ்யோ மந்தவ்ய:’’ (ப்ருஹ. 4-4-5, தை.ப்ருகு. 6-5-6) - ‘அவன் கேட்கப்பட வேண்டும்; நினைக்கப்பட வேண்டும்’, என்பதிலும் ‘மனனம்’ வித்யை களுக்குத் துணை போவ தாகவே நிர்வஹிக்கப்படுகிறது

13-வது அதிகரணத்தில் (அநாவிஷ்காராதி4கரணம் 3-4-13), ‘‘தஸ்மாத் ப்3ராஹ்மண: பாண்டி3த்யம் நிர்வித்3ய பா3ல்யேந திஷ்டா2ஸேத்’’ (ப்ருஹ. 5-5-1) - ‘ஆகையால் வேதாத்யயனம் செய்த அந்தணன் வேதார்த் தத்தைக் கேட்டறிந்து பால்யத்துடன் நிற்கவேண்டும்’,என்ற ப்ருஹ தாரண்யக உபநிஷத்தில் கூறபப்பட்டது போல், பால்யத்வம் என்பது, சிறு பிள்ளைத் தனமான பொறுப்பற்ற செயலைக் குறிக்காது. மாறாக, ‘தான் ப்ரஹ்ம ஞானி’ என்னும் கர்வத்தை விட்டு விட்டு சிறுபாலகனைப் போல, கள்ளங்கபடமற்று இருப்பதைக் குறிக்கும் என்று காட்டப்படுகிறது.

14- ஆவது அதிகரணத்தில் ( ஐஹிகாதி4கரணம்- 3-4-14), மோக்ஷத்தைக் காட்டிலும் வேறு பலன்களாகிய ஸ்வர்க்கானுபவம், செல்வம் போன்றவற்றை வேண்டி ஆற்றப்படும் வேள்விகள், உடனே பலன் தருமா, தராதா என்பது ஆராயப்பட்டு, தடை செய்யக்கூடிய ப்ராரப்த கர்மம் இல்லாத பொழுது, அவை உடனே பலன் தரும் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

15-ஆவது அதிகரணத்தில் (முக்திப2லாதி4கரணம் 3-4-15), மோக்ஷத்தை அடைவதற்கு ஆற்றப்படும் உபாஸனைகள், ப்ரஹ்மவித்திற்குப் பகையான ப்ராரப்த கர்மங்கள் தடை செய்யாத பொழுது, இலக்காகிய மோக்ஷத்தை, த்யானம் முடிந்த உடனே அடைவிக்கும் என்று காட்டப் பட்டது.

இவ்வதிகரணங்களுக்குள், இரண்டு, மூன்று மற்றும் பத்தாம் அதிகரணங்கள், ‘ப்ராசங்கிகங்கள்’. மேலும், பத்து அதிகரணங்களால், வித்யையே மோக்ஷ ஸாதனமென்றும், எந்த ஆச்ரமத்தில் இருந்தாலும், அந்த ஆச்ரம தர்மத்தை மேற்கொள்வதே அவர்கள் மேற்கொள்ளும் வித்யைக்கு அங்கங்களென்றும், எந்த ஆச்ரமத்திலும் சேராத விதுரர்கள் போன்றவர்களுக்குத் தவம், தானம் போன்ற கர்மங்கள் வித்யைக்கு அங்கமென்றும், க்ருஹஸ்தர்களுக்கு, சமம், தமம் போன்ற குணங்கள் வித்யைக்கு அங்கமென்றும், தகாத உணவைத் தவிர்ப்பதும் வித்யையின் அங்கமென்றும், வித்யாங்கங்களுக்கே ஆச்ரமத்தின் அங்கமாக இருக்கும் பண்புகள் உண்டென்றும், ஆச்ரம தர்மங்களையும் கைவிட்ட வர்களுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை என்பதும், மற்றும் பாண்டித்யம், பாலகரூபம் ஆகியவை வித்யைக்கு அங்கங்கள் என்றும் நிரூபிக்கப்பட்டது.

14, 15-வது அதிகரணங்களில், பாதகமற்ற நிலையில், அங்கங்களால், அங்கியான உபாஸனத்திற்கு பலன் தரும் தகுதியில் மாற்றமில்லை என்பது நிலை நிறுத்தப் பட்டது.

இவற்றுள் ப்ராஸங்கிகளான இரண்டு மூன்று மற்றும் பத்தாவது அதிகரணங்களை விட்டு விட்டு, பத்து அதிகர ணங்களின் பொருளை, ‘‘உள்ளமுறை செயல், உள்ள இம் மூன்றையும், உள்ளிக்கெடுத்து, இறை உள்ளில் ஒடுங்கே’’ (திருவாய். 1-2-8) என்று ஆழ்வார் அருளிச்செய்கிறார். ‘மனனம் செய்வதற்கு (மீண்டும் மீண்டும் சிந்திப்பதற்கு) உதவியாக இருக்கும் மனமும், ஸ்தோத்ரம் செய்து துதிக்க உதவியாக இருக்கும் வாக்கும், வணங்கி எழ உதவியாக இருக்கும் உடலும், ஆகிய இம்மூன்றையும் , இவை படைக்கப்பட்ட காரணத்திற்காக உபயோகித்து, மற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பலனாகிய பரமாத்மாவிடம் ஈடுபடச் செய்யுங்கள்’ என்று ஆழ்வார் உபதேசித்தார். இதனால், அங்கத்தின் வடிவத்தையும், இந்த அங்கங்களால் அங்கி கிடைக்கப் பெறுவதையும் வெளி யிட்டருளினார் ஆழ்வார்.

முதல் அதிகரணம் (புருஷார்த்தா2தி4கரணம் 3-4-1), வித்யையே மோக்ஷ சாதனம் என்று நிரூபிக்கிறது. இதையே ஆழ்வார், ‘‘இறையுள்ளிலொடுங்கே’’ (திருவாய். 1-2-8) என்கிறார்.ஸித்தோபாயமாக உள்ள பரமாத்மாவை பற்றுத லாகிய, ஜ்ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கிறார், இப்பாசுரவரியில்.

நான்கு (அக்3நீந்த4நாத்3யதி4கரணம் 3-4-4 ), ஐந்து (ஸர்வாபேக்ஷாதி4கரணம் 3-4-5) மற்றும் ஒன்பதாவது (விது4ராதி4கரணம் 3-4-9)அதிகரணங்களில், வானப்ரஸ்த ஆச்ரமத்தில் உள்ளவர்களுக்கு, அவர்கள் ஆசர்மத்திற்கு ஏற்ற கர்மங்களே வித்யையின் அங்கங்கள் என்றும், க்ருஹஸ்தர் களுக்கு அவர்கள் ஆச்ரமத்திற்கு ஏற்ற வேள்வி போன்றவை அங்கங்கள் என்றும், மனைவியை இழந்த விதுரர்களுக்கு தானம் போன்றவை, வித்யைக்கு அங்கமென்றும் நிர்ணயிக்கப்பட்டது.

பரமாத்மாவை அடையும் உபாயங்களில், கைமுத லற்ற ‘அகிஞ்சன’னான ந்யாஸவித்யா நிஷ்டனுக்கு, பலனும், சாதனையும் ஒன்றே என்பதை, ‘‘உள்ளம் உரை செயல் இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து’’ (திருவாய். 1-2-8) என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார். இந்தப் பாசுரவரிகளில் காட்டப்பட்ட மனம், வாக்கு, உடலால் பரமாத்மாவை வழிபடுவதை, அங்கமாக அருளிச் செய்கிறார், இதனால், மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அதிகாரிகளுக்கு விதிக்கப் பட்ட, ‘செயல்களை அங்கமாகக் கொண்ட அநுஷ்டானத் தால் கூடிவரும் வித்யை’, ந்யாஸவித்யா நிஷ்டனுக்கு கைகூடுமென்று சொல்லப்பட்டது.

ஆறாவது அதிகரணத்தில் (ஸமத2மாத்3யதி4கரணம் 3-4-6),’மேற்கொள்வது, கைவிடுவது’ ஆகிய கர்மங்க ளுக்குள் விரோதமில்லை என்று நிரூபிக்கப்பட்ட பொருள், ‘‘உள்ளம் உரை செயல்’’ (திருவாய். 1-2-8) என்பதால் காட்டப்பட்டது. இதனால், வேண்டாதவை ஒதுக்கப் படுவதையும், வேண்டியவை கைக் கொள்ளப்படுவதும் தெளிவாக அறியப்படுகிறது.

தேவையற்ற விஷயங்களிலிருந்து, மனம், வாக்கு, உடல் ஆகியவற்றை மீட்க வேண்டும் என்று கூறும் இந்தப் பாசுர வரிகளால், ஏழாவது அதிகரணத்தில் (ஸர்வாந்நாநு மத்யதி4கரணம் 3-4-7) கூறப்பட்ட பொருளும் அறியப்படுகிறது. எட்டாம் அதிகரணத்தில் (விஹிதத்வாதி4 கரணம் 3-4-8) குறிப்பிடப்பட்ட வித்யாங்கத்வமும், ஆச்ரமாங்கத்வமும் ஒரு தர்மத்திற்கே கூடும் என்பதை, இதர விஷயங்களில் ஈடுபடும் மனம் முதலியவற்றை பகவத் விஷயத்தில் ஈடுபடும்படி விதிக்கையால், ஆழ்வார் இப்பாசுர வரிகளில் விவரித்தார் ஆயிற்று.

பத்தாவது அதிகரணத்தில் (தத்3பூ4தாதி4கரணம் 3-4-10), ஆச்ரம தர்மங்களைக் கைவிட்டு, தகாதசெயல் களில் ஈடுபடுபவர்களுக்கு, வித்யையில் தகுதியில்லை என்பது கூறப்பட்டது. இதையே ஆழ்வார், ‘‘உள்ளம் உரை செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து’’ (திருவாய். 1-2-8) என்று ஆச்ரம ப்ரஷ்டர்களுக்கு ஏற்படக் கூடிய கொடுமையை அருளிச் செய்கிறார் என்பது உணர்த்தப் படுகிறது.

12-ஆம் அதிகரணத்தில்(ஸஹகார்யந்தரவித்4யதி 4 கரணம் 3-4-12), மற்ற விஷயங்களில் உள்ள ஈடுபாட்டை, பகவத் விஷயத்தில் ஈடுபடச் சொல்லி விதிப்பது இப்பாசுர (திருவாய். 1-2-8) வரிகளில் காட்டப்படுகிறது என்று கொள்ளலாம்.

13-ஆம் அதிகரணத்தில் (அநாவிஷ்காராதி4கரணம் 3-4-13) ‘பாலகனைப் போல் இருப்பது’ என்பது குழந்தைகள் போல மனம் போனபடி இருப்பதைக் குறிப்பதன்று, ‘தமக்குள்ள வித்யா கர்வத்தைத் தொலைத்து விட்டு இருப்பது அது’ என்பது விளக்கப்பட்டது. இவ்வாறு மனம் போனபடி செயலாற்றக்கூடாது என்பதும், இந்தப் பாசுர (திருவாய். 1-2-8) வரிகளால் உணர்த்தப்பட்டது என்னலாம்.

14-ஆம் (ஐஹிகாதி4கரணம் 3-4-14) மற்றும் 15-ஆம் (முக்திப2லாதி4கரணம் 3-4-15)அதிகரணங்களில், அங்கங்களோடு கூடி இருக்கையிலேதான் அங்கியான வழிபாடு பலனைத் தரும் என்பது, மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் பரமாத்மா வழிபடப்படவேண்டும் என்னும் ஆழ்வார் வாக்கால் தெளிவாகிறது.

7.0. இவ்வாறாக திருவாய்மொழி 1-2-8ஆம் பாசுரத்திற்கும், அங்கபாதத்திற்கும் (மூன்றாம் அத்யாயம் நான்காம் பாதம்) இடையே கருத்தொற்றுமை உள்ளது காட்டித்தரப்பட்டது.

7.1. இனி, அடுத்ததாக சாரீரக மீமாம்ஸை நான்காம் அத்யாயத்திற்கும், (பலாத்யாயம்), திருவாய்மொழி ‘‘ஒடுங்க அவன்கண்’’ (1-2-9) பாசுரம், ‘‘எண்பெருக்கு அந்நலத்து’’ (1-2-10 ) பாசுரம் ஆகியவற்றிற்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை காட்டப்படுகிறது. இதில் 1-2-9-ஆம் பாசுரம் நான்காம் அத்யாயத்தின் முதல் (ஆவ்ருத்திபாதம்) மற்றும், இரண்டாம் (உத்க்ராந்திபாதம்) பாதங்களுடனும், 1-2-10-ஆம் பாசுரம் மூன்று (கதிபாதம்) மற்றும் நான்காம் (முக்தி-பல பாதம்) பாதங்களுடனும் கருத்தொற்றுமை கொண்டிருப்பது அறியப்படுகிறது.

முதல் பாதம் (ஆவ்ருத்திபாதம்) முதல் அதிகரணத் தில் (ஆவ்ருத்த்யதி4கரணம் 4-1-1), ‘வேத3ந’’ எனப் படுவது , ‘‘உபாஸனம்: அல்லது, ‘‘த்யானம்’’ என்னும் சொற்கள் தரும் அதே பொருளைக் கொண்டது என்பது நிலைநாட்டப்பட்டு, மிக உயர்ந்த இலக்கை அடைய இது நேரான பாதை, எனவே, இது மீண்டும் மீண்டும் தொடர்ச்சி யாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.

இரண்டாம் அதிகரணத்தில் (ஆத்மத்வோ பாஸ நாதி4கரணம் 4-1-2), உபாஸனைகள் மேற்கொள்ளப் படுகையில், (த்யானிக்கையில்), ப்ரஹ்மத்தை, தன்னைக் காட்டிலும் வேறுபட்டவனாக த்யானிக்க வேண்டுமா, அல்லது வேறுபடாதவனாக த்யானிக்க வேண்டுமா என்னும் கேள்விக்கு, ‘ப்ரஹ்மம் தனக்கு, உள் உறைபவனாக’ த்யானிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது,

‘‘ப்3ரஹ்மாத்மேத்யேவ உபாஸீத’’ - ‘ஒருவர் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகவே வழிபட வேண்டும்’ என்கிற சொற்றொடரால் அறியப்படுகிறது.

மூன்றாம் அதிகரணத்தில் (ப்ரதீகாதி4கரணம் 4-1-3 ),

‘‘மநோ ப்3ரஹ்மேத்யுபா ஸீத’’ (சாந். 3-18-1) - ‘மனத்தை ப்ரஹ்மமாக உபாஸிக்கக் கடவன்’, என்கிற வாக்கியத்தில் காணப்படுவதுபோல, உபாஸகன், மனம், ப்ராணன் போன்ற இருப்பினங்களை உபாஸிக்கையில், இவற்றை அவன் தன் ஆத்மாவாக எண்ண வேண்டுமா? என்னும் வினா எழ, அவன் இவற்றை தன் ஆத்மாவாக எண்ணக்கூடாது என்று விதிக்கப்பட்டது.

நான்காம் அதிகரணத்தில் (ஆதி3த்யாதி3மத்யதி4 கரணம்), உத்கீதை2, ஆதித்யனின் ஓர் அடையாளக்குறியீடு என்று த்யானிக்கையில், உத்கீதை2யே ஆதித்யனாக த்யானிக்கப்படவேண்டும். ஏனெனில், ஆதித்யன் உத்கீதை2யைக் காட்டிலும் உயர்ந்த இருப்பினம் (உத்கர்ஷ முடையது) எனப்பட்டது. இப்படி, உத்கர்ஷமான ஆதித்யனே பலனைத் தருபவன் என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஐந்தாம் அதிகரணத்தில் (ஆஸீநாதி4கரணம் 4-1-5), உபாஸனையில் ஈடுபடுகையில், உபாஸகன் நிற்க வேண்டுமா, அமர்ந்திருக்க வேண்டுமா, அல்லது படுத்திருக்க வேண்டுமா என்னும் ஐயப்பாடு எழ, ‘நிற்பது கடினம், படுத்தால் உறக்கம் ஏற்படக்கூடும், எனவே, அமர்ந்த நிலையே சிறந்தது’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உடலும், மனமும் உறுதியான நிலையில் இருக்கும்.

ஆறாம் அதிகரணத்தில் (ஆப்ரயாணாதி4கரணம் 4-1-6),

‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோக மபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘அவன் இப்படி வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸநத்தையும் தன் ஆயுள் முடியும்வரை அநுஷ்டித்து ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான்; (அங்கிருந்து) அவன் திரும்பி வருவதில்லை, அவன் திரும்பி வருவதில்லை’ என்கிற சாந்தோக்ய ச்ருதி வாக்கியத்தின்படி, த்யானம் என்பது ஒருவரின் வாழ்க்கை முடியும் வரையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

[Explanatory Note: (i) The previously mentioned characteristics of the meditation are its frequent repetition, its having to be performed when seated etc., (ii) ''Departure from life'' does not necessarily mean the end of the life in which meditation is carried out. The prarabdha-karma or the karma which has begun to yield fruits has to be exhausted; and that may mean one or more lives to be lived, (iii) Ramanuja appears to have quoted Chand.Up.(8-15-1) by way of implied reply to Sankara's view that this section deals only with upasanas which do not have moksha or right knowledge as their aim.].

ஏழாம் அதிகரணத்தில் (தத3தி4க3மாதி4கரணம் 4-1-7), ப்ரஹ்மத்தின் தெளிவான காட்சி தெரியும் அளவிற்கு பக்குவ நிலை அடைந்து விட்ட உபாஸனம். இதற்கு முன்பு செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நசிக்கச் செய்யும் வல்லமை பெற்றது (விநாசம்). இதற்கு மேல் அறியாமல் செய்யும் தீய கர்மங்கள், உபாஸகனைத் தீண்டுவதில்லை (அஶ்லேஷ) எனப்பட்டது. அவன் அதன் பலனை அநுபவிப் பதில்லை என்பது.

‘‘Ôநாபு4க்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி (ப்ரஹ்மவைவர்த்தபுராணம் \&ப்ரக்ருதி காண்டம் 26.70) (நூறுகோடி கல்பங்களானாலும் கர்மம் அனுபவிக்காமல் அழியாது) என்னும் சாஸ்த்ர வசனத்துக்கு முரணாக உபாஸகனுக்குக் கர்மங்கள் அழிகின்றன’ என்றும் ‘ஒட்டுவதில்லை’ என்றும் கூறுவது பொருந்தாது’(அவதாரி கையில் எடுத்த) வேதச்சொற்றொடர்களும் ப்ரஹ்ம வித்யா விதிக்கு ஶேஷமான அர்த்தவாத வாக்யங்களேயாகும். ஆகையால் இந்தச் சொற்றொடர்கள் வித்யையைப் புகழ்வதற்காக ஏற்பட்டவை என்றே கொள்ள வேண்டும். ஆகையால் உபாஸகனுக்குச் சொல்லப்படும் கர்மங்களின் அச்லேஷ விநாஸங்கள் பொருந்தமாட்டா என்று தேறிற்று''.

இந்த வாதம் பொருந்தாது. உபாஸகனுக்கு உபாஸன மானது நேரே காணும் காட்சிபோல் ஸித்தித்தவளவில், செய்யப்போகும் பாபங்களுக்கு ஒட்டாமையும், செய்த பாபங்களுக்கு அழிவும் உண்டாகின்றன என்று முற்கூறிய வேதச்சொற்றொடர்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

எட்டாம் அதிகரணத்தில் (இதராதி4கரணம் 4-1-8), உபநிஷத்துக்கள், ‘பாவங்கள் என்பது புண்யங்களையும் சேர்த்ததாகும்’’ என்பது தெளிவாக்கப்படுகிறது. ஏனெனில், புண்ய கர்மங்களும், பாவ கர்மங்களைப் போல மோக்ஷ மடைய தடையாக நிற்கக்கூடியவை.

ஒன்பதாம் அதிகரணத்தில் (அநாரப்3த4கார்யாதி4 கரணம் 4-1-9 ), வித்யையால் இன்னும் பலன் தரத் தொடங்காத புண்யபாப கர்மங்கள், முழுவதுமாக அழிக்கப் படுகிறது என்றும், பலன் தரத்தொடங்கிவிட்ட புண்யபாப கர்மங்கள் நசிப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டது.

It is only the two (i.e., sin and merit) which are earlier (than vidya) and which have not begun to produce their fruits (that perish), because they (i.e., the karmas which have begun to yield fruits) last till that (i.e., death).

பத்தாம் அதிகரணத்தில் (அக்3நிஹோத்ராத்3யதி4 கரணம் 4-1-10), ப்ரஹ்ம வித்யையில் ஈடுபட்ட ஒருவருக்கு, ‘அவர் ஆச்ரம தர்மமான அக்நிஹோத்ரம் போன்றவை தரும் பலனால் அவருக்கு உபயோகம் இல்லை என்பதால், அவற்றை, அவர் மேற்கொள்ள வேண்டுமா’ என்னும் வினா எழ, ஆச்ரமங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மங்கள் கடைப் பிடிக்கப்பட வேண்டியதே என்று உணர்த்தப்பட்டது.

பதினொன்றாவது அதிகரணத்தில் (இதரக்ஷபணாதி4 கரணம் 4-1-11), பலனைத் தரத்தொடங்கிவிட்ட புண்யபாப வடிவான ப்ராரப்த கர்மத்தின் பலன், இந்த பிறவி முடிவதற்குள் அநுபவிக்கப்படவேண்டும். அவை முடியாமல் போனால் இன்னொரு பிறவி அடைந்தாவது அதை அநுபவித்தே தீரவேண்டும் என்று விளக்கப்பட்டது.

இரண்டாம் பாதம் (உத்க்ராந்தி பாதம்) எனப்படுகிறது. இதன் முதல் அதிகரணத்தில் (வாக3தி4கரணம் 4-2-1),

‘‘வாங்மநஸி ஸம்பத்3யதே’’ (சாந். 6-8-6) - ‘வாக்கானது மனதில் லயமடைகிறது’ என்று, ஒருவர் மரணம் அடை கையில், அவருடைய வாக்கானது மனதுடன் சேர்கிறது என்பது விவரிக்கப்படுகிறது. இதனால், வாக்கின் ஸ்வரூபம் மனதுடன் ஒன்றுபடுகிறது என்பது நிர்ணயிக்கப் பட்டது.

இரண்டாம் அதிகரணத்தில் (மநோதி4கரணம் 4-2-2)

‘மந: ப்ராணே ஸம்பத்3யத’ (சாந்தோ. 6-8-6) - ‘மனம் ப்ராணனில் அமிழ்கிறது’ என்பதால், மனம் ப்ராணனில் ஒடுங்குவது கூறப்பட்டது. எல்லா இந்திரியங்களுடன் கூடிய மனம், ப்ராணனில் கரைவதில்லை. ஆனால் அத்துடன் ஒன்று படுகிறது என்பது காட்டப்பட்டது.

மூன்றாம் அதிகரணத்தில் (அத்4யக்ஷாதி4கரணம் 4-2-3),

‘‘ப்ராணஸ்தேஜஸி’’ (சாந். 6-8-6) - ‘ப்ராணன் தேஜஸில் (ஒளியில்)’. ப்ராணனானது, தேஜஸிலேயே (ஒளியிலேயே ஒடுங்குகிறது) என்பதால், ப்ராணன் தேஜஸில் மட்டும் ஒன்றுவது குறிப்பிடப்படவில்லை, மாறாக எல்லா புலனுறுப் புகளுடன் கூடிய ப்ராணன், எல்லா புலனுறுப்பு களின் எஜமானனாகிய ஜீவனுடன் ஒன்றுகிறதை குறிப் பிடுகிறது என்பது தெளிவாக் கப்பட்டது. ‘‘ப்ராணஸ்தேஜஸி’’ (சாந். 6-8-6) - ‘ப்ராணன் தேஜஸில்’. இதில், ஜீவனுடன் தொடர்பு கொண்ட பிறகு, இணைந்து, தேஜஸில் ஒடுங்குவது குறிப்பிடப் பட்டுள்ளது. இது கங்கையுடன் இணைந்து யமுனையானது கடலிடம் செல்லும் போதிலும், ‘யமுனை கடலிடம் செல்கிறது’ என்பது எவ்வாறு முரண்படாதோ, அதைப் போன்றது.

நான்காம் அதிகரணத்தில் (பூ4தாதி4கரணம் 4-2-4), தேஜஸுடன் ப்ராணன் ஒன்றுவது, உபநிஷத் வார்த்தைகளில் காட்டப்படுகிறது. இது, ப்ராணன் ஒளி ஒன்றினோடு மட்டும் ஒன்றுவதைக் குறிப்பிடுவதல்ல. நெருப்பையும் சேர்த்து மற்ற நுண்ணிய பூதங்களுடன் ஒன்றுவதைக் குறிப்பிடுகிறது என்பது விளக்கப்படுகிறது.

ஐந்தாம் அதிகரணத்தில் (ஆஸ்ருத்யுபக்ரமாதி4 கரணம் 4-2-5 ), ஜீவன் உடலைவிட்டு வெளியேறும் ‘‘உத்க்ராந்தி’’ எனப்படுவது, ப்ரஹ்மத்தை உணர்ந்தவர் களுக்கு மட்டுமா? அல்லது ப்ரஹ்மத்தை உணர எந்த உபாஸனையும் மேற்கொள்ளாதவர்களுக்கும் பொதுவானதா? என்னும் வினா எழ, இதயத்திலிருந்து புறப்பட்டு கபாலத்தின் நடுப்பகுதியை அடையும் மூர்த்தந்ய நாடியில் நுழைவது வரை, இந்த உத்க்ராந்தி என்பது இருவகைப்பட்டவர்களுக்கும் பொதுவானது என்று காட்டப்பட்டது.

ஆறாம் அதிகரணத்தில் (பரஸம்பத்த்யதி4கரணம் 4-2-6), உத்க்ராந்தியின் இறுதி கட்டத்தில், ஸூக்ஷ்ம சரீரத்தால் மூடப்பட்ட ஜீவாத்மாவிடம், இன்ப துன்பங்கள் விளைவிக்கும் கர்மங்கள் ஏதும் காணப்படாததால். அதற்கு பரமாத்மாவின் அநுபவம் கிடைக்காது என்பது மறுக்கப் படுகிறது.

‘தேஜ: பரஸ்யாம் தே3வதாயாம்’’ (சாந். 6-8-6) - ‘தேஜஸானது, மிக உயர்ந்த இறைவனிடம்’ என்னும் ச்ருதி வாக்கியத்தால் இந்த அநுபவம் உண்டென்று காட்டப் படுகிறது. ஜீவனானவன், தன் ப்ராணன் மற்றும் நுண்ணிய நிலையிலுள்ள புலன்களோடு, அந்தர்யாமியாக உடலினுள் உள்ள பரதேவதையோடு தற்காலிகமாக ஒன்றி அநுபவிக்கிறான். இது இத்தனை காலம் ஸம்சாரத்தில் அநுபவித்த துன்பம் தீருவதற்காக என்று காட்டித்தரப்பட்டது.

ஏழாம் அதிகரணத்தில் (அவிபா4கா3தி4கரணம் 4-2-7 ),

‘‘வாங்மநஸி ஸம்பத்3யதே’’ (சாந். 6-8-6) - ‘வாக்கானது, மனதில் ஒடுங்குகிறது’ என்பதில் ‘ஸம்பத்யதே’ என்பது, ஜீவாத்மா பரமாத்மாவில் கரைந்து விடுவதைக் குறிப்பிடாது, மாறாக அவன் தனியாக அடையாளம் காணப்பட இயலாத வண்ணம் ஒன்று படுகிறான். (அவிபாகம்) என்பதைக் காட்டுகிறது என்பது உறுதி படுத்தப்பட்டது.

எட்டாம் அதிகரணத்தில் ( ததோ3கோதி4கரணம் 4-2-8), ‘‘இதயத்திலிருந்து புறப்படும் நூற்று ஒரு நாடிகளில் ஸுஷும்நா நாடி வழியாகவே ஜீவன் வெளியேற வேண்டும் என்னும் நியதி இல்லை. எந்த நாடி வழியாகவும் வெளியேறலாம்’’ என்பது மறுக்கப்பட்டு, உபாஸகனின் இடைவிடாத த்யானத்தால் மகிழ்ந்த பரமாத்மா, அவன் ஸுஷும்நா நாடி வழியாக வெளியேற போதிய வெளிச்சத்தை ஏற்படுத்தித் தருவதாலும், உபாஸகன் தொடர்ந்து அர்ச்சிராதி மார்க்கத்தை சிந்தித்துக்கொண்டே இருப்பதாலும் அவன் ஸுஷும்நா நாடி வழியாகவே வெளியேறுவான் என்பது நிர்ணயிக்கப்பட்டது.

‘‘தம் சைகா ச ஹ்ருத3யஸ்ய நாட்3யஸ்தாஸாம் மூர்தா4நமபி4நிஸ்ஸ்ருதைகா I தயோர்த்4வமாயந்நம்ருதத்வ மேதி விஷ்வங்ஙந்யா உத்க்ராமணே ப4வந்திII’’ (கடோ. 6-16) - ‘தலையை நோக்கிச் செல்லும் நூற்றோராவது ஸுஷும்நாநாடியின் மூலமாகவே ப்ரஹ்மஜ்ஞானி வெளிக்கிளம்புகிறான்; மற்றவர்கள் மற்ற நாடி மூலமாக வெளிக்கிளம்புகிறார்கள்’. என்னும் ச்ருதி வாக்யம், ஜீவன், மூர்த்த நாடி வழியாகவே (ஸுஷும்நா நாடி) வெளியேறு வதைக் குறிப்பிடுகிறது.

ஒன்பதாவது அதிகரணத்தில் ( ரஶ்ம்யநுஸாராதி4 கரணம் 4-2-9 ), உடலிலிருந்து வெளியேறிய ஜீவன், சூரிய கிரணங்கள் வழியாக பயணிக்க வேண்டியுள்ளதால், இரவில் மரணம் அடைபவர்களுக்கு, இந்த பாதை கிடையாது என்னும் எண்ணம் மறுக்கப்பட்டு, இரவிலும் சூரிய கிரணங்கள் உண்டு என்பதால் இரவில் மரணமடைபவர் களுக்கும் இந்த பாதை வழியே பயணம் உண்டு என்று நிர்ணயிக்கப்பட்டது.

பத்தாவது அதிகரணத்தில் (நிஶாதி4கரணம் 4-2-10), இரவில் மரணம் அடைவதை சாஸ்த்ரம் போற்றுவதில்லை. எனவே, ‘இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம வித்திற்கு ப்ரஹ்ம ப்ராப்தியில்லை’ என்பது மறுக்கப்படுகிறது. கர்ம ஸம்பந்தம் ஒழிவதாலேயே மோக்ஷம் என்பதால், ப்ரஹ்மவித் இரவில் இறந்தாலும், ப்ரஹ்மத்தை அடைகிறான் என்று உறுதிபடுத்தப்பட்டது.

11-வது அதிகரணத்தில் (த3க்ஷிணாயநாதி4கரணம் 4-2-11), தக்ஷிணாயனத்தில் (சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் காலம்) மரணம் அடையும் ப்ரஹ்மவித் சந்திரனை அடைகிறான் என்றும், சந்திர லோகத்தை அடைபவர்கள் மீண்டும் பூவுலகம் திரும்புகிறார்கள் என்றும் ச்ருதி கூறுவதால், இவனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி இல்லை எனப்படுவது மறுக்கப்படுகிறது. பித்ருயான பாதையில் சந்திர லோகத்தை அடைபவர்களே மீண்டும் பூலோகம் வருவார்கள் என்பதாலும், சந்திரலோகம் அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்கிற நியதி இல்லாததாலும், இவர்களுக்கும் ப்ரஹ்மப்ராப்தி உண்டு என்று நிச்சயிக்கப்பட்டது.

இவ்வாறாக முதல் பாதத்தில், முதல் ஆறு அதிகரணங்களால், பல்வேறு உபாஸனங்களின் ஸ்வரூபம் ஆராயப்பட்டது. ஏழாம் அதிகரணம் தொடங்கி மேற்படி ஐந்து அதிகரணங்களில், ஜீவாத்மா தேஹத்துடன் கூடி இருக்கை யில் வித்யையால் கிடைக்கும் பலன் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாதத்தில், ‘‘உத்க்ராந்தி நிரூபணம்’’ எனப்படும், மரணம் சம்பவிக்கையிலும் அதன் பிறகும் நடைபெறும் நிகழ்வுகள் விவரிக்கப்பட்டன. இப்படி, இந்த இரண்டு பாதங்களால் உணர்த்தப்பட்ட பொருளை, ஆழ்வார், -’’ஒடுங்க அவன்கண் ஒடுங்கலும் எல்லாம் விடும்; பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே’’(திருவாய்.1-2-9) என்று அருளிச்செய்தார். ‘‘ஸ்வாமியானவனிடமிருந்து இயற்கை யான தயை உன்னிடம் பாயும்பொழுது, ஆத்மாவின் அஜ்ஞானம் போன்ற தன்மைகள் அழியும். ஞானத்தின் சுருக்கம் கழியும். இதனால், உண்டாகும் அவித்யைகள் எல்லாம் விலகும். அச்சமயம், இந்த உடலின் முடிவைப் பார்த்து அதை விடும் பொழுதை எண்ண வேண்டும்’’ என்று ஆழ்வார் உபதேசிக்கிறார்.

‘‘ஒடுங்குக அவன் கண்’’ (திருவாய். 1-2-9) என்கிற முதல் வரியாலே முதல் பாதம், ஆறு அதிகரணங்களில் வெளியிடப்பட்ட உபாஸனைகளின் ஸ்வரூபம் ஆராயப்பட்டு நிர்வஹிக்கப்பட்ட விஷயம் அறிவிக்கப் பட்டது.

‘‘ஒடுங்கே’’(திருவாய். 1-2-9) என்பது, ‘‘பஜன பரமாகவும்’’ யோசிக்கப்பட்டது என்று ஈட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது, சதுர்விம்சதி ஸஹஸ்ரம் (இருபத்துந ாலாயிரப்படி), முதலிய வ்யாக்யானங்களில், ‘‘பஜநம் எளிதானாலும்’’ என்றும், ‘‘பஜநமாவது தனக்காக தந்த கரணங்களை அவனுக்குக் கொடுக்கை’’ என்றும் விளக்கம் தரப்பட்டது எனவே, இந்தப் பாசுரம் ‘‘பஜனபரமானது’’ எனத்தட்டில்லை.

7.2. ‘‘வீடுமின் முற்றவும்’’ (திருவாய். 1-2)- ப்ரபத்திபரம்’’, ‘‘பத்துடை எளியவர்’’ (திருவாய். 1-3)- பக்திபரம் என்று சொல்லப்படுவதற்கு, ‘‘இப்படி இப்பாசுரம் பஜனபரம் என்று சொல்வது பொருந்தாதே எனில்’’, ஸ்ரீபாஷ்யகாரர் காலத்திற்கு முற்பட்ட முதலிகள் இவ்வாறு நிர்வஹிக் கிறார்கள் என்றாலும், ஸ்ரீபாஷ்யகாரருக்குப் பிற்பட்ட முதலிகள், இந்த இரண்டு பத்துகளும் பக்திபரமென்று நிர்வஹிக்கிறார்கள். மேலும், வ்யாக்யானம் அருளிச் செய்யும் அனைவரும், இப்பாசுரம் பஜநபரமானது என்று விளக்குவதாலும், இங்கே கருத்து வேற்றுமை இல்லை.

ஆனால், ‘‘வீடுமின் முற்றவும்’’ (திருவாய் 1-2)- பக்தி பரமாயும், இந்த பாசுரம் - பஜந ப்ரகார பரமாயும் இருந்த போதிலும், ‘‘இந்த திருவாய்மொழி ஸாத்ய பக்தியை காட்டித்தருவது’’ என்று, ‘‘வீடுமின் முற்றவும்’’ பாசுர விளக்கம் தொடக்கத்திலேயே நம்பிள்ளை நிர்ணயம் பண்ணியிருப் பதால், இது ஸாத்யபக்தி பரமானது என்பது தோன்றும். இவ்வாறிருக்கையில் இந்த ஆறு அதிகரணங்கள் காட்டித்தரும் ஸாதன பக்தி, இத்துடன் எவ்வாறு பொருந்தும் என்ற வினா எழுகிறது.

இதற்காகத் தரப்படும் விளக்கம்: நாதமுநி போன்ற நம் பூர்வாசார்யர்கள் மேற்கொண்ட ஸாத்யபக்திக்கும், உபாஸகன் மேற்கொள்ளும் ஸாதன பக்திக்கும்,’ஸாதனையில் ஈடுபடு கிறோம்’ என்ற எண்ணத்தால் வரும் பேதம் உள்ளதே ஒழிய, ஸ்வரூபங்களில் வேறுபாடு இல்லை. யமம், நியமம், ப்ராணயாமம் போன்றவற்றை மேற்கொள்வதிலும், கீர்த்தனம், யாகம், வந்தனங்கள் போன்றவற்றாலும், பிற அநுஷ்டானங் களாலும், இரண்டும் ஒத்திருக்கின்றன. எனவே, இந்தப் பாசுரம், ஸாத்ய பஜனத்தை சொன்னாலும் ஸாதன பஜனையைக் கூறும் அதிரணங்களுடன் கருத்தொற்றுமை கொண்டுள்ளது என்பது ஏற்கத்தக்கதே. (குறிப்பு:- சாத்ய பக்தி- பரமாத்மாவையே உபாயமாகப்பற்றுவது; சாதன பக்தி- பரமாத்மாவை அடைய உபாயங்களை அனுஷ்ட்டித்தல் )

இனி, ஏழு முதல் பதினொன்றராம் அதிகரணம் வரை, ஐந்து அதிகரணங்களில் உடம்பின் தொடர்போடு இருக்கை யில், வித்யையின் பலன் கிடைப்பது. ‘‘ஒடுங்கலு மெல்லாம் விடும்’’(திருவாய். 1-2-9) என்பதால், அருளிச் செய்யப் படுகிறது. ஆத்ம ஸ்வரூபத்திற்குப் பொருந்தாத அவித்யை யால் ஏற்படும் கர்ம பலன்களை அநுபவிப்பதாகிய ப்ரக்ருதி தொடர்பு, விட்டு விடும்’ என்று வித்யையின் பலனால், எல்லாவிதமான விரோதி ஸ்வரூபங்களும் நீக்கப்படுவது இந்தப் பாசுர (திருவாய். 1-2-9) வரிகளால் அறிவிக்கப் படுகிறது.

‘‘உடலை விடுவதை சிந்தியுங்கள்’’ என்பதை- ‘‘ஆக்கை விடும்பொழுது எண்ணே’’(திருவாய். 1-2-9) என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். இதனால் மரணம் ஏற்படுகையில் நடைபெறும் நிகழ்வுகளை வர்ணிக்கும் உத்க்ராந்தி பாதத்தின் ஒன்றாம் அதிகரணத்திலிருந்து, எட்டாம் அதிகரணம் வரையிலும் விளக்கப்பட்ட விஷயங்கள், இவ்வரிகளால் அறிவிக்கப் பட்டது. பஞ்ச பூதங்களும் ஒன்றாக ஒடுங்குவது, ‘‘ஆக்கை விடும்’’ (திருவாய். 1-2-9) என்பதால் அறிவிக்கப்பட்டது.

ஒன்பதாம் அதிகரணம் தொடங்கி பதினொன்றாம் அதிகரணம் ஈறாக, ‘ப்ராரப்த கர்மம் முடிகையிலேயே மோக்ஷம்’ என்பதும், முக்தியடைவதற்கு அதிகாரியை ‘‘சரீரத்தை விடும் காலம் எப்பொழுது வரும்’ என்று சிந்தி’’ என்று அறிவுறுத்துவதும், ‘‘விடும்பொழுதெண்ணே’’ (திருவாய். 1-2-9) என்பதால் காட்டப்பட்டது.

இவ்வாறு பாசுரம் 1-2-9திற்கும், சாரீரக மீமாம்ஸை நான்காம் அத்யாயம், முதல் மற்றும் இரண்டாம் பாதங் களுக்கும், கருத்தொற்றுமை உள்ளது காட்டப்பட்டது.

மேற்கொண்டு, திருவாய்மொழி ‘‘எண் பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறு இல, வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே’’ (திருவாய். 1-2-10), என்னும் பாசுரத்திற்கும், சாரீரக மீமாம்ஸையின் நான்காம் அத்யாயம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை ஆராயப்படுகிறது.

நான்காம் அத்யாயாத்தில், கதிபாதம் எனப்படும் மூன்றாம் பாதம், முதல் அதிகரணத்தில் (அர்ச்சிராத்3யதி4 கரணம் 4-3-1), ப்ரஹ்ம ப்ராப்தி அடைந்த ஜீவன், ‘அர்ச்சிராதி’ என்னும் மார்க்கம் வழியாக பயணிப்பதாகவும், வேறு சில மார்க்கங்களில் பயணிப்பதாகவும் மாறுபட்ட கருத்துக்கள், சாந்தோக்ய மற்றும் வாஜஸநேயங்களில் காணப்படுகிறது. இதில் எது பொருத்தம் என்று ஆராயப்பட்டு, ‘‘அர்ச்சிஸ்’’ அல்லது ‘‘ஒளி’’ என்பதில் தொடங்கும் மார்க்கத்தில் ஆதித்யன் போன்ற தேவதைகளால் வழி நடத்தப்பட்டு அர்ச்சிராதி மார்க்கம் வழியாக, முக்தன் சென்று, ப்ரஹ்மத்தை அடைகிறான் என்று நிர்ணயிக்கப் பட்டது.

இரண்டாம் அதிகரணத்தில் (வாய்வதி4கரணம்- 4-3-2), முக்தியடைந்த ஜீவன் கடந்து செல்லும் உலகங்களின் வரிசைக் கிரமத்தில் காணப்படும் வேறு பாடுகள் ஆராயப்படுகின்றன. சில உபநிஷத்துக்கள், தேவ லோகத்தைக் கடந்து செல்கிறார்கள் என்றும், சில உபநிஷத்துக்கள் வாயு லோகத்தைக் கடந்துசெல்கிறார்கள் என்றும் கூறுகின்றன. ‘இவற்றுள் ‘‘தேவலோகம்’’ என்று ஒன்றில் குறிப்பிடப்பட்டது, மற்றொன்றில் குறிப்பிடப்பட்ட வாயு லோகத்தைக் காட்டிலும் வேறுபட்டது அல்ல’ என்று தெளிவாக்கப்பட்டது.

மூன்றாம் அதிகரணத்தில் (வருணாதி4கரணம்- 4-3-3 ), தேவதைகள் எந்த வரிசை க்ரமத்தில் இடம் பெற வேண்டும் என்னும் ஐயப்பாடு எழ, மழைக்குக் காரணமான வருணபகவான் (பர்ஜன்யன்) மின்னலுக்கு அதிபதியான ‘‘வித்யுத்’’ என்பவருக்கு அடுத்தபடியாக இடம் பெற வேண்டும், இருவருக்கும் தொடர்பு உள்ளதால், என்பது நிர்ணயம் செய்யப்பட்டது.

நான்காம் அதிகரணத்தில் (ஆதிவாஹிகாதி4கரணம்- 4-3-4), ‘‘அர்ச்சிஸ்’’ (ஒளி) நாள், மாதம், போன்றவை பௌதிகமான இருப்பினங்களைக் குறிப்பிடுவன அல்ல, அநுபவத்திற்கான இடங்களும் அல்ல; இவை, இவற்றை நிர்வஹிக்கும் தேவதைகளைக் குறிப்பவை. இந்த தேவதை களே, ஜீவனை, பரமாத்மாவிடம் செல்லும் பாதையில் வழி நடத்தும் ‘‘ஆதிவாஹிகள்’’ என்பது, தெளிவாக்கப்பட்டது.

ஐந்தாம் அதிகரணத்தில் (கார்யாதி4கரணம் 4-3-5), ‘எந்த உபாஸகன் ப்ரஹ்மத்தை அடைகிறான்’ என்பதில், பாதராயணருக்கும், ஜைமிநிக்கும் கருத்து வேற்றுமை உள்ளது அறியப்படுகிறது. சதுர்முக ப்ரஹ்மனையோ அல்லது ப்ரஹ்மத்தை மட்டுமே த்யானிப்பவர்கள், பரப்ரஹ்மத்தை அடைவதில்லை. ஆனால், பாதராயணரால் நிலை நிறுத்தப்பட்டபடி, ப்ரஹ்மத்தையும் ஜீவாத்மாவையும் இணைபிரியாதவர்களாக (ப்ரஹ்மாத்மகனாக) எவர்கள் த்யானிக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே ஆதிவாஹிகர்களால் அர்ச்சிராதி மார்க்கம் வழியாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று காட்டித்தரப்பட்டது.

7.3. நான்காம் அத்யாயம், முக்திபாதம் எனப்படும் நான்காம் பாதம், முதல் அதிகரணத்தில் (ஸம்பத்3யாவிர்பா4 வாதி4கரணம் 4-4-1), ப்ரஹ்மத்தை அடைந்த ஜீவன், முக்தியடைந்த நிலையில், வேறு ஓர் புதிய வடிவத்தைப் பெறுகிறானா? அல்லது தன் பழைய வடிவத்தோடே இருக்கிறானா? என்னும் ஐயப்பாடு எழ, ப்ரஹ்மத்தை அடைந்த ஜீவன், தன்னுடைய இயல்பான வடிவத்தைப் பெறுகிறான். (ஸ்வேனரூபம்-தன் இயல்பான ஸ்வரூபம்) அப்பொழுது, ‘அவன், ஸம்சாரத்தில் தளையுண்டு இருந்த காலத்தில் மறைக்கப் பட்டிருந்த எட்டு குணங்களும்,’’ய ஆத்மா(அ)பஹதபாப்மா விஜரோ விம்ருத்யு: விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப:’’ (சாந். 8-7-1) - ‘‘எந்த ஆத்மா, பாவங்கள் அழிக்கப்பெற்று, வயது வரம்பற்று, மரணமற்று, துன்பம் நீக்கப்பெற்று, பசி நீக்கப்பட்டு, தாகமில்லாமல், விருப்பங்கள் ஈடேறப்பெற்று, நினைவுகள் (எண்ணங்கள்) நிறைவேறப் பட்டு’’ முழுவதுமாக வெளிப்பட்டு ஒளிர்கிறான்’ என்பது நிலை நிறுத்தப்பட்டது.

இரண்டாம் அதிகரணத்தில் (அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் 4-4-2), முக்தியடைந்த ஜீவன், ப்ரஹ்மத்தின் குணங்களை அநுபவிக்கையில் தன்னை ப்ரஹ்மத்திடமிருந்து வேறுபட்டவனாக இருந்து அநுபவிக் கிறானா. (ப்ருத2க்3பூ4தம்) அல்லது ப்ரஹ்மத்திடமிருந்து வேறுபடாதவனாக உணர்ந்து அநுபவிக்கிறானா. (அவிப4க்தம்) என்னும் ஐயப்பாடு எழ, முக்த ஜீவன், தன்னை ப்ரஹ்மத்திடமிருந்து வேறுபடாதவனாக, தனக்கும் ப்ரஹ்மத் திற்கும் உள்ள முழுமையான உறவை உணர்ந்தவனாக, ப்ரஹ்மத்தின் ப்ராகாரமாகவே அநுபவிக்கிறான். (அவி பா4கே3ன த்3ருஷ்டத்வாத்) என்று உறுதிபடுத்தப் பட்டது.

மூன்றாம் அதிகரணத்தில் (ப்3ராஹ்மாதி4கரணம் 4-4-3), முக்தியடைந்த நிலையில், ஜீவன், எட்டு குணங்களோடு விளங்குகிறான் என்று சாந்தோக்யம் கூறுவதை ஆதரிக்கிறார் ஜைமிநி. அவன் உணர்வை மட்டுமே பண்பாகக் கொண்டுள்ளான் (சிந்-மாத்ரம்) என்பது ஔடுலோமியின் கருத்து. பாதராயணர், ஜைமிநியின் கண்ணோட்டத்தை ஆதரிக்கும் வகையில், ஜீவனுடைய முக்தி தசையில், ‘அபஹதபாப்மத்வம்’ தொடக்கமான எட்டு குணங்களுடன் ப்ரகாசிக்கிறான், என்கிறார். இந்த இரண்டு கண்ணோட்டங்களும் ச்ருதியால் ஆதரிக்கப்பட்டது என்பது காட்டப்படுகிறது.

நான்காம் அதிகரணத்தில் (ஸங்கல்பாதி4கரணம் 4-4-4), முக்த ஜீவனுக்கு, தன் விருப்பம் போல் இயங்கும் திறன் உள்ளதா? அல்லது தளையுண்ட ஜீவாத்மாவைப் போல் அவனும் தன் விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ள சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா?, என்னும் ஐயப்பாடு எழ, ‘அவன் தன் விருப்பம் போல, இயங்குகிறான், தனியாக எந்த முயற்சியும் அவசியமில்லை’ என்பது விளக்கப்பட்டது.

ஐந்தாம் அதிகரணத்தில் (அபா4வாதி4கரணம் 4-4-5), கர்மத்தின் தொடர்பற்ற முக்த ஜீவன் இயங்குகையில், உடல் மற்றும் புலனுறுப்புகளோடு இருப்பானா அல்லது, சரீரமற்று இருப்பானா என்பதில், பாதரி மற்றும் ஜைமிநி ஆகியோருக்குள் கருத்து வேறுபாடு தோன்ற, பாதராயணர், அதைத் தீர்த்துவைக்கிறார். ‘முக்தன் விரும்பினால் உடலுடன் இருப்பான். அவன் விரும்பினால் உடல் இல்லாமலும் இருப்பான்’ என்று தீர்மானிக்கப்பட்டது..

ஆறாவது அதிகரணத்தில் (ஜக3த்3வ்யாபாரவர் ஜாதி4 கரணம் 4-4-6), முக்த ஜீவன், ப்ரஹ்மத்துடன் மிக அதிகமான ‘‘ஸாம்யத்தை’’(ஒற்றுமையைப்) பெறுவதால், அவனும் அண்டத்தைப் படைப்பானா என்னும் முக்யமான வினா எழுகிறது. அதற்கு, அண்டத்தைப் படைக்கும் திறமை பரமாத்மா ஒருவனுக்கே சொந்தமானது. அநுபவத்தில் மட்டுமே முக்த ஜீவனுக்கு ஸாம்யம் என்று பதிலளிக்கப் படுகிறது.

சாரீரக மீமாம்ஸா பாஷ்யத்தின் இறுதி ஸூத்ரமாவது, அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்தி: ஶப்3தா3த் - 4-4-22 என்பதாகும். இதில் ஸர்வஸ்வதந்த்ரனான பரமாத்மா, முக்த ஜீவனை மீண்டும் ஸம்சார மண்டலத்திற்கு அனுப்பி விடுவானோ என்னும் ஐயப்பாடு தெளிவாக்கப் படுகிறது. ‘முக்தியடைந்த ஜீவன் திரும்ப வருவதில்லை’ என்பது ச்ருதி வாக்யம் என்பதாலும், ஸத்ய ஸங்கல்பனான ஈச்வரன், தன் ஸங்கல்பத்திற்கு மாறாக செயல்படமாட்டான் என்பதாலும், முக்தியடைந்த ஜீவன், மீண்டும் ஸம்சாரத்திற்கு வருவதில்லை - புநராவ்ருத்தி இல்லை - என்பது நிர்ணயிக்கப் பட்டது.

‘‘யதி3 பரமபுருஷாயத்தம் முக்தைஶ்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வதந்த்ரத்வேந தத்ஸங்கல்பாந்முக்தஸ்ய புநராவ்ருத்தி ஸம்ப4வாஶங்கேத்யத்ராஹ -

அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்திஶ்ஶப்3தா3த் (4-4-22)

யதா2 நிகி2லஹேயப்ரத்யநீககல்யாணைகதாநோ ஜக3ஜ்ஜந்மாதி3காரணம் ஸமஸ்தவஸ்துவிலக்ஷண: ஸர்வஜ்ஞ: ஸத்யஸங்கல்ப: ஆஶ்ரிதவாத்ஸல்யைக ஜலதி4: பரமகாருணிகோ நிரஸ்தஸமாப்4யதி4க ஸம்பா4வந: பரப்3ரஹ்மாபி4தா4ந: பரமபுருஷோ (அ)ஸ்தீதி ஶப்3தா3த3வக3ம்யதே, ஏவமஹரஹநுஷ்டீ2ய மாநவர்ணா ஶ்ரம த4ர்மாநுக்3ருஹீத தது3பாஸநரூபதத் ஸமாராத4ந ப்ரீத: உபாஸீநாநநாதி3கால ப்ரவ்ருத்தாநந் தது3ஸ்தர கர்மஸஞ்சய ரூப அவித்3யாம் விநிவர்த்ய ஸ்வயாதா2த்ம் யாநுப4வரூபாநவதி4காதிஶய ஆநந்த3ம் ப்ராபய்ய புநர்நாவர்த்தயதீதி ஶப்3தா3தே3வாவக3ம்யதே ஶப்3 த3ஶ்ச, ‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) இத்யாதி3க: I

ததா2 ச ப4க3வதா ஸ்வயமேவோக்தம், ‘‘மாமு பேத்ய புநர்ஜந்ம து3:க்கா2லயமஶாஶ்வதம் I நாப்நு வந்தி மஹாத்மாந: ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3தா: II’’ (ப.கீ. 8-15) ‘‘ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநரா வர்த்திநோ (அ)ர்ஜுந I மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்3யதேII’’ (ப.கீ. 8-16) இதி I ந ச உச்சி2ந்ந கர்மப3ந்த4ஸ்ய அஸங்குசித ஜ்ஞாநஸ்ய பரப்3ரஹ்மா நுப4வைக ஸ்வபா4வஸ்ய ததே3க ப்ரியஸ்ய அநவதி4 காதிஶயா நந்த3ம் ப்3ரஹ்மாநு ப4வதோ அந்யாபேக்ஷா தத3ர்த்தா2ரம் பா4த்3ய ஸம்ப4வாத் புநராவ்ருத்திஶங்காI

ந ச பரமபுருஷ: ஸத்யஸங்கல்போ(அ)த்யர்த்த2 ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்3த்4வா கதா3சிதா3வர்த்தயிஷ்யதி, ய ஏவமாஹ - ‘‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த்த2ம் அஹம் ஸ ச மம ப்ரிய:II’’ (ப. கீ. 7-17) ‘‘உதா3ராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்I ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம் II (ப. கீ. 7-18) ‘‘ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதேI வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4:II’’ (ப.கீ. 7-19) இதி I ஸூத்ராப்4யாஸ: ஶாஸ்த்ரபரிஸ மாப்திம் த்3யோதயதி இதி ஸர்வம் ஸமஞ்ஜஸம் II ‘‘

முக்தனின் பெருமையாகிய செல்வம், பரம புருஷனைச் சார்ந்திருப்பதாலும், மேலும் பரம புருஷன் சுதந்திரமான வனாலும், ‘முக்தன் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பிவரும் ஸாத்யக்கூறு உள்ளதோ?’ என்னும் ஐயப்பாடு எழுகிறது - எனவே, அங்கு ஸூத்ரகாரர் கூறுகிறார்.

ஸி.ஸூ: அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்தி: ஶப்3தா3த் - 4-4-22.

(முக்தன் ஸம்ஸாரத்திற்குத்) திரும்பி வருவதில்லை; வேதச்சொற்றொடர் அப்படிக் கூறுகையால்.

‘‘ச்ருதியிலிருந்து , பரம புருஷன், பரப்ரஹ்மம், சீரான மங்களத்தை உடையது என்பது அறியப்படுவது போல, கைவிடத்தக்க எல்லாவற்றின் எதிரி, அண்டம் போன்ற வற்றின் காரணம், எல்லா இருப்பினங்களிலிருந்தும் வேறு பட்டவன். எல்லாம் அறிந்தவன்; எண்ணங்கள் ஈடேறப் பெற்றவன்; தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் கருணைக் கடலாக இருப்பவன்; மிக அதிகமான இரக்கம் உள்ளவன்; அவன் திறத்தில் அவனுக்கு சமமானவரோ, மிக்கவரோ இருப்பார் என்கிற கேள்விக்கே இடமில்லை’’ ஆகியவை அறியப்படுகின்றன.

இதைப்போலவே, ச்ருதியிலிருந்தே ‘‘வர்ணாச்ரமத்திற்கு உரித்தான கடமைகளை, தினந்தோறும் சீரிய முறையில் மேற்கொண்டு, அதனால் அரவணைக்கப்பட்ட வழிபாட்டால் உகப்படைந்த அவன் (பரமாத்மா), மிகவும் மகிழ்ந்து, அவனை இவ்வாறு வழிபடுபவர்கள் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பிவரும் நிலையை ஏற்படுத்தமாட்டான்’’ என்பதும் அறியப்படுகிறது. நினைவில் வைத்துக் கொள்ள இயலாத காலத்திலிருந்து, தொடங்கி, எல்லையற்று, கடப்பதற்கு அரிதாக இருக்கும் குவியலான கர்மங்களிக் பலனான அவித்யையை விலக்கிவிட்டு, அவர்கள் தன்னை அறிவதான வடிவைக் காட்டி, மிகுதியான ஆனந்தத்தை அடையச் செய்த பிறகு - அவர்களைத் திரும்ப அனுப்புவதில்லை. ச்ருதி கூறுவதாவது: ‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸனத்தையும் ஆயுள் உள்ளவரை அநுஷ்டித்து ப்ரஹ்மத்தின் உலகத்தை அடைகி றான் (முக்தன்); மறுபடி ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவ தில்லை, திரும்பி வருவதில்லை’.

இதே பயனை, கீதையில் கண்ணன் கூறுகிறான்: ‘‘மாமுபேத்ய புநர்ஜந்ம து3:க்கா2லயமஶாஶ்வதம் I நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3தா: II’’ (ப. கீ. 8-15) - ‘மேலான ஸம்ஸித்திரூபமான (உயர்ந்த புருஷார்த்தமான) என்னை அடைந்தவர்களான மஹாத்மா க்களான ஜ்ஞானிகள், என்னை அடைந்த பின் எல்லாத் துன்பங்களுக்கும் இருப்பிடமாயிருப்பதாய், நிலைநில்லாத தான தேஹத்தை மறுபடியும் அடைகிறதில்லை’.

‘‘ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநராவர்த்திநோ (அ)ர்ஜுந I மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்3யதேII’’ (ப.கீ. 8-16) - ‘அர்ஜுனா! (ப்ரஹ்மாண்டத் தினுள்ளிருக்கும்) ப்ரஹ்மலோகம் வரையிலுள்ள எல்லா உலகங்களும் அழிவை உடையவை; குந்தீபுத்திரனே! என்னை அடைந்த பின் போவெனில்; மறுபிறப்பு இல்லை’.

வேறு எதையும் சார்ந்திருப்பது இயலாததாலும், கர்மத்தின் தளை நீங்கப்பெற்ற ஒருவர் திறத்தில், இதற்காகன முயற்சிகள் செய்யப்படாததாலும், அவனுடைய அறிவு எந்த விதமான சுருக்கத்தை அறியாததாலும், அவர் ப்ரஹ்மத்தை அறிவதான ஒரே நினைவையே கொண்டிருப்பதாலும், அவர் மட்டுமே அவனுக்கு (பரமாத்மாவுக்கு) பிரியமானவராக இருப்பதாலும், அளவற்ற மிகுதியான ஆநந்தமயனான ப்ரஹ்மத்தை அறிந்திருப்பதாலும் - எண்ணங்கள் ஈடேறப்பெற்ற பரம புருஷன், தனக்கு எல்லை கடந்த விருப்பமான அந்த ‘‘அறிந்த ஒருவனை’’ பெற்ற பின்பு. எந்த காலத்திலும் அவனைத் திரும்பவும் போக விடமாட்டான். பரம புருஷன் இதை இவ்வாறு அறிவிக்கிறான்:

‘‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த்த2ம் அஹம் ஸ ச மம ப்ரிய:I (ப. கீ. 7-17) - ‘நான் ஞானிக்கு சொல்ல வொண்ணாதவளவுக்கு இனியவன்; அவனும் எனக்கு இனியவன்’. ‘‘உதா3ராஸ்ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்I ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம் II (ப. கீ. 7-18) - இவர்கள் அனைவருமே, வண்மை மிக்கவர்கள்; ஞானியோவெனில், (எனக்கு) தாரகனாகவேயிருப்பவன் (என்று), என் ஸித்தாந்தம். என்னோடு சேர விரும்புகின்ற அவன், என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ’.

‘‘ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதேI வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4:II’’ (ப.கீ. 7-19) - ‘பல புண்ணியப் பிறப்புகள் கழிந்தபின், அறிவு முதிரப்பெற்ற ஞானியானவன், ‘வாஸுதேவனே எனக்குப் பரமப்ராப்யமாகவும், ப்ராபகனா கவும், தாரகம், போஷகம், போக்யம் முதலான எல்லா மாகவும் இருக்கிறான்’ என்று எண்ணி, என்னை சரண மடைகிறான். அவன், விசாலமான நெஞ்சையுடையவ னாவான்; (இவ்வுல கில் எனக்கும்) மிகவும் கிடைத்தற் கரியவனாவான்’. இதில், ‘‘மீண்டும் திரும்பி வருவதில்லை. மீண்டும் திரும்பி வருவதில்லை’’ என்று இருமுறை கூறப்பட்டிருப்பது, சாஸ்த்திரம் முடிவடைந்து விட்டதைக் காட்டு வதற்காகும். இவ்வாறு அனைத்துக் கருத்து வெளிப்பாடு களும் ஒருங்கிணைக்கப்பட்டு பரமபதத்தைச் சேர்ந்த முக்தன் மீண்டும் ஸம்ஸாரத்தை அடையமாட்டான் என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது.

Explanatory Note: The return of the released self to the world can be due to three reasons and three only; his own desire, Karma and the unfettered will of the Lord. It is argued out here that these causes cannot operate in his case.

(ii) The concluding sentence of the Sribhashya claims that different types of scriptural texts such as those asserting indentity between the self, the world and Brahman, those asserting difference etc have been harmoniously explained and reconciled, that logical reasoning has upheld Ramanuja's position and refuted, those who differ from him and that the thesis enunciated at the outset has been successfully expounded.

இந்த இரண்டு பாதங்களில் (கதிபாதம்-முக்தி(பல) பாதங்களில்) காணப்படும் அர்த்த விசேஷங்களையே, ஆழ்வார் ‘‘எண் பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறு இல, வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே’’ (திருவாய். 1-2-10) என்னும் பாசுரத்தில் அருளிச்செய்கிறார். ஆநந்தவல்லியில் வர்ணிக்கப்பட்ட ‘‘பெருகிவரும் ஆநந்தத்தை உடையவனாக, எல்லாச் சொற்களுக்கும் பொருளாக இருப்பவனான, அனைத்துப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டவனாக, கணக்கற்ற, எல்லையற்ற கல்யாண குணங்கள் நிறைந்த கடலாக உள்ள, ‘‘நாராயணன்’ என்னும் நாமத்தால் அறியப்படும் ஸ்வாமியின் திருவடிகளைச் சரணடையுங்கள்’’ என்று உபதேசிக்கிறார், ஆழ்வார்.

இதில், ‘நலம்’ (திருவாய். 1-1-9) என்பதால் ஈச்வரனை ஒத்த ஆநந்தத்தை உடைய முக்தன் சொல்லப்படுகிறான். இதனால், அவன் பரமாத்மாவுடன் ஸாம்யத்தைப் பெற்றதும், அவன் அர்ச்சிராதி மார்க்கத்தில், பல தேவதைகளால் உபசரிக்கப்பட்டதும் வெளிப்படுத்தப் படுகிறது. எனவே, இதனால் ‘‘அர்ச்சிராதி’’ என்னும் சொல்லின் பொருள் இதில் அடக்கம்.

நான்காம் பாதம் (முக்திபாதம்) முதல் அதிகரணத்தில் (ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் - 4-4-1) காட்டப் பட்டபடி, ‘முக்தாத்மா தன் இயல்பான வடிவத்தைப் பெற்று, ‘‘அபஹதபாப்மத்வம்’’ தொடக்கமான எட்டு குணங்களுடன் ப்ரகாசிக்கிறான்’ என்பது, ‘‘ஒண்பொருள்’’ (திருவாய். 1-2-10) என்பதால் தெளிவாக்கப்பட்டது.

‘‘நாரணன்’’ (திருவாய். 1-2-10) என்பதால், எல்லா காலங்களிலும், சேதனனுக்கும், ஈச்வரனுக்கும் இடையே ஸம்பந்தம் இருப்பது காட்டப்படுகிறது. எனவே, முக்த தசையில், ஜீவன், தன்னை ப்ரஹ்மத்தின் சரீரமாக உணர்ந்தே அநுபவிக்கிறான் என்று கூறும் இரண்டாம் அதிகரணத்தின் (அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் - 4-4-2) பொருள் இங்கே தோன்றுகிறது.

  ‘‘ஒண் பொருள்’’ (திருவாய். 1-2-10) என்பதில் ஆத்மாவிற்கு ‘‘ஒண்மையாவது’’ அபஹதபாப்மத்வம் போன்ற குணங்கள், சுருக்கமின்றி ஒளிர்வதும் மற்றும் ஞானம் விரிவடைவதும் ஆகும். இந்த இரண்டு குணங்க ளையும் விளக்கும் மூன்றாம் அதிகரணத்தின் (ப்3ராஹ்மாதி4 கரணம் 4-4-3) பொருள் இந்த ‘‘ஒண்பொருள்’’ (திருவாய். 1-2-10) என்பதால் விளக்கப்படுகிறது. ஈடு வ்யாக் யானத்தில், ‘‘எண்பெருக்கென்று இத்தாலே- ஜீவாநந்த் யத்தைச் சொல்லுகிறது. (நலத்து) இவ்வஸ்துக்கள்தான் ஜ்ஞான குணாச்ரயமுமாயிருக்கக் கடவதிறே’’ என்று பொருளுரைக்கப் படுவதால், இந்த அதிகரணத்தின் பொருள் இந்த வரியால் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

  ‘‘ஒண்’’ (திருவாய். 1-2-10) என்பதால் ‘‘அபஹதபாப்மத்வம்’’ போன்ற எட்டு குணங்களில், ஸங்கல்பத்தையும் குறிக்கும் என்பதால், முக்த ஜீவன், தன் ஸங்கல்பத்தால் தன் முயற்சியின்றி இயங்குகிறான் என்று கூறும் நான்காம் அதிகரணத்தின் (ஸங்கல்பாதி4கரணம் 4-4-4) பொருளும் இங்கே தெளிவாகிறது.

‘‘ஒண்பொருள்’’ (திருவாய். 1-2-10), என்பதால் ‘அபஹதபாப்மத்வத்தின் ஓர் குணமான ‘ஸத்யகாமமும்’ அறியப்படுகிறது. ‘ஸத்யகாமம்’ என்பது தன் விருப்பப்படி இருப்பது. முக்தன் விருப்பமுண்டானால், உடலுடன் இருக்கிறான், விரும்பினால் உடல் இல்லாமல் இருக்கிறான் என்று கூறும் ஐந்தாம் அதிகரணத்தின் (அபா4வாதி4கரணம் 4-4-5) அர்த்தம் இங்கே பொருந்தும்.

ஆறாம் அதிகரணத்தில் (ஜக3த்3வ்யாபாரவர்ஜா தி4கரணம் 4-4-6 ), ‘ஜீவனுக்கு ப்ரஹ்மத்தின் ஆநந்தத்தை அநுபவிப்பதில் மட்டுமே ஸாம்யம் கூறப்படுகிறது. ‘அண்டத்தைப் படைப்பதில் அல்ல’ என்பது விளக்கப் பட்டது. ப்ரஹ்மத்தை ஒத்த ஆநந்தத்தை அடைகிறான் ஜீவன், என்பது, ‘‘அந்நலம்’’ (திருவாய். 1-2-10) என்னும் சொல்லால் காட்டப்பட்டது.

ஸர்வ ஸ்வந்தரனாகிய ஈச்வரன், ஜீவனை மீண்டும் பிறவியில் தள்ளுவானோ என்னும் ஐயப்பாடு எழ, ‘அவன் ஸத்யஸங்கல்பன், கருணை மிக்கவன்; அதனால் இச்செயலைச் செய்யமாட்டான்’ என்பது ‘‘திண்கழல்’’ (திருவாய். 1-2-10) என்பதால் தெளிவாக்கப்படுகிறது. தன்னைச் சரணடைந்தவர்களை ஒருநாளும் நழுவவிடாத திண்மை மிக்க அவன் திருவடிகள் இந்தப் பொருளைக் காட்டித்தருகிறது.

இப்படியாக, எண்பெருக்குஅந்நலத்து,ஒண்பொருள் ஈறில,வண்புகழ் நாரணன், திண்கழல்சேரே. (திருவாய். 1-2-10) -ஆம் பாசுரத்திற்கும், நான்காம் அத்யாயம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கும் (கதிபாதம்,முக்திபாதம்) இடையே கருத்தொற்றுமை காட்டித்தரப்பட்டது.

பலனைக் கூறும் நிகமநப் பாசுரமான, ‘‘சேர்த் தடத்,தென்குருகூர்ச் சடகோபன், சொல் சீர்த்தொடை ஆயிரத்து, ஓர்த்த இப்பத்தே’’ என்னும் (திருவாய்.1-2-11) பாசுரம், ‘‘தடாகங்கள் நிறைந்த திருநகரிக்கு நிர்வாஹகரரான ஆழ்வார் அருளிச் செய்த, பரமாத்மாவின் கல்யாண குணங்களால் தொகுக்கப்பட்ட ஆயிரம் பாசுரங்களின் பொருள், இப்பத்து பாசுரங்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்டது என்று தலைக்கட்டப்படுகிறது.

பகவானின் வடிவம் மற்றும் ப்ராப்யம் (உபாயம்) ஆகியவற்றைக் காட்டித்தருவது இந்த திருவாய்மொழி என்று காட்டப்பட்டது. ஈட்டிலே, ‘‘சீர்த்தொடை’’, என்பதற்கு, ‘உபாஸனையின் உதவியால், உபாசிக்கப்படுபவனின் கல்யாண குணங்களால் தொகுத்த ப்ரபந்தம்’ என்று பொருளுரைக்கப்பட்டது.

இவ்வாறு ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2) திருவாய் மொழிக்கும், சாரீரக மீமாம்ஸை மூன்று மற்றும் நான்காம் அத்யாயத்திற்கும் (ஸாதன,பல அத்யயாயங்களுக்கு) இடையே நிலவும் கருத்தொற்றுமை நிரூபிக்கப்பட்டது.

7.4. நான்கு அத்யாயங்களாய், பதினாறு பாதங்களாய், நூற்று ஐம்பத்தி ஆறு அதிகரணங்கள், ஐநூற்று நாற்பத் தைந்து ஸூத்ரங்கள் கொண்ட சாரீரக மீமாம்ஸா சாஸ்த்திரத்திற்கும், இருபத்திரண்டு பாசுரங்களைக் கொண்ட, முதல் பத்து முதல் மற்றும் இரண்டாம் திருவாய் மொழி களுக்கும் இடையே அமைந்துள்ள- ஐககண்டயம்- கருத்தொற்றுமை பூர்வாசார்யர்கள் அநுக்ரஹித்தபடி விளக்கப் பட்டது. *

ஸ்ரீ:

நம்பிள்ளை ஈட்டில் காணப்படும் ப்ரஹ்மஸூத்ரங்கள் மற்றும் உபநிஷத் சொற்றொடர்களுக்கான விளக்கங்கள்

04

நுழைவாயில்

(1) சீரும் சிறப்புமுடைய திருவாய்மொழிக்கு புகழ்மிக்க ஐந்து வ்யாக்யானங்கள் (உரைகள்) அமைந்துள்ளன. ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்பவைகள் அவை. அவற்றை முறையே அருளியவர்கள் திருக்குருகைப் பிரான்பிள்ளான், நஞ்சீயர், அழகியமணவாளச்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை ஆகியோர். ஒற்று ஒழித்து உயிரும், உயிர்மெய்யுமான முப்பத்திரண்டு எழுத்துக்களைக் கொண்டது ஒர் க்ரந்தமாகும். ‘படி’ என்பது அளவு என்னும் பொருளையுடையது. 6000 க்ரந்தங்களைக் கொண்ட உரை ஆறாயிரப்படி எனப் பெயர் பெற்றது. அவ்வாறே பிற உரைகளும் க்ரந்தங்களின் எண்ணிக்கையால் பெயர் பெற்றன. மேல் குறித்த ஐந்து உரைகளுள் நம்பிள்ளை யின் முப்பத்தாறாயிரப்படி, ‘ஈடு’ என்று அழைக்கப்படும்.

(2) அனைத்து ஸம்பிரதாய க்ரந்தங்களுக்கும், தத்வார்த்தங்களுக்கும் ‘வேர்முதலாய் வித்தாய்’ அமைந் துள்ளது வேதங்களே. அந்த வேதங்களால் வெளியிடப்படும் தத்வ, ஹித, புருஷார்த்தங்கள் வேதவ்யாஸரால் தொகுக்கப் பட்டன. அந்தத் தொகுப்பே ப்ரஹ்மஸூத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ‘மயர்வற மதிநலம் அருளப்பெற்ற’ ஆழ்வாருக்கு, மற்றையோருக்கு அமைந்திராத தனிப்பட்ட பெருமை உண்டு. வேதங்களைத் தொகுத்தவரான பாதராயணர் (வேதவ்யாஸர்) கற்பித்த வேதாந்தங்கங்களை ஆராய்ந்து, அவர் விரிவாகக் கூறியவற்றைத் தாம் சுருக்கமாகவும், அவர் சுருக்கமாகச் சொன்னதை தாம் விரிவாகக் கூறுவதே இந்தப் பெருமை.

(3) இந்தக் கருத்தை மந்த மதி படைத்த நம் போல்வார் அறிந்து கொள்ளும் வண்ணம் நம்பிள்ளை தம்முடைய உரையில் நூற்றுக்கணக்கான உபநிஷத் சொற்றொடர் களையும், வேதாந்தஸூத்ரங்களையும், ஆழ்வார் பாசுரங் களுடனான கருத்தொற்றுமையைக் (ஐககண்ட்யத்தைக்) காட்டியுள்ளார். ஈட்டிற்கு பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ள போதிலும் அவற்றில் தலையாயது ப்ரஹ்மஸூத்ரங் களுடனான கருத்தொற்றுமையாகும். ஈட்டிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பது அடையவளைந்தான் அரும்பதமாகும். அடைய வளைந்தான் அரும்பதத்தில் ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் கருத்துக்களுடனானத் தொடர்பு ஆங்காங்கே விரிவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

(4) ஸ்ரீபாஷ்யம் மற்றும் திருவாய்மொழி ஆகிய இரண்டையும் அறியக்கற்று வல்லாரே உபய வேதாந்திகள் எனப்படுவர். மற்றைய ஸித்தாந்தங்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்திற்கு உண்டு. எந்த வேதாந்தக் கருத்துக்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் விவரித்தாலும், அவர்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல், ஸ்ரீபாஷ்யம், பூர்வாசார்யர் களின் வ்யாக்யானங்களிலிருந்து மேற்கோள் காட்டியே தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை நிலை நாட்டிடுவர். பெரும்பாலான ஸ்ரீபாஷ்யவிளக்கவுரைகளிலும், உபந்யாஸங் களிலும், வாக்யார்த்த ஸதஸ்ஸுக்களிலும் ஆழ்வார் பாசுரங் களுடனான கருத்தொற்றுமை சுட்டிக் காட்டப்படுவதில்லை. திருவாய்மொழி காலக்ஷேபம் அல்லது உபந்யாஸம் செய்பவர்களும் ஒரு சிலரைத்தவிர ஸ்ரீபாஷ்யத்திலிருந்தோ அல்லது உபநிஷத்துக்களிலிருந்தோ உரிய மேற்கோள்களை, ஈடு காட்டிய வழியில் கூற முற்படுவதில்லை.

(5) ஆசார்யஹ்ருதய ஸூத்ரம் (65) : ‘‘பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் ‘‘, இப்படித் திருவாய்மொழியின் துணைகொண்டு சாஸ்த்திரங்களின் பொருள்களை அறுதியிட்டவர் யார் என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார் இந்த ஸூத்திரத்தால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது பாஷ்யகாரர் - இராமானுசர் ப்ரஹ்மஸூத்திரங்களுக்கு ஸ்ரீபாஷ்யம் செய்தருளும் போது, ஸூத்ர வாக்யங்கள்- ஸூத்ரவாக்யங் களில் தெளிவுபெற இயலாத பொருள் விளக்கங்களை, இது கொண்டு- இத்திருவாய் மொழியின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு, ஒருங்கவிடுவர்- அறுதியிட்டு ஒருங்க விட்டருளுவர் என்கை.

05

ஈட்டில் காணப்படும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கான விளக்கப்பகுதிகள்

(6) ஸ்ரீ.உ.வே. அண்ணங்கராசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. காரப்பங்காடு வேங்கடாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. புத்தூர் க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி, கோயில் வித்வான் ஸ்ரீ.உ.வே. நரஸிம்ஹாசார்யர் ஸ்வாமி. ஸ்ரீ.உ.வே. சதாபிஷேகம் கோவிந்த நரஸிம்ஹாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீ.உ.வே. திருமலை நல்லான் ராமக்ருஷ்ணய்யங்கார் ஸ்வாமி போன்றோர் தாம் எழுதியருளிய நூல்கள் மற்றும் உபந்யாஸங்களின் ஊடே, ஸ்ரீபாஷ்யத்திற்கும் திருவாய்மொழிக்கும் இடையே அமைந் துள்ள ஐககண்ட்யத்தை கூறிவந்த போதிலும், அவற்றை ஒரு முழுமையான நூல் வடிவில் வெளியீடு செய்யவில்லை. அதை ஈடுசெய்வதற்கு ‘‘ஈட்டில் காணப்படும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கான விளக்கப்பகுதிகள்’’ என்னும் தலைப் பிடப்பட்ட இந்தப் பகுதி ஆழ்வார்களின் அருளிச் செயலில் ஈடுபட்டோருக்கு ஓரளவு உதவும் என்ற எண்ணத்தில் பல குறிப்புகள் இனி தரப்படவுள்ளன.

(7) ஈட்டின் அவதாரிகையில் நம்பிள்ளை கீழ்க்கண்ட பொருள் விளக்கத்தை அளித்துள்ளார்.

(7.1) ‘‘முதல் பிரபந்தமான ‘திருவிருத்தத்தில்’, எம்பெருமானை அநுபவிப்பதற்கு விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேண்டும் என்று விரும்பு கிறார். ‘திருவாசிரியத்தில்’, முக்தர்கட்கு இனிமையான தன்னுடைய வடிவழகைக் கலம்பக நன்மாலையைப் பணியாக எடுத்துக் காட்டுமாறு போன்று காட்டிக்கொடுக்கக் கண்டு பூர்ணமாக அநுபவித்தார். ‘பெரிய திருவந்தாதி’யால், எல்லை அற்ற இனியனான எம்பெருமானை அநுபவிக் கையாலே அதற்குத் தகுதியாக வேட்கை பிறந்து, வேட்கைக்குத் தகுதியாகிப் பேசியும் நினைந்தும் தரிக்கிறார்.

(7.2) திருவாய்மொழியில், இவருடைய வேட்கைக்குத் தகுதியாக, திருமகள்கேள்வனாய்ச் ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய்த் தனக்குத் தகுதியான திவ்விய தேகத்தை யுடையனுமாய்த் திவ்விய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனுமாய்ப் பரமபதத்திலே ஆனந்த மயமான திவ்விய ஆஸ்தான இரத்தின மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் தானும் பிராட்டிமாருங்கூடத்திவ்விய சிம்மாசனத்திலே ஏழுலகுந் தனிக்கோல் செல்ல வீற்றிருந்தருளி, அஞ்சத்தகாத இடத்திலும் அச்சத்தால் ஐயுறுகின்ற அயர்வறும் அமரர் களாலே எப்பொழுதும் தொண்டு செய்யப்படுகின்ற திருவடித் தாமரைகளையுடையனாய்க் கொண்டு, அங்கு அங்ஙனம் சென்று கொண்டிருக்க, தன் நினைவாலே மாத்திரம் ஏற்படுகின்ற சொரூபம் ஸ்திதி தொழில் நடத்தல் நடவாமை களையுடைய தன்னின் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரமாகையாலே அவற்றை அடிமையாக உடையனாய்;

உயிர்க்கு உயிராக இருப்பதனால் அறிவுப்பொருள் அறிவில்பொருள்களை வியாபித்து அவ்வப்பொருள்களின் குற்றங்களால் தீண்டப்படாமல் இருப்பவனாய், நாராயணன் முதலான பெயர்களைத் தனக்குப் பெயராக உடையனாய், இப்படிப்பட்டவனாக ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்கிறபடியே உபநிஷத்துக்களால் அறுதியிடப்பட்ட பொருளனுமாய் இப்படி வேறுபட்ட சாதியனுமாய் இருந்து வைத்து அடியார்களிடத்துள்ள வாத்சல்யத்தாலும் தன்னுடைய மேலான திருவருளாலும் தேவ மனித முதலான சாதியினனாய் வந்து திருவவதாரம் செய்யும் தன்மையனுமாய், தன்னுடைய அவதாரத்திலும் உதவப் பெறாத கருவிலே திருவிலாதாரும் இழக்க வேண்டியபடி எல்லாக்குற்றங்களையும் பொருக்கின்ற வனாய், பத்திரம் புஷ்பம் முதலியவை களால் எளிய முறையில் ஆராதிக்கப்படுகின்றவனாய் அடியார்கட்கு மிகவும் பரதந்திரனாய், அவர்களுடைய விருப்பத்துக்குத் தகுதியான உணவு படுக்கை முதலியவைகளையுடையனாய்;

எல்லா நற்குணங்களாலும் நிறைவுற்றவனான தானே, அடியார்கட்கு எளியவன் ஆவதற்காகக் கோயில்களிலே வந்து நின்றருளியும், இப்படியுள்ள சர்வேஶ்வரனாந் தன்மைக்கும் அடியார்கட்குத் திருவருள் புரிதற்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூரணனான எம்பெருமான், தன்னை நிர்ஹேதுகமாகக் காட்டியருளக் கண்டு அநுபவித்துத் தம்முடைய உலக வாழ்க்கைத் தொடர்பாகிற தடை நீங்கி எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார்.

(8) இனி, முதல்திருவாய்மொழியில் கூறப்படும் பொருளாவது, பல வித இரத்தினங்களால் நிறைவுற்றதாய் அளவிட முடியாததான கடலை முந்துறத் கண்டது போன்று, ஸ்வரூப ரூப குண விபூதிகளால் நிறைந்தவனாய், எல்லாப் படியாலும் எல்லாரிலும் மேம்பட்டுச் சர்வேஶ்வரனாய், திருமகள் கேள்வனாகப் புருஷனால் செய்யப் படாததான மிக உறுதி வாய்ந்த சுருதிகளாலே எடுத்துக் கூறப்பட்டுள்ள வனாய் உள்ள எம்பெருமானைப் பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாதபடி அவன் திருவருளால் நேரே கண்டு அநுபவித்து, அவ்வநுபவத்தால் தோன்றின பிரீதி உள் அடங்காமை அநுபவித்தபடியே விபூதியோடு கூடினவனான எம்பெருமானைப் பேசி இத்தன்மையனானவன் திருவடி களிலே அடிமை செய்து உய்வு பெறுவாய் என்று தம் திரு வுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்கிறார்.

கடலைத் திரளக் கண்டான் ஒருவன் அதில் உண்டான முத்து மாணிக்கம் முதலானவைகளையும் தனித் தனியே காணுமாறு போன்று, முதல் திருவாய்மொழியிலே திரள அநுபவிக்கப்பட்ட எம்பெருமானுடைய குணங்களை ஒவ்வொரு வகையிலே ஒவ்வொரு திருவாய்மொழியாக அருளிச்செய்கிறார். இரண்டாம் திருவாய்மொழியில் தொடங்கி மேலுள்ள திருவாய்மொழிகளில் எல்லாம். இப்படிச் செய்தார் இவர் மாத்திரம் அல்லர்; பாரத இராமாயணங்களைச் செய்த வியாச வான்மீகி முனி புங்கவர்களும் சுருக்கியும் விரித்தும் தங்கள் பிரபந்தங்களை இயற்றியுள்ளார்கள்.

(8.1) பரம்பொருளின் ஸ்வரூபம், எல்லாக் குற்றங் கட்கும் எதிர்த்தட்டாய் இருக்குந்தன்மையாலும் மங்களம் பொருந்திய நற்குணங்கட்கு எல்லாம் இருப்பிடனாய் இருக்குந் தன்மையதலும் தன்னின் வேறுபட்ட எல்லாப் பொருள்கட்கும் வேறுபட்டதாய், எங்கும் நிறைந் திருப்பதனால் இன்ன இடத்தில் இருப்பது என்று இடத்தால் அளவிட்டுக் கூறு முடியாததாய், என்றும் உள்ளதாதலின், இன்ன காலத்தில் இருப்பது என்று காலத்தால் அளவிட்டுக் கூற முடியாததாய், எல்லாப் பொருள்களும் தனக்குச் சரீரமாகத் தான் ஆத்மாவாய்த் தனக்கு வேறோர் ஆத்மா இல்லாமையாலே ஒரு பொருளைக்கொண்டு அளவிட்டு அறிய முடியாததாய், ஞானானந்த மயமாய், ஞானம் பலம் ஐஶ்வரியம் சீலம் முதலான எல்லை இல்லாத நற்குணங் கட்கெல்லாம் பெருங்கடல் போன்றதாய் திருமகள் கேள்வனாய்த் தன்னின் வேறுபட்ட எல்லாப் பொருள் களையும் வியாபிக்குமிடத்தில்;

(8.2) பிரகிருதி சம்பந்தம் இல்லாததாய்ச் சுத்த சத்துவமயமாய்த் தனக்கே உரியதாய் மலரின் மலர்ச்சி யினுடைய மென்மையையுடையதாய், தெய்வத் தன்மை பொருந்திய தனது நறுமணத்தால் நிறையப்பெற்ற எல்லை இல்லாத திசைகளையுடையதாய், எல்லார்க்கும் பற்றுக் கோடாய் இருக்கும் திவ்விய மங்கள விக்ரஹத்தைப் போன்று வியாபித்துத் தரித்து நியமித்து, இப்படி எல்லாப்படியாலும் ரக்ஷமாய்க் கொண்டு சேஷியாக இருக்கும்.

(8.3) பிரகிருதியின் ஸ்வரூபம், மஹான் முதலான விகாரங் களையுடையதாய், நித்தியமாய், முக்குணவடிவாய், வெண்மை கருமை செம்மை என்னும் இந்நிறங்களை யுடையதாய், பெருந்திரளான பிரஜைகளுக்கு உண்டாவதற்கு இடமாய், எம்பெருமானுக்குச் சரீரம் ஆகையால் சேஷமாய், சேதநர் கர்மங்கட்குத் தகுதியாக விரும்ப அவ்விருப் பத்திற்குத் தகுதியாகப் பகவானுடைய சங்கல்பத்தாலே இருபத்து நான்கு தத்துவங்களாய் விரிந்து விகாரப்படக் கூடியதாய் இப்படி எம்பெருமானுக்கு இஷ்ட விநியோகத் திற்குத் தகுதியாய் இருக்கும்.

(8.4) ஆத்மஸ்வரூபம், அணுவளவாய், ஒளிப்பொரு ளாய், அறிவதாய், அறிவு ஆனந்த குணங்களையுடையதாய், நித்தியமாகையாலே காலத்தால் அளவிடக் கூடாததாய், அறிவுப் பொருளாகையாலே பொருள்களால் அளவிடக் கூடாததாய், இறைவனை விட்டுத்தனியே பிரிப்பதற்கும் தனியே குறித்துக் காட்டுவதற்கும் தகுதி அற்றதாய், இறைவனுக்கே அடிமைப்பட்டதாய், இறைவனுக்குத் தொண்டு செய்தலையே தனக்கு இன்பமாகக் கொள்ளக் கூடியதாய், எம்பெருமானுக்கு மிகவும் பரதந்திரப்பட்டதாய் இருக்கும். இவற்றை உள்ளபடி அறிவாருள் தலைவர் ஆவர் இவ்வாழ்வார்.

(9) திருவாய்மொழிப் பிரபந்தத்தால் வெளிப் படுத்தப்படும் பொருள் யாது?: முதல் திருவாய் மொழியிலே ‘உயர்வற உயர்நலமுடையவன்’ (1-1-1) என்று தொடங்கி, ‘உணர் முழு நலம் --- மிகுநரை இலனே’, (1-1-2) ‘நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்’(1-1-3), ‘ஆமவை ஆயவை ஆய் நின்ற அவர்’ (1-1-4) என்று கூறிக்கொண்டு போந்து, ‘கரவிசும்பு எரி வளி நீர் நில மிவைமிசை, வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்’ (1-1-11) என்று முடிக்கையாலே, நாராயணனே பரம்பொருள் என்கைக்காக நாராயண சப்தத்தின் (என்ற சொல்லின்) பொருளை அருளிச்செய்தார்.

(9.1) ‘நாராயணன் என்னும் சொல்லிற்கானப் பொருள் எல்லாரிலும் மேம்பட்டிருத்தலும், எல்லா நற்பண்புகட்கும் உறைவிடமாய் இருத்தலும், நித்திய விபூதி லீலாவிபூதி என்கிற இரண்டு உலகங்கட்கும் தலைவன் ஆதலுமேயாம். ‘ஒன்றும் தேவும்’ (திருவாய். 4-10), ‘திண்ணன்வீடு’ (திருவாய். 2-2) என்றும் இவ்விரண்டு திருப்பதிகங்களும் இத்திருப்பதிகத்தின் (1-1 பதிகத்தின்) பொருளை விரித்துப் பேசுவனவாம்.

9.1.1. இரண்டாந் திருப்பதிகத்திலே (1-2) ‘இப்பொருளுக்கு வாசகமான திருப்பெயரை ‘வண்புகழ் நாரணன்’ (1-2-10) என்று அருளிச்செய்தார். வ்யாபக மந்திரங்களாகிய விஷ்ணு, வாசுதேவ மந்திரங்களும் இப்பொருளையே அறிவிக்கின்றன வாயினும், நாராயணன் என்னும் இத்திருப்பெயரே தம் திருவுள்ளத்திலே அறுதியிட்ட வாசகம் என்னும் ஏற்றம் தோற்ற ‘செல்வ நாரணன்’ (திருவாய். 1-10-8), ‘திரு நாரணன்’ (திருவாய். 4-1-1), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(திருவாய். 2-7-2), ‘காராயின காள நன்மேனியினன் நாரணன்’ (திருவாய். 9-3-1), ‘திண்ணம் நாரணம்’ (திருவாய். 10-5-1), என்று ஆதரித்துக்கொண்டு போந்து, ‘வாழ் புகழ் நாரணன்’(திருவாய். 10-9-1), என்று அர்ச்சிராதி கதியைப் (அர்ச்சிஸ் என்ற தெய்வத்தை முதலாகக் கொண்ட கதி என்பது பொருள். கதி-வழி) பற்றிக் கூறுமிடத்தும் அருளிச்செய்து முடித்தமையால், இதுவே வாசகம் என்கிற கட்டாயத்தை அருளிச்செய்தார்.

(9.2) இனி, ‘மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்’ (திருவாய். 1-3-1) என்று தொடங்கி ‘திருவுடை அடிகள்’(திருவாய். 1-3-8) என்றும், ‘மையகண்ணாள் மலர் மேல் உறைவாள்உறைமார்பினன்’ (திருவாய். 4-5-2) என்றும், ‘நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்’ (திருவாய். 4-5-8) என்றும், ‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே’ (திருவாய். 6-9-3) என்றும், சொல்லிக் கொண்டு போந்து, ‘திருஆணை’ (திருவாய். 10-10-2) என்றும், ‘கோல மலர்பாவைக்கு அன்பாகிய என் அன்பே’ (திருவாய். 10-10-7) என்றும் முடிக்கையாலே, திருமகள் கேள்வனான நாராயணனே பரம்பொருள் என்றும் அருளிச்செய்தார்.

9.2.1. இத்தால் நம் ஆசாரியர்கள் ரஹஸ்யத்தில் (த்வயத்தில்) இரண்டு பதங்களாலும் அருளிச்செய்து கொண்டு செல்லும் பொருளுக்கு அடி, இவ்வாழ்வாரே ஆவர் என்பது போதரும், இறைவனைப் பற்றுகின்ற காலத்தில் ‘மலர்மகள் விரும்பும்நம் அரும்பெறல் அடிகள்’ (திருவாய். 1-3-1) என்று தொடங்கி, போக வேளையிலே ‘கோலம் மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பே’ (திருவாய். 10-10-7) என்று சொல்லுகையாலே, பற்றும் வேளையோடு போக வேளையோடு வேற்றுமை அற ஒரு மிதுநமே உத்தேசியம் என்னுமிடம் அருளிச்செய்தார் ஆவர். ஆக, இவ்வகையில் பரம்பொருளின் சொரூபத்தை அறுதியிட்டார்.

(9.3) ‘பரம்பொருளின் ஸ்வரூபத்திற்கு எதிர்தொடர் புள்ள தன் (ஜீவாத்மாவின்) ஸ்வரூபம் இருக்கும்படி என்?’ என்னில், ‘உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்து உளன்’ (திருவாய். 1-1-7) என்று சரீர ஆத்ம பாவத்தைத் தாம் சொல்லி, பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலே ‘உம் உயிர் வீடு உடையானிடை’ (திருவாய். 1-2-1) என்று அந்தச் சரீர ஆத்ம பாவத்தையே உபதேசித்து, இந்தச் சரீர ஆத்ம பாவத்தால் பலிப்பது ‘வேறு ஒருவர்க்கும் இன்றி இறைவனுக்கே அடிமையாக இருத்தல், என்னும் இடத்தை ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ (திருவாய். 2-9-4)என்றும், ‘அடியேன் உள்ளான் உடல் உள்ளான், (திருவாய். 8-8-2)என்றும் சொல்லி, இது அவனுக்கு அடிமை என்ற அளவிலே நிற்பது ஒன்று அன்று, அவன் அடியார்கட்கு அடிமை என்ற அளவிலும் சென்று சேர்தல் வேண்டும்,

அப்பொழுதுதான் அவனுக்கு அடிமையாதலும் கைகூடும் என்னும் இடத்தைப் ‘பயிலும் சுடர்ஒளி’ (திருவாய். 3-7-1), ‘நெடுமாற்கு அடிமை’ (திருவாய். 8-10-1) என்னும் திருவாய்மொழிகளிலே பரக்க அருளிச்செய்து, ‘ அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ!’(திருவாய். 2-3-10) என்று பிரார்த்தித்து, பிரார்த்தித்தபடியே ‘அடியரோடு இருந்தமை, (திருவாய். 10-9-11) என்று முடிக்கையாலே, பாகவதர்கட்கு அடிமைப்பட்டிருத்தலை எல்லையாகவுடைய பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்பதனை அருளிச்செய்தார்.

(9.4) ‘ஸ்வரூபத்திற்கு ஏற்ற புருஷார்த்தம் இருக்கு மாறு யாங்ஙனம்?’ என்னில், ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ (திருவாய். 2-9-4) என்று தொடங்கி, ‘வழுவிலா அடிமைசெய்ய வேண்டும் நாம்’ (திருவாய். 3-3-1) என்றும், ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட ‘ (திருவாய். 4-8-2)என்றும், ‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ (திருவாய். 8-5-7) என்றும், இப்படிகளாலே அடிமையே புருஷார்த்தம் என்னுமிடத்தை அறுதியிட்டு, ‘‘இவ்வடிமை தான் சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டது என்று செய்யுமது அன்று; ஸ்வரூபத்திற்குத் தக்கது என்றும் செய்யுமது அன்று; ஆகையாலே செய்யத்தக்கது, என்பதனைத் தெரிவிப்பதற்காக; முதலிலே ‘உயர்வற உயர்நலமுடையவன்’ (1-1-1) என்று அடைவதற்கு உரிய குணங்களைச் சொல்லிச் ‘சுவையன் திருவின்மணாளன்’ (1-9-1) என்றும், ‘தூய அமுதைப் பருகிப் பருகி’ (1-7-3) என்றும், குணங்களோடு கூடிய பொருளி னுடைய இனிமை யையுஞ் சொல்லி, ‘அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ (2-5-4)என்றும்,

‘ஆரா அமுதே’ (5-8-1) என்றும், ‘ஆரா அமுது ஆனாயே’ (10-10-5) என்றும் நாடோறும் புதிது புதிதாக இருக்கும் இந்த இனிமையின் தன்மையைச் சொல்லி, ‘உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்’ (10-8-10) என்று குணங்களை அநுபவித்தால் உண்டாகும் மீதூர்ந்த மகிழ்ச்சி வெள்ளத்தால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்னுமிடத்தைச் சொல்லி, இதுதான் உயிர் உள்ள அளவும் உள்ளதான புருஷார்த்தம் என்கைக்காக, ‘ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்’ (10-8-10) என்று முடிக்கையாலே பகவானுடைய குணங்களை அநுபவித்தால் உண்டாகும் பிரீதியாலே செய்யப்படும் தொண்டே புருஷார்த்தம் என்று அருளிச்செய்தார்.

(9.5) ‘இப்புருஷார்த்தத்துக்கு இடைச்சுவரான விரோதியின் தன்மை இருக்கும்படி என்?’ என்னில், இரண்டாந்திருப்பதி கத்திலே ‘வீடுமின் முற்றவும்’ (1-2-1) என்று கட்டடங்கச் சொல்லி, அவற்றை மேல் மூன்று திருப்பதிகங்களாலே விரித்து அருளிச்செய்தார். ‘அவை எவை?! என்னில், ‘சொன்னால் விரோதம்’ (3-9) என்ற திருப்பதிகத்திலே, ‘பணியத் தகாதாரைப் பணிதல் விடத் தக்கது’, என்றார்; ‘ஒருநாயகமாய்’(4-1) என்ற திருப்பதிகத் திலே, ஐஶ்வர்ய கைவல்யங்கள் விடத்தக்கன,’ என்றார்; ‘கொண்ட பெண்டிர்’ (9-1) என்ற திருப்பதிகத்திலே, ‘சரீர சம்பந்தம் காரணமாக வருமவை விடத்தக்கன,’ என்றார்.

‘நன்று; சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட ஐஶ்வர்ய கைவல்யங்கள் புருஷார்த்தமாகத் தடை என்?’ என்னில் பரமபுருஷார்த்தமான மோக்ஷத்திலே அதிகரித்தவனுக்கு ஐஶ்வர்யம். ‘ஐங்கருவி கண்ட இன்பமாகையாலும் (4-9-10), கைவல்யம் - தெரிவு அரிதாய் அளவு இறந்து இருந்ததே யாகிலும் பகவானுடைய அநுபவத்தை நோக்கச் சிற்றின்ப மாகையாலும் இவற்றைத் ‘த்யாஜ்யம்’ என்கிறார். ஆக, இவற்றால் விரோதியின் தன்மையினை அருளிச் செய்தார்.

(9.6) ‘த்யாஜ்யத்தின்’ வகை இருக்கும்படி என்?’ என்னில், ‘த்யாஜ்யம்’ என்றால் விடுவது அத்தனையன்றே? விடுகின்ற வகை இருக்கும்படி அறிதல் வேண்டுமோ?’ எனின், அறிதல்வேண்டும்; ‘விஷயங்களினின்றும் தான் கடக்க நின்று ஒழுகவோ, அன்றி, விஷயங்களை அழிப்பித்து ஒழுகவோ?’ என்றால், இரண்டும் ஒண்ணாது; கடக்க இருக்க என்று நினைத்தால், லீலா விபூதிக்கு அவ்வருகே போதல் வேண்டும்; அழிப்பித்து ஒழுகவோ என்றால், பகவானுடைய விபூதியை அழிக்கையாய்விடும்.

(9.7) இனி, ‘இரண்டும் ஒழியப் பொருள்களின் அண்மை யினின்றும் நீங்கி மனித சஞ்சாரம் அற்ற காற்றிலே வசித்தாலோ?’ எனின், எல்லாவற்றையும் விட்டுக் காட்டிலே இருந்த, ஆதிபரதனுக்கு மானின்பக்கல் அன்பு உண்டாய் ஞானக்கேடு பிறந்தது; சௌபரி நீருக்குள்ளே முழுகிக் கிடக்கவும் அங்கே திரிகின்ற மீன்கள் சிலவற்றைக் கண்டு சிற்றின்பத்தில் ஆசை உள்ளவன் ஆனான்; ஆகையாலே, விடுகின்ற வகை இவையல்ல; ‘ஆயின், மற்று என்னை?’ எனின், ‘நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின்’ (திருவாய். 1-2-3), என்று தேஹத்தை ஆன்மா என்று கருதும் அறிவையும், தேஹத்தோடு சம்பந்தப்பட்டிருக்கின்ற பொருள்களில் எனது என்னும் அறிவையும் தவிர்தல் விடுகின்ற வகை என்று பிறர்க்கு உபதேசித்தார்; ‘யானே என்னை அறியகிலாதே’ , ‘யானே என்றனதே என்று இருந்தேன்’ (2-9-9) என்று தாமும் சொல்லிப் போந்தார். ஆகவே, ‘ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற்கு உரிய வனமாம்’ (இதிஹாஸ ஸமுச்சயம்), என்கிறபடியே, ஆசை நீக்கிய வனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு ஏகாந்தத் தலம் என்பது போதரும். ‘இதனை எங்கே கண்டோம்?’ என்னில், ‘ஸ்ரீசனகராசன் பக்கலிலும், ஸ்ரீகுலசேகரப் பெருமாள் பக்கலிலும் கண்டுகொள்வது. ஆகையால், புத்தித்தியாகமே தியாகம் என்றபடி.

(9.8) ‘இவ்விரோதியைக் கழிப்பதற்கும் புருஷார்த்தம் கைகூடுவதற்கும் உபாயம் எது?’ என்னில், மூன்று வருணத்தார் மேற்கொள்ளக்கூடிய பக்தியும், ஒரு கதியும் இல்லாதவன் மேற்கொள்ளக் கூடிய பிரபத்தியும் என்னும் இரண்டு வழிகள் அன்றோ வேதாந்தங்களிற் பெறப்படும் உபாயம்? இவற்றுள், ப்ரபத்தியே உபாயம் என்று தமக்குச் சிந்தாந்தம் என்னும் ஆகாரம் தோற்ற உபாயத்தின் தன்மையினை அருளிச்செய்தார்.

‘யாங்ஙனம்?’ எனின், ‘நோற்ற நோன்பு இலேன்’ (5-7-1) என்று தொடங்கி, ‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’(5-7-10) என்றும், ‘உழலை என்பின்பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான், கழல்களவையே சரணாகக் கொண்ட’ (5-8-11)என்றும், ‘நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமானடி மேல், சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்’ (5-9-11) என்றும், ‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ (5-10-11) என்றும் சொல்லிக்கொண்டு போந்து, ‘ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன்’(10-10-3) என்று முடிக்கையாலே திருவடிகளே உபாயம் என்று அருளிச்செய்தார். இதனைப் பிறர்க்கு உபதேசிக்கு மிடத்திலும் ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ (4-1-1) என்றார். மற்றும், ‘ஆறு எனக்கு நின் பாதமே’ என்றும்’ ‘கழல்கள் அவையே’ என்றும், ‘சரணே சரண் நமக்கு’ என்றும் போந்த பிரிநிலை ஏகாரத்தால், ‘உபாயம் வேறு ஒன்று இன்று; அத்திருவடிகளே எல்லா வற்றையும் தரவல்ல உபாயம்; என்பதனையும் அருளிச் செய்தார்.

(9.9) ‘இவ்வுபாயத்துக்கு அதிகாரிகள் ஆவார் யாவர்?’ என்னில், ‘மயர்வற மதிநலமருளினன்’ என்ற இடத்தில் ‘எனக்கு அருளினன், என்கைக்குத் தம்மைக் காணாமையாலே ஆகிஞ்சந்யத்தையே (வேறு உபாயமும், வேறு கதியும் இல்லாமை) முற்கொண்டு, உபாயத்தை அறுதியிடும் வேளையில் ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்’ என்று, மூன்று வருணத்தார் மட்டும் செய்யக்கூடிய வேறு உபாயங்களில் அநந்வயமுகத்தால் (ஸம்பந்தமில்லாத தன்மை) ஆகிஞ்சந்யத்தைப் பேசி, பற்றுகிற வேளையில் ‘புகல் ஒன்று இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ (6-10-10) என்று சொல்லி, போக வேலையில்தமக்கு உண்டானவை அடங்கப் பகவானுடைய திருவருளால் வந்தவை என்கைக்காக, ‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ (3-3-4) என்று கருந்தரையைப் (பாலை நிலத்தைப்) பேசி, ‘ஒப்பிலாத் தீவினையேனை உய்யக் கொண்டு’ (7-9-4) என்று முடிக்கிறார். ஆதலின், பாவமே செய்து பாவிகளான ஆத்மாக்களும் சென்று சேரலாம் என்று தோற்றுகையாலே, எல்லாரும் அதிகாரிகள் என்று அருளிச்செய்தார்.

(9.10) அதிகாரியைப் பெற்றாலும், உபாயம் சித்தம் ஆனாலும் பற்றுதல் இல்லாதபோது உய்வதற்குக் காரணம் ஆகாமையாலே, அப்பற்றுந் தன்மையைக் ‘கழல்கள் அவையே சரணாகக் கொண்ட’ (5-8-11) என்றும், சாங்க அநுஷ்டான வேளையில் ‘அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்’ (6-10-10) என்றும் அருளிச்செய்தார். இங்ஙனம் பற்றுதல் கைகூடுதல் தானும் இறைவனாலேயே என்னுமிடத்தை ‘நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’(5-7-10) என்றும், ‘அதுவும் அவனது இன்னருளே’ (8-8-3) என்றும் அருளிச்செய்தார். பற்றும் தலைவனுடைய மனநிலையின் தன்மையினைக் ‘களைவாய்துன்பம் களையாது ஒழிவாய் களைகண்மற்றிலேன்’ (5-8-8) என்றும், ‘நாடொறும், ஏக சிந்தையனாய்’ (5-10-11) என்றும் அருளிச்செய்தார்.

இவ்வுபாயத்தைப் பிறர்க்கு உபதேசிக்கிற இடத்தில் ‘மற்று ஒன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிர்க்கும், சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்’ (9-1-7) என்று உபாயத்தின் சுலபத்தை அருளிச்செய்து, இப்பிரபத்தியை வகைப்படுத்தி அருளிச் செய்கிற இடத்திலே இப்பிரபத்தி பக்திக்கு அங்கம் அன்று; தானே உபாயமாக இருந்து காரியத்தைச் செய்ய வல்லது’ என்கைக்காக, ‘சரணமாகும்’ (9-10-5) என்று தொடங்கி, மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்’ (9-10-5) என்று பேறு முடிய முழுதினையும் நடத்தும் என்று அருளிச்செய்தார், ‘இவ்வுபா யத்தையே உறுதியாக நம்பி இருக்கும் அவனுக்குக் காலக்ஷேபத்தின் வகை இருக்கும்படி’ என்?’ என்னில், ‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன், ‘அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ (9- 4-9) என்பதனால், ‘இத்திருவாய்மொழிதானே காலக்ஷேப ப்ரகாரம்’, என்று அருளிச்செய்தார்.

(9-11) ‘இப்படி உபாயத்தை மேற்கொண்டு இதுவே போது போக்காகத் திரியும் அதிகாரிக்குப் பலம் யாது?’ எனின், ஐம்பொறிகளையும் அடக்கல் முதலாகக் கைங்கரிய சித்தி முடிவாக இருக்கும் இத்தனையும் உபாய பலம் என்பதனை அருளிச்செய்தார், உபாசகர்கள்இறைவனைப் பற்றுவதற்கு இழியும்போது ஐம்பொறிகளையும் அடக்கினவர்களாய்க் கொண்டு இழிதல் வேண்டும்; இந்தப்பிரபத்தி அதிகாரிக்கு ஐம்பொறிகளை அடக்குதலும் இவ்வுபாயத்தின் பலமாம்; ‘யாங்ஙனம்?’ எனில், ‘என்னைத் தீமனங்கெடுத்தாய்’ (2-7-8)என்றும், ‘மருவித் தொழும் மனமே தந்தாய்’(2-7-7) என்றும் இவர்தாமே அருளிச் செய்தார் ஆதலின், ஐம் பொறிகளை அடக்குதலும் அவன் திருவருளாலேயாம் என்க.

(9.12) ‘ஐம்பொறிகளையும் அடக்கினவன் ஆன வாறே பகவானுடைய அநுபவத்துக்கு உபகரணமான பக்தி முதலானவைகள் தமக்குத் தாமே உண்டாகின்றனவோ?’ என்னில், ‘மயர்வற மதிநல மருளினன்’(1-1-1) என்று பக்தியின் நிலையினை அடைந்த ஞானத்தையும் தானே தந்தான் என்று அருளிச் செய்கையாலே, பக்தி முதலான வைகள் தோன்றுதலும்அவன் திருவருளாலே என்பதனை அருளிச்செய்தார்.

‘ஆயின், தோன்றிய பக்திக்கு வர்த்தகர் யார்?’ என்னில், ‘காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நங்கண்ணன்’ (5-3-4) என்கையாலே அவனே வர்த்தகன் என்பதனையும் அருளிச்செய்து, ‘வளர்வதற்கு எல்லை ஏது?’ என்னில், ‘அதனில் பெரிய என் அவா’ (10-10-10) என்கையாலே, தத்துவ த்ரயங்களையும் (சித், அசித், ஈச்வர தத்வங்களை) விளாக்குலை கொள்ளும்படி (தன்னுள் அடங்கும் படி செய்தல்) பெருகின படியை அருளிச்செய்து, ‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ (10-10-10) என்று தம் திருவாயாலே அருளிச்செய்கையாலே சரீர சம்பந்தத்தை அறுத்துத் தேச விசேஷத்திலே கொண்டு போய்த் தன் திருவடிகளிலே சேர்ப்பித்துத் தலைக்கட்டினான் என்பதனை அருளிச்செய்தார்.

ஆக, இவ்வைம்பொருள்களுமே திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன. அல்லாதவை ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன (இடையிலே வந்தவை) இத்தனை. ‘யாங்ஙனம்?’ என்னில், பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணன் என்றும், அநந்யார்ஹ சேஷத்துவமே ஸ்வரூபம் என்றும்; இறை வனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் ப்ரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், அஹங்கார மமகாரங்கள் அதற்கு விரோதி என்றும், அவை நீங்குதற்கும் உபாயம் என்றும், ஐம்பொறிகளையும் அடக்கல் தொடக்கமாகக் கைங்கர்யம் முடிவாக உள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் சொல்லப்பட்டன. இதையே ஸ்ரீபராசரபட்டர் கீழ்க்கண்ட வாறு அருளிச்செய்தார்.

மிக்கவிறைநிலையும் மெய்யாமுயிர்நிலையும்
தக்கநெறியும் தடையாகித் - தொக்கியலும்

ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்*
யாழினிசை வேதத்தியல். (ஸ்ரீபராசரபட்டர்அருளிச்செய்தது)

‘அடையத் தகுந்த பரம்பொருளின் ஸ்வரூபத்தையும், அடைகின்ற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், அடையும் உபாயத்தையும், அடைவதற்குப் பலத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியையும் இதிஹாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் கூறுகின்றன,’ மஹாத்மாக்களும் வேதங்கள் வேதங்களின் பொருள்கள் இவற்றை அறிந்தவர்களுமான முனிவர்களும் சொல்லுகிறார்கள்,’ என்பதை விவரிக்கும் முறையில் எல்லா வேதங்களினுடைய கருத்து இவ்வைம்பொருள்களுமே என்றும், இவ்வைம் பொருள்களும் திருவாய்மொழிக்கு வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரியவங்கிப்புரத்து நம்பி அருளிச்செய்தார்.

06

ஈடு-மஹாப்பிரவேசம்- இரண்டு

திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையுமுடையவனாய், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையனான சர்வேஶ்வரன், ‘மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறபடியே, தொடர்ந்து வருகிற பிறவிகளிலே தோள்மாறித் திரிகிற இவரை இவ்வைம்பொருள்களையும் விசத தமமாக அறிய வல்லராம்படி முதலடியிலே நிர்ஹேதுகமாகச் சிறப்பும் திருவருளைச் செய்தருளினான்.

நம்மாழ்வார் திருவாய் மொழிப் பிரபந்தத்தாலே த்வயத்தின் பொருளை விவரணம் செய்கிறார். இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும் ஆத்மாவிலும், ஆத்மாவோடு தொடர்புள்ள பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும், அவனோடு தமக்கு உண்டான ஒழிக்கவொழியாத உறவையும் அருளிச் செய்கிறார். பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்.

(10-1) இவற்றுள், முதற்பத்தாலே ‘‘உயர்வற உயர்நல முடையவன் யவன் அவன்-அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் -துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’’ (1-1-1) என்றதனால், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவகமாகவுடையவனாய் வானவர் கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும், இனிக்கூறப்புகும் பொருளுக்கும் பிரமாணம்,’உளன் சுடர்மிகு சுருதியுள்’(1-1-7), என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும்,

‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண் புகழ் நாரணன்’(1-2-10) என்றும், ‘திருவுடை அடிகள்’ (1-3-8) என்றும், ‘செல்வ நாரணன்’ (1-10-8) என்றும் சிறப்புற ஓதி, ‘தொழுது எழு என் மனனே!’ (1-1-1) என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ (1-3-10) என்றதனால் முக்கரணங் களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்’, (’சொல் பணி செய் ஆயிரம்’,1-10-11) என்று அறுதியிட்டார்.

(10.2) இரண்டாம் பத்தால் , இந்தக் கைங்கரியத்துக்கு விரோதியான உலகத் தொடர்பின் சேர்க்கையைக் கழித்து, ‘ஒளிக்கொண்ட சோதியுமாய்’ (2-3-10), இக்கைங் கரியத்துக்குத் தேசிகரான அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?’ என்றதனால் தாமும்வேண்டிக் கொண்டு, ‘நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்’ (2-8-4) என்றதனால், பிறர்க்கும் உபதேசிக்கையாலே, ‘இவர்க்குப் பரமபதத்திலே நோக்காய் இருந்தது’ என்று நினைந்து, இறைவன் பரமபதத்தைக் கொடுக்கப் புக, ‘எம்மா வீட்டுத் திறமும் செப்பம்’ (2-9-1)என்றதனால், ‘எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை’ என்றும், ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ (2-9-4) என்றதனால், ‘அவனுக்கேயாய் இருக்கும் இருப்பே எனக்கு வேண்டுவது’, என்றும் இப்புருஷார்த் தத்தை அறுதியிட்டார்.

(10.3) மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன், கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’(3-3-1) என்று பாரித்து, பாரித்தபடியே, பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக அடிமைசெய்து தலைக்கட்டுகிறார் (3-7 பதிகம்). ஆக, முதல் மூன்று பத்துகளால் த்வயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது -- ‘ ஸ்ரீமதே நாராயணாய நம: ‘

(10.4) இனி, நான்காம் பத்தால், இப்புருஷார்த் தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ (4-1-1) என்றும், விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்’ (4-1-9), ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ (4-1-10) என்பனவற்றால், ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து, ‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ (4-9-10) என்று தாமும் சொல்லிப் போந்தார்.

(10.5) ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவ தற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும் ‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ (5-7-10) என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.

(10.6) ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக ‘அலர்மேல் மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ (6-10-10) என்றதனால் ஏற்றுக்கொண்டார். ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4-6) த்வயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது --’’ஸ்ரீமந்நாரயண சரணௌ ஶரணம் ப்ரபத்யே’’.

(10.7) ஏழாம்பத்தால், இப்படிச் ஸித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க் ‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ (7-1-2) என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட ‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ (6-9-1) என்று இவர் ஆசைப் பட்டபடியே, ‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ (7-3-1) வந்து காட்சியளித்தான்; அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேபாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமை யாலே பிரிந்தபடியை அருளிச் செய்தார்.

(10.8) எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே ‘உமர் உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார், அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிற படியே,(8-1-4) அடியார்கட்கு அதீனப்பட்ட ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகளை யுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக் கைக்குக் காரணம், ஆத்மாவிலும் ஆத்மாவோடு தொடர்புடைய பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு, அவற்றில் நசை அற்றபடியை அருளிச் செய்தார்.

(10.9) ஒன்பதாம் பத்தால், ‘நீர் ஏன் ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய ஒழிக்க வொண்ணாத உறவையும் காட்டி, ‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல் களோடும் கூடினவன்; உம்முடைய விருப்ப மனைத் தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய, ‘சீலம் எல்லை இலான்’ (9-3-11)என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.

(10.10) பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றா மையைக் கண்டு, ‘திருமோகூரிலே (10-1) தங்கு வேட்டை யாக வந்து தங்கி, இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் (10-9) காட்டிக் கொடுத்து, இவர் வேண்டிக்கொண்டபடியே ‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ (10-10-10) என்று இவர் திருவாயாலே அருளிச் செய்யும்படி பேற்றினை அளித்த படியை அருளிச்செய்கிறார்.

07

ஈடு - மஹாப்பிரவேசம் - மூன்று

(11) திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையும்உடையவனாய், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்உருவமாக உடையனான ஸர்வேஶ்வரன், ‘மாறி மாறிப் பல பிறப்பும்பிறந்து’ என்கிறபடியே, தொடர்ந்து வருகிற பிறவிகளிலே தோள் மாறி நித்திய ஸம்சாரியாய்ப் போந்த இவரை ‘அடியை அடைந்து உள்ளந்தேறி ஈறு இல் இன்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்’ என்று தம் திருவாயாலே அருளிச்செய்யலாம்படி முதலடியிலே விசேஷ கடாக்ஷத்தைச் செய்தருளினான்.

(11.1) முதல் முன்னமே சித்தின் ஸ்வரூபமாதல், அசித்தின் ஸ்வரூபமாதல், இறைவன் ஸ்வரூபமாதல் அறியாதே இருக்கிற இவர்க்கு, அசித்து விடத் தக்கது என்னுமிடத்தையும், சித்தாகிய சேதனன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் என்னுமிடத்தையும், இறைவனாகிய தான் ஏற்றுக்கொள்ளத்தக்க பொருள்களுள் உயர்ந்தவன் என்னுமிடத்தையும் அவன் தானே காட்டிக் கொடுக்கக் கண்டு, இறைவனுடைய அனுபவத்திற்கு இச்சரீர சம்பந்தம் தடையாய் இருக்கை யாலே, அவனுடைய அனுபவத்திற்குத் தடையாக உள்ள இச்சரீர சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேண்டும் என்று விரும்பினார் திருவிருத்தத்தில்.

(11.2) ஸம்சாரத்தோடு தொடர்பற்று ஒரு தேச விசேஷத்திலே போனால் அனுபவிக்கக்கூடிய தன்னுடைய மேன்மையையும், நீர்மையையும், வடிவழகையும்இங்கே இருக்குங் காலத்திலேயே அனுபவிக்கலாம்படி தெளி நிலையைச் செய்து கொடுக்க, பரப்பு அற ஏழு திருப் பாசுரங்களால் அவ்வழகை அனுபவித்தார் திருவாசிரியத்தில்.

(11.3) இப்படி அனுபவித்த பொருளில் பொருளுக்குத் தகுதியான ஆசை கரை புரண்டபடியை அருளிச்செய்தார், பெரியதிருவந்தாதியில்;

(11.4) ஆமத்தை (பசியின்மையை) அறுத்துப் பசியை மிகுத்துச் சோறு இடுவாரைப் போன்று, தமக்கு ருசியைப் பிறப்பித்த படியையும், அந்த ருசிதான் பரபக்தி, பரஜ்ஞான, பரம பக்திகளாய்க் கொண்டு பக்குவமான படியையும், பின்னர்ச் சரீர சம்பந்தமும் அற்றுப் பேற்றோடே தலைக்கட்டினபடியையும் அருளிச்செய்கிறார், திருவாய் மொழியில்.

(11.5) ‘‘ரிக், யஜுர், ஸாம வேதங்களும், அப்படியே அதர்வணமும், மற்றும் ஒலி உருவமாக உள்ளவை அனைத்தும், எட்டு எழுத்துக்களையுடைய திருமந்திரத் திற்குள் அடங்கி இருப்பனவாம்’’ (ஸ்ரீபாஞ்சராத்ரம்) என்கிறபடியே, நான்கு வேதங்களின் சுருக்கம் திருமந்திரமாய், அதனுடைய சுருக்கம் ப்ரணவமாய், அதனுடைய சுருக்கம் ‘அகரம்’ ஆயினாற்போன்று, திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பதிகம்; முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் மூன்று திருப் பாசுரங்கள்; முதல் மூன்று திருப்பாசுரங்களின் சுருக்கம் முதல் திருப்பாசுரம்; முதல் திருப்பாசுரத்தின் சுருக்கம் முதல் அடி.

(12) ஸ்ரீபாஷ்யத்திற்கும், திருவாய்மொழி முதல் மற்றும் இரண்டாம் பதிகங்களுக்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமையை அழகியமணவாளச்சீயர் அருளிச் செய்தபடி இதுவரை கருத்திற்கொண்டோம். ஈட்டின் வழி திருவாய்மொழிக்கும் ஸ்ரீபாஷ்யத்திற்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமையை இனிக் காண்போம். அதற்கு முன்பாக திருவாய்மொழி நூற்றந்ததாதி முதற் பாட்டிற்கான விளக்கத்தில் பிள்ளைலோகம் ஜீயரும், வீடுமின் முற்றவும் (1-2-1) பாசுர விளக்கத்தில் நம்பிள்ளையும், அடையவளைந்தான் அரும்பதக்காரரும் சில சிறப்புக்குறிப்பு களைத் தந்துள்ளனர். அவற்றை அனுபவத்தில் கொண்ட பிறகு 1-3 பதிகம் தொடங்கி திருவாய்மொழிக்கும் ஸ்ரீபாஷ்யத்திற்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்று மையை விரிவாகக் கருத்திற்கொள்வோம்.

திருவாய்மொழி முதல் பத்து முதல் பதிகத்தில் அமைந்துள்ள வேதாந்தக் கருத்துக்களை அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த ‘ஐககண்ட்யத்தில்’ மிக விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் முதல் பத்து இரண்டாம் பதிகம் தொடங்கியே ஈட்டில் காணப்படும் திருவாய்மொழி சொற்றொடர்களுக்கும், வேதாந்தச் சொற்றொடர்களுக்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமை கொடுக்கப் பட்டுள்ளது. *

08

திருவாய்மொழி நூற்றந்தாதி முதல் பாட்டிற்கான பிள்ளைலோகம் ஜீயர் வ்யாக்யானம்

உயர்வேபரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு* உயர்வேதம்நேர்கொண்டுரைத்து* - மயர்வேதும் வாராமல் மானிடரைவாழ்விக்கும்மாறன்சொல்* வேராகவேவிளையும் வீடு.

இந்தப் பாசுரத்தில் ‘உயர்வேத நேர்கொண்டுரைத்து’ என்ற சொற்றொடர்க்கு; ‘‘அபௌருஷேயமாய் நித்யநிர்தோஷ மாய் ப்ரத்யக்ஷாதி ப்ரமாணங்கள் போலே ஹேத்வந்தரங்களால் (வேறு காரணங்களால்) அழிக்கவொண்ணாதாகையாலே ஸர்வ ப்ரமாண உத்க்ருஷ்ட மான ச்ருதிச்சாயையாலே அருளிச் செய்து; அதாவது ‘‘ ‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’ (தை.ஆந.1) (அந்த முக்தாத்மா ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடு கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அநுபவிக்கிறான்) என்று கல்யாணகுண யோகத்தை ‘நலமுடையவன்’ (1-1-1) என்றும்,

(13.1) ‘‘தா4து:ப்ரஸாதா3ந் மஹிமாநம்’’ (தைத்ரீய ஆரண்யகம் - மஹாநாராயண உபநிஷத். 8-3) என்கிற க்ருபா வைபவத்தை ‘அருளினன்’ (1-1-1) என்றும், ‘‘தத்3 விஷ்ணோ: பரமம் பத3ம் ஸதா3 பஶ்யந்தி ஸூரய:’’ -(ருக் அஷ்டகம். 1-2-7) ‘விஷ்ணுவினுடைய அந்த பரமபதத்தை அல்லது (ஸ்வரூபத்தை) நித்யஸூரிகள் எப்போதும் பார்க்கிறார்கள்’ என்கிற விக்ரஹ விபூதியோகத்தை ‘அயர்வறும் அமரர்களதிபதி யவனவன் துயரறு சுடரடி’ (1-1-1) என்றும், ‘‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’’ (தை.ஆந. 1-1) - ‘ஸத்யமும் ஜ்ஞானமும் முடிவற்றதுமான ப்ரஹ்மம்’, ‘‘ஆநந்தோ3 ப்3ரஹ்ம’’ -’ஆனந்தம் ப்ரஹ்மம்’, ‘ஆநந்த3மய:’’ (தை.ஆந.5-2)-’ஆநந்தமயன்’ என்கிற திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை ‘உணர்முழு நலம்’(1-1-2) என்றும்,

(13.2)’’பாதோ3(அ)ஸ்ய விஶ்வா பூ4தாநி’’ (தை.ஆரண்யகம். 3-12) - ‘எல்லா இருப்பினங் களும், அவனுடைய ஒரு பாதம்’, என்று உபயவிபூதியையும் சொல்லி ‘‘பதிம் விச்வஶ்வஸ்ய’’(தை.நா. 1-11)- உலகத்தின் ஸ்வாமியும், என்று சொன்ன அந்த உபயவிபூதி நாதத்வத்தாலே லீலாவிபூதியும், அவனது என்னுமத்தை ‘இலனது’(1-1-3) என்று தொடங்கி தர்சிப்பித்தும், ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’’ (சாந். 3-14-1) - ‘இவையெல்லாம் உண்மையில் ப்ரஹ்மம்’, ‘‘நேஹ நாநாஸ்தி கிஞ்சந’’ (ப்ருஹ.4-4-19) - ‘இங்கே பலபடியானவை எவையும் கிடையாது’, ‘‘ஸ ஆத்மா அங்கா3ந்யந்யா தே3வதா:’’ (?) என்கிற ஸர்வ ப்ரகாரித்வத்தையும் ஸர்வந்தர்யாமித்வேந ஸர்வ ஸமாராத்யத்வத்தையும் ‘நாமவன்’ (1-1-4), ‘அவரவர்’ (1-1-5), என்கிற பாட்டுக்களாலே ப்ரகாசிப்பித்தும், ‘‘தேந விநா த்ருணாக்3ரமபி ந சலதி’’(அவனின்றி ஓர் அணுவும் அசையாது - முதுமொழி),

‘‘ஈச்வரஸ் ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶே (அ)ர்ஜுன திஷ்ட2தி | ப்4ராமயந் ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா ||’’ (ப.கீ.18-61) -’’அர்ஜுனனே அனைவரையும் நியமிக்கும் வாஸுதேவன், எல்லா உயிர்களுக்கும் (அறிவு உதயமாகும்) இதயமாகிற இடத்தில் ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும், எல்லா உயிர்களையும் ஸத்வ, ரஜஸ், தமோ குணமயமான மாயையாலே, அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்’’, என்ற ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் தததீநமென்னுமத்தை ‘நின்றனர் இருந்தனர்’ (1-1-6) என்றும்,

(13.3) ‘‘யஸ்யாத்மா ஶரீரம்’’ (ப்ருஹ. மா.பா. 5-7-26) ‘‘எவனுக்கு இந்த ஆத்மா உடலாகிறதோ’’,’’யஸ்ய ப்ருதி2வீரீரம்’’ (ஸுபா.-7) - ‘எவனுக்கு அண்டம் உடலாகிறதோ’, ‘‘அந்தர்ப3ஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:’’ (தை. நாரா. 11-5) - ‘எல்லாவற்றின் உள்ளும் புறமும் ஊடுருவி நிலை பெற்றிருப்பவன், நாராயணன்’என்ற ஸர்வவ்யாப்தியையும், (லிங்க3பூ4யஸ்த் வாதி4கரணம் 3-3-19 , ‘லிங்க3பூ4யஸ்த்வாத்தத்3தி4ப3லீ யஸ்தத3பி’ 3-3-43, என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச் சொற்றொடரை மேற்கோள் காட்டியுள்ளார்). ‘‘ஹ்ரீச்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ’’ (புருஷஸூக்தம்)- ‘எனக்கு ஸ்ரீதேவியும் பூமிதேவியும் பத்நிகள்’ என்ற ச்ரிய: பதித்வத்தையும், ‘திடவிசும்பு’ (1-1-7) என்கிற பாட்டாலே காட்டியும்;

‘‘தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தை3வதம் | (ஶ்வே. 6-7) - (ஈச்வரர்களுக்கெல்லாம் மிகவும் மேலான மஹேச்வரனுமாய், தேவதைகளுக்கெல்லாம் மிகவும் மேலான தேவதையுமாய், ‘நாராயணபரம் ப்3ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:’- ‘நாராயணனே பரப்ரஹ்மம், நாராயணனே பரதத்த்வம்’ என்று ஸர்வஸ்மாத்பரத்வத்தை ஸாதித்து த்ரிமூர்த்தி ஸாம்யத்தை நிவர்த்திப்பித்த படியை ‘சுரரறிவருநிலையாலே’ (1-1-8) ஸுவ்யக்தமாக்கியும், வேதபாஹ்யனான சூன்யவாதியை ‘உளனெனில்’ (1-1-9) இத்யதத்யுக்தியாலே நிரஸித்தும், ‘‘அணோரணீயாந் மஹதோ மஹீயாநாத்மா’’ (தை.நா 10-1) (அணுவைக் காட்டிலும் அணுவாய், பெரியதைக் காட்டிலும் பெரியதாயிருக்கும் பரமாத்மா) என்கிற வ்யாப்தி ஸௌகர் யத்தை ‘பரந்ததண் பரவையிலே’ (1-1-10) பேசியும், இப்படி வேதமார்க்காநுஸாரியாயிற்று முதற்பாட்டு தொடங்கி அருளிச்செய்தது; அத்தைபற்றவிறே (உயர்வேத நேர்கொண்டுரைத்து) என்ற இவர் அருளிச்செய்கிறது. ‘சுடர்மிகு சுருதி’ (1-1-8) என்றிறே ச்ருதிப்ரமாணத்தை அங்கீகரித்தருளிற்று. ‘அஹந்தா ப்3ரஹ்மணஸ்தஸ்ய’ (லக்ஷ்மி தந்த்ரம் 17-30) என்று ஸ்வரூபாந்தர்பாவம் உண்டா கையாலே ஸ்வரூபம் புக்கிடந்தே ஸ்வரூப நிரூபகபூதையான பிராட்டியும் உண்டாகக் குறையில்லை. *

09

முதல் பத்து ஈடு

14. வீடுமின் முற்றவும் (1-2) - ப்ரவேசம்

மோக்ஷசாஸ்த்திரம் இறைவன் தன்மையினைக் கூறுவதும் இறைவனை அடையும் வழியைப் பற்றிக் கூறுவதும் என இருபகுதிப்பட்டு இருக்கும். இவற்றுள், பரம்பொருளைப் பற்றிக் கூற வேண்டுவன எல்லாம் மேல் திருவாய்மொழியிலே (1-1 பதிகம்) அருளிச் செய்தார். பரம்பொருளை அடையும் வழியினைப் பற்றிச் சுருக்கமாக இத்திருவாய்மொழியால் அருளிச்செய்கிறார். ‘அவ்வழிதான் யாதோ? என்னில், இத்திருவாய்மொழியை ஸ்ரீஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வஹித்துக் கொண்டு போருவர்.

எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டுபோந்து, ஸ்ரீபாஷ்யம் எழுதி முடித்த பின்னர், பக்தி விஷயமாக அருளிச்செய்து கொண்டு போந்தார். பின்னர், எம்பாரும் அவ்வாறே அருளிச்செய்தார். ‘ஆயின், ஒன்று பக்தி விஷயமாகக் கூறுதல், இன்றேல், பிரபத்தி விஷயமாகக் கூறுதல் செய்யாது, நினைந்தவாறு பொருள் கூறுதல் பொருந்துமோ?’ எனின், இவருடைய பக்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது? (’இவருடைய பக்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது’ என்றது, இறைவனுடைய திருவருளே உபாயம் என்று அறுதி யிட்டு இருக்கும் இவருடைய ஸித்தாந்தத்தைப் பார்த்தால், ‘ப்ரபத்தியே உள்ளது; பக்தி இவர்க்கு இல்லை’ என்றும், ஆர்த்தியின் மிகுதியாலே ப்ரபத்தியை பண்ணும் இவருடைய அனுஷ்டானத்தைப் பார்த்தால், ‘பக்தியே இவர்க்கு உள்ளது மற்றையது இல்லை’, என்றும் நினைக்கும் படியாக இருக்கின்றது என்றபடி).

ஆயின்; பத்தியின் வகை இரண்டனுள் எவ்வகையான பத்தியினை இங்கு அருளிச் செய்கின்றார்?’ எனின், ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று இவர் தாம் பெற்றது பக்தியின் நிலையினை அடைந்த ஞானமாய் இருந்தது; தாம் பெற்றது ஒன்றும் இங்குக் கூறுகூது ஒன்றுமாக ஒண்ணாதே! அவ்வாறு கூறுவராயின், விப்ரலம்பக கோடியிலே (உள்ளதை உள்ளவாறு கூறாது மறைத்துப் புகலுவோர் கூட்டம்) ஆவரே.

14.1. ஆதலால், தாம் பெற்ற அதனையே பிறர்க்கு உபதேசிக்கின்றார் எனல் அமையும். ‘ஆயின், பக்தி என்பது ‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தை யுடையவனுக்கு’ என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டா லும் தூய்மை செய்யப்பட்ட மனத்தினை உடையவனுக்கு உண்டாவது அன்றோ? இவருக்கு அந்தப் பக்தி வந்த வழி யாது?’ எனின், இவருடைய பக்திதான், அந்த ஞான கர்மங்களினுடைய இடத்தில் இறைவனுடைய திருவருள் நிற்க, அது அடியாகப் பின்னர் விளைந்தது அன்றோ! ‘இதுதான் வேதாந்தங்களில் கூறப்பட்டதான பக்திதானே ஆனாலோ?’ என்னில், ஸர்வேச்வரன் அருள இவர் பெற்றாராகிற ஏற்றம் போம்; அபசூத்ராதிகரண (1-3-9) நியாயமும் பிரசங்கிக்கும்;

14.2. இனி, ‘மேல் திருவாய்மொழியில் (1-1) தாம் அனுபவித்தார்; இத்திருவாய்மொழியால் (1-2) பரோபதேசம் செய்கிறார்’, என்று இயைபு கூறலும் ஒன்று. ‘ஆயின், மேல் திருவாய்மொழியில் இறைவனுடைய பரத்வத்தை நுகர அதனால் ஒரு பெரிய திருநாள் போலே (மகிழ்ச்சி வெள்ளம் பொங்க என்று பொருள் கொள்ள வேண்டும்) அன்றோ காலம் கழிந்தது! இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே? தாம் அனுபவித்த பொருளின் எல்லை கண்டோ, அன்றி, தாம் அப்பொருளில் விரக்தரா கியோ?’ என்னில், தாம் நுகர்ந்த பொருளோ என்றால், ‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ (8-4-6) என்கிறபடியே, அளவிற்கு அப்பாற்பட்ட பொருள்; ‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ (4-7-2) அன்றோ? ஆதலால், தாம் நுகர்ந்த பொருளை எல்லை கண்டு அன்று. தம்முடைய காதலோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ (7-3-6) என்றும், ‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ (7-3-8) என்றும், ‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ (10-10-10) என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; ஆதலால், பொருளில் விரக்தராயும் அன்று. ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் காதல் பிறந்தால் அப்பொருளி லேயே வேறு காலங்களில் விரக்தி பிறக்கக் காண்கின்றோம்;

அப்படியே, சில காலம் நுகரப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது; ‘எப்பொழுதும், ‘‘நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம்’’ (2-5-4), என்னும்படி, என்றும் புதியதாகவே இருக்கும். இனி, ஆசார்ய பதம் மேற்கொள்ளுகைக்காக அன்று; புகழ் பொருள் பூஜைகளுக்காக அன்று; ‘ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன் அல்லன்’, என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.

14.3. இந்தப் பதிகம் ‘சார்வேதவநெறி’’ (10-4) பதிகத்தோடு தொடர்புடையது, இங்கே சொல்லப்பட்ட கருத்துக்கள் அங்கே மீண்டும் எடுத்ததுரைக்கப் பட்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்க.

15. ‘‘பத்துடையடியவர்’’ (1-3) ப்ரவேசம்

‘அவனை வழிபடுமின்’ என்று பலகாலும் அருளிச் செய்கின்றீர்; கண்ணாலே கண்டால் அல்லது வழிபட விரகு இல்லை; வழி பட்டால் அல்லது காண விரகு இல்லை; ஆன பின்னர், அவனை அடைதல் எங்ஙனம்?’ எனின், ‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன், சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய இறைவனைப் பரபத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன’, என்றும்.’’க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்3ருஷ்டே பராவரே’’ (முண்டக. 2-2-8) - (அந்தப் பரமாத்மா காணப்பட்டவுடன் இவனுடைய புண்யபாபரூப கர்மங்கள் அழிகின்றன) புருஷார்த்தா2தி4 கரணம் 3-4-1, ‘உப மர்த் த3 ம் ச’ 3-4-16, என்ற ஸூத்ரத்தில் இவ்வாறு விளக்கப்படுகிறது.

16. ‘‘உரவிடையாப்புண்டு’’ (1-3-1)

‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்; பொத்தி, ‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!’ என்று கூறினால் போகமாட்டாதே இருந்தான் என்றபடி. ‘ஆயின், வரம்பில் ஆற்றலையுடைய இறைவனை ‘வல்லையாகில் போய்க் காணாய்’ என்கைக்கு அடி எது?’ எனின், ‘இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப் படுகின்றது’ என்று ஓதப்படும் பொருள், இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள். ‘‘ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்3யதே ந தத்ஸமஶ் சாப்4யதி4கஶ்ச த்3ருஶ்யதே || பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச |’’ (ஶ்வே. 8)- அவனை ஒத்தவர்களும், மிக்கவர்களும் (எங்கும்) காணப்படவில்லை. அவனுக்கு இயல்பானதாய் பலவித மானதான சக்தியும், ஜ்ஞாநமும், பலமும், (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலான) செயல் களும் வேதங்களில் ஓதப்படுகின்றன. உப4யலிங்கா3தி4 கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபிஸ்மர்யதே’ 3-2-17, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரரால் இவ்வாறு விளக்கப்படுகிறது.

17. ‘‘பல பிறப்பாய்’’ (1-3-2)

பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் ‘பல பிறவி’ என்பன்; அஜாயமாநோ ப3ஹுதா4 விஜாயதே | தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’’ (தை.ஆரண்யகம் 3-13-3),உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார், ‘பல பிறப்பு’ என்பர்.

18. ‘‘ஒளிவருமுழுநலம்’’ (1-3-2)

‘ஆயின், இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், ‘அவன் பிறந்தவனாய் நம்மை யுடையவ னாகவே இருக்கின்றான்,’’’யுவா ஸுவாஸா: பரிவீத ஆகாத் ஸ உஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந’’ (ருக்வேதம். 3-8-4) என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான் என்றபடி.

19. ‘‘பேருமோராயிரம்’’ (1-3-4)

‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார். ‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன’ (’ஸர்வஜ்ஞோ தே3வோ நாம ஸஹஸ்ரவாந்’), எனப் புகழும் பாரதம். பிற பல உடைய எம்பெருமான் - அப்பெயர்களின் மூலமாகக் காண்கின்ற பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை. ‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது. ‘ஆயின்’ ‘பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின், ‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ என்றும். ‘பெயர்களையும் உருவங்களையும் உண்டு பண்ணுகிறேன்’ என்றும் பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின். ‘‘அநேந ஜீவேந ஆத்மநா (அ)நுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி (சாந். 6-3-2), ‘‘தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதம் ஏகைகாம் கரவாணி’’ (சாந். 6-3-3) - ‘இந்த உயிருள்ள ஒன்றுடன் கூடவே உட்புகுந்து, நான், பெயர் மற்றும் வடிவமாக வகைப்படுத்தக் கடவேன்’. ‘அவற்றுள் ஒவ்வொன்றையும் நான் மும்மடங்காகக் கடவேன் மும்மடங்காகக் கடவேன்’. பூ4தாதி4கரணம் 4-2-4, ‘நைகஸ்மிந் த3ர்ஶயதோ ஹி’ 4-2-6 என்ற ஸூத்ரபாஷ்யத்தில் இவ்வாறு விளக்கப் படுகிறது.

20. ‘‘வணக்குடைத் தவநெறி’’ (1-3-5)

இவரும் பக்தியை ‘வணக்குடைத்தவநெறி’ என்கிறார். பக்தியானது காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்பமயமாக இருக்குமாதலின் ‘அம் பகவன் தவநெறி’ என்கிறார். பக்தி, ஞானத்தின் விசேஷமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் அதனைச் சொல்லுகிறார்; ‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது’, என்கிற நியாயத்தாலேயாதல், இவனுடைய அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத் தாலேயாதல். ‘‘ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:’’ (முண்ட. 1-1-9) - ‘எல்லா ஞானமும் நிறைந்து, எல்லாவற்றையும் அறிபவனாக இருப்பவன், அவனுடைய தவம், அறிவால் அமையப்பெற்றது. உப4யலிங்கா3தி4 கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்ற ஸூத்ரபாஷ்யத்தில் விவரிக்கப் படுகிறது.

புறம் நெறி களை கட்டு - புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது, பறித்து. ‘பக்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும், ‘ப்ரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் கொள்க.

21. ‘‘ஒன்று என பல என அறிவு அருவடிவினுள் நின்ற (1-3-7)’’

ஒன்று என பல என அறிவு அருவடிவினுள் நின்ற - மூவர் முதல்வராய் மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே, மூன்று சரீரத்திலும் ஒருவனே நிலைபெற்றுநிற்கிறானோ, அன்றி, மூன்றிலும் மூன்று சேதனர் நிலைபெற்று நிற்கின்றார்களோ?’ என்று அறிய அரிய வடிவுகளையுடையராய் நிற்கிற. இனி, ‘ஓர் ஆத்மாவின் நிலைபேறோ, பல ஆத்மாக்களின் நிலைபேறோ? என்று அறிய அரிதான தன்மையினையுடையராய் நின்ற என்னுதல்.

நன்று எழில் நாரணன் - ‘நன்று’ என்பதனால், அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார். ‘எழில்’ என்பதனால், ‘நீங்கின குற்றங்களையுடைய வனும் மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனே யானவனும் ஆன நாராயணன்’ என்கிற புகரை நினைக்கிறார். இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு, வடிவின் அழகினைப் பார்த்தவாறே, ‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ ஏஷ ஸர்வபூ4தாந்தராத்மா (அ)பஹதபாப்மா தி3வ்யோ தே3வ ஏகோ நாராயண:’’ (ஸூ.பால. 7- இதரவ்யபதே3 ஶாதி4கரணம் 2-1-7, ‘அதி4கம் து பே4த3நிர்த்தே3ஶாத்’ 2-1-22) - ‘இந்த எல்லாவற்றின் உள்ளுக்குள் உறையும் ஆத்மா, பாவங்கள் அழியப் பெற்றவன்; ஒளிரும் இறைவன்; ஒருவனே நாராயணன்’, என்கிறபடியே,’ அனைத்து உலகும், அனைத்து உயிரும், அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம் படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம்.

22. ‘‘கொடுவினை’’ (1-3-8)

கொடுவினை- அனுபவித்தே தீர்க்க வேண்டி யவைகள். உடனே மாளும் பற்றின காலத்திலே அழியும். ‘தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ, அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன; ஆச்சரியம்,’ என்றும், (’’ஸக்ருத் ஸ்ம்ருதோ(அ)பி கோ3விந்தோ3 ந்ருணாம் ஜந்ம ஶதைஶ்சிதம்| பாபராஶிம் த3ஹத்யாஶு தூலராஶிமி வாநல:| மேருமந்த3ரமாத்ரோ(அ)பி ராஶி: பாபஸ்ய கர்மண:| கேஶவம் வைத்3யமாஸாத்3ய து3ர்வ்யாதி4ரிவ நஶ்யதி|| - விஷ்ணுதர்மம் - 8) - பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும், கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன’, என்றும் வருகின்ற பிரமாணங்களை அறிக.

23. ‘‘சடபோபன் குற்றேவல்கள்’’ (1-3-11)

ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின், எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே! ‘அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியஸூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, நித்தியஸூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ? ‘‘தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸ: ஸமிந்த4தே | விஷ்ணோர்யத் பரமம்பத3ம் || (யஜுர். காடகம்.1-3) - ‘விஷ்ணுவினுடைய பரமபதம் உண்டோ, அப்பரமபதத்தை, மேதாவிகளும், விசேஷமாக துதிப்பவர் களும், மிகவும் ஜாக்ரதையுடையவர்களான முக்தர்கள் ஒளிவிடச்செய்கிறார்கள்’.

அமரரோடுஉயர்வில்சென்று- இருப்பதைக் கற்ற போதே இவனை நித்தியஸூரிகளில் ஒருவனாக நினைப்பன்; பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை. அதாவது, சிறையிலே ராஜகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டிவிடுவாரைப் போன்று, நித்தியசூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் ஸம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி. ‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது; அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று, இவனும் விதிப்படியே செல்லவேண்டும். இனி, ‘அமரரோடு உயர்விற்சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே’, என்பதற்கு, ஆதிவாஹி கரோடே விரஜையிலே சென்று என்று கூறலுமாம்.

(ஆதிவாஹி - சுமந்து செல்பவர். விரஜை - பரமபதத்துக்கு இப்பாலுள்ள ஓர் ஆறு). ஸூக்ஷ்மசரீரமும் நீங்கப்பெறுவர் (ஸூக்ஷ்ம சரீரம் - பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை வினைவு களோடும் கூடிய மனம். பத்து வகை இந்திரியவுணர்வு-மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஞானேந்திரியம் ஐந்து, வாக்கு பாணி பாதம் பாயுர் உபத்தம் என்னும் கர்மேந்தி ரியம்ஐந்து ஆகிய இப்பத்தின் அறிவுகள். ஐவகை வாயுக்கள் - பிராணன், அபானன், வ்யானன், உதானன், ஸமானன் என்பன. காமவினை விளைவுகள்-ஆசையும் கர்ம பலன்களும்).

24. ‘‘அஞ்சிறைய மடநாராய்’’ (1-4) ப்ரவேசம்

‘இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன், பார்க்கத் தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே. ‘‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய: ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:’’ (ப்ருஹ. 4-4-5) - ‘அன்பானவனே! ஆத்மா உண்மையில் காணப்பட வேண்டும்; நினைக்கப்பட வேண்டும்; த்யானிக்கப்பட வேண்டும்’. ஆவ்ருத்த்யதி4கரணம் 4-1-1 ‘ஆவ்ருத்திரஸக்ருது3ப தே3ஶாத்’ 4-1-1. என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச்சொற்றொடரை விளக்கியுள்ளார்.

25. ‘‘என்றுஎனக்கருளி’’ (1-4-1)

மேலும், ‘‘ப்ரக்ருதி ஸம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம ஸாம்யத்தையடைகிறான்’’’நிரஞ்ஜந: பரமம் ஸாம்ய முபைதி’’ (முண்ட. 3-1-3) ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4 கரணம் 4-4-6 , ‘ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ 4-4-17, என்கிறபடியே, பரமபதத்தில் இருப்பவர்கள்எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்? நாங்கள் அவனுக்கும் அவர்களுக் கும்வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம் என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல்வார்த்தை சொல்லுகிறாள்;

வெஞ்சிறைப் புள் உயர்த்தாற்கு - அவர்கள் எல்லா வற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினக் காட்டும் அறிகுறியாகப் பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள்.

26. ‘‘நல்கித்தான்காத்தளிக்கும் பொழிலேழும்’’ (1-4-5)
உலகம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின் பொழிலேழும்’ என்கிறாள். (ஏழு தீவுகள் - நாவல், இறவி, க்ரவுஞ்சம், குசை, இலவம், தெங்கு, புஷ்கரம் என்பன. உலகத்தின் சிறு பிரிவுகளாகிய தீவுகளையும் உலகம் என்ற சொல்லால் அருளிச் செய்கிறார்; ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ (பொ. அகம். 5. ‘என்ற ஸூத்திரத்தில் ஆசிரியர் தொல்காப்பியனால் உலகத்திற்கு உட்பட்ட சிறு சிறு பகுதிகளையும் உலகம் என்ற சொல்லாற் குறித்தனர்).

27. ‘‘உடலாழிப்பிறப்புவீடுஉயிர்முதலாமுற்றுமாய்’’ 1-4-10)
‘எல்லாம் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள். ‘‘ப3ஹுஸ்யாம் ப்ரஜாயே யேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த் ஸ: ‘ 2-3-14, என்ற ஸூத்திரத்தில் இந்த வேதச்சொற்றொடர் விளக்கப்படுகிறது.

28. ‘‘மனம் செய் ஞானத்து உன் பெருமை’’ (1-5-2)

மனம் செய் ஞானத்து உன் பெருமை - இப்படி இருக்கிற ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தையுடைய உன் பெருமை உண்டு. உன் வேறுபட்ட தன்மை அது. ‘ஆயின், உலகிற்குக் காரணம், ஸங்கல்ப ரூப ஞானமோ?’ எனின், அன்று; ‘ஸூக்ஷ்ம சித்து அசித்துகளுடன் கூடின இறைவனே உலகிற்குக் காரணம்; ஆயினும், இவ்விறைவன் காரணமாகும்போது ஸங்கல்பம் முன்னாக ஆதல் வேண்டும். ‘ஆயின் ஸங்கல்பத்தை யுடைய அவ்விறைவன் காரணமாதல் வேண்டும், ஸங்கல்பம் காரணமாகாதே?’ எனின், ‘நான் பல வகைப் பொருள்களாக விரிகிறேன்’,’’ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3), என்கிற ஸங்கல்பத்தின் முக்கியத்துவத்தாலே ‘மனஞ்செய் ஞானத்தைக்’ காரணமாக அருளிச்செய்கிறார்.

29. ‘‘தான் ஓர் உருவே தனி வித்தாய்’’ (1-5-4)

தான் ஓர் உருவே தனி வித்தாய் - ‘‘ஸோமபானம் செய்தற்குரிய ச்வேதகேதுவே, காணப்படுகிற இவ்வுலக மானது படைப்பதற்கு முன்னே ‘ஸத்’ என்று சொல்லக் கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத் தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது’, ‘‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவா த்3விதீயம்’’ (சாந். 6-2-1) - வியத3தி4 கரணம் 2-3-1, ‘ஶப்3தே3ப்4ய:’ - 2-3-6, என்கிறபடியே இங்கும், இரண்டு இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன; ‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின், படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. ‘தான்’ என்கிற இதனால், முதற்காரணம் வேறு இல்லை என்கை. ‘ஓர்’ என்கிற இதனால் துணைக்காரணம் வேறு இல்லை என்கை. ‘தனி’ என்கிற இதனால், நிமித்த காரணம் வேறு இல்லை என்கை. உரு-அழகு, ஆக, ‘அழகிய மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

30. ‘‘தன்னில்மூவர்முதலாய’’ (1-5-4)

தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க. இனி, தன்னின் மூவர் முதலாய-பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய - என்று கூறலும் ஆம். ‘இந்திரனோடு கூட’ என்று புகலும் உபநிஷதமும். ‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ: ஸேந்த்3ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட்’’ (தை. நா. 11-13) - ‘அவனே ப்ரஹ்மதேவன், அவனே சிவன், அவனே இந்திரன், அவனே, ஆகாசம், அவனே மிக உயர்ந்தவன் அனைத்தையும் ஆள்பவன்’. லிங்க3பூ4யஸ்த்வாதி4கரணம் 3-3-19 , ‘லிங்க3பூ4யஸ்த் வாத்தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ (3-3-43) என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச் சொற்றொடரை மேற்கோள் காட்டியுள்ளார்.

31. ‘‘திசைகள் எல்லாந் திருவடியால் தாயோன்’’ (1-5-3)

‘திசைகள் எல்லாந் திருவடியால் தாயோன்’ என்று அத்திருவடிகளையே காட்டிக் சேரவிட்டான்; ‘உன் தேனே மலரும் திருப்பாதம்’, ‘‘விஷ்ணோ: பதே3 பரமே மத்4வ உத்ஸ:’’ (விஷ்ணுஸூக்தம்)என்று அதனையே விரும்பு கிறார் என்று கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, ‘திரிவிக்கிரமா வதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே.

32. ‘‘முதுவேதமுதல்வன்’’ (1-6-2)

‘முதுவேதமுதல்வன்’ என்கிறார். சாஸ்த்ர யோநித் வாதிகரணம் 1-1-3 ,’சாஸ்த்ரயோநித்வாத்’ - 1-1-3, ஶாஸ்திரம் ஒன்றையே (தன்னை அறிவதற்குக்) காரணமாகக் கொண்டதாகையாலே (ப்ரஹ்மம் வேதாந்தச் சொற்றொடர் களால் விசாரிக்கத்தக்கதே) என்பது இந்த ஸூத்ரத்தின் பொருளாகும்.

நித்தியமாய் புருஷனால் செய்யப்படாததாய் உள்ள வேதங்களால் சொல்லப்பட்டவனுக்கு. வேத முதல்வன் என்பது, ‘வேதவாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்ட வன்’ என்கிறபடியே, வேதங்களால் சொல்லப் பட்டவன் என்கை.

33. ‘‘அழிவின்றி ஆக்கம் தருமே’’(1-6-8)

அழிவின்றி ஆக்கம் தரும் - ‘மறுபடியும் மீண்டு வருகிறான் இலன்’ ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1), என்கிறபடியே மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.

34. ‘‘பிறவித்துயரற’’ (1-7) ப்ரவேசம்

‘மேற்கூறிய இறைவன் தன்னைக் கிட்டினாரையும் தான் மகிழ்ச்சியுறச் செய்கிறான்,’ ‘‘ஏஷஹ்யேவாநந்த3 யாதி’’ (ஆநந்தவல்லி.7) என்கிறபடியே, தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின், அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார். ‘நன்று; இறைவனிடத்தில் அனுபவிக்கும் அனுபவம் அன்றோ இன்ப மயமாய் இருக்கும்? அவனை ஆராதிக்கும் ஆராதனையும்இன்ப மயமாய் இருக்குமோ?’ எனின், மோக்ஷ தசையில் அனுபவம் இனிது ஆகிறதும் அவனைப் பற்றி வருகையாலேயன்றோ? அப்படியே, ஆராதனையும் அவனைப்பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும் இதனால், இறைவனுடைய ஆராதனையானது இதற்கு இட்டுப்பிறவாத ஸர்வேஶ்வரனும் ஆசைப்படும்படி போக ரூபமாய் இருப்பது ஒன்று என்று தெரிவித்தபடி.

35. ‘‘எப்பால்எவர்க்கும்’’ (1-7-2)

‘அப்பால் இப்பால்’ என்பன போன்று, ‘பால்’ என்பது இடத்தைக் காட்டும். நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் - ஆனந்தத்தாலே மேலே மேலே சென்று, பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால் ‘எந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின் றனவோ’ ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ‘‘ (தை. ஆந. 8-4) என்கிறபடியே, மீள வேண்டும் படியான ஆனந்தத்தின் மிகுதியையுடையவன்.

அதாவது, மனிதர்களுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் தேவர்களுடைய ஆனந்தம்; அவர்களுடைய ஆனந்தத்தைக்காட்டிலும் நூறு மடங்கு அதிகம் இந்திரனுடைய ஆனந்தம்; அவனுடைய ஆனந்தத்தைக் காட்டிலும்நூறு மடங்கு அதிகம் சிவனுடைய ஆனந்தம்; அவனுடைய ஆனந்தத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் பிரமனுடைய ஆனந்தம் என்று இப்படி ஏற்றிக்கொண்டே சென்று கூறப்படுகின்றதாய், இதைக் காட்டிலும் மேம்பாடு இல்லாததாய் உள்ள ஆனந்தத்தை யுடையவன் என்றபடி. ‘ஆனந்தமய’ ‘‘தஸ்மாத்3வா ஏதஸ்மாத்3 விஜ்ஞாநமயாத் I அந்யோந்தர ஆத்மா (ஆ)நந்த3மய:’’ (தை.ஆந. 5-2)’அதிலிருந்து, உண்மையில், இந்த விஜ்ஞாநமயனிலிருந்து - மற்றுமொரு உள்ளுறை ஆத்மா, ஆநந்தமயன், பேரின்பம் மிகுந்துள்ளவன்’ என்பது வேதமொழி.

36. ‘‘உய்யக் கொள்கின்ற’’ (1-7-5)

உய்யக் கொள்கின்ற - ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்’என்கிறபடியே, ‘‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதி கரணம் 1-1-6 ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தில் இந்தச் சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. , இல்லாதவனுக்கு ஸமானனான என்னை, கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்’ என்ற நிலையிலே ஆகும்படி செய்தான். உய்யக்கொண்டு விட்டிலன்; மேல் மேல் எனக் கொள்ளாநின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.

37. ‘‘முன்னை அமரர் முழுமுதலானே’’ (1-7-8)

முன்னை அமரர் முழுமுதலான் - ‘ஜ்ஞானவான் களும், முன்னர்த் தோன்றியவர்களும் ஆதிமுதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியதாய் தோன்றுகிறவர்களுமான நித்தியசூரிகள் எங்கு உள்ளார்களோ, அந்தப் பரமபதத்தில் என்கிறபடியே, ‘‘யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:’’ (யஜுர். அச்சித்ரம்) - ‘யாதொரு பரமபதத்தில், ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்க வல்லவர்களான, யாதொரு நித்யஸூரிகள், அநாதி ஸித்தர்களாயும், அநேக காலமானாலும் நூதனமான திவ்யமங்கள விக்ரஹத்தை உடையவர்களாயும் இருக்கி றார்கள்’-பழையராய் இருந்துள்ள நித்திய ஸூரிகளுடைய ஸ்வரூபம், ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்.

38. ‘‘கண்ணாவான்’’ (1-8-3)

கண்ணாவான் - ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’-’’சக்ஷுர்தே3வாநாமுத மர்த்யாநாம்’’ (யஜுர். 4-3) என்கிற ச்ருதி அர்த்தத்தை அருளிச்செய்கிறார். கண்ணாமவன் என்றபடி. இனி, இதற்குக் ‘காப்பாற்றுகின்றவன்’ என்று பொருள் கூறலுமாம். மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் - இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு, நித்தியஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.

39. ‘‘கற்பன் வைகலே’’ (1-8-4)

‘எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்தியஸூரிகளைப் போன்று நானும் இதுவே தொழிலாக இருப்பன்.’’தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸ: ஸமிந்த4தே | விஷ்ணோர்யத் பரமம்பத3ம் || (யஜுர். காடகம்.1-3) - ‘விஷ்ணுவினுடைய பரமபதம் உண்டோ, அப்பரமபதத்தை, மேதாவிகளும், விசேஷமாக துதிப்பவர் களும், மிகவும் ஜாக்ரதையுடையவர்களான முக்தர்கள் ஒளிவிடச்செய்கிறார்கள்’.

40. ‘‘இவையும் .... யவரும்’’ (1-9-1)

இவையும் ... யவரும்-இதனால் சித்தின் கூட்டத் தையும் அசித்தின் கூட்டத்தையும் தொகுத்துச் சொல்லு கிறார், தன்னுள்ளே ஆகியும்-’இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி. ‘அவன் ஒருவனே’ ‘‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3 விதீயம்’’ (சாந். 6-2-1) என்கிறபடியே, தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக்கொண்டு தரித்து இருந்தபடியைச் சொல்லுகிறார்.

ஆக்கியும் - ‘பல பொருள்களாக விரிகிறேன்’ ‘‘ப3ஹுஸ்யாம் ப்ரஜாயே யேதி’’ (சாந். 6-2-3) என்கிறபடியே, தன் பக்கலிலே நின்றும் பிரித்து, பெயர் உருவம் அடையத்தக்கவாறு அவற்றைச் செய்தும் காக்கும்- உண்டாக்கிய பொருள்களை ஈரக்கையால் தடவிக் காக்கின்றபடி. அவையுள் தனி முதல்-இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள், ‘‘அநேந ஜீவேந ஆத்மநா (அ)நுப்ரவிஶ்ய (சாந். 6-3-2)’இந்த உயிருள்ள ஒன்றுடன் கூடவே உட்புகுந்து, அந்தராத்மாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.

1.41. ‘‘மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் விரியும் எம்பிரானையே’’ (1-10-2)

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் விரியும் எம்பிரானே - ‘காரணமான ஐம்பெரும்பூதங் கட்கும் உள்ளீடாய் நான் பலவாக விரிகிறேன்’ ‘‘ப3ஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) என்கிற படியே, தன் மலர்த்தியே ஆகும்படி இருக்கிற உபகாரகன். காற்று எல்லாவற்றையும் தரிக்கச்செய்வது ஆதலின், ‘நல்வாயு’ என்கிறார்.

முதல் பத்து முடிவுற்றது.

10

இரண்டாம் பத்து

42. ‘‘ ...... ஆட்பட்ட எம்மேபோல் நீயும்’’ (2-1-2)

ஆட்பட்ட எம்மேபோல் நீயும் - இனி, ‘இறைவன் ‘‘பதிம் விச்வஶ்வஸ்ய’’(தை.நா.11-3, அஹிகுண்ட3லாதி4 கரணம் 3-2-6,உப4யவ்யப தே3ஶாத்த்வஹிகுண்ட3லவத் -3-2-26)- உயிர்கட்கெல்லாம் ஈச்வரனாயும், உலகத்தின் ஸ்வாமியும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாத வனாயும் இருக்கிறான்,’ ‘‘யஸ்யாஸ்மி ந தமந்தரேமி’’ (யஜு. அஷ்டகம். 3-7) - ‘ஈச்வரனுக்கும் தாஸனா யிருக்கிறேன், அந்த ஈச்வரனை அதிக்ரமிக்கிறேன் அல்லேன் என்றபடி’, என்றும், ‘இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்’, என்றும் ஓதினாய் இல்லை; மயர்வற மதிநலம் அருளப் பெற்றாய் இல்லை; ஆதலால், என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம்.

(43) தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே *
மிகுந்தேவும் எப்பொருளும்படைக்க *
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்*
மிகுஞ்சோதி மேலறிவார்யவரே? (2-2-5)

இனி, இதற்கு. ‘‘நான் பல பொருள்கள் ஆகின்றேன்’, என்கிறபடியே, ‘‘ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநா தே3வ து தல்லிங்கா3த் ஸ: ‘ 2-3-14, என்ற ஸூத்திரத்தில் இந்த வேதச்சொற்றொடர் விளக்கப்படுகிறது.

அந்த மூலப்பகுதிக்கும் காரணமான ஸங்கல்ப ரூப ஞானம் என்று பொருள் கூறலுமாம். ‘உலகத் தோற்றத்திற்குப் பரமாணுக்களே காரணம்’, என்பாரும் உளராதலின், அவர் கொள்கையினின்றும் வேறுபடுத்து வதற்குத் , ‘தனி’ என்னும் அடைபுணர்த்து ஓதுகிறார். மிகும் தேவும்-தன்னோடு மசக்குப் பரல் இடலாம்படியான தேவசாதியையும். ‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்’, என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

எப்பொருளும் படைக்கத் தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி - ‘மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்குக் தகுவான் - ஒருவன்’ என்னுமிடத்தைத் தெரிவிப்பனவாய், காக்குந் தன்மை இல்லையாயினும் காட்சிக்கு இனியவாய்க் குளிர்ந்திருக்கிற திருக்கண்களையுடையவனாய், அக்கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே மிக்க பேரொளியை யுடையவன். ‘தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான்’ என்று திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார்.

‘பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், ‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும் நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். ‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச்ச2ரீராத் ஸமுத்தா2ய பரம்ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - [கீழ்ச் சொல்லியபடி உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்; (ஸித்தாந்தத்தில் பொருள் இது)].ஸம்பத்3 யாவிர்பா4வாதி4 கரணம் 4-4-1ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த் 4-4-1, என்றும், ‘‘நாராயணபரோ ஜ்யோதிராத்மா’’ (தை.நா.11-4 ), ‘நாராயணனே பரஞ்சோதி; நாராயணனே பரமாத்மா’ என்றும் உபநிஷத் துக்கள் கூறுகின்றன.

44. ‘‘ஊனில்வாழ் உயிரே’’ (2-3-1)

‘ஆயின், மனத்தை ‘உயிர்’ என்பான் என்?’ எனின், உயிருக்கு தர்மபூத ஞானம் நித்தியமாய் இருக்கவும் *(தர்மபூதஞானம் - தர்மமான அறிவு; அதாவது, ஆத்மாவினைப் பற்றி இருப்பதாய், உலகத்துப் பொருள்களை அறிதற்குக் காரணமாயுள்ள ஞானம்)*, ‘மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ (வி.பு.6-7-28) என்கிற ப்ராதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்மாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார்.

இதற்கு இவற்றைச் சுவையுடைப்பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித் ‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச்செய்வர். ‘ஸர்வ க3ந்த, ஸர்வ ரஸ:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை. ‘‘ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸ: ‘‘ (சாந். 3-14-2) - ‘எல்லா மணத்துடன், எல்லா சுவையுடன்’ க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம் 2-1-9 ஸர்வோபேதா ச தத்3த3ர்ஶநாத் 2-1-30, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் இது மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

நன்று; ஆளவந்தார் நிர்வாஹத்திலே, ‘தேனும் தேனும் கலந்தாற்போலே கலந்தோம்’ எனின், இவ்விரண்டனையும் சேர்த்துச் சொல்லும்போது, வருவது ஓர் அளவின் மிகுதி உண்டு அன்றே? அவ்வளவின் மிகுதிதானே பொருள்கள் இரண்டு என்பதற்கு ஏற்ற பிரமாணமாம்.

45. ‘‘ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா’’ (2-3-2)

ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா - ‘பரம்பொருளுக்கு ஒத்தவனும் காணப்படுவது இல்லை; மிக்கவனும் காணப்படுவது இல்லை’, என்கிறபடியே, ஒத்தவனும் மிக்கவனும் இல்லாதவனாய் இருப்பான். திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு தாரித்திரியம் உண்டு என்று அருளிச்செய்வர், எம்பார். ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்3யதே ந தத்ஸமஶ் சாப்4யதி4கஶ்ச த்3ருஶ்யதே || பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச |’’ (ஶ்வே. 6-7,8)அவனை ஒத்தவர்களும், மிக்கவர்களும் (எங்கும்) காணப்படவில்லை. அவனுக்கு இயல்பானதாய் பலவிதமான தான சக்தியும், ஜ்ஞாநமும், பலமும், (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலான) செயல்களும் வேதங்களில் ஓதப்படுகின்றன. இவை முதலான நூற்றுக்கணக்கான வேதச்சொற்றொடர்கள் இவ்விஷயத்தில் ப்ரமாணம். உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்ற ஸூத்திரத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

46. ‘‘அறியாதன அறிவித்த’’ (2-3-2)

ஆசார்யனாய் இருந்து விரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து. ‘தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசார்யன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ ‘‘யஸ்மாத்த4ர்மாசிநோதி ஸ ஆசார்ய: தஸ்மை ந த்3ருஹ்யேத் கதா3ச ந ஸவித்3யா யாத ஸ்தம்ஜநயதி தத்ஶ்ரேஷ்டம் ஜந்ம ஶரீரமேவ மாதா பிதரௌ ஜநயத:’’ (ஆப.ச்ரௌ.ஸூத்) - யாதொரு காரணத்தால் விஹித தர்மங்களை செய்கிறானோ, அந்தக் காரணத்தால் அவன் ஆசார்யன்; அந்த ஆசார்யன் பொருட்டு எப்பவும் துரோகம் செய்யக்கடவனல்லன், அந்த ஆசார்யன் அந்த சிஷ்யனை வித்யையால் உண்டாக்குகிறான். வித்யா ஜன்மமானது சிறந்தது. தாய்தந்தையர்கள், தேஹத்தை மட்டும் உண்டு பண்ணினார்கள்’’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச்செய்த ஆசார்யன் சிறந்தவ னாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசார்யனை அருளிச்செய்கிறார்.

‘ஆயின், இறைவன் ஆசாரியன்; ஆவனோ?’ எனின், ‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள் - ‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ (ப.கீ. 18-66) என்றான் ஸ்ரீகண்ணபிரான். ‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும், வசிக்கும் இடமும், பற்றுக்கோடும், நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே’, ‘‘ மாதா பிதா ப்4ராதா நிவாஸஶ்ஶரணம் ஸுஹ்ருத்’’ (ஸுபாலோபநிஷத். 6-4) என்பது உபநிஷதம். ‘பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ (பெரியதிருவந். 5) என்பது தமிழ் மறை.

47. ‘‘குறிக்கொள் ஞானங்களால்’’ (2-3-8)

குறிக்கொள் ஞானங்களால் - யமம், நியமம் முதலியவற்றிலே கருத்து ஊன்றியவர்களாய்க்கொண்டு ஸம்பாதிக்க வேண்டும் ஞான விசேஷங்களாலே. கேட்டல் மனனம் உபாசனம் முதலிய நிலை விசேடங்கள். (*யமம் நியமம் முதலியவை எண்வகை யோக உறுப்புகள் எனப்படும். அவை, ‘ஆதனம், யமம், நியமம், ப்ராணா யாமம், ப்ரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி’ என்பன. இவற்றுள், யமம் - கொல்லாமை, வாய்மை முதலியன. நியமம்-தத்துவ நூல் ஆராய்ச்சி, தெய்வ வழிபாடு முதலியன. ஆதனம் - இருப்பு. அது ஸ்வஸ்திகம் முதலாக எண்வகைப்படும். ப்ராணா யாமம்-ப்ராணவாயுவை ரேசக பூரக கும்பகஞ் செய்தல்; இது உயிர் நிலை, வளி நிலை’ எனப்படும். ப்ரத்தியாகாரம் - மன ஒடுக்கம்; இது தொகை நிலை’ எனவும் படும். அது உபாதியை நீக்கி உள் நோக்கல். தாரணை - கண்டம், இதயம், நெற்றி, கபாலம், நாபி இவற்றுள் ஒன்றி எப்பொழுதும் சிந்தையை வைத்தல்; இது, ‘பொறை நிலை’ எனவும்படும். சமாதி-இந்திரியம் முதலிய தத்துவங்களின் சேஷ்டைகளுக்கு ஏதுவாகிய உடம்பினுள் நின்று அவற்றோடு கூடினும் அவற்றில் பற்றின்றி இருக்கும் ஆத்மாவாகிய தன்னைத் தான் காண்டல்*).

‘‘கடிவார் தண்ணந்துழாய்’’ (2-3-9) - அவதாரிகை

ஈடு: ஒன்பதாம் பாட்டு. ‘இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும்போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று மகிழ்கிறார். ‘‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’’ (தை. ஆந. 1-2) - ‘அந்த முக்தன் ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடு கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான்’. ஜக3த்3 வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6 ‘போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச’ 4-4-21, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

49. ‘‘இவ்வாணுதலே’’ (2-4-1)

இவ்வாணுதலே - ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே! என்பான், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப் பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’என்பது திருத்தாயாருடைய கூற்றாகும்.

‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’, ‘‘ஸூர்யாசந்த்3ர மஸௌ தா4தா யதா பூர்வமகல்பயத்’’ (தை.நா.உப. 14-4) - ‘படைப்பவன் திட்டமிட்டு முன்பு இருந்ததைப் போல் சூரியனையும், சந்திரனையும் படைத்தான்’. சமஸாதி4கரணம் 1-4-2 - ‘கல்ப நோபதே3ஶாச்ச மத்4வாதி3வத3விரோத4:’ 1-4- 10,என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் விளக்கப் படுகிறது.

50. ‘‘நீர் இரக்கமிலீரே’’ (2-4-2)

‘இவள் நைவு அவன் இரக்கத்துக்குப் பரிகரம், அவன் இரக்கம்பேற்றுக்குச் ஸாதனம்; ‘இப்பரம்பொருள், மனத்தாலும், நிதித்தியாஸனத்தாலும், மிகுந்த கேள்வி யாலும், அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின் றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே , தானே காட்டாக காணும் இத்தனையே. ‘‘நாயமாத்மா ப்ரவசநேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந I யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) - ‘இந்தப் பரமாத்மா ச்ரவண மனன த்யானங்களால் மட்டுமே அடையத்தக்கவனல்லன். எவனை இவன் வரிக்கிறானோ அவனாலேயே இவன் அடையத் தக்கவன். அவனுக் இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான்’. பராதி4கரணம் 3-2-7 , ‘ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3 வத்’ 3-2-33, என்ற ஸூத்திரபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறாக விளக்கமளித்துள்ளார்.

51. அணைவதுஅரவணைமேல் பூம்பாவையாகம் புணர்வது * இருவரவர்முதலும் தானே * (2-8-1)

அரவணை மேல் அணைவது - முக்தப் ப்ராப்ய போகந்தான் இருக்கிறபடி. பர்யங்க வித்தையிற் சொல்லுகிற படியே (*’’அணைவதரவணைமேல்’ என்ற அளவில், முக்தப்ராப்ய போகத்தைக் கூறியபடி யாங்ஙனம்?’ என்னும் வினாவிற்கு விடையாக, ‘பர்யங்க வித்தையிற் சொல்லுகிறபடியே’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார். ‘பரமபதத்திலே திருமாமணி மண்டபத்திலே திருவனந்தாழ்வான்மேலே தர்மமுதலான எட்டுப் பீடத்தை உடைத்தான திவ்ய சிம்மாசனத்தின் மத்தியில் ‘அஷ்ட தளபத்மம்’ என்கிற தாமரையிலே, அந்தத் தாமரையின் அஷ்டதளத்திலே இருக்கிற ‘அநுக்கிரஹை’ என்றவளோடே கூடத் திருவெண்சாமரம் பரிமாற அந்தக் கர்ணிகையிலே திருவனந்தாழ்வான்மேலே பிராட்டி மாரோடு கூட வீற்றிருப்பது’ பர்யங்கா வித்யா பிரகாரம் என்பதாகக் கௌஷீதகீ பிராஹ்மணத்திலே சொல்லப் பட்டது என்று அருளிச்செய்வர்*), ஸர்வேஶ்வரனும் பிராட்டிமாரும் கூடத் திருவனந்தாழ் வானாகிற படுக்கையிலே இருக்கிற இருப்பிலே, இச்சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால், ‘‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’’ (ப்ருஹ.உப. 3-4-10) -நான் ப்ரஹ்மம், நான் ராஜ புத்திரன், ப்ரஹ்ம ப்ரகார பூதன்’ என்னக்கடவன்;

ஆகில், ‘இங்ஙனே வாராய்’ என்றால், அவன் அங்கீகாரம் பெற்று, தாய் தந்தையர்கள் இருக்க படுக்கையிலே குழந்தை சென்று ஏறுமாறு போன்று ‘அவனை இவ்விதமாக அறிந்தவன், அவன்மேல் காலால் ஏறுகிறான்’ என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப்பேற்றைச் சொல்லுகிறது.

(’’அஹம் ப்3ரஹ்மாஸ்மி’’ என்ற வாக்யம் ஸாமாநாதிகரண்யம் என்று கொண்டு , அதற்கு பொருள் அருளிச்செய்கிறார், ‘நான் ராஜ புத்திரன், ப்ரஹ்ம ப்ரகார பூதன்’ என்ற வாக்கியங்களாலே, ‘இங்கு ஸாமாநாதி கரண்யம், கார்ய காரண பாவத்தாலேயாதல், சரீர ஆத்ம பாவத்தாலேயாதல் கொள்க. ‘நான் ராஜ புத்திரன்’ என்றது கார்ய காரண பாவத்தாலே ஸாமாநாதிகரண்யம்; ‘ப்ரஹ்ம ப்ரகாரபூதன்’ என்றது சரீர ஆத்ம பாவத்தாலே ஸாமாநாதிகரண்யம். ராஜபுத்திரன் -ப்ரஹ்மபுத்திரன் என்றபடி.)

மூவகைத் துன்பங்களாலே கொந்த ஸம்சாரி சேதனன், ‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ (பாரதம்.மோக்ஷ.4-50) என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க்கழிந்தாரைப்போன்று இருக்கின்றன்ற ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது.

சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி. நாற்றம், குளிர்த்தி, மென்மை களை இயல்பாகவே உடையவனாதலின் ‘அரவு’ என்கிறார். இனி, அணைமேல் அணைவது என்பதற்கு. ‘திருவனந்தாழ் வானோடு அணைவது’ என்று பொருள் கூறலுமாம். ‘புல்கும் அணையாம்’ (முதல்திருவ.53) என்றார் பொய்கையாரும்.

ஸர்வேஶ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ் வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை, முக்தப் ப்ராப்யபோகம் என்றபடி. இருவர் அவர் முதலும் தானே - பிரமனுக்கும் சிவனுக்கும் காரணனாய் இருப்பான்; ‘பிரமன் அவன், சிவன் அவன்’ என்கிற பிரஸித்தியாலே ‘இருவர் அவர்’ என்கிறார். ‘‘தஸ்யா: ஶிகா2யா மத்4யே பரமாத்மா வ்யவஸ்தி2த: (தை. நா. 11-11) ‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ: ஸேந்த்3ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட்’’ (தை. நா. 11-13) - ‘பரமாத்மா அந்த பிழம்பின் நடுவில் நன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளான்’. ‘அவனே ப்ரஹ்மதேவன், அவனே சிவன், அவனே இந்திரன், அவனே, ஆகாசம், அவனே மிக உயர்ந்தவன் அனைத்தையும் ஆள்பவன்’. லிங்க3பூ4யஸ்த்வாதி4கரணம் 3-3-19 , ‘லிங்க3பூ4யஸ்த்வாத் தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ (3-3-43) என்ற ஸூத்திர பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச் சொற்றொடரை மேற்கோள் காட்டியுள்ளார்.

அம்மோக்ஷ உலகத்தைச் சொல்லுகிற இடத்தில் ‘அணைவது புணர்வது’ என்கையாலே, அது போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்னுமிடமும், இங்கு ‘முதல்’ என்கையாலே, இவ்வுலகத்தில் காரிய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும், இதுதான் ஆவது அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது. இதனால், பிரமனும் சிவனும் ஸம்சார பத்தர்கள் என்னுமிடமும். ஸர்வேஶ்வரனே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறது.

52. ‘‘வேர் முதலாய் வித்தாய்ப்பரந்து’’ (2-8-10)

வேர் முதலாய் வித்தாய் - மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து - ‘உயிர்களைப் படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள் ஆனார்’ என்கிறபடியே, முந்துறு இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. Òதத் ஸ்ருஷ்ட்வா ததே3வா நுப்ராவிஶத்| தத3நுப்ரவிஶ்ய ஸச்ச த்யச்சாப4வத் ||Ó (தை.ஆந 6.2.3) [(பரம்பொருளானது) உலகை ஸ்ருஷ்டித்து, அதையே உள் நுழைந்து வியாபித்தது; அதை வியாபித்தபின் விகாரமற்றதான சித்தாகவும், விகாரமுடைய அசித்தாகவுமாயிற்று]. என்ற ஶ்ருதியிலும், ஸர்வேஶ்வரன் எல்லாச் சேதந அசேதநப் பொருள்களையும் நியமித்துக் கொண்டு எப்போதும் வியாபித்திருக்கிறான்’’ ஜ்யோதி ராத்3யதி4ஷ்டா2நாதி4கரணம் 2-4-6, ‘தஸ்ய ச நித்யத்வாத்’ 2-4-14, என்ற ஸூத்திரத்தின் விரிவுரையிலும் தெளிவாகக் காணப்படுகிறது.

‘‘எனக்கே ஆட்செய் எக்காலத்தும்’’ (2-9-4) அவதாரிகை

எம் மா வீட்டில் எம் மா வீடாய் (*’எம் மா வீட்டில் எம் மா வீடாய்’ என்றது முதல் ‘விரும்புகிறார்’ என்றது முடிய, பாசுரத்திற்கு அவதாரிகை. ‘எம் மா வீட்டில் எம் மா வீடாய்’ என்றது. திருவாய்மொழி ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு பேற்றினை அறுதியிடுதலைப் பற்றிக் கூறுகின்ற ‘எம் மா வீடு’ பத்துப் பாட்டும் சாரமாயிருக்கும்; அவற்றில் இது நிதானமான பாசுரமாகையாலே ஸார தமமாயிருக்கும் என்றபடி. ‘வைஷ்ணவர்களனைவர்க்கும் செல்வமாய்’ என்றது, ‘ஸ்ரீவைஷ்ணவ அதிகாரிக்கு இப்பாசுரப்பொருள் அவசியம் அபேக்ஷிதம்’ என்றபடி. ‘உபநிஷதத்தின் ரஹஸ்யப்பொருளாய்’ என்றது, கடவல்லியுபநிஷத்துச் ஸித்தமான துவயத்தில் ‘நம:’ என்னும் பதத்தின் பொருள் இங்குக் கூறப்படுகின்றது என்றபடி*), வைஷ்ணவர்கள் அனைவர்க்கும் செல்வமுமாய், உபநிஷதத்தின் ரஹஸ்யப் பொருளாய், ஸர்வேஶ்வரன் பக்கலிலே விரும்பிப் பெறு மதாய், இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பாரதந்திரியத்தை அவன் பக்கலிலே விரும்புகிறார்.

53. ‘‘சிறப்பில் வீடு’’ (2-9-5) அவதாரிகை

‘நீர் யாராகத்தான் நம்மை இப்படி விரும்புகிறீர்?’ ‘தேஹமே ஆத்மா’ என்பார்; கேவலம் தேஹத்திற்கு இந்திரியம் ஒழிய அனுபவம் இல்லாமையாலே ‘இந்திரியங் களே ஆத்மா’ என்பார்; அந்த இந்திரியங்களும் மனத்தின் துணை இல்லாத போது பொருள்களை அறிய மாட்டாமை யாலே ‘மனமேகாண் ஆத்மா’ என்பார்; அம்மனந்தனக்கும் ப்ராணங்கள் துணை புரிய வேண்டுகையாலே, ‘ப்ராணங் காண் ஆத்துமா’ என்பார்; (*ப்ராணன் - பத்துவாயுக்களுள் ஸ்வாசத்தை நிகழ்விப்பது. பத்து வாயுக்களாவன; ப்ராணன், அபானன், உதானன், வ்யானன், ஸமானன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பன*).

‘இவை எல்லாம் உண்டாயினும் உறுதிவேண்டும்? அதற்குக் கருவி புத்தி ஆதலின், ‘புத்தி தத்வமே காண் ஆத்மா’ என்பார்; ‘இவை இத்தனைக்கும் அவ்வருகாய் ஞானமாகிய குணத்தை உடையதாய், ஞான ஸ்வரூபமாய் இருப்பது ஒன்று ஆத்மா’ என்பர் ஆகாநிற்பர்கள்; அதில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை; ஏதேனுமாக, உண்டான பொருள் தேவர்க்கு உறுப்பாமிதுவே வேண்டுவது’ என்கிறார்.

54. ‘‘பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை’’ (2-9-5)

பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை - பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை, கர்மம் காரணமான பிறப்பு இல்லாமல் இருக்கிற ஸர்வேஶ்வரன், இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன் காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள்,’ என்பது மறைமொழி. ‘‘அஜாயமாநோ ப3ஹுதா4 விஜாயதே | தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’’ (தை.ஆரண்யகம் 3-13-3) - ‘‘பிறப்பிலியான அவன், பலவாறாகப் பிறக்கிறான், அறிவு மிகுந்தவர்கள், இவன் பிறப்பை அறிவார்கள்’. மிக உயர்ந்த புருஷன், தன் சொந்த இச்சையினால் பிறக்கிறான். பல்வேறு இனங்களின் குணங்கள் மற்றும் பண்புகளுக்கு ஏற்ப, ஒருங்கமைந்த வடிவங்களை ஏற்கிறான். தன்னுடைய இயல்பை (தனங்கே உரித்தான இயல்பை) சிறிதும் விடாமல், மற்றைய தேவர்களும் ஏற்கத்தக்க உருவங்களுடன் பிறக்கிறான்’’ த்3யுப்4வாத்3யதி4கரணம் 1-3-1, ‘த்3யுப்4 வாத்3 யாயதநம் ஸ்வஶப்3தா3த்’ 1-3-1, என்ற ஸூத்திரத்தின் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது.

55. ‘‘இருந்தேன்’’ (2-9-9)

‘பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ என்ன, யானே நீ யானும் நீயே. முக்தர்கள், ‘நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னாநிற்பர்; ‘‘தத்3தை4தத் பஶ்யந் ருஷிர் வாமதே3வ: ப்ரதிபேதே3 அஹம் மநுரப4வம் ஸூர்யஶ்ச’’ (ப்ருஹ. 3-4-10) - நானே மனுவாகவும், ஸூர்யனாகவும் ஆனேன்; (நானே மநுவையும், ஸூர்யனையும் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை எனக்கு அந்தர்யாமியாகக் கொண்டிருக்கிறேன்)’’ என்று பரமாத்மாவைக் கண்ட வாமதேவரிஷி அறிந்தார்; உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘ப்ரகாஶாதி3வச்சா வைஶேஷ்யம் ப்ரகாஶஶ்ச கர்மண் யப்4யாஸாத்’ 3-2-24, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த ச்ருதிச்சொற்றொடரை மேற்கோள் காட்டுகிறார்.

ஸம்சாரத்தில் தெளிவுடையார், எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின. எல்லாப் பொருள்களும் நானே’ என்னாநிற்பர்; ‘இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை? எனின், ‘‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’’ (ப்ருஹ.உப. 3-4-10) - நான் ப்ரஹ்மம், ‘நான் ராஜ புத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் ப்ரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ ஸம்பந்தம் இருக்கும்படி? ஆயின் ‘அப்பொருள் வாஸுதேவன்’ (வி.பு. 1-19-85) என்றதோ எனின், அது வாஸுதேவனுக்குச் சரீரம் என்றபடி. (’யானே நீ’ என்றது சரீர ஆத்ம பாவ நிபந்தனம் என்று திருவுள்ளம் பற்றி, இங்ஙனம் ஐக்கியமாகச் சொன்ன பேர் உளரோ? என்னும் வினாவிற்கு விடையாக, ‘முக்தர்கள்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்)

56. ‘‘வலஞ்செயும் ஆய மாயவன்’’ (2-10-8)

இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, ‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, ‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்தற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம். ‘‘ ய ஆத்மதா3 ப3லதா3’’ - (யஜு.கா. 7-5-36) ஸர்வேச்வரன் ஸகல சேதநர்களுக்கும் நினைத்த வகைகளில் அனுபவிக்கலாம் படி தன்னை இஷ்ட விநியோக அர்ஹமாக்கித் தன்னைக் கொடுப்பவனும் (இத்தால் ப்ராப்யத்வம் சொல்லிற்று), க்ஷுத்ரவிஷயங்களை உண்டறுக்க மாட்டாதே, ஸகல சேதநர்களும் தன்னை அனுபவிப்பதில் அனுபவ விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தை அதாவது மனோ பலத்தைக் கொடுப்பவனுமாயிருக்கிறான் (இத்தால் பேற்றிர்க்கு வழி சொல்லிற்று).

	இரண்டாம் பத்து முடிவுற்றது.

11

மூன்றாம் பத்து

57. ‘‘இவ்வுலகு’’ (3-1-2)

‘இவ்வுலகு -காண்கிற இவற்றிற்கு மேற்பட அறியாத இவ்வுலகத்தார். ‘இவ்வுலகத்திலுள்ள பொருள்களின் வைலக்ஷண்யமும் அறியாதவர்கள்’ எனலுமாம். ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, ‘இவ்வுலகு புகழ்வு’ என்கிறார். உன்னை-சாஸ்த்திரங்களாலேயே அறியக் கூடியவனாய், அவை தாமும் புகழப்புக்கால், ‘அந்த ஆனந்த குணத்தி னின்றும் வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்னும்படி மீளும்படியான உன்னை. ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கப்படுகிறது.

58. ‘‘பரமாய்ப் பரஞ்சோதி நீ’’ (3-1-3)

பரமாய்ப் பரஞ்சோதி நீ- பரமாய்க்கொண்டு மேலான ஒளி உருவனாயிருக்கின்றாய் நீ. வடிவழகிலே யாதல் செல்வத்திலே யாதல் சிறிது ஏற்றமுடையான் ஒருவனைக் கண்டால், ‘உன் தனை ஒளியுடையான் ஒருவனில்லை; உன் தனைச் செல்வமுடையான் ஒருவனில்லை’, என்பார் களன்றோ? அங்ஙனன்றி. ‘இனி ஒரு வடிவில் அவையில்லை’ என்னும்படி பூர்ணமாக உள்ளது இறைவன் பக்கலிலே யாதலின், ‘பரமாய்ப் பரஞ்சோதி’ என்கிறார். ‘‘ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4திII’’ (கடோ. 5-15) ‘அந்த பரப்ரஹ்மத்தினுடைய பேரொளியால் இவையெல்லாம் பிரகாசிக்கின்றன’’, என்ற கடோபநிஷத வாக்யம், ப்ரமிதாதி4 கரணஶேஷம் 1-3-6, ‘தது3பர்யபி பா3த3ராயண: ஸம்ப4வாத்’ 1-3-25 என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் விளக்கப்பட்டுள்ளது.

59. ‘‘நின்மாதாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ’’ (3-2-2)

நின் மா தாள் சேர்ந்து - பரமப்ராப்யமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி, நிற்பது - நித்திய ஸம்சாரிகளுக்குப் பகவானையடைதல்; ‘பறக்கிற தொன்றிலே பாரம் வைத்தாற்போலே இருப்பதொன்று’ ஆதலின் ‘நிற்பது’ என்கிறார். ‘பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான நிஷ்டையை அடைகிறவன் பயமின்மையை அடைகிறான்’, எனப்புகலும் உபநிஷதம். நிற்பது எஞ்ஞான்று கொலோ - ‘அது எந்நாளாக வற்றோ? ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்போனோ, அந்தநாள் இந்த நாளாக வேண்டும்’ என்பதுபோன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி.

‘‘யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந்ந த்3ருஶ்யே (அ)நாத்ம்யே அநிருக்தே(அ)நிலயநே(அ)ப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3தே, அத2 ஸோ(அ)ப4யம் க3தோ ப4வதி (தை. ஆந. 7-2) - ‘எப்பொழுது உண்மையில் இந்த ஒன்று, அச்சத்திலிருந்து விடுதலை பெறுகிறதோ, இந்த புரிந்து கொள்ள இயலாத ஒன்றிடம் உறுதிப்பாடு-ஆத்மா அல்லாதது, தொடக்கமற்ற ஒன்று, வசிப்பிடம் இல்லாதது, அப்பொழுது அவன் அச்சமற்ற நிலைக்கு உண்மையில் செல்கிறான். அவன் இவனுக்குள் ஓர் வடுவை (பள்ளத்தை) ஏற்படுத்துகிறான். பின்பு, அவனிடம் கொண்ட அச்சத்தால் நிலை பெறுகிறான்’. ஸந்த்4யாதி4கரணம் 3-2-1, ‘பராபி4த்4யாநாத்து திரோஹிதம் ததோ ஹ்யஸ்ய ப3ந்த4விபர்யயௌ’ 3-2-4, என்ற ஸூத்திரத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

60. ‘‘யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே’’ (3-2-5)

யான் - உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான். இனி, இதற்கு, ‘இவ்வடிவின் இனிமையை யறிந்த யான்’ என்னுதல். உன்னை - பிரிவில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை. இனி, ‘அந்தப் பரமாத்மா எவனை வரிக்கிறானோ, அவனால் அடையத்தக்கவன்; பரமாத்மா அவனுக்கே தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’, என்கிறபடியே,’’நாயமாத்மா ப்ரவசநேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந I யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) - ‘இந்தப் பரமாத்மா ச்ரவண மனன த்யானங்களால் மட்டுமே அடையத்தக்கவனல்லன். எவனை இவன் வரிக்கிறானோ அவனாலேயே இவன் அடையத் தக்கவன். அவனுக்கு இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான்’, பராதி4கரணம் 3-2-7 , ‘ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3வத்’ 3-2-33, என்ற ஸூத்திரபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறாக விளக்கமளித்துள்ளார்.

 ‘நீயே அனுபவிப்பிக்கும் உன்னை’ என்னுதல். எங்கு வந்து அணுகிற்பன் - என்ன ஸாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக் கடவே? ‘நான் உன்னை கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்னுதல்.

61. ‘‘மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்’’ (3-2-8)

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் - ‘எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே, இவ்வாத்மாவோடு பிரிக்க வொண்ணாத படியிருப்பதாய், துக்கத்தை விளைவிப்பதா யிருக்கிற பாவங்களைத் ‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே, விதித்தனவான கர்மங் களைச் செய்வதனாலே போக்கிற்றேலேன். ‘‘த4ர்மேண பாபமபநுத3தி’’ (மஹா.நாரா. உப.22-1) - ‘யஜ்ஞம் முதலான தர்மங்களாலே (வித்யைகள் உண்டாவதற்குத் தடையான) பாபத்தை (உபாஸகன்) போக்கிக் கொள்கிறான்’, விஹிதத்வாதி4கரணம் 3-4-8, ‘அநபி4ப4வம் ச த3ர்ஶயதி’ 3-4-35, ஸூத்திரத்தில் இந்தக் கருத்து தெளிவுபடுத்தப்படுகிறது.

ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் - ‘இடைவிடாது தியானம் செய்வதனால் அறியத் தக்கவன்’ என்கிறபடியே, எப்பொழுதும் தியானித்து உன்னை நேரே காணுவதற்கு விரகு பார்த்திலேன். ‘‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய: ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸி தவ்ய:’’ (ப்ருஹ. 4-4-5) - ‘அன்பானவனே! ஆத்மா உண்மையில் காணப்பட வேண்டும்; நினைக்கப்பட வேண்டும்; த்யானிக்கப்பட வேண்டும்’. ஆவ்ருத்த்யதி4 கரணம் 4-1-1 ‘ஆவ்ருத்திரஸக்ருது3பதே3ஶாத்’ 4-1-1, என்று இந்தச்சொற்றொடர் விளக்கப்பட்டுள்ளது.

62. ‘‘ஒழிவில்காலம்’’ (3-3 பதிகம்) - ப்ரவேசம்

‘யாங்ஙனம்?’ எனில், ‘தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு, ஒரு தேச விசேடத்திலே சென்றால் செய்யக்கூடிய அடிமைகள் எல்லாம் இந்நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறை யற்றிருந்ததாகில், நமக்கும் இவ்வுடம்பு விரோதி யாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான் அங்குப் போனாலும் ‘அவன் கல்யாண குணங்களனைத் தையும் முற்றறிவினனான இறைவனோடு அனுபவிக்கிறான்’, என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது. ‘‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’’ (தை. ஆந. 1-2) - ‘அந்த முக்தன் ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடு கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான்’. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6 ‘போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச’ 4-4-21, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் தெளிவாக்கப் பட்டுள்ளது.

63. ‘‘எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே’’ (3-3-1)

இப்பாசுரத்தால், கைங்கர்யப் பிரதானமான திருமந்திரத் தின் பொருளை அருளிச்செய்கிறார்: ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால், நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது’நாம்’ என்னுமிதனால், ப்ரணவத்தாற் சொல்லப்படுகின்ற இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது; ‘இது சொல்லின் ஸ்வபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை.

‘தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச் செய்கிறார்; சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்வமும் எல்லாம் - நாராயண பதத்திற்குப் பொருள் பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கர்யமே பிராப்யமாகும். (’கைங்கர்யப் பிரதானமான திருமந்திரம்’ என்றது, புருஷார்த்தம் கைங்கர்யமே என்று அறுதியிடுகின்ற திருமந்திரம் என்றபடி. திருமந்திரத்தின் பொருளாவது, ‘எம்பெருமானுக்கே உரியனான நான், எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேண்டும்; ஸர்வ சேஷியான நாராயண னுக்கே எல்லா அடிமைகளும் செய்யப்பெறுவோனாக வேண்டும்’, என்பது.

இப்பொருளையே ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற இப்பாசுரத்தில் அருளிச் செய்கிறார் என்கிறார்.) (’நான்காம் வேற்றுமை’ என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’ என்னும் நான்காம் வேற்றுமையுருபினை. ‘பிரார்த்தனையைச் சொல்லுகிறது’ என்றதன் பொருளை ‘ஆய என்கிற இத்தால், ‘சென்றாற்குடையாம்’ என்கிறபடியே எல்லா அடிமைகளும் செய்யவேணும் என்று அபேக்ஷிக்கிறது’, ‘ஆகையால், ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற பிரார்த்தனையைக் காட்டுகிறது’ (முமுக்ஷுப்படி, 105, 108) என்னும் வாக்கியங்க ளாலுணரலாகும்.

ஆத்மாவின் ஸ்வரூபம் - இறைவனுக்குச் சேஷமா யிருக்குந்தன்மை; ‘சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்’. ‘ப்ரணவத்தால் ‘கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ?’ என்கிறபடியே ஜீவ பர ஸம்பந்தம் சொல்லிற்று’, என்பன (முமுக்ஷுப்படி, 55, 72) ‘இது’ என்றது, ‘ப்ரணவத்தால் ஆத்மாவின் ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது’ என்று மேலே கூறியதனைச் சுட்டுகிறது. ‘சொல்லின் ஸ்வபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்றது, ‘மகாரத்திற்குப் பொருளாயுள்ள நான், அகாரத்திற்குப் பொருளாயுள்ள எம்பெருமானுக்கே உரியவன்’, என்னும் போது ‘நான் உரியவன்’ என்ற கருத்திலே நோக்காயிருத்தலைத் திருவுள்ளம் பற்றி. பொருளின் பிராதாந்யத்தை நோக்கும்போது’ அகாரவாச்சி யனான எம்பெருமானுக்கே மகாரவாச்சியனான ஆத்மா உரியது’ என்ற பொருளே போதரும். ‘அருளிச் செய்தருளின வார்த்தை’ என்றது, நம்பிள்ளை இங்ஙனம் அருளிச்செய்தார் என்றபடி.);

64. ‘‘எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே’’ (3-3-3)

எண் இல் தொல் புகழ் - ‘சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்மாவான பகவானுடைய குணங்களும் அளவிறந்தன’, என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய. வானவர் ஈசன் - குணங்களை அனுபவிப்பித்து நித்தியஸூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக் கொண்டு செல்லுகிறவன். என்றது, ‘கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னையனுப விப்பிக்கும்’ என்கை. ‘‘யதா2 ரத்நாநி ஜலதோ4ஸங்க்2யேயாநி புத்ரக! ததா2 கு3ணஹ்ய3நந்தஸ்ய அஸங்க்2யேயா மஹாத்மந:’’ - ஒ! குழந்தாய், ஸமுத்திரத்தில் ரத்தினங்கள் எப்படி எண்ணிறந்தவைகளாக இருக்கின்றனவோ, அப்படியே மஹாத்மாவான பகவானுடைய குணங்கள் அளவற்றவைகள்’’ என்பது மாத்ஸ்ய புராண வாக்யமாகும்.

65. சோதியாகி எல்லாவுலகும்தொழும்*
ஆதிமூர்த்தியென்றால் அளவாகுமோ?*
வேதியர் முழுவேதத்தமுதத்தை *
தீதில்சீர்த் திருவேங்கடத்தானையே. (3-3-5)

சோதியாகி - தனக்கு மேல் ஒன்று இல்லாத பேரொளி உருவமான திருமேனியையுடையவனாய், நீலதோயத3 மத்4யஸ்தா2த் வித்3யுல்லேகவ பா4ஸ்வரா | (தைத்திரீய- நாராயணவல்லி. 11) - பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்ரஹம் நீலமேகத்தை உட்கொண்டு மின்னல் போல் பிரகாசமுள்ளதாகவும் உள்ளது.

 ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்று அதனையே பின்னும் கூறியது போன்று, இங்கும் அவ்வாறு சொன்னாரோ-’ என்னில் என்றபடி. விழுக்காட்டாலே சொன்னார். ‘எங்ஙனே?’ என்னில், மேல், தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றாரேயன்றோ? இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவார்; மிகத்தாழ்ந்தவரான தாம் தொழுதபோதே எல்லா உலகங் களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்; ‘எல்லாவற் றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், ‘கீழ்ப்படி மூழ்கீனமை’ சொல்ல வேண்டா அன்றோ? ‘கிருஷ்ணனிடத்தில் பரவசப் பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோ மல்லோம் என்ற நினை வினைச் செய்து கொண்டிருந்தவர் களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார்.

‘ப்ரஹ்மம் அறியத் தக்கது’ ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1, ‘அதா2தோ ப்3ரஹ்மஜிஜ்ஞாஸா’ 1-1-1, ‘கர்ம விசாரத்திற்குப் பின், அவ்விசாரம் காரணமாகவே, ப்ரஹ்மத்தை அறிவதில் விருப்பம் செய்யப்பட வேண்டும்’; ஜந்மாத்யதிகரணம் 1-1-2, ‘ஜந்மாத்3யஸ்ய யத:’ 1-1-2, - ‘கார்யரூபமான இந்த உலகிற்கு, ஆக்கல், அளித்தல், அழித்தல் என்னும் காரியங்கள், எதனிடமிருந்து உண்டா கின்றனவோ, அதுவே ப்ரஹ்மம் என்று வேதவாக்கியம் லக்ஷணமுரைக்கமுடியும்’ என்று கூறி, ‘அறியத் தக்கதான ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது-’ என்ன, ‘எதனிடத்தி னின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றன வோ, அதனை அறிவாயாக;’’யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபி4 ஸம்விஶந்தி தத்3விஜிஜ்ஞாஸஸ்வ தத்3ப்3ரஹ்ம’’ (தை.ப்ருகு. 1-1) - எதனிடமிருந்து இந்த பூதங்கள் உண்டாகின்றனவோ, உண்டானவை எதனால் வாழ்கின்றன வா, ப்ரளய காலத்தில் எதனிடம் லயமடைகின்றனவோ அதுவே ப்ரஹ்மம்; ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6 ‘ஜக3த்3வ்யாபார வர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ - 4-4-17, அதுதான் பரப்ரஹ்மம்’ என்பதாக உலகங்க ளெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம், ப்ரஹ்மம் என்று கூறியது.

‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, ‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது’ ‘‘காரணம் து த்4யேய:’’ (அதர்வ.உப.3) ‘காரணவஸ்துவே த்யாநம் செய்யத் தகுந்தது; கார்யவஸ்து த்யாநத்திற்கு தகுதியற்றது’ என்பது ஏற்படுகின்றபடியாலும் ‘அப்படிப்பட்ட காரணவஸ்துவும் நாராயணனே; என்று உபநிஷத் கூறுவதால்’ என்றும், ‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’’யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம். யோவை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ (ச்வே. 6-18)- ‘எவனொருவன் சதுர்முக ப்ரஹ்மனை முன் படைத்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறானோ’ என்னும் ப்ரமாணத்தால், ஆரம்பத்தில் முன்பே இருந்த வேதத்தை நினைவு கூர்ந்து, அதை நான்முக ப்ரஹ்மனுக்கு ஈச்வரன் உபதேசித்தான்’கார்யாதி4கரணம் 4-3-5 ‘ஸாமீப்யாத்து தத்3வ்யபதே3ஶ:’ 4-3-8, என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப்பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது.

அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார். (ஆதிமூர்த்தி யாகையாலே - காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும் தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே உபாஸ்யம் என்கைக்குச் ஸூத்ரத்தையும், ச்ருதியையும் அருளிச் செய்கிறார். ‘ப்ரஹ்மம் அறியத் தக்கது’ என்று தொடங்கி. நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே எழுந்தருளியிக்கச்செய்தே, ‘ஈச்வர பரத்வத்தை அநுஸந்திக்கை யாவது, ஜகத் காரணத்துவத்தை அநுஸந்திக்கை’ என்றருளிச் செய்தாராம். ஆச்சான்பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களை யெல்லாம் சேர அனுபவிக்கலாந் துறை யாது?’ என்று கேட்டருள, ‘ஜகத் காரணத்வத்தை அநுஸந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுஸந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம். இம்மணிமொழிகளை இங்கு நினைவு கூர்க. (தனிப்ரவணம்),

இனி, ‘அளவாகாது’ என்று சொல்லும்போது சிறிதளவு சொல்லிப் பின்னர், ‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் மீளுகின்றனவோ’ என்கிறார் மேல்; ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர் கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4 கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்று ஸூத்திரத்தில் இவ்வாறு விளக்கப்படுகிறது.

வேதியர் முழு வேதத்து அமுதத்தை - ‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது’, ‘‘யம்ருஷயஸ்த்ரயீவிதா3 விது3:, ருசஸ்ஸாமாநி யஜூம்ஷி ஸா ஹி ஶ்ரீரம்ருதா ஸதாம்’’- யஜுர்வேதம், என்கிறபடியே, வேதங்களைச் செல்வமாகவுடைய ப்ராஹ்மணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப் படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை, ‘ப்ரஹ்மம் ஆனந்தமானது’ ‘‘ஆநந்தோ3 ப்3ரஹ்ம’’ (தை. ப்ருகு. 6-1), ‘அந்தப் ப்ரஹ்மமானது ரஸ மயமாய் இருக்கிறது’ ‘‘யத்வைதத் ஸுக்ருதம், ரஸோ வை ஸ:’’ (தை.ப்ரு.7), என்பன உபநிஷித வாக்கியங்கள்.

இனி, ‘எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், ‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ ‘‘ஸர்வவேதோ3 யத்பத3மாமநந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி, யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத்’’ (கட.உப.2-15) என்றும், ‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் நானே’(ப.கீ 15-15) என்றும் வருகின்ற வற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற ஆனந்த குணத்தை யுடையவனை என்னுதல்.

தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை - குற்றமற்ற குணங்களையுடைவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது, ‘அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.

66. ‘‘வேங்கடங்கள்’’ (3-3-6)

கடங்கள் வேம் - ‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; ‘‘த்ரிபி4ர்ருணவா ஜாயதே ப்3ரஹ்மசர்யேண ருஷிப்4யோ யஜ்ஞேந தேவேப்4ய: ப்ரஜயா பித்ருப்4ய ஏஷ வா அந்ருண:’’- ப்ரஹ்ம சர்யத்தாலே முனிவர்களுக்கான கடனையும், யாகத்தாலே தேவர்களுக் கான கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பித்ருகளுக்கு உரிய கடனையும் தீர்க்கக் கடவன்’, என்றும், ‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோக்ஷத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோக்ஷத்தை யடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்’, என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள் வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி.

‘இதற்கு, வேதாந்தத்திற்சொல்லுகிற கட்டளையில் பொருள் சொல்ல அமையாதோ?’ என்று இங்ஙனம் அருளிச்செய்வர் எம்பெருமானார். அதாவது, ‘ஞானத்தை யடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத் தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாம லிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ தத3தி4க3 மாதி4கரணம் 4-1-7, ‘தத3தி4க3ம உத்தரபூர்வாக4 யோரஶ்லேஷவிநாஶௌதத்3வ்யப தே3ஸாத் - 4-1-13’ - ப்ரஹ்ம வித்யையை அடைந்த வுடன், இனி வரப் போகும் பாபங்களின் ஒட்டாமையும், முன்னமே செய்த பாபங்களின் அழிவும், (வித்யா மாஹாத்மியத்தால் விளை கின்றன) வேதச்சொற்றொடர்கள் அப்படி ஓதுகையால். என்றும், ‘இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும் நெருப்பிற் போடப்பட்ட துய் போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும் சொல்லுகிறபடியே, ‘‘தத்3யதா3 இஷீகதூலம் அக்3நௌ ப்ரோதம் ப்ரதூ3யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந; ப்ரதூ3யந்தே’’ (சாந்.உப.5-24.3) (ஈர்க்கு எனப்படும் (துடைப்பத்திலுள்ள) புல்லின் நுனியிலுள்ள பஞ்சுபோன்ற பகுதி நெருப்பிலிடப் பட்டால் அழிவதுபோல் இந்த உபாஸகனுடைய எல்லாப் பாபங்களும் அழிகின்றன) என்று ப்ரஹ்மவித்யைக்கு முன் செய்த பாபங்கள் அழிகின்றன என்றும் வேதச் சொற்றொடர்கள் தெளிவாகக் கூறுகின்றன.

‘வேம்’ என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் தொடர்பில்லாமல் போய்விடுகையும் சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், தொடர்பில்லாமல் போதலைச் சொல்லிற்றாகவுமாம்.

அது சுமந்தார் கட்கு - இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே சொல்லுகிறாராதல். ‘ஆயின், அவன் நினைவு அப்படியிருக்குமோ?’ எனின், ‘நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?’’அக்3நே நய ஸுபதா2 ராயே அஸ்மாந்விஶ்வாநி தே3வ வயுநாநி வித்3வாந், யுயோத்3த்4யஸ்மாஜ்ஜுஹு ராணமேநோ பூ4யிஷ்டா2ம் தே நம உக்திம் விதே4ம’’ என்கிறது யஜுர் வேதம் (1-4).

67. ‘‘நங்கட்கு சமன்கொள் வீடு தரும்’’ (3-3-7)

நங்கட்கு - கைங்கர்ய ருசியையுடைய நமக்கு. சமன்கொள் வீடு தரும் - ‘‘ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மை வ ப4வதி’’ (முண்ட. 3-2-9) - ‘எவன் ப்ரஹ்மத்தை அறிகிறானோ, அவன் ப்ரஹ்மமாகவே ஆகிவிடுகிறான்’ தத3தி4க3மாதி4கரணம் 4-1-7, ‘தத3தி4க3ம உத்தரபூர்வா க4யோரஶ்லேஷ விநாஶௌ தத்3வ்யப தே3ஸாத்’ 4-1-13 , என்றும், ‘நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி’’ (முண்ட. 3-1-3) - குற்றங்கள் நீங்கப் பெற்றவனாய் (பரமாத்மாவோடு) மேலான ஒற்றுமையை (முக்தன்) அடைகிறான்’. ஜக3த்3 வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6 ‘ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ - 4-4-17, ‘ப்ரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையை யடைகிறான்’, என்றும், ‘இந்த ஞானத்தை யுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்’ (ப.கீ. 14-2), என்றும் ‘தம்மையேயொக்க அருள் செய்வர்’ (பெரியதிருமொழி. 11-3-5), என்றும் சொல்லுகிறபடியே.

‘இவ்வாத்மாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான ப்ரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்’ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2), என்கிறபடியே, ‘இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத் திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும் என்னுதல்.

68. ‘‘புகழும் நல் ஒருவன்’’ (3-4) ப்ரவேசம்

‘ஆயின், முத்தன் ‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்’, என்று கூறப்பட்டுள்ளதே?’ ‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’. காமாத்3 யதி4கரணம் 3-3-16 ‘உபஸ்தி2தே (அ)தஸ்தத்3வசநாத்’ 3-3-40, எனின், அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம். ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள் என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும்.

‘ஈச்வரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்’, ‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’ (முண்டக. 3-1-1) "அழகிய (ஜ்ஞாந கர்மங்களாகிற) இறக்கைகளை உடையவை யும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றை யொன்று விட்டுப்பிரியாதவை யுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக் கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாம லிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.’’

உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 ‘பே4தா3தி3தி சேந்ந ப்ரத்யேகமதத்3வசநாத்’ 3-2-12, என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்மாவுக்கு வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள் தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே அபிமானத்தையுடைய ஆத்மாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற பரமாத்மாவையும் காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே அசாதாரணமான நாராயணன் முதலான சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே சொல்லுகின்றனவாயிருக்கிறபடியையும்.

69. ‘‘சாதி மாணிக்கம் என்கோ’’ (3-4-4)- அவதாரிகை.

நம் முதலிகளுள் ஒருவரை ஒருவன் ‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்லவேண்டும்’, என்ன, ‘நான் உனக்கு அது சொல்லுகிறேன்; நீ அவனை மறக்க விரகு சொல்ல வல்லையே?’ என்றாராம். அதற்குக் கருத்து: பகவானினின்றும் வேறுபட்டிருக்கின்ற எல்லாப் பொருள் களுக்கும் அவனை ஒழியப் பொருளாதல், பெயரடைதல் முதலிய தன்மைகள் இல்லாமையாலே, யாதேனும் ஒரு பொருள் தோன்றும் போதும் அவனை முன்னிட்டுக் கொண்டாயிற்றுத் தோன்றுவது. சாதி குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமை போன்று, பொருள்களாயிருந்தும் அவனை ஒழியப் பிரிந்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாம்படி இருக்கின்றனவேயன்றோ பிரமாண பலத்தாலே?’’யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ 5-7-7) - எவனுக்கு பூமி சரீரமாகிறதோ, ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ யமயதி’’ (ப்ருஹ. 5-7-26) - எவனுக்கு ஆத்மா சரீரமாயிருக்கிறதோ, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 , ‘அரூபவதே3வ ஹி தத் ப்ரதா4நத்வாத்’ 3-2-14, என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்ய மேற்கொள்.

 ‘ஆயின், நமக்கு விசேஷணக்கூறு ஒழிய விசேஷ்யக்கூறு தோன்றவில்லையே?’ எனின், மற்றை யோர்க்கு விசேஷணக்கூறு தோன்றுகின்றமை போன்று, விசேஷ்யம் தோன்றுகின்றபடியாயிருக்கும் இவர்களுக்கு. ‘ஆயின், இவர்களுக்கு விசேஷணக் கூற்றில் கருத்து இல்லையோ?’ எனின், விசேஷணக் கூற்றிலே தாத்பர்யமின்றிக்கே இருக்குமதுவுமன்றிக்கே, விசேஷண விசேஷ்யங்கள் இரண்டிலும் விசேஷ்யமே தோன்றுகிற தாயிற்று விசேஷ்யப் ப்ராதாந்யத்தாலே. இதுவன்றோ வேதாந்தக் கேள்வி ஞானமுடையார்க்கு இருக்கும்படி? ‘வேதாந்தத்தைக் கேட்பதனால் தான் ஞானம் நிறைவு பெறுகின்றது,’ ‘‘வேதா3ந்தஶ்ரவணேந ஹி வ்யுத்பத்தி: பூர்யதே |’’ (வேதார்த்த ஸங்க்ரஹம்-மாயாவாத கண்டனம்) என்னாநின்றதன்றோ? இதனால், எல்லாப் பொருள்களும் ப்ரகாரமாக, தான் ப்ரகாரியா யிருக்கும்படியைச் சொல்லுகிறது (ப.கீ.10-41). (விசேஷணக் கூறு - இறைவனுக்குப் பிரகாரமாக இருக்கிற உலகத்துப் பொருள்கள். விசேஷ்யம் - பிரகாரியான இறைவன். ‘விசேஷணக் கூற்றிலே தாத்பர்யம் இன்றிக்கே இருக்குமதுவுமன் றிக்கே’ என்றது, ‘மாயா வாதிகளைப் போன்று விசேஷண அம்சத்தில் தாத்பர்யமின்றிக்கே இருக்கை யன்றிக்கே, விசேஷண விசேஷ்யங்கள் இரண்டிலும் தாத்பர்யம் உண்டாயிருக்கச் செய்தே விசேஷ்யப் பிரதாநராயிருப்பர்,’ என்றபடி. ‘உலகம் பொய்’ என்பது மாயாவாதிகள் கொள்கை).

70. ‘‘யாவையும் எவரும் தானாய்’’ 3-4-10

அதற்கு அடி - உட்புகுதற்கு உளதாய காரண விசேஷம் என்றது, ஆத்மா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது; இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்திலே சிறையனும் கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்ம மடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஹேதுவாயிற்று; அரச குமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போக ரூபமாயிருந்தது. ‘ஆத்மாவும் இறைவனும் ஒரு சரீரத்தைப் பற்றித் தங்கியிருக்கின்றார்கள்; அவர்களுள் ஆத்துமாவானது கர்ம பலத்தை அனுபவிக்கின்றது; இறைவன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’ என்பதுமறை மொழி. ‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’ (முண்டக. 3-1-1).

புலன் ஜந்துக்கும்சொல்லப்படான் - ஐம்புலன் களுக்கும் விஷயமாகச் சொல்லப்படான். அன்றிக்கே, ‘நினைத்தேயன்றோ சொல்லுவது? அங்ஙனம் சொல்லுதற்கு முன்பில் நினைவினை ஆகு பெயரால் கூறியதாகக் கொண்டு அந்நினைவினால் நினைக்கப்படான்,’ என்னுதல். ‘பின்னை, அவன்தான் இருக்கும்படி என்?’ என்னில், உணர்வின் மூர்த்தி - ஞானத்தையே வடிவாகவுடைய வனாயிருப்பான். ‘எல்லாம்செய்தாலும் இவற்றோடு உண்டான சேர்க்கை மெய்யாயிருக்க, இவற்றினுடைய தோஷம் தன்பக்கல் தட்டாதபடி யிருப்பான் என்னும் இது கூடுமோ?’ என்னில், ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாம் - உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு உண்டான பால்யம், யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும் ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச் சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்மாவிற்குக் கூடாநின்ற பின்பு, அப்பொருள் அவனையுங் கூடத் தட்டு இல்லை.

அன்றிக்கே, பின்னிரண்டு அடிகட்கு, ‘அவன் பக்கல் பக்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ என்றும், ‘புறம்பே உள்ள வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுவதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’ என்றும், ‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில்அவனைக் கூடலாம்’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர். இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந் திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப் படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னு மிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், இத்தையே சொல்லிற்றாக அமையும்’, என்று அருளிச் செய்வர்.

71. ‘‘மொய்ம்மாம்பூம்பொழில்’’ (3-5) ப்ரவேசம்

‘இப்படி வகுத்த ஸர்வேச்வரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’ என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது. மேலும் ‘காமம் ஆகாது’ என்று விலக்கி யிருக்கவும், ‘இடை விடாது தியானம் செய்யத் தக்கவன்’ (நிதி3த்4யாஸி தவ்ய:’’-ப்ருஹ. 4-4-5) என்று கொண்டு பகவத் காமத்தைச் சாஸ்த்திரங்கள் விதியா நின்றனவே அன்றோ? இனி, முக்தரும் பகவானுடைய அனுபவத்திலே ‘நான் பரமாத்மாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்மாவாகிற இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’ ‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந் நாத3:’’ (தைத்திரீய.ப்ருகு. 10-6) என்று களியாநிற்பர்கள் அன்றோ?.

72. ‘‘மலையை எடுத்துக் கல் மாரி காத்து’’ 3-5-3

 மலையை எடுத்துக் கல் மாரி காத்து - ‘மௌனமாக இருப்பவன், ஒன்றிலும் ஆசை இல்லாதவன்’ அவாக்ய நாத3ர:’’ (சாந். 3-14-2) , என்கிறபடியே, இருக்கக்கூடிய பரம்பொருள், ‘‘அலவலை வந்து அப்பூச்சி காட்டு கிறான்’(பெரியாழ்.திரு. 2-1-2) என்னும்படி அலவலையாய்த் தன்னைத் தங்களுக்காக ஆக்கிவைத்தல்.

73. ‘‘ஆதியஞ்சோதி உருவை’’ (3-5-5)

‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமலிருக்கிற ஸர்வேச்வரன் இச்சையடியாக அநேக விதங்களாக மற்றைய இனத்தினனாய் வந்து அவதரிக்கிறான்,’’’அஜாயமாநோ ப3ஹுதா4 விஜாயதே | தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’’ (தை.ஆரண்யகம் 3-13-3) என்றும், ‘அந்தப் பரமாத்மாவினுடைய சரீரமானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாயது அன்று, ‘‘ந பூ4தஸங்க4 ஸம்ஸ்தாநோ தே3ஹோஸ்ய பரமாத்மந:’’- (பாரதம், மௌஸலபர்வம்) என்றும், ‘அந்தப் பரமாத்மாவுக்குச் சதை, கொழுப்பு, எலும்பு இவைகளால் உண்டான இவ்வுலக சம்பந்தமான சரீரம் இல்லை, ‘‘ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ3ஸ்தி2ஸம்ப4வா’’-(பாரதம், மௌஸலபர்வம்) என்றும். ‘கல்பந்தோறும் கல்பந்தோறும் உம்முடைய திருமேனியோடு அவதரித்தவராய் அடைந்தவர்களான எங்களைக் காப்பாற்றவேண்டும், (வரதராஜஸ்தவம்-18)’ என்றும் விளக்கப்படுகின்றன.

74. ‘‘வேதமுதல்வனைப்பாடி’’ (3-5-5)

‘உபாஸகர்கள் ஸர்வேச்வரனுடைய அவதாரத்தைச் சுற்றும் சுற்றும் வாரா நிற்பர்கள்’, ‘‘தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’’ (தை.ஆரண்யகம் 3-13-3), என்கிறபடியே.

75. ‘‘பரஞ்சுடரை’’ (3-5-7)

பரஞ்சுடரை - ‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்றார்களே? அதற்காக, ஸேநா தூளியும் முட்கோலும் சிறுவாய்க்கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் சிறு சதங்கையுமாய்ச் ஸாரதி வேஷத்தோடே நின்ற நிலையைச் சொல்லுகிறது (இங்குப் ‘பரஞ்சுடரை’ என்றது, ‘ஸாரதியாய் நின்ற நிலையால் வந்த புகரைச் சொல்லுகிறது’ என்றபடி.

‘கையுமுழவுகோலும், பிடித்த சிறுவாய்க்கயிறும், ஸேநாதூளி தூசரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸாரத்ய வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்’, என்னும் பகுதி ஒப்பு நோக்குக. (முமுக்ஷுப்படி. சரமஶ்லோகப் பிரகரணம்).

76. ‘‘கருமமும் கருமபலனும் ஆகிய காரணன் தன்னை’’ (3-5-10)

கருமமும் கருமபலனும் ஆகிய - புண்ணிய பாவ ரூபமான கர்மங்களுக்கும் கர்மபலங்களுக்கும் ஏவுகின்ற வனாய்: கர்மங்கள் உண்டானால் கருமங்களைச் செய்கின்றவன் ஒருவன் வேணுமே? ஆதலின் ‘கர்மங்களைச் செய்கின்றவனுமாயிருக்கின்றான்’ என்பார், ‘கர்மமும் ஆகிய’ என்கிறார்; என்றது, ‘கர்மங்களைச் செய்கின்றவன் வழியாகக் கர்மங்களை நிர்வஹிக்கிறவன்’ என்றபடி. கர்மங்களைச் செய்தாலும் அவற்றிற்கு ஒருவன் பலன் கொடுக்காதபோது அவை பழுதையைப் போன்று கிடக்குமத்தனையே யன்றோ, அவை அசேதநக்ரியை ஆகையாலே? ஆதலால், ‘அவற்றிற்குப் பலத்தைக் கொடுக்கின்றவனுமாய் இருக்கிறான்’, என்பார், ‘கர்ம பலனுமாகிய’ என்கிறார்.

காரணன் தன்னை - புண்ணியங்களைச் செய்யத் தூண்டவும், பாவங்களைப் போக்கவும், அவற்றிற்குப் பலன் கொடுக்கவும் ஒரு தலைவன் வேண்டுமே அவற்றிற்குக் காரணனாயும் உள்ளவனை. (’கர்மங்கட்கு ஏவுகின்ற வனாயிருத்தல் யாங்ஙனம்’ என்னும் வினாவிற்கு விடையாகக் ‘கர்மங்கள் உண்டானாலும்’ என்று தொடங்கி, அருளிச் செய்கிறார். ‘உண்டானாலும்’ என்றது, ‘சாஸ்த்ர ஸித்தமானாலும்’ என்றபடி. ‘கர்மங்கள் தாமே பலன்களைக் கொடுக்கின்றன என்றால் என்?’ என்னும் வினாவிற்கு விடையாகக் ‘கர்மங்களைச் செய்தாலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். பழுதை - கயிறு. அசேதநக்ரியை - அறிவில்லாத கர்மங்கள். ஆக, கர்மத்துக்கு நிர்வாஹகனாகை யாவது, கர்மங்களைச் செய்கின்றவனுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு செய்வித்து நிர்வஹித்தல்; கர்ம பலத்துக்கு நிர்வாஹக னாகையாவது, ‘பலத்தைக் கொடுக்கின்றவர் களுக்கு அந்தர்யா மியாய் நிர்வஹித்தல்’என்றபடி.)

77. ‘‘செய்ய தாமரைக் கண்ணனாய்’’ (3-6-1)

செய்ய தாமரைக் கண்ணனாய் - ‘சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ்வண்ணம் இருக்கும்? அவ்வண்ணமே அந்தப் பரம்பொருளான நாராயணனுடைய திருக்கண்கள் இருக்கின்றன’, ‘‘தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவக்ஷிணீ தஸ்ய உதி3தி நாம’’ (சாந்தோ. 1-6-7)- அவனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள. (அந்தரதி4கரணம் 1-1-7 அந்தஸ்தத்3 த4ர்மோபதே3ஶாத் - 1-1-21), என்றும், ‘யாகங்களுக்கு ஈச்வரனாயும் யாகபுருஷனாயும் தாமரைக்கண்ணன் என்னும் பெயரையுடையவனாயுமிருக்கிற அந்த விஷ்ணு’, ‘‘யஜ்ஞேஶோ யஜ்ஞபுருஷ: புண்ட3ரீகாக்ஷஸம்ஜ்ஞித:’’ (விஷ்ணுதர்மம்)என்றும், ச்ருதி, ஸ்ம்ருதி முதலியவைகளில் சொல்லப்படாநின்றுள்ள அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைபோலே இருந்துள்ள திருக்கண்களை யுடையவனாய்.

‘முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை, செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்’ என்னுதல்: அன்றியே, ‘தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாகத் தான் தோன்றி’(8-10- 7) என்றும் ‘பல பொருள்களாக ஆகக்கடவேன்’ ‘‘ப3ஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த் ஸ:’ 2-3-14, என்றும் சொல்லுகிறபடியே, முற்றவும் உண்டா கைக்காக இவையாய்க் கொண்டு தான் தோன்றி இவற்றைப் படைத்தான் என்னுதல்.

அப்போது, வெளிப்பட்டு என்கிறது, ‘படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி’ என்றபடி. செய்ய சூழ் சுடர் ஞானமாய் - ஞானத்துக்குச் செவ்வையாவது, வருத்தம் அற்று இருக்கை. அன்றியே, ‘முன்பு படைத்த வண்ணமே படைத்தார்’ ‘ஸூர்யாசந்த்3ர மஸௌ தா4தா யதா பூர்வமகல்பயத்’’ (தை.நா.உப. 14-4) - ‘படைப்பவன் திட்டமிட்டு முன்பு இருந்ததைப் போல் சூரியனையும், சந்திரனையும் படைத்தான்’. சமஸாதி4கரணம் 1-4-2 - ‘கல்ப நோபதே3ஶாச்ச மத்4வாதி3வத3விரோத4:’ 1-4- 10, என்கிறபடியே, ‘அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ என்னுதல். சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை.

78. ‘‘பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை’’ (3-6-3)

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை - முறைகேடாக நித்தியஸூரிகள் ஏத்த, அத்தாலே சமாதிக தரித்திரனாய் (’ஒத்தாரும் மிக்காரும் இலையாய மாமாயன்’) நின்றவனை. அன்றியே, ‘நித்தியஸூரிகள் ஏத்தினாலும் அளவிட முடியாதபடி அவ்வருகாய் நின்றவனை’ என்றுமாம். பரஞ்சோதியை - அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை; என்றது, ‘பரமபதத்திலே இருக்கின்ற நித்தியஸூரிகளும் துதி செய்து கொண்டே யிருக்கின்றார்கள்’,’’தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸ: ஸமிந்த4தே | விஷ்ணோர்யத் பரமம்பத3ம் || (யஜுர். காடகம்.1-3) - ‘விஷ்ணுவினுடைய பரமபதம் உண்டோ, அப்பரமபதத்தை, மேதாவிகளும், விசேஷமாக துதிப்பவர்களும், மிகவும் ஜாக்ரதையுடையவர் களான முக்தர்கள் ஒளிவிடச்செய்கிறார்கள்’. என்கிறபடியே, அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி.

‘பரஞ்சோதி என்னும் சொல்லின் பொருளான பரம்பொருள்’ ‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச்ச2ரீராத் ஸமுத்தா2ய பரம் ஜ்யோதிருப ஸம்பத்3ய ஸ்வேநரூபேணாபி4 நிஷ்பத்3 யதே’’ (சாந். 8-12-2) - [கீழ்ச் சொல்லியபடி உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்; ஸம்பத்3யாவிர்பா4 வாதி4கரணம் 4-4-1 ஸம்பத்3யாவிர் பா4வ: ஸ்வேந ஶப்3தா3த் 4-4-1.என்பது உபநிஷத வாக்கியம். ‘ஆயின், இவர்கள் ஏத்துதல் எதற்காக? என்னில், தலைவனுக்கு அதிசயத்தைப் பண்ணுகை அடியார்களாயுள்ள இவர்களுக்கு ஸ்வரூபம்: ஆதலின், ஏத்துகிறார்கள்.

79. ‘‘அரவமேறி அலைகடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை’’ (3-6-3)

‘காலம் நடையாடாத தேசத்தில் (பரமபதத்தில்) அனுபவத்தை அன்றோ காலம் நடையாடும் தேசத்திலே நான் உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறது?’ என்கிறார். ஏத்துகக்கு ஈடான காலம் ஆகையாலே ‘நல்இரவும் நன்பகலும்’ என்கிறார். ‘துதி செய்துகொண்டேயிருக்கின் றார்கள்’ ‘‘தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸ: ஸமிந்த4தே | விஷ்ணோர் யத் பரமம்பத3ம் || (யஜுர். காடகம்.1-3) என்கிறபடியே, ஆதல் வேண்டும் என்பார், ‘என்றும் ஏத்துதல்’ என்கிறார்.

‘‘விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை’’ (3-6-7)

‘‘ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸ: ‘‘(சாந். 3-14-2) - ‘எல்லா மணத்துடன், எல்லா சுவையுடன்’ க்ருத்ஸ்ந ப்ரஸக்த்ய தி4கரணம் 2-1-9, ஸர்வோபேதா ச தத்3த3ர்ஶ நாத் 2-1-30, என்று சொல்லப்படுமவன் அன்றோ? இனி, கன்னல் கனி என்பதற்கு ‘மாங்கனி’ என்னுமாறு போன்று, ‘கன்னல் பழுத்த பழம் காணும் இது’, எனப் பொருள் கூறலுமாம்.

80. ‘‘துயரமேதரு துன்பவின்ப வினைகளாய்’’ (3-6-8)

‘புண்ணியத்தையும், பாவத்தையும் நீக்கிவிட்டு முற்றுவமையை அடைகிறான்’, என்பது உபநிஷத வாக்கியம். ‘யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்த்தார மீஶம் புருஷம் ப்3ரஹ்மயோநிம் I ததா3 வித்3வாந் புண்ய பாபே விதூ4ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதிII’’ (முண்ட. 3-1-3) - ‘முக்தாத்மாவானவன் பொன்போன்று அழகிய திருமேனி உடையவனாய், உலகிற்குக் கர்த்தாவாய், நியமிப்பவனாய், புருஷன் எனப்படுமவனாய், உலகிற்கு உபாதாந காரணமாய் இருக்கும் பரமாத்மாவை எப்போது காண்கிறானோ, அப்போது அவன் புண்யபாபங்களை விட்டு எந்த தோஷமும் (குற்றமும்) இல்லாதவனாய், அபஹதபாப் மத்வம் (பாபமின்மை) முதலான எட்டு குணங்கள் ஆவிர்ப் பவிக்கப்பெற்று ப்ரஹ்மத்தோடு மேலான ஒற்றுமையை அடைகிறான்’.அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் 4-4-2 ‘அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாத்’ 4-4-4, என்ற ஸூத்ர விரிவுரையில் ஸ்ரீபாஷ்யகாரரால் தெளிவாகக் காட்டப்படுகிறது.

அவை அல்லனாய் - கர்மங்கட்குக் கட்டுப்படாத வனாய்: ‘வேறாக ஈச்வரன் கர்ம பலன்களைப் புசியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்’, என்பது வேதவாக்கியம். ‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’ (முண்டக. 3-1-1) [அழகிய (ஜ்ஞாந கர்மங்களாகிற) இறக்கைகளை உடையவை யும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றை யொன்று விட்டுப்பிரியாதவையுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக் கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாம லிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.] உப4யலிங்கா3தி4 கரணம் 3-2-5 ‘பே4தா3தி3தி சேந்ந ப்ரத்யேகமதத்3 வசநாத்’ 3-2-12. ‘மிகவும் பிரகாசிக்கிறான்’ என்றது, தான் கர்மத்துக்குக் கட்டுப்படாதவன் அன்றிக்கே. ஏவும் தன்மையால் வந்த புகரையுடையனாயிருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

உயர நின்றது ஓர் சோதியாய் - ‘ரஜோ மயமான இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலே உள்ள பரமபதத்தில் நித்திய முத்தர்களோடு எழுந்தருளியிருக்கின்ற தேவரீரை’, ‘‘தம் த்வா க்3ருணாமி தவஸமதவீயாந் க்ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே’’ (யஜுஸ்ஸம்ஹிதா) என்றும், ‘ப்ரக்ருதியைக் காட்டிலும் மேலே இருக்கின்றார் பரமாத்மா’, ‘‘வேதா3ஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதி3த்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் I (ச்வே. 3-8) - ‘நான், இந்த புருஷனை (இவ்வாறு) அறிகிறேன்- உயர்ந்தவன், சூரியனைப்போல் ஒளிர்பவன்; (பராதி4கரணம் 3-2-7 ததா2 (அ)ந்யப்ரதி ஷேதா4த்3-2-35) என்றும் சொல்லுகிறபடியே, இங்குள் ளாராற் சென்று கிட்ட ஒண்ணாததாய் இருக்கிற ப்ரக்ருதிக்கு மேலே இருக்கிற பரமபதத்திலே எல்லை இல்லாத ஒளி உருவமான திவ்ய விக்ரஹத்தை உடையனாய் இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது. அன்றியே, ‘வ்யஷ்டியாயும், ஸமஷ்டியாயும் இருக்கிற எல்லா உலகங்கட்கும் மேலே இருக்கிற பரமபதம்’ ‘‘விஶ்வத: ப்ருஷ்டேஷு ஸர்வத: ப்ருஷ்டேஷு’’(சாந்தோக்யம்) என்கிறபடியே, ‘உயர்த்தியை யுடைத்தாய், நித்யமாய், இரண்டாவது இல்லாததாய், ஒளிமயமான திவ்ய தேசத்தையுடையவன்’ என்னலுமாம்.

81. ‘‘அவை அல்லனாய்’’ (3-6-9)

அவை அல்லனாய் - தந்தை, தாய், தான் என்னும் இவ்வளவு அன்றிக்கே, ‘‘ மாதா பிதா ப்4ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத்’’ (ஸுபாலோபநிஷத். 6-4) ‘தாயும், தந்தையும், உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் நட்டோனும் பேறும் ஆகிய எல்லாம் நாராயணனே’, என்றும். ‘‘பித்ருமாத்ரு ஸுத ப்4ராத்ரு தா3ரமித்ராத3யோ (அ)பிவா, ஏகைக பலலாபா4ய ஸர்வலாபா4ய கேஶவ:’’ - ‘‘தந்தை, அன்னை, புத்ரன், உடன்பிறந்தான்,மனையாள், நண்பன் இவர்கள் முதலானோர்களும், ஒவ்வொரு லாபத்தை அடைவதின் பொருட்டு இருக்கிறார்கள், கேஶவன் எல்லா லாபத்தையும் அடைவதின் பொருட்டு இருக்கிறான்’’ என்பது முதுமொழியாகும்.

82. ‘‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே’’ (3-6-9)

‘அர்ஜுனா! எவர்கள்எவ்விதமாய்என்னை வணங்கு கிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே இருந்து நான் அருள் புரிகிறேன்’(ப.கீ.4-11) என்றும், ‘சலனம் அற்ற மனத்தினால் செய்யத்தக்கவன்’ என்றும், ‘ஸங்கல்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்றும், ‘பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படுகின்ற திருமேனி’ ‘‘அக்3நௌ திஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி3 திஷ்டதி யோகி3நாம், ப்ரதிமாஸ்வப்ரபு3த்ா3ா4நாம் ஸர்வத்ர ஸமத3ர்ஶிநாம்’’ - ப்ராஹ்மணர்களுக்கு அக்நியிலிருக்கிறார், யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் வசிக்கிறார், அஜ்ஞர்களுக்கு பிம்பங்களிலும், ஸமமாகப் பார்க்கிறவர்களுக்கு எங்கு மிருக்கிறார்’’ என்றும், பிரமாணங்கள் கூறாநிற்கும்.

83. ‘‘பயிலவினிய நம்பாற்கடல் சேர்ந்த பரமனை’’ (3-7-1)

‘முத்தன் இச்சரீரத்தை நினையாதவனாகி’, ‘‘நோபஜ நம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்,எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’.காமாத்3யதி4கரணம் 3-3-16, ‘உபஸ்தி2தே(அ)தஸ்தத்3வசநாத்’ 3-3-40, என்கிற படியே, முக்தன் ஸம்சார வாழ்க்கையை மறக்குமாறு போன்று, அனுபவித்த தன்மையை நினைக்க ஒண்ணாதபடி அன்றோ இருப்பது? ஆதலால் அன்றோ, ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ (பெரியதிருமொழி. 8-1-9) என்றார் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த ஆலிநாடரும்? என்றது.

‘‘பெருமக்கள் உள்ளவர்தம் பெருமானை’’ (3-7-5)

உள்ளவர் - பரம்பொருள் இலன் என்று அறிந்தா னாகில் இவனும் இல்லாதவன் ஆகிறான்’, என்பது, ஒரு நாள் வரையிலே ‘பரம்பொருள் உளன் என்று அறிந்தானாகில் இவனும் உள்ளவன் ஆகிறான்,’ என்பதாகாதே, என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார். ‘‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதிகரணம் 1-1-6 ஆநந்த3மயோ (அ)ப்4யா ஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தில் இந்தச் சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

84. ‘‘சன்ம சன்மாந்தரம் காத்து’’ (3-7-7)

சன்ம சன்மாந்தரம் காத்து - பஞ்சாக்நி வித்தையிற்சொல்லுகிறபடியே மேகத்திலே புக்கு மழை உருவத்தாலே பூமியை அடைந்து, நெல்லிலே புக்குச் சோற்றின் உருவத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு, பின்பு, ஐந்தாவதான பெண்ணின் சரீரத்திலே புக்கு, பின்ப அன்றோ கர்ப்பமாவது? இப்படி வருகின்ற பிறவியின் தொடர்ச்சியை வேர்ப்பற்றோடே அறுத்து. என்றது, ‘இந்தச் சரீரத்தோடு முடிவுசெய்து பின்பு ஒரு சரீரத்திற்புகாதபடி செய்து என்றபடி.

மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்திற்கு ‘‘வைராக்யபாதம்’’ என்று பெயர். இந்த வைராக்ய பாதத்தில் முதல் ஸூத்திரத்தின் (தத3ந்தரப்ரதி பத்த்யதி4கரணம் 3-1-1 ‘தத3ந்தரப்ரதிபத்தௌ ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்நநிரூபணாப்4யாம்’ 3-1-1) சாந்தோக்ய உபநிஷத்தில் ஐந்தாவது ப்ரபாடகத்தில் மூன்றாவது கண்டம் முதல் பத்தாவது கண்டம் வரை உள்ள ச்ருதி சொற்றொடர்களின் பொருள் விசாரிக்கப்படுகிறது.

அருணர் என்பவரின் குமாரர் ஆருணீ. அவருடைய பிள்ளை ஆருணேயர் இவருக்கு ச்வேதகேது என்று பெயர். இவர் ஒரு ஸமயம் பாஞ்சால தேசத்தரசனின் ஸபைக்குச் சென்றார். ஜீபாலனின் பிள்ளை ப்ரவாஹணன் என்னும் அரசன் அப்பொழுது ராஜ்யபரிபாலனம் பண்ணி வந்தான். அவன் தன்னுடைய ஸபைக்கு வந்த ச்வேதகேதுவை வரவேற்று ‘பிள்ளாய்! உம்முடைய தகப்பனார் உமக்கு எல்லா வித்யை களையும் கற்பித்து விட்டேன். இனி நீ ராஜஸபைக்குப் போய் வரலாம்’ என்று அனுமதி தந்துவிட்டாரா? என்று கேட்டான்.

ச்வேதகேது- பூஜ்யரே! அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

ச்வேதகேதுவின் பதிலைக் கேட்டதும் ப்ரவாஹண மஹாராஜா -1. ‘‘வேத்தயதிதொ(அ)தி ப்ரஜா: ப்ரயந்தீதி:’’ - இந்த லோகத்திலிருந்து மேல் லோகத்திற்குப் போகிறார்களே அதைப்பற்றி அறிவாயா? அதாவது யாகதாந பூர்த்தாதி புண்ணிய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்குப் போகிறார்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக் கிறாயா? என்று கேட்டான்.

ச்வேதகேது. ‘‘ந பகவ:’’ - ஸ்வாமி! அதைப்பற்றி நான் அறியேன்.

ப்ரவாஹணன்-2. ‘‘வேத்த யதா புநராவர்த்தந்தே?’’ - யாகாதிகளை அநுஷ்டித்தவர்கள் திரும்பி வரும் மார்க்கத்தைப் பற்றி அறிவாயா?

ச்வேதகேது - ‘‘ந பகவ:’’ - அறியேன்.

ப்ரவாஹணன்-3. ‘‘வேத்த பதோ தேவயாநஸ்ய பித்ருயாணஸ்ய ச வ்யாவர்த்தநா? இதி’’ - தேவயான பித்ருயானங்களுடைய பேதகாகாரத்தை (வேறுபாடுகளை)ப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறாயா?

ச்வேதகேது - ‘‘ந பகவ:’’ - தெரியாது.

ப்ரவாஹணன்-4. ‘‘வேத்த யதா அஸௌலோக: ந ஸம்பூர்யதா? இதி’’ - இந்த லோகத்திலிருந்து அநவரதம் எப்பொழுதும் போய்க் கொண்டிருக்கிற புருஷர்களாலே எந்த காரணத்தினால் ஸ்வர்க்கலோகமானது நிரப்பப்படாமல் இருக்கிறது? அதாவது - இந்த லோகத்திலிருந்து போகிறவர் களில் ஸ்வர்க்கலோகத்தை அடையாதவர்கள் யார்? என்று கேள்விக்கான பொருளாகும்.

ச்வேதகேது- ‘‘ந பகவ:’’ - அறியேன் ஐயா!

ப்ரவாஹணன்-5. ‘‘வேத்த யதா பஞ்ம்யா மாஹுதா வாப: புருஷவசஸோ பவதீதி?’’ - அப்பானது ஐந்தாவது ஆஹுதியில் புருஷன் என்ற பெயரை எவ்விதம் அடைகிறது? என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயா?

ச்வேதகேது- ‘‘ந பகவ:- ஒன்றும் அறியேன்.

ப்ரவாஹணன்- ரிஷிகுமாரரே! நான் கேட்ட ஐந்து கேள்விகளில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்லத் தெரியாத நீர் ஆசார்யனால் அநுசிஷ்டன்- அனுமதிக்கப்பப் பெற்றவராகச் சொல்லிக் கொள்வது எப்படி? (என்று கேட்டான்).

இதனால் மனவருத்தத்தையடைந்த ச்வேதகேது அரசனின் அனுமதி பெற்று தன் தகப்பனார் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்தான். ‘அப்பா! அந்த ப்ரவாஹணனாகிய அந்த ராஜா என்னிடம் ஐந்து கேள்விகளைக் கேட்டான். அதாவது-1. ‘‘கர்மிணாம் கந்தவ்யதேசம்’’ (யஜ்ஞாதி புண்ணிய கர்மாக்களைப் பண்ணியவர்கள் செல்ல வேண்டிய தேசம்). 2. ‘‘புநராவ்ருத்திப்ரகாரம்’’ (திரும்பி வரும் ப்ரகாரம்- மார்க்கம்). 3. தேவயான பித்ருயாநபேதம் - (தேவமார்க்கத்திற்கும் பித்ருயாநத் திற்கும் (மார்க்கத்திற்கும்) உள்ள வேறுபாடுகள்). 4. அமுஷ்ய லோகஸ்ய அப்ராப்தாரம் (ஸ்வர்க்கலோகத்தை அடையாதவர்கள் யார்?) 5. ‘‘பஞ்சம்யமாஹுதாவாப: புருஷவாஸயோ பவந்தி’’ - அப்பானது, ஐந்தாவது ஆஹுதியில் புருஷன் என்ற பெயரை எப்படி அடைகிறது? என்று. அப்பா! இவைகளுள் ஒன்றுக்குக் கூட என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவைகளை எனக்கு நீர் ஏன் உபதேசிக்க வில்லை? என்றான். (அதைக்கேட்ட பிதா, ச்வேதகேதோ, இவைகளைப் பற்றி நானே அறியேன், நான் அறிந்திருந்தால் என் பிள்ளையான உனக்கு ஸமாவர்த்தன காலத்தில் உபதேசிக்காமல் இருப்பேனா? என்றார்.

பிறகு இருவரும் ப்ரவாஹணராஜா இருப்பிடம் சென்றனர். அரசன் அவர்களை வரவேற்று அர்க்ய பாத்யாதி களை ஸமர்ப்பித்து பூஜித்தான். பின்பு மகரிஷியைப் பார்த்து மனுஷ்யஸம்பந்தமாகவோ அர்த்த(தன) ஸம்பந்தமாகவோ உமக்கு வேண்டியதைக் கேளும் தருகிறேன் என்றான்.

ஆருணி:- ஹே ராஜன்! வித்தம் (பணம்) உம்மிடமே இருக்கட்டும். அதனால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? எனது குமாரன் ச்வேதகேதுவைக் கேட்ட ஐந்து கேள்விகளைப் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். அவைகளுக்குரிய பதிலை எனக்குச் சொல்ல வேண்டும் என்றார்.

ப்ரவாஹணன் - (ஆருணியானவர் தான் கேட்ட கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாதவராய் தன்னிடம் வந்திருப்பதைப் பார்த்து வருந்தினான்.) கௌதமரே! சிரகாலம் இவ்விடத்தில் வஸிக்கக்கடவீர். பிறகு சொல்லுகிறேன் என்றான். மறுபடியும், பிராம்மணோத் தமரே! உமக்கு முன் இதுவரை இந்த வித்யையை எக்காரணத்தினாலோ ஒரு பிராம்மணரும் அறியவில்லை. ஆதலால் ஸர்வலோகத்திலும் க்ஷத்ரியர்களே இந்த வித்யையை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் க்ஷத்ரியர்கள் தான் பிறருக்கு உபதேசிக்க வேண்டும். பிராம்மணர்களுக்கு இந்த பஞ்சாக்னி வித்யையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆகையால் உம்மை சிரகாலம் வஸிக்கும்படிச் சொன்னேன். இதனால் கோபித்துக் கொண்டு இவ்விஷயத்தை ப்ராம்மண ச்ரேஷ்டர் ஒருவரிடம் தெரிந்துக் கொள்ளுகிறேன்’ என்று சொல்லி போக எண்ணாதீர். நான் சிரகாலம் இங்கு இருக்கும்படிச் சொன்னதை நீர் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்றான்.)

அரசன் சொற்படியே சிரகாலம் வஸித்திட்ட கௌதம ருக்கு அரசன் பஞ்சாக்னி வித்யையை உபதேசித்தான். முதலில் ஐந்தாவதாகக் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு கிறான். இந்த பதிலானது மற்ற கேள்விகளின் பதிலிற்கு அநுகூலமாக இருப்பதால் ஐந்தாவது கேள்விக்கே முதலில் பதில் சொல்லு கிறான்.

அப்பின் ஐந்தாவது ஆஹுதியானது ‘புருஷ’ என்ற சொல்லால் சொல்லப்படுகிறது. ஏன்? இதை அறிவாயா? என்று கேள்வி. இங்கு ஆஹுதி என்று சொன்னதால். அக்னியில் தான் ஆஹுதி பண்ணுவார்கள். ஆதலால் இவ்விடத்தில் எது அக்னியாகச் சொல்லப்படுகிறது? ஸமித், புகை, அர்ச்சிஸ் -கொள்ளிக்கட்டை, நெருப்பின் பொறிகள் இவைகளை யாகம் பண்ணுமிடங்களில் காண்கிறோம். இங்கும் அவைகள் வேண்டுமே. அவை எவை என்பதைக் கூறுகிறான்.

‘‘அஸௌவாவலோகோ கௌதம! அக்னி: தஸ்ய ஆதித்ய ஏவஸமித். ரச்மயோதூம: அஹ: அர்ச்சி: சந்த்ரமா அங்காரா: நக்ஷத்ராணி விஸ்புலிங்கா:’’ - (கௌதமரே! ஸ்வர்க்க லோகம் தான் அக்னி, ஸூர்யன் ஸமித்து. ஸூர்ய கிரணங்கள் தான் புகை. அஹஸ் அர்ச்சிஸ். சந்திரன் அங்காரம்-தணல். நக்ஷத்திரங்கள் நெருப்புப் பொறிகள்.).

‘‘தஸ்ய ஏதஸ்மிந் அக்நௌ தேவாச்ரத்தாம் ஜுஹ்வதி. தஸ்யா ஆஹுதே: ஸோமோராஜாபவதி’’ - (ஆதித்யாதிகளை ஸமித்தாகக் கொண்ட த்யுலோக மெனப்படும் ஸ்வர்க்க லோக மாகிற அக்னியில், தேவா:- இந்த்ரியங்கள், ச்ரத்தாம்-வைதிக ப்ரயோகத்தில் ச்ரத்தை என்று சொல்லப்படும், அப்பை-ஜலத்தை ஆஹுதி பண்ணுகின்றன. ‘அதனால், ஸோமோராஜா பவதி (யஜ்ஞாதிகதி அநுஷ்டித்த புண்ணிய விசேஷத்தால் ஸ்வர்க்க லோகத்தை அடைந்த ஜீவன். ஸ்வர்க்க லோகத்தில் ஸுகத்தை அநுபவிப்பதற்குத் தகுந்த) திவ்ய-அழகிய சரீரத்தோடு கூடியவனாக ஆகிறான்.)

அதன் பிறகு ஸ்வர்க்கலோகத்தில் அனுபவிக்க வேண்டிய புண்ணியகர்மாவானது கழிந்த பின் பர்ஜந்யன் என்கிற அக்னியில் இந்த்ரியங்கள் ஸோமராஜனை ஹோமம் செய்கின்றன. அதனால் ஸோமராஜன் என்று சொல்லப்படும் அந்த தேஹமானது த்ரவமாக ஆகி ஜீவனோடு கூட மேக மண்டலத்தில் விழுகிறது.

அதன்பிறகு ப்ருதிவீ என்கிற அக்னியில் இந்த்ரியங்கள் வர்ஷத்தை- மழையை ஹோமம் பண்ணுகின்றன. அதனால் பூமியில் (அந்நாநி) நெல், கோதுமை, உளுந்து முதலானவை (புஜிக்கக் கூடியவைகள்.) உண்டாகின்றன.

அதன்பிறகு புருஷனாகிற அக்னியில் இந்த்ரியங்கள் அந்நத்தை ஹோமம் செய்கின்றன. அந்த அந்நமானது புருஷனிடத்தில் ரேதஸ்ஸாக மாறுகிறது.

அதன்பிறகு ஸ்த்ரீயாகிற அக்னியில் இந்த்ரியங்கள் ரேதஸ்ஸை ஆஹுதி செய்கின்றன. ரேதோரூபமான அந்த அப்பானது (பூதஸூக்ஷ்மங்கள்) யோநியின் மூலமாக ஸ்த்ரீயினிடத்தில் ப்ரவேசித்து கர்ப்பமாக பரிணமிக்கிறது.

‘‘இதி து பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ பவந்தி’’ - (கீழே கூறியபடி, ச்ரத்தை, ஸோமராஜன், வ்ருஷ்டி, அந்நம், ரேதஸ், ஆகிற ஆஹுதிகளுக்குள் ஒன்றான ரேதஸ் ஸாகிற ஐந்தாவது ஆஹுதியில் ‘‘அப்’’ என்ற சொல்லாலே சொல்லப்படுகிற பூத ஸூக்ஷ்மங்கள் (புருஷசப்தா(அ)பிலபநீயாநி) - ‘புருஷ’ என்ற சொல்லாலே சொல்லக்கூடியதாக ஆகின்றன.) என்று ஐந்தாவது கேள்விக்குண்டான பதிலை உபதேசித்தான்.

(சாந்தோக்ய உபநிஷத்திற்கூறியுள்ள முறையைத் திருவுள்ளம் பற்றிப் ‘பஞ்சாக்நி வித்தையிற் சொல்லுகிறபடியே’ என்றார். பஞ்சாக்நி - ஐந்து நெருப்புகள். ‘அக்நி’ என்பதும் ‘ஆஹுதி’ என்பதும் ஒரு பொருட்சொற்கள் என்பர் அரும்பதவுரைகாரர். ஆகாசம், மேகம், பூமி, ஆண், பெண் என்னும் இவ்வைந்துமே இங்குப் பஞ்சாக்நிகளாகச் சொல்லப்படுகின்றன. ஒரு சரீரத்தை விட்டு நீங்கிய உயிர், மற்றொரு சரீரத்தை அடையும் முறை இங்குக் கூறப்படுகின்றது. மேற்கூறிய ஐந்திலும் ஆத்துமா பிரவேசிக்கும் முறையாவது:

ஒரு சரீரத்தினின்றும் பிரிந்த உயிரானது, யாதநா சரீரத்தாலே நரக அனுபவம் பண்ணி, அந்தச் சரீரத்தை விட்டு, புண்ணிய சரீரத்தை எடுத்துச் ஸ்வர்க்க அனுபவம் பண்ணி, பின் கோட்டைக்குப் புறத்தே ‘த்வம்ச’ என்று தள்ள, அந்தச் சரீரத்தை இராக்கதர்கள் புசிக்க, ஸூக்ஷ்ம சரீரத்தோடே பற்றுக்கோடு இல்லாத ஆகாசத்திலே  விழ, சூரியன் தன் கிரணத்தாலே பனியை இழுத்து அந்த ஈரத்தாலே ஆகாஷத்திலே மங்கிக் கிடக்கின்ற ஆத்மாவை எடுத்து மேகத்திலே போகட, அந்தப் பனி மேகத்திலே மழை வடிவாக மாறி மழை மூலமாகப் பூமியை அடைந்து, பயிருக்குத் தாரகமான தண்ணீர் மூலமாகப் பயிரையடைந்து, அன்னத்தின் (சோறு) உருவாக மாறுகிற வரையில் அங்கே கிடந்து, உணவு உருவாகப் புருஷனையடைந்து, சுக்கிலமாக மாறுகின்ற வரையில் அங்கே கிடந்து, சுக்கிலம் வழியாகப் பெண்ணின் சரீரத்தையடைந்து கருத்தங்கிப் புருஷனாகப் பிறத்தல்.

85. ‘‘அடியார்களை’’ (3-7-7)
தானே நினைத்து, வழி தெரியாதபடி இருக்கின்ற நூற்றோராவது நாடியாலே ‘ஆர்த்தனான பரம புருஷனால் அநுக்கிரஹிக்கப்பட்டவனாய்’ ததோ3கோதி4கரணம் 4-2-8 ‘ததோ3கோ(அ)க்3ரஜ்வலநம் தத் ப்ரகாஶிதத்3வாரோ வித்3யா ஸாமர்த்3யாத் தச்சே2ஷ க3த்யநுஸ்ம்ருதி யோகா3ச்ச ஹார்த்தா3நுக்3ருஹீத: ஶதாதி 4கயா’ - 4-2-16,

(ப்ரஹ்மஜ்ஞானியானவன்) பரவித்யையினுடைய (எம்பெருமானிடம் ஒப்பற்ற அன்பு உருவாயிருக்கையாகிற) ஸாமர்த்யத்தாலும், அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி மார்க்க சிந்தநரூபமான யோகத்தினாலும், (உகப்படைந்த) ஹ்ருத3யத்தாமரையிலுள்ள எம்பெருமானாலே அருளப் பெற்றவனாகிறான்; (அவ்வருளாளே அவனுக்கு) (அந்தர் யாமியின்) இருப்பிடமான அந்த ஹ்ருதயம், எதிரே ஒளி யுடையதாகிறது, என்கிறபடியே, தான் கூடக்கொண்டு புறப்பட்டு, அச்சரீத்தின் பிரிவு சமயத்திலே இவன் பட்ட வருத்தமெல்லாம் தீரும்படியாக அவ்வளவிலே ஒரு பரமாத்ம பிரவேசத்தைப் பண்ணுவித்து, சிறு குழந்தைகள் நொந்தால் தாயானவள் குளிர்ந்த உபசாரம் பண்ணுமாறு போன்று, அவ்வளவிலே மேல் வழி போகைக்குத் தரிப்பு உண்டாம்படி செய்து, ‘உயிர்கொண்டு உடல் ஒழிய ஓடும்போது ஓடி, அயர்வென்ற தீர்ப்பான்’ (நான்முக.திரு. 88) என்கிறபடியே, சென்று முகங்கொடுத்து, கர்ம சம்பந்தம் அற்றிருப்பினும் வித்யா மஹாத்மியத்தாலே விரஜையளவும் ஸூக்ஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி, அர்ச்சிராதி கணங்களோடு ஒக்க ஆள் இட்டிராமல், ‘நயாமி - அடையச்செய்கிறேன்’ என்கிறபடியே, தானே வந்து ‘மாதவன் தன் துணையா நடந்தாள்’ என்கிற ‘கள்வன்கொல்’ (பெரியதிருமொழி. 3-7-4) என்கிற திருப்பதிகத்திலே பிராட்டியைப் போலே தன் சிறகின் கீழே கொண்டு, வழியிலுள்ளார் தலைமேல் தாங்கும்படி இவ்வரு குள்ளவற்றைக் கழித்துப் பரமபதத்திலே கொண்டு புக்கு,

‘இந்த உயிர் இந்தச் சரீரத்திலிருந்து புறப்பட்டுப் பரஞ்சோதியாய் உள்ள பரம்பொருளையடைந்து’ ‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச்ச2ரீராத் ஸமுத்தா2ய பரம்ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - [கீழ்ச் சொல்லியபடி உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்; (ஸித்தாந்தத்தில் பொருள் இது)]. ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் 4-4-1ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த் 4-4-1. என்கிறபடியே தனக்கே உரியதான உருவத்தோடு விளங்கும் படியாகச் செய்து, பின்னையும் விடாதே திருவடிகளே அணையாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக்கொண்டு, இதுதான் இவனுக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றிக்கே, தன் பேறாக நினைத்திருக்கும் மஹோபகாரகனை.

86. அடியாரடியார்தம் மடியாரடியார் தமக்கடியாரடியார் தம்* அடியாரடியோங்களே. (3-7-10)
அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு அடியார்அடியார்தம் அடியார் அடியோம் - ‘அந்தப் பரம்பொருள் ஈச்வரர்களான சிவன் முதலியோர்களுக்கும் மேலான ஈச்வரன்’, ‘‘தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தை3வதம் | (ஶ்வே. 6-7,8) - ‘‘ஈச்வரர்களுக்கெல்லாம் மிகவும் மேலான மஹேச்வரனுமாய், தேவதைகளுக்கெல்லாம் மிகவும் மேலான தேவதையுமாய்’’, என்கிறபடியே, இறைமைத்தன்மைக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாததுபோன்று, அடிமையாம் தன்மைக்குத் தமக்கு அவ்வருகு இல்லாதபடி அதன் எல்லையிலே நிற்கிறார்.

87. ‘‘கண்களால் காணவருங்கொல்’’ (3-8-5)

‘பார்க்கின்ற கண்களும் பார்க்கப்படுகிற பொருள்களும் நாராயணனே’,’’சக்ஷுஶ்ச த்3ரஷ்ட்வ்யஞ்ச நாராயண: ஶ்ரோத்ரஞ்ச ஶ்ரோதவ்யஞ்ச நாரயண: ‘‘ (ஸுபாலோ) என்கிறபடியே, ‘கண்ணுக்கு வகுத்த அப்பரமனைக் காண வருமோ?’ என்னாநின்றது என்றபடி.

87. A. ‘‘வாணனை உள்வன்மைதீர’’ (3-8-9)

‘ஸர்வேச்வரனை அடைந்தபிறகு அந்த ஜீவாத்மா பயம் இல்லாதவன் ஆகிறான்’ ‘‘யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந் ந த்3ருஶ்யே (அ)நாத்ம்யே அநிருக்தே (அ)நிலயநே (அ)ப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3தே, அத2 ஸோ (அ)ப4யம் க3தோ ப4வதி (தை. ஆந. 7-2) என்கிற படியே, பகவானுடைய அடியார்கள் இருப்பது போன்று, புன் சிறு தெய்வத்தைப்பற்றி இருந்த வாணனுடைய நெஞ்சுவலி கைமேலே போகும்படியாகப் பெரிய திருவடியின்மேலே ஏறிச் சாரிகை வந்தவனே.

88. ‘‘வாசகமாலை கொண்டு’’ (3-8-10)

அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I (தை. ஆந. 8-4) என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை.

89. ‘‘ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவ’’(3-9-3)

ஒன்று ஒழிவு இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவ - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையும் இடைவிடாமல் தங்கும்படி. என்றது, ‘மீண்டும் வருகிறான் இல்லை’, ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) என்கிறபடியே, ‘உயிர் உள்ள காலம் வரையிலும் சரீரத்தின் சம்பந்தம் அற்று வழுவிலா அடிமை செய்கைக்கு’ என்றபடி.

90. ‘‘மின்னார்மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்’’ (3-9-4)

‘பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்’ ‘‘தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸ: ஸமிந்த4தே | விஷ்ணோர்யத் பரமம்பத3ம் || (யஜுர். காடகம்.1-3) என்கிறபடியே, கவி பாடி முடி சூடி இருக்கின்றவர்கள் அன்றோ? ஆதலின், ‘ஒளி மிக்க மணிகளையுடைய முடியுடைவானவர்’ என்பார், ‘மின்னார் மணிமுடி விண்ணவர்’ என்கிறார்.

91. ‘‘தன்னாகவே கொண்டு’’ (3-9-4).

தன்னாகவே கொண்டு - ‘என்னுடைய உருவம் முதலானவைகளை அடைந்தவர்கள்’ ததா3 வித்3வாந் புண்ய பாபே விதூ4ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதிII’’ (முண்ட. 3-1-3) என்றும், ‘மேலான ஒப்புமையை அடைகிறார்கள்’ என்றும்.

92. ‘‘ஆய்கொண்டசீர்வள்ளல் ஆழிப்பிரான் எனக்கே உளன்’’ (3-9-9)

‘அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வாக்குகள் பேச முடியாமல் திரும்புகின்றனவோ’’’யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I (தை. ஆந. 8-4) என்கிறபடியே, ‘வேதங்களும் பேச முடியாமல் மீளும்படியான பரமன் அன்றோ அவன்?.

93. ‘‘என்றுமென்றும்இனி மற்றொருவர்கவியேற்குமே?’’ (3-9-10)

‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற ஸாமத்தைப் பாடிக் கொண்டி ருக்கிறார்கள்’, ‘‘ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு’’(தைத்.ப்ருகு) என்றும், ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந் நாத3:’’ (தைத்திரீய.ப்ருகு. 10-6) என்றும் பாடப்புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.

94. ‘‘ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம்’’ (3-9-11)

ஏற்கும் பெரும்புகழ் ஆயிரம் - ‘அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன’, ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I (தை. ஆந. 8-4), என்னும்படியான பரம்பொருளை விளாக்குலை கொண்ட பிரபந்தம் என்றால் அதற்குப் போரும்படியான ஆயிரம்.

95. ‘‘வெளிப்பட்டு’’ (3-10-1)

வெளிப்பட்டு - ‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது, ‘இச்சரீரத்தோடு சம்பந்தம் இல்லாத கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை. ந ஸந்த்3ருஶே திஷ்ட2தி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்’’ (தை.நா. உப. 1-10 ), ‘‘ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா’’ (முண்ட. 3-1-8) ‘இப்பரமாத்மாவின் ரூபம் காணமுடியாதது; எவனும் இதைக் கண் முதலான இந்த்ரியங்களால் காண்பதில்லை. உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘தத3வ்யக்தமாஹ ஹி’ 3-2-22, என்ற ஸூத்ர பாஷ்யத்தில் விளக்கமளித்துள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்.

96. ‘‘ஓர் குறைவு இலனே’’ (3-10-1)

அன்றிக்கே, ‘அவன் எல்லாவிதமான கல்யாண குணங்களை பரமாத்மாவோடு கூட அனுபவிக்கின்றான்’, ‘‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’’ (தை. ஆந. 1-2) - ‘அந்த முக்தன் ஸர்வஜ் ஞனான ப்ரஹ்மத்தோடு கூட எல்லாக் கல்யாண குணங் களையும் அனுபவிக்கிறான்’. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4 கரணம் 4-4-6 ‘போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச’ 4-4-21, என்கிறபடியே, ‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப் பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப் பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

97. ‘‘மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை’’ (3-10-3)

 ‘மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை’ என்று கூட்டலுமாம். இதனால், இனிமையும் எல்லார்க்கும் பொதுவாய் இருக்கையைத் தெரிவித்தபடி. ‘அந்தப் பரம்பொருள் சுவை உருவம்’ ‘‘ரஸோ வை ஸ:’’ (தை.ப்ரு .7),என்கிறபடியே, உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய் இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார். ‘தேனை’ என்கிறார், கட்டியின் வன்மை தவிர்ந்திருத்தலின். சாவாமல் காப்பதுமாய் வேறுபட்ட சிறப்பையுடைய இனிய பொருளுமாய் இருத்தலின், ‘அமுதை’ என்கிறார். ‘‘ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸ: ‘‘ (சாந். 3-14-2) - ‘எல்லா மணத்துடன், எல்லா சுவையுடன்’ க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4 கரணம் 2-1-9, ‘ ஸர்வோபேதா ச தத்3 த3ர்ஶநாத்’ 2-1-30 என்ற ஸூத்ரத்தில் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.

98. ‘‘எல்லையில்ஞானத்தன்’’ (3-10-8)

‘‘ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த் ஸ: ‘ 2-3-14, என்ற ஸூத்திரத்தில் இந்த வேதச்சொற்றொடர் காட்டப்படுகிறது.

அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், ‘இந்தப் பரமாத்மா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை’, என்கிறார்.

99. ‘‘வளரொளியீசனை’’ (3-10-10)

‘ஆத்மா கர்மபலத்தை நன்றாக நுகர்கின்றது; இறைவன் கர்மபலத்தை நுகராமல் வேறாக மிகுதியாகப் பிரகாசிக் கின்றான்’. ‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’ (முண்டக. 3-1-1) [அழகிய (ஜ்ஞாந கர்மங்களாகிற) இறக்கைகளை உடையவை யும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றை யொன்று விட்டுப்பிரியாதவை யுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக் கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாம லிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.] உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 ‘பே4தா3தி3தி சேந்ந ப்ரத்யேகமதத்3வசநாத்’ 3-2-12 என்ற ஸூத்ரத்தின் மூலம் தெளிவாக விளக்கப்படுகிறது.

மூன்றாம் பத்து முடிவுற்றது.

12

நான்காம் பத்து

100. ‘‘ ஒரு நாயகமாய் ‘‘ (4-1-1)

ஒரு நாயகமாய் - தனி அரசாக. ‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’, எனப்படுகின்ற ஸர்வேச்வரனுடைய ஐஶ்வரியத்தைப் பௌண்ட்ரக வாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.

‘‘விஶ்வமேவேத3ம் புருஷ:’’ (தை. நாரா. 11-2)- ‘நாராயணனே இவ்வுலகுக்கெல்லாம் புருஷன் ‘ லிங்க3 பூ4யஸ்த்வாதி4கரணம் 3-3-19 , ‘லிங்க3பூ4யஸ்த்வாத் தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ 3-3-43, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இந்தக் கருத்து ஸ்ரீபாஷ்யகாரரால் நிரூபணம் செய்யப் பட்டுள்ளது. (குறிப்பு: ‘லிங்க3பூ4யஸ்த்வாத் தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ 3-3-43, என்ற இந்த ஸூத்திரத்தில் நாராயணஸூக்தத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான சொற்றொடர்களை, ஸ்ரீபாஷ்யகாரர் மேற்கோளாக எடுத்து விவரித்துக் காட்டியுள்ளார் என்பது கருத்தில் கொள்ளத் தக்கது.).

101. ‘‘ ....ஆதலின், கோமின்துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே’’ (4-1-7)

ஆதலின் - ஆன பின்பு, ‘வாழ்வின் நிலையாமை இதுவான பின்பு’ என்றபடி. ஆதி அம் சோதி குணங்கள் கோமின் - எல்லா ஐஶ்வர்யத்திற்கும் அறிகுறியான திருத்துழாய்மாலையைத் திருமுடியிலே உடையனாய், உலக காரணனாய், எல்லை இல்லாத ஒளி உருவமான விக்கிரஹத் தையுடையவனாய் இருந்துள்ளவனுடைய குணங்களைச் சேர்த்து அனுபவியுங்கோள்.ஸ்வரூபத்தைப் பற்றியதாயும் விக்கிரஹத்தைப் பற்றியதாயும் உள்ள கல்யாண குணங்கள்’ என்பார்,

‘ஆதி அம் சோதி குணங்கள்’ என்கிறார். ‘நான் பரமாத்மாவாகிய இனிய பொருளை அனுபவிக்கிறவன், என்றும், (‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன்) ‘அவன் எல்லாக் கல்யாண குணங்களையும் பரமாத்துமாவோடு அனுபவிக்கிறான்’, ‘‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’’ (தை. ஆந. 1-2) - ‘அந்த முக்தன் ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடு கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான்’ .ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6, ‘போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச’ 4-4-21, என்றும், ‘ஓவாத் தொழிற்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்’ என்றும் சொல்லப்படுகின்றவாறே’ (பெரிய திருவந்தாதி. 78) அனுபவியுங்கோள்’ என்றவாறு.

102. ‘‘....மீள்வு இல்லை பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின்’’ (4-1-8)

மீள்வு இல்லை - ‘பின்னர் மீண்டு வருகிறான் இல்லை’ என்கிற பேற்றைப் பெற அமையும். ‘‘ஸ க2ல்வே வம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4 ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸனத்தை யும் ஆயுள் உள்ளவரை அநுஷ்டித்து ப்ரஹ்மத்தின் உலகத்தை அடைகிறான் முக்தன்; மறுபடி ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை’ என்னும் வேதச்சொற்றொடர்களை ப்ரமாணமாகக் கொள்க. ‘எத்தால்?’ என்னில், பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமின்-தன்னுடைய பரிசத்தாலே விரிந்த படங்களையுடைய திருவனந்தாழ் வானை நிரூபகமாகவுடையவனுடைய திருநாமங்களிலே மூழ்குங் கோள். ‘திருநாமத்திலே மூழ்கினவர்களைத் திருவனந்தாழ் வானைப் போன்று விடான்’ என்பார். *‘அரவணையான் திருநாமம் படிமின்’* என்கிறார்.

103.குறுக மிகவுணர்வத்தொடுநோக்கி எல்லாம்விட்ட *
இறுகலிறப்பென்னும்ஞானிக்கும்அப்பயனில்லையேல்*
சிறுகநினைவதோர்பாசமுண்டாம் பின்னும்வீடில்லை*
மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில்வீடஃதே. (4-1-10)

‘(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஜ்ஞான ஸ்வரூபமாக உள்ள ஆத்மாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்ம அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானல், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும் என்றபடி.

 ஈடு: பத்தாம் பாட்டு. ‘பூமியில் ஐஶ்வர்யம், ஸ்வர்க்க அனுபவம் இவை நிலை நில்லா,’ என்றார் மேல்; ‘இவைபோல் அன்றிக்கே, ஆத்ம அனுபவம் நிலை நின்ற புருஷார்த்தமே அன்றோ?’ என்னில், ‘மேலே கூறியவற்றை நோக்கும்போது இதற்கு ஒரு நன்மை உண்டேயாகிலும், பகவானுடைய ஆனந்தத்தைப் பார்க்கும்போது இது மிகச் சிறியதாய் இருக்கையாலே, இதுவும் தண்ணிது; ஆன பின்பு, அவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

குறுக உணர்வத்தொடு (மிக) நோக்கி - பல காலம் புறம்பே உள்ள விஷயங்களில் பண்ணிப் போந்த வாசனை அடைய ஆத்மாவிலேயாம்படி ‘விசத தமமாகத் (மிகநன்றாகத்) தியானம் செய்து’ என்றது, ‘புறம்பேயுள்ள விஷயங்களிலே தூரப் போய்ப் பற்றுகின்ற மனத்தினை ஆத்மாவின் பக்கலிலே சேர்த்து’ என்றபடி. இது கண்ணை இட்டுக் கண்ணைப் பார்த்தாற் போலே (தர்மபூத ஜ்ஞானத்தாலே ஜ்ஞானஸ்வரூபனான ஆத்மாவைப் பார்த்தல்) இருப்பது ஒன்று ஆதலின், ‘குறுக’ என்கிறார். இதனால், முதல் தன்னிலே ஆத்மாவின் பக்கலிலே சேர்த்திய மனத்தினை யுடையவனுக்கே ஆத்ம அனுபவத்தில் அதிகாரம் உள்ளது என்பதனைத் தெரிவித்தபடி. எல்லாம் விட்ட - திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச்சாற்றைப் போன்று சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அவனையும் விடுவது.

இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் - சங்கோ சத்தை (ஸர்வேச்வரன் அளவும் போகாமல் அணுவளவான ஆத்ம மாத்திரத்தில் முடிவாக நிற்றல்) மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்ம ஞானிக்கும். இவ்வருகு உள்ளனவற்றை நோக்கும்போது ‘விரிந்தது, மேலானது’ என்று இருந்தானே ஆகிலும், அவ்வருகும் கண்டவர் ஆகையாலே ‘இறுகல்’ என்று இருக்கிறார் இவர். இறப்பு - மோக்ஷம். அப்பயன் இல்லையேல் - அந்தப் பகவானுடைய உபாஸனம் இல்லையாகில் ஆத்மாவைத் தியானம் செய்ய ஒண்ணாது. உபாஸனமானது இன்பரூபமாயிருக்கையாலே அதனைப் ‘பயன்’ என்கிறார். அவனுடைய ஸாதனம் இவருக்குப் பலமாய் இருக்கிறது. சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் - தன்னை முன்புத்தையிற் காட்டில் மிகச் சிறியனாக நினைக்கும்படி தளைகளாள அவித்யை முதலானவைகள் நூறு கிளைகளாகக் கிளைக்கும். ‘தேவோஹம் - நான் தேவன், மனுஷ்யோகம் - நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின், ‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.

மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை - இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக் கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்மாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், ஸர்வேச்வரன் பக்கல் அந்திம ஸ்ம்ருதி பண்ணி இச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில், அந்த மோக்ஷந்தான் இல்லை. மறுகல் இல் ஈசனை - குற்றங்கட்கு எதிர்த் தட்டான ஸர்வேசுவரனை, அன்றிக்கே, ‘மறுகலில் - மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங்காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல். ஈசனைப் பற்றி விடாவிடில் - அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை (மரை-பசுமாடு போன்ற மிருகம்)ஆதல் ஆமித்தனை. அஃதே வீடு - ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.

103.1. ஸ்ரீபாஷ்யத்தின் அடிப்படையில் நிலை நாட்டப்படும் கைவல்ய ஸித்தாஞ்ஜநம்:-

‘‘வித்3யாகர்மணோரிதி து ப்ரக்ருதத்வாத்’’ (ப்ர. ஸூ. 3-1-17) என்னும் ஸூத்ரத்தின் பாஷ்யத்தில், ப்ரஹ்ம வித்யைகளில் ஒன்றை அநுஷ்டித்து ப்ரஹ்மத்தை அடைபவர் களுக்கு தேவயாநமான அர்ச்சிராதிகதியையும், புண்ய கர்மங்களை அநுஷ்டித்து, அஸ்திரமான ஐஶ்வர்ய பலன்களைப் பெறுபவர்களுக்கு பித்ருயாணமான தூமாதிகதியையும், அஸாதாரணமாக வேதங்களில் ஓதப்பட்டவையாக ஸ்ரீபாஷ்யகாரர் நிஷ்கர்ஷிக்கையால் கேவல ஜீவோபாஸகனுக்கு இவ்விரண்டு கதிகளும் இல்லை என்று தெளிவாக விளங்குகிறது. கீதை (8-23) பாஷ்யத்தில் ஜ்ஞாநிகளுக்கு அர்ச்சிராதிகதியையும், புண்யகர்மங்களை அநுஷ்டிக்கும் ஐஶ்வர்யார்த்திகளுக்கு தூமாதிகதியையும் பிரித்து அருளிச்செய்து, ப்ரகரணஸித்தனான ஜிஜ்ஞாஸு வாகிற கைவல்ய நிஷ்டனுக்கு இவ்விரண்டு கதிகளும் இல்லை என்று பாஷ்யகாரர் உணர்த்தியதும் இந்த ஸூத்ரத்தைத் திருவுள்ளத்தில் கொண்டே என எளிதில் உணரலாம். ஆகையால், பஞ்சாக்நிவித்யாநிஷ்டனே கைவல்ய நிஷ்டன் என்னும் பக்ஷம் ஸ்ரீபாஷ்யகாரர் உகந்ததன்று என்று இதிலிருந்தும் தேறுகிறது.

‘‘தே3ஹயோகா3த்3 வா ஸோ(அ)பி’’ (ப்ர.ஸூ. 3-2-5) என்னும் ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் ‘‘ஸோ(அ)பி -திரோபா4வ: தே3ஹயோக3த்3வாரேண வா ப4வதி, ஸூக்ஷ்மாசிச்ச2க்தியோக3 த்3வாரேண வா ஸ்ருஷ்டிகாலே தே3ஹாவஸ்தேந அசித்வஸ்துநா ஸம்யோகா3த் ப4வதி: ப்ரளயகாலே நாமரூபவிபா4கா3நர்ஹாதி ஸூக்ஷ்மாசித் வஸ்துயோகா3த்3 அதோ(அ)நபி4வ்யக்த ஸ்வரூபத் வாத்...’’ (பரமபுருஷனுடைய ஸங்கல்பத்தால் ஜீவனுக்கு ஏற்படும் அந்த ஸ்வரூப மறைவு - ஸ்ருஷ்டி காலத்தில் தேஹமாகிற அசேதனப்பொருளோடு (எம்பெருமானால் உண்டாக்கப்பட்ட) சேர்த்தியாலே விளைகிறது; (எம்பெருமான் அனைத்தையும் லயமடையச்செய்யும்) ப்ரளய காலத்தில் இந்த ஸ்தூலமான தேஹம் இல்லாவிடிலும், இதற்குக் காரணமாய், நாமரூபப் பிரிவற்றதாகையாலே அதி ஸூக்ஷ்மமான மூலப்ரக்ருதி எனும் அசேதநப்பொருளின் சேர்த்தியாலே உண்டாகிறது. இப்படி ஸ்ருஷ்டி காலத்திலும், ப்ரளயகாலத்திலும் (இருவகைப்பட்ட அசேதநப்பொருளின் தொடர்பு ஏற்பட்டு இந்த லீலா விபூதியிலிருக்கும் வரையில்) ஜீவன் மறைக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவனா யிருக்கையால்...) என்று அருளிச்செய்யப்பட்டது.

இந்த ஸூத்ரத்திலிருந்தும், பாஷ்யத்திலிருந்தும் இந்த லீலா விபூதியிலிருக்கும் வரையில் ஸ்தூலமாகவோ, ஸூக்ஷ்மமாகவோ ப்ரக்ருதி ஸம்பந்தம் தவிர்க்கவொண்ணா தாகையாலே ப்ரக்ருதியிலிருந்து நீங்கிய ஆத்மஸ்வரூபத்தின் பூர்ணாநுபவமாகிற கைவல்யமோக்ஷத்தை ஜீவன் ப்ரக்ருதி மண்டலத்துக்குள் இருந்துகொண்டு அடைய முடியாது. ஆகையால் நித்யவிபூதியிலேயே இந்த மோக்ஷ ஸ்தானம் உள்ளதென்றும், இது நித்ய முக்தியே என்றும் விளங்குகிறது.

அபா4வாதி4கரணத்தில் (4-4-5) முக்தனுக்கு ஶரீரம், இந்த்ரியம் முதலானவை உண்டா, இல்லையா என்று ஆராயப்படுகிறது. பாதரி என்பவர் ‘ஶரீரம் இருந்தால் ப்ராக்ருதமான ஸுக து:க்கங்களைத் தவிர்க்க முடியாதா கையாலே, முக்தனுக்கு ஶரீரம் இல்லை’ என்று கருதினார். ஜைமினியோவெனில், ‘‘முக்தன் பலபடியாக ஆகிறான்’’ என்று வேதம் ஓதுகையால். கர்மம் காரணமாக ஏற்படாத அப்ராக்ருத ஶரீரம் அவனுக்கு உண்டென்று கொள்ள வேண்டும்’’ என்று கருதினார். பாதாராயணராகிற வ்யாஸர் இவ்விரண்டு பக்ஷத்தையும் ஏற்காமல், ‘‘முக்தர்களில் சிலர் ஶரீரம் உடையவர்களாகவும் இருக்கலாம், சிலர் ஶரீரம் இல்லாதவர்களாகவும் இருக்கலாம்’’ என்று திருவுள்ளம் பற்றினார். இதிலிருந்து, நித்யஸூரிகளைப் போல் கைங்கர்யத்தில் ஊன்றியிருக்கும் சில முக்தர்களுக்கு ஶரீரம் உண்டென்றும், கைங்கர்யத்தில் ஊன்றாமல் பகவத் குணாநுபவத்திலேயே ஊன்றியிருக்கும் சில முக்தர்களுக்கு ஶரீரம் தேவையில்லையாகையாலே அப்ராக்ருத ஶரீரமும் இல்லையென்றும் விளங்குகிறது. இதே ந்யாயத்தின்படி பார்க்கும்போது, கைவல்யத்தையடைந்தவனான முக்தனும் தன் ஆத்மாவை மாத்திரம் அநுபவிப்பவனாகையாலே அவனுக்கு ஶரீரம் தேவையில்லை என்னும் காரணத்தால் அவன் அஶரீரியாகவே இருந்து தன் ஆத்மாவை அநுபவிக்கிறான் என்று கொள்ளலாம்.

103.2. திவ்யப்ரபந்த பாசுரங்களின் அடிப்படையில் நிலை நாட்டப்படும் கைவல்ய ஸித்தாஞ்ஜநம்:-

நாலாம்பத்தில், ஐஶ்வர்ய கைவல்ய வைராக்யத்தைப் பிறர்க்கு உபதேஶிக்கும் ‘‘ஒரு நாயகம்’’ என்று தொடங்கும் முதல் திருவாய்மொழியில், முதல் ஒன்பது பாசுரங்களாலே ப்ராக்ருதமான இவ்வுலகச் செல்வங்களும், ஸ்வர்க்கம் முதலான மறுமைச் செல்வங்களும் அற்பமாகவும், அஸ்திரமாகவும் (நிலையற்றதாகவும்) இருக்கையாலே கைவிடத்தக்கவை என்று உபதேஶித்து, ‘‘அப்படியானால், ஐஶ்வர்யத்தைப் போலே அற்பமாயும், அஸ்திரமாயும் இராமல், அளவில்லாத இன்பமாய்,நிலையானதான கைவல்யத்தைப் பயனாகப் பற்றலாமோ?’’ என்னும் கேள்வி எழுந்தளவில், ‘‘குறுகமிக உணர்வத்தொடு’’ (4-1-10) என்று தொடங்கும்பத்தாம் பாசுரத்தாலே அதற்கு பதில் கூறுகிறார் நம்மாழ்வார். இப்பாசுரத்திற்கு ஆறாயிரப்படியில் அருளியபடி பொருள்பின்வருமாறு:- ‘‘குறுக மிக உணர்வத்தொடு நோக்கி, இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும்’’ என்னும் பகுதியாலே, ‘‘கைவல்யநிஷ்டன் ஜ்ஞாநயோகத்தை ஸாதனமாகக்கொண்டு நெஞ்சை ஆத்மாவில் ஈடுபடுத்தி, அதை நேரே கண்டு, பகவதநுபவத்தைக் காட்டிலும் இறுதியான (சுருங்கியதான) அந்த மோக்ஷத்தையே புருஷார்த்தமாகக் கொள்கிறான்’’ என்று காட்டுகையாலே, கைவல்யம் பகவதநுபவத்தைக்காட்டிலும் தாழ்ந்ததாயினும், அதுவும் ஒருவகை மோக்ஷமே என்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுகிறார் என்று தெளிவாக விளங்குகிறது.

‘‘எல்லாம் விட்ட ஞானி’‘ என்னும் பகுதியாலே, ‘‘இக்கைவல்யநிஷ்டன் தன் பயனைப் பெறுவதற்குத் தடையான அசித்தில் பற்றை அடியோடு விடவேண்டும்’ என்று காட்டுவதும், இவன் பெறும் பயனில் அசிதநுபவம் அடியோடு கிடையாது என வலியுறுத்துகிறது. ‘‘அப்பய னில்லையேல் சிறுக நினைவதோர் பாசமுண்டாம்’’ என்று, ‘‘எம்பெருமானை ஆஶ்ரயிக்காவிடில் ஆத்மாநுபவத்திற்குத் தடையான கர்மம் நீங்காதாகையாலே, மறுபடியும் விஷயங்களில் ஈடுபாடு உண்டாகிவிடு மாகையாலே அந்தக் கைவல்ய மோக்ஷமும் ஸித்தியாது’’ என்று காட்டுகையாலே, தமக்குப் பயனாயிருக்கும் பகவதாஶ்ரயணத்தைக் கைவல்யநிஷ்டன் ஸாதனமாகவே கொள்கிறான் என்றும், விஷயாநுபவத்திற்கு எதிர்த் தட்டாயிருப்பது கைவல்யா நுபவம் என்றும் காட்டுகிறார். ‘‘மறுகலில் ஈசனைப் பற்றிவிடா விடில் பின்னும் வீடில்லை’’ என்னும் பகுதியாலே, ‘‘எம்பெருமானை உபாயமாக ஆஶ்ரயித்து ஆத்மாவைக் கண்டாலும், அந்திம ஸமயத்திலாவது எம்பெருமானை ப்ராப்யமாக (பேறாக) அநுஸந்தித்து, முக்யமோக்ஷமான பகவத் கைங்கர்யத்திற்குத் தடையான தன் ப்ரதிபத்தியைப் போக்கிக் கொள்ளாவிடில், அந்த முக்யமோக்ஷம் ஸித்திக்காது’’ என்கையாலே, ‘தன் ஸ்வார்த்த ப்ரதிபத்தியை மாற்றிக் கொள்வதே முக்யமோக்ஷத்தைப் பெற இவன் செய்ய வேண்டியது’ என்று காட்டினார்.

‘‘வீடு அஃதே’’ என்னும் பகுதியாலே, பரம மோக்ஷமான அந்த பகவத் கைங்கர்யமே முக்யமோக்ஷம் என்று காட்டினார். ஆறாயிரப்படியில் பிள்ளான் ‘‘அஸ்திரத்வாதி தோஷா ஸம்பிந்நமான கைவல்யத்தை’’ என்று இப்பாசுர வ்யாக்யானத்தைத் தொடங்குவதன் மூலம். கைவல்யம் நித்யமானதே என்று தெளிவாகக் காட்டினார்.

‘‘எம்பெருமானை ஆஶ்ரயித்தாலல்லது ஆத்மாவ லோகந விரோதி கர்மம் போகாது’’ என்கையால், ‘எம்பெருமானை ஆஶ்ரயித்து ஸகல கர்மங்களும் போனபின்பே கைவல்யமோக்ஷம் ஸித்திக்கிறது’ என்று காட்டினார். ‘‘பகவத் ஸமாஶ்ரயணத்தாலே ஆத்மாவ லோகனம் பிறப்பது; பிறந்தாலும், அந்திமதஶையிலே பகவதநுஸந் தானம் பண்ணி ப்ரதிபந்தகத்தைப் போக்கா தொழியில், பின்னை ஆத்மயாதாத்ம்யாவிர்ப்பாவ லக்ஷண மோக்ஷம் ஸித்தியாது; முக்யமான மோக்ஷமாகிறதும் அந்த பகவத்கைங்கர்யமே’’ என்று, ‘பகவதநுஸந்தானம் பண்ணி ப்ரதிபந்தகத்தைப் போக்கவேணும்’ என்கையாலே, ‘கைவல்யநிஷ்டனுடைய ப்ரதிபத்தியே ஸர்வகர்மங்கள் கழிந்த பின்பும் அவனுக்கு முக்யமோக்ஷத்திற்குத் தடையாயுள்ளது. அந்திம ஸ்ம்ருதியிலாவது அவன் ப்ரதிபத்தியை மாற்றிக் கொள்ளாவிடில் அவனுக்கு என்றும் பரமமோக்ஷம் கிடைக்காது’ எனத் தெளிவாகக் காட்டினார்.

‘‘ஆத்மாவலோகந விரோதிகர்மம்’’ என்று கர்ம ஶப்தத்தையும் ‘‘பகவத் அநுஸந்தானம் பண்ணி ப்ரதி பந்தகத்தைப் போக்காவிடில்’’ என்று ‘பகவதநுஸந் தானம்’ ‘ப்ரதிபந்தகம்’ என்னும் பதங்களையும் இட்டியிருப்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது. ‘‘ஆத்மயாதாத்ம் யாவிர்ப்பாவலக்ஷண மோக்ஷம்’’ என்று பகவத்கைங்கர் யத்தைக் குறிக்கையாலே, கீதாபாஷ்யத்தில் ‘அக்ஷரயா தாத்ம்யத்தை அடைபவனாகச் சொல்லப்பட்டவனான கைவல்யார்த்தியைக் காட்டிலும், ‘‘ஆத்மயாதாத்ம்யவித்’’ என்று சொல்லப்பட்ட பஞ்சாக்நி வித்யாநிஷ்டன் வேறு பட்டவன் என்று தெளிவாக உணர்த்தினார். ஆக, இவ்வண்ணமாக எம்பெருமானாரின் நியமனத்தினால், அவரால் ஜ்ஞானபுத்ரராக அபிமானிக்கப் பெற்ற பிள்ளானால் இயற்றப்பெற்ற ஆறாயிரப்படியிலிருந்தே கைவல்யம் நித்யமுக்தியே என்றும், கைவல்யநிஷ்டன் பஞ்சாக்நி வித்யா நிஷ்டனைக்காட்டிலும் வேறுபட்டவன் என்றும் விளங்கு கிறது.

இப்பாசுரத்தின் மற்ற வ்யாக்யானங்களில் விவரிக்கப்பட்ட பொருள் வேறுபாடுகள் பின்வருமாறு:- ‘‘எல்லாம் விட்ட ஞானி’’ என்றதுக்கு ‘‘ப்ராக்ருதவிஷயங்கள் எல்லாவற்றையும் விட்ட ஜ்ஞாந யோகநிஷ்டன்’’ என்று பிள்ளானைப்போல் பொருள் கொள்ளாமல். ‘‘ஐஶ்வர்யம் பகவதநுபவம் என்னும் மற்ற இரண்டு புருஷார்த்தங்களையும் விட்ட ஜ்ஞாநயோகநிஷ்டன்’’ என்று மற்ற வ்யாக்யாதாக்கள் பொருள்கொண்டார்கள். இதிலிருந்தும் ‘கைவல்ய நிஷ்டனுக்கு ப்ராக்ருதஸுகங்கள் நீங்கப்பெற்ற ஒருவகையான மோக்ஷம் ஏற்பட்டுவிடுகிறது’ என்றும். ‘அந்த மோக்ஷத்தில் பகவதநுபவம் அடியோடு கிடையாது’ என்றும் விளங்குகிறது. ‘‘மறுகலில் ஈசனைப் பற்றி விடாவிடில், பின்னும் வீடில்லை’’ என்னும் பகுதிக்கு ‘‘அந்திம காலத்தில், தாழ்வுகள் ஒன்றும் இல்லாதவனாகவும், ஜ்ஞாநத்தையே வடிவாகக் கொண்டவனாகவும் எம்பெருமானை அநுஸந் தித்து. இவ்விஷயங்களில் அவனை ஒத்தவனாகத் தன் ஆத்மாவை யும் அநுஸந்தித்து இந்த ஶரீரத்தை விடவில்லையானால், அந்தக் கைவல்யமோக்ஷமும் ஸித்திக்காது’’ என்று பொருள்கொண்டார்கள். இதிலிருந்தும் - அந்திமஸ்ம்ருதியில் எம்பெருமானைப்போலே தன் ஆத்மாவும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் வரும் தாழ்வுகள் அற்றது என்றும், ஜ்ஞாநத் தையே வடிவாகக் கொண்டது என்றும் அநுஸந்திப்பதன் மூலம், ப்ரக்ருதிஸம்பந்தம் அற்றதாய், ஜ்ஞாநத்தையே வடிவாகக் கொண்டதான தன் ஆத்மாவை அநுபவிக்கிறதாகிற மோக்ஷத்தையே கைவல்ய நிஷ்டன் பெற்றுவிடுகிறான்என்று விளங்குகிறது. ஆகையால், ஸூக்ஷ்மஶரீரம் நீங்கமுடியாத இந்த ப்ரக்ருதி மண்டலத்திலேயே கைவல்யாநுபவம் ஏற்படுகிறது என்று ஆழ்வாரும், அவருடைய திருவுள்ளக் கருத்தறிந்த ஆசார்யர்களில் எவரும் திருவுள்ளம் பற்றவில்லை என்றும் விளங்குகிறது.

104.
ஏகமூர்த்திஇருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தியாகி * ஐந்துபூதமாய் இரண்டுசுடராய்அருவாகி *
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! * உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே. (4-3-3)

ஏக மூர்த்தி - ‘ஸோமபானம் செய்தற்குரிய ச்வேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘ஸத்’ என்று சொல்லக்கூடியதாயும் நாம ரூபங்கள் இன்மையால்ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே, ‘‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3 விதீயம்’’ (சாந். 6-2-1) - ‘மென்மையானவனே! ‘ஸத்’ என்பது மட்டுமே முதலில் இருந்தது, தனியாக இருந்தது. இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை’. வியத3தி4கரணம் 2-3-1, ‘ஶப்3தே3ப்4ய:’ - 2-3-6 என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் விளக்கப் படுகிறது.

படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும், அழிந்து ‘ஸத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் நீறு பூத்த நெருப்புப்போலே இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ஆக, படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது’, என்றபடி. இரு மூர்த்தி - ப்ரக்ருதியும், மஹானும் ஆகிய இரண்டையும் நோக்கிக் கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது; என்றது, ‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாக வுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது. ( ‘அகங்காரம் முதலான தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க, ‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம் சொல்லுவான் என்?’ என்னும் வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்று தொடங்கி, ‘அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவ்யக்தம்’ என்று தொடங்கி. ‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலை’ என்றது, அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை வேறுபாடுகளுள் ஒன்று; பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும், ‘அக்ஷரம்’ என்றும், ‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;

அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய காரியநிலை மஹானாய் இருத்தலால் என்றபடி, ‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது. ‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது. ‘அக்ஷரம்’ என்பது, நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய விதைபோன்றது. ‘அவ்யக்தம்’ என்பது, ‘ஊறிப் பருத்து மேலெழுந்து வெடித்த விதை போன்றது. ‘மஹத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை போன்றது).

அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது? மூன்று மூர்த்தி - மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. ஸாத்விகமாயும், ராஜஸமாயும், தாமஸமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது? பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் - மேலே கூறிய முறை அன்று இங்குச் சொல்லுகிறது (மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது, ‘ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற இடங்களில் காரண காரியங்கள் என்ற முறை பற்றி அருளிச்செய்தார்; இனி, அருளிச் செய்வது அம்முறையில் அன்று’, என்றபடி. அதனை விளக்குகிறார், ‘ஸாத்விக அகங்காரம்’ என்று தொடங்கி. பதினோரு இந்திரியங்க்ள் ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று.

இங்குக் கூறிய தத்வங்களின் முறையையும் விரிவையும் பரம காருணிகரான ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்துவத்திரயத்தில் அசித் பிரகரணத் தாலும், பாகவதத்தில் சுகமுனி தத்துவ முரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும், ‘சுவை ஒளி யூறோசை’ என்ற திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் இதனைச் சுருக்கமாகக் காணலாகும்).;

ஸாத்விக அகங்காரத்தின் காரியம், பதினோரு இந்திரியங்கள்; தாமஸ அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும், ராஜஸ அகங்காரம்; ஆக, பதினோரிந்திரியங் களையும், குணங்களோடு கூடிய ஐம்பெரும் பூதங்களையும் சொல்லி அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.

இரண்டு சுடராய் - ‘ப்ரஹ்மாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்’, ‘‘ஸூர்யாசந்த்3ர மஸௌ தா4தா யதா பூர்வமகல்பயத்’’ (தை.நா.உப. 14-4) - ‘படைப்பவன் திட்டமிட்டு முன்பு இருந்ததைப் போல் சூரியனையும், சந்திரனையும் படைத்தான்’. சமஸாதி4கரணம் 1-4-2 - ‘கல்பநோபதே3ஶாச்ச மத்4வாதி3வத3விரோத4:’ 1-4-10,என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் விளக்கப் படுகிறது.

(தைத்திரீய உபநிட. ‘ஐந்து பூதமாய்’ என்றது முடிய, ஸமஷ்டி சிருஷ்டியை அருளிச் செய்தது. ‘இரண்டு சுடராய்’ என்றது முதல் வ்யஷ்டி சிருஷ்டியை அருளிச்செய்தபடி. ஸமஷ்டி - கூட்டம். வ்யஷ்டி - வேறு வேறு). என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது. இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம். அருவாகி - ‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; (தைத்திரீய ஆனந். 6). Òதத் ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்| தத3நுப்ரவிஶ்ய ஸச்ச த்யச்சாப4வத் || Ó (தை.ஆந 6.2.3) [(பரம்பொருளானது) உலகை ஸ்ருஷ்டித்து, அதிலே உள் நுழைந்து வியாபித்தது; அதை வியாபித்தபின் விகாரமற்றதான சித்தாகவும், விகாரமுடைய அசித்தாகவுமாயிற்று]. என்று ஶ்ருதியும், ஸர்வேஶ்வரன் எல்லாச் சேதந அசேதநப் பொருள்களையும் நியமித்துக் கொண்டு எப்போதும் வியாபித்திருக்கிறான் என்று ஓதிற்று.

அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச் சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்’, என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும் பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ்வுயிருக்குள் அந்தராத்மாவாய் அநுப்ரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. ‘நன்று; மேலே, அசித்தை அருளிச்செய்தாராதலின், இங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்மா என்று பொருள் கூறுதல் ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், ‘இந்த ஆத்மாக்களை எல்லாம்சரீரமாகவுடைய நான் அந்தர்யாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ ‘‘அநேந ஜீவேந ஆத்மநா (அ)நுப்ர விஶ்ய நாமரூபே வ்யாகரவாணி (சாந். 6-3-2), ‘ ‘இந்த உயிருள்ள ஒன்றுடன் கூடவே உட்புகுந்து, நான், பெயர் மற்றும் வடிவமாக வகைப்படுத்தக் கடவேன்’. பூ4தாதி4கரணம் 4-2-4, ‘நைகஸ்மிந் த3ர்ஶயதோ ஹி 4-2-6’ என்ற ஸூத்திர பாஷ்யத்தில் தெளிவுபடுத்தப் படுகிறது.

‘அரு’ என்பதற்கு ஆத்மா என்று பொருள் கூறில், அநுப்பிரவேசம் ஸித்தியாமையாலும், அநுப்ரவேசத் தைச் சொல்லுகிற விடத்தில் ஜீவனுக்கு அந்தர்யாமி யாய் இருக்கிற இறைவனுக்கு அநுப்பிரவேசமா கையாலே ஆத்மா ஸித்திக்கையாலும் அநுப்பிரவேசத் தையே சொல்லுகிறது என்றபடி).

இந்த ஆத்மாக்களை யெல்லாம் சரீரமாகவுடைய ஸர்வேச்வரனுக்கு அநுப்பிரவேசமாகையாலே அப்பொரு ளும் சொல்லிற்றாயிற்று.

இனி, இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்வத்தைச் சொல்லுகிறது’ என்றும், ‘இருமூர்த்தி’ என்பது. வ்யூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாஸுதேவ ஸங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும், ‘மூன்று மூர்த்தி என்பது, ‘வ்யூகத்தில் மூன்றாம் மூர்த்தியான ப்ரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும், ‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும், ‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது, இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பாரும் உளர்.

(’ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார் படைப்புக்குக் கடவர் என்றும், ‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும் பிரித்துக் கூட்டிக்கொள்க. ‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றது, ஸ்ருஷ்டியைக் கூறுவதனால், மேலே கூறிய ப்ரத்யும்நரது தொழிலாகிய ஸ்ருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள். ‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்பது. ‘அநிருத்தரையும் அவருடைய காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள். ‘ஆயின், ஸங்கர்ஷணருடைய தொழிலாகிய ஸம்ஹாரத் தைக் கூறவில்லையே?’ எனின், ‘அழித்தலானது, படைத்தற் றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகை யால், அது, பொருளாற்றலால் தானே ஸித்திக்கும்’ என்க. ‘உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்).

105. ‘‘...... ஏலுமாடையும்அஃதே’’ (4-3-5)

ஒரு நாள் ஸ்ரீவைஷ்ணவ வண்ணத்தான், திருப் பரியட்டங்களை அழகியதாக வாட்டிக்கொண்டு வந்து எம்பெருமானார்க்குக் காட்ட, மிக உவந்தாராய் அவனைப் பெருமாள் திருவடிகளிலே கைப்பிடித்துக்கொண்டு புக்கு, ‘நாயந்தே! இவன் திரு அரைக்குத் தகுதியாம்படி வாட்டினபடி திருக்கண்சார்த்தி அருளவேண்டும்’ என்று இவற்றைக் காட்டியருள, கண்டு உவந்தருளி, உடையவரை அருள்பாடு இட்டருளி, ‘இவனுக்காக ரஜகன் (வண்ணான்), நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ள மாயருளினார். அன்றிக்கே, ‘ஏலும் ஆடையும் அஃதே’ என்பதற்கு, ‘சிறந்த பொன்னாடை’ என்கிறபடியே, ‘புருஷோத்தமனுக்கு இலக்கணமான திருப்பீதாம்பரமும் அந்த அன்பேயாம்’ என்னலுமாம். ‘‘தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபம் யதா2 மாஹாரஜதம் வாஸ:’’ (ப்ருஹ. 4-3-6) - ‘உண்மையில், புருஷனின் இவ்வாறான வடிவம் ஒன்று உள்ளது. குங்குமப்பூ வர்ணத்தில் ஆடை அணிந்தவனாக’. உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 ‘ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதிஷேத4தி ததோ ப்3ரவீதி ச பூ4ய:’ -3-2-21 என்ற ஸூத்திர பாஷ்யத்தில் விளக்கப் படுகிறது.

106. ‘‘காதல்மையலேறினேன்’’ (4-3-9)

நித்தியசூரிகளோடு இவரோடு அவன் தன்னோடு வேற்றுமை இன்றி அன்றோ இவ்விஷயம் இருப்பது? முற்றறி வினனாய் எல்லாவற்றையும் முடிக்கவல்ல ஆற்றலையுடைய னான தான் அறியப்புக்காலும் தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் அன்றோ இருப்பது? தன்னை அறியப் புக்க வேதங்கள் பட்டது படுமத்தனை தானும். ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்.

புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே - எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவனாய் இருக்கிற இருப்பில் குற்றம் இல்லாதது போலே, என்னுடைய கலவியிலும் வடிவிற்பிறந்த ஒளியிலும் குற்றம் இன்றிக்கே இருக்கின்றனவனே!

‘‘...கண்ணீர்மல்கநின்றுநாரணனென்னும்அன்னே! * என் தெய்வவுருவிற்சிறுமான் செய்கின்றதொன்றறியேனே’’ (4-4-2)
‘மைத்ரேய!’ என்னுமாறு போலே, தனக்கு ஓர் ஊற்றங்கோல் தேடுகின்றாள். என் தெய்வ உருவின் - ஒப்புமையுள்ள பொருள்களையும் அவன் ஸம்பந்தமுள்ள பொருள்களோடு ஒத்த பொருள்களையும் நினைக்க நினைக்க, நித்தியானுபவம்பண்ணுகின்ற நித்தியசூரிகள் வடிவில் பிறக்கும் ஒளி பிறவாநின்றதாயிற்று இவளுக்கு; ஆதலின், ‘தெய்வ உருவின்’ என்கிறாள். ஆயின், அவர்களில் இவளுக்கு வாசி உண்டு: சிறுமான் - ‘புராணா:- பழையர்’ என்றும், ‘விண்ணாட்டவர் மூதுவர்’ என்றும் சொல்லுகின்ற படியே, ‘‘யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:’’ (யஜுர். அச்சித்ரம்) - ‘யாதொரு பரமபதத்தில், ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்க வல்லவர்களான, யாதொரு நித்யஸூரிகள், அநாதி ஸித்தர்களாயும், அநேக காலமானாலும் நூதனமான திவ்யமங்கள விக்ரஹத்தை உடையவர்களாயும் இருக்கிறார்கள்’. பழையராய் இருப்பார்களே அன்றோ அவர்கள்? செய்கின்ற ஒன்று அறியேனே - ‘இவள் தொடங்குகிறது எது? தலைக்கட்டுகிறது எது?’ என்று ஒன்றும் தெரிகின்றது இல்லை.

107. ‘‘மெய்வேவாள்’’ (4-4-3)

‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும். ‘‘வாயோரக்3நி:’’ (தை.ஆந.1.1) (வாயு விடமிருந்து அக்னி உண்டாகிறது), தேஜோதி4கரணம் 2-3-2, ‘தேஜோ (அ)தஸ் ததா2ஹ்யாஹ’ 2-3-10 என்ற ஸூத்திரத்தின் விளக்கத்தில் மேற்கோளாக எடுக்கப்ட்டுள்ளது.

107.A. ‘‘எறியும் தண் காற்றை’’ (4-4-3)

‘எறியும் தண்காற்றை’ என்கிறாள். ‘பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ (‘‘ப்ராணாத்3வாயுரஜாயத’’ - புருஷ ஸூக்தம்-14, ‘ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்’) என்கிறபடியே, இக்காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ? ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை.

108. ‘‘ ..... நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்’’ (4-4-7)

நீறு செல்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் - நீற்றினைச் செல்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே கொண்டு ‘மஹாவராஹத்தை எடுத்த மஹா விஷ்ணுவினால் தூக்கப் பட்டவள் ஆகிறாய்’ என்கிறபடியே, என்றும் ஒக்க பகவானுடைய ஸம்பந்தம் மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப் போருமவர்களாகக் கொண்டு மயங்கி, ‘இவர்கள் ஸர்வேச்வரன் அடியார்’ என்று ஓடா நிற்கும். பிராயஶ்சித்தப் ப்ரகரணங்களிலே ப்ரஹ்மஹத்தி முதலான பாவங்களைப் பண்ணினார்க்குப் பிராயஶ்சித்தமாக விதித்த த்ரவியத்தைத் தாமஸபுருஷர்கள் தரித்துப் போந்தார்கள்; அந்தத் திரவியத்தைப் பாராதே செவ்வை மாத்திரத்தைக் கொண்டு மயக்குகின்றாள் இவள்; அது பொடிபட்டுக் கிடக்கிறது என்று அறிகின்றிலள்; சிறிது ஒப்புமை அமையுமாயிற்று இவள் மயங்குகைக்கு, இவளுடைய மயக்கபுத்தி இருக்கிறபடி.

 ‘நன்று; அவர்கள் செவ்வே இடுவார் களோ?’ என்னில், அதுவும் அன்றிக்கே, மசகப் பிராயராய் இருப்பவர்கள் தரிப்பார்களே அன்றோ? (ஶாதாதப ஸ்மிருதியில் பிராயஶ்சித்தப் பிரகரணத்தில் கூறப் பட்டுள்ளதைத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார், ‘பிராயஶ்சித்த’ என்று தொடங்கி. ‘ப்ரஹ்மத்தி முதலான’ என்றது, திருடுதல், குருவின் மனைவியைப் புணர்தல், கள்குடித்தல் முதலிய பாவங்களை. (’’ஸ்தேயம் க்ருத்வா கு3ருதா3ரம்ஶ்ச க3த்வா ஸுராம் பீத்வா ப்ரஹ்மஹத்யாஞ்ச க்ருத்வா I ப4ஸ்மச்ச2ந்நோ ப4ஸ்மஶய்யாஶயாநோ ருத்3ரத்4யாயீமுச்யதே ஸர்வபாபை: II - ஶாதாதப ஸ்மிருதி)

மஹாபாவங்களைச் செய்தவர்கள் கழுவாய் நிமித்தம் செய்ய வேண்டியவை என்றதனால். ‘ஏனையோர் அவற்றைச் ‘செய்யலாகாது’, என்பது கருத்து. அதனைத் திருவுள்ளம் பற்றியே தாமஸ புருஷர்கள்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘பொடிபட்டுக் கிடக்கிறது’ என்றது, சிலேடை: தூளியாய்க்கிடக்கிறது என்பதும், நீக்கப்பட்டுக் கிடக்கிறது என்பதும் பொருள். ‘அதுவுமன்றிக்கே’ என்றது. முறைப்படி குறுக்காக இடுதலுமன்றிக்கே’ என்றபடி, ‘மசகப்பிராயராயிருப்பவர்கள்’ என்றது, அறிவில்லாவர் களைக் குறித்தபடி. ‘நீற்றைத் திரியக் புண்டரமாகவும், ம்ருத்தை ஊர்த்துவ புண்டரமாகவும் தரிக்கவேண்டும் என்று அறியாதவர்கள்,’ என்றபடி. மசகம் - கொசு).

109. ‘‘நல்வினை என்று கற்பார்கள்’’ (4-4-11)

நல்வினை என்று கற்பார்கள் - ‘தொழுது எழு என் மனனே’ (1-1-1) என்று, அநாதிகாலம் ‘பரம்பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவன், இல்லாதவன் போலே ஆகிறான்’, என்னும்படி போந்தவர் அவனைத் தொழுது உய்வு பெற்றாற்போலே காணும், இவர் பாடின திருவாய் மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய சூரிகள் உய்வு பெறும்படி. ‘‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதிகரணம் 1-1-6 ‘ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத்’ 1-1-13, என்கிற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இந்தச் சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

110. ‘‘...... மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்’’ (4-5-2)

மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் - ஸர்வேச்வரனுடைய வேறுபட்ட சிறப்பினை நினைத்துக் ‘கவிபாட’ என்று ஒருப்பட்டு, ‘வேதவாக்குகள் மனத்தால் நினைக்கவும் முடியாமல் எந்த ஆனந்த குணத்தி னின்றும் மீளுகின்றனவோ’ என்கிறபடியே மீளாமல் விஷயத்துக்கு நேரான பாசுரம் இட்டுக் கவி பாடப் பெற்றேன். ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்றுஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்.

111. ‘‘வீவு இல் இன்பம்’’ (4-5-3)

வீவு இல் இன்பம் - அழிவு இன்றிக்கே இருப்பதான ஆனந்தம். ‘அதுதான் எவ்வளவு போதும்?’ என்னில், மிக எல்லை நிகழ்ந்த - ‘இனி, இதற்கு அவ்வருகு இல்லை’ என்னும்படியான எல்லையிலே இருக்கிற. ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’’, நம் - ஆனந்த வல்லியில் பிரசித்தி.

112. ‘‘நாவியலால்இசைமாலைகளேத்தி நண்ணப் பெற்றேன்* ஆவியென்னாவியை யானறியேன் செய்தவாற்றையே’’ (4-5-4)

 ‘ஆத்மந ஆகாஶ: ஸம்பூத:- பரமாத்மாவினின்றும் ஆகாசம் உண்டாயிற்று’ என்றும், ‘ஸர்வாத்மா’ என்றும் சொல்லுகிறபடியே, ஒரு காரணமும் பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆவியாய் இருப்பவனை ‘ஆவி’ என்கிறார். தாம் மிகமிகத் தாழ்ந்தவர் என்பதனைத் தெரிவிப்பார். ஆநந்தா3த்3யதி4கரணம் 3-3-4, ‘அந்வயாதி3தி சேத் ஸ்யாத3வதா4ரணாத்’ 3-3-17, என்ற ஸூத்திரத்தின் பாஷ்ய விளக்கத்தில், ‘‘தஸ்மாத்3வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாஶஸ்ஸம்பூ4த:’’ (தை.ஆந.1-2) ‘அத்தகைய இந்தப் பரமாத்மாவிடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று’ என்று கூறப்படுகிறது.

113. ‘‘அரியது உண்டோ எனக்கு’’ (4-5-6)

‘வினை நோய்கள் கரிய’ என்கிற படியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு. இன்று தொட்டும் இனி என்றுமே - அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை, பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்’ (‘‘அத2ஸோ (அ)ப4யம்க3தோ ப4வதி’’- தை.உப. 2-7), என்பது உபநிஷதம். பின்பு ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?

114. ‘‘என்றும்’’ (4-5-7)

என்றும் - எல்லாக்காலமும். ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கு இன்றி நின்றானை - ‘அந்தப் பரமாத்மாவுக்குச் ஸமானமான பொருளும் மேலான பொருளும் காணப்படுகிறது இல்லை’, என்கிறபடியே. ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்3யதே ந தத்ஸமஶ் சாப்4யதி4கஶ்ச த்3ருஶ்யதே || பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச |’’ (ஶ்வே. 8)- அவனை ஒத்தவர்களும், மிக்கவர்களும் (எங்கும்) காணப்படவில்லை. அவனுக்கு இயல்பானதாய் பலவித மானதான சக்தியும், ஜ்ஞாநமும், பலமும், (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலான) செயல்களும் வேதங்களில் ஓதப்படுகின்றன. உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபிஸ்மர்யதே’ 3-2-17, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கப்படுகிறது.

115. ‘‘இனியாவர் நிகர் அகல் வானத்தே’’ (4-5-8)

இனி யாவர் நிகர் அகல் வானத்தே - பரமபதத்திலே தரித்து நின்று, ‘அஹமந்நம் அஹமந்நம்- நான் பரமாத்மாவுக்கு இனியன், நான் பரமாத்மாவுக்கு இனியன்’ ‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமா னுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன், என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பையுடைத்தாமத்தனையோ வேண்டுவது? தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லு விக்கும்; இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்; ‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’ (திருவிருத்தம். 79) என்னக் கடவதன்றோ?

116. ‘‘வானத்தும் வானத்துள்’’ (4-5-9)

 ‘அவனுடைய எங்கும் பரந்திருத்தல் அவதாரங்கள் முதலான எல்லா நிலைகளிலும் புக்குக் கவி சொல்ல வல்ல எனக்கு எதிர் உண்டோ?’ என்கிறார். நித்தியசூரிகள் தாங்கள் அனுபவிக்கின்ற விஷயத்தில் இனிமையின் மிகுதியாலே வேறு ஒன்று அறியார்கள்; முத்தர்கள் ‘இந்தச் சரீரத்தை நினையாமலே எங்கும் சஞ்சரிக்கிறார்கள்’ (’’நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’.காமாத்3யதி4கரணம் 3-3-16 ‘உபஸ்தி2தே(அ)தஸ்தத்3வசநாத்’ 3-3-40) என்கிறபடியே, இவ்வுலக வாழ்க்கையை நினையாமல் நிற்பர்களாகையாலே, அவர்களும் நித்தியசூரிகளோடு ஒப்பர்கள்.

‘‘உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம் கண்டுஎன்பயன்?’’ (4-6-7)

‘‘அவர்கள்’ என்றது யாரை?’ என்ன, மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரை - ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுடைய குணங்களிலே ஈடுபட் டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை. ‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் யானே’ (ப.கீ. 15-15), என்றும், ‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும், ‘எல்லாச்சொற்களுக்கும் எவரிடத் தில் தாத்பர்யமோ அந்தக் கோவிந்தனை வணங்குகிறோம்’ (வி.பு. 1-14-23), என்றும் சொல்லுகிறபடியே, வேத தாத்பர்யம் கைப்பட்டிருக்கு மவர்கள் ஆதலின், ‘வேதம் வல்லார்’, என்கிறது. ‘‘ஸர்வே வேதா3 யத்பத3மாநந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி I யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீமி ஓமித்யேதத்II’’ (கடோ. 2-15) - ‘எந்த இடத்தை, எல்லா வேதங்களும் அறிவிக்கின்றனவோ, எதைக் குறித்து எளிமையான தவசீலர்கள் பேசுகிறார்களோ, எதை விரும்பி ப்ரஹ்மச்சர்யத்தை கடைபிடிக்கிறார்களோ’, ஆநுமாநிகாதி4 கரணம் 1-4-1 , ‘த்ரயாணாமேவ சைவமுபந் யாஸ:ப்ரஶ்நஶ்ச’ 1-4-6, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

117. ‘‘என்றுஎன்று நள் இராவும்’’ (4-7-2)

நள் இராவும் - ‘நள்’ என்று நடுவாதல்; செறிவாதல், இரவில் மற்றைய பொருள்களின் ஒலி மாறினால் வருவதொரு ஒலியுண்டு, அந்த ஒலியாதல். எல்லா வற்றாலும் பலித்த பொருள், ‘நடு இரவு’ என்பது, ‘இந்தப் பூதங்கள் தூங்குகிற காலத்தில் எவன் விழித்துக்கொண்டு இருக்கிறானோ’ என்கிறபடியே, ‘நீ உணர்ந்து கூப்பிடும்படி செய்வதே!’ என்பார், ‘நள்ளிராவும்’ என்கிறார். ‘‘ய ஏஷு ஸுப்தேஷு ஜாக3ர்த்தி காமம்காமம் புருஷோ நிர்மிமாண:’’ (கடோ. 5-8) - (இவ்விந்திரியங்கள் தூங்குகையில் எந்த ஜீவன் விழித்திருந்து தான் விரும்பும் பொருள்களை ஸ்ருஷ்டிக்கிறானோ). ஸந்த்4யாதி4கரணம் 3-2-1 , ‘நிர்மாதா ரம் சைகே புத்ராத3யஶ்ச’ - 3-2-2, என்று ஸூத்திர பாஷ்யத்தில் விளக்கம் பெறுகிறது.

118. ‘‘நான் இங்கு அலற்றுவது என்’’ (4-7-4)

நான் இங்கு அலற்றுவது என் - அவனுக்கு அடியிட ஒண்ணாத நிலத்திலே இருந்து கூப்பிடுகிற இதற்கு என்ன பிரயோசனம் உண்டு? பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனை - ‘பூமியில் கால் இடாதவர்களாலேதான் காணப்போமோ?’ என்பார், ‘வானோர்’ என்கிறார். பிரமன் முதலானோர்கட்கும் உபாசிக்குந்தொழில் உண்டு; ஆதலின், ‘பேணி’ என்கிறார். தே3வதாதி4கரணம் 1-3-7 , ‘தது3பர்யபி பா3த3ராயண: ஸம்ப4வாத்’ 1-3-25, -மனிதருக்கு மேலான தேவாதிகளுக்கும் உபாஸன முண்டு. (அல்லது) ப்ரஹ்மோ பாஸனமாவது, மேலுள்ளார்க்கும் உண்டு. கூடுமாகையால்’ என்பர் பாதராயணர் என்பது ஸூத்திரத்தின் பொருளாகும்.

119. ‘‘ .... பாடி ஆட’’ (4-7-8)

பாடி ஆட - பிரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகிப்பாடுவது ஆடுவதாம்படி. ‘இதுவாயின், முன்பே நாம் செய்வதாக இருந்தது ஒன்றே அன்றோ? இந்தச் சரீர சம்பந்தம் அற்றால், ஒரு தேச விசேஷத்தில் கொண்டுபோய், ‘மேலே சொல்லப் போகிற ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்னும்படி பண்ணுகிறோம்’, என்ன, ‘அதுவோ நான் விரும்புகிறது? அன்று; இங்கேயே,’ என்கிறார் மேல்: ‘‘ஏதத்ஸாமகா3யந்நாஸ்தே’’ (தை.ப்4ரு. 10) - ‘மேல் சொல்லப்போகிற ஸாமத்தைப் பாடிக்கொண்டு இருக்கிறான்’ என்பது ச்ருதி வாக்யமாகும்.

120. ‘‘கிளர் ஒளியால் குறை இல்லா அரி உருவாய்’’ (4-8-7)

கிளர் ஒளியால் குறை இல்லா அரி உருவாய் - கிளர்ந்த ஒளியால் குறைவின்றிக்கே இருக்கின்ற நரசிம்ஹமாய். ‘ஜ்வலந்தம் - பிரகாசித்துக்கொண்டிருப்பது’ என்கிற மந்திரார்த்தம் தோற்றச் சொல்லுகிறது.

‘‘உக்3ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுக2ம் I ந்ருஸிம்ஹம் பீ4ஷணம் ப4த்3ரம் ம்ருத்யோர்ம்ருத்யும் நமாம்யஹம் II (ந்ருஸிம்ஹதாபிந்யுபநிஷத்)

(ஸிம்ஹஸ்வரூபத்தை உடைத்தாயிருப்பதால்), உக்ரனாயும், வீரனாயும், (மேலானவனாயும், ஸர்வவ்யாபியு மாய் இருப்பதால்) மஹாவிஷ்ணுவாயும், ஜ்வலிக்குமவ னாயும், எல்லாவிடங்களிலும் முகத்தை உடையவனாயும், ந்ருஸிம்ஹ ரூபியாகவும், பயங்கரனாகவும், மங்களகர னாகவும், ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பவனாகவுமுள்ள உன்னை நான் நமஸ்கரிக்கிறேன்.

121. ‘‘வயிரம் சேர் பிறப்பு அறுத்து’’ (4-8-11)

வயிரம் சேர் பிறப்பு அறுத்து - இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக்கிடக்கிற பிறவியினைக் கழித்து. வைகுந்தம் நண்ணுவரே - ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, ‘அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ ‘‘ஸ ஏகதா4 ப4வதி த்ரிதா4 ப4வதிபஞ்சதா4 ஸப்ததா4’’ (சாந். 7-26-2) - ‘அந்த முக்தாத்மா ஒருபடியாகிறான்; மூன்று படியாகிறான்; ஐந்து படியாகிறான்; ஏழுபடியாகிறான்’. அபா4வாதி4கரணம் 4-4-5, ‘பா4வம் ஜைமிநிர்விகல்பாமநநாத்’ 4-4-11, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் சொல்லுகிறபடியே, அவனுடைய நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் நினைவின் வண்ணமும் பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம்படியான தேசத்திலே போய்ப் புகப்பெறுவர்.

122.
காட்டிநீகரத்து உமிழும் நிலம்நீர் தீ விசும்புகால்
ஈட்டிநீ வைத்து அமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்
கோட்டையினிற் கழித்துஎனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே? (4-9-8)

‘நீ உலகத்தை உண்டாக்கிக் காட்டிப் பிரளயம் வந்தவாறே உண்டு மறைத்துப் பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்த நிலமும் நீரும் தீயும் ஆகாயமும் காற்றும் ஆகிய ஐந்து பூதங்களையும் சேர்த்துச் சமைத்து வைத்த, தேவர்கள் வாழ்கின்ற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் நீக்கி என்னை உன்னுடைய மிகுந்த ஒளியோடு கூடிய பரமபதத்திலே பெறுதற்கு அரிதான திருவடிகளிலே எப்பொழுது கட்டுவாய்?’ என்கிறார்.

எட்டாம்பாட்டு. ‘நாமே செய்யப் புக, நீர் ‘வேண்டா’ என்றவாறே அன்றோ தவிர்ந்தது? இதற்கு நம்மைக் காற்கட்ட வேண்டுமோ?’ - என்ன, ‘செய்யக் கடவதாகில், அது செய்வது என்று?’ என்கிறார். ‘எம்மா வீட்டுத் திறமும் செப்பம்’ (2-9, பதிகம்) என்றாரே முன்னர்.

காட்டி - முன்பு தானே தான் ஆம்படி இவற்றை அடையத் தன் பக்கலிலே சேர்த்துச் ‘ஸத்’ என்னும் நிலையினதான உலகத்தை, ‘பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்’, (’’தா4தா யதா2பூர்வமகல்பயத்’’-தை.நா.1- சதுர்முகன் முன்காலத்திலிருந்தபடியே ஸ்ருஷ்டித்தான்) என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி. ‘காட்டி’ என்ற சொற்போக்கால், ‘ஐந்திரஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பது போதரும்.

123. ‘‘ஒன்றும்தேவும்’’ (4-10, பதிகம்) - ப்ரவேசம்

‘ஸாத்விக புராணங்கள்’ என்று விசேஷித்துக் கூறுவ தற்குக் கருத்து என்?’ என்னில், (’புராணங்களுக்கு முக்குண பேதங்கள், ஸத்வம் முதலான குணங்களையுடையவர் களாய்க் கொண்டு அவற்றைச் சொன்னவர்கள் காரணமாக வேயன்றோ வந்தன? எல்லாப் புராணங் களையும் கூறியவன் பிரமன் ஒருவனுமேயாய் இருக்க, இங்ஙனம் விசேஷிக்க வேண்டுமோ?’ என்பது.) புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே சென்று இவ்விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்; (’புராணங்கள் எல்லாம் பிரமனாலே கூறப்பட்டனவாகில் ஸ்ரீவிஷ்ணுபுராணம் முதலான புராணங்களுக்குப் பராசரர் தொடக்கமான மஹரிஷி களைக் கர்த்தாக்களாகச் சொல்லக்கூடாதே?’ என்ற வினாவைத் திருவுள்ளம்பற்றி, அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘புராணகர்த்தாக்கள்’ என்று தொடங்கி. ‘இவ்விரண்டு காதைகளை’ என்றது, ‘இரண்டு மூன்று வார்த்தைகளை’ என்றபடி. ‘தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்’ என்றது,

‘ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு குணம் மேலோங்கி நிற்கும் பிரமனுக்கு; அந்தப் பிரமனும், அந்த அந்தக் குணத்திற்குத் தகுதியாகக் கூறுவான்; அவன் கூறியதற்குத் தகுதியாக மஹரிஷிகளும் புராணங்கள் செய்தார்கள்.)

அந்தப் பிரமனும் (’பகவானால் படைக்கப் பட்டவனாய், அவனாலேயே ஞானத்தை அடைந்த வனான பிரமனுக்கும் முக்குணங்களுக்குக் கட்டுப் பட்டிருக்கும் தன்மை உண்டோ?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘அந்தப் பிரமனும்’ என்று தொடங்கி.) ‘ஸ்ரீமந்நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்; அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே, ஸர்வேச்வரனாலே படைக்கப்பட்டவனாய் அவனாலே ஞானத்தை யடைந்த வனுமாய் இருக்கச்செய்தேயும், ‘‘யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம். யோவை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ (ச்வே. 6-18) - ‘எவனொருவன் சதுர்முக ப்ரஹ்மனை முன் படைத்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறானோ’ என்னும் ப்ரமாணத்தால், ஆரம்பத்தில் முன்பே இருந்த வேதத்தை நினைவு கூர்ந்து, அதை நான்முக ப்ரஹ்மனுக்கு ஈச்வரன் உபதேசித்தான்’ இந்தக் கருத்தை ஸ்ரீபாஷ்யகாரர், கார்யாதி4கரணம் 4-3-5 ‘ஸாமீப் யாத்து தத்3வ்யபதே3ஶ:’ 4-3-8, என்ற ஸூத்திர விரிவுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும் முக்காலங்களையும் உணர்ந்தவரும் தாமரை மலரில் உதித்தவருமான ப்ரஹ்மாவானவர் ‘உள்ளவாறு சொல்லுகிறேன், என்று சொன்னார்,’ என்கிறபடியே, முனிவர்களைப் பார்த்து உபதேசிக்கிற விடத்திலே, ‘நான் முக்குணங்களுக்கும் வசப்பட்டவனாய் இருப்பேன்; தமோ குணம் மேலிட்ட போதும் ரஜோகுணம் மேலிட்டபோதும் சொன்னவற்றைப் போகட்டு, ஸத்வகுணம் மேலிட்ட சமயத்தில் சொன்னவற்றை எடுத்துக் கொள்ளுங்கோள்,’ என்றானே அன்றோ? (ஸ்ரீவிஷ்ணு புராணம்1.2:10)

இனி, ‘தாமஸ கல்பங்களிலே அக்நி, சிவன் இவர்களு டைய மாஹாத்மியமானது பரக்கச் சொல்லப்படுகிறது; ராஜஸ கல்பங்களிலே பிரமனுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப்படுவதை அறிகிறார்கள்; ஸாத்விக கல்பங்களிலே விஷ்ணுவினுடைய மாஹாத்மியம் அதிகமாகச் சொல்லப் படுகிறது’ என்னாநின்றதே அன்றோ?

(’ஸத்வம் முதலான குணங்கள் மேலோங்கி இருக்கும் சமயத்தில் சொல்லப்பட்டவை யாவை? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘தாமஸ கல்பங்களிலே’ என்று தொடங்கி. இது, மாத்ஸ்ய புராணம். ‘தாமஸ கல்பம்’ என்றது, ‘தமோகுணம் மேலோங்கி யிருக்கும் தினத்தில்’ என்றபடி. கல்பம் - பிரமனுடைய ஒரு நாள். ராஜஸ கல்பம், ஸாத்விக கல்பம் என்பனவற்றையும் இங்ஙனமே கொள்க. ‘என்னா நின்றதேயன்றோ?’ என்றது, ‘மாத்ஸ்யபுராணம் இங்ஙனம் கூறுகின்றதேயன்றோ?’ என்றபடி.’) ஆகையாலே, குண பேதங்களாலே புருஷ பேதங்களைக் கொண்டு அவ்வழியாலே புராணபேதம் கொள்ளலாய் இருந்தது. ஆகையாலே, ‘ஸாத்விக புராணங் களாலே அறியப்படுகின்ற வேதம்’ என்று விசேஷித்துச் சொல்ல வேண்டியிருந்தது. (’குணபேதங் களாலே புருஷ பேதம் கொண்டு’ என்றது, ‘ஒருவனே ஒவ்வொரு குணத்தோடு கூடியிருக்கின்ற கால வேற்றுமையால், அந்த அந்தக் குணத்தையுடையவனாகக் கருதப்படுகின்ற வேற்றுமை யால்’ என்றபடி.) ஆதலால், ஸாத்விக புராணங் களாலே விரிக்கப்படுகின்ற வேதமே பிரமாணமாகக் கொள்ள வேண்டி இருந்தது,’ என்க.

அந்த வேதத்துக்கு மூன்று குணங்களால் வருகின்ற குற்றம் இல்லையேயாகிலும், இரு வகைப்பட்ட உலகங் களோடு கூடின ஸர்வேச்வரனை விளக்கிப் பேச வந்ததாகை யாலே, ‘மூன்று குணங்களையுமுடைய மக்களை விஷயமாக உடையன வேதங்கள்’ என்கிறபடியே, முக்குணங்களையும் உடையவர்களாய் இருக்கின்ற மக்களை விஷயமாக வுடையதாய் அவர்களுக்கு நலம் சொல்லப் போந்தது ஆகையாலே, அவர்களுடைய குணங்கட்குத் தகுதியாக நலம் சொல்லுமது உண்டாய் இருக்கும் வேதத்துக்கும்.

(’’ஸாத்விக புராணங்களாலே விரிக்கப் படுகின்ற வேதம்’ என்பது என்? வேதம் புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே, முக்குணங்களால் வருகின்ற தோஷம் இல்லையே அதற்கு?’ எனின், விடை அருளிச் செய்கிறார், ‘அந்த வேதத்துக்கு’ என்று தொடங்கி. ‘மூன்று குணங்களையுமுடைய’ என்று தொடங்கும் பொருளையுடைய சுலோகம், ‘ஸ்ரீபகவத் கீதை. 2:45. ‘இந்த உதரத் தெரிப்பு, த்ரைகுண்ய விஷயமான வற்றுக்குப் பிரகாசகம். வத்சலையான மாதா, பிள்ளை பேழ்கணியாமல் மண் தின்ன விட்டுப் பிரதி ஔஷதம் இடுமா போலே எவ்வுயிர்க்கும் தாய் இருக்கும் வண்ணமான இவனும், ருசிக்கு ஈடாகப் பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே,’ என்னும் ஆசார்ய ஹிருதய வாக்கியங்கள் 13,14, இங்கு கருத்தில் கொள்ளத்தக்கவை.)

அது அங்ஙனம் சொல்லிற்றேயாகிலும், (’வேதம் அவர்களுடைய குணங்களுக்குத் தகுதியாக ஹிதம் சொல்லிப் போந்ததாகில், அறிவுள்ளவனுக்கு உபாதேயம் -ஏற்றுக் கொள்ளத் தக்கது- யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அது அங்ஙனம்’ என்று தொடங்கி) ‘எல்லா இடங்களிலும் நிறைந்த தண்ணீரில் வேட்கை யுடையவனுக்கு எவ்வளவு நீர் பிரயோஜனப் படுகிறதோ, அறிந்த பிராமணனுக்கு எல்லா வேதங்களிலும் அவ்வளவே பிரயோஜனப்படுகின்றது,’ என்கிறபடியே, (ஸ்ரீபகவத்கீதை, 2:46). ஆறு பெருகி ஓடாநின்றால், நீர் வேட்கையால் வருந்தின ஒருவன் தன் விடாய் தீருகைக்கு வேண்டுவது எடுத்துக்கொள்வானே அல்லது. ஆற்று நீரை அடங்கலும் வற்றவிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே யன்றோ அவனுக்கு? அப்படியே, முமுக்ஷுவானவன் இந்த வேதத்தில் தனக்குக் கொள்ள வேண்டியதான அம்சத்தை யன்றோ அறிய வேண்டுவது?

இனி, அந்த வேதந்தான் ‘பூர்வபாகம்’ என்றும், ‘உத்தரபாகம்’ என்றும் இரண்டு வழிகளாலே பிரிவுண்ணக் கடவதாய், அதில் பூர்வபாகமானது, ஆராதனத்தின் தன்மையைச் சொல்லியும், ஸ்வர்க்கம் முதலான பேறு களையும் அவற்றையடைதற்குரிய ஸாதனம் முதலான வற்றையும் சொல்லியும் அவற்றிலே நின்று பிறக்குமதாய் இருக்கும்; இனி, உத்தர பாகமானது, ஸர்வேச்வரனுடைய ஸ்வரூப ரூப குணங்களைப் பரக்க நின்று விளக்கிப் பேசும். (’இனி, பற்றத் தகுந்ததையும், விடத்தக்கவைகளையும் அறுதி யிடுவது எது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இனி, இந்த வேதந்தான்’ என்று தொடங்கி.

‘‘ஆதெ3ள வேதா3: ப்ரமாணம் ஸ்மிருதி: உபகுருதே ஸேதிஹாஸை: புராணை: ந்யாயை: ஸார்த்த4ம் த்வத்த3ர்ச்சாவிதி4முபரி பரிக்ஷீயதே பூர்வபா4க3:, ஊர்த்4வோ பா4க3ஸ் த்வதீ3ஹாகு3ண விப4வ பரிஜ்ஞாபநைஸ் த்வத்பதா3ப்தௌ வேத்3யோ வேதை3ஶ் ச ஸர்வைரஹமிதி ப4க3வந்! ஸ்வேந ச வ்யாசகர்த்த2’’ (ஸ்ரீரங்க.ஸ்த. 2-19) - ‘பகவானே! வேதங்களானவை முதலிலே வேறொரு பிரமாணத்தை விரும்பாமல் தாமாகவே பிரமாணமாகின்றன: மநு முதலான ஸ்மிருதிகளா னவை, இதிஹாசங்களோடு கூடின புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்ஸைகளோடும் கூடி, அந்த வேதங்களுக்குப் பொருள் விவரணம் செய்தலாகிற உபகாரத்தைச் செய்கின்றன; அந்த வேதத்தில் கர்ம காண்டம் எனப்படுகிற பூர்வபாகமானது, தேவரீருடைய திருவாராதன முறைமையைச் சொல்லும் வகையில் முடிகின்றது; ப்ரஹ்மகாண்டம் எனப்படுகின்ற உபநிஷத பாகமானது, தேவரீருடைய செயல்கள், குணங்கள், விபூதிகள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது; ‘எல்லா வேதங் களாலும் அறியக்கூடியவன் நானே,’ என்று தேவரீர் அருளிச் செய்ததும் உண்டேயன்றோ?’’ என்பது ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் பட்டரின் திருவாக்காகும்

‘இனி, வணங்குவதற்குரிய பரம்பொருள் யாது?’ என்றால், உலகத்தைப் படைத்தல் முதலிய முத்தொழில் கட்கும் காரணமாய் இருக்கும் பொருள் எதுவோ, அதுவே, வணங்கத்தக்க பொருள் என்று காரண வாக்கியங்கள் ஒருங்க விட்டு வைத்தன. (’பொருளை அறுதியிடுவது, லக்ஷணத் தாலும் பிரமாணத்தாலும்’ என்கிற ந்யாயத்தாலே, மேலே பிரமாணத்தை அறுதியிட்டார். இனிமேல் அந்தப் பரம சேதனனுடைய லக்ஷண விஷய சம்பந்தமான கேள்வியை திரும்பச் சொல்லி அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘இனி’ வணங்குவதற்குரிய’ என்று தொடங்கி.) ‘எங்ஙனே?’ என்னில்,

‘எதனிடத்திலிருந்து இந்தப் பொருள்கள் உண்டா கின்றனவோ, எதனால் உண்டான பொருள்கள் பிழைத்திருக் கின்றனவோ, நாசத்தையடைந்து எதனிடத்தில் லயப்படுகின் றனவோ, அதனைத் தியானம் பண்ணுவாயாக; அதுதான் பரம்பொருள்,’ (‘‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபி4 ஸம்விஶந்தி தத்3விஜிஜ்ஞாஸஸ்வ தத்3ப்3ரஹ்ம’’ (தை.ப்ருகு. 1-1) - எதனிடமிருந்து இந்த பூதங்கள் உண்டாகின்றனவோ, உண்டானவை எதனால் வாழ்கின்றனவோ, ப்ரளய காலத்தில் எதனிடம் லயமடைகின்றனவோ அதுவே ப்ரஹ்மம்;-

ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6 ‘ஜக3த்3 வ்யாபார வர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ - 4-4-17, என்று கொண்டு, மற்றைப் பொருள்கட்குத் தியானம் பண்ணத் தகாததாகுகையை முன்னாக உலகத்திற்குக் காரணமாயுள்ள பொருளுக்குத் தியானம் பண்ணத் தகுந்ததாகுகையை விதித்துக் கொண்டு நின்றது; - (’எல்லா வாக்கியங்களும் ஏவகாரத்தோடு கூடியவை,’ என்கிற நியாயத்தாலே, இங்கு, ‘தத்3விஜிஜ்ஞாஸஸ்வ’ என்ற தொடர் மொழியை ‘ததே3வ விஜிஜ்ஞாஸஸ்வ’ என்று ஏவகாரத்தோடு கூட்டினால், ‘அந்தப் பொருளையே தியானம் பண்ணுவாய்’ என்ற பொருள் போதரும்; அவ்வாறு போதரவே, ‘மற்றைப் பொருள்கள் தியானம் செய்யத் தக்கவையல்ல’ என்ற பொருளும் கிடைக்குமே யன்றோ? அதனைத் திருவுள்ளம் பற்றியே, ‘மற்றைப் பொருள்கட்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.) ‘காரணப் பொருளே தியானம் செய்வதற்குரியது,’ என்னக்கடவ தன்றோ?, ‘‘காரணம் து த்4யேய:’’ (அதர்வ.உப.3) ‘காரணவஸ்துவே த்யாநம் செய்யத் தகுந்தது; கார்யவஸ்து த்யாநத்திற்கு தகுதியற்றது’ என்பது ஏற்படுகின்றபடியாலும் ‘அப்படிப்பட்ட பரமமான காரணவஸ்துவும் நாராயணனே; என்று உபநிஷத் கூறுவதால்.

தியானம் செய்தற்குரிய அந்தப் பொருளை, ‘ஸோமபானம் செய்வதற்குரிய ச்வேதகேதுவே! இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘ஸத்’ என்று சொல்லக் கூடியதாய் இருந்தது,’ ‘‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3 விதீயம்’’ (சாந். 6-2-1) - ‘மென்மையானவனே! ‘ஸத்’ என்பது மட்டுமே முதலில் இருந்தது, தனியாக இருந்தது.

இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை’ (வியத3தி4 கரணம் 2-3-1ஶப்3தே3ப்4ய: - 2-3-6), என்று ‘ஸத்’ என்ற சொல்லால் சொல்லி, வேறு சாகைகளிலே நின்று, ‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ப்ரஹ்மம் என்ற ஒன்றேயாய் இருந்தது,’ (‘‘ப்3ரஹ்ம வா இத3மேகமேவாக்3ர ஆஸீத்’’-ப்ருஹ.3-4-11) ‘ப்ரஹ்மம் ஒன்றாகவே இவ்வுலகம் ப்ரளய காலத்தில் இருந்தது’, என்று ப்ரஹ்ம ஶப்தத்தாலே சொல்லி, அந்த ப்ரஹ்ம ஶப்தந்தானும் அநேக பொருள்களைக் கூறுமாகையாலே, (’அநேக பொருள்களைக் கூறுமாகையாலே’ என்றது, ‘ப்ரஹ்மம் என்ற சொல், வேதம் முதலிய பொருள்களைக் காட்டுமாகையாலே’ என்றபடி.) ‘இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ஆத்மா என்ற ஒன்றேயாய் இருந்தது,’ ‘ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீத்’’ (ஐதரேய 1-1) ‘ப்ரளய காலத்தில் இவ்வுலகம் (நாமரூபமற்ற) ஆத்மா ஒன்றாகவேயிருந்தது’; என்று ஆத்ம என்ற சொல்லாலே சொல்லி, அந்த ஆத்ம ஶப்தமும் பலவிடங்களிலும் ஒட்டிக் கொள்ளலா யிருக்கையாலே, (’அந்த ஆத்ம சப்தமும் பல இடங்களிலும் ஒட்டிக் கொள்ளலாயிருக்கையாலே’ என்றது, ஆத்மா என்ற சொல்லுக்கு ஜீவாத்மா, பரமாத்மா முதலிய பல பொருள்கள் கூறப்படுவதாலே.)

‘நாராயணன் ஒருவனே இருந்தான்,’ என்று நாராயணன் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகச் சொல்லி நின்றது. ‘‘ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நேஶாந: .............. ஸ ஏகாகீ ந ரமேத, தஸ்ய த்4யாநாந் தஸ்த2ஸ்ய ............. த3ஶேந்த்3ரியாணி’’ (மஹோபநிஷத்.1) (நாராயணன் ஒருவனே (ப்ரளய காலத்தில்) இருந்தான்; பிரமன், சிவன் முதலான சேதந அசேதனங்கள் எதுவு மில்லை; அவன் ஒருவனாயிருந்து இன்புறவில்லை; அவன் ஸங்கல்பித்த பிறகு இந்திரியங்கள் முதலான அனைத்தும் உண்டாயின)

‘ஆனால், பின்னர் (ஆனால் பின்னர்’ என்றது, ‘நாராயணனே காரணனும் தியானிக்கத் தக்கவனு மானால்’ என்றபடி.) ஸத்தும் இல்லை; அஸத்தும் இல்லை; சிவன் ஒருவனே இருந்தான்,’ என்றும், (‘ந ஸத் நச அஸத் ஶிவ ஏவ கேவல:’ - என்பது ஶ்வேதாஶ்வதரம் 4-18. ‘ஸத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின சித்தினை ‘அஸத்’ என்றது, நாமரூபங்களோடு கூடின அசித்தினை.) ‘ஶம்பு: ஆகாஶ மத்யே த்யேய:’ என்றும் (’ஶம்பு: ஆகாச மத்யே த்யேய: - என்பது, ஶ்வேதாஶ்வதரம்.) காரணனாய் உள்ள தன்மையையும், தியானம் செய்யத் தகுந்தவனாயுள்ள தன்மையையும் சிவன் முதலானவர்களுக்கு விதியாநின்றதே; அவை செய்வன என்?’ என்னில், அப்பெயர்களால் அவர்கள் உத்தேச்யர்களாகச் சொல்லப் பட்டார்களேயாகிலும், ஶுத்தி குணத்தையுடையவன், ஸுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அப்பெயர்களும் (’அவர்கள் உத்தேச்யர் களாகச் சொல்லப்பட்டார்களேயாகிலும்’ என்றதனால், ஸ்வபக்ஷத்தால் அவர்கள் உத்தேச்யராகச் சொல்லக்கூடாது என்கை. ‘யாங்ஙனம்?’ எனின், ‘நாராயணாத் ப்3ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்3ரோ ஜாயதே’ (நாராயண ஸூக்தம்), ‘த்ரயக்ஷ: சூலபாணி: புருஷோ ஜாயதே’ என்பனவற்றால் பிறப்பும், ‘ந ப்ரஹ்மாநேஶாநோ’ என்றதனால் அழிவும், சிவனுக்குச் சொல்லுகையாலே ‘சிவ ஏவ கேவலம்’ என்ற காரணத்துவம் கூடாது.

‘சதபதத்திலே அஷ்டமூர்த்திப் பிராஹ்மணத்திலே, ‘பூ4தாநாம்பதி: ஸம்வத்ஸர உஷஸி’ என்பது முதலாகத் தொடங்கப்படும் வாக்கியங்களால், நான்முகனால் படைக்கப்படுதலும், பாவங்கள் நீக்கப்படுதலும், பெயர் வைக்கப்படுதலும் முதலாயின சிவனுக்குச் சொல்லப் படுதலால், தியானிக்கப்படுதலும் கூடாது,’ என்றபடி. ஆயின், ‘ப்3ரஹ்ம விஷ்ணு ருத்3ர இந்த்3ரா: தே ஸர்வே ஸம்ப்ரஸூயந்தே’ என்பதனால், விஷ்ணுவுக்கும் பிறப்புச் சொல்லப்படுகிறதே?’ எனின், அது, அநுவாத (திரும்பச் சொல்லுகை) ரூபமாகையாலே, ‘அஜாயமாந:’ முதலிய விதி வாக்கியங்களுக்குத் தகுதியாக, கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாயும் கர்ம பலன்களை அநுபவிக்காத வனாயும் தன் இச்சையாலே அவதரிக்கின்ற ஸர்வேச்வர னுடைய அவதாரங்களைக் குறிக்கின்றது. ‘தஸ்யதீ4ரா:’ என்பது முதலான வேத வாக்யங்கள் இங்கே கருத்தில் கொள்ளத்தக்கவை. ‘சிவன் முதலியோர்கட்கு இத்தகைய விதி வாக்கியங்கள் இல்லாமையாலே, பிறப்பு, கர்மங்காரணமாய் வந்தது என்றே கோடல் வேண்டும்,’ என்க.) விசேஷ்யமான நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகிறவன் பக்கலிலே சென்று சேரும். (’விசேஷ்யமான’ என்றது; ‘சிவனுக்குப் பிரகாரியாக இருக்கும் தன்மையால் விசேஷ்யமான’ என்றபடி.)

‘சம்பு, சிவன் முதலிய பெயர்களை நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனுக்கு விசேஷணமாக்கிக் கூறியதுபோன்று, நாராயணன் என்ற இந்தப் பெயரையும், சம்பு, சிவன் முதலிய பெயர்களால் சொல்லப்படுகின்ற வனுக்கு விசேஷணமாக்கிக் கூறினாலோ?’ என்னில், (’சொல்லிற்றேயாகிலும்’ என்றது, ‘உடன்பட்டு மறுத்தல்’ என்னும் வாதமாகையாலே, பிரதானமான அவயவ சத்தியாலே நேராகப் பாவனையே காட்டும் என்ற பக்ஷத்திலே சங்கிக்கிறார், ‘சம்பு சிவன்’ என்று தொடங்கி.)

சுத்தி குணத்தை உடையவன், சுகத்தைக் கொடுக்கிறவன் என்ற காரணங்களால் அவற்றை இங்கே சேர்க்கலாம்; நாராயணன் என்னும் பெயர், காரண இடுகுறிப் பெயராகையாலே, வேறு பொருள்கட்குச் சேர்க்க ஒண்ணாது. (’சுத்தி குணத்தையுடையவன்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து யாது?’ என்னில், ‘சிவன், சம்பு முதலிய பெயர்கள், வேறு பொருள்களிலும் இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றன; ஆதலால், அப்பெயர்களை இங்குச் சேர்க்கலாம். ‘நாராயணன்’ என்ற பெயர், வேறு பொருள்களுக்குப் பெயராக வழங்காமையின், அதனை வேறு பொருளுக்குச் சேர்க்க ஒண்ணாதே!’’ என்பது. இப்பெயர், காரண இடுகுறிப்பெயர் என்க. ‘ஆயின், சிவன், சம்பு முதலிய பெயர்களும் காரண இடுகுறிப்பெயர்களேயன்றோ?’ எனின், ‘அவை, சாதாரண காரண இடுகுறிப் பெயர்கள்; இது, அசாதாரண காரண இடுகுறிப் பெயர்,’ என்க. இதனை, ‘அத்யந்த யோகரூடி’ என்பர். ‘பங்கஜம்’ என்னும் பெயரைப் போன்று கொள்க.)

‘நன்று; சிலர்க்கே உரியனவாய் அவர்கட்கே முடிவு செய்யப்பட்டனவாய் உள்ள பெயர்களை வேறு ஒருவர் பக்கலிலே கொடுபோய்ப் சேர்க்கும்படி எங்ஙனே?’ என்னில், (இப்படி இன்றிக்கே பிரஸித்தியின் மிகுதியைக் கொண்டு, சம்பு சிவன் முதலிய பெயர்களைச் சிவனுக்கே வாசகம் என்று கொள்ளுமளவில், அவர்களுடைய பக்ஷத்தைத் தொடங்குகிறார், ‘சிலர்க்கேயுரியனவாய்’ என்று. அதனைப் பரிஹரிக் கிறார், ‘இந்திரன், பிராணன்’ என்று தொடங்கி.) இந்திரன், பிராணன், ஆகாசம் என்னும் இப்பெயர்கள், அவ்வப் பொருள்கள் அளவில் முடிந்து நில்லாது, அவற்றிற்கு உரிய நேர்ப்பொருள்களில் சென்று முடிந்து நிற்கின்றன அல்லவோ? ‘யாங்ஙனம்?’ எனின், ‘இந்திரன் என்றால், இப்பெயர் உண்டாக்கப்பட்ட இந்த இந்திரனைக் காட்டுதலோடு அமையாது, ஸர்வேச்வரன் பக்கலிலே சென்று முடிவு பெறுதலைப் போலவும், பிராணன் என்னும் பெயர், ஐவகைப்பட்ட பிராணன்களில் ஒன்றனைக் காட்டுதலோடு அமையாது;

பிராணனாய் இருக்கின்ற ஸர்வேச்வரன் பக்கலிலே சென்று முடிவுறுதலைப் போலவும், ஆகாசம் என்னும் பெயர், ஐம்பெரும்பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைக் காட்டுதலோடு அமையாது, அவனளவும் காட்டுகிறாப் போலேயும், சம்பு, சிவன் முதலிய பெயர்களும், ஸர்வேச்வரன் பக்கலிலே சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க. இனித்தான் பிரகாரவாசி சப்தங்கள் பிரகாரி பர்யந்தம் சென்று தத்தம் பொருளைச் சொல்லக் கூடியன ஆகையாலும், பிரகாரியான ஸர்வேச்வரன் பக்கல் சென்று முடிந்தல்லது நில்லா,’ என்க. (’நன்று; சம்பு. சிவன் முதலிய பெயர்கள், காரணத்தை நோக்குமிடத்துப் பகவத் பரம் ஆகலாம்; ‘உமாபதி’ என்பது போன்ற அசாதாரணமான பெயர்களில் நிர்வாஹம் எப்படி?’ என்ன, ‘இனித்தான்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘பிரகாரவாசி சப்தங்கள்’ என்றது, ‘விசேஷணம்’ அல்லது, ‘சரீரம்’ என்ற பொருளைக் காட்டுகின்ற சொற்கள் என்றபடி. பிரகாரி-விசேஷ்யம்: அல்லது, சரீரி. சிவன் முதலானோர் ஸர்வேச்வரனுக்குச் சரீரமாய் உள்ளவர்கள் என்பதனை, ‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ:’ ‘ஸ: அந்தராத் அந்தரம் ப்ராவிஶத்’, ‘ப்3ரஹ்ம விஷ்ணு ஶிவாத்மிகாம்’ என்ற வாக்கியங்களால் உணர்தல் தகும்.)

‘நன்று: இனி, ‘ததோயத் உத்தரதரம்’ என்று கொண்டு சொல்லுகிற இடத்தில் செய்வது என்?’ என்னில், (’தத:’ என்ற சொல், மேலே கூறிய புருஷனைக் காட்டுகிறது என்றும், ‘உத்தரதரம்’ என்றது, அவனுக்கு மேலேயுள்ள சிவனைக் காட்டுகிறது என்றும் பிற மதத்தினர் பொருள் கூறுவர். ‘தத:’ என்பதற்கு ஹேது (காரண) பரமாகவும், ‘உத்தரதரம்’ என்பதற்கு, ஸர்வ உத்க்ருஷ்ட புருஷ பரமாகவும் பொருள் கூறவேண்டும் என்பது நமது ஸித்தாந்தம். என்றது, ‘அந்தக் காரணங்களால், புருஷோத்தமன்’ என்பதனைத் தெரிவித்தபடி என்றவாறு. தத: - ஆகையால், இதனையே அருளிச் செய்கிறார், ‘மேலே ஸர்வேச்வரனை’ என்று தொடங்கி. ‘புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி’ என்றது, ‘வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்’, ‘தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்’ என்று வருகின்ற மேல் வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.)

மேலே ஸர்வேசுவரனைப் புருஷன் என்ற பெயர்க்குரிய பொருளாகச் சொல்லி, அதற்கு மேலே ‘உத்தரதரம்’ என்னும் போது ‘புருஷோத்தமன் என்பதனைத் தெரிவித்ததாமத்தனை.

அங்ஙனங்கோடற்குக் காரணம் என்?’ என்னில், ‘எந்தப் பரம்பொருளுக்கு ஒத்தாயும் மிக்கதாயுமுள்ள பொருள் வேறு ஒன்றும் இல்லை,’ என்று கூறி வைத்து, ‘யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ(அ)ஸ்தி கஶ்சித்’’ (ச்வே.3-9) ‘‘எந்தப் பரமாத்மாவைக்காட்டிலும் மேலானது வேறொன்று இல்லையோ, எவனைக்காட்டிலும் அணுவானவனும் பெரியவனும் இல்லையோ’’; அதற்கு மேலே ஒன்று உண்டுகாண்’ என்னும்போது அறிவில்லாதவனாகச் சொன்ன வனாமத்தனை; (’ததோயத் உத்தரதரம்’ என்று கூறும் வாக்கியத்திற்குப் பிறர் கூறும் பொருளைத் திருவுள்ளம் பற்றி, ‘அதற்கு மேலே ஒன்று உண்டுகாண் என்னும்போது’ என்று அருளிச்செய்கிறார்.) முதலிலே ஓதாதவன் வார்த்தை யாமத்தனை. (’முதலிலே ஓதாதவன் வார்த்தையாமத்தனை’ என்றது, ‘யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித்’’ என்ற முன் வாக்கியத்தைப் ‘படிக்காத அறிவில்லாதவனுடைய வார்த்தை,’ என்றபடி.

‘நன்று; ‘அந்தப் பகவானிடத்தில் உள்ளே இருக்கிற பொருள் உபாசிக்கத் தக்கது,’ என்கிறதோ?’ எனில், - ‘தஸ்மிந்யத் அந்த: தத் உபாஸிதவ்யம்’ இங்கு, ‘அந்த: என்பதற்கு, ‘உள்ளே இருக்கிற வேறொரு தத்துவம்’ என்று பிறமதத்தினர் பொருள் கூறுவர். ‘உள்ளே இருக்கின்ற கல்யாண குணங்கள்’ என்பது நமது ஸித்தாந்தம். சாந்தோக்ய உபநிஷதமும் இங்ஙனமே கூறாநிற்கும்; த3ஹரோ(அ)ஸ்மிந் அந்தர ஆகா:’’ (சாந். 8-1-1) - ‘இப்பொழுது, எது, இந்த ப்ரஹ்மத்தின் நகரமோ, அங்கே ‘‘தஹரா’’ என்னும் தாமரை வசிப்பிடத்தில், தஹரா உள்ளது’ என்று தொடங்கி விரிவாகக் கூறிச் சொல்லுதலை ஆண்டுக் காணல் தகும்.) அது, வேறு பொருள் உபாசிக்கத் தக்கது என்கிறது அன்று; அந்தப் பகவானைப் போன்ற அவன் குணங்களும் தியானிக்கத் தக்கவை என்பதனைக் கூறியதாம்.

இனித் தான், உலகத்திற்குக் காரணப் பொருளாய் இருந்து கொண்டு வணங்கத் தக்கதாய் இருப்பது, என்றும் ஒக்க இருக்கும் பொருளாக வேண்டுமே அன்றோ?’ (மற்றைத் தேவர்கட்கு அபரத்துவ பூர்வமாக எம்பெருமானு டைய பரத்துவத்தைக் காட்டுவதற்கு மூன்று ஹேதுக்களை அருளிச் செய்கிறார், ‘இனித்தான்’ என்று தொடங்கி.) அதில் ஸம்ஹார காலத்தில் ‘நாராயணனே இருந்தான்’ என்று நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவன் ஒருவனுமே உளன் என்று சொல்லி, ‘பிரமனும் இல்லை, சிவனும் இல்லை’ என்று அவர்களை இல்லையாகச் சொல்லிற்றே அன்றோ?’ (‘ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நேஶாந: .............. ஸ ஏகாகீ ந ரமேத, தஸ்ய த்4யாநாந் தஸ்த2ஸ்ய ............. த3ஶேந்த்3ரியாணி’’ (மஹோபநிஷத்.1) ‘) இனி, ‘மற்றைத் தேவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு ஓர் உயர்வு உளதோ?’ என்று ஐயப்படாமைக்கு ‘ஆகாயம், பூமி இல்லை; நக்ஷத்திரங்களும் இல்லை,’ என்று அவற்றோடு ஒக்க, பிரமன், சிவன் என்னும் இவர்களையும் ஒரு சேரச் சேர்த்துவிடுகிறது. படைத்தலைக் கூறுமிடத்தும், ‘நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப் பண்ணி’(7-5-4) என்று ஒரு நீராகப் பொருந்த வைத்தன்றோ கிடக்கின்றது?

‘ஆக, இப்படிகளிலே மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வஸங்கையை அறுத்து, எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவனாய், எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய், கல்யாண குணங்கள் எல்லாவற்றையுமுடையவனாய் எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய், நாராயணன் என்ற பெயரால் சொல்லப் படுகின்றவனான ஸர்வேச்வரன் தன் பெருமைகள் எல்லாவற்றோடுங்கூடக் கண்களுக்குப் புலனாகும்படி திருநகரியிலே வந்து அண்மையிலே இருப்பவன் ஆனான்; அவனை அடைந்து எல்லாரும் பயன் பெற்றவர்களாகப் போமின்,’ என்று அருளிச் செய்கிறார். (’பிரமனை அசேதனத்தோடு சேர்த்துச் சொல்லலாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘படைத்தலைக் கூறுமிடத்தும்’ என்று தொடங்கி, ‘‘பன்மைப்படர்பொருள் ஆதுமில் பாழ்நெடுங்காலத்து, நன்மைப்புனல்பண்ணி நான்மு கனைப் பண்ணி, தன்னுள்ளே தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள்சிந்தித்தே’’. திருவாய்மொழி 7.5:4.’)

ஆக, இத்திருவாய்மொழியில் சொல்லுகிற பரத்வ நிர்ணயத்துககு உபயோகமான ப்ரமாண உபபத்திகளைத் (சொல்லும் விஷயத்தை நிலைநாட்டும் பொருட்டு) தெரிவித்த பின்பு, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற பொருளைத் தொகுத்து அருளிச் செய்கிறார், ‘ஆக, இப்படிகளாலே’ என்று தொடங்கி. இத்திருவாய்மொழியில் வருகின்ற, ‘இலிங்கத் திட்ட புராணத் தீரும் ‘ (4-10-5), ‘விளம்பும் ஆறு சமயமும்’(4-10-9), என்ற பாசுரங்களைத் திருவுள்ளம்பற்றி ‘மற்றைத் தேவர்கள்பக்கல் உண்டான பரத்வ சங்கையையறுத்து’ என்றும்,

‘நாயகன் அவனே’(4-10-4), என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாப்பொருள் களைக்காட்டிலும் உயர்ந்தவனாய்’ என்றும், ‘உலகோடு உயிர் படைத்தான்’ (4-10-1), என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லாப் பொருள்களையும் படைக்கின்றவனாய்’ என்றும், ‘வீடில் சீர்ப்புகழ்’ (4-10-2), என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘கல்யாண குணங்கள் எல்லாவற்றை யுமுடையவனாய்’ என்றும், ‘கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது’(4-10-3), என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘எல்லாப்பொருள் களையும் காப்பாற்றுகின்றவனாய்’ என்றும், ‘மறுவில் மூர்த்தியோ டொத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்க’(4-10-10), என்றதனைக் கடாக்ஷித்து, ‘எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய்’ என்றும், ‘நாராயணன் அருளே’ (4-10-8),என்றதனைக் கடாக்ஷித்து, ‘நாராயணன் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனான’ என்றும், ‘இத்தனை யும் நின்ற வண்ணம் நிற்கவே’ என்றதனைக் கடாக்ஷித்து,(4-10-10), ‘தன் பெருமைகள் எல்லா வற்றோடுங்கூட’ என்றும் அருளிச் செய்கிறார்.)

124. ‘‘அவன் மேவி உறை கோயில்’’ (4-10-2)

அவன் மேவி உறை கோயில் - அவன் பரமபதத்திலே உள் வெதுப்போடேகாணும் இருப்பது. இம்மக்கள் படுகிற துக்கத்தை நினைந்து, ‘இவை என் படுகின்றனவோ?’ என்கிற திருவுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது. ‘முக்தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே நாலு பக்கமும் சஞ்சரிக்கின்றான்,’ ‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக் கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’.காமாத்3யதி4கரணம் 3-3-16 ‘உபஸ்தி2தே(அ) தஸ்தத்3வசநாத்’ 3-3-40, என்ற ஸ்ரீபாஷ்யத்தின் மேற்கோளின்படியே, இங்குத்தைத் துக்கத்தை நினையாது ஒழிய வேண்டுவது, பண்டு துக்கத்தை யுடையவனாய் இருந்து இவ்வுலகத்தினின்றும் போனவனுக்கே அன்றோ? ‘இங்குத்தைத் துக்கத்தை நினைக்குமாகில், அனுபவிக்கிற சுகத்துக்குக் கண்ணழிவு ஆகாதோ?’ என்னும் கண்ணழிவு இல்லையே அவனுக்கு?

125.

பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும்
பிறர்க்கும்
நாயகன்அவனே* கபாலநன்மோக்கத்துக்
கண்டுகொண்மின்*
தேசமாமதிள்சூழ்ந்தழகாய
திருக்குருகூரதனுள் *
ஈசன்பாலோரவம்பறைதல்
என்னாவதுஇலிங்கியர்க்கே? (4-10-4)

வ்யோமாதீத நையாயிக வைசேஷிகர்கள் முதலான வர்கள் வந்து கிட்டினவர்களாய், ‘உலகம் உறுப்புகளோடு கூடியிருக்கையால் காரிய ரூபமாய் இராநின்றது; ஆகை யாலே, இதற்கு ஒரு கர்த்தா வேண்டும்; இந்த உலகந்தான் விசித்திரமான அமைப்பை உடைத்தாய் இருக்கையாலே இதற்குத் தக்க ‘உபாதாந உபகரண ஸம்ப்ரதாந ப்ரயோஜன அபிஜ்ஞ கர்த்தா’ - உபாதானமும் உபகரணமும் ஸம்ப்ரதாநமும் ப்ரயோஜனமும் அறிகைக்குத் தகுதியான விசித்திரமான ஞான, சக்தி முதலியவைகளையுடையனாய் இருப்பான் ஒருவன் கர்த்தாவாக வேண்டும்’, என்கிறபடியே,

இங்ஙனே அநுமானத்தாலே ஒருவனைக் கற்பித்து, வேதத்தை ஆப்தவசனமாக்கி இதற்குத் துணை செய்வதாகக் கொண்டு, அநுமானப் பிராதான்யத்தாலே ஈச்வரனைச் ஸாதித்து, அவனாகிறான், ‘ஈசன், ஈசானன்’ என்று இங்ஙனே வேதத்திலே பிரஸித்தமாகப் பெயர்கள் உண்டாயிரா நின்றன. இந்தப் பெயர்களாலே அவற்றால் சொல்லப்படுகிற அவனே ஈசுவரன் ஆகிறான்’ என்று அநுமானத்தாலும் சமாக்யை களாலும் ஆகப் பகவானுக்கு வேறுபட்டவன் ஒருவனுக்கு உயர்வினைச் சாதித்தார்கள்.

அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் சொல்லுகிற அநுமானம் சுருதியின் முன்பு நேர் நில்லாது; (‘‘ஶ்ருதிலிங்க3 வாக்யப்ரகரணஸ்தா2ந ஸமாக்2யா நாம் ஸமவாயே பரதெ3ளர்ப3ல்யமர்த்த2 ப்ரகர்ஷாத்’’ (பூர்வ. மீமாம். 3-3-14) - ‘ச்ருதிகளின் தொகுப்பில் சுட்டிக் காட்டும் அடையாளக்குறியீடு, சொற்றொடர், சூழ்நிலை, இடம், பெயர் - ஆகியவை, தன்னை அடுத்துவரும் ஒன்றைக் காட்டிலும் வலிமை குறைந்ததாக உள்ளன’, என்கிற நியாயத்தின்படி, பூர்வ பூர்வ பிராபல்யமும், உத்தர உத்தர தௌர்பல்யமும் சொல்லு கையாலே, முன்னே சொல்லப்பட்ட சுருதியின் முன்பு அநுமானம் நேர் நில்லாது: சமாக்யையும் லிங்கத்தின் முன் நேர் நில்லாது’ என்றபடி. சமாக்யை - பெயர். லிங்கம் - அர்த்தசாமர்த்தியம்.) இலிங்கத்தின் முன்பு சமாக்யை நேர் நில்லாது’, என்று சுருதி இலிங்கங்களாலே அநுமானத்தையும்சமாக்யையும் தள்ளிப் பகவானுடைய பரத்வத்தைச் சாதிக்கிறார்.

‘அது செய்கிற வழிதான் என்?’ (’நாயகன் அவனே’ என்கையாலே, சுருதிப் பிரசித்தி. ‘கபால நன்மோக்கம்’ என்கையாலே, லிங்கம். இவ்விரண்டனையும் விரித்துப் பேசுவதற்காக, தத் ஜிஜ்ஞாஸு பிரஶ்நத்தை அநுவதிக்கிறார், ‘அது செய்கிற வழிதான் என் என்னில்’, என்று. அது செய்கிற வழி - சுருதி லிங்கங்களாலே அநுமான சமாக்யைகளைத் தள்ளி, பகவானுடைய பரத்துவத்தைச் சாதிக்கிற வழி.) என்னில். ‘வேதத்தின் முதலிலும் வேதத்தின் முடிவிலும் சொல்லப்படுகிற ஸ்வரமாகிறது ப்ரணவம்; உலகத்திலுள்ள எல்லாச் சொற்களும் அதிலே லயம் அடைகின்றன; அந்தப் ப்ரண வந்தான் இயல்பிலே அமைந்த அகாரத்திலே லயம் அடைகின்றது; அந்த அகாரத்துக்குப் பொருளாய் இருப்பதனாலே பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்? அவன் மஹேஸ்வரன்’ என்று கூறுகின்ற சுருதியாலும், (சுருதியை நோக்குமிடத்து அநுமானத்திற்குப் பலம் இல்லாத தன்மையை விரித்துப் பேசுகிறார், ‘வேதத்தின் முதலில்’ என்று தொடங்கி.

‘யத்வேதா3தெ3ள ஸ்வர: ப்ரோக்தோ வேதா3ந்தேச பிரதிஷ்டித:, தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஶ்வர: என்பது, தைத்திரீய நாராயண உபநிஷத். 6:10. - ‘‘யாதொரு ப்ரணவமானது, வேதத்தின் ஆதியில் சொல்லப்பட்டதோ, வேதத்தின் முடிவிலும் ஸ்த்திரமாய் சொல்லப்பட்டதோ, ப்ரணவத்திற்கு காரணமான அகாரத்திலேயே அடங்கியிருக்கிற, அந்த ப்ரணவத் திற்கு அதாவது அகாரத்திற்கு, யாதொரு ஸ்ரீமந் நாராயணன் பொருளோ, அந்தப்படி அகாரவாச்யனான ஸ்ரீமந்நராயணனே பரம ஐச்வர்யத்தோடு கூடியவன்’’.

‘நன்று; மஹேஶ்வரன் என்ற சொல், ஸர்வேச்வரனைக் காட்டும் என்பதற்கு நியாமகம் யாது?’ எனின், அந்த மஹேஶ்வரனை அகார வாச்சியனாகச் சொல்லுகையாலே, ‘அக்ஷராணாம் அகாரோஸ்மி’ என்றும், ‘அகாரோ விஷ்ணு வாசக:’ என்றும், அ இதி ப்ரஹ்ம’ என்றும், அகாரவாச்சியன் விஷ்ணுவாகச் சொல்லப்படுகையாலே, இங்கு அகாரவாச்சியனான மஹேஶ்வரன் ஸர்வேச்வரனேயாவன் என்பது ஸித்தம். தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் கருத்தும் இதுவே என்பதனைத் தொல்காப்பியம், எழுத்ததிகாரம், 46ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையாலும் உணர்தல் தரும்). ‘ஈசன், ஈசானன்’ (இலிங்கத்தாலே சமாக்யையைத் தள்ளுகிறார், ‘ஈசன் ஈசானன்’ என்று தொடங்கி. தலையறுப்புண்பார் - பிரமன். தலையறுத்துப் பாவமுடையராய் நிற்பார் - சிவன்). என்கிற பெயர்களால் தோற்றுகிறவர்களும் தலையறுப் புண்பாரும் தலையறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்; இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் இராநின்றான்; ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற இலிங்கத்தாலுமாக அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்வத்தை நிலையிடுகிறார்.

ஆக, இப்படிகளாலே, ‘எல்லா உபநிஷதங்களாலும் பிரஸித்தமாகச் சொல்லப்படுகின்றவனான நாராயணனே பரம்பொருள்’ என்று அறுதியிட்டு, காலாத்யயாதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை மறுக்கிறார் (காலாத்யயா பதிஷ்டம் என்னும் தூஷணமாவது, பிரபல பிரமாணத் தாலே பாதிக்கப்படுகின்ற தூஷணம். அதாவது, ‘நெருப்புக் குளிர்ந்த தன்மையுடையது, பொருளாக இருக்கையால்; தண்ணீர் போன்று’ என்ற அநுமானத்தில், நெருப்பினுடைய உஷ்ணத்தை அறிகின்ற பிரத்யக்ஷத்தால் உஷ்ணம் இன்மையாகிய ஸாத்தியம் பாதிக்கப்படுதல் போல்வன. தூஷணம் - தோஷத்தையுடையது).

பேச நின்ற சிவனுக்கும்- ‘நீர் ச்ருதி சொன்னீராகில் நாங்களும் ஒரு ச்ருதி சொல்லுகிறோம்’ (’பேச நின்ற’ என்றது, ‘போலிப் பிரமாணங்களாலே பேச நின்ற’ என்னுதல்; ‘உங்களாலே பேசும்படி நின்ற’ என்னுதல். பேச நிற்கையை வெளியிடுகிறார், ‘நீர் ச்ருதி சொன்னீராகில்’ என்று தொடங்கி. ‘கர்மவிதி சேஷமாயிருப்பன சில புனைந்துரைகள்’ என்றது, ஒரு பலத்தின் பொருட்டு ஒரு கர்மத்தை விதித்து, அக்கர்மத்திற்குரிய அதிதெய்வங்களைப் புனைந் துரைகளால் துதிப்பது), என்று ‘அநந்யபரமான நாராயண அநுவாக சித்தன்’ என்று நான் சொன்னால், அதற்கு மாறாக, புறம்பே உபயோகிக்கப்பட்டதாய், கர்மவிதி சேஷமா யிருப்பன சில புனைந்துரைகளாலும் தாமஸ புராணங் களாலும் சொல்லலாம்படி முட்டுப்பொறுத்து நின்ற சிவனுக்கும். அன்றிக்கே, ‘நீங்கள் ‘பரன்’ என்று பேசும்படி நின்ற சிவனுக்கும்’ என்னவுமாம். ‘சொற்களின் பொருள் முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார். மற்றையோரை ‘ஈச்வரர்கள்’ என்னாதே இவனைச் சொல்லலாம்படி இருக்கிறது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ இவனுக்கு?

பிரமன் தனக்கும் - அவனுக்கும் தமப்பனான பிரமனுக்கும். ‘பிரமனுக்கு ஜேஷ்டபுத்திரனாகிச் சிறப்பை அடைந்த’ என்றும், ‘பிரமனுக்குப் புத்திரனாகச் சிவன் தோன்றினான்’ என்றும் சொல்லப்படுதல் காண்க. ‘மஹாத்மாவான சிவன் ஸர்வமேதம் என்னும் யாகத்தில் ஆத்மாவை ஓமம் செய்து தேவ தேவனாக ஆனார்’, என்கிறபடியே, சிவனுடைய ஈச்வரத்வம் பகவானுடைய திருவருளாலே வந்தது. பிறர்க்கும் - இவர்தம் திருவுள்ளத்தால் அவர்களோடு இவர்களோடு வாசி அற்று இருக்கிறபணி. அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலும் அப்படியே அன்றோ? பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு அந்தர்யாமியாய் இருக்கிறார்; மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும் அந்த விஷ்ணுவானவர் ஸாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான்.

நாயகன் அவனே - இக்காரியத்திற்குத் தகுதியான காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும். ச்ருதிப் பிரஸித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார். அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரஸித்தியையும், ‘ய: பரஸ்ஸ மஹேஶ்வர:’ என்கிற ஆதரத்தின் பொருளாய் உள்ள பிரஸித்தியையும் நினைக்கிறார்.

நான்காம் பத்து முடிவுற்றது.

13

ஐந்தாம் பத்து

126. ‘‘உன்னைக்கண்டுகொண்டுய்ந்தொழிந்தேன்’’ (5-1-3)

உன்னை - நட்புத்தன்மை காரணமாக ‘‘விட மாட்டேன்’’ என்னும் உன்னை. அன்றிக்கே, சம்பந்த முள்ளவனுமாய் இனியனுமான உன்னை என்னுதல். கண்டுகொண்டு ‘ஒருபடி காண வல்லோமே!’ என்ற நான், நிதி எடுத்தாற்போலே அடைந்து. உய்ந்தொழிந்தேன் - ‘‘இல்லாதவனாக ஆகிறான்’’ என்னும்படி இருக்கிற நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன். ‘‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்த மயாதிகரணம் 1-1-6 ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தில் இந்தச் சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

‘தேவர்கள், அமுதத்தைப் பார்த்துத் திருப்தி அடைகிறார்கள்’’ என்றே அன்றோ சொல்லப்பட்டிருக்கிறது.

127. ‘‘கருமேனிஅம்மான் தன்னையே’’ (5-1-6)

கருமேனி - அதற்குத் தப்பிலும் தப்ப ஒண்ணாத குளிர்ந்த வடிவழகையும், அம்மான் தன்னை - ‘இவை எல்லாம் எனக்கு’ என்று அநுபவிக்கும்படியான சம்பந்தத்தை யுமுடையவனைக் காணப் பெற்றேன் என்க. ‘‘அந்தத் த்வாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராக்ருதமான சரீரமானது மெல்லியதாயும் மேல் நோக்கின பிரகாசத்தை யுடையதாகவும் இருக்கிறது; அத்திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின், கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லிய தாகவும் உருக்கின தங்கம் போன்ற காந்தியை யுடையதாயுமிருக்கிற ஒரு சிகை இருந்தால் அதுபோன்று இருக்கிறது’’ என்கிறபடியே,’’தஸ்ய மத்4யே வஹ்நிஶிகா அணீயோர்த்4வா வ்ய வஸ்தி2த: | நீலதோயத3 மத்4யஸ்தா2த் வித்3யுல்லேகவ பா4ஸ்வரா | நீவாரஶுகவத் தந்வீ பீதாபா4ஸ்யாத் தநூபமா |’’(தைத்திரீய- நாராயணவல்லி. 11) - அந்த ஹ்ருதய கமலத்தின் நடுவில், சிறியதும் மேல் நோக்கினதுமான அக்3நிஶிகை (பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்ரஹம்) இருக்கிறது. (அது) நீலமேகத்தை உட்கொண்டு மின்னல் போல் பிரகாசமுள்ளதாகவும், நெல் மணி போல் சிறியதாகவும், மஞ்சள் நிறமுள்ளதாகவும் ஒப்பற்றதாகவும் இருதயத்திலே இருக்கிறபடி. முன்பு இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.

128. ‘‘அவரே இனி ஆவாரே’’ (5-1-8)

இனி அவரே ஆவார் - இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார். ‘‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும் ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்’’ ‘‘ மாதா பிதா ப்4ராதா நிவாஸஶ்ஶரணம் ஸுஹ்ருத்’’ (ஸுபாலோபநிஷத். 6-4) ‘‘பகவாந் தாயாய், தந்தையாய், உடன் பிறந்தவனாய், ரக்ஷகனாய், ஸ்நேஹிதனாய், மோக்ஷஉலகமுமாக இருக்கிறான்’’. என்பது உபநிஷத் வாக்கியம்.

129. ‘‘பொலிக பொலிக’’ (5-2 பதிகம்) - ப்ரவேசம்

‘‘ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயைக் காண்கைக் காக நித்யஸூரிகள் இங்கே வர, அவர்களைக் கண்டு மங்களாசாஸனம் செய்கிறார் (இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச் செய்கிறார். ‘ஆழ்வாருடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்த படி, ‘நித்யஸூரிகள் இங்கே வர’ என்றது, இத்திருவாய் மொழியில் வருகின்ற ‘‘தேவர்கள் தாமும் புகுந்து’’(5-2-3) , ‘‘நேமிப் பிரான் தமர் போந்தார்’’ (5-2-6), என்னும் பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம்பற்றி. ஸ்ரீஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்யஸூரிகளுக்குப் ப்ராதாந்யம் தோற்றும். இதனால், ‘‘ஒன்றும் தேவும்’’ (4-10 பதிகம்) என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள் இயைபு தோன்றும். இடையேயுள்ள ‘‘கையார் சக்கரம்’’ (5-1 பதிகம்) என்ற திருவாய்மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.). இத்திருவாய் மொழியால்’’ என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர்.

அங்ஙன் அன்றிக்கே, ‘‘நண்ணாதார் முறுவலிப்ப’’ (4-9 பதிகம்) என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்வத்தை எடுத்துப் பேசித் திருத்த, அதனாலே திருந்தி ஸம்சாரம், பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு மங்களாசாஸனம் செய்கிறார்’’ என்று இங்குள்ளார் பக்கலிலே ப்ராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச் செய்வர். ‘‘எல்லா தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது’’ என்கிறபடியே பகவானுடைய பரிசத்தாலேயா இருக்கிறபடியைம், அது இல்லையாகில் எல்லா நன்மை களும்உண்டானாலும் அவை அடையத்தன் னியன வாயிருக்கிறபடியையும் சொல்லி, தம்மாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும், திருந்துகைக் குத் தகுதியுடையாரைத் திருத்தியும், திருந்தாதாரை உபேக்ஷித்தும், இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாஸனம் செய்கிறார்.

130. ‘‘மாசறு சோதி’’ (5-3 பதிகம்) - ப்ரவேசம்

‘‘பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்; அந்தப் பெரியவன் எதைப் ப்ரமாணமாகச் செய்கிறானோ அதனையே உலகமும் அநுஸரிக்கின்றது’’ (ப.கீ. 3-21) என்கிறபடியே, ஸத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக் கொள்ளக்கடவதன்றோ. ஆனாலும், காமம் விலக்கப் பட்டிருக்கிறதே? என்னில், அவை நிலை நில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயன்றோ விலக்கப்பட்டிருக்கிறது. பகவத் விஷயத்தில் காமத்தை ‘‘தியானம் செய்யத்தக்கவன்’’ என்கிறபடியே, விதியாநின்றதே அன்றோ. வேதாந்தங்களிலே விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது. ‘‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய: ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:’’ (ப்ருஹ. 4-4-5) - ‘அன்பானவனே! ஆத்மா உண்மையில் காணப்பட வேண்டும்; நினைக்கப்பட வேண்டும்; த்யானிக்கப்பட வேண்டும்’. ஆவ்ருத்த்யதி 4கரணம் 4-1-1 ‘ஆவ்ருத்திரஸக்ருது3ப தே3ஶாத்’ 4-1-1. என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச்சொற் றொடரை விளக்கியுள்ளார்.

இதற்கு முன்னர், அவனாலே பேறு’ (இத்திருவாய்மொழியில், ‘மடல்’ என்று சொல்லுகிறது, ஸ்வாபதேசத்தில் பக்தியை அன்றோ; அங்ஙனம் இருக்க, அவனையே உபாயமாகப் பற்றியிருக்கிற இவர்க்கு அது உண்டாகலாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இதற்கு முன்னர்’ என்று தொடங்கி. என்றது, இவருடைய பக்தி, ஸாதன பக்தியன்று; ஸாத்திய பக்தி என்றபடி. பரபக்தி - ஸம்ஶ்லேஷ விஶ்லேக்ஷைக ஸுகதுக்கத்வம்; சேர்க்கையாலே இன்புறுதலும், பிரிவினாலே துக்கித்தலும். பரஜ்ஞானம் - ஸ்புடஸாக்ஷத்காரம்; மிகத் தெளிந்த ஞானம் என்றபடி. பரம பக்தி - விஶ்லேஷத்தில் ஸத்தைக்கு ஹாநி பிறத்தல்; பிரிவிலே முடியும்படியான நிலையை அடைதல். இவற்றை முறையே, விஶத (தெளிவானது) விஶததர (மிகவிளக்கம்) விஶததமம் (மிகப் பெருவிளக்கம்) என்பார்கள். என்று போந்தாரேயாகிலும், அடையத்தக்கதான கைங்கர்யத்துக்கு முன்பு உள்ளனவாய் இருப்பன பரபக்தி, பரஞான, பரமபத்திகள் என்பன சில உளவே அன்றோ, அவை தவிர ஒண்ணாதே.

இனி, பக்திமானுக்கும் பக்தி உண்டு, ப்ரபந்நனுக்கும் பக்தி உண்டு, ருசியை ஒழியப் பரபக்தி பண்ணக்கூடாதே. பக்திமானுடைய பக்தி (பக்தி ப்ரபக்தி நிஷ்டர்களுடைய பக்தி தாரதம்மியத்தை அருளிச்செய்கிறார் ‘பக்தி மானுடைய’ என்று தொடங்கி. ‘விதி ரூபமாய் வரும்’ என்றது, ‘‘நிதி4த்யாஸிதவ்ய:’’ என்கிற விதி மூலமாய் வரும் என்றபடி. என்றது, விதி ரூபமாய் வருவது ஆகையாலே பக்தி நிஷ்டனுக்குச் ஸாதன ரூபமாய் இருக்கும். தேஹ யாத்திரைக்கு உறுப்பாகையாலே ப்ரபந்நனுக்கு ருசிகார்யமாய் இருக்கும் என்றபடி. ‘பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாத போது’ என்ற வாக்கியத்திற்குக் கருத்து, ஸாதன ரூபமாயிருக்கை யாலே பக்திமானுக்கு விடக்கூடிய தாயிருக்கும் என்பது. ‘ப்ரபந்நனுக்கு’ என்று தொடங்கும் வாக்கியத்தின் கருத்து, அநுபவ கைங்கர்யமான தேஹ யாத்திரைக்கு உறுப்பாகையாலே, கைங்கர்யத்துக்கு ஆஶ்ரயமான ஆத்மாவினுடைய சேஷத்வமாகிற ஸ்வரூபமடியாக வந்ததாகையாலே விடக்கூடாததாய் இருக்கும் என்பது), விதி ரூபமாய் வரும்; ப்ரபந்நனுடைய பக்தி, ருசி காரியமாயிருக்கும். பக்திமானுக்குச் ஸாதன ரூபமாயிருக்கும், பிரபந்நனுக்குத் தேஹ யாத்திரைக்கு உறுப்பாக இருக்கும். பக்திமானுக்குப் பலத்திலே சிரத்தை இல்லாதபோது அந்தப் பக்தி தவிரலாயிருக்கும், ப்ரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் வருமதாகையாலே ஒருகாலும் தவிராததா யிருக்கும்.

131. ‘‘ஆதி மூர்த்தியை’’ (5-3-1)

ஆதி மூர்த்தியை - ‘ஒப்பற்ற குடியிலே பிறந்த உனக்கு, அவன்தானே வர இருக்குமது ஒழிய நீ பதறுகிற இதனால் உன் மதிப்பை அறுத்துக்கொள்ளப் பார்க்கிறாயே’ என்ன நான் மதிப்பை அறுத்துக்கொள்ளப் பார்க்கிறேன் அல்லேன், மதிப்பை உண்டாக்கிக் கொள்ளப் பார்க்கிறேன் என்கிறார்; ‘‘காரணப் பொருளே தியானம் செய்யத் தக்கது’’ என்று சாஸ்திரங்கள் ஒரு மிடறு செய்கிற விஷயத்தை அன்றோ நான் ஆசைப்பட்டது. ‘‘காரணம் து த்4யேய:’’ (அதர்வ.உப.3) ‘காரணவஸ்துவே த்யாநம் செய்யத் தகுந்தது; கார்யவஸ்து த்யாநத்திற்கு தகுதியற்றது’ என்பது ஏற்படுகின்றபடியாலும் ‘அப்படிப்பட்ட பரமமான காரணப் பொருளும் நாராயணனே; என்று உபநிஷத் கூறுவதால்.

132. ‘‘அறிவு இழந்து எனை நாளையம்’’ (5-3-1)

எல்லாம் செய்தாலும் இது அறிவுடையார் செய்வது ஒன்று அன்று என்ன, அறிவு இழந்து எனை நாளையம் - அறிவு குடிபோய் எத்தனையோர் காலத்தோம். மயர்வற மதிநலம் அருளின அன்றே போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு. பறவை முதலானவற்றின் காலிலே விழுந்து தூது விட்ட அன்று, ‘அது ஜ்ஞான கார்யம்’ என்று இருந்தாயோ, இன்று இருந்து கற்பிக்கைக்கு; அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ. தன்பக்கல் கைவைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ, ‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார் அத் தோள்’(இரண்டாம்திருவந்தாதி. 42) என்னக்கடவதன்றோ,

‘‘ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்’’ என்கிறபடியே,(‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’.காமாத்3யதி4கரணம் 3-3-16 ‘உபஸ்தி2தே (அ)தஸ்தத்3வசநாத்’ 3-3-40.) பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ்வருகுள்ளவற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே, ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ்வருகுள்ளவற்றை நினையாமலே செய்யவல்ல விஷயம் அன்றோ?

133. ‘‘...... நாடும் இரைக்கவே’’ (5-3-10)

நாடும் இரைக்கவே - அவன் என்னுடைய ஊரவர் கவ்வை நீக்கிலனாகில், நான், தன்னை நாடாக இரைக்கும்படி பண்ணுகிறேன். என்றது, உலகமெல்லாம் கலங்கும்படி செய்கிறேன். ‘ஒருத்தி ஒருவனைப் படுத்திற்றே! ஒருவன் முகங்காட்டிற்றிலன்’ என்னும்படி செய்கிறேன் என்றபடி.

அவனைப் பற்றி அறிவிக்கும் சொற்றொடர்களும் அவனை அடையும் ஸாதனங்களைப் பற்றி அறிவிக்கும் சொற்றொடர்களும் எல்லாம் அழிய அன்றோ புகுகின்றன; ‘ஒருவன் உளனாகில் ஆசைப்பட்டவள் இப்படிப் பட இருக்குமோ, ஆன பின்னர் நிரீஶ்வரங்காண் உலகம்’ என்னும்படி செய்கிறேன். அவனோடே கலந்த என் வார்த்தை ஒழிய, அடி இல்லாத வேதம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பர்களோ? ப்ரமேய ச்ரேஷ்டமானத்தை அழித்தேன், இனிப் ப்ரமாண ச்ரேஷ்டமானது தானே நில்லாதே அன்றோ (வேதச் சொற்றொடர்களை அழிக்கப் போமோ? என்ன, ‘ப்ரமேய ச்ரேஷ்டம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ப்ரமேயம் - பிரமாணங்களால் அறியப்படுகின்ற பொருள். ப்ரமேய ச்ரேஷ்டம் - ஸர்வேச்வரன். பிரமாண ச்ரேஷ்டம் - வேதம். என்றது, அந்தரங்கையான நான் இப்படிப் ப்ரேமேய வஸ்துவை அழிக்கையாலே, அவனைப் பற்றிக் கூறுகின்ற ப்ரமாணங்களும் அப்ரமாணங்களாகி விடும் என்பது கருத்து.). ‘ஆசைப்பட்டார்க்குப் பலம் இதுவான பின்பு இனி உபாஸனத்துக்குப் பலம் இல்லை’ என்று கைவாங்கி நாஸ்திகராம்படி உலகினரனைவரையும் செய்கிறேன். நாடும் இரைக்க யாம் மடல் ஊர்ந்தும் - நாட்டார் சொல்லும் பழிதானே தாரகமே அன்றோ. ‘‘ஊரவர் கவ்வை எருவாக’’ என்றாளே, அதிலே அன்றோ வேர் ஊன்றித் தரிப்பது.

134. ‘‘ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்’’ (5-4-4)

ஒண்சுடரோன் வாராது ஒளித்தான் - தன் தோற்றரவிலே எல்லாக் க்லேசங்களும் போகும்படியான பிரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான். ‘‘அந்தப் பரம்பொருளிடமிருந்து உண்டான ஆணைக்குப் பயந்து காற்றானது வீசுகிறது’’ ‘‘பீ4ஷாஸ்மாத்3வாத: பவதே I பீ4ஷோதே3தி ஸூர்ய: I பீ4ஷா(அ)ஸ்மாத் - அக்3நிஶ்சேந்த்3ரஶ்ச I ம்ருத்யுர்தா4வதி பஞ்சம:II’’ (தை. ஆந. 8-1) - ‘இவனிடம் கொண்ட அச்சத்தால்தான், காற்று வீசுகிறது; இவனிடம் கொண்ட அச்சத்தால் தான் சூரியன் உதிக்கிறான்; இவனிடம் கொண்ட அச்சத்தால் தான் அக்நிதேவனும், இந்திரனும், மேலும் ஐந்தாவதாக மரண தேவனும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்’. புருஷார்த் தா2தி4கரணம் 3-4-1, ‘அதி4கோப தே3ஶாத் து பா3த3ராயண ஸ்யைவம் தத்3த3ர்ஶநாத்’ 3-4-8, என்பது இந்த வேதச்சொற்றொடருக்கு ஸ்ரீபாஷ்யகாரரின் விளக்கமாகும்.

நெடுங்கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலுங் கால்
ஒடுங்கி நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில்
சுடுங்கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடுங்கன லாழி அரங்கேசர் தம்திரு ஆணையினே. என்பது, திருவரங்கத்து மாலை. என்கிறபடியே, பகவானுடைய கட்டளையாலே முப்பது வட்டம் (முப்பது நாழிகைக்கு ஒரு வட்டம்) வரவேணுமேயன்றோ, அதுவும் செய்திலன் என்பாள்.

135. ‘‘ ...... எண் பெரிய சிந்தை நோய்’’ (5-4-4)

எண் பெரிய சிந்தை நோய் - ‘‘எவன் அறியாத வனாக எண்ணுகிறானோ அவன் அறிந்தவன், எவன் அறிந்தவனாக எண்ணுகிறானோ அவன் அறியாதவன்’’ என்கிறபடியே, வேதாந்தங்கள், நிலம் அன்று என்று மீண்ட பகவத் விஷயத்தை, இத்தனை போதும் பேசினார்; தம்முடைய சிந்தையின் வியாகுலம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஞானத்துக்கும் அறிய முடியாததாயிருந்தது. ‘‘யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதே3 ஸ: I அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் II’’ (கேநோபநிஷத். 2-3)- எந்த ப்ரஹ்மஜ்ஞானிக்கு பரம் பொருள் அறியப்படாததாகிறதோ அந்த ஜ்ஞானிக்கே, அந்த ப்ரஹ்மஸ்வரூபம் நன்கு அறியப்பட்டதாகிறது, எந்த அஜ்ஞானிக்கு ப்ரஹ்ம ஸ்வரூபம் அறியப்பட்டதாகிறதோ அவன் அதை அறியாதவனே; ப்ரஹ்மம் இவ்வளவுபட்டது என்று அளவிட்டு அறிபவர் களுக்கு, அறியப்படாததாகிறது; ப்ரஹ்மம் அளவிட வொண்ணாததாகையாலே, அறிய வொண்ணாது என்று அறிபவர்களுக்கு, அது சிறப்பாக அறியப்பட்டதாக ஆகிறது. ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1, ‘அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ - 1-1-1, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச்சொற்றொடரை இவ்வாறு விவரித்துள்ளார்.

136. ‘‘ ..... பின்நின்ற’’ (5-4-6)

‘‘பெயர்களையும், உருவங்களையும் உண்டுபண்ணக் கடவேன்’’ ‘அநேந ஜீவேந ஆத்மநா (அ)நுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி (சாந். 6-3-2), ‘‘தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதம் ஏகைகாம் கரவாணி’’ (சாந். 6-3-3) - ‘இந்த உயிருள்ள ஒன்றுடன் கூடவே உட்புகுந்து, நான், பெயர் மற்றும் வடிவமாக வகைப்படுத்தக் கடவேன்’. ‘அவற்றுள் ஒவ்வொன்றையும் நான் மும்மடங்காகக் கடவேன் மும்மடங்காகக் கடவேன்’. பூ4தாதி4கரணம் 4-2-4 ‘நைகஸ்மிந்த3ர்ஶயதோ ஹி’ 4-2-6, என்பது ஸ்ரீபாஷ்ய காரரின் மேற்கோளாகும்.

‘‘நாம ரூபஞ்ச பூ4தாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத3ப்3தே3ப்4ய ஏவ ஆதெ3ள தே3வாதீ3நாம் சகார ஸ:’’ (ஸ்ரீவிஷ்ணுபுராணம். 1.5:63.)

‘‘தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுக்கும் பெயர்களையும், உருவங்களையும் அந்தப் பரமாத்மா முதலில் செய்தருளினார்’’ என்றும் ஒக்கச் சொல்லக்கடவ தன்றோ. முற்பட வந்தார்க்கு முற்படப் போக வேண்டி இருக்க, பிற்படவும் போகலாகாதோ?.

137. ‘‘....செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்’’ (5-4-9)

செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால் - சிவந்த சுடரையுடைய தாமரை போன்ற திருக்கண்களை யுடைய செல்வத் திருமாலும் வருகின்றிலன். சூரியன் வந்தாலும் இருள் வருவதற்குச் ஒரு காரணம் உண்டே அன்றோ, மறையாத சூரியனும் வருகின்றிலன் என்னுதல். அந்தச் சூரியனுடைய பிரகாசமும் எல்லா இடங்களிலும் இராதே அன்றோ, உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்யுமவன் அன்றோ இவன். ‘‘பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்’’ (இரண்டாம்.திரு. 81) என்னக்கடவதன்றோ.

‘‘காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரைமலர் எவ்வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப்ரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக் கண்களும்’’ என்கிறபடியே, சூரிய மண்டலத்திலே எழுந்தருளி யிருக்கிறவனும் வருகின்றிலன். ‘‘தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவக்ஷிணீ தஸ்ய உதி3தி நாம’’ (சாந்தோ. 1-6-7)- அவனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள. அந்தரதி4கரணம் 1-1-7 அந்தஸ் தத்3 த4ர்மோபதே3ஶாத் - 1-1-21, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கமளிக்கப் படுகிறது.

138.

நிறைந்தவன்பழிநங்குடிக்குஇவளென்று
அன்னைகாணகொடாள்*
சிறந்தகீர்த்தித்திருக்குறுங்குடிநம்பியை
நான்கண்டபின்*
நிறைந்தசோதிவெள்ளம்சூழ்ந்த
நீண்டபொன்மேனியொடும்*
நிறைந்துஎன்னுள்ளேநின்றொழிந்தான்
நேமியங்கையுளதே. (5-5-7)

‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத்தாயாராயும், ‘பழி என்று மீளேன்’ என்கிற பிராட்டியாயும் ஓடுகிற இந்த இரண்டு நிலைகளும் ஆழ்வார் தமக்குப் பிறந்த அவஸ்தா விசேஷங்களே அன்றோ; பழி என்று பரிஹரிக்கப் பார்க்கிற திருத்தாயார் வார்த்தையான இடம், சரமச்லோகத்துக்கு மேலுள்ளவற்றை அனுபாஷித்தாற்போலே இருக்கிற தாயிற்று.

‘பழி என்று மீளேன்’ என்கிற இவள் வார்த்தையான இடம், சரமச்லோகத்தில் நிஷ்கர்ஷம் போலே இருக்கிற தாயிற்று. ‘பழி’ என்று பரிஹரிக்கப் பார்க்கிற இது, உபாயத்தில் கொத்தை (குற்றத்தை) அறுக்கிறது; பழி என்று மீளேன்,என்கிற இது, உபேயத்தில் கொத்தை (குற்றத்தை) அறுக்கிறது; ஸ்வரூபமாய் அந்வயித்ததில் மிகுதியாய்க் கழிவது ஒன்று உண்டோ? என்றபடி; ‘‘தன் அசாதாரண ஆகாரத்தைப் பெறுகிறான்’’ என்கிற இதில், மிகுதியாய்த் த்யாஜ்யமாய் இருப்பது ஒன்று இல்லை அன்றோ. ‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச்ச2ரீராத் ஸமுத் தா2ய பரம்ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேநரூபேணாபி4 நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - கீழ்ச் சொல்லியபடி உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்; (ஸித்தாந்தத்தில்பொருள் இது).ஸம்பத்3யாவிர்பா4வாதி4 கரணம் 4-4-1, ‘ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த்’ 4-4-1, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கமளிக்கப் படுகிறது.

139. ‘‘....... நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான்’’ (5-5-7)

நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் - ஒருநாள், நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப் பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வ்யாப்தியேயோ உள்ளது, விக்ரஹ வ்யாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘ஸர்வ விஷயமாக ஸ்வரூப வ்யாப்தியே உள்ளது; உபாஸக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ரஹத் தாலே, அவர்கள் பற்றுக்கோடாகப் பாவித்த விக்ரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்; இனி, ஸ்வரூப வ்யாப்திக்குப் ப்ரமாணம் கண்ட இடம் ஸாமான்ய விஷயமாகிறது, விக்ரஹ வ்யாப்திக்குப் ப்ரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமா கிறது’ என்று பணித்தாராம். ‘யச்ச கிஞ்சித் ஜக3த்யஸ்மிந் த்3ருஶ்யதே ஶ்ரூயதே(அ)பிவா | அந்தர்ப3ஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:’’ (தை-நா.11) (இவ்வுலகில் காண்பனவும், கேட்பனவுமான எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் வியாபித்துநிற்கிறான் நாராயணன்) பராதி4கரணம் 3-2-7 அநேந ஸர்வக3தத்வ மாயாமஶப்3தா3தி3ப்4ய: - 3-2-36, என்பது ஸ்வரூப வ்யாப்திக்கு ப்ரமாணமாகும்.

நீலதோயத3 மத்4யஸ்தா2த் வித்3யுல்லேகவ பா4ஸ் வரா | நீவாரஶுகவத் தந்வீ பீதாபா4ஸ்யாத்தநூபமா |’’ (தைத்திரீய- நாராயணவல்லி. 11) - (பரமாத்மா) நீலமேகத்தை உட்கொண்டு மின்னல் போல் பிரகாச முள்ளதாகவும், நெல் மணி போல் சிறியதாகவும், மஞ்சள் நிறமுள்ளதாகவும் ஒப்பற்றதாகவும் இருக்கிறார்’ என்பது விக்ரஹ வ்யாப்திக்கு ப்ரமாணமாகும்.

140. ‘‘கடல்ஞாலம்’’ (5-6 பதிகம்) - ப்ரவேசம்

‘‘ஸர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒரு சேதனன் முக்தி தசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்’’ என்றும், ‘‘ப்ரஹ்மத்தைச் ஸாக்ஷாத்கரித்த வாமதேவ ரிஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்’’ என்றும், ‘‘தத்3தை4தத் பஶ்யந் ருஷிர் வாமதே3வ: ப்ரதிபேதே3 அஹம் மநுரப4வம் ஸூர்யஶ்ச’’ (ப்ருஹ. 3-4-10) - நானே மனுவாகவும், ஸூர்யனாகவும் ஆனேன்; (நானே மநுவையும், ஸூர்யனையும் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை எனக்கு அந்தர்யாமியாகக் கொண்டிருக்கிறேன்)’’ என்று பரமாத்மாவைக் கண்ட வாமதேவரிஷி அறிந்தார்; உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘ப்ரகாஶாதி3வச்சா வைஶேஷ்யம் ப்ரகாஶஶ்ச கர்மண் யப்4யாஸாத்’ 3-2-24, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த ச்ருதிச்சொற்றொடரை மேற்கோள் காட்டுகிறார்.

‘‘மத்தத்ஸர்வமஹம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே, அமேவாவ்யயோ(அ)ந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஶ்ரய:’’ (ஸ்ரீவி.பு. 1-19-85) - ‘‘என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன’’ என்றும், அவனாகப் பாவித்தால் பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ. அப்படியே, விபூதி அத்தியாயத்தில் அவன் சொன்ன படிகளைப் பெரும்பாலும் அநுகரிக்கிறாள். அதர்வ சிரஸ்ஸிலே, சிவன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐச்வர்யமாயிருந்தது, இவன் இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று ச்ருதி தானே சங்கித்து, ‘‘ஸோ(அ)ந்தராத் அந்தரம் ப்ராவிஶத்’’(அதர்வ சிகோ. 1-1)- ‘அவர் ஸூக்ஷ்மத்தைக் காட்டிலும் ஸூக்ஷ்மத்தில் ப்ரவேசித்தார்’ என்று, பரமாத்ம ப்ரவேசத் தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ. அந்தப் பாவம் வந்தால் அப்படியே சொல்லலாய் இருக்குமே.

141. ‘‘கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்’’ (5-6-1)

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் - சித்து அசித்துக்களோடு கூடிய பொருளே காரணமுமாய் இருக்கை யாலே, புறம்பு ஒரு காரணம் இல்லாமையாலே, தானே முதற்காரணமும், நிமித்தகாரணமும், துணைக்காரணமுமாய் அன்றோ இருப்பது. இப்படி மூன்றுவித காரணங்களும் தானேயாய் இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள். ‘யானே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால், வேறு காரணம் இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.

கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும் - அவற்றைப் படைத்து அவற்றுள் ப்ரவேசித்து நின்றான். அவற்றுள் ப்ரவேசித்து உயிர் பொருளும் உயிரல் பொருளும் ஆனான் என்கிறபடியே, Òதத் ஸ்ருஷ்ட்வா ததே3வாநு ப்ராவிஶத்| தத3நுப்ரவிஶ்ய ஸச்ச த்யச்சாப4வத் || Ó (தை.ஆந 6.2.3) ‘பரம்பொருளானது உலகை ஸ்ருஷ்டித்து, அதையே உள் நுழைந்து வியாபித்தது; அதை வியாபித்தபின் விகாரமற்றதான சித்தாகவும், விகாரமுடைய அசித்தாகவுமாயிற்று’, ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2நாதி4 கரணம் 2-4-6 தஸ்ய ச நித்யத்வாத் 2-4-14, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.

142. ‘‘.... உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் உரைக்கின்ற அமரரும் யானே என்னும்’’ (5-6-8)

உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் - ‘‘விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்’’ (’’விரூபாக்ஷாய ப்3ரஹ்மண: புத்ராயஜ்யேஷ்டாய ஶ்ரேஷ் டா2ய’’ -சாந்தோக்யம், முக்கண்ணனும், ப்ரஹ்மாவின் முதற்புத்திரனும், உயர்ந்தவனுமான பரமசிவனை வணங்குகிறேன். பிரமர்கள் பதின்மர்: மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், பிலகர், கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள்.) என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்த னாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள். உரைக்கின்ற அமரரும் யானே என்னும் - பிரமனாலே படைக்கப் பட்டவர்களாய், நித்ய ஸ்ருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள் பதின்மர் களும் நான் இட்ட வழக்கு என்னும். அன்றிக்கே, ‘‘பிரமன் என்ன தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் ஸர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்’’ ‘‘ப்3ரஹ்மா த3க்ஷா த3ய: கால: ததை2வ அகி2ல ஜந்தவ:, விபூ4தய: ஹரே: ஏதா ஜக3த: ஸ்ருஷ்டி ஹேதவ: என்பது, ஸ்ரீவிஷ்ணுபுராணம். 1.22:31.) என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக் கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ - வார்த்தை சொல்லுவதாய், கழுத்தே கட்டளையாக நீரை முகந்து, மின்னி, முழங்கி, வில்லிட்டு வருவதொருமேகம் போலே வடிவழகையுடைய ஸர்வேச்வரன் வந்து ஆவேசித் தானோ? அன்றிக்கே, உரைக்கின்ற - ‘‘கருமை நிறத்தை யுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே’’ என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே, ‘‘நீலதோயத3 மத்4யஸ்தா2த் வித்3யுல்லேகவ பா4ஸ்வரா |’’ (தைத்திரீய- நாராயணவல்லி. 11) என்று சொல்லப்படுகிற என்னுதல்.

143. ‘‘கொடிய வினை யாதும் இலனே என்னும்’’ (5-6-9)

கொடிய வினை யாதும் இலனே என்னும் - கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும். ‘‘ஜீவாத்மா வுக்கு வேறுபட்ட ஸர்வேச்வரன் கர்ம பலத்தை அநுபவி யாமல் மிகவும் பிரகாசிக்கிறான்’’ என்றும், ‘‘என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை’’.

‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’ (முண்டக. 3-1-1) [அழகிய (ஜ்ஞாந கர்மங்களாகிற) இறக்கைகளை உடையவையும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றை யொன்று விட்டுப்பிரியாதவையுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக் கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாம லிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.] உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 ‘பே4தா3தி3தி சேந்ந ப்ரத்யேகமதத்3வசநாத்’ 3-2-12, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்தக் கருத்தை விவரிக்கிறார்.

144. ‘‘அங்குற்றேன் அல்லேன்’’ (5-7-2)

அங்குற்றேன் அல்லேன் - முக்தர் இந்தச் ஸம்சாரத்திலே உலாவினாற்போன்று ஸித்தஸாதனனாய்த் திரிகிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன் (உபாஸகர், ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இருவகையர். அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத் திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று தொடங்கி. ‘ஸித்தஸாதனனாய்’ என்றது, சாதனங்களை எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி.) - இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன். அன்றிக்கே, ‘‘சனங்களுடன் இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்’’ என்கிறபடியே, உன்னை அநுபவித்துச் ஸம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன்.

‘ஸ உத்தம: புருஷ: ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீட3ந்ரமமாண: ஸ்த்ரீபி4ர்வா யாநைர்வா ஜ்ஞாதிபி4ர்வா நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) - முக்தனால் அடையத்தக்க அப்பரஞ்சோதி புருஷோத்தம னாவான். அந்த முக்தன் பரமாத்மாவை முழுவதும் அநுபவிக்கிறான். ஸ்த்ரீகளைக் கொண்டும், வாஹனங்களைக் கொண்டும், ஜ்ஞாதிகளைக் கொண்டும் பல்வகையான கேளிக்கைகளில் ஈடுபட்டு இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’ இந்த உபநிஷத் வாக்கியத்தை , காமாத்3யதி4கரணம் 3-3-16, ‘உபஸ்தி2தே (அ)தஸ்தத்3 வசநாத்’ 3-3-40, என்ற ஸூத்ரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் மேற்கோளாகக் காட்டியுள்ளார்,

145. ‘‘கருளப் புட்கொடி’’ (5-7-3) - அவதாரிகை

‘‘அருளாய்’’ என்றீர், அருளக் கடவோம், அதில் ஒரு தட்டு இல்லை; ஆனாலும், ‘‘ஆத்மா கர்த்தாவானால் சாஸ்திரம் பயனுடைத்தாம்’’. ‘‘சாஸ்திரம் பயனுடைத்தாம் போது ஆத்மா கர்த்தாவாக வேணும்’’ என்றபடி அருள் பெறுவார் பக்கலிலும் சிறிது உண்டாக வேணும் காணும் என்ன, இது மேலுற்றைக் கிட்ட மரியாதையோ! கீழுற்றைக்கும் ஏதேனும் உண்டோ; ஆன பின்னர், இத்தலையில் கிஞ்சித்காரத்தை விட்டு உன் கிருபையாலே செய்தருளாய் என்கிறார்.

இவ்வளவும் வர இதற்கு முன்பு நீ நிர்ஹேதுகமாக ஏற்றுக்கொண்ட பின்பு, மேலும் செய்தருளவேணும் என்கிறார். (’’ஶாஸ்த்ரப2லம் ப்ரயோக்தரி’’ (பூர்வ. மீமாம்ஸை. 3-7-18) - ‘சாஸ்திரங்களின் பலன், வழி நடத்துபவருக்குக் கிடைக்கிறது’ என்பது பூர்வ மீமாம்ஸை, (கர்த்ரதி4கரணம் 2-3-5, ‘கர்த்தா ஶாஸ்த்ரார்த்த2 வத்த்வாத்’ 2-3-3, என்கிறது வேதாந்த ஸூத்திரம்). ‘மேலுற்றைக்கிட்ட மரியாதையோ’ என்றது, ‘‘அருள்செய் தங்கிருந்தாய்’’ என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘கீழுற்றைக்கும்’ என்றது, ‘‘பொருளல்லாத என்னைப் பொருளாக்கி’’ என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘ஆன பின்னர்’ என்றது, முன்பு இன்றியே இப்போது உண்டான பின்பு என்றபடி.).

146. ‘‘......பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி’’ (5-7-3)

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி- வஸ்து முன்பே உண்டாய், அதற்கு ஓர் உயர்வினைச் செய்து விட்டாயோ; ‘‘இறைவனைப் பற்றிய ஞானமில்லாதவன் இல்லாதவனாக ஆகிறான்’’ என்று அன்றோ அங்கீகாரத்திற்கு முன்பு இருந்தது, இப்போது ஒரு வஸ்துவாக்கி, ‘‘இறைவனைப் பற்றிய ஞானமுள்ளவனை உள்ளவன் என்று அறிகிறார்கள்’’ என்று உஜ்ஜீவிக்கும்படி செய்தாய்.

‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதிகரணம் 1-1-6 ‘ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இந்த வேதச்சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

147. ‘‘.... நிலம் கீண்டஅம்மானே தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா’’ (5-7-4)

அம்மானே - ‘உடைமையை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ. தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா - அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம் படி தெளிந்திருக்குமவர்கள் (’’தேறு ஞானத்தர்’’ என்பதனை, ‘‘வேத வேள்வி அறா’’ என்பதற்கு அடையாக்கி அருளிச் செய்கிறார் ‘அநுஷ்டானத்தையும்’ என்று தொடங்கி. வேள்வி பஞ்ச மஹா யஜ்ஞங்கள். ஞானத்திற்குத் தேற்றமாவது, வேத வேள்விகளில் உபாயத்வபுத்தி கலவாதிருத்தல். விகல்பிக்கலாம் படி - சமமாக விகல்பிக்கலாம்படி. என்றது, விலக்கிய ஒழுக்கங்களில் உபாயபுத்தி செய்யாததைப் போன்று, விதித்த வேதத்திலும் வேள்வியிலும் உபாயபுத்தி பண்ணாதவர்கள் என்றபடி, அநநுஷ்டானம் - விலக்கிய ஒழுக்கங்கள். அநநுஷ்டானம் ஸாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு ரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று, ‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு ரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள்.

148. ‘‘செய்த ஆயிரத்துள் இவை தண்சிரீவரமங்கை மேய பத்துடன், உடன்பாட வல்லார் வைகலும் வானோர்க்கு ஆராவமுதே’’ (5-7-11)

ஆயிரம் - அர்த்தம் வேதார்த்தமேயாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ (திருவாய்மொழி வேதமாயிருக்க, ‘‘செய்த ஆயிரம்’’ என்னலாமோ? என்ன, ‘அர்த்தம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது, ஆப்ததரமான ஆழ்வார் பக்கலிலே பிறந்தது ஆகையாலே செய்யாமொழியாகிய வேதத்தைக் காட்டிலும் இது உயர்வுக்குக் காரணமாயிருக்கும் என்றபடி.) என்கிறது.

பரத்வம் போலே வேதம், அவதாரம் போலே இதிஹாச புராணங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய் மொழி. செய்த ஆயிரம் அன்றோ. அன்றிக்கே, தமப்பன் இல்லாத இழவுதீரச் சக்ரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர்பக்கல் வந்து பிறந்தது ஆதலில் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல். உடன்பாட வல்லார் - அபிப்பிராயத் தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாயஸூந்ய தையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி. வைகலும் வானோர்க்கு ஆராவமுதே - காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்யஸூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர்.

149. ‘‘ சீரார் செந்நெல் கவரி வீசும்’’ (5-8-1)

அன்றிக்கே, ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடியாகிற சீர்மையையுடையதாதலின் ‘சீரார் செந்நெல்’ என்கிறார் என்னுதல். அப்போது ‘‘நான் ஸர்வேச்வரனுக்கு போக்யன்’’ என்கிற சீர்மை. ‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமா னுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன், என்று தைத்திரீய உபநிஷத் வாக்கியம் இதற்குப் பிரமாணமாக அருளிச் செய்யப்படுகிறது.

150. ‘‘ ..... எம்மானே என் வெள்ளைமூர்த்தி’’ (5-8-2)

எம்மானே என் வெள்ளைமூர்த்தி - ‘‘உலகத்திற் கெல்லாம் தலைவன்’’, ‘‘அந்தச் ஸர்வேச்வரனுக்கு அடியவனாய் இருக்கிறேன்’’ ‘‘பதிம் விஶ்வஸ்ய ஆத்மேஶ்வரம் ஶாஶ்வதம் ஶிவமச்யுதம்’’ (தை.நா. 11-3),’அண்டத்தின் தலைவன், ஆத்மாவின் இறைவன், ஶாஶ்வதமான மங்களமும் உடைய நாரணனை’. அஹிகுண்ட3லாதி4கரணம் 3-2-6 உப4ய வ்யபதே3ஶாத் த்வஹிகுண்ட3லவத் - 3-2-26, ‘‘யஸ்யாஸ்மி ந தமந்தரேமி’’ (யஜு. அஷ்டகம். 3-7) - ‘ஈச்வரனுக்கும் தாஸனா யிருக்கிறேன், அந்த ஈச்வரனை அதிக்ரமிக்கிறேன் அல்லேன் என்றபடி’. என்கிற பிரமாணங்களைக் கொண்டு அறிந்தேனோ. பின்னர் எங்ஙனே செய்தபடி? என்னில், சுத்த ஸ்வரூபனாகையாலே தன்படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத் தன்பேறாகத் தானே காட்டக் கண்டேன்.

151. ‘‘ ....... எழில் ஏறே’’ (5-8-2)

எழில் ஏறே - இப்படி அடியார்கட்காகப் பிறவா நின்றால் பழைய புகரில் குறைந்து வருமோ? என்னில், பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை. கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளிவரும் முழுநலமே அன்றோ. ‘‘அவதரித்த பின்பு அந்தப் பரமாத்மா மிகுந்த ஒளியையுடைவனாகிறான்’’. ‘‘யுவா ஸுவாஸா: பரிவீத ஆகாத் ஸ உஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந’’ (ருக்வேதம். 3-8-4)என்பது ச்ருதி. எல்லார்க்கும் பிறக்கப் பிறக்கப் புகர் அழிந்து வரும், இவன் ஒருவனுக்கும் பிறவா நின்றால் புகர் உண்டாகா நிற்கும்.

152. ‘‘ ....வைகலும் வினையேன் மெலிய’’ (5-9-1)

வைகலும் வினையேன் மெலிய - ஒருகால் மெலிந்து தரித்திருப்பார்க்கன்றோ பிரிவாற்றலாவது. வைகலும் மெலிய - காலம் கழியக் கழியக் காதல் கழியும்படியன்றோ சிற்றின்பத்தை விரும்பியிருப்பார்க்கு இருப்பது: மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், ப்ரத்யக்ஷ ஸமான ஆகாரமாய், பின்பு சரீரம் நீங்குங்காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது. ‘‘தஸ்ய-எனக்கு, அத2 ஸம்பத்ஸ்யே - பின்பு ஸம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூட வேண்டுமே. யாவந்நவிமோக்ஷயே - எத்துணைக் காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ, தாவதே3வ சிரம் - எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம். அத2 ஸம்பத்ஸ்யே - பின்பு சம்பந்நனாகக் கடவேன்.’’ (’சரீரம் நீங்குங்காலத்தைப் பார்த்திருப்பார்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘தஸ்ய’ என்று தொடங்கி.

‘‘தஸ்ய தாவதே3வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யே (அ)த2 ஸம்பத்ஸ்யே’’ (சாந். 6-14-2) - ‘அந்த உபாஸ கனுக்கு ப்ராரப்த கர்மத்தினால் உண்டான சரீரம் நீங்குவது வரையிலேயே தாமதம். அது நீங்கினவுடன் ப்ரஹ்மத்தை அவன் அடைகிறான்’ என்னும் மற்றுமுள்ள வேதச் சொற்றொடர்களும் ப்ரஹ்மாநுபவம் தவிர உபாஸகனுக்கு அநுபவிக்க வேண்டிய ப்ராக்ருத இன்ப துன்பங்கள் இல்லை என்று கூறப்படுகின்றனவன்றோ.ஸாம்பராயாதி4கரணம் 3-3-12, ‘ஸாம்பராயே தர்த்தவ்யாபா4வாத்ததா2 ஹ்யந்யே’ 3-3-27 என்று ஸ்ரீபாஷ்யத்தில் விவரிக்கப் படுகிறது.

‘‘இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்’’ ‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச்ச2ரீராத் ஸமுத்தா2ய பரம்ஜ்யோதிருபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்; (ஸித்தாந்தத்தில் பொருள் இது).ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் 4-4-1ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த் 4-4-1, என்றபடி. இப்படிச் சரீரம் விட்டு நீங்கும் தினத்தைப் பார்த்திருப்பார் படி அன்றோ இது வைகலும் வினையேன் மெலிய - தன்னைப் பிரியும்படி.

153.

‘‘..... துயராட்டியேனைமெலிய* பாடுநல் வேத வொலி பரவைத்திரைபோல்முழங்க* மாடுயர்ந்தோமப் புகைகமழும் தண்திருவல்லவாழ்* நீடுறைகின்றபிரான் ..... ‘‘ (5-9-3)

வருத்துதல் அழகன்று - வாராய், நீயும் உன்னை உகந்தாரைப் பிரிந்து நோவுபடுகிறாயன்றோ என்றாள் பிராட்டி. செய்யத்தக்கனவானாலும் சிலர்க்கு நலிவானால் தவிர வேண்டாவோ? என்பாள் ‘மெலியப் பாடும்’ என்கி றாள். அவர்கள், எல்லாம் சமைந்தாலல்லது குரு குலத்தை விட்டு நீங்கார்களாதலின் ‘பாடும்’ என்கிறாள். இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே காணும் அஸஹ்ய மாயிருக்கிறபடி. இருவரும்கூட இருந்து கேட்கக் கூடியதனைத் தனியிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதேயன்றோ. அவன் பெயர் வைத்துப் புணர்த்தாலும் ‘‘சீதையினுடைய மஹத்தான சரிதம்’’ என்றேயன்றோ புணர்ப்புத்தான் இருப்பது.

இனித்தான், ‘‘தேவரீருக்குப் பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தேவிகளாக இருக்கிறார்கள்’’, ‘‘ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ’’ (புருஷஸூக்தம். உத்தராநுவாகம்) - (பரமபுருஷனான) ‘உனக்கு பூமிதேவியும், ஸ்ரீதேவியும் பத்நிகள்’). ‘‘எல்லா ஆத்மாக்களுக்கு நியமிக்கின்ற வளாயிருப்பவள்’’, ‘‘ஈஶ்வரீம் ஸர்வபூ4தாநாம்’’ (ஸ்ரீஸூக்தம்) - ‘ஸர்வஜகத்துக்கும் ஈஶ்வரியாயுள்ள பிராட்டியைச் சரணமடைகிறேன்’, ‘‘விஷ்ணு பத்னியானவள் இந்த உலகத்திற்குத் தலைவி’’, ‘‘அஸ்யேஶாநா ஜக3தோ விஷ்ணுபத்நீ’’ (யஜு.ஸம். 4-4-12) ‘இவ்வுலகிற்கு ஈச்வரியாகவும், விஷ்ணுவிற்கு பத்நினாகவுமிருப்பவள்’, என்று இவற்றையேயன்றோ அவன் விரும்பிக் கேட்பது. ஈச்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் ஆதலின் ‘பாடு நல்வேதம்’ என்கிறது. அன்றிக்கே, இசையை யுடைத்தான ஸாமவேதம் என்னுதல். ‘‘உளன் சுடர் மிகு சுருதியுள்’’ (1-1-7) என்று மற்றைப் பிரமாணங்களைக் காட்டிலும் உயர்ந்த பிரமாணமாதலின், ‘நல்வேதம்’ என்கிறது. அன்றிக்கே, ‘‘வேதங்களுக்குள் ஸாமவேதம் நான் ஆகிறேன்’’ என்கிற உயர்பினைச் சொல்லுகிறதாதல்.

ஆக, ஸ்வரத்திலே குற்றமுண்டாதல்; ‘‘வேதங்களுக் குள்ளே ஸாமவேதம் நான் ஆகின்றேன்’’ (ப.கீ. 10-22) என்கிறபடியே அந்தரங்கமான வேதமன்றிக்கே ஒழில்தல்தான் செய்ததாகில் நான் ஆறியிருக்கலாயிற்றே என்கிறாள் என்றபடி. வேத ஒலி பரவைத் திரைபோல் முழங்க - ஓதம் கிளர்ந்த கடல் போலே காணும் ஸாமவேதத்தின் ஒலி இருக்கிறபடி. அதில் பருவம் ஒழிந்த நாட்களும் பகலும் ஆறியிருக்கலாமே என்பாள் ‘முழங்க’ என்கிறாள். எல்லாவளவிலும் இவர்க்கு வேதத்திற்கிடக்கிற பிராவண்யம் பாரீர், முதல் வார்த்தைதான் ‘‘உளன் சுடர்மிகு சுருதியுள்’’ (1-1-7) என்பதேயன்றோ. ‘‘ ஸர்வே வேதா3 யத்பத3மா மநந்தி’’ (கடே. உப.2-15) ‘யாதொருவனுடைய ஸ்வரூபத்தை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், ‘‘ஸர்வை வேதா3 யத்ரைகம் ப4வதி’‘ ‘‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’’ என்றும், ‘‘எல்லா வேதங்களாலும் அறியப் படுமவன் யானே’’ (ப.கீ. 15-15) என்றும் அன்றோ பிரமாணங்கள் கூறுகின்றன.

மாடு உயர்ந்து ஓமப்புகை கமழும் ‘‘ஓத்துச் சொல்லிச் சொல்லாத விடமெல்லாம் வைதிகக் கிரியைகளே யாய்க் கிடக்குமித்தனை. மாடு - பக்கம். ஆகாசமடங்கலும் இடமடைத்து, வைமானிகரை (விமாநத்தில் ஆகாயத்தில் ஸஞ்சரிக்கும் தேவதைகள்) முகம்பார்த்து அநுபவிக்க வொட்டாதபடி எழா நின்றது. ‘‘கர்மங்களைச் செய்து அவற்றாலே ஸித்தி பெற்றவர்கள் ஜனகன் முதலானவர்கள்’’ என்கிறபடியே, ஞானத்தில் நிலைநின்றவர்களே அன்றோ.

154. ‘‘ .....நல் அருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே’’ (5-9-10)

நல் அருள் நம்பெருமான் - நல்ல அருளை யுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன். நல்லருளாவது, வாத்ஸல்யம். வாத்ஸல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும். அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார் (’நாராயண’ என்ற சொல்லைச் சொல்லும்போது முன்பு பொருளைச் சொல்லிக் கொண்டு பின்பு மந்திரத்தைச் சொல்லுதல் என்ற நிர்ப்பந்தமுண்டாகையாலே, நாராயண சப்தார்த்தமாக யோஜிக்கிறார் ‘நல்லருளாவது’ என்று தொடங்கி.)

நாராயணன் நாமங்களே - நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம். இந்த ஸ்வபாவங்களாலே நிரூபிதமான வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகங்கள் மற்றைத் திருநாமங்கள் (’நாராயண’ என்ற சொல்லும் ஸர்வேச்வரனுடைய திருநாமம் அன்றோ, இதனைப் பிரதானமாகச் சொல்லுவான் என்? என்ன, ‘நாராயண சப்தம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘தர்மி நிர்த்தேசம்’ என்றது, ஸ்வரூப நிரூபகம் என்றபடி. ‘இந்த ஸ்வபாவங்களாலே’ என்றது. வாத்ஸலய ஸ்வாமித்வங்களாலே என்றபடி. குணங்களில் வைத்துக் கொண்டு ஞான ஆனந்த அமலத்வ ஆதி குணங்கள் நிரூபகங்களாய், அல்லாத குணங்கள் இவற்றாலே நிரூபிதமான ஸ்வரூபத்திற்கு விசேஷணமானாற் போலே, திருநாமங்களிலும் நாராயண என்ற சொல் ஸ்வரூப நிரூபகமாய், அல்லாத திருப்பெயர்கள் இந்தத் திருநாமத்தாலே நிரூபிதமான வஸ்துக்கு உண்டான குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமாயிருக்கும் என்றபடி.).

ஐந்தாம் பத்து முடிவுற்றது.

14

ஆறாம் பத்து

155. ‘‘வைகல் பூங்கழிவாய்’’ (6-1 பதிகம்) - ப்ரவேசம்.

‘சரணம் புக்கோமாகில் அத்தலையாலே பேறு ஆகுமளவும் ஆறியிருப்போம்’ என்று தரித்திருக்க வல்ல தன்மையரன்றே. ப்ரஹ்மாஸ்திரம் வாய்மடியச் செய்தேயும் இவர் தூதுவிடுகிற இது, ஞானகாரியமோ சாபலகாரியமோ தெரிகிறது இல்லை; சுருதிகளும் கூட ‘‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேதவாக்குகள் மீண்டன’ என்று பேச்சுக்கு நிலம்அன்று என்று மீண்ட விஷயத்தை மறுபாடு உருவப் பாசுரமிட்டுச் சொல்லவல்ல இவர்க்கு ‘அறிவில்லை’ என்ன ஒண்ணாது. (‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவ தில்லை’, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ஸூத்ரம்- ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17).

156. ‘‘சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்’’ (6-1-3)

இராமாவதாரத்துக்குப் பின்பு பிரிந்தாரைச் சேரவிடுகை திரியக்குகளுக்குப் பணி என்று காணும். சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் - வாராமை அவன் குற்றம் அன்று கண்டீர், அவ்வூரின் நிறைவு வேறேயும் சிலரை நினைக்க ஒட்டுமோ. ‘‘முக்தன் ஜனங்களுடன் கூடியுள்ள இந்தச் சரீரத்தை நினைப் பதில்லை’’ என்னுமாறுபோலே இங்குத்தை ஐச்வர்யமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. (‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’. காமாத்3யதி4கரணம் 3-3-16, ‘உபஸ்தி2தே (அ)தஸ்தத்3வசநாத்’ 3-3-40, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கமளிக்கப் படுகிறது.

157. ‘‘அடியேனுக்கும் போற்றுமினே’’ (6-1-5)

அடியேனுக்கும் போற்றுமினே - நீங்களும் அவனைப்போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்க வேண்டும். அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே, இத்தலையை நினைக்க விரகு இல்லை யன்றோ; ‘‘முக்தன் இச்சரீரத்தை நினைப் பதில்லை’’ (‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’) என்னும் படியன்றோ இருப்பது. அடியேனுக்கும் போற்றுமின் - அடியேன் இடையாட்டத்தையும் அத்தலைக்கு அறிவிக்க வேண்டும்.

158. பிணக்கியாவையும்யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது * ஓர் கணக்கில்கீர்த்தி வெள்ளக் கதிர்ஞானமூர்த்தியினாய்!* (6-2-8)

யாவையும் யாவரும் பிணக்கி - தன்பக்கல் பொருந்துகைக்கு நினைவு இல்லாதனவற்றையும் நினைவாலே பொருந்தாதனவற்றையும் கூட்டி, ‘‘மூலப்ரக்ருதி யானது பரமாத்மாவினிடத்தில் கலக்கிறது’’ என்கிறபடியே, --- ‘அக்ஷரம் தமஸி லீயதே தம: பரே தே3வ ஏகீ ப4வதி’’ (ஸுபாலோ.- 2) - ‘அக்ஷரமானது இருளில் அமிழ்கிறது. இருளானது மிக உயர்ந்த இறைவனோடு ஒன்றுகிறது’ என்கிறது ச்ருதி. ‘தமஸ்’ (இருள்) என்பது ஒன்றுபடுகிறதே தவிர அழிவடைவதில்லை. -’ஏகீபா4வ:’ என்பதால்- ஒன்றுபட்டிருப்பது என்பது தேறுகிறது. பெயரும் வடிவமும் வேறுபட்டு வெளிப்படாத நிலையிலுள்ள ப்ரஹ்மத்தின் செயல் வகைகளைக் குறிப்பிடுகிறது. ப்ரக்ருத்யதி4கரணம் 1-4-7 ,ப்ரக்ருதிஶ்ச ப்ரதிஜ்ஞா த்3ருஷ்டாந்தாநு பரோதா4த் 1-4-23, என்ற ஸூத்திரத்தில் பாஷ்யகாரர் இதனை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

தன்னோடு வேற்றுமையறக் கலசி. பிழையாமல் பேதித்தும் - தப்பாமல் பிரித்தும் என்றது, வயிற்றில் நின்றும் புறப்பட விடுதல், ஸம்ஹரித்துப் புறப்படவிடுதல்களைக் குறித்த படி. ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடிவாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து, விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே.

ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும். பேதியாதது ஓர்கணக்கு இல் கீர்த்தி வெள்ளம் கதிர்ஞான மூர்த்தியினாய் - காரிய நிலையானதுவே காரண நிலையானாலும், காரண நிலையில் அசித்தைப்பற்றி வருகின்ற ஸூக்ஷ்மபரிணாமம், சேதனத்தைப்பற்றி வருகின்ற அஜ்ஞானம், படைப்புக் காலத்தில் அசித்தைப் பற்றியுள்ள ஸ்வரூபத்தின் வேறுபாடு, சேதனத்தைப் பற்றியுள்ள தன்மையின் வேறுபாடு (’காரிய நிலையானதுவே’ என்றது முதல், ‘வேற்றுமைகள் ஒன்று நின்றிக்கே’ என்றது முடிய, ‘‘பேதியாதது’’ என்பதற்குப் பொருள். ‘காரிய நிலையானதுவே’ என்றது, காரிய நிலையான ப்ரஹ்ம ஸ்வரூபமே என்றபடி. ‘ஸ்வரூபத்தின் வேறுபாடு’ என்றது, ஸ்தூலபரிணாமம். இது, மேலே ‘ஸூக்ஷ்மபரிணாமம்’ என்றதற்கு மறை. ‘தன்மையின் வேறுபாடு’ என்றது, ஞானத்தின் மலர்ச்சி. இது, மேல், ‘சேதனத்தைப் பற்றி வருகின்ற அஜ்ஞானம்’ என்பதற்கு மறை.).

ஆக, இந்த வேற்றுமைகள் ஒன்றும் இன்றிக்கே, ஒரே உருவமாய், அத்விதீயமாய், எல்லையில்லாத கீர்த்திக் கடலையுடைத்தாய், ஒளி உருவமான ஸங்கல்பரூப ஞானத்துக்கு இருப்பிடமானவனே! எல்லாப் பொருள் கட்கும் வித்தாய் (1-5-2) முதலில் சிதையாத மனஞ்செய் ஞானமன்றோ.

159. ‘பரஞ்சுடருடம்பாய்அழுக்குப்பதித்தவுடம்பாய், கரந்தும்’’ (6-3-7)

பரஞ்சுடர்உடம்பாய் - ‘‘திருமேனி ஒளிகளின் கூட்டம்’’என்கிறபடியே, ஶுத்த ஸத்வ மயமான அசாதாரண திவ்யவிக்ரஹத்தையுடையனாய். அழுக்குப் பதித்த உடம்பாய் - முக்குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாகவுடையனாய். கரந்தும் - இவற்றுக்கு அந்தராத்மா வாய்ப் புக்கு நிற்கச் செய்தே. ‘‘எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான்இல்லை’’ என்கிறபடியே, ‘ய ஆத்மநி திஷ்ட2ந் நாத்மநா (அ)ந்தரோ யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ஶரீரம் ய ஆத்மாந மந்தரோ யமயதி ஸ த ஆத்மா (அ)ந்தர் யாம்யம்ருத:’’ (ப்ருஹ. மாத்ய. 5-7-22) - ‘எந்தப் பரமாத்மா ஜீவாத்மாவின் உள்ளும் புறமும் வியாபித் திருக்கிறானோ, எவனை ஜீவாத்மா அறியானோ, எவனுக்கு ஜீவாத்மா ஶரீரமோ, எவன் ஜீவாத்மாவை உள்நுழைந்து நியமிக்கிறானோ, அழிவற்ற அந்தப் பரமாத்மாவே உனக்கு அந்தர்யாமி’ அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் 4-4-2 ‘அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாத்’ 4-4-4, என்ற ஸூத்திரபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரரால் தெளிவாகக் காட்டப்படுகிறது.

‘‘வலக்கையாழிஇடக்கைச்சங்கம் இவையுடைமால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு’’ (6-4-9)

வலம் கை ஆழி இடம் கைச்சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு - இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யா நிற்கச் செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டுவரைப் பெருமாள் என்பவர், மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடைக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேஷித்ததற்குக் கருத்து என்? என்ன, ‘‘சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்’’ என்று அருளிச்செய்தார். அறப் பெரியவனுக்கு லக்ஷணங்கள் அன்றோ சங்கு சக்கரங்கள். ‘‘‘ஒன்றிலும் ஆசை இல்லாதவன் மௌனமாக இருப்பவன்’ என்கிற ஸர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார். (சோளேந்திரன்சிங்கன் என்பது திருவரங்கம் பெரியகோயிலுக்கு இரண்டாம் ராஜராஜனால் (1146-1163 A.D.) கொடுக்கப்பட்ட யானையின் பெயர். சோளேந்திரசிங்கன் என்பது இரண்டாம் ராஜராஜனுக்கு அமைந்திருந்த பட்டப்பெயர்களில் ஒன்று. இவனுக்கு ‘வீழ்ந்த அரிசமயத்தை மீண்டு எடுத்தவன்’ என்ற மெய்கீர்த்தி அமைந்துள்ளது. இவன், தில்லைச்சித்திரகூட கோவிந்த ராஜனை கடலில் எறிந்த இரண்டாம் குலோத்துங்கனின் மகன் ஆவான்.

எம்பெருமானாகிய யானையை உட்காரவைப்பது என்பது (உளுக்காக்க) அத்துணை எளிதல்ல. அங்குசத்தைக் கையிலேந்திய பாகனால் மட்டுமே முடியும். இங்கே சோளேந்திரசிங்கனாகிய யானை எம்பெருமானைக் குறிக்கும், அந்த எம்பெருமானாகிய யானையை உட்காரவைக்கும் திறமை கொண்டவர் பராங்குசனாகிய யானைப்பாகன். திருவாய்மொழி ஸேவிக்கத் தொடங்கினால் எம்பெருமானு டைய ஸ்ரீசடாரி கூட இருந்தயிடத்திலேயே இருக்க வேண்டும் என்பது மரபு.

160. ‘‘மண்மிசை பெரும் பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும் போர் பண்ணி ‘‘ (6-4-10)

பரமபதத்தில் ‘‘எந்தப் பரமபதத்திலே பழையர்களான ஸாத்தியர் என்கிற தேவர்கள் வசிக்கிறார்களோ’’ (‘‘யத்ர பூர்வே ஸாத்4யா ஸந்தி தே3வா:’’ (புருஷஸூக்தம்-18) - பழைமையான நித்யஸூரிகள் வாஸம் செய்யும் பரமபதத்தை அடைகிறார்கள்,) என்கிறபடியே, கனத்தால் உண்டாயிருக்கச் செய்தேயும், பாரம் இல்லை அன்றோ அகங்கார சம்பந்தமுடையார் இல்லாமையாலே. தங்கள் பாரத்தினை அவன் தலையிலே வைத்திருக்குமவர்களன்றோ அவர்கள். ஓர் மாபெரும் பாரதப்போர் பண்ணி - ஒப்பற்றதான மஹாபாரதமாகிற மஹா யுத்தத்தைச் செய்து.

161. பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே. (6-6-5)

பொருளுரை:-

பகவானுடைய தன்மைகளை உள்ளவாறே சொல்லும் பண்பினையுடைய வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த மேலானவனுக்கு, அணுக்கள் செறிந்த உலகத்தை மேலே கொண்டுவந்த ஸ்ரீவராகப்பெருமானுக்கு, தெளிந்த தண்ணீரையுடைய பிரளயவெள்ளத்திலே பள்ளிகொண்ட எம் தேவபிரானுக்கு, என்னுடைய, கண்டார் கண்களைப் பிணிக்க வல்ல மயிர்முடியையுடைய பெண்ணானவள் கலவியை இழந்தாள்.

பண்புடைவேதம் - ஈச்வரனை உள்ளபடியே காட்டித் தரும் நீர்மையையுடைய வேதம். பயந்த - தூங்கினவன் எழுந்தான் என்ற கணக்கிலே பிரமனுக்குக் கற்பிக்கை. பரனுக்கு - ‘‘அந்தப் பகவான் உலகங்களைப் படைப்பதற்கு முன்பு பிரமனைப் படைத்து அவனுக்கு வேதங்களை உபதேசித்தார்’’ என்கிறபடியே, யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம். யோவை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ (ச்வே. 6-18) - ‘எவனொருவன் சதுர்முக ப்ரஹ்மனை முன் படைத்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறானோ’ என்னும் ப்ரமாணத்தால், ஆரம்பத்தில் முன்பே இருந்த வேதத்தை நினைவு கூர்ந்து, அதை நான்முக ப்ரஹ்மனுக்கு ஈச்வரன் உபதேசித்தான்’ இந்தக் கருத்தை ஸ்ரீபாஷ்யகாரர், கார்யாதி4கரணம் 4-3-5 ‘ஸாமீப் யாத்து தத்3வ்யபதே3ஶ:’ 4-3-8, என்ற ஸூத்திர விரிவுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரமனுக்கு வேதங்களாகிய கண்களைக் கொடுக்கை யாலும், வேதங்களிலே அறியப்படுகின்றவன் ஆகையாலும் எல்லோரைக்காட்டிலும் மேலானவனுக்கு. அறிவு இழந்தார்க்கு அறிவு கொடுக்குமவன் கண்டீர் இவள் அறிவை அழித்தான். மண்புரைவையம் - மண்மிக்க பூமி. இடந்த வராஹற்கு - மண்ணோடு விண்ணோடு வாசியறத் தன் முகத்தால் ரக்ஷித்தபடி.

162. ‘‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்’’ (6-7-1)

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் - இவள் அவ்வருகே ஒருவாய் புகுநீர்தேடிப் போனாளோ. என்றது, இங்கு இருந்த நாள் அந்நம், பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கேபுக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி. ‘‘அஹம் அந்நம், அஹமந்நாதா: - நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்’’ என்று இருப்பார்க்கும் இவ்வருகு போகவேணுமோ? ‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன், என்று தைத்திரீய உபநிஷத் சொற்றெடர் இதற்குப் பிரமாணமாக அருளிச் செய்யப்படுகிறது.

163. மண்ணினுள்அவன்சீர் வளம்மிக்கவனூர்வினவி*
திண்ணம் என் இளமான்புகுமூர் திருக்கோளூரே. (6-7-1)

மண்ணினுள்அவன்சீர் வளம்மிக்கவனூர்வினவி

திண்ணம் என் இளமான்புகுமூர் திருக்கோளூரே.- மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே. விண்ணில் ஓர் ஊர் விசேஷிக்க வேண்டும்படியாய் இராதன்றோ. அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் - அவனுடைய கல்யாண குணங்களையும் தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வத்தை யுடையவனுடைய ஊரையும். ‘‘அந்த முக்தன் எல்லாக் கல்யாணகுணங்களையும் ஸர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்’’ என்கிறபடியே, அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று, அவன் விரும்பின தேசமும் பிராப்பியத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ. ‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’’ (தை. ஆந. 1-2) - ‘அந்த முக்தன் ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடு கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான்’. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6, ‘போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச’ 4-4-21, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் மேற்கேளாகக் காட்டப்படுகிறது.

164. ‘‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல், அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற’’ (6-7-2)

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற - இந்த இருப்பில் என்ன குறை உண்டு? இங்கே ஒரு குறை உண்டாய், அங்கே அது தீரப் போனாளோ? இங்கே, போதயந்த: பரஸ்பரம் பண்ணுகைக்கு ஆள் இல்லாமை ‘‘எங்குப் பழையர்களாய் விளங்குகின்ற ஸூரிகள் வசிக்கின்றார்களோ’’ என்று ஓதப்படுகிற ஒரு தேச விசேஷம் தேடிப் போனாளோ? ‘‘குற்றமற்றவனாய்ப் பூர்ண ஸாம்யத்தை அடைகிறான்’’ என்று அவன் அங்குள்ளாரைத் தன்னோடு ஒத்தவர்களா யிருக்கும்படி செய்தார்போலே அன்றோ, இங்குள்ளாரை இவள் தன்னோடு ஒக்கப் பண்ணினபடி.

‘‘யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்த்தார மீஶம் புருஷம் ப்3ரஹ்மயோநிம் I ததா3 வித்3வாந் புண்ய பாபே விதூ4ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதிII’’ (முண்ட. 3-1-3) - ‘முக்தாத்மாவானவன் பொன்போன்று அழகிய திருமேனி உடையவனாய், உலகிற்குக் கர்த்தாவாய், நியமிப்பவனாய், புருஷன் எனப்படுமவனாய், உலகிற்கு உபாதாந காரணமாய் இருக்கும் பரமாத்மாவை எப்போது காண்கிறானோ, அப்போது அவன் புண்யபாபங்களை விட்டு எந்த தோஷமும் (குற்றமும்) இல்லாதவனாய், அபஹதபாப் மத்வம் (பாபமின்மை) முதலான எட்டு குணங்கள் ஆவிர்ப் பவிக்கப்பெற்று ப்ரஹ்மத்தோடு மேலான ஒற்றுமையை அடைகிறான்’அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் 4-4-2 ‘அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாத்’ 4-4-4 என்ற ஸூத்திர பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்தக் கருத்தைத் தெரிவித் துள்ளார்.

165. ‘‘ .......என் சிறுத்தேவி இனிப் போய்’’ (6-7-5)

என் சிறுத்தேவி - தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத்தேவி’ என்று விசேஷிக்கிறாள். அன்றிக்கே, பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத்தேவி’ என்கிறாள் என்னுதல். ‘என்பெண்பிள்ளை’ என்கிற நினைவு இல்லை காணும் இவளுக்கு. ‘‘பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே’’ - இவளுக்கு நல் வார்த்தை சொன்ன நாக்கினைக் கழுவ வேணும் என்கிறாள். இனிப் போய் - வேறே சில பொருள்கள் கொண்டு போது போக்கவேண்டும் பருவத்திலே, அவற்றை விடும்படியன பாகம் பிறந்த இதற்குமேலே ஓர் ஏற்றம் உண்டாகப் போனாளோ? என்றது, இங்கே இருக்கச் செய்தே’’ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறாள் இல்லை’’ என்ற நிலை பிறந்ததாகில், இனி, அங்குப் போய் அநுபவிப்பது உண்டோ? (இதனைச் திருஷ்டாந்தத்தோடு விவரிக்கிறார் ‘இங்கே இருக்கச் செய்தே’ என்று தொடங்கி. ‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’. காமாத்3யதி4கரணம் 3-3-16, ‘உபஸ்தி2தே (அ)தஸ்தத்3 வசநாத்’ 3-3-40.) என்றது,ஸம்சாரத்தை விட்டுப் பரம பதத்துக்குச் சென்ற முக்தனுக்குப் பிறந்த ஞானம், இவளுக்கு இங்கே இருக்கச் செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ? என்றபடி.)

166. ‘‘பொன்னுலகாளீரோ’’ (6-8) - ப்ரவேசம்

மேல் திருவாய்மொழிகள் இரண்டும், மோஹமும் உணர்த்தியுமாய், இதில் தூதுவிடுகிறதாக அன்றோ இருக்கிறது (ஆழ்வாருடைய மோஹ நிலையும் உணர்ச்சிநிலையும், நாட்டாருடைய மோஹநிலை உணர்ச்சி நிலைகளைக் காட்டிலும் வேறுபட்டன என்பதற்கு உறுப்பாக விஷயங்களை அருளிச் செய்யத் தொடங்குகிறார் ‘மேல் திருவாய்மொழிகள் இரண்டும்’ என்று தொடங்கி.); மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்க்கு (ஞானாதிகரான இவர்க்கு, நனவு கனவு ஸுஷுப்தி என்பவைகளோடு சேர்த்துக் கூறப்படுகின்ற மோஹம் கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மயர்வற’ என்று தொடங்கி. என்றது, இவருடைய மோஹம், நனவு, கனவு முதலியவைகளோடு சேர்த்துக் கூறப்படுகின்ற மோஹம் அன்று என்றபடி.) ‘‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’’ என்னும் மோஹம் இல்லையே (உலகத்திலே, ஒவ்வொருவருக்கும் நனவு கனவு ஸுஷுப்தி, மூர்ச்சை, மரணம் என்று சொல்லப்படுகின்ற ஐந்து அவஸ்த்தைகள் உண்டு; அவற்றுள் நனவாவது, புறக்கரணங்களும் அந்தக்கரணமும் தனதுதனது விஷயங்களை அறிந்து பற்றுகிற நிலை. கனவாவது, புறக்கரணங்கள் எல்லாம் அடங்க மனம் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க, இந்தச் சரீரத்தோடு ஒத்த வேறு சரீரங்களையும் பகலில் காண்கிற விஷயங்களோடு ஒத்த விஷயங்களையும் ஈச்வரன் உண்டாக்க, அதுகாரணமாக, முடிசூடுதல் முதல், தலை அறுப்புண்ணல் இறுதியாகக் காண்டல்.

ஸுஷுப்தியாவது, புறக்கரணங்களும் மனமும் அடங்க, உச்வாச நிஶ்வாசங்களாலே பிராணன் மாத்திரம் சஞ்சரித்துக் கொண்டிருக்க, நனவிலே தன்தன் விஷயங்களிலே இந்திரியங்கள் பரந்திருந்த காரணத்தால் வந்த இளைப்பெல்லாம் மாறும்படி, புரீதத் என்கிற நாடியிலே பரமாத்மாவின் ஸ்வரூபத்திலே சேர்ந்து சிரமம் எல்லாம் நீங்கி இருத்தல். மூர்ச்சையாவது, ஸூக்ஷ்ம பிராணனோடும், ஸூக்ஷ்ம சரீரத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கும் நிலை. மரணமாவது, எல்லாப் பிராணன்களும் தேஹ சம்பந்தத்தினின்றும் நீங்குதல். இப்படிப்பட்ட ‘மரணத்துக்குப் பாதி அவஸ்த்தையாயிருக்கும் மூர்ச்சை’ என்று வேதாந்தத்திலே சொல்லப்பட்டிருத்தலைத் திருவுள்ளம்பற்றி ‘மரணத்தில் பாதி அவஸ்த்தை’ என்கிறார். முக்3தா4தி4கரணம் 3-2-4 - ‘முக்3தே4(அ)ர்த்த4ஸம்பத்தி: ‘ பரிஶேஷாத் - 3-2-10, - மூர்ச்சையடைந்த மனிதனின் நிலை, (மரணத்தின்) பாதி நிலையாகும்; (இந்த்ரியங்கள் முதலானவற்றின் எல்லாத் தொழில்களும் அதிர்ச்சியால் அடங்கியிருக்கையால், விழிப்பும், தூக்கமும், கனவுமல்ல; சவக்களை முதலானவை யில்லாமையால் மரண நிலையு மல்ல; ஆகையால் மரணத் தின் பாதி நிலையே) எஞ்சி நிற்கையால். என்பது இந்த ஸூத்திரத்தின் பொருளாகும்);

இனி இவர்க்கு மோஹமாவது புறத்திலேயுள்ள பொருள்களை நினைத்தற்கும் இயலாதவராய் விஷயங்களி னின்றும் அந்தக்கரணம் விடுபட்டதாய், மனத்திற்கு அவனே விஷயமாய், அவன் குணங்களையே அநுபவித்தல். அதாவது, ஆத்மாவாய் இருப்பவனே ஞானத்திற்கு விஷயமாய்த் தன்னை மறக்கை.

மேல் திருவாய்மொழியில் நிலை (’’மாலுக்கு’’ (6-6 பதிகம்) என்ற திருவாய்மாழியிலும், ‘‘உண்ணுஞ் சோறும்’’ (6-7 பதிகம்) என்ற திருவாய்மொழியிலும் உண்டான மோஹத்தையும், உணர்ச்சியையும் திருஷ்டாந்தத்தோடு காட்டு கிறார் ‘மேல்’ என்று தொடங்கி. ‘மேல் திருவாய் மொழியில்’ என்றது, ‘‘மாலுக்கு’’ என்ற திருவாய்மொழியில் என்றபடி.

‘‘தத்3தை4தத் பஶ்யந் ருஷிர் வாமதே3வ: ப்ரதிபேதே3 அஹம் மநுரப4வம் ஸூர்யஶ்ச’’ (ப்ருஹ. 3-4-10) - நானே மனுவாகவும், ஸூர்யனாகவும் ஆனேன்; (நானே மநுவையும், ஸூர்யனையும் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை எனக்கு அந்தர்யாமியாகக் கொண்டிருக் கிறேன்)’’ என்று பரமாத்மாவைக் கண்ட வாமதேவரிஷி அறிந்தார்; உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘ப்ரகாஶாதி3 வச்சா வைஶேஷ்யம் ப்ரகாஶஶ்ச கர்மண் யப்4யாஸாத்’ 3-2-24, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த ச்ருதிச்சொற்றொடரை மேற்கோள் காட்டுகிறார். . ‘‘யத்ர ஸர்வம் யதஸ்ஸர்வம் யஸ்ஸர்வம் ஸர்வதஶ்சய:, ஸர்வக3த்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தி2த:’’ - (ஸ்ரீ விஷ்ணுபுராணம். 1.19:85.) ‘யாதொரு விஷ்ணுவிடத்தில், ஸர்வபதார்த்தமும் (இருக்கிறதோ), எங்கிருந்து ஸர்வமும் உண்டாகிறதோ, எவர் ஸர்வாத்மாவாக இருக்கிறாறோ, எவர் எல்லாவற்றிற்கும் சரண்யனாய் இருக்கிறாறோ, அநந்தன் (மூன்றுவித பரிச்சேத ரஹிதன்) எங்குமிருப்பதால், நான் அவராகவே இருக்கிறேன்’ என்பது பராசரமஹரிஷியின் கருத்தாகும்)

‘‘நான் மநு ஆகின்றேன்’’ என்றும், ‘‘அனந்தன் என்னும் திருநாமமுள்ள அப்பரம்பொருள் எங்கும் இருப்பதால் நான் அப்பரம்பொருளாகவே இருக்கிறேன்’’ என்றும் சொல்லுகிற நிலைபோலே. உணர்த்தியாவது, ‘‘அந்தப் பிரஹ்லாதன் மீண்டும் ஆகாசம் முதலியவற்றோடு கூடிய உலகத்தைப் பார்த்துத் தனது தோற்றத்தால் தன்னைப் பிரஹ்லாதனாக நினைத்தார்’’ எள்கிற பிரஹ்லாதனைப் போலே தம்மையும் உணரக்கூடியவராய் உலக விருத்தாந் தத்தையும் நினைக்கக் கூடியவராதல். நிர்க்குணமான விஷயத்திலே அன்றே இவர் மூழ்கியது, குணாதிக விஷயத் திலேயன்றோ. சேஷிபக்கலிலே நினைவுண்டானால் சேஷ பூதனான தன்னையும் காணும் அன்றோ. மேல், நெடும்போது அவன் குணங்களை நினைக்கையாலே தரித்து வலிமை குறைவும் நீங்கிப் புறத்திலேயுள்ள பொருள்களையும் நினைக்கக்கூடிய நிலையை அடைந்தார்.

167. ‘‘நீராய்நிலனாய்த் தீயாய்க்காலாய் நெடு வானாய்* சீரார்சுடர்களிரண்டாய்ச் சிவனாய் அயனானாய்!*’’ (6-9-1)

‘‘அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்’’ என்கிறபடியே, முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி, இவற்றைக் கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ (ஐம்பெரும் பூதங்களைச் சொன்னது, அவற்றின் காரியமான அண்ட சிருஷ்டிக்கும் உபலக்ஷணம் என்று கொண்டு, பஞ்சீகரணத்தால் அல்லது அண்ட சிருஷ்டி கூடாமையாலே பஞ்சீகரணத்தைக் காட்டுகிறார் ‘இவற்றைக் கொண்டு’ என்று தொடங்கி.

நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை யைம்பால் இயல்நெறி வழாமைத்
திரிவில் சொல்லொடு தழா அல் வேண்டும்.

என்பது, தொல்காப்பியம் மரபியல், 31.

காரியம் கொள்ளுமிடத்தில் - அண்டரூபமான காரியத்தைச் செய்யுமிடத்தில். ‘ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டியிருக்குமன்றோ’ என்றது, பிரிக்கப்படுகின்ற ஒருபாதியைக் காட்டிலும், பிரிக்கப்படாத ஒருபாதி பிரதானமாக வேண்டியிருக்கும் என்றபடி.) ;

‘‘ஐம்பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன’’ என்றே அன்றோ படைக்கும் முறைதான் இருப்பது.

இவைதாம் ஒருபொருளும் அன்றே (ஒன்றில் ஒன்று அதிகமாயிருத்தலைப் படைக்கும் கிரமமாக வேண்டுவான் என்? சமப்பிரதானமாயிருத்தல் சிருஷ்டிக் கிரமம் ஆனாலோ? எனின், ‘‘நாநா வீர்யா: ப்ரதக் பூதா:’’ (விஷ்ணு புராணம்.1.2:) என்ற ச்லோகத்தைத் திருவுள்ளம்பற்றி ‘இவைதாம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.); பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும் அன்றோ; அது செய்யும்போது (பலபொருள்களை ஒரு பொருளாக்கிக் காரியம் கொள்ள வேண்டும் என்னுமதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘அது செய்யும்போது’ என்று தொடங்கி. செதுகு - கூளம்.), குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறு போலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி (ஐம்பெரும் பூதங்களைச் சொல்லுமிடத்து, படைப்பு முறையிலேயாதல், அழிக்கு முறையிலேயாதல் கூறாமல், முறைபிறழக் கூறியதற்குக் காரணம் அருளிச் செய்கிறார் ‘அது நீர்ப்பண்டமாகையாலே’ என்று தொடங்கி.), பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக் கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி.

இவ்வளவும் முதலில் ஸங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி நின்றது. இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே அன்றோ (அண்ட சிருஷ்டியைச் சொன்ன பின்னர், சந்திரசூரியர்களை அருளிச்செய்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார் ‘இனி, பெரியதொரு’ என்று தொடங்கி.); அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி. நீர்க்களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி (இருவரில் ஒருவரைப் படைத்தால் போதியதாமே? இருவரையும் படைப்பான் என்? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘நீர்க்களிப்பு’ என்று தொடங்கி). அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க் கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டுவர ஒருவன் அழித்துக்கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி.

ஆயின், சிவனை முற்படச்சொல்லுவான் என்? என்னில், அழித்தலை முன்னாகக் கொண்டேயன்றோ படைத்தல்தான் இருப்பது. ‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே, ‘‘யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொரு வனுக்கு மண் முதலியவை சரீரமோ’’ என்கிறபடியே, சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது. ‘‘யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ 5-7-7) - எவனுக்கு பூமி சரீரமாகிறதோ, ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ யமயதி’’ (ப்ருஹ. 5-7-26) - எவனுக்கு ஆத்மா சரீரமாயிருக்கிறதோ, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 , ‘அரூபவதே3வ ஹி தத் ப்ரதா4நத்வாத்’ 3-2-14, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் காணப்படும் மேற்கொள்.

‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப்படுத்திச் சொல்லுகை யாலே, நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்ற வர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று. உலகத்தைப் படைத்தது உன்னை அடைவ தற்காக அன்றோ? உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது? (’’நீராய்........ ..அயனானாய்’’ என்றதற்கு, இரண்டு கருத்து அருளிச் செய்கிறார். முதல் கருத்து, உலகமே உருவமாக இருக்கிற இருப்பைக் காட்டினால் மாத்திரம் போதாது, அசாதாரண விக்ரஹத்தையும் காட்ட வேண்டும் என்பது. இரண்டாவது கருத்து, படைப்புக்குப் பயன் எல்லாரும் முத்தியைப் பெறுதலே அன்றோ? அதனைப் பெற வேண்டாவோ? என்பது. இவற்றுள், முதல் கருத்தை, இத்திருப்பாசுரத்தின் அவதாரிகையாலும், ‘இது அறியாமல்’ என்று தொடங்கும் வாக்கியத்தாலும் அருளிச்செய்து, இரண்டாவது கருத்தை அருளிச் செய்கிறார் ‘உலகத்தைப் படைத்தது’ என்று தொடங்கி. ‘உலகத்தைப் படைத்தது’ என்றது முதல் ‘நீ பெற வேண்டாவோ? என்றது முடிய வாக்கியங்கள், ஒன்றனை ஒன்று விவரணம் செய்கின்றன. ‘அது கிடக்க’ என்றது, என்னுடைய துயரைப் போக்குதல் கிடக்க என்றபடி.) படைப்புக்குப் பிரயோஜன மாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்துகொண்டிருக்கிற ஒருவனை அந்தமில் பேரின்பத்தே கொடுபோய் வைக்கை அன்றோ.

அது கிடக்க, இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெறவேண்டாவோ? ‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’ (நேரே காணல்வேண்டும் என்பது மாத்திரமே அல்லாமல், படைத்தல் முதலிய செயல்களையும் அருளிச்செய்கையாலே, இவருடைய ஞானத்தின் தெளிவினை நினைத்து வியாக்யாதா ஈடுபடுகிறார் ‘நீராய்’ என்று தொடங்கி.) என்று, இவர் தமக்கு ஈச்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப்போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

168. ‘‘....எண்மீதியன்றபுறவண்டத்தாய்! (6-9-5)
இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன’’ (அண்டங்கள் பலப்பல என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் இப்படிப்பட்ட’ என்று தொடங்கி.

‘‘அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச,
ஈத்ருஶாநாம் ததா தத்ர கோடி கோடி ஶதாநி ச ‘‘ (ஸ்ரீவி.பு. 2-7-27) ‘அந்த பிரகிருதியில் ஆயிரம் அண்டங்களுடைய ஆயிரங்களும், பதினாயிரங்களும், இப்படிபட்ட அண்டங் களுடைய, அனேக கோடிகள் இருக்கின்றன’. என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணத்தின் வார்த்தை.

169. ‘‘தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு’’ - (6-9-11)

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு - கேள்வி விமரிசம் (ஆராய்ச்சி-மனனம்) பாவனை இவைகளால் அளவிடமுடியாத திருமகள் கேள்வனுக்கு. ‘‘இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வி யினாலும் அடையத்தக்கவன் அல்லன்’’ என்கிற படியே. ‘‘நாயமாத்மா ப்ரவசநேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந I யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) - ‘இந்தப் பரமாத்மா ச்ரவண மனன த்யானங்களால் மட்டுமே அடையத்தக்கவனல்லன். எவனை இவன் வரிக்கிறானோ அவனாலேயே இவன் அடையத் தக்கவன். அவனுக்கு இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான்’, பராதி4கரணம் 3-2-7, ‘ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3 வத் ‘ 3-2-33, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் பாஷ்யகாரரால் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது.

கேவலம் கேள்வி முதலானவைகட்கு அப்பாற்பட்ட வனாயிருப்பான்; அல்லாதபோது இவை தாம் அநுபவமாய்ச் சேருமன்றோ. இதற்கு அடி, திருமகள் கேள்வனா யிருத்தலாதலின் ‘திருமாலுக்கு’ என்கிறார்.

170. ‘‘உலகமுண்ட பெருவாயா’’ (6-10 பதிகம்) - ப்ரவேசம்

மிப்பெரிய துன்பத்தோடே பரமபதத்திலே கேட்கும் படி கூப்பிடச்செய்தேயும், ஸர்வரக்ஷகனானவன் வந்து முகம் காட்டாமையாலே மிகவும் தளர்ந்தவராய், திருமகள் கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தனவாய், உபயவிபூதிகளோடு கூடியவனாய், எல்லா நற்குணங் களையும் உடையவனாய், ‘‘நினைவிற்கும் எட்டாத ஸ்வரூபத்தையுடைய உலகநாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடும் கூட ஸ்ரீவைகுண்டம் என்ற சிறந்த உலகத்தில் எழுந்தருளி யிருக்கிறார்’’ என்கிறபடியே,

  வைகுண்டே2 து பரேலோகே ஶ்ரியா ஸார்த்3த4ம் ஜக3த்பதி: I ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா ப4க்தைர் பா4க3வதைஸ்ஸஹ II

‘நினைவுக்ககெட்டாத ஸ்வரூபத்தையுடைய ஜகத்பதியான விஷ்ணுவானவர், மனசீலர்களாலும் கைங்கர்ய பரர்களாலும், பிராட்டிமாரோடு கூட ஸ்ரீவைகுண்டம் என்கிற நித்யவிபூதியில் எழுந்தருளியிருக்கிறார்.’

நித்தியஸூரிகட்கு காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கக்கூடிய ஸர்வேச்வரன், பலரும் நம்மை இழக்க நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத் தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அனுபவித்தான்.

171. அகலகில்லேன்இறையுமென்று
அலர்மேல்மங்கையுறைமார்பா*
நிகரில்புகழாய்! உலகம்மூன்றுடையாய்!
என்னையாள்வானே!*
நிகரிலமரர்முனிக்கணங்கள்விரும்பும்
திருவேங்கடத்தானே!*
புகலொன்றில்லாஅடியேன்
உன்னடிக்கீழ்அமர்ந்துபுகுந்தேனே. (6-10-10)

நம் ஆசார்யர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேஷத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார். ஆசார்யர்களுக்கெல்லாம் முதல்வருமாய், ‘‘மயர்வற மதிநலம் அருளினன்’’ என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவையுடைய வருமான இவர் ஏற்றுக் கொண்டமை யாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு. இந்த உபாயத்தைப் பற்றி வேறு பிரயோஜனங்களைக் கொள்வாரும், வேறு ஸாதனங்களைப் பற்றி இவனையே பிரயோஜனமாகப் பற்றுவாருமாய் இருப்பர்கள் புறம்புள்ளார்.

அங்ஙன் அன்றிக்கே, இவனையே ப்ராப்பியமும் ப்ராபகமுமாக அறுதியிட்டு இருக்கிற ஏற்றம் உண்டு இவர்க்கு. ப்ராப்பியம் இவனேயாகில், வேறு சாதனங்களை மேற் கொண்டால் வரும் குற்றம் என்? என்னில், அவை ஸாத்தியமுமாய்ப் பலவுமாய்ச் செய்யமுடியாதனவுமாய் ஸ்வரூபத்துக்குத் தக்கன அல்லாதனவுமாய் இருப்பனவாம். இப்படி இருக்கும் சாதனங்கள் பல. அவை யாவை? என்னில், கர்மயோக, ஞானயோக, பக்தியோகங்கள்.

கர்மயோகமாவது (கர்மயோகம் முதலானவைகளும், திருநாமஸங்கீர்த்தனம் முதலானவைகளும் வேதாந்த மரியாதை களாலே அங்கங்களாகச் சாதிக்கப்படுவன அன்றிக்கே, இதிஹாச புராணங்களின் கூற்றாலே ஸ்வதந்த்ர ஸாதனங்கள் என்கிறார். ‘கர்மயோகமாவது’ என்று தொடங்கி. ஆத்மாவை உள்ளபடி அறிகிறஞானமாவது, சரீர சரீரிபாவ ஞானம். ‘பலத்தில் விருப்பமில்லாதவனாகியும்’ என்றது, சுவர்க்காதி பலங்களில் ஆசை இல்லாதவனாய் என்றபடி.

‘‘நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாதவனாகி’ என்றது, சுவர்க்காதி பலங்களுக்குச் ஸ்வதந்திர ஸாதன கர்த்தாக்களைப்போல் அன்றிக்கே, தலைவனாக இருத்தல் அவன் அதீனமாகையாலே ஈச்வரனைத் துணையாகக் கொண்டு தான் கர்த்தாவாக இருத்தல் என்பதனைத் தெரிவித்தபடி. ‘‘பற்றையும் விட்டவனாகி’’ என்றது, புத்தித் தியாகத்தைக் குறித்தபடி. ‘‘விரோதியான பாபம்’’ ஞானம் தோன்றுவதற்குத் தடையாகவுள்ள பாபம் என்றபடி. ‘ஸ்வரூபப் பிரகாசம்’ என்றது, ஆத்ம ஸ்வரூபம் நன்றாகத் தோன்றுதலைக் குறித்தபடி. பரபக்தியாவது, பகவானைச் சேர்ந்திருக்கும் காலத்தில் இன்பமும், பிரிந்திருக்கும் காலத்தில் துன்பமும் அடைதல். பரஞானமாவது, பகவானை நேரே தெளிவாக அறிதல். பரமபக்தியாவது, பிரிவில் ஸத்தைக்கே கேடு பிறக்கும்படியா யிருக்கை).

ஆத்மாவை உள்ளபடி அறிகின்ற ஞானம் முன்னாகத் தன் சாதிக்கும் தன் ஆச்ரமத்துக்கும் தக்கதாய் விதிக்கப்பட்ட கர்மத்தைப் பலத்தில் விருப்பமில்லாதவனாகியும், நாம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாதவனாயும், பற்றையும் விட்டவனாகிப் பகவானுக்குச் செய்யப்படும் ஆராதனம் என்ற எண்ணத்தோடு செய்தல் வேண்டும்; அவ்வாறு செய்யவே விரோதியான பாபம் அழியும்; அது அழியவே மனம் மலம் அறும்; அது அறவே ஸ்வரூபப் பிரகாசமும் உண்டாம்; அது உண்டாகவே பகவானை அறிகின்ற ஞானமும், அவனிடத் தில் பிரேமமும் பிறக்கும்; பின்னர், பரபக்தி பரஞான பரமபக்தியாய்ப் பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம்.

ஞானயோகமாவது, இந்திரியங்களை நியமித்துக் கொண்டு ஸ்வரூபத்தை விஷயமாக்கினால் பகவானை அறிகிற ஞானமும் அவன் விஷயமான பிரேமமும் பிறக்கும்; அவை பிறக்கவே பரபக்தி, பரஜ்ஞான, பரமபக்திகளும் பிறக்க, பின்பு பேற்றோடே சேர்ப்பிப்பது ஆம். அங்ஙன் அன்றிக்கே, மேலே கூறிய கர்மஞானங்கள் இரண்டனையும் பகவத் விஷயத்திலே யாக்குவது (’’கர்மஞானங்கள் இரண்டனையும் பகவத் விஷயத்திலே ஆக்குவது’’ என்றது, கர்மத்தைப் பகவானுடைய ஆராதனமாகவும், ஞானத்தை ஈச்வர விஷயமாகவும் ஆக்குவது என்றபடி).

மந்மநா ப4வ மத்3ப4க்தோ மத்4யாஜீ மாம் நமஸ்குரு I
மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:II (ப.கீ. 9-34) ‘‘என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்திய வனாக ஆவாயாக. என்னிடம் மிகவும் ப்ரீதியுடை யவனாக ஆவாயாக. என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக. என்னை வணங்குவாயாக, என்னையே மேலான ஆச்ரயமாகக் கொண்டவனாய், இவ்வண்ணமாக நெஞ்சைப் பழகுவதன் மூலம் என்னையே அடைவாய்’’ என்கிறபடியே செய்ய, பரபக்தி பரஞான பரமபக்திகள் பிறக்கும்; பின்பு, பேற்றோடே தலைக்கட்டுவது பக்தியோகம் எனப்படும்.

இவைபோல் செய்தற்கு அருமையுடையன அன்றிக்கே, திருநாமத்தை எளிதான உபாயமாக விதித்தது ; எங்கே? என்னில் (’விதித்தது’ என்றது மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் ஸஹஸ்ரநாமத்தைப் பேசுகிற இடத்தைத் திருவுள்ளம்பற்றி. அதனை விரித்து அருளிச் செய்வதற்காக, அது சம்பந்தமான ஐயப்பாட்டை அநுவதிக்கிறார். எங்கே? என்னில்’, என்று தொடங்கி.), பீஷ்மர் தருமபுத்திரனுக்குப் பல தருமங்களையும் சொல்ல, ‘‘தருமங்கள் பலவற்றிலும் எந்தத் தருமம் உம்மால் மேலான தருமமாகக் கொள்ளப்பட்டிருக்கி றது; பிறவி எடுத்தவன் எதனை ஜபித்தால் பிறவியி னின்றும் ஸம்சாரம் என்னும் தளையினின்றும் விடுபடுவான்’’ என்று தர்மபுத்திரன் கேட்க,

கோ த4ர்ம: ஸர்வத4ர்மாணாம் ப4வத: பரமோ மத: I கிம் ஜபந்முச்யதே ஜந்து: ஜந்ம ஸம்சாரப3ந்த4நாத் II (மஹாபாரதம் ஸஹஸ்ரநாம அத்.)

	‘‘ஸகல தர்மங்களிலும் எந்த தர்மம் உம்மால் மேலாக ஸம்மதிக்கப்பட்டது, ஜன்மமெடுத்தவன், எதை ஜபித்தால் ஜன்மமென்றும், ஸம்சாரமென்றும் சொல்லப்படும் தளையி னின்றும் விடுபடுகிறான்’’, என்கிறபடியே, உம்முடைய நெஞ்சால் அறுதியிட்டிருக்கும் மேலான தருமத்தைச் சொல்லவேணும் என்ன, ‘‘இது, எல்லாத் தருமங்களிலும் மேலான தருமமாக என்னால் மதிக்கப்பட்டது; அது யாது? எனின், தாமரைக் கண்ணனான நாராயணனைப் பக்தியுடன் மனிதன் தோத்திரங்களால் எப்பொழுதும் அர்ச்சனை செய்தல்’’ என்று பீஷ்மர் பதில் அளித்தார்.

ஏஷமே ஸர்வத4ர்மாணாம் த4ர்ம: அதி4கதமோ மத: I யத்3ப4க்த்யா புண்ட3ரீகாக்ஷம் ஸ்தவை: அர்சசேத் நர:ஸதா3II (மஹாபாரதம் ஸஹஸ்ரநாம அத்.) ‘திருநாமம்’ என்றது, திருநாம சங்கீர்த்தனத்தினை. மிக உயர்ந்த தருமம் திருநாமம் என்று சொன்னார் அன்றோ. நன்று, திருநாமம் ஸாதனத்திற்கு அங்கம் அன்றோ? அது, தானே ஸாதனமாமோ? என்னில், ‘‘பிறவியினின்றும் ஸம்சாரமாகிற தளையினின்றும் விடுபடுகிறான்’’ (’’கோ தர்ம: ................... ஸம்சாரபந்தநாத்’’) என்று, விரோதி நீங்குதலையும், ‘‘நித்தியமான பரம்பொருளை அடைகிறான்’’

வாஸுதே3வ ஆஶ்ரய: மர்த்ய: வாஸுதே3வ பராயண: I
ஸர்வபாப விஶுத்3தா4த்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம் II

(மஹாபாரதம் ஸஹஸ்ரநாம அத்.) என்று, பலத்தை அடைதலையும் சொல்லித் தலைக் கட்டுகையாலே, விரோதிகள் நீங்குதல் முன்னாக விரும்பப் படுகிற மோக்ஷத்தைப் பெறுதற்கும் திருநாமம் தானே ஸாதனமாம்.

‘இந்தத் தேசம் பரிசுத்தமானது, மிக உயர்ந்தது, புண்ணியகரமானது, விரும்பியவையனைத்தையும் கொடுக்கிறது’’

ப4த்3ரம் ப4த்3ரப்ரத3ம் புண்யம் தீர்த்தாநாம் உத்தமம் விது3: I
பவித்ரம் பரமம் புண்யம் தேஶ: அயம் ஸர்வகாமது4க் II (கருடபுராணம்)

‘‘மங்களகரமும் மங்களத்தைக் கொடுப்பதும், பரிசுத்தமானதும், ஸர்வதீர்த்தங்களுக்கும் உத்தமமுமாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள். இந்த தேசம் மஹா சுத்தியுள்ளது, மிக உயர்ந்தது, புண்யகரமானது, எல்லா இஷ்டங்களையும் கொடுக்கின்றது’’ என்கிறபடியே விரும்பினவற்றை எல்லாம் பெறுதற்குச் ஸாதனமாக தேசவாசத்தைச் சொல்லிற்று.

‘‘எல்லா ஆராதனங்களுக்குள்’’, ஆராத4நாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: ஆராத4நம் பரம் I தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீ’3யாராத4நம் பரம் II

என்பது பிரமாணம் என்று தொடங்கிப் ‘‘பாகவதர் களை ஆராதிக்கின்ற ஆராதனமானது மிகச் சிறந்தது என்று யாவராலும் கூறப்பட்டது’’ என்று முடிக்கையாலே, விரும்பியவை அனைத்தும் பாகவதர்களை ஆராதிக்கவே கிடைக்கும் என்று சொல்லிற்று. அப்படிச்சொன்ன செய்தற்கு அரியனவான உபாயங்கள் எல்லாம் அஹங்காரத்தின் ஸம்பந்தம் உடையனவாகையாலே விடத்தக்கவையாகச் சொல்லப்பட்டன (’உபாயங்கள் எல்லாம்’ என்றது, கர்மயோகம், ஞானயோகம், பத்தியோகம், திருநாமசங்கீர்த் தனம், தேசவாஸம், ததீயாராதனை என்று மேலே அருளிச் செய்தனவற்றைக்குறித்தபடி. ‘த்யாஜ்யமாகச் சொல்லப் பட்டன’ என்றது, சரம ச்லோகத்திலே த்யாஜ்யமாகச் சொல்லப்பட்டன என்றபடி.). ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த், தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே (ஆக, இப்படி மற்றைச் ஸாதனங்களிலேயுள்ள தோஷங்களை அருளிச்செய்து, இனி பிரபத்தியினுடைய மேன்மையை அருளிச் செய்யாநின்று கொண்டு, இதனை இத்திருப்பாசுரத்தால் அருளிச் செய்கிறார் என்கிறார் ‘ஒன்றாய்’ என்று தொடங்கி.),

‘‘ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் ப்ரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்’’ ‘‘தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:’’ - ‘ஆதலால் கீழ்ச்சொன்ன தபஸுக்குள், ப்ரபத்தி வித்யை யானது மேற்பட்டதாகச் சொல்லுகிறார்கள்’ (தைத்தி.உப.) என்கிறபடியே, சொல்லப்படுகிற ப்ரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப்பாசுரத்தால். மேல் ஒன்பது பாசுரங்களாலும் சரண்யனான ஸர்வேச்வரன் ஸ்வரூபத்தை யும், அதிகாரி ஸ்வரூபத்தையும் சொல்லி, சரணாகதியின் ப்ரகாரத்தைச் சொல்லுகிறார் இப்பாசுரத்தால் (இனி, அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு நியதவிஷயம் என்னுமதனையும் காட்ட வேண்டும் என்று திருவுள்ளம்பற்றி, பரத்வம் முதலிய நிலைகளுக்குள்ள அருமையையும், அர்ச்சாவதாரத்தினுடைய எளிமையையும் அருளிச்செய்யத் தொடங்குகிறார் ‘மேல் ஒன்பது பாசுரங்களாலும்’ என்று தொடங்கி.).

அகலகில்லேன் இறையும் - ஒரு கணநேரமும பிரிய ஆற்றலுடையவள் அல்லேன். இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில், மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய், உபயவிபூதிநாதனையும் நியமிக்கின்ற வளுமாய் இருக்குமவள் கண்டீர். மூன்றுவித சேதனர்கட்கும் தலைவி என்னுமதற்குப் பிரமாணம், ‘‘எல்லா ஆத்மாக் களுக்கும் ஈச்வரியாய் இருப்பவளை’’ என்னக் கடவதன்றோ, ‘‘ஈஶ்வரீம் ஸர்வபூ4தாநாம்’’ (ஸ்ரீஸூக்தம்) - ஸர்வ ஜகத்துக்கும் ஈஶ்வரியாயுள்ள (பிராட்டியைச் சரணமடை கிறேன். உபயவிபூதி நாதனையும் நியமிக்கின்றவள் என்னுமதற்குப் பிரமாணம், ‘‘பும் ப்ரதா4ந ஈஶ்வர ஈஶ்வரீம்’’ என்று, பிரதான புருஷர்களுக்கு ஈச்வரன் அவன், அவனுக்கு இவள் ஈச்வரி என்று சொல்லுகையாலே. ஆக எல்லாரையும் நியமிக்கின்றவள் என்னுமிடம் சொல்லிற்று.

இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயானதன்மையாலே நியமிக்கும், ஈச்வரனைக் காதல் குணம் காரணமாக நியமிக்கும். தாயானதன்மை ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டது; காதல் குணம் ஒவ்வொரு காலத்தில் உண்டாமது ஆகையாலே வந்தேறி ஆகாதோ? என்னில், ஆகாது. எங்ஙனே? என்னில், உபாதி நித்தியமாகையாலே அதுவும் நித்தியம். ஈச்வரன் படைத்தல் முதலாயினவற்றைச் செய்யும்போதும் இவள் நியமிக்கின்றவள் ஆவள்; ‘எவளுடைய முகத்தைப் பார்த்து அவளது கடைக்கண்ணின் நோக்கிற்கு வசப்பட்டவனாய் முழுவதையுஞ் செய்கிறான்’’ என்கிறபடியே, (‘‘யஸ்யா வீக்ஷ்ய முக2ம் ததி3ங்கி3தபராதீ4நோ வித4த்தே (அ)கி2லம் I க்ரீடே3யம் க2லு நாந்யதா2(அ)ஸ்ய ரஸதா3 ஸ்யாதை3கரஸ்யாத் II (ஸ்ரீஸ்தவம்), எல்லாவுலகையும் படைத்து அளித்து அழிப்பதையும், ஸ்வர்க்க, நரக, மோக்ஷங்களை கொடுப்பதையும் செய்யும் போது, பகவான் எவளுடைய திருமுகமண்டலத்தைப் பார்த்துக் கொண்டு அதனுடைய இங்கிதத்திற்கு வசப்பட்டவனாய், எல்லாக் காரியங்களையும் செய்கிறானோ, அந்தப் பிராட்டி (நமக்கு) மங்களத்தை அளிக்கட்டும்; பகவான் அவளுடன் ஒரே அபிப்ராயத்தை உடையவனாயிருக்கிற படியால், அவளுடைய இங்கித பராதீனனாக காரியங்களைச் செய்யாவிடில் அக்காரியங்கள் ரஸத்தை அளிக்கமாட்டா.)

அவள் கடாக்ஷம் அடியாகப் புருவநெறிப்பிற்குட் பட்டவனாய்க் கொண்டு படைத்தல் முதலியனவற்றைச் செய்யும். அது என்? ‘‘சரீர இந்திரியங்களோடு சேர்ப்பதற்குக் கருணையுள்ள மனத்தையுடையவன்’’ என்கிறபடியே, தன் திருவருள் அடியாக அன்றோ படைப்பது என்னில்? அவற்றின் செல்லாமை பார்த்துப் படைக்கில் அன்றோ திருவருள் காரணமாவது; தன் செல்லாமையாலே அவள் கடாக்ஷம் காரணமாகத் தன் ஸத்தை உண்டாக. அவள் பிரேரிக்க அருள் பிறந்து, அந்த அருள் காரணமாக அன்றோ அவன் படைப்பது.

நியமிக்குமிடத்தில் ‘‘இவ்வுலகிற்கு தலைவியாய், விஷ்ணுவிற்கு பத்திநியாய்’’ , ‘‘அஸ்யேஶாநா ஜக3தோ விஷ்ணுபத்நீ’’ - யஜு.ஸம். 4-4-12, ‘இவ்வுலகிற்கு ஈச்வரி யாகவும், விஷ்ணுவிற்கு பத்நினாகவுமிருப்பவள்’ என்றும், ‘‘விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி’’ -’’ விஷ்ணோ: ஸ்ரீரநபாயிநீ ‘‘ - ஸ்ரீவி.பு. 1-8-17, ‘இறைபும் அகலகில்லாத வளான இந்தப் பிராட்டி’ என்றும் சொல்லுகிறபடியே தன் ஸ்வரூபம் குலையாமே அன்றோ நியமிப்பது.

‘‘பக்தர்களோடும், பாகவதர்களோடும் கூட’’ என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக ‘அமரர் முனிக் கணங்கள்’ என்கிறது. ‘நிகர் இல்’ என்பான் என்? என்னில், இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்; ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே ஸம்சாரிகள் ஒப்பு அல்லர்; ப்ரக்ருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள் ஒப்பு அல்லர்; உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈச்வரன் ஒப்பு அல்லன்.

‘‘உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் நீங்க’’ என்று விலக்கி, ‘‘போகமாத்திரத்தில் ஒப்புள்ள அடையாளத் தாலும்’’ என்கிறபடியே. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6 ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத் வாச்ச - 4-4-17 - (முக்தனுடைய ஐச்வர் யம்) உலகைப்படைப்பது முதலான (பரம்பொருளுக்கேயுரிய) செயல்களைத் தவிர்ந்ததுதான்; (ப்ரஹ்ம லக்ஷணத்தைக் கூறும்) ப்ரகரணத்திலிருந்து (இது விளங் குகிறது); (உலகை நியமிப்பதைப் பேசுமிடங்களில் முக்தனுக்கு) ஸந்நிதி யில்லையாகை யாலும் (இது தேறுகிறது),

ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6, ‘போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச’ 4-4-21 - (ப்ரஹ்மாநுபவமாகிற) போகமாத்ரத்தால் (முக்தனுக்கு ப்ரஹ்மத்தோடு) ஒன்றுமையைக் கூறும் காரணத்தாலும் (ஜகத்வ்யாபார மற்றதே முக்தனுடைய செல்வம்), என்று இந்த இரண்டு ஸூத்திரத்திரங்களாலும் பொருள் உரைக்கப்படுகிறது.

பகவானுடைய அனுபவத்தில் மாத்திரம் ஸம்பந்தம் சொல்லுகையாலே. இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் ‘கானமும் வானரமும்’ என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது. ஸௌலப்யமாவது, உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசி அறச் ஸர்வசுலபமான அர்ச்சகபராதீனத்வம்.

ஆறாம் பத்து முற்றிற்று.

15

ஏழாம் பத்து

172. ‘‘எண்ணிலாப் பெருமாயனே’’ (7-1-1)

எண் இலாப் பெருமாயனே - ‘ஈச்வரன் இந்த மூல ப்ரக்ருதியினின்றும் இந்த உலகத்தைப் படைக்கிறான்’, என்றும், ‘என்னுடைய மாயை தாண்ட முடியாதது’, என்றும் சொல்லுகிறபடியே, எண்ணிறந்த செயல்களைச் செய்ய வற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக் கடவதான ப்ரக்ருதியைப் பரிகரமாகவுடையவனே!

‘‘அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விஶ்வமேதத் தஸ்மிம்ஶ் சாந்யோ மாயயா ஸந்நிருத்3த4:’’ (ச்வே. 4-9) - ‘இதிலிருந்து மாயீ அண்டத்தைப் படைக்கிறான்; அதில் மாயை நன்றாக அடக்கப்பட்டுள்ளது, இதரவ்யபதே3ஶா தி4கரணம் 2-1-7, ‘அதி4கம் து பே4த3நிர்த்தே3ஶாத்’ 2-1-22, என்ற ஸூத்திர விளக்கத்தில் இந்தக் கருத்தைத் தெளிவுபடுத்துகிறார் ஸ்ரீபாஷ்யகாரர்.

173. ‘‘வேதியா நிற்கும்’’ (7-1-3)

வேதியா நிற்கும் - அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன். ‘உடனாய்மன்னி’ (3-3-1) என்று பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே! வேதியா நிற்கும்- வேதனையே செய்யா நிற்கும், ‘தான் உயிருடன் வாழும் வகையிலும் அக்நிஹோத்ரம் செய்ய வேண்டும்’ என்றால், ‘ஸாயம் ப்ராத: மாலை காலை’ என்று ஒரு காலத்திலே ஒதுக்கா நின்றதன்றோ,’’யாவஜ்ஜீவமக்3நி ஹோத்ரம் ஜுஹோதி’’ (ஆப. ஶ்ரௌ. 3-14-6) - ‘உயிருள்ளவரை அக்நி ஹோத்ரத்தை க்ருஹஸ்தன் செய்ய வேண்டும்’. அதாவது, அவை, ஓர் மனிதர் உயிருடன் இருப்பதைச் சார்ந்திருப்பதால், கட்டாயமானதாக விதிக்கப் பட்டுள்ளது. விஹிதத்வாதி4கரணம், 3-4-8,’ விஹிதத்வாச் சாஶ்ர மகர்மாபி’ 3-4-32, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கம் அளிக்கப் படுகிறது.

174. ‘‘கங்குலும்பகலும்கண்துயிலறியாள்’’ (7-2-1)
‘பெருமாள் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராய் இருக்கிறார்’, என்கிறபடியே, இவளையும் தன் படி ஆக்கினான், என்றது, ‘மேலான ஒப்புமையை அடைகிறான்’ என்கிறபடியே, தம்மோடு ஒத்தபடியைக் கொடுத்தபடி. ‘‘நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி’’ (முண்ட. 3-1-3) - குற்றங்கள் நீங்கப் பெற்றவனாய் (பரமாத்மாவோடு) மேலான ஒற்றுமையை (முக்தன்) அடைடகிறான்’. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4 கரணம் 4-4-6 , ‘ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ - 4-4-17, என்ற ஸூத்திர விளக்கத்தில் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

கலவியில் அவன் உறங்க ஒட்டான்; பிரிவில் விரஹநோய் உறங்க ஒட்டாது; ஆகையாலே, இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கம் இல்லாமையாலே ‘கண் துயில் கொள்ளாள்’ என்னாமல், ‘கண் துயில் அறியாள்’ என்கிறாள்.

175. ‘‘உள் உருகும்’’ (7-2-3)

உள் உருகும், - ‘இப்படித் தடைகளையெல்லாம் போக்குமவன் வரக் காணாமையாலே, என்ன குறை உண்டாய் இழக்கிறேன்?’ என்று மனம் உருகுவாள். என்றது, ‘காலம் நீட்டித்தலுக்குக் காரணம் இன்றிக்கே இருக்க, பலியாது ஒழிந்தவாறே நீர்ப்பண்டம் போலே உருகுவாள்’ என்றபடி. ‘உருகின மாத்திரத்தில் கண்களால் காண முடியாத பொருள் கண்களுக்கு இலக்கு ஆமோ?’ என்பர்களே; ‘அருளாலே பெறுவார்க்கு அங்ஙன் ஒரு நியதி உண்டோ?’ என்னுமாயிற்று இவள். ‘கண்ணால் காண்கிறான் இல்லை’ என்கிறது, தாம் தாமே காண இழிவார்க்கு; ‘ந ஸந்த்3ருஶே திஷ்ட2திரூப மஸ்ய ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்’’ (தை.நா.1-10) (இப்பரமாத்மாவின் ரூபம் காணமுடியாதது; எவனும் இதைக் கண் முதலான இந்த்ரியங்களால் காண்பதில்லை.) என்று சாஸ்த்ரமே சொல்லிற்றன்றோ. உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘தத3வ்யக்தமாஹ ஹி’ 3-2-22 என்ற ஸூத்திரத்தில் இவ்வாறு விளக்கமளிக்கப் படுகிறது.

‘தனது அருளுக்கு இலக்கானவனுக்கு இந்தப் பரமாத்மா தனது வடிவை நன்கு காட்டுகிறான்’ (தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) அவனுக்கு இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான்’), என்கிறபடியே அவன்தானே காட்டுமன்று அருமை இல்லை.

176. ‘‘வெள்ளைசுரிசங்கு’’ (7-3) - ப்ரவேசம்

‘‘ஸமா த்3வாதஶ தத்ர அஹம்’’- ஸ்ரீரா.ஸுந்.33-17, - இப்போது ஒரு வேளை தரிசனமும் கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் (12 ஆண்டுகள்) அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்! ‘ராக4வஸ்ய நிவேசந’- ஸ்ரீரா.ஸுந்.33-17, - எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர (தடையேதுமில்லாமல்) நெடுங்காலம் அனுபவித்தேன். ‘‘பு4ஞ்ஜாநா மாநுஷாந் போ4கா3ந் ஸர்வகாம ஸம்ருத்3தி4நீ’’- ஸ்ரீரா.ஸுந்.33-17, (எல்லாவித விருப்பங்களும் முழுமையடையப் பெற்றவளாய் இருந்தேன்) - ‘எல்லாக் காமங்களையும் ‘ என்கிறபடியே, எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன். அப்படியும் அன்றே இங்கு; ‘அரசனே கல்யாண குணங்கள் பல என்கிறபடியே’ ‘‘ஸர்வாந் காமாந் ச2ந்த3த: ப்ரார்த்த2யஸ்வ’’ (கட.1-26) (விரும்பப்படும் எல்லாப் பொருள்களையும் இஷ்டப்படி வரமாக வேண்டிக்கொள்) ஸந்த்4யாதி4கரணம் 3-2-1 நிர்மாதாரம் சைகே புத்ராத3யஶ்ச - 3-2-2, என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

177. ‘‘என்னெஞ்சினூடே’’ (7-3-1)
நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப்பிரான்பிள்ளானைக் கண்டு, ‘‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வ்யாப்தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வ்யாப்தியாய் இருக்கும்; ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாஸகர்கட்கு அநுக்ரஹம் செய்தற் பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்ரஹத்தோடே வ்யாபித் திருக்கும்’ என்று அருளிச்செய்யக் கேட்டேன்’ என்று பணித்தார்; ‘மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும், ‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ என்றும், ‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து’ (பெரியாழ்.திரு.5-2-10) என்றும், ‘எவர்களுடைய மனத்தில் கருநெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும், ‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும் ‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு இந்தப் பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே அவ்வடிவே ஆயிற்று த்யானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது.

தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) அவனுக்கு இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான்’. பராதி4கரணம் 3-2-7 , ‘ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3வத் ‘ 3-2-33 என்ற ஸூத்திர பாஷ்யத்தில் இந்த வாக்கியம் மேள்கோளாகக் காட்டப்படுகிறது.

178. ‘‘என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்’’ (7-3-1)

என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் - எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை; நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடு கின்றீர்ககோள் இத்தனையன்றோ? விலக்குவதற்கு என்னைப் பின்பற்றி வருகின்றவர்களாமத்தனையோ வேண்டுவது? ‘எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லையாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன, ‘ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள். ‘முக்தன் ஜனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை’ என்கிறபடியே, பிரிந்தவர்களை நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?

‘‘நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’.க ாமாத்3யதி4கரணம் 3-3-16 ‘உபஸ்தி2தே (அ)தஸ் தத்3வசநாத்’ 3-3-40, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் அளிக்கப்பட்ட விளக்கமாகும்.

179. ‘‘விண்ணுள் ஏணுடைத்தேவர் வெளிப்பட்ட ஒலி’’ (7-4-5)

விண்ணுள் ஏணுடைத்தேவர் வெளிப்பட்ட ஒலி - ஸர்வேச்வரனோடு ஒக்க இன்னார் இன்னார் என்னும்படி தங்கள் தங்களைச் சமையவிட்டுக்கொண்டு செருக்கினை யுடையவர்களாய் ஓரோ இருப்பிடங்களையுடையவர்களாய் இருக்கிற தேவர்களின் கூட்டம் கண்ணுக்குத் தோற்றும்படி நின்று துதிக்கிற ஒலி. இந்த அந்தரஜாதிகளைத் தன்னுடனே ஒருசேர எண்ணலாம்படி தன்னைத் தாழவிட்டு வைக்குமே தன் ஸௌலப்பியத்தாலே! ‘அவன் ப்ரஹ்மன்; அவன் சிவன், அவன் இந்திரன்’, என்று ஒரு கோவையிலே எண்ணலாம்படி இருக்கிறவர்கள். ‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ: ஸேந்த்3ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட்’’ (தை. நா. 11-13)- ‘அவனே ப்ரஹ்மதேவன், அவனே சிவன், அவனே இந்திரன், அவனே, ஆகாசம், அவனே மிக உயர்ந்தவன் அனைத்தையும் ஆள்பவன்’. லிங்க3பூ4யஸ்த்வாதி4கரணம் 3-3-19 , ‘லிங்க3பூ4யஸ்த்வாத் தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ (3-3-43) என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச் சொற்றொடரை மேற்கோள் காட்டியுள்ளார்.

180. ‘‘அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்’’ (7-4-9)

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்- அன்றிக்கே, ‘பெயர் வடிவங்களை இழந்து, ‘ஸத் ஒன்றே’ இருந்தது என்கிற நிலையிலே ‘பல பொருள்கள் ஆகக் கடவேன்’ என்று நினைத்த அன்று முதல்’ என்றுமாம்.

‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3 விதீயம்’’ (சாந். 6-2-1) - ‘மென்மையானவனே! ‘ஸத்’ என்பது மட்டுமே முதலில் இருந்தது, தனியாக இருந்தது. இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை’.வியத3தி4கரணம் 2-3-1, ஶப்3தே3ப்4ய: - 2-3-6, ‘‘ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த் ஸ: ‘ 2-3-14, என்ற ஸூத்திரங்களில் இந்த வேதச்சொற்றொடர்கள் விவரிக்கப் படுகின்றன.

181. ‘‘அயோத்தியில் வாழும்’’ (7-5-1)

‘வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்!’ (நாச்சி. 8-9) என்றும், ‘நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்’ (நாச்சி. 11-5) என்றும், சொல்லுகிறபடியே, ‘அயோத்தியில் வாழும்’ என்கிறார், ‘பிராப்பிய தேசத்தில் வசிப்பதுதான் வாழ்ச்சியாக இருக்குமன்றோ? நித்தியப் பிராப்யமான பொருள் அன்றோ இங்கு எப்பொழுதும் அண்மையில் எழுந்தருளியிருக்கிறது? (’ப்ராப்யதேசம் பரமபதமாக இருக்க, இதனைப் ப்ராப்யதேசம் என்கைக்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘நித்தியப் பிராப்பியமான பொருள் அண்மையில் இருந்தால் யாதானும் ஒரு காலத்தில் நமக்கு அனுபவம் உண்டாவதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்).

182. ‘‘....திருவடி தாட்பாலடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே’’ (7-5-3)

திருவடி தாள்பால் அடைந்த - எல்லாப் பொருளு க்கும் ஸ்வாமியான கிருஷ்ணனுடைய திருவடிகளின் பக்கத்தைக் கிட்டின. ஸாயுஜ்ய லக்ஷண மோக்ஷமாகிறதுதான் இன்னது என்கிறது. என்றது, இடையீடு இன்றிக்கே கிட்டி நின்று நித்திய கைங்கர்யம் செய்யப்பெறுதல் என்பதனைத் தெரிவித்தபடி. ‘பரம்பொருளை அறிந்தவன் பரம்பொருள் போன்று ஆகிறான்’, (’’ப்3ரஹ்மவேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’’ (முண்ட. 3-2-9) - ‘எவன் ப்ரஹ்மத்தை அறிகிறானோ, அவன் ப்ரஹ்மமாகவே ஆகிவிடுகிறான்’. ஆவ்ருத்த் யதி4கரணம் 4-1-1 ‘ஆவ்ருத்திரஸ க்ருது3ப தே3ஶாத்’ 4-1-1) என்றும், ‘மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’(‘நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி’’ (முண்ட. 3-1-3) - குற்றங்கள் நீங்கப் பெற்றவனாய் (பரமாத்மாவோடு) மேலான ஒற்றுமையை (முக்தன்) அடைகிறான்’. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6 , ‘ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ - 4-4-17 ) என்றும், ‘தம்மையே ஒக்க அருள் செய்வர்’ என்றும், ‘என்னுடைய ஒப்புமையை அடைந்தவர்’ என்றும், ‘பரமாத்மாவோடு ஒத்தவன்’ என்றும் சொல்லுகிறவற்றால், வஸ்து ஐக்யம் சொல்லுகிறது அன்று; பேற்றில் வந்தால் அவனோடு இவனுக்கு எல்லா வகையாலும் ஒப்புமை உண்டு என்றது. ‘உலகத்தைப் படைத்தல் முதலியன நீங்கலாக’ என்றும், அனுபவத்தில் பரமாத்மாவோடு ஒப்புமை கூறுகிற காரணத்தாலும்’ (ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6 போ4க3மாத்ர ஸாம்ய லிங்கா3ச்ச 4-4-21, (ப்ரஹ்மாநுபவமாகிற) போகமாத்ரத்தால் (முக்தனுக்கு ப்ரஹ்மத்தோடு) ஒன்றுமையைக் கூறும் காரணத்தாலும் (ஜகத்வ்யாபாரமற்றதே முக்தனுடைய செல்வம்) என்றும், சொல்லுகையாலே ஸாயுஜ்யமாகிறது.

 ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று: அவன் திருவடிகளிலே கைங்கர்யம் செய்யும் என்கிறது; ‘யாவர் மிக்க பக்தியையுடையவர்களாய் உபாஸனை செய்கிறவர்களாய்ச் ஸமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ, அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்’, என்றும் சொல்லுகையாலே. தன்மை அறிவாரை அறிந்துமே - கேட்பார்க்கு விஷயம் உண்டாக்குகிறார்.

183. ‘‘தன்மை அறிபவர்தாம்’’ (7-5-4)

தன்மை அறிபவர்தாம் - உண்மை நிலையினை அறியுமவர்தாம். என்றது, ‘இதனுடைய படைப்பு அவனுக்காகக் கண்டது என்று இருக்குமவர்கள்’ என்றபடி; ‘காட்டில் வசிக்கும்பொருட்டே படைக்கப்பட்டாய்’ என்பது போலே. அன்றிக்கே, ‘உலகத்திற்குக் காரணமாகவுள்ள பொருளே உபாஸிக்கத் தக்கது என்று அறியுமவர்கள்’ என்னுதல்.

‘காரணப்பொருளே தியானம் செய்யத் தக்கது’ என்பது சுருதி. ‘வேதத்தின் பூர்வபாகத்தின் பொருளை விசாரித்தபின் ஞானமுடையவனாய் ப்ரஹ்மத்தை அறியக்கடவன்’ என்னா, ‘இந்த உலகத்திற்குப் படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் முத்தொழில்களும் எதனிடத்தினின்று உண்டாகின்றனவோ, அது ப்ரஹ்மம்’ என்னாநின்றதே அன்றோ? ‘‘காரணம் து த்4யேய:’’ (அதர்வ.உப.3) ‘காரணவஸ்துவே த்யாநம் செய்யத் தகுந்தது; கார்யவஸ்து த்யாநத்திற்கு தகுதியற்றது’ என்பது ஏற்படுகின்றபடியாலும் ‘அப்படிப்பட்ட பரமமான காரணவஸ்துவும் நாராயணனே; என்று அதர்வசிகோ பநிஷத்திலும், ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1 ‘அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ - 1-1-1 (கர்ம விசாரத்திற்குப்) பின், அவ்விசாரம் காரணமாகவே, ப்ரஹ்மத்தை அறிவதில் விருப்பம் செய்யப்பட வேண்டும், என்ற ப்ரஹ்ம ஸூத்திரத்தாலும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

184.A. ‘‘ ....நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’’ (7-5-4)

நன்மைப் புனல் பண்ணி - அழிப்பதற்குப் பரப்பின நீர் போல அன்று. ‘தண்ணீரையே முதலில் படைத்தான்’ என்கிறபடியே, முதன்முன்னம் தண்ணீரைப் படைத்து. நான்முகனைப் பண்ணி - ‘இவ்வளவும் வர அசித்தைக் கொண்டு காரியம் கொண்டு, ‘இவை இரண்டும் நம் புத்தி அதீனமான பின்பு இனிச் சித்தையும் கொண்டு காரியம் கொள்வோம்’ என்று பார்த்துப் பிரமனையும் படைத்து. ‘எவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ’, ‘எவனுக்கு மண் முதலியவை சரீரமோ’ (‘‘யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ 5-7-7) - எவனுக்கு பூமி சரீரமாகிறதோ, ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ யமயதி’’ (ப்ருஹ. 5-7-26) - எவனுக்கு ஆத்மா சரீரமாயிருக்கிறதோ, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 , ‘அரூபவதே3வ ஹி தத் ப்ரதா4நத்வாத்’ 3-2-14, என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் காட்டியருளியபடியே, இரண்டும் இவனுக்கு உறுப்பாய்ப் பரதந்திரமாய் அன்றோ இருப்பன? ‘எவன் பிரமனை முன்பு படைத்தானோ’ என்பது ‘‘யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம் ‘‘ (ச்வே. 6-18) - ‘எவன் ப்ரஹ்ம தேவனைப் படைக்கிறானோ’, அவன் ப்ரஹ்மத்தின் அருகில் இருக்கிறான். கார்யாதி4கரணம் 4-3-5 ‘ஸாமீப்யாத்து தத்3வ்யபதே3ஶ:’ 4-3-8, என்பது ச்ருதி வாக்கியம். ஒரு குழமணனைப் பண்ணி என்பாரைப் போலே ‘நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறார்.

184. ‘‘மல்லலரியுருவாய்ச் செய்தமாயம்அறிந்துமே’’ (7-5-8)

மல்லல் அரி உருவாய் - மல்லல் - பெருமை. ‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே, இரணியன் குளம்படியாம் படியாகப் பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே, மல்லல் என்று செல்வமாய், அதனால், ‘லக்ஷ்மிநரஸிம்ஹமாய்’ என்னலுமாம்; ‘நாராயணனே நரசிங்கன், அமரேச்வரியான நீ சத்தி’ என்னப்படுகின்றதே அன்றோ?’’உக்3ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுக2ம் I ந்ருஸிம்ஹம் பீ4ஷணம் ப4த்3ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம் யஹம் II (ந்ருஸிம்ஹதாபிந்யுபநிஷத்),’’ஸிம்ஹஸ்வரூபத்தை உடைத்தாயிருப்பதால், உக்ரனாயும், வீரனாயும், (மேலானவனாயும், ஸர்வவ்யாபியுமாய் இருப்பதால்) மஹாவிஷ்ணுவாயும், ஜ்வலிக்குமவனாயும், எல்லா விடங்களிலும் முகத்தை உடையவனாயும், ந்ருஸிம்ஹ ரூபியாகவும், பயங்கரனாகவும், மங்களகரனாகவும், ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பவனாகவுமுள்ள உன்னை நான் நமஸ்கரிக்கிறேன்.’’

அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ? செய்த மாயம் அறிந்துமே - சிறுக்கனுடைய சூளுறவு செய்த அக்காலத்திலே தோற்றி, இரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ்வாச்சரியமான செயலை அறிந்தும்.

185. ‘‘வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ’’ (7-5-10)

வார்த்தை அறிபவர் - மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒருவார்த்தை அன்றோ? வார்த்தை யாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ? ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’

‘‘ஸர்வ த4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ I அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:II’’ (ப.கீ.18-66)

‘எல்லா ஸாதநங்களையும் நன்கு விட்டு, என்னை ஒருவனையே உாபயமாக அநுஸந்திப்பாய், நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், வருந்தாதே’, என்கிறபடியே, பாவங்களைத் துண்டித்துக்கொண்டு போகைக்கும் உடலாயிருக்கையாலே பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா; பிரபத்தியை உபாயமாகப் பற்றினவர் ஆகையாலே. இனி ‘முக்தன் மக்களால் சூழப்பட்ட சரீரமாகிய இதனை நினைத்திலன்’, என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது? மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம்போலே இது. மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ - அவன் ‘என்னையே பற்று’ என்று சொல்லாநின்றால், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவர்களோ? ரஹஸ்யங்கள் எல்லா வற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் குழல் முடிக்கைக்காக?

186. ‘‘தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்’’ (7-5-11)

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு. ‘உன்னுடைய வார்த்தையின்படி செய்கிறேன்’ என்கிறபடியே, ‘தேவரீர் ஏவின அடிமை செய்யக் கடவேன்’, என்றான் அன்றோ? ‘அருச்சுனன்தான் எம்பெருமானைப் பெற்றானோ, இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க, கச்சிதே3தச்ச்2ருதம் பார்த்த2 த்வயைகாக்3ரேண சேதஸா I கச்சித3ஜ்ஞானஸம்மோஹ3: ப்ரதநஷ்டதே த4நஞ்சய II (ப.கீ.18-72)

குந்தீ புத்ரனே, (என்னால் சொல்லப்பட்ட) இந்த சாஸ்த்திரம் உன்னாலே ஒருமுகப்பட்ட மனத்தோடு, கேட்கப்பட்டதா? தனஞ்சயனே! உன்னுடைய அறிவின்மை யால் விளைந்த மயக்கம், அழிந்து விட்டதா?

நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்3தா4 தவத்ப்ரஸாதா3ந்மாச்யுத I ஸ்தி2தோஸ்மி க3தஸந்தே3ஹ: கரிஷ்யே வசநம் தவ II (ப.கீ.18-73)

அச்யுதனே! உன் அருளாலே (என்னைடைய) விபரீதஜ்ஞானம் அழிந்து, உண்மையறிவு என்னாலே அடையப்பெற்றது, ஐயம் நீங்கப்பெற்றவனாய். உண்மை உணரப்பெற்று நிலை நின்றவனாகிறேன், (போர்புரிய வேண்டுமென்று கூறிய உன் வார்த்தைப் படி, செய்கிறேன்)

‘உமக்கு அது கொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில், பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில், தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்; பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச் செய்தார். சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத் தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது.

இன்பக் கதி செய்யும் - தனக்குமேல் ஒன்று இல்லாததான ஆனந்தத்தோடு கூடிய பேற்றினைப் பண்ணிக் கொடுக்கும், தெளிவுற்ற கண்ணனை - இவன் தெளியமாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான கைங்கர்யத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடியே இருக்கும் கண்ணபிரானை. ‘நான் நினைக்கிறேன்’ என்பது போல. (அவன் தெளிந்திருப்பதற்கு த்ருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நான் நினைக்கிறேன்’ என்று.

ஸ்தி2தே மநஸி ஸுஸ்வஸ்தே2 சரீரே ஸதி யோநர: | தா4துஸாம்யே ஸ்தி2தே ஸ்மர்த்தா விஶ்வரூபஞ்ச மாமஜம் || ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட2பாஷாணஸந்நிப4ம் | அஹத் ஸ்மராமி மத்3ப4க்தம் நயாமி பரமாம் க3திம் || (வராஹசரமம்)

‘‘மனம் (கலக்கமின்றி) நிலை நிற்கையில், உடம்பு நோயற்று நன்றாயிருக்கையில், வாதம், பித்தம், ச்லேஷ்மம், என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாயிருக்கையில் எந்த மனிதன் உலகை உடம்பாக உடையவனும், பிறப்பு (முதலான விகாரங்கள்) இல்லாதவனுமான என்னை நினைக்கிறானோ, பிற்காலத்தில், கட்டையோடும், கல்லோடும் ஒத்தவனாய், மரணமடையா நிற்கிற அந்த என் பக்தனை நானே நினைக்கிறேன். உயர்ந்த பதவிக்கு அழைத்துச் செல்கிறேன்’’ என்பது ஸ்ரீவராஹநாயனாரின் திருவாக்கு.

187. ‘‘என்செய்கேன் துயராட்டியேனே’’ (7-7-1)

என்செய்கேன் - இதனைத் தப்பப் பார்ப்பதோ, அனுபவிக்கப் பார்ப்பதோ? எதனைச் செய்கேன்? துயராட்டியேனே - ‘இறைவனுடைய ஆனந்தத்தை அறிந்தவன் எப்பொருளினின்றும் அஞ்சான்’, என்று இருக்க வேண்டி இருக்க, ‘‘ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் ந பி3பே4தி குதஶ்சந’’ (தை. ஆந. 1-1) - ‘ப்ரஹ்மத்தின் ஆநந்தத்தை அறிந்தவன், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’. ‘ஜ்ஞாதிகரணம் 2-3-4 ‘தத்2கு3ணஸாரத்வாத்து தத்2 வ்யபதே3ஶ: ப்ராஜ்ஞவத்’ - 2-3-29 என்பது ஸ்ரீபாஷ்ய மேற்கோள். அங்ஙன் அன்றிக்கே, ‘அவசியம் அனுபவிக்கத் தக்கது’ என்கிறபடியே, பழைய கிலேசமே அனுபவிக்கும்படி ஆயிற்றே.

188. ‘‘இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் அருவும் நீயே’’ (7-8-10)

இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் - இதனைக் காட்டிலும் வேறு ஸூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி. அதாவது, இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே ப்ரஹ்மத்தினுடைய நாமத்தையும், உருவத்தையும் இட்டுப்பேச வேண்டும்படி, காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும், அசேதனங்களும் நீ இட்ட வழக்கு. தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே - ‘முதன்முதலில் ‘ஸத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ? ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று.’’ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமே வாத்3 விதீயம்’’ (சாந். 6-2-1) - ‘மென்மையானவனே! ‘ஸத்’ என்பது மட்டுமே முதலில் இருந்தது, தனியாக இருந்தது. இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை’வியத3தி4கரணம் 2-3-1ஶப்3தே3ப்4ய: 2-3-6, என்ற ஸூத்திரத்தில் இந்த வேதச்சொற்றோடரை ஸ்ரீபாஷ்யகாரர் மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

189. ‘‘ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை’’ (7-8-11)

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை - இன்னபடிப்பட்டது ஒரு தன்மையை யுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற ஸர்வேச்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று. ‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே, வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று. (‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்.)

190. ‘‘...... என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை’’ (7-9-1)

என்னைத் தன்னாக்கி - ‘அறிவிலேன்’ என்கிறபடியே அறிவின்மை, ஆற்றல் இன்மை இவை களுக்கு இலக்காய் இருக்கிற என்னை, தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளை யுடையேனாம்படி செய்து. அன்றிக்கே, ‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல்.

என்னால் தன்னை - தன்னாலே சத்தியைப் பெற்ற வனான என்னாலே, வேதங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள் முதலானவைகட்கும் அறிய முடியாதவனாய் இருக்கிற தன்னை. ‘அந்த ஆனந்த குணம் ஒன்றினின்றும் எந்த வேத வாக்குகள் திரும்பினவோ?’ (‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’,.

191. உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17) ‘என்னால் அறிய முடியாது என்று இருக்குமவனுக்கு அறியப்படுமது, அறிந்தேன் என்று இருக்குமவர்கட்கு அறியப்படாதது’ என்கிறபடியே, பிரமாணங்களால் அறிய முடியாமல் இருக்கிற தன்னை. ‘‘யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதே3 ஸ: I அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதம விஜாநதாம் II’’ (கேநோபநிஷத். 2-3)- எந்த ப்ரஹ்ம ஜ்ஞானிக்கு பரம் பொருள் அறியப்படாததாகிறதோ அந்த ஜ்ஞானிக்கே, அந்த ப்ரஹ்மஸ்வரூபம் நன்கு அறியப்பட்ட தாகிறது, எந்த அஜ்ஞானிக்கு ப்ரஹ்ம ஸ்வரூபம் அறியப்பட்ட தாகிறதோ அவன் அதை அறியாதவனே; ப்ரஹ்மம் இவ்வளவுபட்டது என்று அளவிட்டு அறிபவர்களுக்கு, (ப்ரஹ்மம்) அறியப் படாததாகிறது; ப்ரஹ்மம் அளவிட வொண்ணாததாகையாலே, அறிய வொண்ணாது என்று அறிபவர்களுக்கு, அது சிறப்பாக அறியப்பட்டதாக ஆகிறது. ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1, ‘அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ - 1-1-1 என்ற ஸூத்ர பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

192. ‘‘மூவுருவாம் முதல்வனே’’ (7-9-2)

தானே காரியம் செய் பிறர் தலையிலே ஏறிடுதல். அவனுக்குப் பண்டே சுபாவங் கண்டீர்! ‘எந்த

ஸ்ரீமந்நாராயணன் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தான்? எவன் அவனுக்கு வேதங் களையும் உபதேசம் செய்தான்?’யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம். யோவை வேதா3ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை’’ (ச்வே. 6-18) - ‘எவனொருவன் சதுர்முக ப்ரஹ்மனை முன் படைத்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறானோ’ என்னும் ப்ரமாணத்தால், ஆரம்பத்தில் முன்பே இருந்த வேதத்தை நினைவு கூர்ந்து, அதை நான்முக ப்ரஹ்மனுக்கு ஈச்வரன் உபதேசித்தான்’ இந்தக் கருத்தை ஸ்ரீபாஷ்யகாரர், கார்யாதி4கரணம் 4-3-5 ‘ஸாமீப் யாத்து தத்3வ்யபதே3ஶ:’ 4-3-8, என்ற ஸூத்திர விரிவுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘அளவிட முடியாத ஆற்றலையுடையவனும் பூசிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்மாவாய் இருக்கிறார்; அப்படி விஷ்ணு சிவனுக்கு அந்தராத்மாவாய் இருப்பதனாலே அந்தச் சிவன் வில்லை வளைத்து நாண் ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தைப் பொறுத்துக் கொண்டான்’ என்பது பாரதம். (’’விஷ்ணுராத்மா ப4க3வதோ ப4வஸ்ய அமிததேஜஸ:, தஸ்மாத் த4நுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஶம் ஸ விஷேஹே மஹேஶ்வர:’’ என்பது, பாரதம், கர்ணபர்வம் - பிரமனுக்கு வேதத்தைக் கொடுத்ததும், முப்புரங்களை அழித்ததும் ஸர்வேச்வரனே)

193. ‘‘.....ஒப்பு இலாத் தீவினையேனை உய்யக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற’’ (7-9-4)

ஒப்பு இலாத் தீவினையேனை உய்யக்கொண்டு - என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக; நான் முன்புற்றையிற்காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ? முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று, அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்; ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார் என்றபடி. உய்யக்கொண்டு - ‘இருக்கிறவன் என்று இவனை அதனால் அறிகிறார்கள்’ என்கிறபடியே, நான் உஜ்ஜீவிக்கும்படி என்னைக்கைக்கொண்டு, ‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதி கரணம் 1-1-6 ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தின் விரிவுரையில் இந்தச் சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

194. ‘‘ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி’’ (7-9-8)

ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி - மேலே, ‘கவி பாடுகைக்கு இடமான இச்சையும் இல்லை’ என்றார்; இங்கு ‘அவ்விச்சைக்கு அடியான தகுதியும் இல்லை’ என்கிறார். இதனால், நன்மை இல்லாமையைச் சொன்னபடி. ‘பிராமணர்கள் இந்தப் பிரமத்தை அறிய விரும்புகிறார்கள்’, என்னாநிற்கச் செய்தேயும், ‘யாகத்தாலும், தானத்தாலும், தவத்தாலும், உபவாசத்தாலும்’ என்று யோக்கியதையைச் சொல்லிற்றே அன்றோ?’’தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா, விவிதி3ஷந்தி யஜ்ஞேந தா3நேந தபஸா(அ)நாகேந’’ (ப்ருஹ. 6-4-22) - ‘அத்தகைய இந்தப் பரமாத்மாவை ப்ரஹ்மஜ்ஞானிகள் வேதாத்யய னத்தாலும், யஜ்ஞத்தாலும், தானத்தாலும், உபவாஸரூபமான தபஸ்ஸாலும் அறிய விரும்புகிறார்கள்’ - ஸர்வாபேக்ஷாதி4 கரணம் 3-4-5, ‘ஸர்வா பேக்ஷா ச யஜ்ஞாதி3 ஶ்ருதேரஶ் வவத்’ 3-4-26, என்ற ஸூத்திர பாஷ்யத்தில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

195. ‘‘இங்கும் அங்கே’’ (7-9-10)

இங்கும் அங்கே - ‘இங்கு ஆனால், தேஹ ஆத்மா அபிமானத்தாலே ‘நான், என்னது’ என்று போய்க் கால் கட்டித் திரிகையாலே, செய்யலாவது உண்டோ?’ என்று பிரமிக்கவுமாய் இருக்கும்; அதுவும் இன்றிக்கே, ஞானக் குறைவு கழிந்த அளவிலே, தான் செய்யலாவது ஒன்று இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா அன்றோ? ‘தனது இயல்பான வடிவைப் பெறுகிறான்’ என்கிறபடியே, ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வரூபத்திற்கு விரோதியாகச் சொல்லப் போகாதேயன்றோ?

‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச் ச2ரீராத் ஸமுத்தா2ய பரம்ஜ்யோதிருப ஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - [கீழ்ச் சொல்லியபடி உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்; (ஸித்தாந்தத்தில் பொருள் இது)].ஸம்பத்3 யாவிர்பா4வாதி4கரணம்- 4-4-1 ‘ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த்’- 4-4-1, என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

196. ‘‘எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே’’ (7-9-11)

எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்கும் - ஏதேனும் ஒரு படி சொல்லிலும் இன்பம் உண்டாம். இவர்தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஈச்வரன் இவர்களைக் கடாக்ஷிப்பது? இல்லையாகில், இவர் தம்மைப்போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப்பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற்றத்தனை இது.

இன்பம் பயக்குமே - ‘இந்த இறைவனே ஆனந்தத் தைக் கொடுக்கிறான்’ என்கிறபடியே, எப்பொழுதும் பகவானு டைய அனுபவத்தாற்பிறக்கும் ஆனந்தமானது உண்டாம். ‘‘ஏஷ ஹ்யேவாநந்த3யாதி’’ (தை. ஆந. 7-21) - ‘இப்பரம புருஷனே (முக்தனை) ஆனந்தமடையச் செய்கிறான்’. ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6 ‘த3ர்ஶயதஶ்சை வம் ப்ரத்யக்ஷா நுமாநே’ - 4-4-20, என்ற ஸூத்திரபாஷ்யத்தில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

197. ‘‘இன்பம் பயக்க’’ (7-10) - ப்ரவேசம்

இனித்தான் வேதச் சொற்றொடர்களும் ‘தனது இயல்பான வடிவினை அடைகிறான்’ என்று ஸ்வரூபத்தினை அடைதல் அளவும் சொல்லவே, அதற்கு அப்பால் கைங்கர்யமானது ‘அவகாத ஸ்வேதம்’ (அவகாத ஸ்வேதம் - நெல் முதலியவற்றைக் குற்றும்போது சரீரத்தில் தோன்றும் வியர்வை.). போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்மத்தினை அடைதல் அளவும் சொல்லிவிடும் (’நன்று; வேதங்களிலே ‘பகவானை அடைதலே புருஷார்த்தம்’ என்னாநிற்க, ‘கைங்கர்யம் புருஷார்த்தம்’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘இனித்தான்’ என்று தொடங்கி.

‘‘ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ3 (அ)ஸ்மாச் ச2ரீராத் ஸமுத்தா2ய பரம்ஜ்யோதிருப ஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - ‘‘கீழ்ச் சொல்லியபடி உபாஸனம் செய்த இந்த ஜீவன் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி, (பரமபதத்தில் அர்ச்சிராதி கதியாலே) பரமாத்மாவை அடைந்து (ஸம்ஸாரி நிலை நீங்கப்பெற்று) தன் இயல்பான ஸ்வரூபம் விளங்கப் பெறுகிறான்’’ (ஸித்தாந்தத்தில் பொருள் இது) .ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் 4-4-1ஸம்பத்3யா விர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த் 4-4-1. என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்.

198. ‘‘ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை’’ (7-10-6)

ஈடு: ஆறாம் பாட்டு. ‘எம்பெருமான் பக்கல் ஆசையுடையீர்! உங்களுடைய எல்லாத் துக்கங்களும் போம்படி திருவாறன்விளையை நெஞ்சாலே நினையுங் கோள்’, என்கிறார்.

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை- எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்’ (ப.கீ.18-66) என்றான் அன்றோ? ‘எல்லாப் பாபங்களும் நாசம் அடைகின்றன’ என்னாநின்றதே அன்றோ? இது தேசத்துக்கும் உபலக்ஷணம் (உபலக்ஷணம் - குறிப்பினால் உணர்த்துவது). ‘‘ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ3யந்தே’’ (சாந். 5-24-3) - ‘இவ்வாறு அவன் பாவங்களெல்லாம் நாசமாக்கப்படுகின்றன’. தத3தி4க3மாதி4கரணம் 4-1-7 ‘தத3தி4க3ம உத்தரபூர்வாக4 யோரஶ்லேஷ, விநாஶௌ தத்3வ்யபதே3ஸாத்’ 4-1-13, என்று ஸ்ரீபாஷ்யகாரர் இந்த ஸூத்திரத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஏழாம் பத்து முடிவுற்றது.

16

எட்டாம் பத்து

199. ‘‘ அகலிடம் முழுதும் படைத்திடந்து உண்டு உமிழ்ந்து பேருயிரேயோ!’’ (8-1-5)

‘சம்பந்த மாத்திரமேயோ, அநுஷ்டானமும் இல்லையோ?’ என்கிறார் மேல். அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த பேருயிரேயோ - ‘பல பொருள்கள் ஆகக்கடவேன்’ என்று பூமிப்பரப்பு அடங்கலும் உண்டாக்கி, ‘‘ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநா தே3வ து தல்லிங்கா3த் ஸ: ‘ 2-3-14, என்ற ஸூத்திரத்தில் இந்த வேதச்சொற்றொடர் காட்டப்படுகிறது.

பிரளயத்தில் நோவுபட மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி, மீண்டும் பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கி, உள்ளே கிடந்து தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து.

200.

‘‘பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ .... மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே ‘‘ (8-1-6)

பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையும் நீ - ஒன்றுக்கு ஒன்று விரிந்ததாய், அண்டத்துக்குப் புறம்பாய், அதற்குக் காரணமான மகத்து முதலான தத்துவங்கள் என்று சில உளவாகில், அவையும் உன் அதீனம். மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே - காரியமாகிற தன்மை முழுதும் அழிந்து ஸூக்ஷ்ம நிலையை அடைந்திருக்கிற அவ்யக்தமும் நீ இட்ட வழக்கு (அவ்யக்தம் - விளக்கம் இல்லாதது; மூலப்பகுதி. மூலப்பகுதியின் ஒரு நிலை வேறுபாடுமாம்.).

வான் புலன் இறந்ததும் நீயே - இவற்றின்படி அன்றிக்கே அவ்யக்தத்தையும் வியாபிக்கக் கூடியதாய், கண் முதலான கரணங்களுக்குப் புலப்படாததாய் இருந்துள்ள காரணமான ஜீவர்களின் தொகுதியும் நீ இட்ட வழக்கு. என்றது, ‘பத்த ஆத்வஸ்வரூபமும் நீ இட்ட வழக்கு’ என்றபடி. இன்னே ஆனால் எங்கு வந்து உறுகோ - அர்த்த தத்துவம் இதுவான பின்பு, எங்கே வந்து கிட்டக்கடவேன்? (வான்புலன் இறந்ததும் நீ - வான் என்றது, ‘வியாபிக்கக் கூடியது’ என்றபடி. ‘புலன் இறந்தது’ என்றது, ‘இந்திரியங்களுக்கு எட்டாதது’ என்றபடி. என்றது, ‘அவ்யக்தத்தையும் வியாபிக்கக் கூடியதாய், கண் முதலிய கரணங்களுக்கு எட்டாததாய்க் காரணமான ஜீவர்களின் தொகுதியும்’ என்றபடி. இங்கு, வான் என்றதனால் சொல்லப்பட்ட வியாபகத்துவம் ஸ்வரூபத்தினால் அன்று; ஞானத்தினால் என்று கொள்க. ஜீவாத்துமாக்களுக்கு ஞானத்தால் வியாபகத்துவம் உள்ளதே அன்றிச் ஸ்வரூபத்தினால் வியாபகத்துவம் இல்லை. வியாபித்தல் - பரந்துறைதல். பத்தஆத்ம ஸ்வரூபம் - மூலப்பகுதியில் சம்பந்தப்பட்டி ருக்கின்ற ஆத்மாக்களின் ஸ்வரூபம்.),

201. ‘‘யானும் நீதானே ஆவதோ மெய்யே அருநரகு அவையும் நீ’’ (8-1-9)

யானும் நீதானே ஆவதோ மெய்யே - நான் ‘நீ’ என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எனக்குப் பிரகாரமாய், நான் ‘ப்ரஹ்ம’ என்ற சொல்லிற்குப் பொருளாம்படி இருக்கிற இந்த அர்த்தமோ, அது சத்தியம். ‘ஆத்மா என்றே தியானம் செய்யக் கடவன்’;’’ஆத்மத்யேவ து க்3ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தந்நிஷ்பத்தே:’’ (வாக்யகார வசநம்) - சேதனீச்வரனை உபாஸியா நிற்கச்செய்தே தன்னை உபாஸித்த தென்னலாம்படி அன்றோ சரீரசரீரிபாவத்தால் வந்த பிரத்யாஸத்தி இருக்கிறபடி. இப்படி சரீரபூதனாய் அவன் அபிமானத்திலே அந்தர்பூதனா யிருக்கை உறவறாமையாவ தென்றபடி, என்று அரும்பதம். இதே அர்த்தம் ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1 ‘அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ 1-1-1 , என்ற ஸூத்ரத்தில் ஸ்ரீபாஷ்யகாரரால் மேற்கோளாகக் காட்டப்படுகிறது;

‘நான் மநு, நான் சூரியன்’ என்பனவே அன்றோ முக்தர்கள் பாசுரம்? ‘‘தத்3தை4தத் பஶ்யந் ருஷிர் வாமதே3வ: ப்ரதிபேதே3 அஹம் மநுரப4வம் ஸூர்யஶ்ச’’ (ப்ருஹ. 3-4-10) - நானே மனுவாகவும், ஸூர்யனாகவும் ஆனேன்; (நானே மநுவையும், ஸூர்யனையும் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை எனக்கு அந்தர்யாமியாகக் கொண்டிருக்கிறேன்)’’ என்று பரமாத்மாவைக் கண்ட வாமதேவரிஷி அறிந்தார்; உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘ப்ரகாஶாதி3வச்சா வைஶேஷ்யம் ப்ரகாஶஶ்ச கர்மண் யப்4யாஸாத்’ 3-2-24, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த ச்ருதிச்சொற்றொடரை மேற்கோள் காட்டுகிறார்.

மெய்யே - அதில் ஐயம் இல்லை. அருநரகு அவையும் நீ - எனக்குப் பொறுக்க ஒண்ணாதே கால் வாங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடியான ஸம்சாரமும் நீ இட்ட வழக்கு. இது இப்போது சொல்லுகிறது, நீ நினைத்த அன்று கழித்துத் தரவல்லை என்கைக்காக.

202. ......பெரியவண்குருகூர்வண்சடகோபன்
பேணின ஆயிரத்துள்ளும்*
உரியசொல்மாலைஇவையும்பத்து
இவற்றால்உய்யலாம்தொண்டீர்! நங்கட்கே. (8-1-11)

பெரிய வண் குருகூர் - காப்பவன் தாழ்த்தவாறே ஐயம் கொள்ளுகையும், செய்ந்நன்றியின் நினைவாலே உவகையர் ஆகையுமாகிற இவற்றுக்கு அடி, அவ்வூரில் பிறப்பு என்கை. வண் சடகோபன் - மாநஸ அனுபவமாத்திரமாய் விடாதே, பிரபந்தமாகச் செய்து கொடுத்த ஔதார்யம். பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை இவையும் பத்து - அவனைத் தாம் ஆசைப்பட்ட படியைச் சொன்ன பத்து.

‘வேதவாக்குகள் எந்த ஆனந்த குணத்தினின்றும் சொல்லமாட்டாது மீண்டனவோ’ என்கிறபடியே,. மீளுகை அன்றிக்கே, பகவானுடைய குணங்களுக்கு நேரே வாசகமாய் இருத்தலின், ‘உரிய சொல் மாலை’ என்கிறது. ‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்

தொண்டீர் நங்கட்கு இவற்றால் உய்யலாம் - அநாதிகாலம் பகவானிடத்தில் விருப்பு இல்லாதவர்களாய், வேறு விஷயங்களிலே ஈடுபட்டவர்களாய், ‘இல்லாதவன் ஆகின்றான்’, என்கிறபடியே, இல்லாதவர்களைப்போல இருக்கிற நுங்கட்கு ‘இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உஜ்ஜீவிக்கலாம். ‘‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதி கரணம் 1-1-6, ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தில் இந்தச் சொற்றொடர் ஸ்ரீபாஷ்யகாரரால் மேற்கோள் காட்டப்படுகிறது.

203. ‘‘அறியகில்லாது அலற்றி’’ (8-3-1)

அவனைப் பரியக் கண்டவர்கள் எல்லாரும் என்று இருக்கிறாராயிற்று இவர். அலற்றி - ‘எவன் எல்லாவற்றையும் முழுதும் உணர்ந்தவனோ, எல்லாவற்றையும் தனித்தனி யாகவும் உணர்ந்தவனோ’,’’ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித்’’ (முண்ட. 1-1-9) - ‘எல்லா அறிவும் நிறைந்து, எல்லாம் அறிந்து’. ‘‘பரா (அ)ஸ்ய க்திர் விவிதை4வ ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச’’ (ச்வே. 6-8) - ‘அவன் திறமை பன்மடங்கானதாக அறியப்படுகிறது; அவன் இயல்பான அறிவும் வலிமையும் (மற்றும்) செயல்பாடும்’ புருஷார்த்தா2தி4கரணம் 3-4-1, ‘அதி4கோபதே3ஶாத்து பா3த3ராயணஸ்யைவம் தத்3த3ர்ஶநாத்’ 3-4-8, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் எடுக்கப்பட்ட வேதச் சொற்றொடராகும்.

‘‘இவனுடைய ஆற்றல் உயர்ந்தது; பல வகையாகக் கேட்கப்படுகின்றது; இவனுடைய ஞான, பலக் கிரியைகள் இயல்பானவை’ என்றும் தங்களுடைய ரக்ஷணத்துக்கு உடலான வார்த்தைகளைக் கதறாநிற்பர்கள். நீ பாதுகாக்கப் படுமவன் என்று அறியார்கள். ஸௌகுமார்யத்தையும் அழகையும் சொல்லுகிறது இதற்குமேல்.

204. ‘‘என்றேஎன்னைஉன்னேரார்கோலத்திருந்தடிக்கீழ்
நின்றேயாட்செய்ய நீகொண்டருளநினைப்பதுதான்?’’ (8-3-8)

என்றே - ‘உம்முடைய காரியம் செய்கிறோம் அன்றோ?’ என்ன, ‘அதுதான் என்று?’ என்கிறார். என்னை - உன்னிடத்தில் பரிந்து அன்றி உளேன் ஆகாது இருக்கிற என்னை. உன் ஏர் ஆர் கோலம் திருந்து அடிக்கீழ் - அழகுமிக்க ஒப்பனை திருந்தின உன் திருவடிகளின்கீழே. என்றது, ‘மங்களாசாஸனம் செய்தல்லது நிற்க ஒண்ணாத திருவடிகள்’ என்றபடி. நின்றே ஆள் செய்ய - ‘எனக்குக் கொடுப்பாய்; உனக்குக் கொடுக்கிறேன்’ என்று பிரயோஜனத்தைக் கொண்டு போகை அன்றிக்கே, விடாமல் அடிமை செய்ய. ‘‘தே3ஹிமே த3தா3மிதே’’ (யஜுர்) ‘எனக்குக் கொடுக்க வேண்டும், உனக்குக் கொடுக்கிறேன்’ என்ற வேதச்சொற்றொடர் இந்த அர்த்தத்தைக் காட்டுகிறது.

205. ‘‘.....கண்கைகால்* தூயசெய்யமலர்களாச் சோதிச்செவ்வாய்முகிழதா* சாயல்சாமத் திருமேனி தண்பாசடையா’’ (8-5-1)

கண், கை, கால் தூய செய்ய மலர்களா - கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண், நோக்குக்குத் தோற்றவர்களை அணைக்கும் கை, பரிசத்திற்குத் தோற்று விழும் திருவடிகள், அங்கே கிடந்து தலை எடுத்து அனுவிக்குமதாய்க் கண்டபோதே விடாய் தீரும்படி கரியதான திருமேனிக்குப் பரபாகமான நிறத்தையுடைத்தான தாமரைப் பூ ஆக. சோதிச் செவ்வாய் முகிழது ஆ - புகரையுடைத்தாய்ச் சிவந்திருக்கிற திருவதரமானது அதில் அரும்பு ஆக. ‘உரையாடாதவன், விருப்பம் அற்றவன்’ (‘‘மநோமய: ப்ராணரீரோ பா4ரூபஸ்ஸத்ய ஸங்கல்ப ஆகாஶாத்மா ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸ: ஸர்வமித3மப்4யாத்தோ (அ)வாக்யநாத3ர:’’ (சாந். 3-14-2) - ‘‘மனதால் அமைக்கப்பெற்று, ப்ராணத்தை உடலாகக் கொண்டு, ஒளிரும் தன்மையோடு, நினைவுகள் நிறைவேறப் பெற்று, ஆகாசத்தால் அமைக்கப்பெற்று, எல்லாம் செய்பவனாக, எல்லா விருப்பங்களுடன், எல்லா மணத்துடன், எல்லா சுவையுடன், இவை எல்லாவற்றையும் அரவணைத்து, பேச்சில்லாமல், கவனமில்லாமல் (ஆதரிக்காமல்)’’. க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம் 2-1-9, ஸர்வோபேதா ச தத்3த3ர்ஶநாத் 2-1-30, என்ற ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் மேற்கோள் காட்டப்படுகிறது) என்னப்படும் இறைவன் ஆகையாலே, மிக்க காம்பீர்யத்தாலே, புன்சிரிப்பு மலர்ந்து தோன்றும் அளவே அன்றோ இருப்பது? ஆகையாலே, ‘அரும்பு’ என்கிறது.

‘சாயல் சாமம் திருமேனி தண் பசுமை அடையா - ஒளியையுடைத்தாய்க் கரிய நிறமான திருமேனி, குளிர்ந்த பச்சிலையாக; பரமாத்துமாவான புருஷன், தாமரை இலையைப் போன்ற நிறமுடையன்’ என்றும் ‘அக்கமலத்து இலைபோலும்’ என்றும் வருகின்றபடியே.

‘‘வாராயே’’ (8-5-1), வாராயே - அத்தலையாலே வரக்காண இருக்குமவர் அல்லரோ? ‘தான் விரும்பிய ஜீவனுக்கு இந்தப் பரமாத்மாவானவன் தனது திருமேனியைக் காட்டுகிறான்’ என்கிறபடியே. அன்றிக்கே, தாம் கிட்டிக் காணுமது ஸ்வரூப விரோதம் என்று இருக்கிறார் என்னுதல். ‘‘நாயமாத்மா ப்ரவசநேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந I யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) - ‘இந்தப் பரமாத்மா ச்ரவண மனன த்யானங்களால் மட்டுமே அடையத்தக்கவனல்லன். எவனை இவன் வரிக்கிறானோ அவனாலேயே இவன் அடையத் தக்கவன். அவனுக்கு இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான்’. [Explanatory Note: Compare the interpretation of Mundakopanishad (3.2.3), The Lord is now described as the way as well as the goal, the means as well as the end. It is implied the redemption is solely through His grace. This is also the basis of the doctrine of ‘prapatti’, of absolute faith in and complete self-surrender to the Lord.]. பராதி4கரணம் 3-2-7 - ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3வத் 3-2-33, என்ற ஸூத்திரத்தில் காணப்படும் ஸ்ரீபாஷ்யகாரரின் மேற்கோள்.

206. ‘‘தூயசுடர்ச்சோதி தனதென்னுள்வைத்தான் *
தேசம்திகழும் தன்திருவருள்செய்தே’’ (8-7-4)

‘‘தேசம் திகழும் தன் திருவருள் செய்து தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான்’’ - உலகம் எல்லாம் அறியும்படி என் பக்கலிலே காரணம் இல்லாமலே திருவருளைச் செய்து, குற்றங்கட்கு எல்லாம் எதிர்த்தட்டாய், வேறுபட்ட சிறப்பினையுடைய ஒளி உருவமாய், சுத்த ஸத்வ மயமாய், தனக்கே உரியதான வடிவை என்னுள்ளே வைத்தான். புறம்பு ஒருவர்க்கு இன்றிக்கே தனக்கே உரியதான அருள் ஆதலின், ‘தன் திரு அருள்’ என்கிறார். தான், வேறு ஒரு ஸாதனத்தைக் கொண்டு ஸாதித்துக்கொள்ளப்படாதவன் என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான் ஆதலின், ‘என்னுள் வைத்தான்’ என்கிறார். ‘பரமாத்மா எவனை விரும்புகிறானோ, அவனாலேயே அடையத் தக்கவன்; அவனுக்கே இந்தப் பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’, என்கிறபடியே.

‘‘நாயமாத்மா ப்ரவசநேந லப்4யோ ந மேத4யா ந ப3ஹுநா ஶ்ருதேந I யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்II’’ (முண்டக.3-2-3) - ‘இந்தப் பரமாத்மா ச்ரவண மனன த்யானங்களால் மட்டுமே அடையத்தக்கவனல்லன். எவனை இவன் வரிக்கிறானோ அவனாலேயே இவன் அடையத் தக்கவன். அவனுக்கு இவன் தன் ரூபத்தைக் காட்டுகிறான், என்று பராதி4கரணம் 3-2-7 , ‘ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3வத் ‘ 3-2-33 ஸூத்திரத்தின் விரிவுரையில் இந்த வேதச்சொற்றொடற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

207.

அறியேன்மற்றருள் என்னையாளும்பிரானார்*
வெறிதேஅருள்செய்வர் செய்வார்கட்குஉகந்து*
சிறியேனுடைச் சிந்தையுள்மூவுலகும் * தன்
நெறியாவயிற்றில்கொண்டு நின்றொழிந்தாரே. (8-7-8)

மற்று அருள் அறியேன் - வேறு ஓர் அருளும் அறியேன். என்னை ஆளும் பிரானார் - என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகரானவர். வெறிதே அருள் செய்வர் - நிர்ஹேதுகமாகத் திருவருள் செய்வர். ‘யாருக்கு?’ என்னில், செய்வார்கட்கு - ‘எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ’ (யமேவைஷ வ்ருணுதே தேந லப்4ய: (முண்டக.3-2-3) - எவனை இவன் வரிக்கிறானோ அவனாலேயே இவன் அடையத் தக்கவன். பராதி4கரணம் 3-2-7 , ‘ஸ்தா2ந விஶேஷாத் ப்ரகாஶாதி3வத் ‘ 3-2-33 ) என்கிறபடியே, தாம் அங்கீகரிக்க நினைத்தார்க்கு. ‘தாம் தாம் ஒன்று செய்வார்க்கு என்னில், ‘வெறிதே’ என்னக்கூடாதே அன்றோ?

ஆயினும், ஒரு காரணம் வேண்டாவோ அருள் செய்வதற்கு?’ என்னில், ஈச்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம்: ‘விரும்பப்படுவான் அன்றோ பற்றப்படுவான் ஆகிறான்?’ (‘‘ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி’’ என்பது ஸ்ரீபாஷ்யச் சொற்றொடர்.) என்னக் கடவது அன்றோ? ருசி உண்டானாலும், இவன் அறிவுடையவன் என்னும் வாசிக்கு அறிவின் காரியமான தன்மை என்று அதனைக் கொள்ளலா மித்தனை அல்லது, பேற்றுக்குச் ஸாதனமாகச் சொல்ல ஒண்ணாதே அன்றோ? ‘காரணம் இல்லாமலே செய்யப்படும் அருளை இப்படி வேறு எங்கே கண்டீர்?’ என்ன, புறம்பு தேடிப் போக வேண்டுமோ? சிறியேனுடைச் சிந்தையுள் - மிகச் சிறியேனான என்னுடைய மனத்துக்குள்ளே. மூன்று உலகும் தம் வயிற்றில் நெறியாக் கொண்டு நின்றொழிந்தார்.

208. ‘‘கண்கள் சிவந்து’’ (8-8-1)

கண்கள் சிவந்து - ‘சூரியனைக் கண்டு மலர்கின்ற தாமரை மலர் எவ்வண்ணம் இருக்குமோ, அவ்வண்ணமே, அந்தப் பரம்பொருளினுடைய திருக்கண்களும்’ என்கிற படியே, ‘‘தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீக மேவக்ஷிணீ தஸ்ய உதி3தி நாம’’ (சாந்தோ. 1-6-7)- அவனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள. அந்தரதி4கரணம் 1-1-7, ‘அந்தஸ்தத்3 த4ர்மோப தே3ஶாத்’ - 1-1-21 என்ற ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதாந்தச் சொற்றொடரை விளக்கியுள்ளார்.

இறைவனுடைய கண்கள் சிவந்திருக்குமே அன்றோ? இப்படி இருக்கச்செய்தே ‘மாயக்கூத்தா’(8-5) என்ற திருவாய்மொழியில் பிரிவினாலே வெண்ணிறத்தை அடைந்தது.

209. யானும்தானாயொழிந்தானை
யாதும்யவர்க்கும்முன்னோனை*
தானும்சிவனும்பிரமனுமாகிப்
பணைத்ததனிமுதலை *
தேனும்பாலும்கன்னலும்
அமுதுமாகித்தித்தித்து * என்
ஊனில்உயிரில்உணர்வினில்
நின்றஒன்றைஉணர்ந்தேனே. (8-8-4)

‘நன்று; இத்திருப்பாசுரம், ‘ஆத்மாவினுடைய இனிமையைச் சொல்லப்புகுந்ததேயாகில், காரணமாக இருக்கும் ஈச்வரனுடைய தன்மையைச் சொல்லுகிறது என்?’ என்னில், தன் பக்கல் பக்தி இல்லாத ஆத்மாக்களைக் கர்மங்கட்குத் தகுதியாகப் படைத்துவிட்டான்; ஐச்வர்யத்தை விரும்பிய பிரமன் முதலாயினார்க்கு அவர்கள் உகந்த ஐச்வர்யத்தைக் கொடுத்துவிட்டான்; எனக்கு, இந்தச் சரீரம் விடத்தக்கது என்னுமிடத்தையும், ஐச்வர்யம் புருஷார்த்தம் அல்லாதது என்னுமிடத்தையும், ஆத்மவஸ்து தனக்கு அநந்யார்ஹசேஷமாய் எல்லை இல்லாத இனிய பொருளாய் இருக்குமிடத்தையும் காட்டித் தந்தான் என்கைக்காகச் சொல்லுகிறார். ‘நின்றனர் இருந்தனர்’ (1-1-6) (’நின்ற ஒன்றை’ என்ற ஸாமாநாதிகரண்யத்தாலே, சரீரியான தன்னைக் காட்டித் தந்தான் என்றே அன்றோ தோற்றுகிறது? ஆத்ம ஸ்வரூபத்தின் இனிமையைக் காட்டித் தந்தான் என்று தோற்ற இல்லையே?’ எனின், நின்றனர்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘சுத்த பேதம் அன்று’ என்றது, அரசனுடைய ஊழியர்களுக்குப் போலே, அப்ருதக் ஸித்த சேஷ சேஷி பாவம் காரணமாக வந்த பேதம் பொருள் என்றபடி. அப்ருதக்ஸித்தமாவது, பிரிந்து நிற்றல் இல்லாதது. ப்ருதக்ஸித்தம் - பிரிந்து நிற்றல். ‘ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள்’ என்றது, ‘சரீரசரீரி பாவம் காரணமான ஐக்கியம் பொருள்’ என்றபடி.

ஸாமாநாதிகரண்யம் - ஒரே இடத்தைப் பற்றித் தெரிவிப்பது. அதாவது, வேறு வேறு பொருள்களைக் காட்டுகின்ற சொற்கள் அனைத்தும் முக்கியப் பொருள் ஒன்றையே காட்டுவது என்றபடி. ஸமானம் - ஒன்று. அதிகரணம் - இடம். அன்றிக்கே, ‘பல விசேஷணங்களோடு கூடியும் ஒன்றாக இருப்பது’ என்று கூறுதலுமாம். வையதிகரண்யம் - இதற்கு மாறான பொருளைத் தெரிவிப்பது. அதாவது, ‘ஒவ்வொரு சொல்லும் தனித்தனியே ஒவ்வொரு பொருளைக் காட்டுவது’ என்றபடி. வி அதிகரணம் - வையதிகரண்யம். வி - வேறுபட்டது.) என்ற திருப்பாசுரத்திற்போலே, இந்தச் ஸாமாநாதிகரண்யத்துக்கு இனிமையோடு கூடியிருக்கிற ஸ்வரூபத்தில் சிறப்புடைய கூறான இனிமையிலே தாத்பர்யம். வையதிகரண்யத்துக்கும் உலகத்தார் சொல்லுகிற சுத்தபேதம் அன்று பொருள்; ஸாமாநாதிகரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள். அன்றிக்கே, ‘யாதும் யவர்க்கும் முன்னோனை’ என்று தொடங்கி, ‘என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றான யானும் தானாய் ஒழிந்தானை உணர்ந்தேன்’ என்னுதல்.

210. ‘‘நின்ற ஒன்றை’’ (8-8-5. அவதாரிகை)

ஐந்தாம்பாட்டு. ‘மேல் பாசுரத்திலே பகவானுக்குச் சரீரமாக ஆத்மா பேசப்பட்டது; இதற்குமேல் நான்கு பாசுரங்கள், ஆடையிலே உள்ள வெண்மையைப் பிரித்து நிஷ்கர்ஷக என்ற சொல்லை இட்டுச் சொல்லுமாறு போலே, ‘எம் பெம்மானோடு’ என்கிற பாசுரம் முடிய, கேவல ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது’ என்று எம்பார் அருளிச் செய்யும்படி. முதலி ஆண்டான் ‘சரீரமான தன்மையிலே வைத்துச் சொல்லுகின்றன’ என்று பணிப்பர். ‘நின்ற ஒன்றை’ என்கிற இதில், ‘பகவானுடைய திருவருளாலே நான் அறிந்த இவ்வாத்ம வஸ்து ஒருவர்க்கும் அறியப்போகாது; வருந்தி அறிந்தாலும் கண் கூடாகக் காணப் போகாது’ என்கிறார்.

(மேற்பாசுரத்தில் கூறப்பட்ட பொருளை அநுவதித்துக் கொண்டு. இது முதலாக உள்ள நான்கு பாசுரங்கட்கும் இரண்டு வகையாகச் சங்கதி அருளிச் செய்கிறார். ஆத்ம ஸ்வரூபத்தைத் தனிப்படக் காட்டிக் கொடுத்தான் என்பது எம்பாருடைய நிர்வாஹம். ‘தனக்குச் சரீரமாக இருக்கும் தன்மையிலே காட்டிக் கொடுத்தான்’ என்பது திருமலையாண்டானுடைய நிர்வாஹம். இவ்விரண்டு நிர்வாஹங்களையும் முறையே அருளிச் செய்கிறார், ‘மேல் பாசுரத்திலே’ என்று தொடங்கி.

‘நிஷ்கர்ஷக என்ற சொல்லை இட்டுச் சொல்லுமாறு போலே’ என்றது, வஸ்திரத்தினுடைய வெண்மை நிறம் என்று சொல்லுமாறு போலே என்றபடி. சொற்கள் தாம், ‘நிஷ்கர்ஷகம்’ என்றும், ‘அநிஷ்கர்ஷகம்’ என்றும் இரண்டு வகைப்படும். அவற்றுள் நிஷ்கர்ஷகமாவது, தர்மத்தையும் தர்மத்தையுடைய பொருளையும் பிரித்துப் பேசுவது. அநிஷ்கர்ஷகமாவது தர்மத்தையும் தர்மத்தையுடைய பொருளையும் அபேதமாகப் பேசுவது. இவற்றுள், நிஷ்கர்ஷகமும், ‘நியத நிஷ்கர்ஷகம்’ என்றும், ‘வைவக்ஷிக நிஷ்கர்ஷகம்’ என்றும் இரண்டு வகைப்படும்.

நியத நிஷ்கர்ஷகமாவது, தர்ம தர்மிகளைப் பிரித்தே பேசுதல். இதற்கு உதாரணம், ‘வாசனையையுடையது மண்’ என்பது. வைவக்ஷிக நிஷ்கர்ஷகமாவது, தர்ம தர்மிகளைத் தன் விருப்பத்திற்குத் தக்கப் பிரித்துச் சொல்லுவது. இதற்கு உதாரணம், ‘வஸ்திரம் வெண்மை நிறத்தையுடையது’ என்பது. ஆக, மேல் நான்கு பாசுரங்களும் வைவக்ஷிக நிஷ்கர்ஷகம் என்பது எம்பார் நிர்வாஹம். அநிஷ்கர்ஷகமாக ஆண்டான் நிர்வாஹம். ஆண்டான், ‘நின்ற ஒன்றை’ என்பதற்குப் பிரகாரி பரியந்தமாக்கி, பிரகாரமான தன்மையிலே சொல்லுகிறது என்று பொருள் அருளிச் செய்வர்).

211.

அதுவேவீடு வீடுபேற்றின்பந்தானும்அதுதேறி *
எதுவேதானும்பற்றின்றி யாதுமிலிகளாகிற்கில் *
அதுவேவீடு வீடுபேற்றின்பந்தானும்அதுதேறாது*
எதுவேவீடு?ஏதுஇன்பம்?என்றுஎய்த்தார்எய்த்தார்எய்த்தாரே. (8-8-7)
ஏழாம் பாட்டு. ‘மேலே கூறிய உபாயத்தின்படியே அந்த ஆத்மாவை அடையாமல், அதிலே ஐயம் தொடரப் பெற்றவர்கள் உருவக் கிலேசப்பட்டே போமித்தனை’, என்கிறார்.

அதுவே வீடு - மேலே கூறிய அதுவே ஆத்மாவை அடைதலாகிற மோக்ஷம் ஆகிறது. வீடு பேற்று இன்பந்தானும் அது - அந்த மோக்ஷத்தை அடைந்தால் வரும் இன்பமும் அதுவே. தேறி - இப்படித் தெளிந்து. எதுவே தானும் பற்று இன்றி - சரீரத்திலும் சரீர சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தொற்று அற்று. யாதும் இலிகள் ஆகிற்கில் - அவற்றில் ருசி வாசனைகளும் அறப்பெறில். என்றது, ‘கர்மங்களைச் செய்து ஞானத்தை யுடையனாய், ஸ்திதப் பிரஜ்ஞாக்ய அவஸ்தை பிறந்து, யோகமும் தலை நின்று, ஆத்மாவை அடைதலே மோக்ஷம் (’கர்மங்களைச் செய்து’ என்றது, ‘ஒரு பலத்தையும் விரும்பாமல் தத்தம் சாதிகளுக்கு உரிய தர்மங்களைச் செய்தல். ‘ஞானத்தையுடையனாய்’ என்றது, ‘ஆத்மாவை அடைதற்குச் ஸாதனமுமாய், ஐம்பொறிகளையும் அடக்குதல் ஆன ஞானயோகத்திலே நிற்றலையுடையனாய்’ என்றபடி.

ஸ்திதப் பிரஜ்ஞாக்ய அவஸ்தை பிறத்தலாவது, உலக விஷயங்கள் வந்து மேலிட்டாலும் கலங்காத தைரியத்தை யுடையவனாகை. இங்கே, பகவத்கீதை இரண்டாம் அத்யாயம் 55ஆம் ச்லோகத்தைக் காணல் தகும். யோகம் தலை நிற்கையாவது, ஞான ஆநந்த லக்ஷணமான ஆத்மவஸ்து விளங்கும்படி அஷ்டாங்க யோகத்திலே முதிர நிற்றல். முதல் அடியில் கூறியது ஞானத்தை; மூன்றாம் அடியிற்கூறியது பல தசையை.).

வீடு பேற்று இன்பம் தானும் அது - மோக்ஷத்தை அடைதலால் வரும் இன்பமும் அந்த ஆத்ம அனுபவம். தேறாது - இப்படித் தெளியமாட்டாமல். எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் - ‘மோக்ஷம் ஆகிறது எது? மோக்ஷ இன்பமாகிறது எது?’ என்று இளைத்தவர்கள். எய்த்தார் எய்த்தாரே - இளைத்தார் இளைத்தார் என்று உருவக் கிலேசப்பட்டே போமித்தனை; ‘நிராஶ்ரயமாக ஆத்ம ஸ்வரூபத்தை நினைப்பதனால் பயன் இல்லை’, என்றபடி.

‘‘....வீடைப்பண்ணிஒருபரிசே எதிர்வும்நிகழ்வும்கழிவுமாய்,
ஓடித்திரியும்யோகிகளும் உளருமில்லையல்லரே.’’ (8-8-9)
ஒரு பரிசே வீடைப்பண்ணி - சாஸ்த்திரங்களின் மூலமாக அன்றிக்கே ‘‘அஜ்ஞானம் கழிதலே மோக்ஷம்’’ என்று தம்முடைய அறிவாலே ஒன்றைக் காட்டி. எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் - எதிர் காலம், நிகழ்காலம், இறந்த காலம் என்னும் மூன்று காலங்களிலும் உளராய். ஓடித்திரியும் யோகிகளும் உளர்-பிரயோஜனம் இல்லாமலே தட்டித் திரியும் மஹா யோகிகளும் உளர். இல்லை அல்லரே - இல்லாமை இல்லை. ‘காலம் அநாதி; செய்து வைக்கும் பாவங்களுக்கு எல்லை இல்லை; ஆன பின்னர், இப்படி இருப்பார் மஹாபுருஷர்கள் சிலர் உண்டாகக் கூடாதோ? இவ்வுலகத்தில் கூடாதது உண்டோ? என்கிறார். (மாயாவாதிகளை ‘யோகிகள்’ என்று சொல்லுகிற ஆழ்வாருடைய மநோபாவத்தை அருளிச் செய்கிறார், ‘காலம் அநாதி’ என்று தொடங்கி).

212. உளரும் இல்லை அல்லராய்
உளராய் இல்லை ஆகியே
உளர்எம் ஒருவர் அவர்வந்துஎன்
உள்ளத் துள்ளே உறைகின்றார்;
வளரும் பிறையும் தேய்பிறையும்
போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும்போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே. (8-8-10)

பொருளுரை: அடியார்களுக்கு ‘இலர்’ என்னாதபடி உளராய் இருப்பவரும், அடியர் அல்லாதார்க்கு ‘இலர்’ என்று சொல்லாம்படியே உளராய் இருப்பவருமான எம் ஒருவர் உளர்; அவ்விறைவர் வந்து என் மனத்திலே நித்தியவாசம் செய்கிறார்; ஆதலால், வளர்பிறைக்கு இருப்பது போன்ற வளர்ச்சியும், தேய்பிறைக்கு இருப்பது போன்ற குறைவும் உடையதாகிச் சூரியனும் இருளும் போன்று மாறி மாறி வரக் கூடியதான ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் அழித்தோம்.

ஈடு: பத்தாம் பாட்டு. ‘ஸாங்க்யம் முதலான குத்ருஷ்டி மதங்களிலே நான் புகாதபடி தானே யாதொரு பயனையும் கருதாது என்னை அங்கீகரித்து, நினைவிற்கு வாய்த் தலையான மனத்திலே நித்தியவாசம் செய்கையாலே, என்னுடைய எல்லாத் துக்கங்களும் போயின’என்கிறார். (பாசுரம் முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார். ‘ஸாங்க்யம்’ என்றது, நிரீச்வர ஸாங்க்யனை. ‘முதலான’ என்றதனால், ஈச்வரன் உளன் என்கிற ஸாங்க்யனைக் (ஸேச்வர ஸாங்க்யன்) கொள்க. குத்ருஷ்டி - வேதச் சொற்றொடர்களுக்கு நேர்ப்பொருள் காணாது மாறுபடப் பொருள் காண்பவன்.),

இல்லை அல்லராய் உளரும் - ‘ஈச்வரன் என்பான் ஒருவன் உளன்; இல்லை என்ன ஒண்ணாதே இருக்கிறான் என்ற மாத்திரமாய் இருப்பன்’ என்பது, ஸேச்வரஸாங்க்ய மதம்: என்றது, ‘விதி விலக்குகளைச் செய்வதற்கு ஆற்றல் இன்றிக்கே இருக்கும் கணவனைப்போன்று, ஈச்வரன் என்பான் உலகத்தை நியமித்தலில் ஆற்றல் இல்லாதவனாகி உளன் என்ற மாத்திரமேயாய் இருப்பன் என்றபடி.

இல்லை ஆகியே உளராய் - ‘இல்லையாகியே காண் அவனுடைய உண்மை’ என்பான் நிரீச்வரஸாங்கியன்: அந்த மதங்களை மறுக்கிறார். அன்றிக்கே, ‘அடியர் அடியர் அல்லாதார் விஷயமாக்கி, இல்லை அல்லராய் உளராய் இருப்பர் அடியார்கட்கு; இல்லையாகியே உளராய் இருப்பர் அடியர் அல்லாதார்க்கு’, என்னுதல்.

உளர் எம் ஒருவர் - குணம் உலகம் முதலியவை களால் நிறைந்தவராய்க் கொண்டு உளராய், அவற்றைக் காட்டி என்னை அங்கீகரித்த ஒப்பற்றவர். அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் - குணங்களால் மேம்பட்டவரான அவர் என்னளவும் வந்து, மயர்வு அற மதிநலம் அருளித் தாம் திருத்தின நெஞ்சிலே நித்தியவாசம் செய்யாநின்றார்.

213. புனையிழைகளணிவும்ஆடையுடையும்புதுக்கணிப்பும்*
நினையும்நீர்மையதன்றுஇவட்குஇதுநின்றுநினைக்கப்புக்கால்* (8-9-5)

புனை இழைகள் அணிவும் - ஆபரணங்கள் நாம் பூட்டினாற்போலே இருந்தனவோ? ஆடை உடையும் - முகத்தலை அறிந்து உடுத்ததாய் இருந்ததோ? புதுக்கணிப்பும் - நீர் பாய்ந்த வயல் போலே இவள் வடிவிலே பிறந்த செவ்வி பாரீர்கோள்! நின்று நினைக்கப்புக்கால் நினையும் நீர்மையது அன்று இவட்கு இது - தொடங்கிவிடுதல் அன்றியே, காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நின்று ஆராயப்புக்காலும், இவளுக்குப் பிறந்த இவ்வழகுகள் நினைக்கப் போகா. என்றது, ‘பேசமுடியாது வேதவாக்குகள் திரும்பின’ (‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர் கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4 கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்) என்கிற விஷயத்தை அளவிட்டு அறியினும், இவள்படி அளவிட்டு அறிய முடியாது’ என்றபடி.

214. ‘‘...... முற்றும் தவிர்ந்த’’ (8-10-1)

முற்றும் தவிர்ந்த - நான் போக்கிக் கொள்ளுமன்றே அன்றோ கிரமத்தாலே போக்க வேண்டுவது? ‘பக்திமானு டைய புண்ணிய பாவங்கள் அனைத்தும் அழிகின்றன’ என்னக் கடவதன்றோ? ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கிறேன்’ என்கிறபடியே அன்றோ அவன் போக்கும் போது இருப்பது? ‘‘ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ3யந்தே’’ (சாந். 5-24-3) - ‘இவ்வாறு அவன் பாவங்களெல்லாம் நாசமாக்கப்படுகின்றன’. தத3தி4க3மாதி4 கரணம் 4-1-7 ‘தத3தி4க3ம உத்தரபூர் வாக4யோரஶ் லேஷ, விநாஶௌ தத்3வ்யபதே3ஸாத்’ 4-1-13, என்ற ஸூத்திரத்தில் இந்தச்சொற்றொடரின் பொருளைக் குறிப்பிட்டுள்ளார்.

215. வியன்மூவுலகுபெறினும்
போய்த்தானேதானேயானாலும்*
புயல்மேகம்போல்திருமேனியம்மான்
புனைபூங்கழலடிக்கீழ்* (8-10-2)

வியன் மூ உலகு பெறினும் - பரந்திருக்கின்ற மூன்று உலகங்களின் செல்வத்தையும் என் ஒருவனுக்கே ஆக்கினாலும், போய்த் தானே தானே ஆனாலும் - ஸம்சார ஸம்பந்தம் அற்றுப்போய்க் கேவலம் ஆத்ம அனுபவமே பண்ணப் பெற்றாலும். ‘தானே தானே’ என்ற அடுக்குத் தொடரால், ஸம்சாரத்திலே புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் தானுமாய் வாழ்கின்ற வாழ்க்கையும் தவிர்ந்து, பரமபதத்தே போய், நான் பரமாத்மாவுக்கு இனியன், நான் பரமாத்மாவுக்கு இனியன்’ என்று களிக்குமதனையும் விட்டு, (‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம்.

 நான் (எம்பெரு மானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன், என்று தைத்திரீய உபநிஷத் வாக்கியத்தை இதற்குப் பிரமாணமாக அருளிச்செய்துள்ளார்) கேவலம் தானே ஆகையைத் தெரிவித்தபடி. புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூங்கழல் அடிக்கீழ் - மழை மேகம் போலே இருக்கிற திருமேனியைக்காட்டி எல்லா உலகங்களையும் எழுதிக்கொண்டிருக்கிறவனுடைய, சாற்றப் பட்ட பூக்களையும் வீரக்கழலையுமுடைய திருவடிகளின் கீழே. அழகு இல்லாதவனாயினும் விட ஒண்ணாத சம்பந்தத் தையுடையவராதலின், ‘அம்மான்’ என்கிறது.

216. ‘‘இங்கே திரியவே’’ (8-10-3) ‘பொய்நின்ற ஞானம்’ (திருவிருத்தம்.1) தொடங்கி ‘முனியே நான்முகனே’ (10-10) என்ற திருவாய்மொழி முடிய இவரைத்தொடர்ந்து பின் பற்றிய இடத்து, ஆழ்வார் தமக்கும் பிரயோஜனமாகச் சொன்ன ‘பயிலும் சுடரொளி’ (3-7), ‘நெடுமாற்கு அடிமை’ (8-10) என்னும் திருவாய்மொழிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றினார். ‘எவை எங்களுடைய நல்லொழுக் கங்களோ, அவை கொள்ளத்தக்கவை என்று ஆசார்யன் சிஷ்யனுக்கு உபதேசிக்கிறார்’ என்னக் கடவதன்றோ. ‘‘யாந்யவத்3யாநி கர்மாணி தாநி ஸேவிதவ்யாநி’’ (தை.ஸீக்ஷா. 11-2) ‘‘யாந்யஸ் மாகம் ஸுசரிதாநி தாநி த்வயோபாஸ்யாநி’’ (தை.ஸீக்ஷா. 11-2) - ‘எங்களுடைய குற்றமற்ற செயல்கள் எதுவாயினும், அது உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; மற்றவர்கள் அல்ல. எங்களுடைய நல்ல செயல்கள் அனைத்தும் உம்மால் கவனிக்கப்பட வேண்டும், க்ருதாத்யயாதி4கரணம் 3-1-2 ‘சரணாதி3தி சேந்ந தது3பலக்ஷணார்த்தே2தி கார்ஷ்ணா ஜிநி:’ - 3-1-9, என்று இச்சொற்றொடர் ஸ்ரீபாஷ்யகாரராரின் மேள்கோளாகும்.

217. ‘‘.....இன்புற்று இருந்தாலும்’’ (8-10-5)

இன்புற்று இருந்தாலும் - ‘இந்தப் பரமாத்மா ஆனந்திப்பிக்கிறான்’, என்கிறபடியே, அவன் ஆனந்திப்பிக்க, ஆனந்தத்திலே மூழ்கியிருந்தாலும், ‘‘ஏஷ ஹ்யே வாநந்த3யாதி’’ (தை. ஆந. 7-21) - ‘இப்பரம புருஷனே (முக்தனை) ஆனந்தமடையச் செய்கிறான்’. ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4கரணம் 4-4-6 ‘த3ர்ஶயதஶ்சைவம் ப்ரத்யக்ஷா நுமாநே’4-4-20, என்று ஸ்ரீபாஷ்யத்திலே இச்சொற் றொடருக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

218. ‘‘நுகர்ச்சியுறுமோ? மூவுலகின் வீடுபேறுதன் கேழில்’’ (8-10-6)

நுகர்ச்சி உறுமோ - திருவாய்மொழி முகத்தாலே பகவானுடைய குணங்களை அனுபவிக்குமதனோடு ஒக்குமோ? மூன்று உலகின் வீடு பேறு - தன் நினைவின் ஏகதேசத்தாலே உலகத்தைப் படைத்தல் அழித்தல்கள் ஆகும்படி இருக்கிற இறைமைத் தன்மைதான் அதனோடு ஒக்குமோ? அவனுக்கு அன்றோ இது ஐச்வர்யமாய்த் தோற்றுவது? இவர்க்கு இது புருஷார்த்தமே; ‘உலகத்தைப் படைத்தல் முதலான தொழில்கள் நீங்கலாக ஏனையவற்றில் பரமாத்மாவோடு ஒத்தவன் ஆகிறான் முத்தன்’, என்கிறபடியே, ஸ்வரூபத்திற்குத் தக்கவை ஆனவை அன்றோ புருஷார்த்தமாவது, ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம்-4-4-6 ‘ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச’ - 4-4-17-(முக்தனுடைய ஐச்வர்யம்) உலகைப்படைப்பது முதலான (பரம்பொருளுக்கேயுரிய) செயல்களைத் தவிர்ந்ததுதான்; - (ப்ரஹ்ம லக்ஷணத்தைக்கூறும்) ப்ரகரணத் திலிருந்து (இது விளங் குகிறது); (உலகை நியமிப்பதைப் பேசுமிடங்களில் முக்தனுக்கு) ஸந்நிதியில்லை யாகையாலும் (இது தேறுகிறது),என்பது இந்த ஸூத்திரத்தின் பொருளாகும்.

219. ‘‘தனி மாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத்தான்’’ (8-10-7)

தனி மாப்புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா - உபமானம் இல்லாததாய், சிலாக்கியமான புகழே காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நிற்கும்படியாக. தான் - மஹத் தத்துவத்துக்குக் காரணமான ப்ரக்ருதியைச் சரீரமாகவுடைய தான். அன்றிக்கே, ‘விரும்புவோர் இன்றிக்கே இருக்க, பூர்ணனாய் இருக்கிற தான்’ என்னுதல். (பிரகிருதியைச் சரீரமாகவுடைய தான் என்றது, ஸூக்ஷ்ம சித்து, அசித்துக்களோடு கூடின ப்ரஹ்மத்தை)

‘‘....நீக்கமில்லாஅடியார்தம்அடியாரடியாரடியார்எங்கோக்கள்* அவர்க்கேகுடிகளாய்ச்செல்லும் நல்லகோட்பாடே’’ (8-10-10) ‘சயமே அடிமை தலை நின்றார்’ (8-10-2) ஆகிறார், ஸ்ரீ பரதாழ்வான் போல்வார்; ‘கோதில் அடியார்’(8-10-9) ஆகிறார், ஸ்ரீசத்ருக்நாழ்வான்போல்வார்; ‘நீக்கம் இல்லா அடியார்’ (8-10-10) ஆகிறார், இளைய பெருமாள் போல்வார். அவர்க்கே குடிகளாய் - இருகரையராய் இராதே, ‘வேண்டும் பலன்களைத் தருவதில் மிக உயர்ந்த ‘ராமாநுஜ’ என்னும் இந்த நான்கு எழுத்துள்ள மந்திரமானது இல்லையாயின், என்னைப் போன்ற உயிர்கள் எத்தகைய கொடிய நிலையை அடைவார்களோ அறியேன்; ஆச்சரியம்!’ என்று இருக்கை போலே காணும் அடுப்பது.

‘‘நசேத்3ராமாநுஜேதி ஏஷா சதுரா சதுரக்ஷரீ, காமவஸ்தா2ம் ப்ரபத்3யந்தே ஜந்தவோ ஹந்த மாத்3ருஶ:’’

‘ராமாநுஜ’ என்கிற இந்த வேண்டும் பலன்களைத் தருவதில் நிபுணமான, நான்கெழுத்துள்ள மந்த்ரமானது, இல்லாமல் போயிற்றானால், என்னைப் போன்ற உயிர்கள், எவ்வகையான கொடிய தசையை அடைவார்களோ (அறியேன்) ஆச்சர்யம்.

அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு - அவர்களுக்கே என் குடி முழுதும் அடிமைப்பட்டவர்களாய்ச் செல்லும் நல்ல கட்டளை, வாய்க்க தமியேற்கு. கோட்பாடு - கட்டளைப்பாடு.

எட்டாம் பத்து முடிவுற்றது.

17

ஒன்பதாம் பத்து

220. ‘‘அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே’’ (9-3-2) - அகன்ற பூமியை உண்டாக்கி, பிரளயம் கொண்ட பூமியை மஹாவராஹமாய் எடுத்தானும் அவனே. ‘அவனே’ என்ற ஏகாரத்தால் படைத்தல் முதலான காரியங்களில் வேறு துணைக் காரணம் இன்மையைச் சொல்லுகிறது. ‘அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே’ - பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து, வெளி நாடு காண உமிழ்ந்து, மஹாபலியால் கவர்ந்துகொள்ளப்பட, எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் அவனே. ‘அவனே’ என்ற ஏகாரத்தால் ஆபத்திற்குத் துணையாதல் முதலான காப்பாற்றுதல் தொழிலிலும் வேறு துணை இன்மையைத் தெரிவித்தவாறு. ‘அவனும் அவனும் அவனும் அவனே’ - பிரமனும் சிவனும் இந்திரனும் ஆகிய இவர்களுடைய ஸ்வரூபம் ரக்ஷணம் நிற்றல் இருத்தல் முதலான செயல்கள் அவன் இட்ட வழக்கு; ‘அவனே பிரமனும், அவனே சிவனும், அவனே இந்திரனும்’ என்கிற பிரசித்தியைப் பற்றச் சொல்லுகிறார். என்றது, ‘அவன், அவன், அவன் என்றே போருகிறார்’ என்றபடி.

‘‘‘‘தஸ்யா: ஶிகா2யா மத்4யே பரமாத்மா வ்யவஸ்தி2த: I (தை. நா. 11-11) ‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ: ஸேந்த்3ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட்’’ (தை. நா. 11-13) - ‘பரமாத்மா அந்த பிழம்பின் நடுவில் நன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளான்’. ‘அவனே ப்ரஹ்மதேவன், அவனே சிவன், அவனே இந்திரன், அவனே, ஆகாசம், அவனே மிக உயர்ந்தவன் அனைத்தையும் ஆள்பவன்’. லிங்க3 பூ4யஸ்த்வாதி4கரணம் 3-3-19, ‘லிங்க3 பூ4யஸ்த் வாத்தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ 3-3-43 - என்ற ஸூத்ர பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த உபநிஷத் சொற்றொடரை மேற்கோள் காட்டியுள்ளார்.

அவனே மற்று எல்லாமும் - ‘அவனே, உயர்ந்தவனும் விகாரம் இல்லாதவனும் கர்மங்கட்கு வசப்படாதவனுமான முத்தன்’ என்கிறபடியே, பிரதானரோடு பிரதானம் இல்லாதாரோடு வேற்றுமைஇல்லாதபடி அறிவுடைப் பொருள்களும் அறிவில் பொருள்களும் அவனுக்கு வசப்பட்டவையேயாம்.

221. ‘அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்’ (9-3-3) -அறிதற்கு அரிய பொருள்களை அறிந்தனவாய் இருக்கிற வேதங்களாகிற சாஸ்த்திரங்கள். அன்றிக்கே, ‘அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் அறிதற்கு அரிய பொருள்களை அறுதியிட்டுத் தரும் ப்ரஹ்மஸூத்திரம், இதிஹாஸம் , புராணங்கள் முதலானவைகள் என்னுதல்.

‘அரும் பொருள் ஆதல் அறிந்தன கொள்க’ - ‘அறிதற்கு அரியன்’ என்னும் இவ்வளவே அறிந்தனவாகக் கொள்ள அமையும். ‘வேதவாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆநந்த குணத்தினின்றும் மீண்டனவோ’ என்றும், அறியப்படாதது என்றிருப்பவன் எவனோ அவனுக்கு அறியப்பட்டது, அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப் படாதது’ என்னும் இவ்வளவே அறிந்தது.

‘‘யதோ வாசோ நிவர்த்தந்தே I அப்ராப்ய மநஸா ஸஹ I ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் I ந பி3பே4தி குதஶ்சநேதிII’’ (தை. ஆந. 8-4) - ‘எதிலிருந்து வாக்கானது (பேச்சானது) மனதுடன் சேர்ந்து திரும்பி வருகிறதோ, அதை அடைய இயலாமல், ப்ரஹ்மத்தின் அந்தப் பேரின்பத்தை அறிந்தவர்கள், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5, ‘த3ர்ஶயதி சாதோ2 அபி ஸ்மர்யதே’ 3-2-17, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்.

‘எல்லாம் அறிந்தனர்’ - மற்றையவற்றை அறிந்தாராய் இருக்கின்ற பராசரர், வியாஸர், வான்மீகி முதலான ரிஷிகளும். ‘அரியை வணங்கி’ - எல்லாத் துக்கங்களையும் போக்குகின்றவனை அடைந்து.

‘நோய்கள் அறுக்கும் மருந்து அறிந்தனர்’ - ‘ஸம்சாரமாகிற பாம்பினால் கடிக்கப்பட்டவர்களாகிச் செயல் அற்று இருக்கும் மக்கள் கிருஷ்ணன் என்னும் மந்திரத்தை கேட்டவுடன் விடுபட்டவர்கள் ஆகிறார்கள்’, ‘‘ஸம்ஸாரஸர்ப்ப ஸந்த3ஷ்டசேஷ்டைகபே4ஷஜம் | க்ருஷ்ணேதி வைஷ்ணவம் மந்த்ரம் ஶ்ருத்வா முக்தோ ப4வேத் நர: || -’மனிதன் ஸம்ஸாரமாகிய ஸர்ப்பத்தினால், நன்றாய் கடிக்கப் பட்டவர்களும், (அதனால்) ஒருவித செயல்பாடும் அற்றவர் களானவர்களுக்கும், முக்கியமான மருந்தான ‘கிருஷ்ணா’ என்ற வைஷ்ணவ மந்திரத்தை கேட்டவுடன், முக்தனாய் விடுவான்.

‘பிறவித்துன்பத்திற்கு மருந்து’ என்னும் இவ்வளவே அறிந்தார்கள். அவனுடைய இனிமையில் இழிந்திலர்கள்; அன்றிக்கே, ‘வேறு ஒன்றையும் விரும்பாத அவனுடைய உபாய பாவத்தில் இழிந்திலர்கள்’ என்னுதல்.

222. மையார் கருங்கண்ணி (9-4) - ப்ரவேசம்

ஈடு :-- ‘இறைவனுடைய ஸ்வாதந்திரியத்துக்கு அடி, அவன் தானாய் இருக்கும்; அவனுடைய சீலம் முதலான குணங்களுக்கு அடி பிராட்டியாய் இருக்கும். சீலம் முதலான குணங்களிலே வந்தவாறே ஸ்வாதீனம் இன்றிக்கே ஒழிகிறதோ?’ என்னில், நிரூபித்தால் அந்த ஸ்வாதந் திரியத்தைப் போன்று இவளுடைய, ‘சேர்த்தி நித்தியமாய் இருக்கையாலே அங்ஙனமாய் இராது. பாஷ்யகாரர் மேலே ‘ஸ்ரீவல்லப’ என்ன நினைத்து, ஸ்வரூபத்தை நிரூபிக்கிற இடத்திலே, ஞானம் ஆநந்தம் இவற்றுக்கு முன்னே ‘ச்ரிய:பதி: என்றாரே அன்றோ?

நித்யமாகைக்கு அடி இறைவனுடைய ஸ்வரூபத்தை இவளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் படி இவள் இருத்தலாலே என்று கூறத் திருவுள்ளம் பற்றி, அப்படி இறைவனுடைய ஸ்வரூபத்தைக் கொண்டு நிரூபிக்கும் படி இவள் இருக்கிறாளோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘பாஷ்யகாரர்’ என்று தொடங்கி, என்றாரே அன்றோ? என்றது, ‘கீதா பாஷ்யத்தில் அருளிச்செய்தார்’ என்றபடி. ‘‘ஶ்ரிய:பதி: நிகி2ல ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தான, ஆநந்த3 ஸ்வரூப:’’ என்று தொடங்கி, ‘‘ஸ்வாபி4மத அநுரூப நித்ய நிரவத்3ய ஸ்வரூப ரூபகு3ண விப4வைஶ்வர்ய ஶீலாத்3யநவதி4க அதிஶய அஸங்க்2யேய கல்யாணகு3ணக3ண ஸ்ரீவல்லப4’’- ‘‘ஸ்வரூபத்தை நிரூபித்துத்தரும் ஸ்ரீதேவியின் நாதனான ஸர்வேச்வரன், தாழ்வுகள் அனைத்திற்கும் எதிர்த்தட்டாய் இருக்கிறான், மங்களங்கள் முழுவதற்கும் ஒரே இருப்பிடமாய் இருக்கிறான்,தன்னைக் காட்டிலும் வேறுபட்ட எல்லாப் பொருள்களிலும் சிறந்தவனாயிருக்கிறான், காலத்தாலும், தேசத்தாலும், வஸ்துவாலும், அளவுபடாத வனாயிருக்கிறான், அறிவையும்,ஆநந்தத்தையுமே ஸ்வரூப மாக உடையனா யிருக்கிறான்.

இயற்கையானவையும், எல்லையற்ற மேன்மையை உடையனவுமான அறிவு, பலம் (தரிக்கும் ஸாமர்த்தியம்), ஐச்வர்யம் (நியமிக்கும் ஸாமர்த்தியம்), வீர்யம் (விகார மின்மை) முடியாதவற்றையும் முடிக்கவல்ல (அக4டிதக4டனா) சக்தி, தேஜஸ்ஸு, (அனைவரையும் வென்றிருக்கை) முதலான கல்யாணகுணக்கூட்டங்களுக்குக் கடலாயிருக் கிறான். தனக்கு இனியதாகவும் தகுந்ததாகவும், எப்போதும் ஒருபடிபட்டதாகவும், எண்ண அரியதாகவும், அப்ராக்ருத மாகவும், அற்புதமாகவும், என்றுமிருப்பதாகவும், குற்ற மற்றதாகவும், மிகச்சிறந்த ஒளி, அவயவங்களின் அழகு, நறுமணம், மென்மை, திருமேனியழகு, யௌவனம், முதலான கணக்கற் குணங்களுக்கு ஓரிருப்பிடமாகவும் இருக்கும் திவ்யரூபத்தை உடையவனாயிருக்கிறான்.

தனக்குத் தகுந்தவையாகவும், பலவிதமாகவும், விசித்திர மாகவும், கணக்கற்ற ஆச்சர்யங்களை உடையன வாகவும், என்றுமுள்ளவனாகவும், குற்றமற்றவனுனமான கிரீடம் முதலான அளவற்ற ஆபரணங்களை உடையனா யிருக்கிறான், தனக்குத் தகுந்ததையும், கணக்கற்றவையும், எண்ணமுடியாத சக்தியையுடையவையும், என்றுமிருப்ப வையும், குற்றமற்றவையும், மிகச் சிறந்த மங்களத்தை அளிப்பவையுமான சங்கசக்ராதி திவ்யாயுதங்களை உடையவனாயிருக்கிறான். தனக்கு இனியவளாயும், தகுந்தவளாயும், என்றுமிருப்பனவும், குற்றமற்றவளுமான ஸ்வரூபத்தையும், ரூப குணத்தையும், செல்வம், ஐச்வர்யம், சீலம் முதலான எல்லையற்ற பெருமைகளையுடைய கணக்கற்ற மங்கள குணங்களையும் உடையவளாகவுமுள்ள ஸ்ரீதேவியின் நாயகனாயிருக்கிறான்’’ என்று கீதா பாஷ்யத்தில் அருளிச்செய்த படியை அறிவித்தவாறு.

222.A. என் கண்ணே (9-4-1)
நித்திய ஸூரிகளும் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் இத்தனை அன்றோ? ‘அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே’ (அமலனாதி.10) என்று இவ்வள விலே தேக்கிட்டு விடுவர் இங்குள்ளார். ‘தேவர்கள் உண்பது இல்லை; இந்த அமிர்தத்தைப் பார்த்தே திருப்தி அடைகிறார்கள்’, என்று இவ்வளவிலே தேக்கிட்டுவிடுவர் அங்குள்ளார். ‘‘ந ஹ வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்தி ஏததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி’’ (சாந். 3-6-1) - ‘தேவர்கள் உண்மையில் உண்பதில்லை, அவர்கள் எதையும் பருகுவதுமில்லை; அவர்கள் இந்த அழிவற்ற ஒன்றைக் காண்பதால் மனநிறைவு அடைகிறார்கள்.

தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம் 3-1-1 “ பா4க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா2 ஹி த3ர்ஶயதி’ - 3-1-7, இந்த வேதச்சொற்றொடர் பாஷ்யகாரரால் மேற்கோளாகக் காட்டப்பட்டது.
என் கண்ணே - ஸம்சாரிகளில் தமக்கு உண்டான ஆசையோ பாதியும் பேருமாயிற்று, இவரைக் காட்டிலும் இவருடைய திருக்கண்களுக்கு. முக்கியமானவர்களாய் இருக்கும் ஏற்றம் உண்டே அன்றோ அவற்றுக்கு?

223. ‘‘கண்ணே உன்னைக் காணக் கருதி ‘‘ (9-4-2)

கண்ணே - எனக்குக் கண் ஆனவனே! உன்னைக் காணக் கருதி - எல்லை இல்லாத இனியனான உன்னைக் காண ஆசைப்பட்டு. கண்ணைக்கொண்டே கண்ணைக் காண இருக்குமாறு போலே காணும் இவர் இருக்கிறது. ‘காண்பதற்குக் கருவியான கண்களும் காணப்படும் விஷயமும் அவன்’, என்கிறார். ‘பார்க்கின்ற கண்களும் பார்க்கப்படுகிற பொருள்களும் நாராயணனே’, என்னக் கடவது அன்றோ? ‘‘சக்ஷுஶ்ச த்3ரஷ்ட்வ்யஞ்ச நாராயண: ஶ்ரோத்ரஞ்ச ஶ்ரோதவ்யஞ்ச நாரயண: ‘‘ (ஸுபாலோ.) -’கண்ணும் காண்பவனும் நாராயணனே; காதும் கேட்பனவும் நாராயணனே’ என்ற வேதச்சொற்றொடரைக் குறிப்பிடடுள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர். அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்? பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே அதனைப் பெறுதற்கு உரிய வழியிலும் இவர்க்கு உள்ள நியதியும். என்நெஞ்சம் - நல்வினை தீவினைகட்குக் காரணமாய்க் கொண்டு, விஷயங்களிலே ‘பரகுபரகு’ என்று வாரா நிற்கும் அன்றோ ஸம்சாரிகளுடைய மனம்?

224. ‘‘சோதி உயரத்து ஒருத்தா ‘‘ (9-4-6)

சோதி உயரத்து ஒருத்தா - ‘இந்த ப்ரக்ருதி மண்டலத்துக்கு மேலே உள்ள பரமபதத்தில் சோதி மயமான பரம்பொருள் விளங்குகிறான்’, என்கிறபடியே, எப்போதும் ஒக்க விளங்காநிற்பதாய், எல்லை இல்லாத ஒளி உருவமாய் இருக்கிற பரமபதத்திலே எழுந்தருளியிருக்கிற ஒப்பற்ற வனே! பிரகாரத்திலே அன்றோ பல வகை உள்ளது? பிரகாரி ஒருவனே ஆம். Ôஅத2 யத3த: பரோ தி3வோ ஜ்யோதி:Õ (சாந்தோக்யம் 3.13.7) \& ‘இந்தப் பரமாகாசத் திற்குமேலே யிருக்கும் சோதி’ வேதாந்ததீபம், ‘உபதே3ஶபே4தா3ந் நேதிந்நோ ப4யஸ்மிந் நப்யவிரோதா4த்’- 1-1-28 ஸூத்திர விரிவுரையில் ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறு விளக்க மளித்துள் ளார்.

உன்னை என் உள்ளம் உகந்து உள்ளும் - சடக்கென முகம் காட்டின உன்னைக் கண்டு, கலங்கின என் நெஞ்சம் உகந்தே அனுபவியா நின்றது. ‘தேவர்கட்கு எல்லாம் விருத்தா! விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து ஒருத்தா!’ என்று சொல்கிற இவ்விசேடணங்கட்குக் கருத்து, ‘மேலானார்க்கும் மேலாய்ப் பரமபதத்திலே எழுந்தருளி யிருந்து அவர்களை அனுபவிப்பிக்குமாறு போலே, தன்னை அனுபவிப்பிக்க அனுபவித்த என் நெஞ்சம் உகந்தது ஆகாநின்றது’ என்கை.

225. ‘‘திருமேனி அவட்கு அருளீர்’’ (9-7-4)

திருமேனி அவட்கு அருளீர் - ‘பிறர்பொருட்டே இருக்கிற உடம்பை ஆசைப்பட்டார்க்குக் கொடுக்க லாகாதோ?’ என்றது, ‘பக்தர்களுக்காகவே’ என்கிறபடியே, இவ்வுடம்பு ஆசைப்பட்டார்க்குரியது அன்றோ, என்று சொல்லுங்கோள்’ என்றபடி. காதலிகட்கு ஸ்வரூபம் முதலானவற்றைக் காட்டிலும் வடிவிலே அன்றோ விருப்பம்? அருளீர் - காதலே அன்றோ குடிபோயிற்று? திரு அருளும் மறுத்ததோ? என்றக்கால் - ‘வாக்கால் தருமத்தை அடைவாய்’ (ஸ்ரீரா.ஸுந். 39-10) என்கிறபடியே, உங்களுக்கு ஒரு வார்த்தை அன்றோ நேர வேண்டுவது! உம்மை - இப்படி உதவி செய்தவரான உங்களை. தன் திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே - உங்கள் வடிவிற் புகரையும் போக்கிக் களங்கம் இல்லாத ஆகாசத்தினின்றும் உங்களை ஓட்டுவானோ? உங்களுக்கு இதற்கு முன்பு இல்லாதவற்றையு முண்டாக்குமது ஒழிய, பண்டு உள்ள வற்றைத் தவிர்த்து உங்களைத் தண்டிக்குமோ? என்றது, ‘சிறிது ஒப்புமையைத் தவிர்த்து, ‘மேலான ஒப்புமையை அடைகிறான்’ என்கிறபடியே, எல்லாவகையிலும் ஒத்திருக் கும் தன்மையையும் தந்து, ஆகாசத்தில் மாத்திரம் இருத்த லோடு அன்றிப் பரம ஆகாசத்தையும் தாரானோ?’ என்றபடி.

‘நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி’’ (முண்ட. 3-1-3) - குற்றங்கள் நீங்கப் பெற்றவனாய் (பரமாத்மா வோடு) மேலான ஒற்றுமையை (முக்தன்) அடைகிறான்’. ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6, ஜக3த்3வ்யாபார வர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச - 4-4-17, என்கிற ஸூத்திரத்தில் மேற்கோளாகக் காட்டப் படுகிறது.

226. ‘‘அறுக்கும்வினையாயின’’ (9-8) - ப்ரவேசம்

‘உபாயமும் உபேயமும் என்னும் இரண்டும் ஈச்வரனே’, என்று அறுதியிட்டார்க்கு, பிராப்பியத்திலே ருசி கண்ணழிவாற்றால் விளம்பத்திற்குக் காரணம் இல்லா மையாலே, பேறு ஸித்திக்குமளவும் எண்ணம் சொல்லா நிற்கும் அன்றோ? இவ்வெண்ணந்தான் இவனுக்குத் தவிராததுமாய், அதுதான் இனியதுமாய், இவனுடைய ஸ்வரூபத்தோடு சேர்ந்திருப்பதுமானது ஒன்றே அன்றோ? ‘பெரிய முதலியார் (ஆளவந்தார்), பேற்றினைப் பெறுவதில் உள்ள விரைவாலே எப்போதும் இத்திருவாய்மொழியினைச் சொல்லிக் கொண்டேயிருப்பர்; ஆகையாலே, இத்திருவாய் மொழியினைப் ‘பெரிய முதலியார் திருவாய் மொழி’ என்றாயிற்றுச் சொல்லுவது. அன்றிக்கே, ‘விட்ட தூதுவர்கள் தாழ்த்தார்கள் என்று தாமே அவன் எழுந்தருளியிருக்கிற தேசத்து ஏறப் போக ஒருப்படுகிறார்’, என்பாரும் உளர்.

227. ‘‘மணாளன் மலர்மங்கைக்கும்’’ (9-8-5)

திருநாவாய் - உபய விபூதி நாதன், பெறாப்பேறாக விரும்பி வசிக்கிற தேசம். அவன் விரும்புகிற தேசம் அல்லது அடையத்தக்க பேறு வேறு இல்லை அன்றோ? கண்ணார - காண்கையிலே விடாய்ப்பட்ட கண் வயிறு நிறைய. களிக்கின்றது இங்கு என்றுகொல் - ‘நான் இனியன், நான் இனியன்’ என்று ஒரு தேச விசேஷத்தே களிக்கை ஒழிய, இங்கே களிக்கப்பெறுகூது என்றோ! கண்டே - ‘காண்பது நிச்சயம்’ என்னும் நம்பிக்கையால் களிக்கை அன்றியே, கண்டே களிப்பது என்றோ!

‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமா னுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன், என்ற தைத்திரீய உபநிஷத் வாக்கியத்தை இதற்குப் பிரமாணமாக ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்கிறார்.

228. ‘‘அருளாதொழிவாய்’’ (9-8-8)

அருளாதொழிவாய்- என் பக்கல் திருவருள் செய்யாமல், ‘இவன் பட்டது படுகிறான்’ என்று இருக்கிலும் இரு. அருள் செய்து - அன்றிக்கே, எனக்கு வேறு கதி இன்மையைக் கண்டு கிருபை செய்து, அடியேனைப் பொருள் ஆக்கி உன் பொன் அடிக்கீழ் புக வைப்பாய் - அறிவில்லாத பொருள்களைப் போன்று இருக்கிற என்னை, ‘உள்ளவன் ஆகிறான்’ என்கிறபடியே, ஒரு நாள் ஆகும்படி செய்து, எல்லை இல்லாத இனிமையையுடைய உன் திருவடிகளின் கீழேவைத்துக் கொள்ளிலும் கொள்.

‘‘அஸந்நேவ ஸ ப4வதி I அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் I அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 I ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. ஆநந்தமயாதிகரணம் 1-1-6 ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் 1-1-13, என்கிற ஸூத்திரத்தில் இந்தச் சொற்றொடர் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

229. ‘‘மல்லிகை’’ (9-9) - ப்ரவேசம்

‘நன்று; இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற இது வேதாந்தங்களில் பேசுகிற கட்டளையில் எங்கே சொல்லிற்று?’ என்னில், ‘தஸ்ய (மே) தாவதேவ சிரம் - அப்படிப்பட்ட எனக்கு அத்துணைக் காலமும் நெடுங் காலமா கிறது’ என்று கூறி, அதன்பின் ‘யாவந்ந விமோக்ஷ்யே அதஸம்பத்ஸ்யே - எவ்வளவு காலம் விடுபடாமல் இருக்கின் றேனோ, பின்பு அடைகின்றேன்’ என்று இவ்வாறே அன்றோ அந்தச் சுருதி கூறுகிறது?

230. ‘‘பாவியேன் மனத்தே’’ (9-9-4)

‘ஸ்ரீ சுகமுனிவருக்குத் தந்தையும்’ என்னுமாறு போலே, வாடை தண்வாடை என்று புத்திரனை இட்டுச் சொல்லும்படியாய் இராநின்றது. வாயுவின் பிள்ளையன்றோ நெருப்பு? தாய்மார் வார்த்தையைக் கேட்டுத் ‘தண்வாடை’ என்கிறாள்; தன் அனுபவத்தாலே ‘வெவ்வாடை’ என்கிறாள். மேவு தண் மதியம் வெம்மதியம் - உலகத்தார் வெம்மைக்கு அஞ்சி நிலாவிலே ஒதுங்கக் காண்கையாலே தானும் அதிலே ஒதுங்கப் பார்த்தாள்; அவன் நெருப்பு மயமான சந்திரன் ஆனான்; அவன் நெஞ்சு அறிந்தவன் ஆகையாலே இச்சந்திரனும் வேறு பட்டான். ‘பரம்பொருளின் மனத் திலிருந்து சந்திரன் உண்டானான்’ என்னக் கடவது அன்றே. ஆயன் தன் மனம் கல்லானது அறிந்து மதிகேடாய் இருந்தது?

‘‘சந்த்3ரமா மநஸோ ஜாத:’’ (புருஷஸூக்தம்)- மனத்தில் நின்றும் சந்திரன் உண்டானான். என்பது வேதச்சொற்றொடர்.

231. ‘‘மாலைநண்ணி’’ (9-10) - ப்ரவேசம்

‘அறுக்கும் வினையாயின’ என்ற திருவாய்மொழியிலே அவனைப் பெறவேண்டும் என்ற எண்ணமேயாய்ச் சென்றது; எண்ணின சமயத்திலே விரும்பியபடி கிடையாமையாலே மிக்க துன்பத்தை அடைந்தபடி சொல்லிற்று, ‘மல்லிகை கமழ் தென்றல்’ என்ற திருவாய்மொழியில். அதுதான் இரவில் விசனமாய் நோவுபட்டபடி அன்றோ? இப்படி எண்ணினவாறு பெறாமையாலே நோவுபடுகிற இவருடைய துன்பத்தினை நினைத்து, சர்வேச்வரன், ‘நீரோ இப்படி எண்ணுவீரும் அது கிடையாமல் துன்பப்படுவீரும்? உம்மைப்பெற வேண்டும் என்று எண்ணுவோமும் நாம் அன்றோ? உம்மைப் பெறாமையால் இழவு பட்டோமும் நாம் அன்றோ? உமக்கு ஒரு குறை உண்டோ?

கலங்காப் பெருநகரம் கலவிருக்கையாக இருக்க, அவ்விடத்தை விட்டுத் திருக்கண்ணபுரத்திலே வந்து நாம் எழுந்தருளியிருப்பதும் உமக்காக அன்றோ? நீர் விரும்பியதை உம்முடைய சரீரத்தின் முடிவிலே செய்யக் கடவோம்’, என்று சமாதானம் செய்ய, சமாதானத்தை அடைந்தவராய், இவரும் உவகையர் ஆகிறார். அவன் ‘ஒன்று செய்யக் கடவோம்’ என்றால், அப்போதே பெற்றதாக நினைத்து உவகையர் ஆகலாம்படி அன்றோ அவன்படி இருப்பது?

‘பிராரப்த கர்மங்களின் முடிவிலே மோக்ஷமாகக் கடவது’, (பிராரப்த கர்மங்களின் முடிவிலே அன்றோ மோக்ஷம்? சரீரத்தின் முடிவிலே மோக்ஷம் ஸித்திக்குமோ?’ என்கிற ஐயப்பாட்டைப் பரிகரிப்பதற்குத் திருவுள்ளம் பற்றி பூர்வபக்ஷ அநுவாதம் பண்ணுகிறார், ‘பிராரப்த கர்மங்களின் முடிவிலே’ என்று தொடங்கி ‘பிராரப்த கர்மங்கள்’ என்றது, பிறப்பு அநாதியாய் வருதலின், உயிரான் அளவின்றி ஈட்டப்பட்டனவாய், இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் இனி எடுக்கும் உடம்புகளால் அனுபவிக்கக் கடவனவுமாய் மூவகைப்பட்ட வினைகளுள், பிறந்த உடம்பான் அனுபவிக்க வேண்டி முகந்து கொள்ளப்பட்டனவற்றை. ‘வேதாந்தங்களிலே சொல்லப் பட்டிருக்கின்றது’ என்றது, ‘போகேநது இதரே க்ஷபயித்வா அத ஸம்பத்யதே - மூவகைப்பட்ட வினைகளின் பயனை அனுபவித்த பின்னரே பகவானையடைதலாகிற மோக்ஷத்தை அடைகிறான்’, என்கிற ஸூத்ரத்தைத் திருவுள்ளம் பற்றி. (4.1:19) என்று அன்றோ வேதாந்தங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது?

‘ஸஞ்சித கர்மத்தைக் காட்டிலும்வேறுபட்ட ப்ராரப்த புண்யபாபங்களை,ஸுக துக்காநுபவத்தால், கழியும்படி செய்து, அவற்றின் பலன்களை அனுபவித்தபிறகு, (உபாஸகன் ப்ரஹ்மத்தை) அடைகிறான்’ என்று இதரக்ஷபணாதி4கரணம் 4-1-11, போ4கேந த்விதரே க்ஷபயித்வா(அ)த2 ஸம்பத்3யதே - 4-1-19, என்ற ஸூத்திர விரிவுரையில் விளக்கமளிக்கப்படுகிறது.

‘சரீரத்தின் முடிவிலே நீர் விரும்பியதைச் செய்யக்கடவோம்’ என்று சர்வேச்வரன் சொன்ன இடமும், அதனைக்கேட்டு இவர் உவகையர் ஆன இடமும் பொருந்தா’ என்னில், இத்திருவாய்மொழியிலே, ‘பக்தியைச் செய்யுங் கோள்’ என்றும், ‘அது மாட்டாதார் ப்ரபத்தியைச் செய்யுங் கோள்’ என்றும் சொல்லிற்றே அன்றோ? வேதாந்தங்களில் உபாசகனாகிற அதிகாரியை நோக்கிச் சொல்லுகிறது; இங்குப் பிரபந்நனுக்குச் சொல்லுகிறது; (’வேதாந்தங்களிலே பிராரப்த கர்ம பலன்களை அனுபவித்த பின்னரே மோக்ஷம்’ என்றது, உபாசகன் பிரபந்நன் என்னும் இருவரில் உபாசகனான அதிகாரியை நோக்கிச் சொல்லுகிறது என்றபடி. ‘இங்குப் பிரபந்நனுக்குச் சொல்லுகிறது’ என்றது. இத்திருவாய் மொழியில் ‘சரீரத்தின் முடிவிலே மோக்ஷம்’ என்றது, பிரபந்நனுக்குச் சொல்லுகிறது’ என்றபடி. ஆகையாலே, முரண்இல்லை என்பது திருவுள்ளம். ‘உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்த அக நாஸிநீ, ஸாத்யபக்தி: ஸாஹந்த்ரீ ப்ராரப்த ஸ்யாபிபூயஸீ - சாதன பத்தி பிராரப்த கர்மங்களைப் போக்காது; மற்றைய கர்மங்களையே போக்கும்; அந்தப் பிரபத்தியோ எனின், பிராரப்த கர்மங்களையும் போக்கும்’ என்பது இங்கு அநுசந்தேயம். சாத்யபத்தி - பிரபத்தி.).

‘‘தஸ்ய தாவதே3வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யே

(அ)த2 ஸம்பத்ஸ்யே’’ (சாந். 6-14-2) - ‘அந்த உபாஸ கனுக்கு ப்ராரப்த கர்மத்தினால் உண்டான சரீரம் நீங்குவது வரையிலேயே தாமதம். அது நீங்கினவுடன் ப்ரஹ்மத்தை அவன் அடைகிறான்’ என்னும் மற்றுமுள்ள வேதச் சொற்றொடர்களும் ப்ரஹ்மாநுபவம் தவிர உபாஸகனுக்கு அநுபவிக்க வேண்டிய ப்ராக்ருத இன்ப துன்பங்கள் இல்லை என்று கூறப்படுகின்றனவன்றோ. ஸாம்பராயாதி4கரணம் 3-3-12, ‘ஸாம்பராயே தர்த்தவ்யா பா4வாத்ததா2 ஹ்யந்யே’ 3-3-27, என்கிற உபநிஷத் வாக்கியம் அன்றோ இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது?.

இனித் தான் (பிரபந்நனுக்கு இந்தச் சரீரத்தின் முடிவிலேயே மோக்ஷம்’ என்பதற்குப் பிரமாணம் காட்டி, அநுஷ்டானமும் காட்டுகிறார், ‘இனித்தான்’ என்று தொடங்கி.

‘‘அதா2த்ர மாத4வீஸாபி தபஸ்தப்த்வா ஸுது3ஷ்கரம் |
ப4க3வந்தம் ப்ரபந்நா ஸா ப4க3வந்தமவாப ஸா ||’’ என்பது காருட புராணம், (ஸ்ரீரங்கமாஹாத்மியம், அத்.3.),

‘அவள் பகவானைச் சரணம் அடைந்தாள், அவள் பகவானை அடைந்தாள்’ என்கிறபடியே, மாதவி சரணாகதி செய்தாள்; உடனே மோக்ஷத்தைப் பெற்றாளாகச் சொல்லப்பட்டுள்ளதே அன்றோ? முற்கல உபாக்கி யானத்தில் வந்தவாறே ‘நரகத்திலே கிடந்து துக்கத்தை அனுப விக்கிறவர்கள் பகவானுடைய திருநாமத்தை கேட்ட அளவிலே முக்தர் ஆனார்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளதே அன்றோ? ‘அவதார ரஹஸ்ய ஞானமுடையவன் இந்தச் சரீரத்தின் முடிவிலே பேறு பெறக்கடவன்’, என்றே சொல்லாநின்றதே அன்றோ? ‘இச்சரீரத்தை விட்டால் மறு பிறவியை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்’, என்றும், ‘எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்; துக்கப்படாதே’, என்றும் சொல்லாநின்றதே அன்றோ?’ என்றபடி.

232. ‘‘மணிபொன் ஏய்ந்த மதிள் சூழ்’’ (9-10-8)

மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் - மணியாலும் பொன்னாலும் செய்த மதிளாலே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே. ‘திருக்கண்ணபுரம் பரமேட்டி’ என்று கூட்டுக. தன் பாதம் நாளும் பணிமின் - ‘பரமபதத் திலிருந்து ஒன்றும் குறையாதபடி ஆயிற்று இங்கு இருப்பது. அவன் திருவடிகளிலே ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யுங்கோள். அங்கு நித்தியஸூரிகள் பணிய இருக்குமவன் இங்கே வந்த பின்பு, நீங்களும் அவன் திருவடிகளிலே பணியப் பாருங்கோள்’ என்பார், ‘திருக் கண்ணபுரம் பரமேட்டி பாதம் பணிமின்’ என்கிறார் (’திருக் கண்ணபுரத்தில் இருப்பவன் பரமேட்டி’, என்று பொருள் அருளிச்செய்தார் மேல்; ‘அந்தப் பரமபதநாதன் அன்றோ இங்கு வந்திருக்கிறான்?’ என்று வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘அங்கு’ என்று தொடங்கி.

‘நாளும் பிணிதணியும்; ஏதம் சாரா’ என்னும் இது, தத3தி4க3மாதி4கரணம் 4-1-7, ‘‘தத3தி4க3ம உத்தர பூர்வாக4 யோரஶ்லேஷவிநாஶௌ தத்3வ்யப தே3ஸாத்’’ 4-1-13,

ப்ரஹ்ம வித்யையை அடைந்தவுடன், இனி வரப் போகும் பாபங்களின் ஒட்டாமையும், முன்னமே செய்த பாபங்களின் அழிவும், வித்யா மாஹாத்மியத்தால் விளைகின்றன வேதச்சொற்றொடர்கள் அப்படி ஓதுகையால், என்று ஸ்ரீபாஷ்யத்தில் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.

ஒன்பதாம் பத்து முடிவுற்றது.

18

பத்தாம் பத்து

233. ‘தாளதாமரை’ (10-1-1) பதிகத்தில் கீழ்க்கண்டவாறு நம்பிள்ளை விளக்கமளித்துள்ளார்.

அவதாரிகை:-

‘நாளேல் அறியேன் எனக்குள்ளன’ (திருவாய். 9-8-4) என்றார்.; ‘மரணம் ஆனால்’ (திருவாய். 9-10-5) என்று அறுதியிட்டுக் கொடுத்தான் இறைவன். அவன் ‘செய்கிறோம்’ என்று தலை துலுக்கினால் அது பெற்ற தாய் மேலே நடக்கலாம்படியாய் இருக்குமன்றோ காரியம்? ஆகையாலே, பெறக்கூடிய காலத்தைப் பெற்றவராய் போக்கிலே ஒருப்பட்டார்; போமிடத்தில், முகம் பழகின தேஹத்தையும் விட்டு, பல காலம் பழகிய பந்துக்களையும் விட்டுத் தனியேயாய்ச்செல்ல வேண்டுதலானும், போகிற இடம் தாம் கண்டு அறியாத நிலமாதலானும், அதுவும் நெடுங்கை நீட்டு ஆதலானும், வழியிலே தடைகளும் பலவாய் இருத்தலானும் (அதாவது அறிவின்மை, கர்மம், வாசனை, ருசி என்பன போன்று சொல்லுகிறவற்றைத் தெரிவித்தபடி) இவற்றை அடையப் போக்க வேண்டுமாதலானும் வழிக்குத் துணையாக போம்போது சர்வேச்வரனையே பற்ற வேண்டும்.

‘அஃது என் ? இவன் தானே தனக்குத் துணை ஆனாலோ?’ எனின், இன்று அளவும் வர, பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிவதற்குக் காரியம் பார்த்துப் போந்தவன் அன்றோ இவன்? இச்சரீரத்தோடே இருக்கிற நாளிலே நலத்தைச் செய்ய நினைத்தானேயாகிலும், இவனுடைய முன் நிலையினைப் பார்த்தால் இவன் தான் தனக்குத் துணையாகமாட்டானே! வழியிலே கொடு போமிடத்தில் இவனுக்கு வரும் தடைகளை அறிகைக்கு முற்றறிவினனாக வேண்டும்; அறிந்தால், அவற்றைப் போக்கிக்கொடு போகைக்கு எல்லாம் வல்ல ஆற்றலு டையவனாக வேண்டும்;

‘‘ய: ஸர்வஜ்ஞ:’’ (முண்ட. 1-1-10) - ‘எவன் எல்லாம் அறிந்தவனோ’. இவற்றிலிருந்து, ஜ்ஞானம், ப்ராஜ்ஞனின் (பரமாத்மாவின்) முக்யமான (அடிப்படையான) குணம் என்பது அறியப்படுகிறது, என்பன போன்ற பிரமாணங்களால், சர்வேச்வரனை ‘முற்றறிவினன், எல்லாம் வல்லவன்’ என்னாநின்றதே அன்றோ?

ஸ்ரீபாஷ்யகாரர் ஜ்ஞாதிகரணத்தில் (2-3-4) அமைந்துள்ள ‘தத்2கு3ணஸாரத்வாத்து தத்2வ்யபதே3ஶ: ப்ராஜ்ஞவத்’(2-3-29) ஸூத்ர பாஷ்யத்தில் ‘‘ஜ்ஞாநகுணத்தை ஸாரமாகக் கொண்டிருப்பதாலேயே, (ஆத்மா) ஜ்ஞாநமென்று கூறப்படுகிறது. ஸர்வஜ்ஞனான பரமாத்மா (ஆநந்தகுண மயனாக இருப்பதால் ஆநந்தம் என்று கூறப்படுவது) போலே. ‘‘ய: ஸர்வஜ்ஞ:’’ (முண்ட. 1-1-10) - ‘எவன் எல்லாம் அறிந்தவனோ’. இவற்றிலிருந்து, ஜ்ஞானம், ப்ராஜ்ஞனின் (பரமாத்மாவின்) முக்யமான (அடிப்படையான) குணம் என்பது அறியப்படுகிறது’ என்று விவரித்துள்ளார்.

‘தொண்டீர் வம்மின்’ (10-1-5) என்ற தொடங்கும் ஐந்தாம் பாட்டில், ‘அவன் எழுந்தருளி நிற்கின்ற திருமோகூரை அடைந்து அனுபவிக்க வாருங்கோள்’, என்கிறார்.

‘தொண்டீர் வம்மின்’ - பகவானிடத்தில் ஆசை யுடையராயிருப்பீர் அனைவரும் வாருங்கோள். ‘நம் சுடரடி ஒரு தனி முதல்வன்’ - தனக்கு மேல் ஒன்று இல்லாத பேரொளிப்பிழம்பாய் மூன்று விதக்காரணமும் (உபாதான காரணமும், நிமித்த காரணமும், ஸஹகாரி காரணமும்) தானே யானவனுடைய, பிரமாணப் ப்ரஸித்தியைத் திருவுள்ளம் பற்றி, ‘நம்’ என்கிறார்.

‘பிரமாண பிரஸித்தியை’ என்றது, ‘‘தஸ்ய மத்4யே வஹ்நிஶிகா அணீயோர்த்4வா வ்ய வஸ்தி2த: | நீலதோயத3 மத்4யஸ்தா2த் வித்3யுல்லேகவ பா4ஸ்வரா | நீவாரஶுகவத் தந்வீ பீதாபா4ஸ்யாத் தநூபமா |’’(தைத்திரீய- நாராயணவல்லி. 11) - அந்த ஹ்ருதய கமலத்தின் நடுவில், சிறியதும் மேல் நோக்கினதுமான அக்3நிஶிகை (பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்ரஹம்) இருக்கிறது. (அது) நீலமேகத்தை உட்கொண்டு மின்னல் போல் பிரகாசமுள்ளதாகவும், நெல் மணி போல் சிறியதாகவும், மஞ்சள் நிறமுள்ளதாகவும் ஒப்பற்றதாகவும் இருக்கிறது’, என்ற பிரமாணத்தையும்,அபீதௌ தத்3வத்ப்ரஸங்கா3த3 ஸமஞ்ஜஸம்- 2-1-8, என்ற ஸூத்திரத்தில் மேற்கோளாய் எடுக்கப்பட்ட, ‘‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீத்’’ (சாந். 6-2-1) - ‘மென்மையான வனே! ‘ஸத்’ மட்டும் முதலில் இருந்தது’ என்ற சாந்தோக்ய பிரமாணத்தையும் திருவுள்ளம் பற்றி என்க.

அன்றிக்கே ‘தன் வடிவழகினையும் தமப்பனான தன்னுடைய சம்பந்தத்தையும் நமக்கு அறிவித்தவன்’ என்னுதல். அண்டம் மூவுலகு அளந்தவன்-அண்டத்துக்குப் புறம்பே இருக்கிறவன், மஹாபலியால் கவரப்பட்டு அண்டத்திற்குள்ளே இருக்கிற மூன்று வகைப்பட்ட உலகங்களையும் அளந்துகொண்டான். ‘படைத்து விடுதலே அன்றி, படைக்கப்பட்ட உலகத்தை வலியுள்ளவர்கள் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகிறவன்’ என்பார், ‘அளந்து’ என்கிறார்.

வலம் செய்து-வலம் வந்து. இங்கு கூத்து ஆடுதும் - அங்குச் சென்றால் ‘நான் இனிய பொருள்; நான் இனிய பொருள்’, என்று களிக்கும் களிப்பினை இங்கே களிப்போம். ‘இங்கே’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அங்குச் சென்றால்’ என்று தொடங்கி. ‘‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ3 அஹமந்நாதோ3 அஹமந்நாத3: ‘‘ (தைத்திரீய.ப்ருகு. 10-6) - நான் (எம்பெருமா னுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுக்கு போக்யமான) அன்னம். நான் (எம்பெருமானுடைய உகப்பாகிற) அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன். நான் அன்னத்தை புஜிப்பவன், என்று தைத்திரீய உபநிஷத் வாக்கியத்தை இதற்குப் பிரமாணமாக அருளிச்செய்கிறார்.

234. மற்றிலம்அரண் வான்பெரும்பாழ்தனிமுதலா*
சுற்றும்நீர்படைத்துஅதன்வழித்தொல்முனிமுதலா*
முற்றும்தேவரோடு உலகுசெய்வான்திருமோகூர்*
சுற்றிநாம்வலஞ்செய்ய நம்துயர்கெடும்கடிதே. (திருவாய்மொழி. 10-1-7)

‘முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர்’ - எல்லாத் தேவ சாதியோடுங்கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் வசிக்கிற திருமோகூர். ‘சுற்றி நாம் வலம் செய்ய’- நாம் சென்று விடாதே வலம் வருதல் முதலான வைகளைச்செய்ய. ‘நம் துயர் கடிது கெடும்’ - வழித்துணை இல்லை என்கிற நம் துன்பம் சடக்கெனப் போம். இந்த பரம் பொருளிடத்தில் பயம் இன்மைக்காக இடைவிடாதே நினைவின் ரூபமான தியானத்தை எவன் அடைகிறானோ, அவன் பயம் அற்றவன் ஆகின்றான், என்னக் கடவதன்றோ? ஆன பின்பு மற்று இலம் அரண். அவனை அடைந்தால் துக்கம் போமோ? என்ன , ‘இந்த பரம் பொருள்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார் ஈட்டில்.

ஸந்த்4யாதி4கரணம் 3-2-1, ‘பராபி4த்4யாநாத்து திரோஹிதம் ததோ ஹ்யஸ்ய ப3ந்த4விபர்யயௌ’ -3-2-4, ஸூத்திரத்தில், ‘‘யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மிந் ந த்3ருஶ்யே (அ)நாத்ம்யே அநிருக்தே (அ)நிலயநே (அ)ப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3தே, அத2 ஸோ(அ)ப4யம் க3தோ ப4வதி (தை. ஆந. 7-2) - ‘எப்பொழுது உண்மையில் இந்த ஒன்று, அச்சத்திலிருந்து விடுதலை பெறுகிறதோ, இந்த புரிந்து கொள்ள இயலாத ஒன்றிடம் உறுதிப்பாடு-ஆத்மா அல்லாதது, தொடக்கமற்ற ஒன்று, வசிப்பிடம் இல்லாதது, அப்பொழுது அவன் அச்சமற்ற நிலைக்கு உண்மையில் செல்கிறான். அவன் இவனுக்குள் ஓர் வடுவை (பள்ளத்தை) ஏற்படுத்துகிறான். பின்பு, அவனிடம் கொண்ட அச்சத்தால் நிலை பெறுகிறான்’ என்பதைப் பிரமாணமாக ஸ்ரீபாஷ்யகாரர் விவரித்துள்ளார்.

235.

கெடும்இடராயவெல்லாம் கேசவாவென்ன * நாளும் கொடுவினைசெய்யும் கூற்றின்தமர்களும் குறுககில்லார்* விடமுடையரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்* தடமுடைவயல் அனந்தபுரநகர்புகுதும்இன்றே. (திருவாய்மொழி. 10-2-1)

உகந்தருளின நிலங்களில் நிலைதான், முதலிலே பகவானிடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய், ருசி பிறந்தால் ‘எவர்கள் என்னை இந்த விதமாக வணங்கு கிறார்களோ அவர்களுக்கு அந்த விதமாகவே நான் அருள் செய்கிறேன்’

யே யதா2 மாம் ப்ரபத்3யந்தே தாம்ஸ்ததை2வ ப4ஜாம்யஹம் | மம வர்த்தமாநுவர்த்தந்தே மநுஷ்யா: பார்த்த2 ஸர்வஶ: || (ப.கீ. 4-11)

எவர்கள் என்னை, எவ்வண்ணம் ஸங்கல்பித்து ஆச்ரயிக்கி றார்களோ, அவர்கள் ஸங்கல்பித்த வண்ணமாகவே (என்னை ஆக்கிக் கொண்டு) நான் அவர்களை அடைகிறேன். குந்தி புத்திரனே, எல்லா மனிதர்களும் என் தன்மைகளை (தாம் விரும்பும்) எல்லா படியாலும் அனுபவித்து வாழ்கின்றனர்’ என்கிறபடியே, சுலபனாயிருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையாலே உபாயத்திற்கு உரிய தன்மை களும் நிறைந்ததாய், பரமபதத்திற்குக் கொடுபோமிடத்தில், ஆதிவாஹிக கணத்தில் முதல்வனான தானே ‘உள்ளத்திலு றையும் இறைவனால் அருளப்பட்டவனாகிறான்’.

‘ததோ3கோதி4கரணம்’- 4-2-8, ‘‘ததோ3கோ (அ)க்3ர ஜ்வலநம் தத்ப்ரகாஶி தத்3வாரோ வித்3யா ஸாமர்த்3யாத் தச்சே2ஷக3த்யநு ஸ்ம்ருதி யோகா3ச்ச ஹார்த்தா3நுக்3ருஹீத: ஶதாதி4கயா- 4-2-16,-(ப்ரஹ்ம ஜ்ஞானியானவன்) வித்3யா ஸாமர்த்3யாத் - பரவித்யையினுடைய (எம்பெருமானிடம் ஒப்பற்ற அன்பு உருவாயிருக்கையாகிற) ஸாமர்த்யத்தாலும், தச்சே2ஷக3த்ய நுஸ்ம்ருதியோகா3த் ச - அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி மார்க்க சிந்தநரூபமான யோகத்தினாலும், ஹார்த்தா3நுக்3ருஹீத: - (உகப்படைந்த) ஹ்ருத3யத்தாமரை யிலுள்ள எம்பெருமானாலே அருளப் பெற்றவனாகிறான்; (அவ்வருளாளே அவனுக்கு) தத் ஓக: - (அந்தர்யாமியின்) இருப்பிடமான அந்த ஹ்ருதயம், அக்3ரஜ்வலநம் - எதிரே ஒளியுடையதாகிறது. ‘ஶதாதி4கயா’ - ‘விவேகமுள்ளவன், ‘‘தலை-நாடி’’ வழியாக மட்டுமே வெளியேறுகிறான், நூற்றிற்கும் அதிகமான அந்த நாடி வழியாக’’, என்கிறபடியே வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கிக் கொடுபோகைக்கும் முற்பாடனாகைக்கும் உடலாய், பிறப்பு, இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால்செய்யும் அடிமையை அவ்வவுடலோடு கிடக்கச்செய்தே யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்குமன்றோ? ஆகையாலே கூடும் என்க.

‘விடமுடையரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும், தடமுடைவயல் அனந்தபுரநகர்புகுதும்இன்றே’ - மேலே பெறக்கூடிய பேற்றினைச் சொல்லுகிறார்; விடம் உடை - செந்தெங்கிற்கு முள் கட்டினாற்போலே ஒருவர்க்கும் முகம் கொள்ளாதிருக்கை; ‘வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார்’ (மூன்.திருவ.66) என்கிறபடியே, பகைவர்களாய்க் கிட்டினாரும் முடிந்து போம்படியாய் இருக்கும். அரவு - சாதிக்கு உரியதான மென்மை நாற்றம் குளிர்த்தி என்னும் இவற்றை உடைத்தாய் இருக்கும், பள்ளி விரும்பினான் - பர்யங்க வித்யையிற் சொல்லுகிறபடியே ஆயிற்று அங்குக் கண் வளர்ந்தருளுகிறது.

இவ்விடத்தில் ஈட்டின் வ்யாக்யானம் கீழ்க்கண்ட வாறு அமைந்துள்ளது.

‘‘(முக்தப்ராப்யேபோகந்தான் இருக்கிறபடி)பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே, ஸர்வேச் வரனும் பிராட்டிமாருங்கூடத் திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே யிருக்கிற இருப்பிலே, இச்சேதநன் முக்தனாய்ச் சென்று கிட்டினால் ‘‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’’ (ப்ருஹ.உப. 6-4-10) - நான் ப்ரஹ்மம், நான் ராஜபுத்ரன், ப்ரஹ்ம ப்ரகார பூதன் என்னக்கடவன்; ‘ஆகில் இங்ஙனே போராய்’ என்றால், அவன் அங்கீகாரம் பெற்று, மாதாபிதாக்கள் இருந்த படுக்கையிலே ப்ரஜை சென்று ஏறுமாபோலே ‘தமேவம்வித்பாதே3 நாத்4யாரோஹதி’ (கௌஷீதகீ உபநிஷத்)- (அவனை இப்படி யறிந்தவன் தனது காலால் அவருடைய பர்யங்கத்தை ஏறுகிறான்) என்று ஏறக்கடவனாகச் சொல்லுகிற அப்பேற்றைச் சொல்லுகிறது’’.

‘‘(முக்தப்ராப்யபோகந்தான் இருக்கிறபடி) என்கிற விடத்திலே - ‘கூர்மாதீ3ந் தி3வ்யலோகம்’ என்கிற ச்லோகத்தையும், ‘ஸ்வயம் பாத3ம் ப்ரஸார்ய’ என்கிற ச்லோகத்தையும் அடைவே அனுஸந்தித்தருளுவர்; (முக்தப்ராப்ய போகந்தான்) ‘‘அணைவதரவணைமேல்’’ இத்யுக்தே - முக்தப்ராப்யபோகோக்தி: கதம் ஸ்யாதித்யத்ராஹ (பர்யங்க வித்யையில் இத்யாதி) ‘ஸஹஸ்ரஸ்தூ2ணே விமிதே த்3ருட4 உக்3ரே யத்ர தே3வா நாமதி4தே3வ ஆஸ்தே’ என்ற திருமாமணி மண்டபத்திலே, திருவநந் தாழ்வான் மேலே, தர்மாத்யஷ்டபாதயுக்தபீடத்தை யுடைத்தான திவ்யஸிம்ஹாஸநத்தின் மேலே,

‘‘ தந்மத்4யே (அ)ஷ்டத3ளம் பத்3மம்’’ என்கிற பத்மத்திலே, ‘‘விமலோத் கர்ஷிணீ ஜ்ஞாநா க்ரியா யோகா3 ததை2வச I ப்ரஹ்வா ஸத்யா ததே2ஶாநா தாஸாம் நாம்நா ஸமர்ச்சயேத் II என்று அந்தப் பத்மத்திலே அஷ்டதளத்திலே இருக்கிற விமலாத் யஷ்ட பரிசாரிகைகளும், அதில் கர்ணிகையிலே இருக்கிற ‘அநுக்ரஹை’ என்றளவோடு கூடத் திருவெண்சாமரம் பரிமாற, அந்தக் கர்ணிகையிலே திருவநந்தாழ்வான் மேலே பிராட்டிமாரோடே கூடி வீற்றிருக்குமது - பர்யங்கவித்யா ப்ரகாரம்; கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலே சொல்லப்பட்டது என்று அருளிச் செய்வர்.

(’அணைவதரவணைமேல்’ என்ற அளவில், முக்த ப்ராப்யபோகத்தைக் கூறியபடி யாங்ஙனம்? என்னும் வினாவிற்கு விடையாக, ‘பர்யங்க வித்யையிற்சொல்லு கிறபடியே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘பரமபதத்திலே திருமாமணி மண்டபத்திலே திருவநந்தாழ் வான் மேலே தர்மம் முதலான எட்டுப் பீடத்தை உடைத்தான திவ்ய ஸிம்ஹாசனத்தின் மத்தியில் ‘அஷ்டதளபத்மம்’ என்கிற தாமரையிலே, அந்தத் தாமரையின் அஷ்டதளத்திலே இருக்கிற ‘விமலை’ முதலான பெண்கள் எண்மரும், அதன் கர்ணிகையிலே இருக்கிற ‘அநுக்ரஹை’ என்றவளோடே கூடத் திருவெண்சாமரம் பரிமாற அந்தக் கர்ணிகையிலே திருவநந்தாழ்வான் மேலே பிராட்டிமாரோடே கூட வீற்றிருப்பது பர்யங்க வித்யா ப்ரகாரம் என்பதாக கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலே சொல்லப்பட்டது என்று அருளிச் செய்வர்)

‘அவனை இப்படி அறிந்தவன் தனது காலால் அவனுடைய படுக்கையில் ஏறுகிறான்,தமேவம்வித்பாதே3 நாத்4யா ரோஹதி’ (கௌஷீதகீ உபநிஷத்)- (அவனை இப்படி அறிந்தவன் தனது காலால் அவருடைய பர்யங்கத்தை ஏறுகிறான்)’ என்கிறபடியே, துதைந்து ஏறலாம் படி ஆயிற்று இருப்பது. சுரும்பலற்றும் - ‘இந்த விதமான சாமத்தை பாடிக்கொண் டிருக்கின்றான்’ ‘‘ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு’’(தைத்.ப்ருகு) - ‘முக்தன் அனைத் தையும் எம்பெருமானுடைய விபூதியாகப் பார்ப்பதால் ஹாவு ஹாவு ஹாவு என்று மகிழ்கிறான்’ என்று சொல்லுகிற படியே, முக்தர்கள் செய்யுமவற்றை வண்டுகள் செய்யா நிற்கும். தடம் உடை வயல் - விரஜைக்கும் ஏனையவற்றிற்கும் போலியாக இருக்குமாயிற்று தடாகங்கள், அனந்தபுரநகர் - கலங்காப் பெரு நகரத்துக்குப் போலியாக இருக்கும். புகுதும் இன்றே - ‘கிராமத்திலே புகுகிறோம்’ என்று ஆறி இருக்குமது அன்று; இச்சை பிறந்த இன்றே போய்ப் புகுவோம்.

‘சிக்கெனப்புகுதிராகில்’ - மீண்டு வருகிறான் இல்லை என்கிறபடியே, மீளாத ருசியை உடையீர்களாய்க் கொண்டு கிட்டுவீர்கோளாகில், ஜக3த்3வ்யாபார வர்ஜாதி4 கரணம் 4-4-6 ‘அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்தி: ஶப்3தா3த்’ - 4-4-22, என்கிற ஸூத்ரத்தில் ‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3 யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸனத்தையும் ஆயுள் உள்ளவரை அநுஷ்டித்து ப்ரஹ்மத்தின் உலகத்தை அடைகி றான் (முக்தன்); மறுபடி ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவ தில்லை, திரும்பி வருவதில்லை’, ஸ்ரீபாஷ்யகாரர் இந்த ப்ரமாண வாக்யத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

236. ‘‘வேய்மருதோளிணை’’ (10-3-1 - ப்ரவேசம்), அவனுடைய ஸ்வாதந்திரியத்தை நினைத்து அஞ்சவேண்டா: ‘எல்லா பாபங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்’ நீ துக்கப்படாதே,’’ஸர்வ த4ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ I அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:II’’ (ப.கீ.18-66)- ‘எல்லா ஸாதநங்களையும் நன்கு விட்டு, என்னை ஒருவனையே உாபயமாக அநுஸந்திப்பாய், நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், வருந்தாதே’, என்கிற படியே, பாவங்களைத் துண்டித்துக்கொண்டு போகைக்கும் உடலாயிருக்கையாலே பக்தி தமக்கு இல்லை என்று இருக்க வேண்டா; பிரபத்தியை உபாயமாகப் பற்றினவர் ஆகையாலே. இனி ‘முக்தன் மக்களால் சூழப்பட்ட சரீரமாகிய இதனை நினைத்திலன்’

‘‘பரம் ஜ்யோதி: உபஸம்பத்3ய ஸ்வேந ரூபேணாபி4 நிஷ்பத்3யதே ஸ உத்தம: புருஷ: ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீட3ந்ரமமாண: ஸ்த்ரீபி4ர்வா யாநைர்வா ஜ்ஞாதிபி4ர்வா நோபஜநம் ஸ்மரந் இத3ம் ரீரம்’’ (சாந். 8-12-2,3) - ‘பரஞ்சோதியை அடைந்து ஸ்வரூபாவிர்ப் பாவமடைகிறான் முக்தன். முக்தனால் அடையத்தக்க அப்பரஞ்சோதி புருஷோத்தமனாவான். அந்த முக்தன் பரமாத்மாவை முழுவதும் அநுபவிக்கிறான். ஸ்த்ரீகளைக் கொண்டும், வாஹனங்களைக் கொண்டும், ஜ்ஞாதிகளைக் கொண்டும் பல்வகையான கேளிக்கைகளில் ஈடுபட்டு இஷ்டப்படி போகங்களை அநுபவிக்கிறான்... எல்லா உலகிலும் இஷ்டப்படி ஸஞ்சரிக்கிறான் அவன்’ என்ற இந்த உபநிஷத் வாக்கியத்தை , காமாத்3யதி4கரணம் 3-3-16, உபஸ்தி2தே(அ)தஸ்தத்3வசநாத் 3-3-40, ஸூத்ரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் மேற்கோளாகக் காட்டியுள்ளார், என்கிறபடியே இதனை நினைக்காதபடியான ஸாக்ஷாத்காரம் இல்லாமல் படுத்துகிற பாடே அன்றோ இது.

இனி, ‘தாயும் தமப்பனும் உடன் பிறந்தோனும் வசிக்கும் இடமும் பாதுகாப்பவனும் நண்பினனும் கதியான வனும் ஆகிய அனைவருமே நாராயணனே’ ‘‘மாதா பிதா ப்4ராதா நிவாஸஶ் ஶரணம் ஸுஹ்ருத் க3திர் நராயண:’’ (ஸுபாலோபநிஷத்-16) - ‘நாராயணன் தாயாகவும், தந்தையாகவும், தன்னுடன் பிறந்தவனாகவும், தங்குமிட மாகவும், மோக்ஷோபாயமாகவும், நண்பனாகவும், மோக்ஷத் தில் அடையப்படுமவனாகவும் இருப்பவன்’, என்கிறபடியே, அவன் எல்லா வகையான உறவுமாய் இருப்பதைப் போன்று, இத்தலைக்கும் ஸம்பந்த ஞானம் பிறந்தால் எல்லா பிரிவுகளும் உளவாய் இருக்கும் அன்றோ? என்ற ஸுபாலோபநிஷத் வாக்கியத்தை நம்பிள்ளை மேற்கோளாக காட்டியுள்ளார்.

237. சார்வேதவநெறிக்குத் தாமோரன்தாள்கள்*
கார்மேகவண்ணன் கமலநயனத்தன்*
நீர்வானம்மண்எரிகாலாய் நின்றநேமியான்*
பேர்வானவர்கள்பிதற்றும் பெருமையனே. (10-4-1)

தம்மைப் பிரிய நினைவின்றிக்கே இருந்த ஐயத்தாலே பிரிந்தார் படும் துன்பத்தினைப் பட்டு, அதனாலே மயக்கமுற்றவரை, ‘உம்மை ஒரு நாளும் பிரியேன்’ என்று அவன் தெளியச் செய்ய, அதனாலே தரித்து, மிகவும் ப்ரீதரானார் மேலே. முதல் திருவாய்மொழியிலே (’உயர்வற’ 1-1), பரம்பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லியற்றது;’வீடுமின் முற்றவும்’ (1-2), ‘பத்துடையடியவர் (1-3)’ என்ற இரண்டு திருவாய் மொழிகளிலும் சொன்ன பக்தியையும், முதல் திருவாய்மொழியில்(’உயர்வறம்’ 1-1), குறிப்பாகக் கூறிப் போந்த ப்ரபத்தியையும், ‘சார்வே தவநெறி’ (10-4) என்ற இத்திருவாய்மொழியிலே முடிக்கிறார்; ஆகையாலே, பரம்பொருளின் தன்மையைக் கூறின முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தினைக் ‘கெடும் இடராய’ (10-2)என்ற திருவாய்மொழியிலே முடிக்கிறார்.

இனி அந்தப் பரம்பொருள்தானே அடையக் கூடிய தாய் இருக்கும் அன்றோ? அடையக் கூடியதான அந்தப் பரம் பொருளின் தன்மையையும், அடைவதன் பலமான கைங்கரி யத்தையும், ‘படமுடை அரவிற் பள்ளி பயின்றவன்’ (10-2-8) என்றும், ‘கடைத்தலை சீய்க்கப் பெற்றால்’(10-2-7) என்ற திருவாய்மொழியிலே; அடையக் கூடியதான அப்பொருள் அப்போதே கைபுகுரப் பெறாமையாலும் நெடுநாள்படப் பிரிந்து போந்த வாசனையாலும் வெருவி இவர் துன்பம் உற்றவராக, இவர்க்குப் பிராசங்கிகமாய்ப் (இடையிலே வருதல்) பிறந்த துன்பத்தினை நினைத்து அவனும் தெளிவிக்கத் தெளிந்தவராய் நின்றார் ‘வேய் மரு தோள்இணை’ (10-3) என்ற திருவாய்மொழியிலே.

ஆக, முதல் திருவாய்மொழியிலே பரம்பொருள் விஷயமாகச் சொல்ல வேண்டுவன எல்லாம் சொல்லி, அப்பரம்பொருள் தானே அடையக் கூடிய பேறு ஆக இருக்கையாலே, (குறிப்பு: ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் கூறிய பக்தி, ஸாத்ய பக்தியாயிருக்க, ‘அப்பேற்றினைப் பெறுவதற்கு உபாயமான பக்தி யோகத்தை’ என்றது ஏன்? எனின், தாம் உபதேசித்த இந்த ஸாத்ய பக்தி ப்ரபத்தியிலே மூட்ட, ப்ரபத்தி உபாயமாய் தலைக் கட்டும் என்ற திருவுள்ளம் பற்றி என்க. இங்ஙன் அன்றிக்கே, ‘இந்த ஸாத்ய பக்தியையே ப்ரபத்தி என்றாரா’ எனின், தம்முடைய பேற்றுக்கு உபாயமாக முதல் திருவாய்மொழியில் (உயர்வறம்) சொன்ன ப்ரபத்தியோடே தலைக்கட்டுகிறார் இதில்’ என்றதனோடே சேராது. மேலும் ‘வீடுமுமின் முற்ற’த்திலும், ‘பத்துடையடியவரி’லும் சொன்ன பக்தி ஸாத்ய பக்தி என்றே அருளிச்செய்வர்)

அப்பேற்றிளைப் பெறுவதற்கு உபாயமான பக்தி யோகத்தை ‘வீடுமின் முற்றவும்’ (1-2) என்ற திருவாய் மொழியாலே சொல்லி, அந்தப் பக்திமான்களுக்கு அவன் சுலபனாய் இருக்கும் என்று அவன் சுலபனாய் இருக்கும் தன்மையைப் ‘பத்துடை யடியவர்க்கு’ (1-3) என்று திருவாய்மொழியாலே சொல்லி ஆக, ‘வீடுமின் முற்ற’த்திலும் ‘பத்துடை அடியவரி’லும் சொன்ன பக்தியானது அதன் பலத்தோடே பொருந்தின படியைச் சொல்லி (‘அதன் பலத்தோடே பொருந்தின படியைச் சொல்லி’ என்றது, ‘தாமோதரன் தாள்கள் தவநெறிக்குச் சார்வே’(10-4-1) என்றதனை திருவுள்ளம் பற்றி. அதன் பலத்தோடே பொருந்துதலாவது, பக்தி உபாயம் பலத்தோடே நிறைவுற்றிருத்தல்), அத்திருவாய் மொழிகளிலே பக்தியை வளர்ப்பனவாகச் சொன்ன குணங்களை ஆதரித்துக் கொண்டு, தாம் தம்முடைய பேற்றுக்கு உபாயமாக முதல் திருவாய்மொழியில் (1-1) சொன்ன ப்ரபத்தியோடே தலைக்கட்டுகிறார் இதில்.

(குறிப்பு: ‘குணங்களை ஆதரித்துக்கொண்டு’ என்றது, அங்கு. ‘உரலினோடிணைந்திருந்து’ (1-3-1) என்றதனை, இங்குத் ‘தாமோதரன்’ (10-4-1) என்றும், ‘புயல் கருநிறத்தனன்’ (1-3-10), என்றதனைக் ‘கார்மேகவண்ணன்’ (10-4-1) என்றும், ‘அடியவர்க்கு எளியவன்’ (1-3-1), ‘எளிவரும் இயல்வினன்’(1-3-2) என்றதனைக் ‘காண்டற் கருமையனே’ (10-4-2), என்றும், ‘அமைவுடை முதல் கெடல்’ (1-3-3) என்பது போன்றவைகளைப் ‘பெருமையனே வானத்திமை யோர்க்கும்’ (10-4-2) என்றும், ‘மலர் மகள் விரும்பும்’ (1-3-1) என்றதனைத் ‘திரு மெய் உறைகின்ற’ (10-4-2) என்றும் இப்புடைகளிலே இத்திருவாய் மொழியில் ஆதரித்துக் கொண்டு என்றபடி. ‘முதல் திருவாய்மொழியிற் சொன்ன’ என்றது, ‘அருளினன்’ (1-1-1) என்றதனைத் திருவுள்ளம் பற்றி. ‘ப்ரபத்தியோடு தலைக் கட்டுகிறார் இதில்’ என்றது, இத்திருவாய்மொழியில் ‘பண்டே பரமன் பணித்த பணிவகையே, கண்டேன் கமலமலர்ப் பாதம்’ (10-4-9) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.)

இவ்விரண்டு கோடியும் இவர்க்கு உண்டாயிருக்கச் செய்தேயும், தம்முடைய பேற்றுக்கு உடலாக இவர் நினைத்திருப்பது ப்ரபத்தியையே ஆம். ‘முதல் திருவாய்மொழியிலே ப்ரபத்தியைக் காட்டக் கூடிய சொல் உண்டோ?’ என்னில், ‘அருளினன்’ (1-1-1) என்றாரே அன்றோ?.

இனித்தான் இவருடைய பக்தி, வேதாந்தங்களில் கூறப்படுகிற பக்தி அன்று. வேதாந்தங்களில் கூறப்படுகிற பக்தியாகக் கொள்ளுமிடத்து அபசூத்ராதிகரண (1-3-9) நியாயத்திற்கு விரோதம் உண்டாகும் ‘அதுதான் இவ்வாழ்வாருடைய ப்ரபாவத்தாலே கூடாதோ?’ என்னில், அது இவருடைய பாசுரங்களோடு முரண்படும். ‘அருளினன்’ (1-1-1) என்று இப்புடைகளிலே அன்றோ இவருடைய பாசுரங்கள்? ‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பெற்ற மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பத்தி யோகம் ஒன்றாலும் அடையத் தக்கவன் இறைவன்,’ என்கிறபடியே, (’ஆயின் இவர்க்கு பக்தி வந்த வழி தான் யாது?’ எனின், அதற்கு விடை அருளிச் செய்கிறார், ‘கர்ம, ஞானங்கள்’ என்று தொடங்கி.

‘உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக பக்தியோகைக ல்யப்:’ என்பது ஆத்மஸித்தி. இது ஆளவந்தாருடைய ஸ்ரீஸூக்தி) ஞான கர்மங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பெற்ற மனத்தினை யுடையவனுக்குப் பிறக்குமது அன்றோ பக்தியாகிறது? அந்த ஞான கர்மங்களினுடைய இடத்து இறைவனுடைய திருவருள் நிற்க, அதற்குப் பின் உண்டான பரபக்தி தொடங்கிப் பிறந்ததாய் இருக்கும் இவர்க்கு.

இனித்தான், இவர் வழியே போய் இவருடைய பேறே பேறாக நினைத்திருந்த ஸ்ரீபாஷ்யகாரரும், ப்ரபத்தியைப் பண்ணி, பின்னர்ப் பக்தி தொடங்கி வேண்டிக்கொண்டாரே அன்றோ? அவன் உபாயம் ஆனாலும் இவனுக்கு ருசி உண்டாய்ப் பேற்றினைப் பெற வேண்டுமே;(ப்ரபந்நனுக்கும் அனுபவ கைங்கர்யங்கள் புருஷார்த்தம் ஆகைக்காக பக்தி வேண்டும் என்கிறார்) இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே; பெறுகிற பேறு இன்னது என்று அறுதியிட்டு அந்தப் பேற்றிலே ருசி கண்ணழிவு அற உடையவனுக்கே அன்றோ அடைவிக்கும் வழியாக அவன் இருப்பது?

ஆகையாலே, இவருடைய பக்தி ப்ரபத்திகள் மாறாடலாம்படி அன்றோ இருப்பன? (’பக்தி ப்ரபத்திகள் மாறாடலாம்படி அன்றோ இருப்பவன? என்றது, ‘அவனுடைய திருவருளே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கும் இவருடைய சித்தாந்தத்தைப் பார்த்தால், ‘ப்ரபத்தியே இவர்க்கு உள்ளது, பக்தி அன்று’ என்றும், ஆர்த்தியின் மிகுதியாலே ப்ரபத்தியைச் செய்யும் இவருடைய அநுஷ்டானத்தைப் பார்த்தால் ‘பக்தியே இவர்க்கு உள்ளது, வேறு ஒன்றும் அன்று’ என்றும் விகற்பித்துச் சொல்லலாம் படி இருக்கிறது என்றபடி. இதனால், ‘பக்தியாதல் ப்ரபத்தியாதல் ஒழிய இரண்டும் உண்டாகக் கூடுமோ? என்னும் சங்கையும் தீர்ந்தாயிற்று) ஆக, ‘வீடுமின் முற்றவும்’ (1-2) என்ற திருவாய்மொழியிலும் ‘பத்துடையடியவர்’(1-3) என்ற திருவாய்மொழியிலும் பிறர்க்கு உபதேசித்த பக்தி தம்முடைய பேற்றுக்கு உடலாய் இருந்தபடியைச் சொல்லி, இதுதான் பலத்தோடே சேர்ந்தபடியைச் சொல்லி முடிக்கிறார் இதில்.

‘நன்று பிறர்க்கு உபதேசித்த இந்தப் பத்தியானது பலத்தோடே சேர்ந்திருப்பது இறைவனை நேரே கண்டு அனுபவித்தாலே அன்றோ?’ என்னில், கண்கூடாகக் காண்பது போன்றதாகத் தோற்றாமல் கண்கூடாகக் காண்பதாகவே தோற்றுகிற மனத்தின் அனுபவம் அமையும் அன்றோ இப்போது? குணங்கள் அனுபவிக்கத் தக்கன ஆனால், அக்குணங்களோடு கூடியதாக இங்கே இருந்து வணங்கு கிறானே அன்றோ? ஆக, வணங்குகிற வேளையிலும் அது இருக்கும்படியை நினைக்கத் தட்டு இல்லை என்க.

‘ஸோ(அ)ஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதா’ (தை.ஆந.1) (அந்த முக்தாத்மா ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடு (முற்றறிவினான பரம்பொருளோடு) கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அநுபவிக்கிறான் என்கிறபடியே கண்கூடாகக் காணும் நிலையில் குணங்கள் அனுபவிக்கத் தக்கவனாய் இருக்கச் செய்தேயும், இங்கே இருக்கும் போதும் குணங்களோடு கூடியிருப்பதாகப் பக்தி செலுத்துகிறானே அன்றோ குண அனுபவத்தின் இனிமையை நோக்கி? என்றபடி. அது இருக்கும் படியை- குண அனுபவத்தின் இனிமை இருக்கும் படியை) இவ்வாறு ஸ்ரீபாஷ்யகாரர், விபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் 4-4-2 , அவிபா4கே3ந த்3ருஷ்டத் வாத் 4-4-4, என்ற ஸூத்ர பாஷ்யத்தில் இந்த வேதாந்தச் சொற்றொடரை மேற்கோள் காட்டுகிறார்.

மேலும் எல்லாம் கண்கூடாகக் காணுதலைப் போன்று மனத்தினாலே கண்டு அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ சொல்லிக்கொண்டு போந்தது?’ என்னில், அவற்றைப்பற்றிப் பிறந்தன சில ரஸ விசேஷங்களைச் சொன்ன இத்தனையே யாம் அவ்விடங்களில்; தொடங்கின பொருளை முடிக்கை என்பதும் ஒன்று உண்டே; அதனைச் சொல்லுகிறது இங்கு.

இங்ஙன் அன்றிக்கே, ‘நீ பசு மேய்க்கப் போக வேண்டா’ என்கிறாள்; ‘ஆகில் தவிர்ந்தேன் என்றான்; ‘இவனைப் போன்ற சுலபன் இலன்காண், இவன் பத்தியினாலே அடையத் தக்கவன் என்னுமிடம் உறுதி’ என்கிறாள் என்று, ஓர் உருவிலே பணிப்பர் பிள்ளான்.

இன்னமும் முதல் திருவாய்மொழியிலே (உயர்வறம்), பெறக்கூடிய பேற்றினை அருளிச்செய்தார்; அந்தப் பேற்றினை அடைதற்கு உரிய வழியாக, வேதாந்தங் களிலே பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு வழிகள் விதிக்கப்பட்டன; அவை இரண்டிலும் பக்தி, முதல் மூன்று வருணத்தார்களே செய்யத் தக்கது; ப்ரபத்தி எல்லாரும் செய்யத் தக்கது. அவற்றில் எல்லாராலும் செய்யத் தக்கதுமாய்த் தாம் தம் திருவுள்ளத்தாலே தமக்கு உபாயமாக ஏற்றுக்கொண்ட ப்ரபத்தியை ‘வீடுமின் முற்றவும்’ (1-2) என்ற திருவாய்மொழியிலே அருளிச் செய்தார். முதல் மூன்று வருணத்தாருக்குரிய பக்தியைப் ‘பத்துடையடியவர்க்கு’ (1-3) என்ற திருவாய்மொழியிலே அருளிச்செய்தார். ஆக, இரண்டு திருவாய்மொழிகளிலும் அருளிச்செய்த பக்தி ப்ரபத்திகள் தம் பலத்தோடே பொருந்தினபடியை அருளிச் செய்கிறார், ‘சார்வே தவநெறி’(10-4) ‘கண்ணன் கழலிணை’ (10-5) என்னும் இரண்டு திருவாய்மொழிகளாலும்.

அவற்றுள், ‘சார்வேதவநெறி’ (10-4) என்ற திருவாய் மொழியால் ப்ரபத்தி, அதற்குரிய பலத்தோடே பொருந்தின படியை அருளிச்செய்கிறார். ‘சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்’ (10-4-1) என்று, தவம் என்னும் சொல்லால் ப்ரபத்தியைச் சொல்லுகிறது. ‘ஆதலால், மேலே கூறிய ‘தவங்களுள் ப்ரபத்தியை மேம்பட்டதாகச் சொல்லிகிறார்கள்’, என்கிறபடியே, தவங்களிலே மிக்க தவமாகச் சொல்லிற்றே அன்றோ பிரபத்தியை?(குறிப்பு: தவம் என்னும் சொல்லிற்கு ப்ரபத்தி என்ற பொருள் கூறியதற்குப் ப்ரமாணம் காட்டுகிறார், ஆதலால் என்று தொடங்கி. ‘‘தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு:’’(தைத்திரீய உபநிஷத்).

‘பண்டே பரமன் பணித்த பணிவகையே, கண்டேன் கமல மலர்ப்பாதம், காண்டலுமே விண்டே ஒழிந்த வினை ஆயின எல்லாம்’ (10-4-9) என்றும், ‘இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான்’ (10-4-2) என்றும், ‘என்னையே பற்றுக்கோடாகப் பற்று; நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்; துக்கப்படாதே!’ (ப,கீ. 18-66) என்ற அர்த்தத்தை அருளிச்செய்தார்.

இனி ஆளவந்தார் அருளிச்செய்ததாகத் திருமாலை யாண்டான் பணிப்பதாவது: ‘ப்ரபத்தி விஷயமாக ஆயிற்று ‘வீடுமின் முற்றவும்’ (1-2) என்ற திருவாய்மொழி: ஸ்ரீபாஷ்ய காரரும் அப்படியே ப்ரபத்தி விஷயமாக அருளிச்செய்து கொடு போந்து, பாஷ்யம் அருளிச்செய்த பின்பு ரஹஸ்ய உபாயத்தை வெளியிட ஒண்ணாது என்று ‘வீடுமின் முற்றவும்’ (1-2) என்ற திருவாய்மொழியையும் பக்தி விஷயமாக்கி (ஸாத்ய பக்தி விஷயமாக) அருளிச்செய்தார்.

ஆக ,முதல் திருவாய்மொழியாற் (உயர்வறம்) சொன்ன பரம்பொருளின் ஸ்வரூபத்தையும், அதனைக் காண்பதற்குப் பலமான கைங்கர்யத்தையும் ‘கெடும் இடராய’ (10-2) என்ற திருவாய்மொழியில் ‘படமுடை அரவில் பள்ளி பயின்றவன்’(10-2-8) என்றும், ‘கடைத்தலை சீய்க்கப் பெற்றால்’ (10-2-7) என்றும் அருளிச்செய்து, ‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ (10-3-9) என்று அக்கைங்கரியத்தில் களை பறித்து, அதாவது, த்வயத்தில் பின் வாக்கியத்தில் உள்ள ‘நம:’ என்ற சொல்லின் பொருளை அருளிச்செய்து, ‘கெடும் இடராய’ (10-2) என்ற திருவாய்மொழியாலும், ‘வேய்மரு தோளிணை’(10-3) என்ற திருவாய்மொழியாலும், முதல் திருவாய்மொழியில் (1-1) சொன்ன பொருளை முடித்து, ‘சார்வே தவநெறி’ (10-4) என்ற திருவாய்மொழியாலும், ‘கண்ணன் கழிலிணை’(10-5) என்ற திருவாய்மொழியாலும், ‘வீடுமின் முற்றவும்’ (1-2) என்ற திருவாய்மொழியாலும், ‘பத்துடையடியவர்’ (1-3) என்ற திருவாய்மொழியாலும் சொன்ன பக்தி ப்ரபத்திகள் அதன் அதன் பலத்தோடே பொருந்தினபடியை அருளிச்செய்கிறார்’ என்பது.

(குறிப்பு: இதனால் ‘வேய்மரு தோளிணை’ என்ற திருவாய்மொழிக்கு இரண்டு வகையான கருத்து அருளிச் செய்தபடி. ஒன்று, ‘ப்ராஸங்கிகமாகப் பிறந்த துன்பத்தை நினைத்து அவனும் தெளிவிக்க இவரும் தெளிவினை அடைந்தவராய் நின்றார்’ என்பது. இரண்டாவது, ‘கைங்கர்யத்தில் களை அறுக்கிறது’ என்பது. ஆக முதல் திருவாய்மொழியின் (1-1) நிகமனம், ‘கெடுமிடர்’ (10-2) என்னும் திருவாய்மொழி; ‘வீடுமின் முற்றவும்’ (1-2), ‘பத்துடையடியவர்’ (1-3), என்ற இரண்டு திருவாய் மொழிகளிலும் ஸாத்திய பக்தியை கூறுவன; அவற்றி னுடைய நிகமனம் ‘சார்வேதவநெறி’ (10-4) என்ற திருவாய் மொழி; ‘வேய்மரு தோளிணை’ (10-3), என்ற திருவாய் மொழி ப்ராஸங்கிகம் என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். முதல் திருவாய்மொழியின் (1-1) நிகமனம், ‘கெடுமிடர்’ (10-2), ‘வேய்மருதோளிணை’ (10-3), என்ற இரண்டு திருவாய் மொழிகளும்; ‘வீடுமின் முற்றவும்’ (1-2), என்ற திருவாய்மொழி ப்ரபத்தியைக் கூறுவது; ‘பத்துடையடியவர்’ (1-3), என்ற திருவாய்மொழி ஸாதன பக்தியைக் கூறுவது; அவற்றினுடைய நிகமநம் ‘சார்வேதவநெறி’ (10-4), ‘கண்ணன் கழலிணை’ (10-5) என்னும் இரண்டு திருவாய்மொழிகளும் என்பது ஆளவந்தார் திருவுள்ளம். ‘சார்வே தவநெறி’ (10-4), ‘வேய்மரு தோளிணை’ (10-3) என்ற திருவாய்மொழியோடு நேரே இயைபுடையது என்பது பிள்ளான் திருவுள்ளம்)

ஈடு: முதற்பாட்டு. ‘இரண்டு விபூதிகளை உடைய னாய் இருந்து வைத்து அடியார்கட்குச் சுலபனான வனுடைய திருவடிகள் பக்தி மார்க்கத்தாலே அடையத்தக்கன,’ என்கிறார்.
தாமோதரன் தாள்கள் தவநெறிக்குச் சார்வே- ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ (1-3-1) என்றும், ‘எளிவரும் இயல்வினன்’ (1-3-2) என்றும் சொல்லப்பட்ட அவன் திருவடிகள் சார்வு என்கிறார். சார்வு - பேறு. ‘தவநெறி’ என்றது, பக்தி மார்க்கத்தை. ‘மேலே வணக்குடைத் தவநெறி’ (1-3-5) என்றாரே; அதனைச் சொல்லுகிறார். . ‘தவநெறி’ என்ற அளவில் பக்தியைச் சொல்லிற்றாமோ?’ என்னில், ‘என்னை வணங்குகிறார்கள்’ (ப.கீ. 9-16) என்கிறபடியே, வணக்கத்தை அங்கமாக உடைத்தாய் இருக்குமே அன்றோ பக்தி ஆகையாலே,

இவன் ஒரு வணக்கத்தைச் செய்தால் ‘இவன் நம்மை நோக்கிக் குவாலாக (மிகுதியாக) வருந்தினான்’ என்று இதனைப் பெரிய காயக்கிலேசமாக (உடலைவருத்தி ஒடுக்குகை) நினைத்திருக்கும் அவன் கருத்தால் சொல்லுகிறது. அன்றிக்கே, ‘எவனுக்கு ஞானமயமான தவம்?’ என்கிறபடியே, ஞான விசேஷமான பக்தியைத் தவம் என்று சொல்லிற்றாகவுமாம். (தவம் என்ற சொல்லுக்கு ஞானம் என்பது பொருள் ஆதலால், ஞானம் என்னும் பொருளையுடைய தவம் என்ற சொல்லால் ஞானத்தின் விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது என்று இரண்டாவதாக வேறு ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார். ‘அன்றிக்கே’, என்று தொடங்கி, தவம் என்ற சொல் ஞானம் என்னும் பொருளைக் காட்டுவதற்குப் பிரமாணம் காடுகிறார். ‘எவனுக்கு’ என்று தொடங்கி,

‘‘ய: ஸர்வஜ்ஞ ஸர்வவித்’’ (முண்டகம் 1-1-10) (எந்தப் பரமாத்மா எல்லாப் பொருள்களின் ஸ்வரூப ஸ்வபாவங்களை உள்ளபடி அறிகிறானோ) உப4ய லிங்கா3தி4கரணம் 3-2-5, ப்ரகாஶவச்சாவை யர்த்2யாத் - 3-2-15, என்ற ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்ய விரிவுரையில் இந்த வேதச்சொற்றொடர் குறிப்பிடப்படுகிறது.

238. ‘நிலைபேர்க்கலாகாமை நிச்சித்திருந்தேனே’ (திருவாய். 10-4-4), நிலைபேர்க்கலாமை - இவன் போகைக்கு உறுப்பாக என்னால் ஆவன எல்லாம் செய்தேன், அதற்கும் கேட்பனாய் இருந்திலன். நிச்சித்திருந்தேன் - ‘அச்சம் அடைகிறான் இல்லை’ என்கிறபடியே இருந்தேன் , அவன் படியை நினைந்தால் இவன் அச்சம் அற்றவனாய் இருக்கத் தட்டு இல்லை அன்றோ? ‘‘ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் ந பி3பே4தி குதஶ்சந இதி’’ (தை. ஆந. 1-1) -’ப்ரஹ்மத்தின் ஆநந்தத்தை அறிந்தவன், எவ்விடத்திலும் அஞ்சுவதில்லை’, ஜ்ஞாதிகரணம் 2-3-4 , ‘தத்2கு3ணஸாரத்வாத்து தத்2வ்யபதே3ஶ: ப்ராஜ்ஞவத்’ (2-3-29) ஸூத்திரத்தில், தன் சோகம் மறு நனையும் படியான (அழியும் படியான) ஆநந்தம் இவன் பக்கலிலே உண்டு என்று அறிந்தால், பின்னை இவன் சோகம் போகைக்கு குறை இல்லையன்றோ? குதஶ்சந - பின்னர் புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபத்துக்கும் அஞ்ச வேண்டா.

239.

கண்டேன்கமலமலர்ப்பாதம் காண்டலுமே
விண்டேயொழிந்த வினையாயினவெல்லாம்

தொண்டேசெய்து என்றும்தொழுதுவழியொழுக*
பண்டேபரமன்பணித்த பணிவகையே. (10-4-9)

‘பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கர்மம் ஞானம் பக்தி என்னும் இவைகளால் அழிந்த பாபத்தை யுடைய மனிதர்களுக்குக் கிருஷ்ணனிடத்தில் பக்தியானது உண்டாகிறது’, ‘‘ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந ஸமாதி4பி4: I நாராணாம் க்ஷீணபாபபாநாம் க்ருஷ்ண ப4க்தி: ப்ரஜாயதே II (லகு விஷ்ணுஸ்ம்ருதி) ‘பல பிறவிகளில் கர்ம ஞான பக்தியோகங்களாலே பாபம் அழியப் பெற்றவர்களான மனிதர்களுக்கு க்ருஷ்ணனிடம் பக்தி உண்டாயிற்று’ என்கிறபடியே, ‘பல காலங்களிலே ஸம்பாதிக்கப்பட்ட பக்தியாலே அடையப்படுமவனை அவன் திருவருளாலேயே காணப்பெற்றேன் என்கிறார்.

‘பண்டே பரமன் பணித்த வகையே கண்டேன் கமல மலர்ப்பாதம்’ - அவன் ‘என் ஒருவனையே புகலிடமாகப் பற்று’-’’மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ’’ (ப.கீ. 18-66) - ‘என்னை ஒருவனையே உபாயமாக அநுஸந்திப்பாய்’ என்கிறபடியாலே நான் அவன் திருவடிகளைக் காணப்பெற்றேன்.

240. தானேஉலகெல்லாம்* தானேபடைத்திடந்து*
தானேஉண்டுமிழ்ந்து * தானேயாள்வானே. (10-5-3) தானே உலகு எல்லாம் - ‘எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன’ என்றும் ‘அது நீ ஆகின்றாய்’ என்றும் சொல்லக்கடவது அன்றோ?’’தத்த்வமஸி’’ (சாந். 6-8-7) - ‘நீ நீயாக இருக்கிறாய்’, ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம தஜ்ஜலாநிதி’’ (சாந். 3-14-1) - ‘அந்த ப்ரஹ்மத்திடமிருந்தே தோன்றி மறைவதாலும் அதனாலேயே நியமிக்கப்படுகையாலும் இவையனைத்தும் ப்ரஹ்மமே’, என்று ஆரம்ப4ணாதிகரணம் 2-1-6 , தத3நந்யத்வ மாரம்ப4ண ஶப்3தா3தி3ப்4ய: (2-1-15) ஸூத்திரத்தில் இந்த வேதச்சொற்றொடர்களை மேற்கோளாகக் காட்டி யுள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்.

மேலும், இதைப்போலவே, வேறு சந்தர்ப்பங்களிலும் (சூழ்நிலைகளில்) இவ்வாறான சொற்றொடர்கள் காணப்படுகின்றன. ‘தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வான்’ ஆகையாலே, ‘தானே உலகு எல்லாம் என்கிறது ‘தஜ்ஜலாந்’ - இவையனைத்தும் ப்ரஹ்மமே- என்கிற ச்ருதியைப் போலே.

241. நாடீர்நாள்தோறும்* வாடாமலர்கொண்டு *
பாடீர்அவன்நாமம்* வீடேபெறலாமே. (10-5-5)

‘பாடீர் அவன் நாமம்’ - ‘அந்தச் சாமவேதத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே முக்தர் ஸாமகானம் பண்ணுமாறு போலே,’’ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு’’(தைத்.ப்ருகு) - ‘முக்தன் அனைத்தையும் எம்பெருமானுடைய விபூதியாகப் பார்ப்பதால் ஹாவு ஹாவு ஹாவு என்று மகிழ்கிறான்’. அவனுடைய திருப்பெயர்களைப் பக்தி முன்னாகப் பாடுங்கோள். ‘நாடீர்’ என்பதனால் மனதின் தொழிலைச் சொல்லிற்று. ‘வாடாமலர் கொண்டு’ என்கையாலே வாக்கின் தொழிலைச் சொல்லிற்று. ‘பாடீர்’ என்கையாலே வாக்கின் தொழிலைச் சொல்லிற்று. ‘வீடே பெறலாமே’ - உயிருக்கு உரியதான கைங்கரியத்தைச் செய்யவே ‘தனது உருவத்தோடு தோன்றுகிறான்’,’’ஸ்வேந ரூபேணாபி4நிஷ்பத்3யதே’’ (சாந். 8-12-2) - ‘அவன் தன் இயல்பான வடிவத்தில் வெளிப் படுகிறான்’என்று ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் (4-4-1),ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த் (4-4-1) ஸூத்திரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

‘‘தானேயாகிநிறைந்து எல்லாவுலகும்உயிரும் தானேயாய்’’ (10-7-2), ‘தானேயாகி நிறைந்து’ - இருவரும் சேர்ந்து செயல் செய்யப் புகுந்து தானே பெற்றானாய் இரா நின்றான், எல்லா உலகும் உயிரும் தானேயாய் - எல்ல உலகங்களும் அந்த அந்த உலகங்களில் உண்டான மனிதர்கள் முதலான வர்களும் தானேயாய் நின்றான். ஸர்வேச்வரன் ஆனான் என்றபடி, ‘ஸர்வேச்வரன் ஆனதும் இப்போதேயோ?’ என்னில் ஓம்; (உடன்பாட்டினை உணர்த்தும் சொல்) அப்படியே. பாதுகாப்பவனாக இருப்பதனால் அன்றோ அவனுக்கு ஸ்வரூபம் நிலைத் திருப்பது? பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தல் அல்லது ஏவுகின்றவன் ஆக ஒண்ணாதே! இவரைப் பெறுவதற்கு முன்பு தன்னுடைய ஏவுகின்ற தன்மை அடையக் கண்ணொந்தார் அகம் போலே காணும் கிடந்தது. (’கண் நோய் உள்ளவன் விளக்கினைக் காணான்; அதனால், இரவில் விளக்கின் உதவியைக் கொண்டு காண்கிற பொருள்களை அவனால் காண முடியாதவாறு போன்று, ஈச்வரனுடைய தன்மையையும் காண முடியாதவாறு கிடந்தது,’ என்றவாறு)

‘ஆத்மா’ தான் என்றும் உள்ளவனாக இருக்கச்செய்தே பகவானைப் பற்றிய ஞானம் பிறவாத போது, ‘இல்லாதவனாக இருக்கிறான்’ என்னலாய் அது பிறந்த போது ‘அவனை உள்ளவனாக அறிகிறார்கள்’ என்னலாம்படி இருப்பது போலே காணும் அவனும் இருப்பது. (இவரைப் பெறுவதற்கு முன்பு ஈச்வரத் தன்மை அசத்துக்குச் சமமாக இருந்தது, இவரைப் பெற்ற பின்பு ஸர்வேச்வரன் ஆனான் என்னுமதனைக் த்ருஷ்டாந்தத்தோடு காட்டுகிறார் ‘ஆத்மா’ என்று தொடங்கி), ‘‘அஸந்நேவ ஸ ப4வதி , அஸத்3ப்3ரஹ்மேதி வேத3 சேத் , அஸ்தி ப்3ரஹ்மேதி சேத்3வேத3 , ஸந்தமேநம் ததோ விது3:’’ (தை.உப.ஆந. 6-1) - ‘‘ப்ரஹ்மத்தை இருப்பு இல்லாததாக அறிந்தால், அது இல்லாததாகவே ஆகிறது. அதற்கு இருப்பு இருப்பதாக அறிந்தால், அது இருப்பதாக ஆகிறது’. --- ஆநந்த மயாதிகரணம் (1-1-6) ஆநந்த3மயோ (அ)ப்4யாஸாத் - (1-1-13) ஸூத்திரத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் குறிப் பிட்டுள்ளார்.

எதிர்த்தலையைப் பற்றி நிற்றல் இரண்டு தலைக்கும் ஒக்கும் (’இல்லாதவனாய் இருக்கிறான்’ என்றும், ‘அவனை உள்ளவனாக அறிகின்றார்கள்’ என்றும் சேதநனைச் சொன்னது போன்று ஸர்வேச்வரனைச் சொல்லலாமோ?’ என்ன, ‘எதிர்த்தலையை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்); ‘நான் உன்னை அன்றி இலேன்; நீ என்னை அன்றி இலை’(நான்முகன்திருவந்தாதி-7) என்கிறபடியே, இவன் அடியவனாய்க் கொண்டு உளனாம்; அவன் தலைவனாய்க் கொண்டு உளனாம்.

‘இதனுள்புக்கு’ (10-7-3), தொன்று தொட்டு இவ்வுடம்போடே முகம் பழகிப் போந்தவன் அன்றோ இவன்? உயிர் வழியாகக் குந்தி அடி இட்டு நிற்குமவன் அன்றோ அவன்? அவன் மேல் விழாநின்றான், தனக்குப் பிரகாரமான உயிருக்குப் பிரகாரமாயிருந்து கொண்டு தனக்குப் பிரகாரமாமது அன்றோ இது? ‘இந்த உயிரை சரீரமாகயுடைய என்னால் அந்தர்யாமியாகப் பிரவேசிக்கப்பட்டு நாம ரூபங்கள் உண்டு பண்ணப்படுகின்றன,’ என்னக் கடவதன்றோ?

‘‘அநேந ஜீவேந ஆத்மநா (அ)நுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி (சாந். 6-3-2)’இந்த உயிருள்ள ஒன்றுடன் கூடவே உட்புகுந்து, நான், பெயர் மற்றும் வடிவமாக வகைப்படுத்தக் கடவேன்’--- பூ4தாதி4கரணம் 4-2-4, நைகஸ்மிந் த3ர்ஶயதோ ஹி 4-2-6, என்ற ஸூத்ர ஸ்ரீபாஷ்யத்தில் இந்த வேதச்சொற்றொடர் மேற்கோளாக காட்டப் படுகிறது.

‘என்னை முற்றும் தானேயாய்’ (10-7-3), இப்படி உயிரோடு உடலோடு வாசி அற எங்கும் புக்குப் பரந்திருக்கை யாலே ‘தானே’ என்னத் தட்டு இல்லை. இவர் நான் என்னு மதனையும் கொண்டான்; இவர் எனது என்னு மதனையும் கொண்டான். அன்றிக்கே ‘ஈச்வரனும் கூட விளாக்குலை கொண்டு (கபளீகரித்துக் கொண்டு) அனுபவிக்க ஒண்ணாதபடி ஆனார் ஆயிற்று’ என்னுதல். நின்ற - ‘உள்ளும் புறம்பும் ஆன எல்லா இடங்களிலும் நாராயணன் பரந்திருக்கிறான்’, ‘‘அந்தர்ப3ஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:’’ (தை. நாரா. 11-5) - ‘எல்லாவற்றின் உள்ளும் புறமும் ஊடுருவி நிலை பெற்றிருப்பவன், நாராயணன்’ என்னும் நிலையை, லிங்க3 பூ4யஸ்த் வாதி4கரணம் 3-3-19 , ‘லிங்க3பூ4யஸ்த்வாத்தத்3தி4 ப3லீயஸ்தத3பி’ 3-3-43, என்ற ஸூத்திரபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச் சொற்றொடரை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

242. ‘‘கண்ணுள்நின்றுஅகலான், கருத்தின் கண்பெரியன்’’ (10-8-8)

‘கண்ணுள்நின்று அகலான்’ - எப்பொழுதும் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான். என்றது, ‘எப்போழுதும் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கு வேறு ‘தனக்கு ஓர் உலகம் உண்டு என்று இருக்கின்றிலன்’, என்றபடி. ‘கருத்தின் கண் பெரியன்’ - இரண்டு உலகங்களை யுமுடையவனாய் இருத்தலால் வரும் வேறு ஒன்றிலே நோக்குள்ளவனாய் இருத்தல் முழுதும் தீர்ந்து, இவரை அவ்வருகே கொண்டு போகையிலும், ஆதிவாஹிகரை ஏவுகையிலும், தான் முற்பாடனாய்க் கொண்டு போகையில் பாரியாய் நின்றான்.

அன்றிக்கே, ‘நம் காரியத்தில் இவன் விரைகிறபடி நம்மால் எண்ணி முடியும் அளவு அன்று’ என்னுதல்; என்றது, ‘இவ்வளவினன் என்று எண்ண முடியாதவன்’ என்றபடி. இது தான் ‘எவனக்கு அறியப் படாதது? என்கிற பொது நோக்கால் அன்று,(’கருத்தின் கண் பெரியன்’ என்பதற்கு நினையும் நினைவுகளாலே பெரியன் என்று பொருள் கூற வேண்டுமோ? அளவிட்டு அறிய முடியாத ஸ்வரூபத்தை யுடையன் என்று பொருள் கூறினால் என்னை? எனின், அதற்கு விடை யருளிச்செய்கிறார், ‘இருதான்’ என்று தொடங்கி. ‘இதுதான்’ என்றது, ‘இவ்வளவினன் என்று எண்ண முடியாதவன் என்றதுதான்’ என்றபடி.) நம் காரியத்தில் இங்ஙனே இருக்கும்;

‘என் மனத்துப் புகுந்தான்’ என்றதனோடு சேர வேண்டுமன்றோ? ‘கருத்தின் கண் பெரியன்’ என்கிற இதுவும். ‘‘யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதே3 ஸ: I அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் II’’ (கேநோபநிஷத். 2-3)- எந்த ப்ரஹ்மஜ்ஞானிக்கு பரம் பொருள் அறியப்படாததாகிறதோ அந்த ஜ்ஞானிக்கே, அந்த ப்ரஹ்மஸ்வரூபம் நன்கு அறியப்பட்டதாகிறது, எந்த அஜ்ஞானிக்கு ப்ரஹ்ம ஸ்வரூபம் அறியப்பட்டதாகிறதோ அவன் அதை அறியாதவனே; ப்ரஹ்மம் இவ்வளவுபட்டது என்று அளவிட்டு அறிபவர் களுக்கு, அறியப்படாததாகிறது; ப்ரஹ்மம் அளவிட வொண்ணததாகையாலே, அறிய வொண்ணாது என்று அறிபவர்களுக்கு, அது சிறப்பாக அறியப்பட்டதாக ஆகிறது. ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1, ‘அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ - 1-1-1 என்ற ஸூத்ர பாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்தக் கருத்தைக் தெரிவிக்கிறார்.

243.

சூழ்விசும்பணிமுகில் தூரியம்முழக்கின*
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின*
ஏழ்பொழிலும் வளமேந்தியஎன்னப்பன்*
வாழ்புகழ்நாரணன்தமரைக் கண்டுகந்தே. (10-9-1)

	‘‘சூழ்விசும்பு’’ - ப்ரவேசம்

மேலான யோகிகளுக்குப் பிறக்க கூடியதான ப்ரபத்தி இவர்க்குப் பிறக்க, அதனால் உளவாகும் தன்மைகளை இத்திருவாய்மொழி அளவும் வர அனுபவித்து,(திருவிருத்தம் தொடங்கி திருவாய்மொழியளவும் இவர்க்கு உண்டான தன்மைகள் ப்ரபத்தி நிலையில் உண்டாமவை என்று அருளிச்செய்யா நின்று கொண்டு, இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான தன்மை பரஜ்ஞான நிலையில் விளையுமது என்று அருளிச்செய்கிறார்).

இனி இங்கிருந்து அனுபவிக்குமது ஒன்று இல்லாமையாலே ‘பரமபதத்து ஏறப்போக வேண்டும்’ என்று எண்ணுகிற இவரைக் காட்டிலும் சடக்கெனக் கொடு போகவேண்டும் என்று விரைகின்ற ஈச்வரன், அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்களாலே கண்டாற்போன்று தெளிவாக விளங்கும்படி செய்தரு ளினான்.

அதாவது வேதங்களில் ப்ரஸித்தமான அர்ச்சிராதி நெறியையும், சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகங்காட்டும் படியையும், போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங் களையும், அந்நெறியாலே சென்று புகக்கூடிய பரமபதத் தையும், நித்யஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும், பிராட்டிமாரும் ஸ்ரீவைகுண்டநாதனும் வந்து ஆதரிக்கும் படியையும், நித்யஸூரிகள் சேவிக்கப் பிராட்டிமாரோடே வீற்றிருந்தருளுகிற படியையும், அடையத் தகுந்தவர்களிலே மேலானவர்களான நித்யஸூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய் ஆநந்தத்தை யுடையவராய் இருக்கும் படியையும் காட்டியருளக் கண்டு ப்ரீதராய், அதனை அந்யாப தேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் 10-9ஆம் பதிகத்தில்.

தமக்கு அவன் செய்து கொடு போந்த பேற்றினை வைஷ்ணவர் எல்லாரும் பெற்றாராகப் பேசின இது, அந்யாப தேசமாவது; அதற்குப் பிரயோஜனம், இங்குள்ளார், ‘நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது’ என்று இருக்கை.

வேதத்திலுள்ள மற்ற பாகங்களுக்கு முன்னால் இதை எடுத்தருளினார். இச்சாந்தோக்யோபனிஷத்தையே திருவாய் மொழியாகத் தமிழ்ப் படுத்தினார் வேதம் தமிழ் செய்த மாறன் என்று நம் ஆசார்யர்கள், நிர்வஹித்துப் போருவர்கள். ‘‘ஓமித்யேதத3க்ஷரமத்3கீ3த2முபாஸீத’’ (சாந்தோ. 1-1-1) (ஓம் என்று தொடங்கும் உத்கீதத்தை உபாஸிக்கக்கடவன்) என்று ஆரம்பிக்கிறது சாந்தோக்ய உபனிஷத். நம்மாழ்வாரும் தம் திருவாய்மொழியைத் தொடங்கும் போது ‘ஒம்’ என்று ஸம்ஹிதாகரமாகச் சொன்னால் இது சிலர்க்கே அதிகாரமாகக் கூடுமென்று பார்த்து ‘‘உயர்வற’’, ‘‘மயர்வற’’ ‘‘அயர்வறும்’’ (1-1-1) என்று அகார, உகார, மகாரங்களாகப் பிரித்து ஓங்காரத்தை அருளிச்செய்தார்.

அகாரத்தை முதலிலிட்டுச் சொல்லாமல் உகாரத்தை முதலிற் சொன்னதற்குக் கருத்தென்னெனில்: ‘‘ஸாம்ந உத்3கீ3தோ2 ரஸ:’’ (ஸாமவேதத்திற்கு ரஸம் போன்றது உத்கீதம்) என்று சொல்லப்பட்ட உத்கீதமே தம்மால் விவரிக்கப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக ‘உ’ என்று ஆரம்பித்து ‘‘பிறந்தார் உயர்ந்தே’’ (10-10-11) என்று தகாரத்தில் முடித்தார் என்று வேதாசார்ய பட்டர் உபதேசம்.

முதற் பாட்டின் நான்காவது அடியிலும் ‘துயரறு’ (1-1-1) என்று தகாரத்தை எடுத்ததும் உத்கீதத்தை உணர்த்துவதற்காகவே என்று பெரியோர் பணிப்பர். உத்கீதமாவது உத்க்ருஷ்டமாயிருக்கையால் ‘உத்’ என்னும் திருநாமத்தையுடைய எம்பெருமானைப் பற்றிய கீதம். இவ்வுபனிஷத்திலும், ‘‘தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவக்ஷிணீ தஸ்ய உதி3தி நாம’’ (சாந்தோ. 1-6-7)- அவனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள. (அந்தரதி4கரணம் 1-1-7 அந்தஸ்தத்3 த4ர்மோபதே3ஶாத் - 1-1-21)அவனுக்கு ‘உத்’ என்று திருநாமம். என்று புண்டரீகாக்ஷனே ‘உத்’ என்னும் திருநாமத்தை யுடையவன் என்று உத்கோஷிக்கப்பட்டது, இப்படிப் புண்டரீகாக்ஷனைப் பேசும் உபனிஷத்தை திருவாய்மொழியிலே தமிழ்ப்படுத்து கையாலே ஆழ்வாரும் ஒவ்வொரு பத்திலும் பலகால் இச்செந்தாமரைத் தடங் கண்களிலே ஆழங்காற்பட்டுப் பாசுரமிடுவர்.

இவ்வுபநிஷத்திலே அர்ச்சிராதி கதியைச் சொன்னாற் போலே ஆழ்வாரும் அர்ச்சிராதிகதியைத் தம் திருவாய் மொழியின் கடைசியிலே அருளிச்செய்தார். ‘‘அந்தரா தி3த்யே ஹிரண்மய: புருஷோ த்3ருஶ்யதே ..... தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவக்ஷிணீ ‘‘ என்றத்தை ஆழ்வாரும் ‘‘அஞ்சுடரவெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால் , செஞ்சுடர்த்தாமரைக்கண் செல்வனும் வாரானால்’’(திருவாய். 5-4-9) என்று அருளிச்செய்வர். ‘‘ஹிரண்மய புருஷ:’’ என்ற திருமேனியிலும் ‘‘செம்பொனே திகழும் திருமூர்த்தியை’’ (1-10-9) முதலான பலவிடங் களிலே ஈடுபடாநிற்பர். இப்படி இச்சாந்தோக்யத்திற்கும் திருவாய்மொழிக்கும் பலஸாம்யங்களுண்டு.

சாரீரக மீமாம்ஸையில் நான்கு அத்யாயங்கள் உள்ளன. அவற்றில் நான்காம் அத்யாயத்திற்கு பலா2த்4யாயம் என்று பெயர். அதில் நான்கு பாதங்கள் உள்ளன. ‘ஆவ்ருத்தி பாத3ம்’ எனப்படும் முதல் பாதத்தில் ‘ப்ரஹ்ம வித்யையானது பலம் கிடைக்கும் வரையில் ஆவ்ருத்தி செய்யப்பட வேண்டும்’ முதலான பல விஷயங்கள் பதினொரு அதிகரணங்களில் ஆராய்ந்து நிர்ணயிக்கப்படுகின்றன.

‘உத்க்ராந்தி பாத3ம்’ எனப்படும் இரண்டாவது பாதத் தில் (11 அதிகரணங்கள்) முக்தியடையும் உபாஸகன் சரீரத்திலிருந்து கிளம்பும் முறை ஆராயப்படுகிறது. ‘க3திபாத3ம்’ (5 அதிகரணங்கள்) எனப்படும் மூன்றாவது பாதத்தில், மூர்த்தந்ய நாடியாலே சரீரத்தை விட்டுக் கிளம்பிய உபாஸகன் ஆதிவாஹிகர்களால் பரமபதத்திற்கு அழைத்துச் செல்லப்படுகையாகிற வித்யாபலம் நிரூபிக்கப் படுகிறது. ‘முக்தி பாத3ம்’ எனப்படும் நாலாவது பாதத்தில் (6 அதிகரணங்கள்) பரப்ரஹ்மத்தை அடைந்த பிறகு முக்தன் பெறும் ஐஶ்வர்யமாகிற பலன் நிரூபிக்கப்படுகிறது.

இனி அர்ச்சிராதி மார்க்கத்தை விவரிக்கும் சில வேதாந்த ஸூத்ரங்களையும், அந்தஸூத்ரங்களுக்கு ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்த விரிவுரையும் கருத்திற் கொள்வோம்.

243(1) அர்ச்சிராத்3யதி4கரணம் 4-3-1

ஹ்ருதயத்தில் எழுந்தருளியிருக்கும் அந்தர்யாமியின் கருணையினால் ஸ்தூல தேஹத்தில் இருக்கும் ஸுஷும்நா நாடியாலே வெளிக்கிளம்புகிறான் ப்ரஹ்ம ஜ்ஞானி என்று முன் பாதத்தில் அர்ச்சிராதி கதியின் தொடக்கம் சொல்லப்பட்டது. அந்த ஜ்ஞானி சரீரத்தை விட்டுக் கிளம்பியபின் அவன் செல்லும் வழி இந்தப் பாதத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

‘அர்ச்சிராதி3நா தத்ப்ரதி2தே:’ 4-3-1

 - அர்ச்சிராதி மார்க்கத்தாலேயே (ப்ரஹ்மஜ்ஞானி மோக்ஷத்திற்குச் செல்கிறான்); (எல்லா உபநிஷத்துக் களிலும்) அதற்கே ப்ரஸித்தியுள்ளதாகையால்.

எல்லா உபநிஷத் சொற்றொடர் களிலும் அர்ச்சிராதி மார்க்கமொன்றே மோக்ஷமார்க்கமாகக் கூறப்படுகிறது. ஆகையால் ப்ரஹ்ம ஜ்ஞானி அர்ச்சிராதி மார்க்கத்தாலேயே மோக்ஷத்திற்குச் செல்கிறான். வேறு பட்டதுபோல் தோன்றும் எல்லா உபநிஷத் சொற்றொடர் களிலும் அந்த அர்ச்சிராதி மார்க்கமே நினைவுறுத்தப் படுகையால், அதுவே மோக்ஷ மார்க்கமாகும். எப்படி நினைவுறுத்தப்படுகிறது எனில்;

எல்லா உபநிஷத் வாக்யங்களிலும் அர்ச்சிஸ்ஸாகிற அக்னியும், ஸூர்யனும் படிக்கப்பட்டிருக்கையால் அந்த மார்க்கமே நினைவுறுத்தப்படுகிறது. சில உபநிஷத்துக்களில் சிலவற்றைச் சொல்லாமல் விட்டும், சில உபநிஷத்துக்களில் சிலவற்றை அதிகமாகச் சேர்த்துப் படித்தும் இருப்பதை என்ன செய்வது? எனில்: மூன்றாம் அத்யாயத்தில் மூன்றாம் பாதமான குணோபஸம்ஹார பாதத்தில் ஓர் உபநிஷத் வாக்யத்தில் சில குணங்கள் சொல்லாமல் விடப்பட்டி ருந்தாலும், மற்றோர் உபநிஷத் வாக்யத்தில் அதிகமாகப் படிக்கப்பட்டுள்ள அதே வித்யையின் குணங்களை, சொல்லாமல் விடப்பட்டிருந்த இடத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது போல் அர்ச்சிராதி மார்க்கத்திலும் ஓரிடத்தில் அதிகமாகச் சொல்லப்பட்டவைகளை, குறைவாகச் சொல்லப்பட்ட இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆக எல்லா உபநிஷத் வாக்யங்களிலும் சொல்லப் பட்ட மோக்ஷவழி அர்ச்சிராதிமார்க்கமேயாகையால் அந்த வழியாலேயே ப்ரஹ்ம ஜ்ஞானிகள் அனைவரும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று நிலைநாட்டப்பட்டது.

அர்ச்சிஸ் முதலானவர்கள் ப்ரஹ்ம ஜ்ஞானியை) அழைத்துச் செல்லும் தேவதைகளே, அழைத்துச்செல்பவர் களுக்குரிய அடையாளம் இருக்கையால்.

‘‘ஆதிவாஹிகா:’’ - ‘இவர்கள் அர்ச்சிஸ் மற்றும் பிற சிறப்பான தேவதைகள். இவர்கள் விவேகமுடைய ஒருவருக்கு வழிகாட்டுவதற்காக, மிக உயர்ந்த புருஷனால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் (நியமிக்கப்பட்டவர்கள்).

எவ்வாறு? ‘தல்லிங்கா3த்’ - ‘இவர்களிடம் வழி நடத்துதலின் பண்புகள் உள்ளதால், ‘ஆதிவாஹன்’ என்றால், ‘செல்பவரைச் செலுத்துபவர்’ என்று பொருள்படும். மேலும், இது ச்ருதியில் நிறைவான பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘தத்புருஷோ(அ)மாநவ: ஸ ஏநாந் ப்3ரஹ்ம க3மயதி’’ (4-15-5,6) - ‘வித்யுத் புருஷனான அமானவன் இவர்களை ப்ரஹ்மத்தை அடைவிக்கிறான்’. இந்த அறிவிப்பானது, இதற்கு முற்பட்டவர்கள் திறத்திலும் கூட, இதே தொடர்பு உள்ளதைச் சுட்டிக்காட்டுவது, ச்ருதியில் பொதுவான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘அர்ச்சிஸ்’ போன்ற சொற்கள் குறிப்பிட்ட மேற்பார்வை பார்க்கும் தேவதைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள், அர்ச்சிஸ் போன்றவற்றின் ‘ஆத்மா’ ஆவார்கள். (அதாவது தலைவர்களாவார்கள்).

‘‘தம் ப்ருதி2வ் யப்3ரவீத்’’ (தை. ஸம். 5-5-2) - ‘பூமி அவனிடம் சொல்லிற்று’ என்பதைப் போல பொருள் கொள்ள வேண்டும்.

ஆதிவாஹிகாதி4கரணம் 4-3-4, வைத்3யுதே நைவ ததஸ்தச்2ருதே: - 4-3-5 - மின்னலுக்குமேல், வித்யுத் புருஷனான அமாநவ னோடு கூடவே (ப்ரஹ்ம ஜ்ஞானி ப்ரஹ்மத்திடம் போகிறான்). ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்பவனாக அமான வனையே ச்ருதி கூறுகையால்.

கார்யாதி4கரணம் 4-3-5, த3ர்ஶநாச்ச 4-3-12-

(அர்ச்சிராதிவழியால் சென்றவனுக்குப் பரப்ரஹ்ம ப்ராப்தியை) ச்ருதிகூறுகையாலும் (ஆதிவாஹிக கணம் ப்ரஹ்மோபாஸகர்களையே அழைத்துச் செல்லுகிறது)

ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் 4-4-1

சரீரத்திலிருந்து கிளம்பிய ப்ரஹ்மஜ்ஞானியை அமானவன் என்னும் நித்யஸூரியானவன் ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்கிறான் என்பது சென்ற (மூன்றாம்) பாதத்தில் விவரிக்கப்பட்டது. இந்த நாலாவது பாதத்தால் பரமபதம் சென்ற முக்தாத்மா பெறும் செல்வம் எத்தகையது என்பது நிரூபிக்கப்படுகிறது.

ஸம்பத்3யாவிர்பா4வ: ஸ்வேநஶப்3தா3த் 4-4-1

பரஞ்சோதியை அடைந்து, (பெறத்தக் கதாகச் சொல்லப்படும் அபிநிஷ்பத்தி-வெளிப்படுத்தப் படும் பொருள்), (ஸ்வரூபத்தின்) ஆவிர்ப்பாவ ரூபமே; எனும் (ரூப என்னும் சொல்லிற்கு விஶேஷணமான) சொல்லால்.

‘‘பரம் ஜ்யோதிருப4 ஸம்பத்3ய ரூபேண அபி4நிஷ்பத்3யதே’’ என்று படித்தாலே முக்தன் தனக்கென ஒரு புதிய உருவத்தைப் பெறுகிறான் என்று தேறிவிடும். ‘‘ஸ்வேந ரூபேண’’ என்று இதற்காக சிறப்புடைய அடைமொழி இடத்தேவையில்லை. ஆகையால், புதியதொரு உருவத்தைப் பெறுகிறான் என்று இந்தச் சொற்றொடர்க்குப் பொருள் கொண்டால் ‘ஸ்வேந’ என்னும் சொல் பொருளற்றதாகிவிடும். அது பொருளுடையதாக வேண்டும் எனில், பரமாத்மாவை அடைந்தவுடன், ஸம்ஸாரி நிலையிலிருந்த ஞானச்சுருக்க நிலை நீங்கப்பெற்று, ஞானவிரிவுநிலையாகிற ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பெறுகிறான் என்றே கொள்ள வேண்டும்.

ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6, ஜக3த்3 வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச - 4-4-17 (முக்தனுடைய ஐச்வர் யம்) உலகைப்படைப்பது முதலான (பரம்பொருளுக்கே யுரிய) செயல்களைத் தவிர்ந்ததுதான்; (ப்ரஹ்ம லக்ஷணத்தைக்கூறும்) ப்ரகரணத்திலிருந்து (இது விளங் குகிறது); (உலகை நியமிப்பதைப் பேசுமிடங்களில் முக்தனுக்கு) ஸந்நிதியில்லையாகையாலும் (இது தேறுகிறது) என்பது ஸூத்திரத்தின் பொருளாகும்

முக்தனின் பெருமையாகிய செல்வம், பரம புருஷனைச் சார்ந்திருப்பதாலும், மேலும் பரம புருஷன் சுதந்திரமானவனாலும், ‘முக்தன் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பிவரும் ஸாத்யக்கூறு உள்ளதோ?’ என்னும் ஐயப்பாடு எழுகிறது - எனவே, அங்கு ஸூத்ரகாரர் கூறுகிறார்.

அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்தி: ஶப்3தா3த் - 4-4-22,

(முக்தன் ஸம்ஸாரத்திற்குத்) திரும்பி வருவதில்லை; வேதச்சொற்றொடர் அப்படிக் கூறுகையால். ‘‘ச்ருதியிலிருந்து , பரம புருஷன், பரப்ரஹ்மம், சீரான மங்களத்தை உடையது என்பது அறியப்படுவது போல, கைவிடத்தக்க எல்லாவற்றின் எதிரி, அண்டம் போன்ற வற்றின் காரணம், எல்லா இருப்பினங்களிலிருந்தும் வேறு பட்டவன். எல்லாம் அறிந்தவன்; எண்ணங்கள் ஈடேறப் பெற்றவன்; தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் கருணைக் கடலாக இருப்பவன்; மிக அதிகமான இரக்கம் உள்ளவன்; அவன் திறத்தில் அவனுக்கு சமமானவரோ, மிக்கவரோ இருப்பார் என்கிற கேள்விக்கே இடமில்லை’’ ஆகியவை அறியப்படுகின்றன.

இதைப்போலவே, ச்ருதியிலிருந்தே ‘‘வர்ணாச்ரமத்திற்கு உரித்தான கடமைகளை, தினந்தோறும் சீரிய முறையில் மேற்கொண்டு, அதனால் அரவணைக்கப்பட்ட வழிபாட்டால் உகப்படைந்த அவன் (பரமாத்மா), மிகவும் மகிழ்ந்து, அவனை இவ்வாறு வழிபடுபவர்கள் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பிவரும் நிலையை ஏற்படுத்தமாட்டான்’’ என்பதும் அறியப்படுகிறது.

நினைவில் வைத்துக் கொள்ள இயலாத காலத்திலிருந்து, தொடங்கி, எல்லையற்று, கடப்பதற்கு அரிதாக இருக்கும் குவியலான கர்மங்களின் பலனான அவித்யையை விலக்கிவிட்டு, அவர்கள் தன்னை அறிவதான வடிவைக் காட்டி, மிகுதியான ஆனந்தத்தை அடையச் செய்த பிறகு - அவர்களைத் திரும்ப அனுப்புவதில்லை. ச்ருதி கூறுவதாவது: ‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸனத்தையும் ஆயுள் உள்ளவரை அநுஷ்டித்து ப்ரஹ்மத்தின் உலகத்தை அடைகி றான் (முக்தன்); மறுபடி ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவ தில்லை, திரும்பி வருவதில்லை’.

இதே பயனை, கீதையில் கண்ணன் கூறுகிறான்: ‘‘மாமுபேத்ய புநர்ஜந்ம து3:க்கா2லயமஶாஶ்வதம் I நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3தா: II’’ (ப. கீ. 8-15) - ‘மேலான ஸம்ஸித்திரூபமான (உயர்ந்த புருஷார்த்தமான) என்னை அடைந்தவர்களான மஹாத்மா க்களான ஜ்ஞானிகள், என்னை அடைந்த பின் எல்லாத் துன்பங்களுக்கும் இருப்பிடமாயிருப்பதாய், நிலைநில்லாத தான தேஹத்தை மறுபடியும் அடைகிறதில்லை’.

‘‘ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநராவர்த்திநோ (அ)ர்ஜுந I மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்3யதேII’’ (ப.கீ. 8-16) - ‘அர்ஜுனா! (ப்ரஹ்மாண்டத் தினுள்ளிருக்கும்) ப்ரஹ்மலோகம் வரையிலுள்ள எல்லா உலகங்களும் அழிவை உடையவை; குந்தீபுத்திரனே! என்னை அடைந்தபின் போவெனில்; மறுபிறப்பு இல்லை’.

வேறு எதையும் சார்ந்திருப்பது இயலாததாலும், கர்மத்தின் தளை நீங்கப்பெற்ற ஒருவர் திறத்தில், இதற்கான முயற்சிகள் செய்யப்படாததாலும், அவனுடைய அறிவு எந்த விதமான சுருக்கத்தை அறியாததாலும், அவர் ப்ரஹ்மத்தை அறிவதான ஒரே நினைவையே கொண்டிருப்பதாலும், அவர் மட்டுமே அவனுக்கு (பரமாத்மாவுக்கு) பிரியமானவராக இருப்பதாலும், அளவற்ற மிகுதியான ஆநந்தமயனான ப்ரஹ்மத்தை அறிந்திருப்பதாலும் - எண்ணங்கள் ஈடேறப்பெற்ற பரம புருஷன், தனக்கு எல்லை கடந்த விருப்பமான அந்த ‘‘அறிந்த ஒருவனை’’ பெற்ற பின்பு. எந்த காலத்திலும் அவனைத் திரும்பவும் போக விடமாட்டான். பரம புருஷன் இதை இவ்வாறு அறிவிக்கிறான்:

‘‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த்த2ம் அஹம் ஸ ச மம ப்ரிய:I (ப. கீ. 7-17) - ‘நான் ஞானிக்கு சொல்ல வொண்ணாதவளவுக்கு இனியவன்; அவனும் எனக்கு இனியவன்’. ‘‘உதா3ராஸ்ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்I ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம் II (ப. கீ. 7-18) - இவர்கள் அனைவருமே, வண்மை மிக்கவர்கள்; ஞானியோவெனில், (எனக்கு) தாரகனாகவேயிருப்பவன் (என்று), என் ஸித்தாந்தம். என்னோடு சேர விரும்புகின்ற அவன், என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ’.

‘‘ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதேI வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4:II’’ (ப.கீ. 7-19) - ‘பல புண்ணியப் பிறப்புகள் கழிந்தபின், அறிவு முதிரப்பெற்ற ஞானியானவன், ‘வாஸுதேவனே எனக்குப் பரமப்ராப்யமாகவும், ப்ராபகனா கவும், தாரகம், போஷகம், போக்யம் முதலான எல்லா மாகவும் இருக்கிறான்’ என்று எண்ணி, என்னை சரண மடைகிறான். அவன், விசாலமான நெஞ்சையுடையவ னாவான்; (இவ்வுல கில் எனக்கும்) மிகவும் கிடைத்தற்கரியவனாவான்’. இதில், ‘‘மீண்டும் திரும்பி வருவதில்லை. மீண்டும் திரும்பி வருவதில்லை’’ என்று இருமுறை கூறப்பட்டிருப்பது, சாஸ்த்திரம் முடிவடைந்து விட்டதைக் காட்டு வதற்காகும். இவ்வாறு அனைத்துக் கருத்து வெளிப்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பரமபதத்தைச் சேர்ந்த முக்தன் மீண்டும் ஸம்ஸாரத்தை அடையமாட்டான் என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது.

244. விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்*
பதியினில்பாங்கினில் பாதங்கள்கழுவினர் *
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்*
மதிமுகமடந்தையர் ஏந்தினர்வந்தே. (திருவாய்.10-9-10)

சிறந்த நித்யஸூரிகள், ‘நாம் செய்து வைத்த நற்செயல்களின் காரணமாக இவர்கள் இவ்விடத்திற்கு வந்தார்கள்!’ என்று தம் தம் இருப்பிடங்களிலே செய்ய வேண்டிய முறைப்படியே திருவடிகளை விளக்கினார்கள்; சந்திரன் போன்ற முகங்களையுடைய தெய்வப் பெண்கள் வந்து, திருவடி நிலையையும் சிறந்த வாசனைப் பொடிகளையும் நிறை குடங்களையும் மங்கள தீபத்தையும் ஏந்தினார்கள்.

‘நல்வேதியர்’ - ‘எவ்விடத்தில் காண்கிறவர்களும் முன் தோன்றியவர்களும் பழமையானவர்களும்’ என்றும், ‘எங்குமுள்ளவர்களும் பற்றத் தக்கவர்களுமான தேவர்கள் உளரோ?’ என்றும், ‘எங்கும் பரந்திருக்கின்ற திருமாலுக்கு யாதொரு சிறந்த இடம் உண்டோ, அந்தப் பரமபதத்தை ஞானம் நிறைந்தவர்களும் துதிப்பதையே தன்மையாக யுடையவர்களும், எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடினவர்களுமான நித்யஸூரிகள் அடைகிறார்கள்’, என்றும் வேதங்களாலே சொல்லப் பட்டவர்கள்.

‘‘யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:’’ (யஜுர். அச்சித்ரம்) - ‘யாதொரு பரமபதத்தில், ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்க வல்லவர்களான, யாதொரு நித்யஸூரிகள், அநாதி ஸித்தர்களாயும், அநேக காலமானாலும் நூதனமான திவ்யமங்கள விக்ரஹத்தை உடையவர்களாயும் இருக்கிறார்கள்’,

‘‘யத்ர பூர்வே ஸாத்4யா ஸந்தி தே3வா:’’ (புருஷஸூக்தம்-18) - பழைமையான நித்யஸூரிகள் வாஸம் செய்யும் பரமபதத்தை அடைகிறார்கள், ‘‘தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸ: ஸமிந்த4தே | விஷ்ணோர்யத் பரமம்பத3ம் || (யஜுர். காடகம்.1-3) - ‘விஷ்ணுவினுடைய பரமபதம் உண்டோ, அப்பரமபதத்தை, மேதாவிகளும், விசேஷமாக துதிப்பவர் களும், மிகவும் ஜாக்ரதையுடையவர்களான முக்தர்கள் ஒளிவிடச்செய்கிறார்கள்’. இது போன்ற வேதச்சொற்றெடர் களை உள்ளடக்கியதே ஆழ்வாரின் ‘நல்வேதியர்’ என்னும் சொல்.

245. முனியே! நான்முகனே!
முக்கண்ணப்பா!*என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்
கண்கருமாணிக்கமே! என்கள்வா!*
தனியேனாருயிரே! என்தலை
மிசையாய்வந்திட்டு *
இனிநான்போகலொட்டேன்
ஒன்றும்மாயஞ்செய்யேல்என்னையே. (10-10-1)

திருவாய்மொழியாகிய இப்பிரபந்தத்திற்குத் தலைவன் ஸர்வேச்வரன்; இப்பிரபந்தம் அவாவில் அந்தாதி; மயர்வு அற மதிநலம் அருளப்பெற்றவர் கவி பாடினார்; இனி இவருடைய அவதாரந்தான் ஸர்வேச்வரனுடைய அவதாரத்தைப் போன்று சாதுக்களினுடைய புண்ணியத்தின் பலம்.

முனியே - ‘அவனிடத்தில் பிறக்கையாலும் ,அவனிடத்தில் லயிக்கையாலும், அவனாலே காக்கப்படுகை யாலும், இப்பொருள் யாவும் அவனே’ என்றும், ‘‘தத்தேஜ ஐக்ஷத ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘அந்த ஒளி சிந்தித்தது - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’. தேஜோதி4கரணம் 2-3-2 , ‘தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த் ஸ:’ 2-3-14,

‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம தஜ்ஜலாநிதி’’ (சாந். 3-14-1) - ‘அந்த ப்ரஹ்மத்திடமிருந்தே தோன்றி மறைவதாலும் அதனாலேயே நியமிக்கப்படுகையாலும் இவையனைத்தும் ப்ரஹ்மமே’, என்று ஆரம்ப4ணாதிகரணம் 2-1-6 , தத3நந்யத்வ மாரம்ப4ண ஶப்3தா3தி3ப்4ய: (2-1-15), ஸ்ரீபாஷ்யத்திலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள இது போன்ற வேதச்சொற்றொடர்களாலும்,

‘ஸ்ரஷ்டா ஸ்ருஜதிசாத்மாநம் விஷ்ணு: பால்யஞ்ச பாதிசI உபஸம்ஹ்ரியதேசாந்தே ஸம் ஹர்தா ச ஸ்வயம் ப்ரபு4: II ‘‘ (ஸ்ரீவிஷ்ணுபுராணம். 1-2-67) ‘விஷ்ணுவானவர், ஸூக்ஷ்மசிதசித் விசிஷ்டமான தன்னை ஸ்ருஷ்டி காலத்திலேல, ஸ்தூல சிதசித் விசிஷ்டமாக ஸ்ருஷ்டிக்கிறான். ரக்ஷிக்கப்படுகிற வஸ்துவும், ரக்ஷிக்கிற வனும் என்றபடி. பிரளய காலத்தில் ஸம்ஹரிக்கப் படுகிறவனும், ஸம்ஹரிக்கிறவனும், நியந்தாவான தானே என்றபடி’. காப்பாற்றப்படுகிற பொருளான தன்னைக் காப்பாற்றுகிறான்; பிரளய காலத்தில் தான் அழிக்கப் படுகின்றான்; தான் அழிக்கிறான்’ என்றும், ‘அவனே படைக்கப்படுகின்றான்; அவனே படைக்கின்றான்; அவனே பாதுகாக்கின்றான்; அழிக்கின்றான்; அவனே பாதுகாக்கப் படுகின்றான்; பிரமன், சிவன் முதலிய நிலைகளோடுகூடி எல்லாப்பொருள்களையும் சரீரமாகவுடையவனாய், மேம் பட்டவனாய், சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே,’ என்றும், ‘‘

ஸஏவ ஸ்ருஜ்யஸ்ஸச ஸர்க3கர்தா ஸ ஏவபாதி அத்திச பால்யேதேச I ப்ரஹ்மாதி3 அவஸ்தா2பி4ரஶேஷ மூர்த்தி விஷ்ணோர்வரிஷ்டோ2வ்ரதோ3 வரேண்ய:II (ஸ்ரீவிஷ்ணுபுராணம்.1-2-67)

(அவரே ஸ்ருஷ்டிக்கப்படுகிறவன், அவரே ஸ்ருஷ்டியை செய்கிறவர், அவரே காப்பாற்றுகிறவர், ஸம்ஹரிக்கிறவரும் அவரே, இவ்விதமுள்ள விஷ்ணுவானவர், ப்ரஹ்மன் ருத்ரன் போன்றவர்களுடைய பேதத்தால் ஸர்வசரீரகன், மேற்பட்டவர், மிகச்சிறந்த வரம் அளிப்பவர். என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கியிருக்கிற மனத்தினை ஆறாவதாக வுடைய இந்திரியங்களை இவ்வுலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது’, என்றும்,

‘உயிர் பரம் பொருளின் கூறேயாகும்; அது பரம்பொருளின் வேறாகவும் ஒன்றாகவும் ச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது’, என்றும் சொல்லுகிறபடியே, சித், அசித்துக்களோடு கூடின தானே படைத்தலையும் அழித்தலையும் செய்கிறான்.

‘‘ஜீவன் ப்ரஹ்மத்தின் அம்ஶமாயி ருப்பவனே; சில ஶ்ருதிகளில் ஜீவன் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டவன் என்று உபதேஶிக்கையாலும், சில ஶ்ருதிகளில் வேறுவிதமாகவும் (அதாவது \& ப்ரஹ்மத்தோடு ஒன்றுபட்டவனாகவும் உபதேஶிக்கையாலும்). (ப்ரஹ்மம்) தாஶர், கிதவர் (தாஸா: தீவரா: மீன்பிடிக்கும் செம்படவர்கள். கிதவா: த்யூதக்ருத: -\& சொக்கட்டான் ஆடுபவர்கள் (வஞ்சகர்கள்). முதலான தாழ்ந்தவராக இருப்பதாகவும், சில பிரிவினர் ஓ-துகின்றனர்.’’ என்று, அம்ஶாதிகரணம் 2-3-7, ‘‘அம்ஶோ நாநாவ்யபதே3ஶாத் அந்யதா2 சாபி தா3ஶகிதவாதி3 த்வம் அதீ4யத ஏகே’’ - 2-3-42, என்கிற ஸூத்திரத்தால் தெளிவுபடுத்தப்படுகிறது. இது போன்ற வேதம் மற்றும் ஸ்ரீவிஷ்ணுபுராண சொற்றொடர்களின் பொருளை உள்ளடக்கியதாய் அமைந்துள்ளது ஆழ்வாரின் திருவாக்கு.

ஆகையாலே, ‘பூமி தண்ணீரிலே மறைகிறது; தண்ணீர் நெருப்பில் மறைகிறது; நெருப்புக் காற்றில் மறைகிறது; காற்று ஆகாசத்தில் மறைகிறது; ஆகாசம் இந்திரியங்களில் மறைகிறது; இந்திரியம் தன்மாத்திரையில் சேர்கிறது; தன்மாத்திரைகள் அகங்காரத்தில் சேர்கின்றன; அகங்காரம் மஹத்தத்துவத்தில் மறைகிறது; மகத்து அவ்யக்தத்தில் மறைகிறது; அவ்யக்தம் அக்ஷரத்தில் மறைகிறது; அக்ஷரம் தமஸில் மறைகிறது; தமஸு பரம்பொருளில் மறைகிறது’, என்கிறபடியே,

‘‘ப்ருதி2வ்யப்ஸு ப்ரலீயதே ஆபஸ்தேஜஸி லீயந்தே தேஜோ வாயௌ லீயதே வாயுராகாஶே லீயதே ஆகாஶமிந்த்3ரியேஷு இந்த்3ரியாணி தந்மாத்ரேஷு தந்மாத்ராணி பூ4தாதௌ லீயந்தே பூ4தாதி3ர்மஹதி லீயந்த மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தமக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தம: பரே தே3வ ஏகீ ப4வதி’’ (ஶுபாலோ-2) - ‘மண் நீரில் ஒன்றுகிறது; நீரானது தேஜஸில் (ஒளியில்) ஒன்றுகிறது; தேஜஸ் வாயுவில் (காற்றில்) ஒன்றுகிறது; வாயு ஆகாசத்தில் ஒன்றுகிறது; ஆகாசம் புலன்களில் ஒன்றுகிறது, புலன்கள் நுண்ணிய (ஸூக்ஷ்ம) மூலப்பொருள்களில் ஒன்றுகிறது, ஸூக்ஷ்ம மூலப் பொருள்கள் ஸ்தூல மூலப்பொருள்களில் ஒன்றுகின்றன; அவை மஹத்தில் ஒன்றுகின்றன; மஹத் அவ்யக்தத்தில் ஒன்றுகிறது; அவ்யக்தம் அக்ஷரத்தில் ஒன்றுகிறது; அக்ஷரம் தமஸ்ஸில் ஒன்றுகிறது; தமஸ் என்பது மிக உயர்ந்த இறைவனோடு ஒன்றாகிறது’. ப்ரக்ருத்யதி4கரணம் 1-4-7, ‘பரிணாமாத்’ 1-4-27, என்கிற ஸூத்ரபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் இந்த வேதச்சொற்றொடரை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

தன்னிடத்தில் மறைந்திருக்கிற இதனை, ‘பல வாகிறேன்’’’ப3ஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி’’ (சாந். 6-2-3) - ‘நான் பலவாகக் கடவேன்; நான் படைக்கக் கடவேன்’, என்று நினைந்து விளங்கச் செய்து தமஸு என்ற சொல்லுக்குரிய பொருளாக்கி, அதனை அக்ஷரமாக்கி, அக்ஷரத்திலிருந்து அவ்யக்தத்தை உண்டாக்கி, அவ்யக்தத்தி லிருந்து மஹானை உண்டாக்கி, மஹானிலிருந்து அஹங்காரத்தை உண்டாக்கி, அகங்காரத்தினின்றும் பூத தன் மாத்திரைகளை உண்டாக்கி, அவற்றைப் பூதங்களாக முற்றுவித்து, அண்டத்தைப் படைத்தலை முடிவாக உடைய உலகத்தினைப் படைத்தல் செய்கிற திவ்விய ஸங்கல்பத்தினையுடையனாய்ப் பகவான் என்ற பெயரால் சொல்லப்படுகின்றவனாய் பரப்ரஹ்மம், பரமாத்மா முதலிய பெயர்களாலே வேதாந்தங்களிற் சொல்லப்பட்ட ஸ்வரூபத்தால் நிலைபேறுடையனாய் இருந்த பரமபுருஷன் என்றவாறு.

அன்றிக்கே ‘அப்பரமபுருஷன் தன்னந்தனியனாய் இருந்த காலத்தில் மகிழ்ச்சி கொண்டான் இலன்,’’’ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நேஶாநோ நேமே த்3யாவா ப்ருதி2வீ ந நக்ஷத்ராணி நாபோ நாக்3நிர்ந ஸோமோ ந ஸூர்ய: ஸ ஏகாகீ ந ரமேத தஸ்ய த்4யாநாந்தஸ்த2ஸ்யைகா கந்யா த3ஶேந்த்3ரி யாணி’’ (மஹோ. 1-1) - ‘நாராயணன் ஒருவனே (ப்ரளய காலத்தில்) இருந்தான்; பிரமன், சிவன் முதலான சேதந அசேதனங்கள் எதுவுமில்லை; அவன் ஒருவனாயிருந்து இன்புறவில்லை; அவன் ஸங்கல்பித்த பிறகு இந்திரியங்கள் முதலான அனைத்தும் உண்டாயின’. ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4 கரணம் 4-4-6 ‘‘ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத் வாச்ச’’ 4-4-17, என்ற ஸூத்திரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

‘எல்லாப் பொருள்களும் தத்தமது பெயரையும் உருவத்தையும் இழந்து பரம்பொருளினுடைய பெயரும் உருவமுமேயாய் அறிவில் பொருளாய்க் கிடந்தாற்போலே, ஸர்வேச்வரனான தானும் இவற்றைப் பிரித்து அசித்தைப் போன்றவனான தன்மையைச் சொல்லுகிறது என்னுதல்.

‘நான்முகனே’ (10-10-1) - ‘‘யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ 5-7-7) - எவனுக்கு பூமி சரீரமாகிறதோ, ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ (ப்ருஹ. 5-7-26) - எவனுக்கு ஆத்மா சரீரமாயிருக்கிறதோ, உப4யலிங்கா3தி4கரணம் 3-2-5 , ‘அரூபவதே3வ ஹி தத் ப்ரதா4நத்வாத்’ 3-2-14, என்ற ஸூத்திரத்தில் ஆழ்வாருடைய ‘நான்முகனே’ என்ற சொற்றொடர்க்கு ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறு மேற்கோள் காட்டியுள்ளார்

‘முக்கண் அப்பா’ - ‘யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே4 ப4வத ஓதந:I ம்ருத்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: II ‘‘ (கடோ2பநிஷத் 2-25) - ‘எவனுக்கு ப்ராஹ்மணரும் க்ஷத்ரியருமாகிற இரு வர்க்கமும் உணவாகின்றனரோ, யமன் (ம்ருத்யு: என்ற சொல் சிவனையும் குறிக்கும்) எவனுக்கு ஊறுகாயாகிறானோ என்று கடவல்லியில் உணவையும் ஊறுகாயையும் உண்பவனாக ஒருவன் ஓதப்படுகிறான். கர்மபல அநுபவமுடைய ஜீவனே உணவு முதலானவற்றை உண்ண முடியும். ஆகையால் இங்கு ஓதப்படுபவன் ஜீவனேயாக வேண்டும்’. அத்த்ரதி4கரணம் 1-2-2 , ‘அத்தா சராசரக்3ரஹணாத்’ 1-2-9, என்பது ஸ்ரீபாஷ்யத்தில் காணப்படும் விளக்கம்.

‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ - ‘‘ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்3ரஹ்மா நேஶாநோ நேமே த்3யாவா ப்ருதி2வீ ந நக்ஷத்ராணி நாபோ நாக்3நிர்ந ஸோமோ ந ஸூர்ய: ஸ ஏகாகீ ந ரமேத தஸ்ய த்4யாநாந்தஸ்த2ஸ்யைகா கந்யா த3ஶேந்த்3ரி யாணி.......... ஶூலபாணி: புருஷோ ஜாயதே’’ (மஹோ. 1-1) - ‘நாராயணன் ஒருவனே (ப்ரளய காலத்தில்) இருந்தான்; பிரமன், சிவன் முதலான சேதந அசேதனங்கள் எதுவுமில்லை; இந்த விண்ணும் மண்ணும் இல்லை; நக்ஷத்திரங்கள் இல்லை; நீர் இல்லை; நெருப்பு இல்லை; சந்திரன் இல்லை; சூரியன் இல்லை; அவனே தனியாய் வருந்தினான்; தன்னுடைய தியானத்தில் இருக்கிறவனுக்கு ஒரு மனம் பத்து இந்திரியங்கள் என்று தொடங்கி, ‘பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றனை ஸங்கல்பிக்க நினைத்துத் தியானம் செய்கின்ற அவனுடைய நெற்றி யிலிருந்து வியர்வை கீழே விழுந்து , அது தான் இந்தத் தண்ணீர்; அது பொன்மயமான அண்டம் ஆயிற்று, அந்த அண்டத்தில் நான்கு முகமுடைய ப்ரஹ்மன் உண்டானான்; பின்பு மீண்டும் அந்த நாராயணன் வேறு ஒன்றனை ஸங்கல்பிக்க நினைத்துத் தியானம் செய்தான்.

அங்ஙனம் தியானம் செய்கிறவனுடைய நெற்றியிலிருந்து வியர்வை கீழே விழுந்தது; அவ்வியர்வை யினின்றும் குமிழி உண்டாயிற்று; அந்தக் குமிழியினின்றும் முக்கண்களை யுடையனாய்ச் சூலத்தைக் கையிலே தரித்தவனாய்ப் புருஷன் ஒருவன் உண்டானான் என்று மஹோபனிஷத் வாக்கியம் விவரிக்கிறது, இதனை ஸ்ரீபாஷ்யகாரர் ஜக3த்3வ்யாபாரவர்ஜாதி4கரணம் 4-4-6, ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ப்ரகரணா த3ஸந்நிஹிதத்வாச்ச - 4-4-17, என்ற ஸூத்திரத்தில் விவரித்துள்ளார்.

‘‘உம்பர் அந்ததுவே’’ (10-10-3) - அவர்களுக்கும் மேலான நித்யஸூரிகட்கும் அப்படிபட்ட அடையத்தக்க பொருளாக இருப்பவனே! ப்ராஹ்ணப் பிரஸித்தியைச் சொல்லுகிறார், ‘அது’ என்று. நித்யஸூர்களோடு ப்ரஹ்மன் முதலாயினார்களோடு வேறுபாடு அற நிர்வாஹகனாய் இருக்கிற நீ வந்து என்னைக் கூவிக்கொள்ளாய்.

இப்பாட்டால் முன்னும் பின்னும் சொல்லுகிற ஸாமாநாதிகரண்யத்துக்குக் காரணம், காரிய காரண பாவம் என்னுமத்தனை அருளிச்செய்தாராயிற்று. ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’’ (சாந். 3-14-1) - ‘இவ்வுல கனைத்தும் பரமாத்மாவை ஆத்மாவாகக் கொண்டது; இது அனைத்தும் ப்ரஹ்மமே’ என்பது ச்ருதி வாக்யம்.

246. ‘‘உம்பர் அந் தண் பாழே ஓ’’ (10-10-4) - காரணநிலையில் காரியத்துக்குத் தகுதியாக நின்று தன் காரியத்தாலே ஆத்மாக்களுக்குப் போகத்தையும் மோக்ஷத் தையும் விளைக்கவற்று என்னுமிடத்தைச் சொல்லுகிறது. வெண்மை என்று கொண்டு பிரித்துக் காட்டுஞ் சொல் லாலே தருமத்தைப் பிரியச் சொல்லுமாறு போலே, பிரியச் சொல்லப் போகாது இறைவனுக்குச் சரீரமானவற்றை. ஆதலின், ‘பாழேயோ’ என்கிறார். ‘உம்பர் அந்தண் பாழேயோ’ என்கிற இதனால், ஆத்மாக்களுக்குச் சரீரமாய் அவ்வழியாலே ஈச்வரனுக்குச் சரீரமாக அன்றிக்கே, ‘‘யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ 5-7-7) - எவனுக்கு பூமி சரீரமாகிறதோ, ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ (ப்ருஹ. 5-7-26) - எவனுக்கு ஆத்மா சரீரமாயிருக்கிறதோ, உப4யலிங்கா3தி4 கரணம் 3-2-5 , ‘அரூபவதே3வ ஹி தத் ப்ரதா4நத்வாத்’ 3-2-14, என்ற ஸூத்திரத்தில் ஆழ்வாருடைய ‘உம்பர் அந்தண் பாழேயோ’ என்ற சொற்றொடர்க்கு ஸ்ரீபாஷ்யகாரர் இவ்வாறு மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆத்மாக்களுக்கு வேறுபட்டதான அறிவில் பொருளுக்கும் அவனை ஒழிய நிர்வாஹகர் இலர் என்கையைத் தெரிவித்தபடி. ‘பாழேயோ’ என்கிற இதனால், ஶுத்தபேதம் கொள்ளுகிற மீமாம்ஸகரையும் (ந்யாய வைசேஷிகர்), ஸ்வரூபத்தால் தாதாத்மியம் கொள்ளுகிற மாயாவாதிகளையும் (ஜீவனோடே ப்ரஹ்மத்துக்கு ஐக்கியம் சொல்லுகை ஒழிய, மூல ப்ரக்ருதியோடே ஐக்கியம் கூறமாட்டான்) அழிக்கிறது.

‘‘உனக்கு ஏற்கும் கோலம்’’ (10-10-6) - இவனைப் போன்று வார்த்தையாலே கசக்குதற்கும் பொறாத மிருதுத் தன்மையை உடையவன். இப்படிபட்ட உனக்கு ஒத்த அழகினை யுடையளாய். ‘மலர்ப்பாவைக்கு அன்பா’ - மலரில் மணத்தை வடித்து வகுத்தாற் போலே இருக்கிற பிராட்டிக்கு அன்பனே! ‘உனக்கு ஏற்கும் கோலம்’ என்று அவ்வழகினை இங்கே ஏறிவிடுகிறார்.

நியாயாதிதேசம் (ஸ்வரூபத்தால் ஏறிடுகிறது அன்று; அவனைப் போன்று இவளும் அழகுடையவள் என்றபடி, ஸ்வரூப அதிதேசம் என்றும், நியாய அதிதேசம் என்றும் இரண்டு வகைப்படும் ஏறிடுதல். ஸ்வரூப அதிதேசமாவது, முற்றுமை கொள்ளுதல். நியாய அதிதேசமாவது, அதனைப் போன்று இதுவும் சிறப்பினை யுடைத்தாய் இருக்கும் என்றல். அதிதேசம்- ஏறிடுதல்) பண்ணுகிறார். ‘கோலம் மலர்பாவைக்கு அன்பா என் அன்பேயோ’ - அவள் பக்கல் அன்புடையவன் என்று இரா நின்றது; தம் பக்கல் அன்பு என்றும் அது உடையவன் என்றும் தெரிக்கப் போகிறது இல்லை; ஞானத்தையுடையவனை ஞானம் என்று சொல்லால் கூறுவது போன்று, ஞானத்தை முக்கிய குணமாக உடையவன் ஆகையால் ஜீவன் ஞானமென்று கூறப்படுகிறான், இறைவனைப் போன்று.

ஜ்ஞாதிகரணம் 2-3-4, ‘யாவதா3த்ம பா4வித்வாச்ச ந தோ3ஷ: தத்3த3ர்ஶநாத்’ - 2-3-30, - ஆத்மா இருக்கும் வரையிலும் (நித்யமாக அறிவும்) இருப்பதாலும்,(ஆத்மாவை ஜ்ஞாநமென்பதில்) குற்றமில்லை. (நித்ய தர்மமான கோத்வாதிகளையிட்டு பசு முதலானவை கோ முதலிய சொற்களால்) வழங்கப்படுவதைக் காண்கையால்.

And because also it (i.e., the quality of intelligence) exists as long as the individual self exists, it is nothing wrong (to denote it by the word vijnana), as such (instances) are seen (in the world).

ஆத்மா நிலைபெற்று இருக்கும் வரையிலும், விஜ்ஞானம் அதன் பண்பாக இருப்பதால், அவ்வாறு குறிப்பிடுவது (ஆத்மாவை விஜ்ஞானம் என்று) தவறல்ல. இதைப்போலவே, ‘கொம்பு உடைந்திருப்பது போன்றவை’, ‘காளைமாடு’ என்னும் இயல்பு நிலைத்திருக்கும் வரை, காளைமாடாக இருக்கும் பண்பைக் குறிப்பிடும் சொல்லாக, காளைமாட்டைக் குறிப்பிடுவது காணப்படுகிறது. அதாவது அது, அதன் பண்பை விவரிக்கும் இயல்பைக் கொண்டிருப் பதால். ‘ச’ (மற்றும்) ஆத்மா என்பவை உபயோகப்படுத்தப் படுவது கூட, ஜ்ஞானத்தைப்போல, தானே ஒளிர்வதாக இருப்பதால், ஆத்மாவை ‘ஜ்ஞாநம்’ என்று குறிப்பிடுவதில் தவறேதுமில்லை. இதை ஸூத்ரகாரர் கூடுதலாகக் சேர்த்துச் சொல்கிறார்.

[Explanatory Note: The point here is that it is proper to denote anything by a word denoting an attribute which is denotative of the essential nature of that thing.]. என்று ஸ்ரீபாஷ்யகாரர் திருவுள்ளம் பற்றியுள்ளார்.

‘முதல்தனி வித்தேயோ’ - ஒன்பதாம் பாட்டு. ‘அவை யாவும் அவனது சரீரம் என்றும்,’ ‘எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ’ என்றும் ‘அது முழுதும் அரியினுடைய சரீரம்’ என்றும் சொல்லுகிறபடியே, எங்கும் வந்து முகம் காட்டலாம் படி உலகத்தை உருவகமாகக் கொண்டு இருக்கும் இருப்பைக் காட்டித் தந்தோமன்றோ? என்ன, ‘‘‘யஸ்ய ஆத்மா ரீரம்’’ (ஸுபா.-7) - ‘எவனுக்கு ஆத்மா உடலாகிறதோ’, ‘யஸ்ய ப்ருதி2வீரீரம்’’ (ஸுபா.-7) - ‘எவனுக்கு அண்டம் உடலாகிறதோ’, யஸ்யாஹங்காரஶ்ஶரீரம்’’ (ஸுபா.-7) - ‘எவனுக்கு அஹங்காரம் உடலாகிறதோ’, ‘‘யஸ்ய பு3த்3தி4ஶ் ஶரீரம்’’(ஸுபா.-7) - ‘எவனுக்கு புத்தி உடலாகிறதோ’, ‘‘யஸ்யாவ்யக்தம் ரீரம்’’ (ஸுபா.-7) - ‘எவனுக்கு அவ்யக்தம் உடலாகிறதோ’. தஜோதி4கரணம் 2-3-2, ‘தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த் ஸ:’ 2-3-14 என்ற ஸூத்திரத்தின் விளக்க உரையில் ஸ்ரீபாஷ்யகாரர் குறிப்பிட்டுள்ளார்.

247.

அவாவறச்சூழ் அரியைஅயனைஅரனைஅலற்றி*
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன*
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும் * முடிந்த
அவாவிலந்தாதிஇப்பத்துஅறிந்தார் பிறந்தார்உயர்ந்தே. (திருவாய்மொழி. 10-10-11)

முடிவில் - பிரபந்தம் முடிகிறது ஆகையாலே, இப்பிரபந்தத்திலே சொல்லப்பட்டக் கருத்தினைச் சுருங்க அருளிச் செய்து கொண்டு, ‘‘அவாவறச்சூழ் அரியை’’ என்றது முதல், ‘‘இப்பத்தறிந்தார் பிறந்தார் உயர்ந்தே’’ என்பது முடிய உண்டான அர்த்தங்களையும் சேரப்பிடித்து அருளிச்செய்து, ‘‘இது கற்றார்க்கு பலம் சொல்லுகிறது’ என்று இப்பாட்டுக்கு இயைபு அருளிச்செய்கிறார், ‘எல்லாக் குற்றங்களுக்கும்’ என்று தொடங்கி.

எல்லாக் குற்றங்களுக்கும் எதிர்த்தட்டு ஆனவனாய், மங்களங்கட்கெல்லாம் நிலைக்களனாய், ஞான ஆனந்தங் களையே வடிவாக உடையனாய், உயர்வு அற உயர் நலம் உடையனாய், வனப்பு முதலானவற்றோடு கூடிய நித்தியமான மங்களம் பொருந்திய விக்ரஹத்தை உடையனாய், அளவு இல்லாத திவ்ய ஆபரணங்களால் நிறைந்தவனாய், எல்லா ஆயுதங்களையுமுடையனாய், திருமகள், பூமகள், ஆய்மகள் இவர்கட்கு நாயகனாய், அஞ்ச வேண்டாத இடங்களிலும் அஞ்சக்கூடியவர்களான ஆதிசேஷன், பெரிய திருவடி முதலான நித்யஸூரிகளாலே எப்பொழுதும் திருவடித் தாமரைகளையுடையனாய், ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளி யிருப்பவனாய், ஸர்வேச்வரனாய், தன்னால் ஏவப்படுமவர் களான ப்ரஹ்மன், சிவன் முதலானவர்கட்கும் அந்தராத்மாவாய்,

தன்னைக் காண வேண்டுமென்று விடாய் கொண்டு அடைகின்ற அடியார்களுடைய விடாய் தீரக் கலக்கும் தன்மையனான எம்பெருமானைக் காண வேண்டும் என்று கைகூப்பிட்டு, அவனைப் பெற்றுத் துக்கம் அற்றவராய்; எல்லாத் தடைகளும் நீங்கினவரான ஆழ்வாருடைய பக்தியினுடைய தூண்டுதல் காரணமாகப் பிறந்தது ஆயிரம் திருவாய்மொழியும்; அவற்றில் வைத்துக்கொண்டு.

மேலே கூறியவை போல அன்றிக்கே பெற்று அல்லது தரிக்க ஒண்ணாதபடியான பரம பக்தியாலே பிறந்த அந்தாதியான இத்திருவாய்மொழி வல்லார், ஸம்சாரத்தில் பிறந்து வைத்தே அயர்வு அறும் அமரர்களோடு ஒப்பர்’ என்கிறார்.

(’மனனக மலமற’ (1-1-2) என்கிற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘எல்லா குற்றங்கட்கும்’ என்று தொடங்கி யும், ‘‘துயரறு சுடரடி’’ (1-1-1) என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘வனப்பு முதலானவற்றோடும்’ என்று தொடங்கியும், ‘‘பல பலவே ஆபரணம்’’ (2-5-6) என்பது போன்றவை களைத் திருவுள்ளம் பற்றி, ‘அளவு இல்லாத’ என்று தொடங்கியும், ‘‘ஒண்சங்கதை வாள் ஆழியான்’’ (8-8-1) என்பது போன்றவைகளை திருவுள்ளம் பற்றி, ‘எல்லா ஆயுதங்களையுமுடையனாய், என்று தொடங்கியும், ‘‘தேவிமாராவார்’’ (8-1-1), என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றி ‘திருமகள்’ என்று தொடங்கியும், ‘‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’’ (1-1-1) என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றி ‘அஞ்சவேண்டாத’ என்று தொடங்கியும். ‘‘அயனை அரனை’’ (10-10-11), என்றதனைத் திருவுள்ளம் பற்றித் ‘தன்னால் ஏவப் படுமவர்களான’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.)

‘முடிந்த அவாவில் அந்தாதி’ - தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியாலே பிறந்தாயிற்று இத்திருவாய்மொழி. இந்த அவாவிற்கு உதவிற்றிலனாகில் ஈச்வரனுக்கும் சைதந்யம் இன்றிக்கே ஒழியும். ‘‘சூழ் விசும்பு அணி முகில்’ (10-9 பதிகம்) என்ற திருவாய்மொழி பரஜ்ஞானத்தாலே சென்றது. இத்திருவாய்மொழி (10-10) பரமபக்தியாலே. பகவானுடைய திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாகச் சொல்லுமவர்களுக்கு சரீரத்தின் முடிவில் இந்த ப்ரபத்தி முதலானவைகள் உண்டாம்; இவர் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே எழுந்தருளியிருக்கும் போதே உண்டாயின.

தர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகிற பக்தியினுடைய இடத்திலே ஸர்வேச்வரனுடைய திருவருள் நிற்க, அது அடியாகப் பிறந்த பரஜ்ஞான பரமபக்திகள் அன்றோ இவரது? ‘‘அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே’’ (10-10-11) - இதனை அறிந்தார் இவ்வுலகிலே பிறந்து வைத்தே நித்யஸூரிகளோடு ஒப்பர். ‘‘பிறந்தே உயர்ந்தார்’’ - ஸர்வேச்வரனுடைய அவதாரத்தைப் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும்.

பத்தாம் பத்து முற்றிற்று.

ப்ரஹ்மஸூத்ர விரிவுரையில் காணப்படும் பொருள் விளக்கங்களுக்கு, ஈட்டில் குறிப்பிடப்படாத சில பாசுரங்களோடான கருத்தொற்றுமை.

முதல் அத்யாயம் - முதல் பாதம் - ஆறாம் அதிகரணம் (1-1-6)

ஆநந்தமயாதிகரணம் 1-1-6

ஸி.ஸூ:- ஆநந்த3மயோ(அ)ப்4யாஸாத் 1-1-13

திருவாய்மொழிப் பாசுரம்:

உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்* உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்* உளனெனஇலனென இவைகுணமுடைமைடயில் * உளனிருதகமையொடு ஒழிவிலன்பரந்தே. (திருவாய்.1-1-9)

முதல் அத்யாயம் - முதல் பாதம் - எட்டாம் அதிகரணம் (1-1-8)

ஆகாஶாதி4கரணம் 1-1-8

ஸி.ஸூ:- ஆகாஶஸ்தல்லிங்கா3த் : 1-1-23

திருவாய்மொழிப் பாசுரங்கள்:

1. கண்ணுள்ளேநிற்கும் காதன்மையால்தொழில் *
எண்ணிலும்வரும் என்இனிவேண்டுவம்?*
மண்ணும்நீரும் எரியும்நல்வாயுவும் *
விண்ணுமாய்விரியும் எம்பிரானையே. 1-10-2

  1. புகழும்நல்ஒருவனென்கோ? பொருவில்சீர்ப்பூமியென்கோ?*

திகழும்தண்பரவையென்கோ? தீயென்கோ? வாயுவென்கோ*
நிகழும்ஆகாசமென்கோ? நீள்சுடரிண்டுமென்கோ?*
இகழ்வில்இவ்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே. 3-4-1

3. செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழும்உண்டஅவன்கண்டீர்*
வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும்முற்றுமாய்*
செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான் * பின்னும்
மொய்கொள்சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே. 3-6-1

4. திரியும்காற்றோடுஅகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல் *
எரியும்தீயோடுஇருசுடர்தெய்வம் மற்றும்மற்றும்முற்றுமாய்*
கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன்விண்ணோரிறை*
சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல்தோற்றமே. 3-6-5

5. ஏகமூர்த்திஇருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகி * ஐந்துபூதமாய் இரண்டுசுடராய் அருவாகி *
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! * உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே. 4-3-3

  1. காண்கின்றநிலமெல்லாம்யாயேயென்னும்

காண்கின்றவிசும்பெல்லாம்யாயேயென்னும் *
காண்கின்றவெந்தீயெல்லாம்யானேயென்னும்
காண்கின்றஇக்காற்றெல்லாம்யானேயென்னும்*
காண்கின்றகடலெல்லாம்யானேயென்னும்
காண்கின்றகடல்வண்ணனேறக்கொலோ?*
காண்கின்றஉலகத்தீர்க்குஎன்சொல்லுகேன்?
காண்கின்றஎன்காரிகைசெய்கின்றவே. 5-6-3

7. நீராய்நிலனாய்த் தீயாய்க்காலாய்நெடுவானாய் *
சீரார்சுடர்களிரண்டாய்ச் சிவனாய்அயனானாய்!*
கூராராழிவெண்சங்கேந்திக் கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும்விண்ணும்மகிழவே. 6-9-1

  1. மாயா! வாமனனே! மதுசூதா! நீயருளாய் *

தீயாய்நீராய்நிலனாய் விசும்பாய்க்காலாய் *
தாயாய்த்தந்தையாய்மக்களாய் மற்றுமாய்முற்றுமாய்*
நீயாய்நீநின்றவாறு இவையென்னநியாயங்களே! 7-8-1

9. பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா! நீ இன்னே*
சிறந்தகால்தீநீர்வான் மண்பிறவுமாயபெருமானே!*
கறந்தபாலுள்நெய்யேபோல் இவற்றுளெங்கும் கண்டுகொள்*
இறந்துநின்றபெருமாயா! உன்னைஎங்கேகாண்கேனே? 8-5-10
10.சார்வேதநெறிக்குத் தாமோதரன்தாள்கள் *
கார்மேகவண்ணன் கமலநயனத்தன் *
நீர்வானம்மண்எரிகாலாய் நின்றநேமியான்*
பேர்வானவர்கள்பிதற்றும் பெருமையனே. 10-4-1

முதல் அத்யாயம் - முதல் பாதம் - பத்தாம் அதிகரணம் (1-1-10)

ஜ்யோதிரதிகரணம் 1-1-10

ஸி.ஸூ:- ச2ந்தோ3(அ)பி4தா4நாந்நேதி
சேந்ந ததா2- சேதோர்ப்பணநிக3மாத் ததா2 ஹி த3ர்ஶநம் 1-1-26

திருவாய்மொழிப் பாசுரம்:

பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்து பின் * மற்றோர்
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற*
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த * எம்
பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே.
(திருவாய்மொழி 3-1-2)

முதல் அத்யாயம் - முதல் பாதம் - பதினொன்றாம் அதிகரணம் (1-1-11)

இந்த்3ரப்ராணாதி4கரணம் 1-1-11

ஶாஸ்த்ரத்3ருஷ்ட்யா தூபதே3ஶோ வாமதே3வவத் 1-1-31

திருவாய்மொழிப் பாசுரங்கள்:

கடல்ஞாலம்செய்தேனும்யானேயென்னும்
கடல்ஞாலமாவேனும்யானேயென்னும்*
கடல்ஞாலம்கொண்டேனும்யானேயென்னும்
கடல்ஞாலம்கீண்டேனும்யானேயென்னும்*
கடல்ஞாலம்உண்டேனும்யானேயென்னும்
கடல்ஞாலத்தீசன்வந்தேறக்கொலோ?*
கடல்ஞாலத்தீர்க்கு இவையென்சொல்லுகேன்?
கடல்ஞாலத்துஎன்மகள்கற்கின்றவே.
(திருவாய்மொழி 5-6-1)

‘‘உரைக்கின்றமுக்கட்பிரான்யானேயென்னும்
உரைக்கின்றதிசைமுகன்யானேயென்னும்*
உரைக்கின்றஅமரரும்யானேயென்னும்
உரைக்கின்றஅமரர்கோன்யானேயென்னும்*
உரைக்கின்றமுனிவரும்யானேயென்னும்
உரைக்கின்றமுகில்வண்ணனேறக்கொலோ?*
உரைக்கின்றஉலகத்தீர்க்குஎன்சொல்லுகேன்?
உரைக்கின்றஎன்கோமளவொண்கொடிக்கே.

(திருவாய்மொழி 5-6-8)

முதல் அத்யாயம் - இரண்டாம் பாதம் - முதல் அதிகரணம் (1-2-1)

ஸர்வத்ர ப்ரஸித்3த்4யதி4கரணம் 1-2-1

அர்ப்ப4கௌகஸ்த்வாத் தத்3வ்யபதே3ஶாச்ச நேதி சேந்ந நிசாய்யத்வாதே3வம் வ்யோமவச்ச 1-2-7

திருவாய்மொழிப் பாசுரம்:

தளர்வின்றிறேஎன்றும்எங்கும்பரந்த தனிமுதல்ஞானமொன்றாய்*
அளவுடைஐம்புலன்கள் அறியாவகையால் அருவாகிநிற்கும்*
வளரொளியீசனைமூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரை*
கிளரொளிமாயனைக் கண்ணனைத்தாள்பற்றி யான்என்றும்கேடிலனே.
(திருவாய்மொழி 3-10-10)

முதல் அத்யாயம் - இரண்டாம் பாதம் - மூன்றாம் அதிகரணம் (1-2-3)

அந்தராதிகரணம் 1-2-3

ஸ்தா2நாதி3வ்யபதே3ஶாச்ச 1-2-14

திருவாய்மொழிப் பாசுரங்கள்:

கமலக்கண்ணன்என்கண்ணினுள்ளான் காண்பன் அவன்கண்களாலே*
அமலங்களாகவிழிக்கும் ஐம்புலனும் அவன்மூர்த்தி *
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி *
அமலத்தெய்வத்தோடு உலகமாக்கி என்நெற்றியுளானே.
(திருவாய்மொழி 1-9-9)

கண்ணுள்ளேநிற்கும் காதன்மையால் தொழில்*
எண்ணிலும்வரும் என்இனிவேண்டுவம்? *
மண்ணும்நீரும் எரியும்நல்லவாயும்*
விண்ணுமாய்விரியும் எம்பிரானையே. (திருவாய்.1-10-2)

கண்ணுள்நின்றுஅகலான் கருத்தின்கண்பெரியன்*
எண்ணில்நுண்பொருள் ஏழிசையின்சுவைதானே*
வண்ணநன்மணிமாடங்கள்சூழ் திருப்பேரான்*
திண்ணம்என்மனத்துப் புகுந்தான்செறிந்துஇன்றே.
(திருவாய்.10-8-8)

முதல் அத்யாயம் - இரண்டாம் பாதம் - மூன்றாம் அதிகரணம் (1-2-3)

அந்தராதிகரணம் 1-2-3

அத ஏவ ச ஸ ப்3ரஹ்ம 1-2-16

திருவாய்மொழிப் பாசுரங்கள்:

திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை*
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்*
உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும்பரந்துளன்*
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே.
(திருவாய்மொழி 1-1-7)

புகழும்நல்ஒருவனென்கோ? பொருவில்சீர்ப்பூமியென்கோ?*
திகழும்தண்பரவையென்கோ? தீயென்கோ? வாயுவென்கோ?*
நிகழும்ஆகாசமென்கோ? நீள்சுடரிரண்டுமென்கோ?*
இகழ்வில்இவ்வனைத்துமென்கோ? கண்ணனைக்கூவுமாறே. (திருவாய்மொழி 3-4-1)

திரியும்காற்றோடுஅகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல்*
எரியும்தீயோடுஇருசுடர்தெய்வம் மற்றும்மற்றும்முற்றுமாய்*
கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன்விண்ணோரிறை*
சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல்தோற்றமே. (திருவாய்மொழி 3-6-5)

வானத்தும்வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும்மண்ணின்கீழ்த்
தானத்தும் * எண்திசையும் தவிராதுநின்றான்தன்னை *
கூனற்சங்கத்தடக்கையவனைக் குடமாடியை
வானக்கோனை * கவிசொல்லவல்லேற்கு இனிமாறுண்டே? (திருவாய்மொழி 4-5-9)

மாயா! வாமனனே! மதுசூதா! நீயருளாய் *
தீயாய்நீராய்நிலனாய் விசும்பாய்க்காலாய்*
தாயாய்த்தந்தையாய்மக்களாய் மற்றுமாய்முற்றுமாய்*
நீயாய்நீநின்றவாறு இவையென்னநியாயங்களே!
(திருவாய்மொழி 7-8-1)

அறிகிலேன் தன்னுள்அனைத்துலகும்நிற்க*
நெறிமையால்தானும் அவற்றுள்நிற்கும்பிரான்*
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னபப்பன்*
சிறியவென்னாருயிருண்ட திருவருளே.
(திருவாய்மொழி 9-6-4)

சார்வேதவநெறிக்குத் தாமோதரன்தாள்கள்*
கார்மேகவண்ணன் கமலநயத்தன்*
நீர்வானம்மண்எரிகாலாய் நின்றநேமியான்*
பேர்வானவர்கள்பிதற்றும் பெருமையனே.
(திருவாய்மொழி 10-4-1)

முதல் அத்யாயம் - மூன்றாம் பாதம் - மூன்றாம் அதிகரணம் (1-3-3)

அக்ஷராதி4கரணம் 1-3-3

அக்ஷரமம்ப3ராந்தத்4ருதே: 1-3-9

திருவாய்மொழிப் பாசுரம்:

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாய்அவை முழுதுஉண்ட பரபரன்
புரம்ஒரு மூன்றுஎரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன்அயன் எனஉலகு அழித்துஅமைத்து உளனே.
(திருவாய்மொழி 1-1-8)

முதல் அத்யாயம் - மூன்றாம் பாதம் - ஐந்தாம் அதிகரணம் (1-3-5)

த4ஹராதி4கரணம் 1-3-5

த3ஹர உத்தரேப்4ய: 1-3-13

திருவாய்மொழிப் பாசுரம்:

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துஉளன்*
பரந்த அண்டமிதென நிலம்விசும்பொழிவற*
கரந்தசிலிடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்* கரந்தெங்கும்பரந்துஉளன் இவையுண்டகரனே. திருவாய்மொழி 1-1-10

முதல் அத்யாயம் - நான்காம் பாதம் - ஆறாம் அதிகரணம் (1-4-6)

வாக்யாந்வயாதி4கரணம் 1-4-6
வாக்யாந்வயாத் 1-4-19

திருவாய்மொழிப் பாசுரங்கள்:

9-1 அவதாரிகை, கொண்டபெண்டிர்மக்களுற்றார் பதிகம்.

கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும் *
கண்டதோடு பட்டதல்லால் காதல்மற்றுயாதுமில்லை *
எண்திசையும்கீழும்மேலும் முற்றவும்உண்டபிரான் *
தொண்டரோமாய் உய்யலல்லால் இல்லைகண்டீர் துணையே.
(திருவாய்மொழி 9-1-1)

கொள்ளென்றுகிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக*
கொள்ளென்றுதமம்மூடும் இவையென்ன உலகியற்கை?*
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கேவரும்பரிசு*
வள்ளல்செய்து அடியேனை உனதருளால்வாங்காயே.
(திருவாய்மொழி 4-9-4)

ஆயே! இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும்*
நீயேமற்றொருபொருளும் இன்றிநீதின்றமையால்*
நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழிய*
கூயேகொள்அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே.
(திருவாய்மொழி 4-9-7)

காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால்*
ஈட்டிநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டை*
கோட்டையினில்கழித்து என்னைஉன்கொழுஞ்சோதியுயரத்து*
கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?
(திருவாய்மொழி 4-9- 8)

முதல் அத்யாயத்திற்கான பின்இணைப்பு

பரந்ததண்பரவையுள் நீர்தொறும்பரந்துளன்*
பரந்தஅண்டமிதென நிலவிசும்பொழிவற*
கரந்தசிலிடந்தொறும் இடம்திகழ்பொருள்தொறும்*
கரந்தெங்கும்பரந்துளன் இவையுண்டகரனே.
(திருவாய்மொழி 1-1-10)

அமைவுடைஅறநெறிமுழுவதும் உயர்வற வுயர்ந்து*
அமைவுடைமுதல்கெடல் ஒடிவிடை அறநிலம் அதுவாம்*
அமைவுடைஅமரரும் யாவையும் யாவரும்தானாம்*
அமைவுடைநாரணன்மாயையை அறிபவர்யாரே?
(திருவாய்மொழி 1-3-3)

துயக்கறுமதியில்நல்ஞானத்துள் அமரரைத்துயக்கும்*
மயக்குடைமாயைகள் வானிலும்பெரியனவல்லன்*
புயற்கருநிறத்தனன் பெருநிலம்கடந்தநல்லடிப்போது*
அயர்ப்பிலன்அலற்றுவன் தழுவிவன்வணங்குவன்அமர்ந்தே.
(திருவாய்மொழி 1-3-10)

மாயோனிகளாய்நடைகற்ற வானோர்பலரும்முனிவரும்*
நீயோனிகளைப்படையென்று நிறைநான்முகனைப்படைத்தவன்*
சேயோன் எல்லாஅறிவுக்கும் திசைகள்எல்லாம் திருவடியால்
தாயோன்*எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே.
(திருவாய்மொழி 1-5-3)

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில்மூவர்முதலாய*
வானோர்பலரும்முனிவரும் மற்றும்மற்றும்முற்றுமாய்*
தானோர்பெருநீர்தன்னுள்ளேதோற்றி அதனுள்கண்வளரும்*
வானோர்பெருமான்மாமாயன் வைகுந்தன்எம்பெருமானே.
(திருவாய்மொழி 1-5-4)

இவையும்அவையும்உவையும் இவரும்அவரும்உவரும்*
எவையும்யவரும்தன்னுள்ளே ஆகியும்ஆக்கியும்காக்கும்*
அவையுள்தனிமுதல்எம்மான் கண்ணபிரான்என்னமுதம்*
சுவையன்திருவின்மணாளன் என்னுடைச்சூழலுளானே.
(திருவாய்மொழி 1-9-1)

மாயன்என்னெஞ்சினுள்ளான் மற்றும்யவர்க்கும் அஃதே*
காயமும்சீவனும்தானே காலும்எரியும் அவனே*
சேயன்அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லன்*
தூயன்துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
(திருவாய்மொழி 1-9-6)

தேவும் எப்பொருளும்படைக்க*
பூவில் நான்முகனைப்படைத்த*
தேவன் எம்பெருமானுக்கல்லால்*
பூவும் பூசனையும்தகுமே? (திருவாய்மொழி 2-2-4)

தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே*
மிகுந்தேவும் எப்பொருளும்படைக்க*
தகும்கோலத் தாமரைக்கண்ணன் எம்மான்*
மிகுஞ்சோதி மேலறிவார்யவரே? (திருவாய்மொழி 2-2-5)

யாவரும்யாவையும் எல்லாப்பொருளும்*
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற*
பவர்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி*
அவர் எம்மாழியம்பள்ளியாரே. (திருவாய்மொழி 2-2-6)

கள்வா! எம்மையும் ஏழுலகும்* நின்
னுள்ளேதோற்றிய இறைவ! என்று*
வெள்ளேறன்நான்முகன் இந்திரன்வானவர்*
புள்ளூர்தி கழலுபணிந்தேத்துவரே.(திருவாய்மொழி 2-2-10)

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லாஅலியுமல்லன்*
காணலுமாகான் உளனல்லன்இல்லையல்லன்*
பேணுங்கால்பேணும் உருவாகும்அல்லனுமாம்*
கோனைபெரிதுடைத்து எம்பெம்மானைக்கூறுதலே.
(திருவாய்மொழி 2-5-10)

நாரணன்முழுவேழுலகுக்கும்நாதன் வேதமயன்*
காரணம்கிரிசைகருமமிவை முதல்வன்எந்தை*
சீரணங்கமரர்பிறர்பலரும் தொழுதேத்தநின்று*
வாரணத்தைமருப்பொசித்தபிரான் என்மாதவனே.
(திருவாய்மொழி 2-7-2)

ஓவாத்துயர்ப்பிறவி உட்படமற்றெவ்வெவையும்*
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்*
மாவாகிஆமையாய் மீனாகிமானிடமாம்*
தேவாதிதேவபெருமான் என்தீர்த்தனே.
(திருவாய்மொழி 2-8-5)

சீர்மைகொள்வீடு சுவர்க்கம்நரகீறா*
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்*
வேர்முதலாய்வித்தாய்ப் பரந்துதனிநின்ற*
கார்முகில்போல்வண்ணன் என்கண்ணனைநான்கண்டேனே.
(திருவாய்மொழி 2-8-10)

முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே!*
அந்நாள்நீதந்த ஆக்கையின்வழிஉழல்வேன்*
வெந்நாள்நோய்வீய வினைகளை வேரறப்பாய்ந்து*
எந்நாள்யான்உன்னை இனிவந்துகூடுவனே?
(திருவாய்மொழி 3-2-1)

எஞ்ஞான்றுநாம் இருந்திருந்துஇரங்கிநெஞ்சே!*
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி*
எஞ்ஞான்றும்எங்கும் ஒழிவறநிறைந்துநின்ற*
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே.
(திருவாய்மொழி 3-2-7)

யாவையும்யவரும்தானாய் அவரவர்சமயந்தோறும்*
தோய்விலன்புலனைந்துக்கும் சொலப்படான்உணர்வின்மூர்த்தி
ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதுமோர்பற்றிலாத*
பாவனையதனைக்கூடில் அவனையும்கூடலாமே.
(திருவாய்மொழி 3-4-10)

கருமமும்கருமபலனுமாகிய காரணன்தன்னை*
திருமணிவண்ணனைச்செங்கண்மாலினைத் தேவபிரானை*
ஒருமைமனத்தினுள்வைத்து உள்ளம்குழைந்தெழுந்தாடி*
பெருமையும்நாணும்தவிர்ந்து பிதற்றுமின்பேதைமைதீர்ந்தே.
(திருவாய்மொழி 3-5-10)

செய்யதாமரைக்கண்ணனாய் உலகேழும்உண்டஅவன்கண்டீர்*
வையம்வானம்மனிசர்தெய்வம் மற்றும்மற்றும்மற்றும்முற்றுமாய்*
செய்யசூழ்சுடர்ஞானமாய் வெளிப்பட்டிவைபடைத்தான்* பின்னும்
மொய்கொள்சோதியோடு ஆயினான் ஒருமூவராகியமூர்த்தியே.
(திருவாய்மொழி 3-6-1)

திரியும்காற்றோடுஅகல்விசும்பு திணிந்தமண்கிடந்தகடல்*
எரியும்தீயோடுஇருசுடர்தெய்வம் மற்றும்மற்றும்முற்றுமாய்*
கரியமேனியன்செய்யதாமரைக்கண்ணன் கண்ணன்விண்ணோரிறை*
சுரியும்பல்கருங்குஞ்சி எங்கள்சுடர்முடியண்ணல்தோற்றமே.
(திருவாய்மொழி 3-6-5)

துன்பமும்இன்பமுமாகிய செய்வினையாய்உலகங்களுமாய்*
இன்பமில்வெந்நரகாகி இனியநல்வான்சுவர்க்கங்களுமாய்*
மன்பல்லுயிர்களுமாகிப் பலபலமாயமயக்குக்களால்*
இன்புறும்இவ்விளையாட்டுடையானைப்பெற்று ஏதும்அல்லலிலனே.
(திருவாய்மொழி 3-10-7)

ஏகமூர்த்திஇருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகி * ஐந்துபூதமாய் இரண்டுசுடராய் அருவாகி*
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! * உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே.
(திருவாய்மொழி 4-3-3)

ஒன்றும்தேவும்உலகும்உயிரும்மற்றும் யாதுமில்லா
அன்று * நான்முகன்தன்னொடு தேவருலகோடுஉயிர்படைத்தான்*
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள்*
நின்றஆதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே.
(திருவாய்மொழி 4-10-1)

உரைக்கின்றமுக்கட்பிரான்யானேயென்னும்
உரைக்கின்றதிசைமுகன்யானேயென்னும்*
உரைக்கின்றஅமரரும்யானேயென்னும்
உரைக்கின்றஅமரர்கோன்யானேயென்னும்*
(திருவாய்மொழி 5-6-8)

புண்ணியம்பாவம் புணர்ச்சிபிரிவென்றிவையாய்*
எண்ணமாய்மறப்பாய் உண்மையாய்இன்மையாய்அல்லனாய்*
திண்ணமாடங்கள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தபிரான்*
கண்ணனின்னருளே கண்டுகொண்மின்கள்கைதவமே.
(திருவாய்மொழி 6-3-4)

நிழல்வெய்யில்சிறுமைபெருமை குறுமைநெடுமையுமாய்*
சுழல்வனநிற்பன மற்றுமாய்அவையல்லனுமாய்*
மழலைவாய்வண்டுவாழ் திருவண்ணகர்மன்னுபிரான்*
கழல்களன்றி மற்றோர்களைகணிலம்காண்மின்களே.
(திருவாய்மொழி 6-3-10)

மாயா! வாமனனே! மதுசூதா! நீயருளாய்*
தீயாய்நீராய்நிலனாய் விசும்பாய்க்காலாய்*
தாயாய்த்தந்தையாய்மக்களாய் மற்றுமாய்முற்றுமாய்*
நீயாய்நீநின்றவாறு இவையென்னநியாயங்களே!
(திருவாய்மொழி 7-8-1)

இறந்ததும்நீயேஎதிர்ந்ததும்நீயே நிகழ்வதோநீஇன்னேயானால்*
சிறந்தநின்தன்மைஅதுவிதுவுதுவென்று அறிவொன்றும்சங்கிப்பன்வினையேன்*
கறந்தபால்நெய்யே! நெய்யின் இன்சுவையே! கடலினுள் அமுதமே!* அமுதில்
பிறந்தஇன்சுவையே! சுவையதுபயனே! பின்னைதோள்மணந்தபேராயா!
(திருவாய்மொழி 8-1-7)

நன்றாய்ஞானம்கடந்துபோய் நல்லிந்திரியமெல்லாமீர்த்து*
ஒன்றாய்க்கிடந்தவரும்பெரும்பாழ்உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து*
சென்றாங்கு இன்பதுன்பங்கள் செற்றுக் களைந்துபசையற்றால்*
அன்றேஅப்போதேவீடு அதுவேவீடுவீடாமே.
(திருவாய்மொழி 8-8-6)

கூடிற்றாகில்நல்லுறைப்புக் கூடாமையைக்கூடினால்*
ஆடற்பறவையுயர்கொடி எம்மாயனாவதுஅது அதுவே*
வீடைப்பண்ணிஒருபரிசே எதிர்வும்நிகழ்வும்கழிவுமாய்*
ஓடித்திரியும்யோகிகளும் உளரும் இல்லையல்லரே.
(திருவாய்மொழி 8-8-9)

உளருமில்லையல்லராய் உளராய்இல்லையாகியே*
உளர் எம் ஒருவர் அவர்வந்து என்னுள்ளத்துள்ளேஉறைகின்றார்*
வளரும்பிறையும்தேய்பிறையும்போல அசைவும்ஆக்கமும்*
வளரும்சுடரும்இருளும்போல் தெருளும்மருளும்மாய்த்தோமே.
(திருவாய்மொழி 8-8-10)

அவனேஅகல்ஞாலம் படைத்திடந்தான்*
அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*
அவனேஅவனும் அவனும்அவனும்*
அவனேமற்றெல்லாமும் அறிந்தனமே. (திருவாய்மொழி 9-3-2)
உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம்*
பொருவாகிநின்றானவன் எல்லாப்பொருட்கும்*
அருவாகியஆதியைத் தேவர்கட்கெல்லாம்*
கருவாகியகண்ணனைக் கண்டுகொண்டேனே.
(திருவாய்மொழி 9-4-8)

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும்நிற்க*
நெறிமையால்தானும் அவற்றுள்நிற்கும்பிரான்*
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்*
சிறியவென்னாருயிருண்ட திருவருளே.
(திருவாய்மொழி 9-6-4)

சார்வேதவநெறிக்குத் தாமோதரன்தாள்கள்*
கார்மேகவண்ணன் கமலநயனத்தன்*
நீர்வானம்மண்எரிகாலாய் நின்றநேமியான்*
பேர்வானவர்கள்பிதற்றும் பெருமையனே.
(திருவாய்மொழி 10-4-1)

தானேஉலகெல்லாம்* தானேபடைத்திடந்து*
தானேஉண்டுமிழ்ந்து* தானேயாள்வானே. (திருவாய்மொழி 10-5-3)
மான்ஆங் கார மனம்கெட,
ஐவர் வன்கை யர்மங்க,
தான்ஆங் கார மாய்ப்புக்கு,
தானே தானே ஆனானைத்
(திருவாய்மொழி 10-7-11)

கண்ணுள்நின்றுஅகலான் கருத்தின்கண்பெரியன்*
எண்ணில்நுண்பொருள் ஏழிசையின்சுவைதானே*
வண்ணநன்மணிமாடங்கள்சூழ் திருப்பேரான்*
திண்ணம்என்மனத்துப் புகுந்தான்செறிந்துஇன்றே.
(திருவாய்மொழி 10-8-8)

முதல்தனிவித்தேயோ! முழுமூவுலகாதிக்கெல்லாம்*
முதல்தனிஉன்னையுன்னை எனைநாள்வந்துகூடுவன்நான்?*
முதல்தனிஅங்குமிங்கும் முழுமுற்றுறுவாழ்பாழாய்*
முதல்தனிசூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ!
(திருவாய்மொழி 10-10-9)

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ!*
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ!*
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ!*
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே.
(திருவாய்மொழி 10-10-10)

இரண்டாம் அத்யாயம் - இரண்டாம் பாதம் - ஐந்தாம் அதிகரணம் (2-2-5)

ஸர்வதா2நுபபத்த்யதி4கரணம் 2-2-5
ஸி.ஸூ:- ஸர்வதா2நுபபத்தேஶ்ச 2-2-30

திருவாய்மொழிப் பாசுரம்:

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளனலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன்என இலன்என இவை குணமுடைமையில்
உளன் இருதகைமையொடு ஒழிவிலன் பரந்தே.
(திருவாய்.1.1.9)

இரண்டாம் அத்யாயம் - மூன்றாம் பாதம் - நான்காம் அதிகரணம் (2-3-4)

ஜ்ஞாதிகரணம் 2-3-4
ஸி.ஸூ:- நித்யோபலப்3த்4யநுபலப்3தி4 ப்ரஸங்கோ3(அ)ந்யதரநியமோ வா(அ)ந்யதா3 2-3-32

திருவாய்மொழிப் பாசுரம்:

‘நின்றவொன்றையுணர்ந்தேனுக்கு அதனுள் நேர்மை அதுவிதுவென்று*
ஒன்றும்ஒருவர்க்குணரலாகாது உணர்ந்தும்மேலும்காண்பரிது*
சென்றுசென்று பரம்பரமாய் யாதுமின்றித்தேய்ந்தற்று*
நன்று தீதென்றறி வரிதாய் நன்றாய்ஞானம்கடந்ததே’’ - (திருவாய்மொழி 8-8-5)

இரண்டாம் அத்யாயம் - மூன்றாம் பாதம் - ஐந்தாம் அதிகரணம் (2-3-5)

கர்த்ரதி4கரணம் 2-3-5

ஸி.ஸூ:- கர்த்தா ஶாஸ்த்ரார்த்த2வத்த்வாத் 2-3-33

திருவாய்மொழிப் பாசுரம்:

கருளப்புட்கொடிசக்கரப்படை வானநாட! என்கார்முகில்வண்ணா!*
பொருளல்லாதஎன்னைப்பொருளாக்கி அடிமைகொண்டாய்*
தெருள்கொள்நான்மறைவல்லவர்பலர்வாழ் சிரீவரமங்கலநகர்க்கு*
அருள்செய்துஅங்கிருந்தாய்! அறியேன்ஒருகைம்மாறே.
(திருவாய்மொழி 5-7-3)

இரண்டாம் அத்யாயம் - மூன்றாம் பாதம் - ஐந்தாம் அதிகரணம் (2-3-5)

கர்த்ரதி4கரணம் 2-3-5

ஸி.ஸூ:- யதா2 ச தக்ஷோப4யதா4 2-3-39

திருவாய்மொழிப் பாசுரம்:

‘‘உளருமில்லையல்லராய் உளராய்இல்லையாகியே*
உளரெம்மொருவரவர்வந்து என்னுள்ளத்துள்ளே உறைகின்றார்*
வளரும்பிறையும் தேய்பிறையும்போல அசைவும்ஆக்கமும்*
வளரும்சுடரும்இருளும்போல் தெருளும்மருளும்மாய்த்தோமே’’.
(திருவாய்மொழி 8-8-10)

இரண்டாம் அத்யாயம் - மூன்றாம் பாதம் - ஏழாம் அதிகரணம் (2-3-5)

அம்ஶாதிகரணம் 2-3-7

ஸி.ஸூ:- அம்ஶோ நாநாவ்யபதே3ஶாத் அந்யதா2 சாபி தா3ஶகிதவாதி3த்வம் அதீ4யத ஏகே - 2-3-42

திருவாய்மொழிப் பாசுரம்:

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா!* என்பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே! என்கள்வா!*
தனியேனாருயிரே! என்தலைமிசையாய்வந்திட்டு*
இனிநான்போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேல்என்னையே.
(திருவாய்மொழி 10-10-1)

ப்ரஹ்மஸூத்ர விரிவுரையில் விவரிக்கப்படும் வேதாந்தக் கருத்துக்களோடு ஒற்றுமையுடையதாய் பல திருவாய்மொழிப் பாசுரங்கள் அமைந்துள்ளன. திருவாய் மொழியின் ஈட்டுப் பேருரையில் உபநிஷத் மற்றும் ப்ரஹ்மஸூத்ர மேற்கோள்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் ஸகலவேத ஸாரமான திருவாய்மொழியில் மேலும் பல உபநிஷத் மற்றும் ப்ரஹ்மஸூத்ர வாக்கியங்களுக்கான பொருள் ஈட்டுப் பேருரையில் காணப்படுகின்றன. ஆனால் நம்பிள்ளை அந்தந்த பாசுரவுரையில் உபநிஷத் அல்லது ப்ரஹ்மஸூத்ர வாக்கியங்களையோ குறிப்பிடாமல் அவற்றின் ஸாரமான கருத்துக்களை ஈட்டுப் பேருரையில் குறிப் பிட்டுள்ளார்.

ஈட்டு வ்யாக்யானத்தையும் ஸ்ரீபாஷ்யகாரருடைய ப்ரஹ்மஸூத்ர பாஷ்யத்தையும் இணைத்து அனுபவிப்பவர் களுக்கு இது தெள்ளத் தெளிவாகத் தெரியும். அத்தகைய பாசுரங்கள் பல ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வெளியீடான ஸ்ரீபாஷ்ய தெளிவுரையில் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றை பக்கம் 510 தொடங்கி 528 வரை தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

ஸ்ரீபாஷ்ய விரிவுரையில் மேற்கோளாக குறிப் பிட்டுள்ள திருவாய்மொழிப் பாசுரங்களுக்குரிய விளக்கங் களும், கருத்தொற்றுமையும் அந்தந்த இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. *

19

ஆதார நூல்களின் பட்டியல்

ஸம்ஸ்க்ருத நூல்கள்:

1. ‘ஸ்ரீபாஷ்யம்’ (சாரீரகமீமாம்ஸாபாஷ்யம்), Vols. I - IV, Editor: Vid. N.S Ramabhadracharya -- வெளியீடு: ஸம்ஸ்க்ருத ஸம்ஶோதநா ஸம்ஸத், மேல்கோட்டை. 1985

2. ‘வேதாந்ததீபம்’, -- வெளியீடு: ஸம்ஸ்க்ருத ஸம்ஶோதநா ஸம்ஸத், மேல்கோட்டை. 2009

3. ‘வேதார்த்தஸங்க்ரஹம்’ -- வெளியீடு: ஸம்ஸ்க்ருத ஸம்ஶோதநா ஸம்ஸத், மேல்கோட்டை. 1981.

4. ‘ப்ரஹ்மஸூத்ர விவ்ருத்தி’, -- வெளியீடு: ஸம்ஸ்க்ருத ஸம்ஶோதநா ஸம்ஸத், மேல்கோட்டை. 2012.

5. ‘விஶிஷ்டாடத்வைதகோஶ:’ - Vols. I - X -- வெளியீடு:, ஸம்ஸ்க்ருத ஸம்ஶோதநா ஸம்ஸத், மேல்கோட்டை. 1997.

6. ‘உபநிஷத் வாக்ய மஹாகோஶ:’ --வெளியீடு: குஜராத் பிரிண்டிங் ப்ரஸ், பாம்பே. 1940.

7. ‘வைதிக-பதாநுக்ரம-கோஶ:’ -- வெளியீடு: பரிமல் பப்ளிகேஷன்ஸ் -- டில்லி. 2004.

தமிழ் நூல்கள்:

8. ‘திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்’, Vols. I - X, வித்வான். புருஷோத்தம நாயுடு, University of Madras 2012.

9. ‘பகவத்விஷயம்’ முதல் மூன்று பத்துக்கள், வெளியீடு: ஸ்ரீ.உ.வே. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி. 1975.

11. ‘பகவத்விஷயம்’ நான்காம் பத்து முதல் பத்தாம் பத்து வரை, வெளியீடு: சே. கிருஷ்ணமாசார்யர் ஸ்வாமி. ‘ஸுதர்சனர் ட்ரஸ்ட்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி. 1999.

12. ‘ஸ்ரீபாஷ்யஸாரம்’ வித்வாந். T.S. ராஜகோபாலன், வெளியீடு: ஆழ்வார்கள் அமுத நிலையம். 1993.

13. ‘புருஷஸூக்தம், நாராயணஸூக்தம்’ -- உரையாசிரியர், கீர்த்திமூர்த்தி K. ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஸ்வாமி ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி.

14. ‘விஷ்ணுசித்த விஜயம்’ வெளியீடு: ஸ்ரீ.உ.வே. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி.

15. ‘ஈஶவாஸ்யோபநிஷத் வ்யாக்யாநம்’ வெளியீடு: ஸ்ரீ.உ.வே. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி. 1990.

16. ‘கேநோபநிஷத் வ்யாக்யாநம்’ வெளியீடு: ஸ்ரீ.உ.வே. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி. 1992.

17. ‘திருவாய்மொழி ஈட்டின் ப்ரமாணத்திரட்டு’ வெளியீடு: ஸ்ரீகோமளாம்பா ப்ரஸ், திருக்குடந்தை, 1929.

18. ‘வேதாந்தஸாரம் - எளியநடை தமிழ் மொழிபெயர்ப்பு’ -- தொகுப்பாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர். வெளியீடு: ஸ்ரீரங்கநாச்சியார் அச்சகம், ஸ்ரீரங்கம், திருச்சி-6. 2012.

19. ‘வேதாந்ததீபம் - எளியநடை தமிழ் மொழிபெயர்ப்பு’ Vols. I - IV -- தொகுப்பாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர். வெளியீடு: ஸ்ரீரங்கநாச்சியார் அச்சகம், ஸ்ரீரங்கம், திருச்சி-6. 2013, 2014.

20. ‘வேதார்த்த ஸங்க்ரஹம் - எளியநடை தமிழ் மொழிபெயர்ப்பு’ Vols. I \& II - தொகுப்பாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர். வெளியீடு: ஸ்ரீரங்கநாச்சியார் அச்சகம், ஸ்ரீரங்கம், திருச்சி-6. 2013.

21. ‘ஸ்ரீபாஷ்யம்’ - எளியநடை தமிழ் மொழிபெயர்ப்பு, நான்கு அத்யாயங்கள், Vols. I - XV -- தொகுப்பாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர். வெளியீடு: ஸ்ரீரங்கநாச்சியார் அச்சகம், ஸ்ரீரங்கம், திருச்சி-6. 2014, 2015, 2016.

22. ‘நாலாயிர திவ்யப்ரபந்தம் -நான்கு ஆயிரங்கள், Vols. I - II - வெளியீடு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர், ஸ்ரீரங்கநாச்சியார் அச்சகம், ஸ்ரீரங்கம், திருச்சி-6. 2011.

23. ‘பிள்ளைலோகாசார்யர் அருளிய அஷ்டாதச ரஹஸ்யம்’ - வெளியீடு: ஸ்ரீ.உ.வே. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி-17.

24. ‘கீதா வ்யாக்யாநம்’ - 18 அத்யாயங்கள், வெளியீடு: ஸ்ரீ.உ.வே. ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஆசிரியர் ‘ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம்’ புத்தூர் அக்ரஹாரம், திருச்சி-17.

25. ‘ஸாங்கிய தத்வம்’-- தமிழ் உரை, கடலங்குடி ப்ரஹ்மஸ்ரீ நடேச சாஸ்த்திரிகள். வெளியீடு: கடலங்குடி பப்ளிகேசந்ஸ் சென்னை-17, 2001.

26. ‘ஈஶவாஸ்யோபநிஷத் விவரணம்’ (தமிழ்) - அபிநவதேசிக ஸ்ரீஉத்தமூர் வீரராகவாசார்யர், வெளியீடு: விசிஷ்டாத்வைத ப்ரசாரிணி சபை, தி இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், மயிலாப்பூர் சென்னை-4. 1968.

27. ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த அதிகரண ஸாராவளி - தமிழாக்கம் - ஸ்ரீரங்கநாத பாதுகா வெளியீடு.

English:

28. "The History and Principles of Vedic Interpretation" - Dr. Ram Gopal, Published by Concept Publishing Company, New Delhi. - 15. 1983

29. Culture and Civilization as revealed in the Srautasutras - Dr. Rajendra Nath Sharma, Published by Nag Publishers, Delhi - 7, 1977.

30. Echoes of Ancient Indian Wisdom - Dr. Shantha N Nair Published by Pustak Mahal , Delhi.

31. The Philosophy of Visistadvaita Vedanta - A Study Based on Vedanta Desika's Adhikarana Saravali - S.M.Srinivasachari., Published by Motilal Banarsidass Publishers Private Limited, Delhi.

32. Srautakosa - Volume II and III - R.N.Dandekar Published by Vaidika Samsodhana Mandala , Pune. 1995.

33. Principal Upanishads Volume III ( Brhadaranyaka Upanishad ) Edited and Translated by Vedanta Vidwan Dr. N.S. Anantha Rangacharya Sri Rama Printers, Bangalore - 62.

34. Principal Upanishads Volume II ( Chandogya Upanishad) Edited and Translated by Vedanta Vidwan Dr. N.S. Anantha Rangacharya Published by Sri Rama Printers, Bangalore - 62.

35. Know the Puranas by Ramanuj Prasad Published by Pustak Mahal, Delhi. 2005.

36. Dictionary of indology by Dr. Vishnulok Bihari Srivastava Published by Pustak Mahal, Delhi. 2009.

37. A General Introduction to Upanishads with a special chapter : " Ramanuja on Upanishads" by K.R.Krishnaswami Ganesha Maruti printers, Bangalore - 560004.

𐀢 Āzhvār Emperumānār Jeeyar Thiruvadigale Śaranam 𐀢