வேதங்கள், எல்லாவற்றையும் ‘கற்றுத்தருபவை’, ‘அறிவிப்பவை’ என்று கண்டோம். ஆனால், வேதத்தின் பூர்வ பாகத்திலுள்ளவைகள், செல்வம், புகழ், பொருள் வகையான இலாபங்கள், வெற்றி, எதிரிகளை வெல்வது, போன்ற வற்றிற்காக, அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதனால் வேதத்தின் பூர்வபாகம் ‘உழைப்புக்கான புத்தகம்’ என்று வகைப்படுத்தப்பட்டது. மாறாக, வேதத்தின், உத்தர காண்டத்தில் (உத்தரமீமாம்ஸையில்) உள்ள உபநிஷத்துக் கள் ‘‘அறிவிற்கான நூல்’’ என்று அறியப்படுகிறது. பூர்வபாகம் அல்லது பூர்வமீமாம்ஸையில் உள்ள மந்திரங்கள், மனிதர்கள் அதிகம் விரும்பும் பலன்களைப் பெற்றுத்தரும்போதிலும், உண்மையில் விரும்பத்தக்கது, வீடுபேற்றிற்கு வழிகாட்டுவ தாக உள்ள உத்தரமீமாம்ஸையே. வேதாந்தம், உபநிஷத் என்றெல்லாம் பெயர் பெற்ற இந்தப் பகுதி, மனித வாழ்வின் மிக உயர்ந்த இலக்கான வீடுபேற்றைப் பெரும் வழியைக் காட்டித் தருகிறது.
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத3ந்த்யவிபச்சித: | வேத3வாத3ரதா: பார்த்த2 நாந்யத3ஸ்தீதி வாதி3ந: ||
(ப.கீ. 2-42)
காமாத்மாந: ஸ்வர்க்க3பரா ஜந்மகர்மப2ல ப்ரதா3ம்| க்ரியாவிஶேஷப3ஹுளாம் போ4கை3ச்வர்யகதி3ம் ப்ரதி|| (ப.கீ.2-43)
போ4கை3ச்வர்ய ப்ரஸக்தாநாம் தயா(அ)பஹ்ருதசேதஸாம் | வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4: ஸமாதெ4ள ந விதீ4யதே || (ப.கீ.2-44)
இந்த மூன்று ச்லோகங்களின் திரண்ட பொருள்:-
‘‘பார்த்தனே! வேதங்களில் உள்ள ஸ்வர்க்கம் முதலான பலன்களைப் பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய், காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை யுடையவர்களாய், ஸ்வர்க்கத்தையே மேலான ப்ராப்யமாகக் கொண்டவர்களாய், ‘ஸ்வர்க்கத்தைக் காட்டிலும் சிறந்த பலன் வேறு இல்லை’ என்று பேசுகின்றவர்களான, சிற்றறி வாளர்கள், ஸ்வர்க்காதி களை அனுபவிப்பதாகிற செல்வத்தை அடைவது குறித்து, காய்க்காத பூப்போலே மேலெழப் பார்க்கும்போது அழகாயிருப்பதாய், (ஸ்வர்க்காதி பலாநுபவம் முடிந்தவுடன்) புநர்ஜந்ம கர்மங்களாகிற பலத்தை அறிவிப்ப தாய், (தத்வஜ்ஞானமின்மையாலே) பல கிரியைகள் நிறைந் திருப்பதான, யாதொரு வார்த்தையை, மிகவும் பேசுகின்றார்களோ, அந்தப் பேச்சாலே, அழிக்கப்பட்ட அறிவையுடையவர்களாய், (அதனாலேயே) ஸ்வர்க்காதி களை அநுபவிப்பதாகிய செல்வத்திலேயே ஈடுபட்டவர் களான அப்புல்லறிவாளர்களுக்கு, மனத்தில், ஆத்ம யாதாத்ம்ய நிச்சயத்தை முன்னிட்டுக் கொண்டிருக்கும், (முற்கூறிய) கர்மயோகபுத்தி உண்டாவதில்லை’’.
உபநிஷத் என்றால் என்ன?
  சொற்களின் பொருளையும், ‘ஒருபொருள்பல சொல்லை’யும் நமக்குக் கற்றுத்தரும் நூல், ‘‘அமரகோசம்’’ என்று அழைக்கப்படுகிறது. இதில், ‘உபநிஷத்’ என்னும் சொல்லிற்கு, ‘‘தர்மரஹஸ்யோபநிஷத்’’ என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, ‘உபநிஷத்’ என்றால், ‘ரகசிய மானது, மறைத்து வைக்க வேண்டியது’ என்று பொருள்படும். சங்கரர், ‘கடோபநிஷத்திற்கு அளித்த விளக்கத்தில், ‘‘உபநிஷதாமப்ரூமா’’ என்கிறார். இதன் பொருள், ‘இது பரமாத்மாவைக் குறித்த வித்யை அல்லது அறிவு என்று பொருள்படும். ஸம்சாரத்தில் ஈடுபடுத்தும் அறிவின்மையை அழிக்கும் அறிவு எனலாம். ஸுதர்சனசூரி என்பவர், ‘ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பது உபநிஷத்’ என்று விளக்குகிறார்.
‘உபநிஷத்’ என்பது வேறு ஓர் வகையிலும் விளக்கம் பெறுகிறது. சொல்லை இவ்வாறு பிரித்து- உப-நி-ஷத் பொருள் கொண்டால், ‘‘மிக அண்மையில் அமர்ந்து’’ என்பது கிடைக்கும். ஆசார்யன் திருவடிவாரங்களில் மிக அண்மையில் அமர்ந்து கற்பது’ என்று பொருள்படும். அல்லது மிக உயர்ந்த பரமாத்மாவிற்கு மிக அண்மையில் அழைத்துச் செல்லக் கூடியது என்றும் பொருள்படும்.
உபநிஷத்தை, ‘மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியம்’ என்று சொல்வது ஏன்? யாரும் இதை அறியக்கூடாது என்பதற்காகவா? அல்ல. இதைக் கற்கும் மாணவர், தகுதிபெற்றவராக இருக்கவேண்டும்; கடுமையான ஒழுங்குமுறைகளை கடை பிடிப்பவராக இருக்கவேண்டும் என்பதே கருத்து.
அமரகோசம் (அமரகோசத்தைப் பற்றிய சில குறிப்புகளை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழே அவை கொடுக்கப்பட்டுள்ளன.)
‘‘அமரசிம்மன்’’ என்பவரால் இயற்றப்பட்ட ‘‘அமர கோசம்’’ என்னும் நூல், ஸம்ஸ்க்ருத அகராதிகளில், மிகவும் நம்பத்தகுந்தது. இந்த வியக்கத்தக்க நூல், ஓர் நிரந்தரமான அகராதி. தனித்தன்மை வாய்ந்த இணைச்சொற்களால் இயற்றப்பட்டுள்ளது இந்த நூல். இவர் ஓர் அறிஞர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இன்றளவும் இந்த நூல் ஒரு அதிகாரபூர்வமானதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இவர், ஒரு குறிப்பிட்ட சொல், எவ்வாறு அதன் வேரிலிருந்து அல்லது அதன் தொடக்கத்திலிருந்து கோர்க்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். பிற்பட்ட கால அகராதி ஆசிரியர்கள் பெரும்பாலும் இவரையே பின்பற்றினார்கள்.
‘‘அமரகோசம்’’ என்பது, ‘‘நாமலிங்கானுஶாஸனம்’’ என்றும் அழைக்கப்படுகிறது. 4-ஆம் மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டது. அமரகோசத் திற்கு 50-க்கும் மேற்பட்ட வியாக்யானங்கள் எழுதப் பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்யமானவை:- ‘ப்ரபா’, ‘மஹேஸ்வரி’, ‘சுதா’, ‘ராமாஷ்ரயி’ மற்றும் ‘நாமசந்த்ரிகா’ ஆகியவை.
‘அமரகோசம்’ மூன்று காண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இந்நூல், அடிப்படையில் ஸம்ஸ்க்ருத வார்த்தை களுக்குச் சரியான இணைச்சொற்களை தருவதாகும். அமரகோசம் இயற்றப்பட்ட பிறகு வெளிவந்த அகராதிகள் மூன்று முக்கியமான விரிவான பாதைகளைப் பின்பற்றின. - நாநார்த்தகோசா, சமாநார்தகசப்தகோசா மற்றும் பர்யாயவாச்சி கோசா என்பவையே அவை. ‘ஷாஸ்வத’ என்பவர், 800 அனுஷ்டுப் சந்தஸ்ஸில், ‘அநேகார்தசமுச்சய’ என்னும் நூலை இயற்றினார். 7-ஆம் நூற்றாண்டில், புருஷோத்தம தேவ என்பவர், ‘த்ரிகாண்டகோசா’ மற்றும் ‘ஹாராவளி’ என்னும் இரண்டு அகராதிகளை உருவாக்கினார். 10-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த அறிஞர், ஹலாயுத’ என்பவர், ‘அபிதாந ரத்னமாலா’ என்னும் அகராதியை இயற்றினார்.
இது, ‘ஹாலாயுத கோசா’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலில், அமர கோசத்தின் தாக்கம் காணப்படுகிறது. யாதவ ப்ரகாசர், மிகவும் விரிவான மற்றும் நம்பத்தகுந்த அகராதியை இயற்றினார். அது, ‘‘வைஜயந்தி கோசம்’’ என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி.1055க்கும் கி.பி.1137க்கும் இடையில் எழுதப் பட்டது. ஹேமசந்த்ரா என்பவர், ‘‘அபிதாநசிந்தாமணி’’ என்னும் அகராதியை எழுதியுள்ளார். இந்த அகராதி பெரும்பாலும், இணைச் சொற்களின் தொகுப்பாக இருக்கிறது.
12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹேச்வரா என்பவர், இரண்டு அகராதிகளை இயற்றியுள்ளார். அவை:- ‘விஶ்வப்ரகாசா’ மற்றும் ‘சப்தபேதப்ரகாசா’ என்பவை. ‘மன்காக’, 12-ஆம் நூற்றாண்டில் எழுதிய அகராதி ‘அநேகார்த்தம்’ என்பது. 12 மற்றும் 13-ம் நூற்றாண்டின் போது அஜயபால என்பவர் இயற்றிய அகராதி, ‘நாநார்த ஸங்க்ரஹம்’ என்பது. தனஞ்ஜெயா, 12-ஆம் நூற்றாண்டில் ‘‘நாமமாலா’’ என்னும் அகராதியை இயற்றினார். கேசவ ஸ்வாமி எழுதியது ‘நாநார்தாரநவ ஸங்க்ஷேப’ மற்றும் ‘சப்தகல்பத்ருமா’ என்பவை. 14-ஆம் நூற்றாண்டில், மேதினி கரர் இயற்றியது ‘நாநார்த சப்தகோசா’ என்பது.
‘சப்தகல்பத்ருமா’ மற்றும் ‘வாசஸ்பத்யம்’ ஆகியவை தற்காலத்தின் முக்யமான நூல்களாகும். ராதாகாந்ததேவ என்பவர் கி.பி.1828க்கும் 1858 க்கும் இடைப்பட்ட காலத்தில், ‘சப்தகல்பத்ருமாவை’ இயற்றினார். இந்த நூல் அஷ்டாத் யாயியை ஒட்டி, ஒவ்வொரு வார்த்தைக்கும் உண்டான வழிச்சொற்களைத் தருகிறது. இது 7 காண்டங்களில் எழுதப் பட்டுள்ளது. மேலும் இது ‘இந்திய இயலின் நிகண்டு அகராதி’ எனலாம்,
‘வாசஸ்பத்யம்’ என்னும் மிக விரிவான அகராதி, கி.பி.1873இல் தாரநாதபட்டாசார்யாவால் எழுதப்பட்டது. இந்நூல், இலக்கியம், இலக்கணம், ஜ்யோதிஷம், தந்த்ரம், தத்துவம், இசை, கவிதை, வரலாறு மற்றும் மருத்துவ விஜ்ஞானம் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட வார்த்தை கள் மற்றும் சொற்கூறுகளின் விரிவான ஆய்வை அறிமுகப் படுத்துகிறது.
மோனியர் வில்லியம்ஸின் ஆங்கில அகராதி, பெனஃபேஸின் ஸம்ஸ்க்ருத-ஆங்கில அகராதி மற்றும் வில்சன் மற்றும் மெக்டொனால்ட் ஆகியவர்களின் அகராதி களும் மிகவும் புகழ் பெற்றவை. ஆனாலும், மிகவும் சிறந்த அகராதி, வாமன் சிவராமஆப்தே அவர்களால் இயற்றப் பட்டதே. இந்த அகராதி தனித்துவமும் அழகும் பெற்றது, ஏனெனில், இவர், ஒரு வார்த்தையை விளக்குவதற்கு, அச்சொல்லின் பல்வேறு பொருள்களை, பல நூல்களி லிருந்து திரட்டி அளித்துள்ளார். அவர், மேலும் மூன்று தொகுதி களுடைய, ‘ஸம்ஸ்க்ருத அங்க்ரேஸி கோசா’ மற்றும் ‘ஸம்ஸ்க்ருத ஹிந்தி கோசா’ என்னும் அகராதிகளை எழுதியுள்ளார்.
  டபில்யூ. பி. யெட்ஸின் ஸம்ஸ்க்ருத ஆங்கில அகராதி 1846இல் பிரசுரிக்கப்பட்டது. ‘ரத்’ மற்றும் போதலிங்காவின் ஸம்ஸ்க்ருத ஜெர்மனிய அகராதி, ஏழு தொகுதிகளையுடையது, இது ஓர் அற்புதமான சாதனை யாகும். 1967இல், இராமாவதார சர்மா அவர்களால் எழுதப்பட்ட ‘வாங்மயார்நவ’ என்னும் நூல், ஓர் அரிய உழைப்பால் ஏற்பட்டதாகும்.
உபநிஷத்துக்கள் நமக்குக் கற்றுத் தருபவை
  உபநிஷத்துக்கள் நமக்கு அச்சமற்ற தன்மையையும், வலிமையையும் போதிக்கின்றன. உணர்வின் ஒருபடிப்பட்ட தன்மையை கற்பிக்கின்றன. உபநிஷத்துக்கள், இந்த ஸம்சாரம் என்னும் தளைகளிலிருந்து விடுபடுவதை கற்றுத்தருகின்றன. ‘‘நாம் எங்கிருந்து வந்தோம்: எங்கு செல்கின்றோம்’’ என்று கேட்கும் கேள்விக்குப் பதில் தருகின்றன. உபநிஷத் ‘ப்ரஹ்மமே மிக உயர்ந்த உண்மை; அதுவே உண்மையை உணர்த்துவது; அதுவே மிக உயர்ந்த இலக்கு’ என்பதைப் போதிக்கின்றன.
உபநிஷத்துக்களின் எண்ணிக்கை
  உபநிஷத்துக்கள் எத்தனை என்பதில் அறிஞர் களுக்குள் ஓர் ஒருமனதான முடிவு இல்லை. வேதங்களுக்கு 1180 சாகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஓர் உபநிஷத் உண்டு. சாம வேதத்திற்கு மட்டுமே 1000 உபநிஷத்துக்கள் உண்டு. ஆனால், இந்த உபநிஷத்துக்களுள் பல நமக்குக் கிடைக்காமல் போய்விட்டன. 207 உபநிஷத்துக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்காலத்தில் நாம் பெற்றிருப்பது 108 மட்டுமே. இவற்றுள், 22 உபநிஷத்துக்கள் சான்றாதாரங் களாக பெரியோர்களால்-பூர்வர்களால் எண்ணப்பட்ட போதிலும், முக்கியமான உபநிஷத்துக்கள் 10 மட்டுமே. இவை ‘‘தஶோபநிஷத்துக்கள்’’ எனப்படுகின்றன. இது முக்திகோப நிஷத்தில் ஓர் மேற்கோளால் காட்டித்தரப்படுகிறது.
‘‘ஈச கேன கட ப்ரச்ன முண்ட* மாண்டுக்ய தைத்திரி: ஐதரேய ச சாந்தோக்ய ப்ருஹதாரண்யக தஶ’’
22 உபநிஷத்துக்களின் பெயர்கள்:-
1. ஈஶ 2. கட 3. கேந 4. ப்ரச்ந 5. முண்டக 6.மாண்டூக்ய 7. தைத்திரீய 8. ஐதரேய 9. சாந்தோக்ய 10.ப்ருஹதாரண்யக 11. கௌஷீதகி 12. ச்வேதாஶ்வதர 13.அக்நிரஹஸ்யம் 14. நாராயணோபநிஷத் 15. ஸுபாலோப நிஷத் 16. அதர்வஶிகா 17. மந்த்ரிகோபநிஷத் 18. அதர்வ ஸிரஸ் 19. மஹோபநிஷத் 20. மைத்ராயணீய 21.நரஸிம்ஹ தாபனீய மற்றும் 22. ப்ரஹ்மபிந்து.
உபநிஷத் சொற்றொடர்கள் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ள முறை
  அடிப்படையாக மூன்று வகைப்பட்ட சொற்றொடர்கள் காணப்படுகின்றன.
1) அபேத ச்ருதிகள்- இவை, ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே என்னும் தத்துவத்தை கடைப்பிடிக்கின்றன. சங்கரர், இந்த சொற்றொடர்களுக்கு அதிகமான முக்யத்வத்தைத் தருகிறார்.
2) பேத ச்ருதிகள்-இவை ப்ரஹ்மம், ஜீவன் மற்றும் பருப்பொருள் ஆகியவற்றிடையே வேறுபாட்டைக் கூறு கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. ஆனால், ப்ரஹ்மமே, ஜீவன் மற்றும் பருப்பொருளைக் காட்டிலும் உயர்ந்தது என்று காட்டுகின்றன. மத்வாசாரியார் இந்த சொற்றொடர்களை அதிகமாகக் கருத்தில் கொண்டார்.
3) கடக ச்ருதிகள்-ஜீவனானவன், ப்ரஹ்மத்தின் ‘சரீரமாக’ அதனிடமிருந்தே, வடிவத்தையும் செயல்பாட்டையும் பெறுவதால், அதன் சரீரமாக இருப்பவன். அவன் (ஜீவன்) ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டவன். தனித்தன்மை வாய்ந்த ஒருவன். ‘‘தான்’’ என்கையில் ப்ரஹ்மத்தையும் தன்னையும் ஒருசேர குறிப்பிடுகிறான். இதில், ஜீவன் ப்ரகாரமாகவும் பரமாத்மா ப்ரகாரியாகவும் உள்ளனர். ராமாநுஜர், பேத, அபேத, ச்ருதிகளின் பொருளை சரியாகப் புரிந்து கொண்டதோடல்லாமல், கடக ச்ருதிகளின் உதவி கொண்டு, பல சொற்றொடர்களுக்கு மிகச் சரியாக தம் எண்ணத்திற்கேற்ப விளக்கமளித்தார். (இது விளக்கமளித்த மற்றவர்கள் செய்யாத காரியம்.).
இராமானுசர் ஒருவரே பேத, அபேத, கடக ச்ருதி வாக்யங்களையும் ஒருசேர நிர்வஹித்து, அவையனைத்தும் சேதன அசேதனங்களை தனக்கு சரீரமாயுடைய பரப்ரஹ்மமாய் திகழ்கின்றது என்று நிறுவியுள்ளார். இதுவே உண்மையான தத்துவமாகும்.
அபேத ச்ருதிகள்-உதாரணம் மற்றும் விளக்கம்:-
1) ‘தத்த்வமஸி’ (சாந்தோக்ய உபநிஷத் 6-8-7) - அது (ப்ரஹ்மம்) நீயாக இருக்கிறாய்.
2) ‘ஸர்வம் க2லு இத3ம் ப்3ரஹ்ம’ (சாந்தோக்யம் - 3-14-1) - இது எல்லாம் ப்ரஹ்மமே.
3) அஹம் ப்3ரஹ்மாஸ்மி (தை-நா-1-40) - நான் ப்ரஹ்மமாக இருக்கிறேன்.
இவை ப்ரஹ்மத்தையும், மற்ற பொருள்களையும் ஒன்றாக - ஒரே வேற்றுமையில் படிக்கின்றன. இது, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடையிலான சரீர - சரீரி பாவத்தால் ஏற்படும், ‘எல்லா சப்தங்களும் (சொற்களும்) ஒன்றையே குறிக்கும்’. (சர்வ சப்த வாக்யம்) என்பதால், ஒரே வேற்றுமையில் (ஒன்றாக) படிக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. உதாரணமாக, ‘தத் த்வம் அஸி’ என்னும் உபநிஷத் வாக்கியத்தில், ‘‘தத்’’ என்பது அண்டத்தின் ஒரே காரணமான ப்ரஹ்மத்தையும், ‘‘த்வம்’’ என்பது கேள்வியை எழுப்பிய, முன்னிலையில் நிற்கும் ச்வேதகேது என்னும் சிறுவனையும் குறிக்கும். அதோடல்லாமல், அவனுக்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமபுருஷனையும் குறிக்கிறது. எனவே, ‘‘தத்த்வம் அஸி’’ என்பது ‘‘ஜகத் காரணமான ப்ரஹ்மமே, உனக்கு அந்தர்யாமியான பொருள்’’ என்றாகிறது. இதனால், அபேத ச்ருதி சொற்றொடர்கள் நேரில் காணப் படுபவையான கோட்பாடுகளுக்கு முரண்படாமலும், மற்ற வேதச் சொற்றொடர்களுக்கு முரண்படாமலும் பொருந்தி நிற்கின்றன. உதாரணமாக இந்த முண்டக உபநிஷத் வாக்கியம்:-
‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’
(முண்டக. 3-1-1)
இதன் பொருளாவது:- [அழகிய (ஜ்ஞாந கர்மங் களாகிற) இறக்கைகளை உடையவையும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றையொன்று விட்டுப்பிரியாதவை யுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக்கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாமலிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.]
பேத ச்ருதிகள்:- உதாரணம் மற்றும் விளக்கம்:-
1. ‘‘அத்ய தே3வ தத் விதி3தாத் அதோ அவிதிதா3த் அதி’’ (கேந-உப.) - இந்த்ரியங்களால் அறியப்படும் அசேதனத்தைக் காட்டிலும், (ஜடப்பொருள்) வேறுபட்டதாய், இந்திரியங்களால் அறியப்படாத சேதனத்தைக் காட்டிலும் (ஜீவாத்மாவைக் காட்டிலும்) மேற்பட்டதே பரம்பொருள்.’’
2. க்ஷராத்மாநாவீஸதே யஸ்து ஸோ(அ)ந்ய (ச்வே.உப.) - சேதன அசேதனங்களை நியமிப்பவன், அவற்றைக்காட்டிலும் வேறுபட்டவன்’.
இவை பரமாத்மாவிற்கும், சித், அசித் ஆகியவற்றிற் கும் பேதத்தை (வேறுபாட்டை) போதிக்கின்றன.
இந்த அபேத ச்ருதிகள் மற்றும் பேத ச்ருதிகள் மேலெழுந்த வாரியாக பார்க்கப்படுகையில், விரோதம் இருப்பதுபோல் தோன்றும். இவற்றை ஸாமாநாதிகரணம் என்னும் முறையால் ஒருங்கிணைத்து, இந்த முரண்பாட்டை நீக்குவது கடக ச்ருதிகள் எனப்படுகின்றன.
கடக ச்ருதிகள்:- உதாரணம் மற்றும் விளக்கம்:-
1. ‘‘யஸ்யாத்மா சரீரம்’’ (ப்ருஹதாரண்யகம் 5-7-22) ‘இந்த ஆத்மா, அதன் உடல்’.
2. ‘‘யஸ்ய ப்ருதி2வீ சரீரம்’’ (ப்ருஹ. 5-7-22) - ‘அதற்கு இந்த பூமி உடல்’
3. ‘‘ஸர்வாத்மா’’ (யஜு.ஆரண்யகம் 3-11-21) - ‘இது எல்லாவற்றின் ஆத்மா’.
4. ‘‘அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:’’ (மஹாநாராயண. உபநிஷத் -11) ‘எல்லாவற்றின் உள்ளும் புறமும் ஊடுருவி பரவி நிலைபெற்றிருப்பவன் நாராயணன்’
5. ‘‘ஸர்வ பூதாந்தராத்மா நாராயண:’’ (ஸுபால) ‘எல்லா இருப்பினங்களின் உள்ளுறை ஆத்மா, நாராயணன்’.
இந்தச் சொற்றொடர்கள், பேத, அபேத ச்ருதிகளின் இடையில் உள்ள முரண்பாட்டை நீக்குகின்றன. ‘வெவ்வேறாக இருக்கும் சித், அசித், ஈச்வரர்களுக்குள், ஈச்வரன், மற்ற இரண்டு தத்வங்களுக்கும் அந்தர்யாமியாகவும், அதனால் எல்லாச் சொற்களால் குறிப்பிடப்படுபவனாகவும் ஸர்வ சப்த வாச்யனாய் இருப்பதால், மற்ற பொருள்களோடு, ‘‘ஸாமாநாதிகரணமாக’’ (ஒரே வேற்றுமையில்) வாசிக்கப் படுவதில், விரோதமில்லை. இவையே கடக ச்ருதிகள். ‘‘சேதன அசேதனங்களோடு கூடிய ப்ரஹ்மம் ஒன்றே’’ என்பதைத் தெரிவிக்கும், ‘‘ஏகமேவாத்விதீயம்’’ (சாந்தோக்யம். 6-2-1), ‘‘ப்ரஹ்மம் ஒன்றே, இரண்டாவதாக ஏதுமில்லை’ என்னும் அபேத ச்ருதியும், பேத ச்ருதிகளோடு விரோத மில்லாமல் (முரண்பாடு இல்லாமல்) பொருந்தி நிற்கிறது. எல்லா வேதச் சொற்றொடர்களுக்குள்ளும் விரோதமில்லாமல் பொருள் கூற வழி இதுவேயாகும்.
  சில மதங்கள், வேதத்தை ப்ரமாணமாக (சான்றா தாரமாக) ஏற்றுக் கொண்ட போதிலும், அதில் உள்ள சொற்றொடர்களுக்கு தகாத பொருளைக் கூறுகின்றன. இவ்வாறு கூறுபவர்களை, ‘‘யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய:’’ என்கிறார், மநு. (மநுஸ்ம்ருதி.12-95) - இந்த மதத்தைச் சார்ந்தவர்களால், இந்த பேத, அபேத, கடக ச்ருதிகளுக்கு மேலெழுந்தவாரியாகத் தென்படும் முரண்பாட்டைப் புரிந்து கொண்டு, சரியான பொருள் கூற இயலாது. உதாரணமாக, அத்வைத மதத்தினர் கொள்கைக்கு, பேத ச்ருதிகள் விரோதமாக உள்ளதால், அதைப் ‘‘பொய்’’ (ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல) என்று தள்ளுகிறார்கள். த்வைதிகள் கொள்கைக்கு, அபேத ச்ருதி விரோதமாகத் தோன்றுவதால், அவற்றை ஒதுக்குகிறார்கள். இவ்விருவரும் கடக ச்ருதிகளின் முக்யத்துவத்தை உணருவதில்லை. எல்லா ச்ருதி சொற்றொடர்களும் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல், அவற்றின் முக்யத்வம் கெடாமல், நிர்வஹிக்கப்படுவது விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தில் மட்டுமேயாகும். இம்மதமே ‘‘ஸந்மதம்’’, ‘‘வைதிக மதம்’’ என்று போற்றத் தக்கதாகும்.
உபநிஷத்துக்களில் காணப்படும் பாத்திரங்கள்
உபநிஷத்தை இவ்வுலகோர்க்கு அளித்த ரிஷிகளின் பெயர்களை நாம் அறிவதில்லை. ஆனால், அவற்றிற்கு பொருள் கூறியவர்களையும், கற்றுத்தந்தவர்களையும் அறிய வருகிறோம். இவர்களில் முக்கியமானவர்கள் இவர்களாவர்:
மஹிதாஸ, ரைக்வ, ஸத்யகாம, ஐதரேய, சாண்டில்ய, ஜாபால, ஜைமிநி, உத்தாலக, ச்வேதகேது, பாரத்வாஜ, கார்காயாயன, ப்ரதார்தந, பாலாகி, அஜாதசத்ரு, வருண, யாஜ்ஞவல்க்ய, கார்கி, மற்றும் மைத்ரேயி.
உபநிஷத்துக்களை கற்பிக்க வந்த ஞானிகள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள்:-
இந்த ஞானிகளோ, மிக உயர்ந்த தத்துவத்தைத் தரிசித்தவர்கள். இந்த உடலை, ஒர் வெறுக்கத்தக்க சிறையாக நினைத்தவர்கள். ஆனால், சாதாரணமான மனிதனோ, உடலுக்கும் ஆத்மாக்கும் வேறுபாடு அறியாதவன். உடலையே ஆத்மாவாக நினைப்பவன். இவ்விருவர் கண்ணோட்டங்களில் உள்ள, இப்படிப்பட்ட மிகப் பெரிய இடைவெளியைக் கடந்து, இந்த ஞானிகள், உபநிஷத் கருத்துக்களை போதிக்கவேண்டியதாயிற்று. இது மிகவும் கடினமானது. இதற்காக, ஞானிகள் தம் கருத்தை உணர்த்து வதற்காக யோசனைகள், கற்பனைகள், புராணக் கதைகள், உபகதைகள் மற்றும் நீதிக்கதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தம் கருத்தினை வலியுறுத்தினர். இவற்றின் மூலமாக, ஜீவனின் அழிவற்ற தன்மை, ப்ரஹ்மத்தின் இயல்பு ஆகியவற்றை விளக்கினர். இவர்களுடைய இந்தப் பெரு முயற்சியால் ‘‘அழியாத ஒன்றை அறியவேண்டும்’’ என்ற பெருவிருப்பு கொண்டவர்கள், பயன் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை!
பாஷ்யங்கள் (விரிவுரைகள்)
உபநிஷத் சொற்றொடர்களின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு தகுதியான விரிவுரைகள் தேவை. இவை, ‘பாஷ்யங்கள்’ எனப்படுகின்றன. பாஷ்யங்களுள், முக்கிய மானவை அபேத ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்ட, ‘சங்கர பாஷ்யம்’, பேத ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்ட ‘மத்வ பாஷ்யம்’ மற்றும் சடக ச்ருதிகளை ஆதாரமாகக் கொண்டு இராமானுசர் இயற்றிய ‘ஸ்ரீபாஷ்யம்’ ஆகியவையாகும்.
உபநிஷத்துக்களின் மொழி அணுகுமுறை
  உபநிஷத்தில் இருக்கக்கூடிய ஆழ்ந்த பொருள்களைப் புரிந்துகொள்ள அவற்றில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் நடை மற்றும் மொழியை அறிந்து உணர்வது அவசியம். சில உதாரணங்கள் காட்டப்படுகின்றன:-
1) அறிமுகப்படுத்தும் கதைகள்:- த்யானம் மற்றும் அறிவு ஆகியவற்றை ஆசிரியர் தன் மாணாக்கர்களுக்கு விளக்குகிறார். அ. வேள்வி நடத்துவது குறித்து யாஜ்ஞ வல்கியர், ஜனகரின் சபையில் அறிஞர்களுடன் உரையாடு கிறார். (ப்ருஹதாரண்ய உபநிஷத்). ஆ. வருணன் தன் மகனான ப்ருகுவிற்கு கற்றுத்தருகிறார் (தைத்ரீய உபநிஷத்).
2) உபநிஷத் என்னும் சொல்லே கூட, சில இடங் களில் ஓர் கோட்பாட்டையோ, முக்கியமான சொல்லையோ, ஓர் ரஹஸ்யத்தையோ அல்லது ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவையோ சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கும்.
3) வர்ணனைகள் (உவமைகள்) உத்தாலகன், தன் மகனுக்கு, ப்ரஹ்மம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந் திருப்பதை, ஓர்: உப்புக்கட்டி, தண்ணீரில் கரைந்திருக்கும் உதாரணத்தைச் சொல்லி விளக்குகிறார்.
4) நீதிக்கதைகள்:- தேவர்களுக்கு கற்பிக்கையில், ப்ரஜாபதி, ‘‘த’’ என்னும் எழுத்தை மூன்று முறை உபயோகப் படுத்தி, தயாத்மா (சுயக்கட்டுப்பாடு-த3த்தா (தருமம்), த்3யேத்வம் (கருணை) என்பதைக் கற்றுத்தருகிறார். இவை மூன்றும் கட்டுப்பாடு, தாராள மனப்பான்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும்.
5) கருத்து நிரம்பிய சிறு வாசகம் அல்லது நன்மொழி:- புகழ்பெற்ற ‘நேதி நேதி’ (ப்ருஹ.உப.) ‘இது அல்ல இது அல்ல’ என்னும் சொற்றொடர்.
6) உருவகப்படுத்துதல் மற்றும் உவமைகள்:- ஓர் உதாரணம்:- ‘தேரில் அமர்ந்திருக்கும் வீரனைப் போன்றவன், ஆத்மா’. உடலாகிய தேரை சரியான வழியில் செலுத்தி, அழிவற்ற தன்மை என்னும் இலக்கை அடையவேண்டும். (சாந்.உப. 8-4-1).
7) அடையாளக் குறியீடுகள்:- வேடிக்கையான முடிவுகள், தொகுத்துக் கூறுதல் ஆகியவை, உபநிஷத்துக் களில் பல இடங்களில் காணப்பெறுகின்றன.
8) உபநிஷத்துக்களில் அதிகமாக காணப்படும் சொற்றொடர்:- ‘‘ய ஏவம் வேத3’’ என்பது. இதன் பொருள், ‘‘எவனொருவன் இவ்வாறு அறிகிறானோ’’ என்பதாகும். இதற்கு உதாரணம்:- எந்த வெற்றி ப்ரஹ்மமாகிறதோ, எது ப்ரஹ்மத்தை அடைவதாகிறதோ-அந்த வெற்றியை, இவன் வெல்கிறான். அந்த அடைதலை அவன் அடைகிறான். -எவன் இவ்வாறு அறிகிறானோ. (கௌஷீதகி-1-7).
உபநிஷத்தில் காணப்படும் மஹாவாக்கியங்கள்:-
  இந்த மஹா வாக்கியங்கள் மிக உயர்ந்த தத்துவங்களை மிகச் சிறிய அளவில் சுருக்கித் தருகின்றன. உதாரணமாக:-
1) தத்த்வமஸி - அது நீயாக இருக்கிறாய்
- அஹம் ப்3ரஹ்மாஸ்மி - நான் ப்ரம்மம்.
- ப்ரஜ்ஞானம் ப்3ரஹ்ம - ப்ரம்மம் என்பது அறிவு; 4) ஸோ அஹம் அஸ்மி - நான் அவன்;
- அயம் ஆத்மா ப்3ரஹ்ம - இந்த ஆத்மா ப்ரம்மம்.
உபநிஷத்தில் காணப்படும் இரட்டை எதிர்மறை:-
‘நேதி நேதி’ - இது அல்ல, இது அல்ல.
இனி, அடுத்ததாக புகழ் பெற்றதான பத்து உபநிஷத்துக்களைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப் படுகின்றன:-
இந்த தலைப்புகளின் கீழ்:- 1) வேதத்துடன் தொடர்பு; 2) கட்டமைப்பு மற்றும் அளவு: 3) தனித்தன்மை 4)சிறப்பான பகுதிகள் மற்றும் உபநிஷத் அறிவிக்கும் திரண்ட பொருள்; 5) அமைதிபடுத்தும் மந்திரம்; (சாந்தி மந்திரம்): 6)உபநிஷத்தின் மையக் கருத்து.
உபநிஷத்துக்களின்-வகைகள்
வேதங்களின் உத்தரபாகம் என்று சொல்லப்படுகின்ற உபநிஷத்துக்களில் பகவத் பரத்வம் பேசப்படும் இடங்களை முதலில் ஆராய்வோம்.
பொதுவாக, உபநிஷத்துக்கள் என்று சொல்லப்படும் அனைத்தையும் வேதங்களாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், உபநிஷத்துக்கள் என்ற பெயரில் நாளது வரையில் புதிது புதிதாக பல மந்திரத் தொகுப்புகளை எழுதி தங்கள் கொள்கைக்கு வலிமை சேர்க்க சிலர் முயற்சித்துள்ளனர். பூர்வபாகங்களான ஸம்ஹிதைகள், ஆரண்யகங்கள், ப்ராஹ் மணங்கள் இவற்றில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு மாறாகக் காணப்படும் கருத்துக்கள் கொண்ட எந்த நூலையும் வேதம் எனக்கொள்ள இயலாது. அது பிற்காலக் கற்பனைப் புனைவுதான், அந்த வகையில், பூர்வபாகங்களோடு நேரடித் தொடர்புடையவையாகவும், காலங்காலமாக ஸ்வரத்துடன் ஓதப்பட்டு வருபவையாகவும் உள்ள உபநிஷத்துக்கள் 10 ஆகும். அவற்றை தஶோபநிஷத் என்று கூறுவர். உபநிஷத் துக்கள் என்றால் அவைதான்.
அந்தக் கற்பனை உபநிஷத்துக்களின் மொழி, நடையைப் பார்த்தாலே, சாதாரண புராண ச்லோகங்களின் நடையைப் போன்று இருப்பதை நாம் காணமுடியும். இவை மிகவும் பிற்காலத்தில், சிலர் தங்கள் கொள்கைக்கும் ‘‘வேதத்தில் சான்று உண்டு’’ என்பதைக் காட்டிக்கொள்வதற் காக தங்களின் சமயக் கொள்கைகளுக்குத் தக்கவாறு எழுதி, அவற்றுக்கு ‘உபநிஷத்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இப்படிப்பட்ட உபநிஷத்துக்கள் வேதம் பற்றிய ஆராய்ச்சியில் எடுத்துக் கழிக்கக்கூடத் தகுதியற்றவை என்பதால், அக்கற்பனை உபநிஷத்துக்களைக் காற்கடைக் கொண்டு (தள்ளிவிட்டு), வேதத்தோடு முழுத்தொடர்பு டையவையான அந்த 10 உபநிஷத்துக்களை ஆராய்வோம்.
1) ஈஶாவாஸ்யோபநிஷத்
1) வேதத்துடன் தொடர்பு- இந்த உபநிஷத் ஸுக்ல யஜுர் வேதம் மற்றும் வாஜஸநேய ஸம்ஹிதையுடன் தொடர்பு கொண்டது.
2) கட்டமைப்பு மற்றும் அளவு-இது ஓர் தலையாய உபநிஷத்தாக இருந்த பொழுதிலும், இதில் 18 மந்திரங்களே உள்ளன. அளவில் சிறியவற்றில் இது இரண்டாவது. இது நான்கு பகுதிகளாக விவரிக்கப்பட்டுள்ளது.
3) தனித்தன்மை:-
அ) இந்த உபநிஷத், பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையை உரைப்பதற்கு முன்பே இருந்தது.
ஆ) வேதாந்த தேசிகரால் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இ) இதில் உள்ள முதல் மந்திரம், எல்லா உபநிஷத் துக்களில் உள்ள முக்கியமான பொருள்களை உட் கொண்டுள்ளது.
ஈ) முதல் மந்திரம் ‘‘ஈஶா’’ என்னும் சொல்லைக் கொண்டு தொடங்குவதால் இந்த உபநிஷத் இந்த பெயரைப் பெறுகிறது.- ‘கண்ணிநுண் சிறுதாம்பு’ ‘அமலனாதிபிரான்’, ‘நான்முகன் திருவந்தாதி’ ஆகிய திவ்யப் பிரபந்தங்களைப் போல.
‘‘ஈஶா’’ என்னும் பெயரின் விளக்கம் மற்றும் மந்திரங் களின் சுருக்கமான பொருள்.
  பொதுவாக ‘ஈஶா’ என்னும் பெயரால் , ‘ருத்ரன்’ புரிந்து கொள்ளப்படுகிறான். இந்த நோக்கு, எல்லா விரிவுரை யாளர்களாலும் மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மஹோப நிஷத்தில், படைப்பிற்கு முன்பு நாராயணன் ஒருவன் மட்டுமே இருந்ததையும், ப்ரஹ்மனோ, ஈசானனோ (சிவனோ/ருத்ரனோ) இருக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது. இந்த உபநிஷத்திலேயே 16-வது மந்திரத்தில் ‘ஈஶா’ என்பது, ‘புருஷன்’ என்பதோடு, தைத்ரீய நாராயண உபநிஷத்தின் பலத்தால், ஸமன்வயப்படுத்தப் பட்டுள்ளது. ஈஶனாக இருப்பதற்கு, அவன் ‘உள்ளும் புறமும்’ வ்யாபித்து, ‘ஸர்வ வ்யாப்தி’யைப் பெற்றவனாக இருக்க வேண்டும். இந்தப் பண்பு, நாராயணனுக்கே பொருந்தும்; ருத்ரனுக்கு அல்ல. எனவே, இந்த உபநிஷத்தின் தலைப்பிலுள்ள ‘‘ஈஶா’’ என்பது, பரமாத்மாவாகிய ஸ்ரீமந்நாராயணனையே குறிக்கும். உலக வழக்கில், அந்தணன், அரசன், கறுப்பன், பருத்தவன் என்னும் சொற்கள், குறிப்பிடப்பட்டவர்களின் உடலைக் குறிப்பதோடு, அந்த உடலை ஞானத்தின் மூலம் வ்யாபித்திருக்கும் (ஊடுருவியிருக்கும்) ஜீவாத்மாவையும் குறிப்பது போல, இந்த அண்டத்திலுள்ள எல்லா சித் மற்றும் அசித் (அறிவுள்ள மற்றும் அறிவற்ற) பொருள்களை, பரம புருஷன் ஆத்மாவாக ஊடுருவியிருப்பதால், எல்லா பெயர்களும் அப்பொருளைத் தன் உடலாகக் கொண்ட எம்பெருமானையே குறிக்கும். இதைக் காட்டித்தரும் உபநிஷத் வார்த்தைகள் ‘‘ப்ரஹ்மனும் நாராயணனே’’ (ஸுபாலோப நிஷத்) - இவையாகும். இவற்றில் ‘‘நாராயண’’ என்னும் சொல்லோடு எல்லா அறிவுள்ள மற்றும் அறிவில்லாத பொருள்கள் ‘‘ஸாமாநாதிகரணமாக’’ (ஒரே வேற்றுமையில்) சொல்லப்பட்டிருப்பதால், எல்லாச் சொற்களும் நாராயண னையே குறிப்பது முக்கியப் பொருள் அல்லது முதல் பொருளிலாகும்.
இரண்டாவதான முக்கியமற்ற பொருளைக் குறிப்ப தல்ல. (கௌணம்/ஔபசாரிகம்) எல்லாச் சொற்களும் இயற்கையாகவே நாராயணனைக் குறிக்கின்றன. எனவே, ‘‘ஈஶாவாஸ்ய உபநிஷத்’’ என்பதில் உள்ள ‘‘ஈஶா’’ என்பதும் நாராயணனையே குறிக்கும்.
இந்த உபநிஷத்தில், முதலிரண்டு மந்திரங்கள், மிக உயர்ந்த ஒன்றின் எல்லாவற்றையும் ஊடுருவும் தன்மை யையும், கர்மத்தை பற்றின்றி ஆற்றி, இறைவனால் தரப் பட்டவைகளை பற்றின்றி அநுபவித்து, நூறு வருடங்கள் வாழ்ந்து, அந்த இறைவனை அடையும் சாதனைக்கு துணைக் கருவியாக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன.
அடுத்த ஆறு மந்திரங்கள், 3 முதல்-8 வரை, பரமாத்மாவின் இயல்பை விரிவாக விளக்குவதுடன், உபாஸகனின் இயல்பையும் விளக்குகின்றன. அடுத்த ஆறு மந்திரங்கள் சாதனைகளின் இயல்பை, முக்கியமாக, வீடு பேற்றைப் பெறுவதற்கான தன் உபாயங்களை விளக்கு கின்றன. கடைசி நான்கு மந்திரங்கள் 15 முதல் 18-வரை வீடுபேற்றை விரும்புவர்கள், பரமாத்மாவை த்யானிப் பதற்கான வழிபாட்டு முறைகளைக் கூறுகின்றன.
மொத்தத்தில், இந்த உபநிஷத், கர்மத்தையும், ஜ்ஞானத்தையும் இரண்டு கால்களாக கொண்டு வீடுபேற்றை நோக்கி நடக்க வலியுறுத்துகிறது.
இந்த உபநிஷத்தில் காணப்படும் மஹாவாக்யம், ‘‘ஸோஹமஸ்மி’’. இது 16-வது மந்திரத்தில் காணப்படுகிறது. இதன் பொருள் - ‘‘எவன் அந்த புருஷனோ, அவன் நான்’’
இந்த உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் ‘‘ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத் பூர்ணமுத3ச்யதே| பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவஶிஷ்யதே||’’ ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ||
‘எல்லாமே முழுமையானது; முழுமையானதிலிருந்து முழுமையானது வெளிப்படுகிறது; முழுமையானதிலிருந்து முழுமையானது எடுக்கப்பட்ட பிறகும், முழுமையானது இருந்தபடியே இருக்கிறது’.
2) கேனோபநிஷத்
1. வேதத்துடன் தொடர்பு:- சாம வேதம். தலவாகர (ஜைமிநி) ப்ராஹ்மணம்.
2. கட்டமைப்பு மற்றும் அளவு:- இந்த உபநிஷத்தில் நான்கு காண்டங்கள் உள்ளன. இவற்றில் 35 மந்திரங்கள் அடக்கம். இந்த காண்டங்களில், இரண்டு, உரையாடல் நடையிலும், ஒன்று [allegory] உருவகப்படுத்தல், நான்காவது தியானம்.
3. தனித்தன்மை:- அ) ஈஶாவாஸ்ய உபநிஷத்தைப் போலவே, இதுவும் உபநிஷத்தின் முதல் வார்த்தையான, ‘‘கேன’’ என்பதைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ‘‘கேன’’ என்றால், ‘‘யாரால்?’’ என்று பொருள்படும்.
  ஆ) சங்கரர் இதற்கு இரண்டு பாஷ்யங்கள் இயற்றியுள்ளார்.
இ) எல்லா உபநிஷத்துக்களுக்குள்ளும் இதுவே அதிக பகுப்பாய்வு மற்றும் சமயம் சார்ந்த செய்திகளைக் கொண்டது.
ஈ) இந்த உபநிஷத்தில் நாம் பெறும் சிறப்புச் செய்தி:- ‘நமக்குக் கிடைத்திருக்கும் மனிதப் பிறவி, மிகவும் அரியது. இதை நாம் ஆன்மீகச் சிந்தனை வளர முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். மிக உயர்ந்த உண்மையைக் கண்டறிய வேண்டும். இப்பிறவியை வீணடித்து விட்டால், பெரிய நாசம் ஏற்படக்கூடும்’. இதை ஈடுசெய்ய கோடானு கோடி வருடங்கள் ஆகக்கூடும்.
இந்த உபநிஷத்தின் முதல் பகுதியில் காணப்படும், கேள்வி-பதில் வடிவிலான உரையாடல்:-
கேள்வி-யாரிடமிருந்து உயிர் தோன்றியது? எது மனிதனை பேசவும், கேட்கவும் காணவும் செய்கிறது?
பதில்-நமக்குள் அந்தர்யாமியாக உள்ள ப்ரஹ்மம் இதைச் செய்கிறான். அவன் உதவியில்லாமல், கைகால்களை அசைக்க இயலாது; காண இயலாது, கேட்க இயலாது; மனம் கூட அவனாலேயே இயக்கப்படவேண்டும்.
கேள்வி-இந்திரியங்களை இயக்குவது எது? மனமா? அல்லது வேறு முகவரா?
பதில்-இவை எதுவுமில்லை. இவற்றை இயக்குவது, முற்றிலும் வேறுபட்ட தத்துவம். அதுவே இந்த அண்டத்தை உண்டுபண்ணி, காத்து, அழிக்கும் சக்தி.
கேள்வி-ப்ரஹ்மத்தின் இயல்பு என்ன?
பதில்-இதை யாரும் முழுவதுமாக அறிய இயலாது. ஆனால், அதை உணர்ந்து ஆராய வேண்டியது அவசியம். ‘‘நான் அறிவேன்’’ என்று ஒருவர் கூறுவாராகில், அது உண்மையல்ல. அவன் (ப்ரஹ்மம்) எந்த உருவில் இருக் கிறான் என்று கூறுவது மிகவும் கடினம்.
அவன் இந்திரியங்களால் உணரப்படுவதில்லை; அவனே எல்லா அறிவிற்கும் ஆதாரமாக இருந்தபோதிலும், அவனை உணர்ந்தறிவதோ, முழுமையாக அறிவதோ இயலாதது.
இரண்டாம் பகுதி, ஓர் உருவகக் கதை. இதில் ‘நான்’ என்று அகந்தைகொண்ட தேவர்கள், தாமே தம் வெற்றி களுக்குக் காரணமென்றிருக்க, அவர்கள் நிலையை அவர்களுக்கு பரப்ரஹ்மம் உணர்த்தியதைப் பேசுகிறது.
மூன்று மற்றும் நான்காம் பகுதிகள், தேவர்களுக்கும் யக்ஷர்களுக்கும் இடையே நடைபெற்ற ஓர் உரையாடலாக உள்ளது.
ஓரு முறை, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் மூண்டுவிட, பரப்ரஹ்மம் தேவர்கள் பக்கலிலிருந்து அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தான். இதை உணராத தேவர்கள், இந்த வெற்றி தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணி இறுமாந்திருந்தனர். இவர்களுடைய பெருமையையும், கர்வத்தையும் அடக்க நினைத்த பரமாத்மா ஓர் யக்ஷனாக வடிவுகொண்டு, தேவர்களுடன் போருக்கு வந்தார். இவரை வெல்வதற்கு அக்நியும் வாயுவும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், யக்ஷனுக்கு எதிரில் இந்த இரண்டு தேவர்களும் வலுவிழந்து நின்றனர். அக்நியால் எதையும் எரிக்க இயலவில்லை; வாயுவால் ஓர் சிறு புல்லைக் கூட அசைக்க முடியவில்லை. இருவரும் தோல்வியுற்றுத் திரும்பினர். இந்த சூழ்நிலையில், இந்திரன் வந்தான். அவனாலும் யக்ஷனை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. இந்திரன் ஹிமவானின் புதல்வியான உமாவை (அம்பிகையை) அணுகி, இந்த யக்ஷன் யார் என்பதையும், நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குக் காரணத் தையும் வினவினான். உமையவள், யக்ஷனாக வந்தது பரமாத்மாவே என்பதையும், தேவர்களின் கர்வத்தை அடக்கவே பரமாத்மா, அவ்வாறு வந்தான் என்பதையும் விளக்கினாள்.
இந்த உருவகக்கதை நமக்கு சில மறுக்க இயலாத உண்மைகளை விளக்குகிறது. இக்கதையில் வரும் தேவர்கள், உருவகப்படுத்தப்பட்ட நம் புலனுறுப்புகள்; யக்ஷனாக வந்து அவர்களை வென்றவன், மிக உயர்ந்த சக்தியான பரமாத்மா. புலன்களையும், மனத்தையும் வென்றால் மட்டுமே, பரமாத்மாவை உணரமுடியும் என்பதே இதிலிருந்து நாம் அறியும் உண்மை. இப்படிப்பட்ட ப்ரஹ்ம ஜ்ஞானம், முதிர்ந்த ப்ரஹ்ம வித்யையில் இறுதிப் பயனைப் பெறுகிறது.
4. சாந்தி மந்திரம்:-
ஆப்யாயந்து மமாங்கா3நி வாக்ப்ராணஶ்சக்ஷு: ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி I ஸர்வம் ப்3ரஹ்மௌபநிஷத3ம் மா(அ)ஹம் ப்3ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம ராகரோத3நிராகரணமத் ஸ்வநிராகரணம் மே(அ)ஸ்து I ததா3த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து II
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II
‘‘என்னுடைய கைகால்கள் உறுதியாக வளரட்டும்; என்னுடைய பேச்சு, ப்ராணன், கண்கள், செவிகள், உயிர்/உள்ளுறம், மற்றும் எல்லா புலன்களிலும் விறுவிறுப்பு அதிகமாகட்டும்; நான் ப்ரஹ்மத்தை மறுக்காமல் இருக்கக் கடவேன்; அதுவும் என்னை மறுக்காமல் இருக்கட்டும். உபநிஷத்தில் கூறப்படும் எல்லா நற்குணங்களும் ஆத்மா வில் வசிக்கட்டும். அவை என்னில் வேர் பிடித்து வசிக் கட்டும்.’’
3. முண்டக உபநிஷத்
1. வேதத்துடன் தொடர்பு-அதர்வண வேதம்- சௌநகீய சாகை.
2. கட்டமைப்பு மற்றும் அளவு- இதில் மூன்று பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு அத்யாயங்கள் உள்ளன. மொத்தமாக 65 மந்திரங்கள், ச்லோக வடிவில் உள்ளன.
3. தனித்தன்மை-இந்த உபநிஷத், இந்த பெயர் பெறுவதற்குக் காரணம், ‘‘முண்ட’’ என்றால், சிரைக்கப்பட்ட தலையைக் குறிக்கும். (மொட்டைத்தலை). இந்த பெயர் வரக் காரணம், தலை முடி சிரைக்கப்பட்ட ஓர் ஸந்நியாசி இதன் ஆசிரியராக இருந்திருக்கக்கூடும். அல்லது எப்படி ஓர் கத்தியானது தலை முடியை நீக்குகிறதோ, அதுபோல, உபநிஷத்துக்களில் உள்ள பர வித்யையானது, ஆத்மாவை மறைத்திருக்கும் திரையான அவித்யையை வேரோடு நீக்குவதால், இந்த பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும். (காம்பறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை இருந்து வாழும்- திருமாலை-38) என்பதைக் கருத்தில் கொள்க.
இந்திரன் நல்லவற்றையே எங்களுக்கு நல்க வேண்டும். நிலத்தின் கடவுளான ‘பூஷா’ மேலும் மேலும் செல்வத்தை எங்களுக்கு அளித்திட வேண்டுகிறோம். எதிரிகளை வெல்லும் வல்லமை படைத்த கருடன் எங்களுடன் உறவு கொண்டவனாய் இருக்கட்டும். தேவர்கள் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு க்ஷேமத்தினை அளிக்கட்டும்.
தேவர்களுள் முதல்வனான நான்முக ப்ரஹ்மன் ப்ரஹ்மத்தைக்குறித்த அறிவை தன் மூத்த பிள்ளையான அதர்வனுக்கு போதித்தார். அதர்வன் அந்த வித்யையை அங்கீரனுக்கு போதித்தார். இவர் அதை, சத்யவாஹனுக்கு போதித்தார். அவர் அதை அங்கீரசனுக்குப் போதித்தார். இதன் பிறகு, சௌனக என்ற பெயர் கொண்ட முனிவர் அங்கீரசனை அணுகி, ‘‘எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்த தாகும்?’’ என்பதைத் தமக்கு கற்றுத்தருமாறு வேண்டினார். அங்கீரசன் இதைக் குறித்து, ‘உயர்ந்தது’ மற்றும், ‘தாழ்ந்தது’ இரண்டு விதமான கல்விகள் (அறியும் முறை) இருப்பதாகக் கூறி, அவற்றை விளக்கினார்.
இதில், ‘தாழ்ந்த அறிவானது, வேதங்கள் ஸ்ம்ருதிகள் மற்றும் வேதாங்கங்களான - சந்தஸ், வ்யாகரணம், ஜ்யோதிஷம்’ - ஆகியவற்றால் பெறப்படுகிறது.
உயர்ந்த அறிவானது, அழியாத ஒன்றைக் குறித்த அறிவு. அதுவே எல்லா இருப்பினங்களின் தோற்றுவாய் மற்றும் அடையத்தக்க இலக்கு. இது இதயத்தில் உள்ளது. அறிவாளிகள் இதைக் குறித்தே த்யானம் செய்கின்றனர். இந்த மிக உயர்ந்த ஒன்றை உணர்ந்த பிறகு, இதயத்தில் தேங்கியுள்ள ஐயப்பாடுகள் ஆகிய முடிச்சுகள் அவிழ்த்து விடப்படுகின்றன. எல்லா ஐயப்பாடுகளும் விலகி விடுகின்றன.
இந்த உள்ளுறை ஒன்றின் தலை, ஸ்வர்க்கலோக மாகும், சூரியனும் சந்திரனும், அதன் இரு கண்கள்; திசைகள் அவன் இரு செவிகள்; வேதமே அவன் பேச்சு; அவன் ப்ராணனே காற்று; இந்த முழு அண்டம் அவன் இதயம்; அவன் இரண்டு பாதங்கள் பூமியும் நெருப்புமாகும்’
இந்த உபநிஷத்தில் முதலிரண்டு காண்டங்கள் ‘பர’ மற்றும், ‘அபர’ வித்யைகளைக் குறித்துப் பேசுகின்றன. ‘அபர’ வித்யை முதலில் விவரிக்கப்படுகிறது. இது உலகியல் வாழ்க்கைத் தொடர்பான நெறிமுறைகளைக் கற்பிக்கிறது. ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவை வழங்குவது, ‘பரவித்யை’ எனப்படுகிறது. இதில், ப்ரஹ்மத்தின் திவ்யமங்கள விக்ரஹம் பஞ்சபூதங்களால் ஆக்கப்படாமல், அப்ராக்ருதமான மூலப்பொருள்களால் ஆக்கப்பட்டிருப்பதாக விவரிக்கப்பட்டி ருக்கிறது. சிலந்தியானது முதலில் வலையைப் பின்னி, பின்பு அதில் நுழைந்து வசிப்பதுபோல, ப்ரஹ்மமானது அண்டத்தை, முதலில் உயிருள்ள மற்றும் உயிரல் பொருள் களால் (அசேதன) உருவாக்கிவிட்டு, பின்பு அவற்றைப் பின் தொடர்ந்து உள்நுழைந்து உறைகிறது.
இரண்டாவது காண்டம், ப்ரஹ்ம ஜ்ஞானத்தை விளக்குகிறது. அதை குருவின் வாயிலாக அடையப்பட வேண்டியதைக் கற்பிக்கிறது.
மூன்றாவது காண்டம் புருஷனின் உருவத்தை வர்ணிக்கிறது. இவன் இதயத்தில் இருப்பதை உணர்ந்து, த்யானிப்பவர்களின் பந்தப்படுத்தும் விலங்குகள், தெரித்து உடைவதை விளக்குகிறது.
நான்காவது காண்டம், ‘ஓம்’ என்னும் ப்ரணவத்தைத் த்யானிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்குகிறது. ஜீவ பரமாத்மாக்களுக்கு இடையே உள்ள வேறுபாடு விளக்கப் படுகிறது.
ஐந்தாவது காண்டத்தில்தான், புகழ் பெற்ற ‘‘ஒரு மரத்தில் இரண்டு பறவைகள்’’ என்னும் உவமானத்தையும், அதன் விளக்கத்தையும் காண்கிறோம்.
இந்த உபநிஷத்தில் காணப்படும் ஓர் முக்கியமான மந்திரம், ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுபட்டவர்கள், வேறுபட்ட தன்மை உடையவர்கள்’ என்பதை விளக்க ப்ரமாணமாக பல இடங்களில் எடுத்தாளப்படுகிறது.
‘‘த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே I
தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநச்நந்நந்யோ அபி4சாகஶீதிII’’
(முண்டக. 3-1-1)
இதன் பொருளாவது:- [அழகிய (ஜ்ஞாந கர்மங் களாகிற) இறக்கைகளை உடையவையும், ஒத்த குணத்தை உடையவையும், ஒன்றையொன்று விட்டுப்பிரியாதவை யுமான இரு பறவைகள் (பரமனும் ஜீவனும்) ஒரே மரத்தில் (தேஹத்தில்) அமர்ந்திருக்கின்றனர்; அவைகளில் ஒன்று (ஜீவன்) (கர்மமாகிற) பழத்தை இனிதாக உண்கிறது. அப்பழத்தை உண்ணாமலிருந்தும் மற்றொரு பறவை (பரமன்) மிகவும் பிரகாசிக்கிறது.]’ என்பதாகும்.
இந்த மந்திரத்திற்கு ரங்கராமானுஜமுநி அளிக்கும் விளக்கம்:
‘‘ஒரு வீடு பற்றி எரிகையில், உள்ளுறைபவர்கள் எல்லோருமே எரிந்து சாம்பலாக வேண்டியிருக்க, எப்படி ஒரே உடலில் வசிக்கும் ஜீவ, பரர்களுள் கர்மம் ஜீவனை மட்டுமே தீண்டும்? பரமாத்மாவை அல்ல’ என்பது எவ்வாறு பொருந்தும்’’ என்னும் கேள்விக்கு, இந்த மந்திரம் பதிலளிக் கிறது. ஜீவன் என்னும் பறவைக்கு இரண்டு சிறகுகளாக இருப்பவை, கர்மம் மற்றும் ஜ்ஞானம். பரமாத்மா என்னும் பறவைக்கு இரு சிறகுகளாக இருப்பவை, ஸங்கல்பம் மற்றும் சக்தி ஆகியவை. ஆகையால், இரண்டு பறவைகள் ஒரே மரத்திலிருந்தாலும், கர்ம வயப்பட்ட ஜீவனானவன், தான் பல பிறவிகளில் சேர்த்த கர்மத்தின் பலனை அநுபவிக் கிறான். பரமாத்மா கர்ம வசப்படாதவன் ஆகையாலே அந்த பலனை அநுபவிப்பதில்லை.
இந்த உபநிஷத்தின் தேர்ந்த பொருளாவது:- ‘ஒருவர் ‘‘ஓம்’’ என்னும் மந்திரத்தை வில்லாக்கி, ஆத்மாவை அம்பாக்கி, பரப்ரஹ்மமாகிய இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்’ என்பது.
இந்த உபநிஷத்திலுள்ள முக்கியமான கருத்துக்கள்:-
1. அண்டத்தின் படைப்பைக் குறித்த விளக்கம். இந்த படைப்பு பரம புருஷனின் ஸங்கல்பத்தைச் சார்ந்திருப்பது விளக்கப்படுகிறது.
2. ஜீவாத்மா, பரமாத்மா ஆகியோரிடையே உள்ள வேறுபாடு தெளிவாக விளக்கப்படுகிறது.
3. ஸ்வாமி ராமாநுஜர், தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில், சரீர- சரீரி பாவத்தை விளக்க, இந்த உபநிஷத்தில் உள்ள ச்லோகங்களை பெரும் அளவில் கையாண்டுள்ளார். சேதனர் கள், அவன் சரீரம்; அவனே சரீரி!
இதில் உள்ள சாந்திபாடம்:
ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4யஜயத்ரா: ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம் ஸஸ்தநூபி4ர் வ்யஶமே தே3வஹிதம் யதா3யு:
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வதே3வா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
இதன் பொருள்- ‘‘எங்கள் செவிகள் கேட்கப்பட வேண்டிய மங்களமானவற்றை மட்டுமே கேட்கட்டும். எங்கள் விழிகள், காணத்தக்க மங்களமானவற்றை மட்டுமே காணட்டும். எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆயுட்காலம் வரை நாங்கள் நல்ல உடல்நலத்துடனும், பலத்துடனும் வாழ்ந்து அவன் புகழ் பாடக்கடவோமாக!’’ என்பதாகும்.
4. கடோபநிஷத்
1) வேதத்துடன் தொடர்பு:- யஜுர் வேதம்-- தைத்திரீய சாகை, சாம வேதம், அதர்வண வேதம் மற்றும் ரிக் வேதத்துடன் சில தொடர்புகள்.
2) கட்டமைப்பு மற்றும் அளவு:- இந்த உபநிஷத்தில், இரண்டு அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொன் றிலும் இரண்டு ‘வல்லிகள்’ (பகுதிகள்) உள்ளன.
3) தனித்தன்மை:- அ. பெர்ஷிய மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட முதல் உபநிஷத். ராஜாராம் மோஹன்ராய் இதன் ஆங்கில வடிவத்தை வெளிக் கொணர்ந்தார். ஆ. எட்வின் ஆர்னால்ட் என்பவர் இதை ‘மரணத்தின் ரகசியம்’ என்னும் தலைப்பில் ‘சீர் பாடலாக’ப் பாடி இதன் பெருமையை வெளியிட்டார், இ. ‘சமயம் மற்றும் தத்துவ ஞானத்தின் உண்மையான வெளிப்பாடு’ என்று கருதப்படுகிறது இந்த உபநிஷத்.
4) பெருமை மற்றும் அறிய வேண்டிய செய்திகள்:- அ. அதிகமாக வாசிக்கப்படும் உபநிஷத். இதில் வரும் நசிகேதனின் கதை, பள்ளிகளில் படிக்கப்படும் பாடப்புத்தகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆ. இதில் கூறப்படும் செய்திகள், ஒப்புயர்வற்று, அழகோடு, தெளிவாக உள்ளன. இ.பரமாத்மாவின் பெருமை தெளிவாக காட்டப் பட்டுள்ளது. ‘அவனை அறிபவர்களே அழிவற்ற தன்மை பெறுவது’ விளக்கப்படுகிறது. ஈ. சிறுவனான நசிகேதன், ப்ரஹ்ம வித்யையைத் தேடிச்செல்வது மிகவும் வியப்பிற் குரியது.
இந்தப் பின்னணியின் வரலாறு உபநிஷத்திலேயே காணப் படுகிறது.
‘வாஜச்ரவஸ்’ என்ற ஒரு மஹரிஷியிருந்தார். இவர் ‘விஶ்வஜித்’ என்ற யாகத்தை மேற்கொண்டார். அதன் பலனாவது, ஸ்வர்க்க லோகத்திற்கு ஈடான பலன்களைப் பெறுவதாகும். இந்த வேள்வியை நடத்தித்தரும் குருமார் களுக்கு, அவர்கள் கேட்ட த்ரவ்யத்தை தரவேண்டும் என்ற நியதி உள்ளது. அவ்வாறு கேட்கப்படும் த்ரவ்யம் எத்தனை பெரியதாக இருந்தாலும் தரவேண்டியதே.
ஒருமுறை, நசிகேதனின் தந்தையான வாஜச்ரவஸ் என்பவர், இந்த வேள்வியை நடத்தினார். வேள்வியை நடத்த வந்த குருமார்களுக்கு, சிறிதும் உபயோகப்படாத, மலட்டுப் பசுக்கள் போன்றவற்றைத் தானமாகத் தந்தார். இதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நசிகேதன், தன் தந்தையிடம், ‘‘தந்தையே! என்னை யாருக்குத் தானமாகத் தரப்போகிறீர்கள்?’’ என்று மீண்டும் மீண்டும் கேட்டு நச்சரித்தான். பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டிருந்த வாஜச்ரவஸ், தன் மகனின் நச்சரிப்பால் ஆத்திரமடைந்து, சிறிதும் யோசியாமல், ‘‘உன்னையா? உன்னை யமனுக்கு தானமாக அளிக்கிறேன்’’ என்று கூறிவிட்டார். தான் கூறிய வார்த்தையின் தாக்கத்தை எண்ணி, வாஜச்ரவஸ் வருந்தினாலும், நசிகேதன், சிறிதும் அயரவில்லை. ‘தந்தை தன்னை யமனுக்கு தானமாகத் தந்துவிட்டார்’ என்ற அந்த சொல்லையே பெரிதாகக் கொண்டு, யமனைச் சந்திக்க யமலோகத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டான்.
நசிகேதன் யம பட்டணத்தை அடைந்த நேரம், யமன் அங்கே இருக்கவில்லை. வேலையாக வெளியே சென்றிருந் தான். மூன்று நாட்களுக்குப் பின்பு தன் இருப்பிடம் திரும்பிய யமன், சிறுவனான நசிகேதன் மூன்று நாட்களாக உணவு உறக்கமின்றி தன் மாளிகை வாசலில் காத்திருப்பதைக் கண்டு மனம் கனிந்து, மூன்று இரவுகள், கழிந்ததற்கு இணையாக நசிகேதனுக்கு, மூன்று வரங்களைத் தருவதாக வாக்களித்தான்.
முதல் வரமாக நசிகேதன், தன் தந்தையின் எண்ணத் தில் மாற்றம் ஏற்படுத்தவும், தான் மீண்டும் தன் தந்தையிடம் செல்லவும் கேட்டான். இரண்டாம் வரமாக, ஸ்வர்க்க லோகங்களைப் பெற்றுத்தரும் அக்நி வித்யையை போதிக்கும் படி கேட்டான்.
யமன் அக்நி வித்யையின் விவரங்களை நசிகேத னுக்குப் போதித்தான். அக்நியை முன்னிட்டு செய்யும் வேள்வி குண்டத்தின், வடிவமைப்பை விளக்கினான். இந்த வேள்விக்கு ‘நசிகேதன் வேள்வி’ என்றே, தான் பெயர் சூட்டுவதாகவும், இந்த வேள்வியை மூன்று முறை செய்பவர்கள், மரணத்தின் தளையிலிருந்து, இந்த உடல் இருக்கையிலேயே விடுபடுவார்கள் என்றும் கூறினான்.
நசிகேதன் கேட்ட மூன்றாவது வரமே, இந்த உபநிஷத்தின் முக்கிய சாரமாக அமைகிறது. மரணத்தின் பின்பு நடப்பதென்ன?, ஆத்மாவின் நிலையென்ன? என்பதை தனக்கு விளக்குமாறு கேட்டான், நசிகேதன். யமன், இதை நசிகேதனுடன் விவாதிக்க விருப்பம் கொள்ளவில்லை. இதற்குப் பதிலாக வேறு எந்த செல்வத்தை வேண்டு மானாலும் கேட்கச் சொல்லி நசிகேதனை வற்புறுத்தினான். நசிகேதன் இதற்கு இணங்கவில்லை.
இறுதியாக, யமன் நசிகேதனுக்கு மரணத்திற்குப் பின்பு ஆத்மாவிற்கு ஏற்படும் நிலையை விளக்க முற்பட்டான். இதுவே இந்த உபநிஷத்தின் சாரமாக அமைகிறது. ‘மனித வாழ்வின் முடிவான உயர்ந்த இலக்கு, மிக உயர்ந்த ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவைப் பெறுவதாகும்’ என்பதே அது.
யமன் நசிகேதனுக்கு எடுத்துரைத்த உண்மை:-
  ஆத்மா என்பது சிறியதைக் காட்டிலும் சிறியது; மிகப்பெரியதைக் காட்டிலும் பெரியது. அது பிறப்பதில்லை; இறப்பதில்லை. அது கொல்வதுமில்லை; கொல்லப்படுவது மில்லை; ஆத்மாவைப் பற்றிய அறிவு, ஓர் ஆசிரியரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
யமன், நசிகேதனுக்கு, ‘‘ஓம்’’ என்னும் ப்ரணவத்தின் இயல்பையும், அதுகொண்டு த்யானிக்கப்பட வேண்டி யதையும் விளக்கினான்.
எடுத்துரைக்கப்பட்ட பரமாத்மாவின் பண்புகள்:
1) அசரீரம் - உடலில்லாதவன்; 2) மஹாந்தம்-மிக உயர்ந்தவன்; 3) விபு-எல்லாவற்றிலும் ஊடுருவியிருப்ப வன்; 4) என்றும் அழிவில்லாதவன், நிலையானவன், மாற்றங்களற்றவன்; 5) ஈசானம்-காலத்தின் இறைவன்; 6) அதிதி - ஹிரண்ய கர்பன்; 7) ஜ்யோதி ஸ்வரூபன் - மாசற்று ஒளிர்பவன்; 8) ஸர்வவ்யாபி- எல்லா இடத்திலும் ஊடுருவியிருப்பவன்.
ப்ராணனும் புலனுறுப்புகளும் அவனைச் சார்ந்தவை. அவனே துடிப்புள்ள ப்ராணன்; அதனால் தான் படைப்புத் தொழில் நடைபெறுகிறது.
இந்த பரமாத்மாவை, உபந்யாஸங்களைக் கேட்ப தாலோ, மிகச் சிறந்த கல்வியறிவாலோ பெற முடியாது. அவன் மனமுவந்து யாரைத் தேர்வு செய்கிறானோ, அவனால் தான் அவனை (பரமாத்மாவை) அடைய இயலும். அவன் அருளைப்பெற சீரிய வாழ்க்கை நெறி, நன்னடத்தை, நீதி நெறி,தூய்மை ஆகியவை தகுதிகளாக அமையும்.
இந்த உடல், ஓர் ரதத்திற்கு ஒப்பானது. ஜீவாத்மா அதிலமர்ந்திருக்கும் பயணி. அறிவே ரத சாரதி. (ஓட்டுபவர்). மனமே கடிவாளம். புலன்களே குதிரைகள். புலனுகர்ச்சிக்கான பொருள்களே வீதிகள். அறிவை ரதசாரதியாகவும், நன்கு கட்டுப்படுத்தப்பட்ட மனதை கடிவாளமாகவும் கொண்ட ஒருவர், ரதத்தை ஓட்டி, பயணத்தின் முடிவை அடைகிறார். அதுவே மிக உயர்ந்த பரமாத்மாவான நாராயணனின் இருப்பிடம்.
தேவ-மனித விலங்குகளாகவும், தாவரங்களாகவும் கர்மத்திற்கேற்ப, ஜீவர்கள் பல உடல்களை அடைகிறார்கள். எனவே, வீடுபேற்றை அடைய ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும். ஜீவ பரமாத்மாக்களுக்கிடையில் உள்ள உறவைப் புரிந்து கொண்ட ஒருவருக்கு, ஜீவனின் இயல்பு, பரமாத்மா வின் இயல்பு, அவனை அடைவதற்கான வழி, அவ்வாறு அவனை அடைய முயற்சிக்கும்போது ஏற்படும் இடர்ப் பாடுகள், அந்த இடர்ப்பாடுகள் நீங்கி, அவனை அடைந்து, அவனுக்குத் தொண்டு செய்து, அதனால் ஏற்படும் இன்பமும் அவனுக்கே ஆக வேணும் என்ற நினைவு கொள்வது ஆகியன புலப்படுகின்றன. தூய்மையான நீரை, தூய்மையான நீர் நிறைந்த நீர் நிலையில் சேர்ப்பது போல.
உடலில் 72,000 (நாடி) நரம்புகள் உள்ளன. இவற்றுள், இதயத்தைச் சூழ்ந்திருக்கும் 101 நரம்புகள் முக்கியமானவை. இவற்றுள் 101ஆவது நாடி மிகவும் முக்கியமானது. இது உச்சந்தலையை நோக்கி செல்கிறது. இதன் பெயர் ‘ஸுஷும்நா நாடி’. மரணம் நேர்கையில், இதன் வழியாகச் செல்பவன், வைகுண்டத்திற்கு வழிநடத்தப் பெற்று, பரமாத்மாவின் இருப்பிடத்தை அடைகிறான்.
இதன் சாந்தி பாடம்:
ஸஹநாவவது | ஸஹ நௌ பு4நக்து | ஸஹ வீர்யம் கராவஹை தேஜஸ்விநாவ தீ4தம ஸ்து மா வித்3விஷாவஹை | | ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
இதன் பொருள்:-’அவன் நம் இருவரையும் (ஆசிரியரையும் மாணாக்கரையும்) காப்பாற்றட்டும், அவன் நம் இருவருக்கும் சத்து நிறைந்த உணவை அளிக்கட்டும், நாம் இருவரும் ஒன்றாக வலிமையைப் பெற அவனருளட்டும், நம் கல்வி ஒளிதருவதாகட்டும், நாம் ஒருவரை ஒருவர் எக்காலத்திலும் வெறுக்காமல் இருக்கக்கடவோமாக, உடல் நலக்குறைவினாலும் மனஉளைச்சலாலும் ஆன்மிகத்தில் பற்றற்றும் இருக்கும் நம்மை, அவற்றை நீக்கி எங்கும் அமைதி தவழச் செய்யட்டும்.
5. ப்ரஶ்நோபநிஷத்
  1) வேதத்துடனான தொடர்பு- முண்டகம் மற்றும் மாண்டூக்ய உபநிஷத்துக்களைப் போல, இந்த உபநிஷத்தும் அதர்வ வேதத்துடன் தொடர்பு கொண்டது.
2) கட்டமைப்பு மற்றும் அளவு - இது உரை நடையில் அமைந்துள்ளது. இதன் பகுதிகளான 16, 13, 12, 11, 7 மற்றும் 8 உள்ள சொற்றொடர்கள் வினா வடிவில் உள்ளன.
3) தனித்தன்மை - இந்த உபநிஷத் முழுவதுமே, வினா விடை வடிவில் அமைந்துள்ளது
4) சிறப்பம்சம் மற்றும் உபநிஷத் தரும் செய்தி:- அ. இதில், பிப்பலாதர் என்னும் ஒரே ஆசிரியர் தம்முடைய ஆறு மாணாக்கர்களின் வினாக்களுக்கு விடையளிக்கிறார். ஆ.இதில், பரிணாம வளர்ச்சி, காலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, சூரியனும் சந்திரனும் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றனர் எனப்படுகிறது. இ. பிப்பலாதருடைய கருத்துகள் மிகச் சிறப்புடையன. விஜ்ஞானக் கண்ணோட்டம் கொண்டவை. ஆன்மீகம் மற்றும் மனோதத்துவ கருத்துக்களைக் கொண்டவை.
பிப்பலாதரின் ஆறு மாணாக்கர்களின் பெயர் கள்:- 1. சுகேசன், 2. சத்யகாமா, 3. கார்கியா, 4. கௌசல்யா, 5.பார்கவ மற்றும் 6. கபந்தி. இவர்களே பிப்பலாதரிடம் கேள்வி கேட்பவர்கள்.
இவர்கள் அறுவரும், பிப்பலாதரை முதலில் அணுகிய போது, அவர், இவர்களை நோக்கி, வரப்போகும் ஒரு வருடகாலத்திற்கு, எளிமை (சிக்கனம்) தவிர்ப்பு (விரதம்) மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மேற்கொண்டு வாழ்ந்த பிறகு, திரும்ப வரச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
முதல் கேள்வியைக் கேட்டவர், கபந்தி என்பவர். இவர் படைப்பைக் குறித்து வினவினார். இதற்கு பிப்பிலாதர், அளித்த பதில்:- ப்ரஜாபதியானவர், எளிமையான வாழ்வை மேற்கொண்டபிறகு, அன்னம் மற்றும் ப்ராணன் என்னும் இருவரைப் படைத்தார். அவர்கள் வழியாக படைப்பைத் தொடங்கினார். இவற்றுள் சூரியன் என்பது ப்ராணன், சந்திரன் என்பது அன்னம்- அல்லது உயிர் மற்றும் பருப்பொருள். ஆசிரியரானவர் ப்ராணனின் துணைப் பகுதிகள், மற்றும் இந்த்ரியங்களின் தோற்றம் சூரியனிலிருந்து ஏற்படுவதை விவரித்தார். உணவு மற்றும் உடல் சந்திரனிலிருந்து தோன்றுவதை விளக்கினார். இந்த உபநிஷத்தில், வருடம், மாதம், ஒளிமிக்க மற்றும் இருண்ட இருவாரங்கள், பகல் மற்றும் இரவு, உணவு மற்றும் வீரியம் ஆகிய எல்லாமே ப்ரஜாபதி என்று அழைக்கப்படுகின்றன. இறைவனே, இவை இருப்பில் வரும் போது, இவற்றின் உருவத்தை அடைகிறான்.
இரண்டாம் கேள்வியைக் கேட்டவர் பார்கவர்:-இது 15 தத்துவங்களை ஆதரிக்கும் தேவர்களின் படைப்பு தொடர் பானது. மூன்று உலகங்களில் உள்ள எல்லாமே, ப்ராணத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மூன்றாவது கேள்வியைக் கேட்டவர், கௌசல்யா:- இதுவும் ப்ராணன் என்னும் தத்துவத்துடன் தொடர்புடையது. ப்ராணன் எவ்வாறு, எங்கிருந்து வருகிறது. அவன் தன்னை 5 பகுதிகளாக எவ்வாறு பங்கிட்டு விநியோகித்துக் கொள்கிறான்? அவன் எவ்வாறு வெளியேறுகிறான்?
பதிலாகத் தரப்படுவது:- ப்ராணன், ஆத்மா விலிருந்து தோன்றுகிறான், இவன் சிறப்பான சில செயல்பாடுகளால், ப்ராணன், அபானன், வ்யானன் உதானன் மற்றும் ஸமானன் என்று ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு உறைகிறான். ஆத்மா, இதயத்தில் வசிக்கிறான். ப்ராணன், கண், காது, வாய், நாசி, ஆகியவற்றில் வசிக்கிறான். இவற்றின் நடுவில் சமானன் வசிக்கிறான். சமானன், உணவை உடல் முழுவதிற்கும் சமமாக வினியோகிக்கிறான். இதயத்தில் உள்ள, 101 நாடிகள் (ரத்த நாளங்கள்), வ்யானனை உடையவையாக உள்ளன. (நூறு கிளைகள் மற்றும் 72,000 உப கிளைகள் உண்டு). இவற்றில், ‘உதானன்’ என்று அழைக்கப்படும் ஒன்று ஜீவனை ‘ஸுஷும்நா’ நாடி வழியாக, ஜீவனை மேல் உலகத்திற்கு சுமந்து செல்கிறது.
இவ்வாறு ப்ராணனின் தோற்றம் அதன் வருகை, இருப்பிடம் எல்லாவற்றையும் ஊடுருவும் தன்மை, ஐந்து வகைப்பட்ட பிரிவுகள், அதன் உள்ளுறை நோக்கம், இவற்றை அறிந்தவன், அழிவற்ற நிலையைப் பெறுகிறான்.
நான்காவது கேள்வியைக் கேட்பவர், கார்கியர். இது உறக்கம் மற்றும் கனவு தொடர்பானது. எந்த புலன்கள் உறங்குகின்றன? எவை விழித்திருக்கின்றன? இவற்றுள் எவை கனவைக் காண்கின்றன?
பதிலாகத் தரப்பட்டது:- உறங்குகையில், எல்லா கலைகளும் காரண சரீரத்தில் அமிழ்ந்து, உயர்ந்த தத்துவமான மனதுடன் ஒன்றுபடுகிறது. அப்பொழுது ஒருவர் கேட்ப தில்லை, காண்பதில்லை, நுகர்வதில்லை, சுவைப்பதில்லை, தொடு உணர்வு இல்லை, பேசுவதில்லை.
ப்ராணன் என்னும் அக்நிகள் மட்டுமே விழித்திருக் கின்றன. (கார்ஹபத்யம் போன்ற அக்நிகள்). கனவு நிலையில் க்ஷேத்ரஜ்ஞன் (வசிப்பவன்) என்றழைக்கப்படும் ஜீவாத்மா மட்டுமே கனவைக் காண்கிறான்.
ஆழ்ந்த உறக்கத்தில், ஜீவாத்மா, பரமாத்மாவின் மிக அருகில் சென்று அவனுடன் ஒன்றுபடுகிறான். ஆகையால் அவன் கனவுகளைக் காண்பதில்லை.
ஐந்தாவதாக வினா எழுப்பியவர், சத்யகாமா என்பவர். இவர் கேட்டது:- மனிதர்களுள் யார், ‘‘ஓம்’’ என்னும் ப்ரணவத்தை மரணமடையும் வரையிலும் த்யானிக் கிறார்கள்? அவருக்கு இதனால் எந்த உலகம் கிடைக்கிறது?
‘‘ஓம்’’ என்னும் ப்ரணவம், ‘அ’, ‘உ’, ‘ம’ என்னும் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இதை ஒரு மாத்திரை அளவு காலத்திற்கு உச்சரித்தால், இதை உச்சரிப்பவர், மரணமடைந்தவுடன் இதே உலகத்திற்கு திரும்பி வருவது ஏற்படுகிறது. இதை இரண்டு மாத்திரை அளவு உச்சரிப்பவர், சந்திரலோகம் வரை சென்று அங்குள்ள அநுபவங்களைப் பெற்றபின், திரும்பிவருதல் ஏற்படுகிறது. இதையே மூன்று மாத்திரை அளவு உச்சரிப்பவர், மிக உயர்ந்த ஒளியை அடைந்து, ப்ரஹ்மத்தை அடைகிறார். இதயத்தில் வசிக்கும் புருஷனைக் காணப்பெறுகிறான்.
(’’மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால் மூன்றெ ழுத்தாக்கி’’ - பெரியாழ்வார் திருமொழி - 4-7-10)
இறுதியான ஆறாவது கேள்வி சுகேசனால் எழுப்பப் பட்டது:- ‘அவன் (பரமாத்மா) எங்கே வசிக்கிறான்?’ என்று வினவினான்?
இதற்கு பதிலாகத் தரப்பட்டது:- ‘ஓ! மகனே! அவன் இந்த உடலிலேயே வசிக்கிறான். இவன் அண்ட மளாவியவன். ஜீவன், நுண்ணியவன். பரமாத்மாவிடமிருக்கும் 16 கலைகள், உடலுருக்கொண்ட ஜீவாத்மாவிடமுள்ள 16 கலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
பரம புருஷனிடம் காணப்படும் 16 கலைகளாவன:- 1.ப்ராணன் - உயிர்; 2. ஸ்ரத்தா- நம்பிக்கை; 3. கம் - ஆகாசம்; 4. வாயு - காற்று; 5. ஜோதி - நெருப்பு/தீ; 6.அப - நீர்; 7. ப்ருத்வி - பூமி: 8. இந்த்ரியம் - புலன்கள்: 9. மந்- மனம்: 10. அன்னம் - உணவு: 11. வீர்யம் - வலிமை: 12.தபஸ் - எளிமை: 13. மந்த்ர - வேதங்கள்; 14.கர்ம- வேலை; 15. லோகா-உலகங்கள்: 16. நாம - பெயர் மற்றும் வடிவம்.
இவை மனிதர்களிடம் வகைப்படுத்தப்பட்டு உள்ள நிலை:- 11 புலன்கள் (ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்த்ரியங்கள் மற்றும் மனம்) மற்றும் ஐந்து நுண்ணிய தனிமங்கள்.
காண்பவன் ப்ரஹ்மத்திடம் அமிழ்கையில், இந்த 16 கலைகள் ப்ரஹ்மத்திடம் மறைந்து விடுகின்றன. இதுவே முக்தி அல்லது விடுதலை எனப்படுகிறது.
இதன் சாந்தி பாடம்:
ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4யஜயத்ரா: | ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம் ஸஸ்தநூபி4ர் வ்யஶமே தே3வஹிதம் யதா3யு: ஸ்வஸ்தி ந: இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வதே3வா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
இதன் பொருள்:-
ஓம்! ஓ! தேவதைகளே! எங்கள் செவிகள் மங்களமான வற்றையே செவிமடுக்கட்டும். எங்கள் விழிகள் மங்கள மானவற்றையே காணட்டும். எமக்கு ஒதுக்கப்பட்ட வாழ் நாட்களை நாங்கள் முழுவதும் வாழக் கடவோமாக. எங்களுக்கு நல்ல ஆரோக்யமும் வலிமையும் கிடைக்கட்டும். நாங்கள் அவனை புகழ்ந்து பாடி வாழ்வோமாக!
6. ஐதரேயோபநிஷத்
1. வேதத்துடனான தொடர்பு:- இது, ரிக் வேதத்திலுள்ள ஐதரேய ஆரண்யகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த உபநிஷத்தை அறிவித்து பரவச் செய்த ‘‘மஹிதாஸ ஐதரேய’’ என்பவரின் பெயரை ஒட்டியே இந்த உபநிஷத் இந்த பெயரைப் பெறுகிறது.
2. கட்டமைப்பு மற்றும் அளவு:- சாந்தி மந்திரத் தையும் சேர்த்து இது ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது, ‘‘ஆத்ம சதகம்’’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஆத்மாவைக் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் ஆறு பகுதிகளைக் கொண்டது என்றபடி.
3. தனித்தன்மை:- இந்த உபநிஷத், வாமதேவர் என்று பெருமை பெற்ற ரிஷியின் அனுபவத்தை உள்ளடக்கியது.
4. சிறப்பம்சங்கள் மற்றும் உபநிஷத்தில் காணப்படும் சிறப்புச்செய்தி:-
அ. அண்டத்தின் படைப்பை வேதத்தின் கோட்பாடு களைக் கொண்டு தெளிவாக விளக்குகிறது.
ஆ. இந்த அண்டம் முழுவதும் மிக உயர்ந்த ப்ரஹ்மத்திடமிருந்து தோன்றியது என்பது விளங்குகிறது.
இ. தனிப்பட்ட ஜீவன் உலகளாவிய ஜீவனுடன் கொண்ட ஒற்றுமை மற்றும் அடையாளம் ஆகியவற்றிற்கு அழுத்தம் தருகிறது.
முதல் அத்யாயம்:- படைப்பைக் குறித்த விபரங்களை அடையாளக் குறியீடுகளோடு/ வரைபடங் களோடு/ வருணனைகளோடு தருகிறது.
முதல் பகுதி - முதலில் இருந்த ஒரே இருப்பினமான ஆத்மா, ‘‘அம்பஸ்’’ என்பதைப் படைத்தது. (மேலே ஸ்வர்க்கம்/ ஆதாரம்) மரீசி - நடுப்பகுதி, மா-பூமி, அப -பூமிக்குக் கீழ் உள்ள நீர்நிலை.
நீரிலிருந்து, அவன் (ஆத்மா) புருஷனை உருவாக்கி னான். இந்த புருஷனைக் குறித்து த்யானிக்கையில், வாய், வெடித்துத் திறந்தது. அதிலிருந்து அண்டம் வெளிப்பட்டது. அதுவும், வெளிவந்தவுடன் வெடித்தது. வாயிலிருந்து பேச்சு/வாக்கு வெளிப்பட்டது. அதிலிருந்து நெருப்பு தோன்றியது. இரண்டு நாசித் த்வாரங்கள் வெடித்து திறந்துகொண்டன. அதிலிருந்து ப்ராணன் தோன்றியது. அதிலிருந்து வாயு உற்பத்தியானது. கண்கள் வெடித்துத் தோன்றியவுடன் பார்வை வந்தது. அதிலிருந்து சூரியன் தோன்றியது. காதுகள் வெடித்து, ‘கேட்பது’ தோன்றியது. அதிலிருந்து திசைகள் தோன்றின. தோலானது வெடித்து மனம் தோன்றியது. அதிலிருந்து சந்திரன் தோன்றினான். கொப்பூழ் வெடித்து அதிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் மூச்சு தோன்றியது. அதிலிருந்து மரணம் தோன்றியது. படைக்கும் உறுப்புகள் வெடித்து அதிலிருந்து வீரியம் தோன்றியது.
இரண்டாம் பகுதி - இவ்வாறு படைக்கப்பட்ட இலக்குகளுக்கு, ஓர் வசிப்பிடம் தேவைப்பட்டது. அதற்கு அவன், மனிதன் என்னும் வடிவத்தை ஏற்படுத்தினான். (பசு மற்றும் குதிரையை படைத்த பின்பு).
படைத்தவன், தான் படைத்த இலக்குகளை உடலினுள் நுழையச் சொன்னான். நெருப்பு (பேச்சு/வாக்கு) வாயில் நுழைந்தது. வாயு (ப்ராணன்) நாசித்துவாரங்களுள் நுழைந்தது. திசைகள் காதுகளுக்குள் நுழைந்தன. செடிகளும் மரங்களும் முடி வடிவத்தில் தோலில் நுழைந்தன. கீழ் நோக்கிச் செல்லும் மூச்சாக மரணம் கொப்பூழில் நுழைந்தது. வீரியமாக மாறிய நீர் பிறப்புறுப்புகளை அடைந்தது.
மூன்றாம் பகுதி - படைத்தவன் உணவை த்யானித்து, உணவைப் படைத்தான். ஆனால் அச்சம் கொண்ட உணவு மீண்டும் திரும்பி பறக்கத் தொடங்கியது. அவன் (படைத்தவன்) அவற்றை கண்கள், காதுகள் போன்றவற்றால் பற்றிக்கொள்ள நினைத்தான். ஆனால், தோல்வியடைந்தான் - ஆனால், இறுதியில் அபானன் என்னும் வாயுவால் அதைப் பற்றினான். ‘அபானன்’ என்பது கீழ்நோக்கிச் செல்லும் மூச்சு-வாயு. இதுவே உணவை ஆதரிக்கும் முக்யமான காரணம்.
இரண்டாம் அத்யாயம் - இதில், ஒரே ஒரு பகுதி உள்ளது. (இது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கெதிரில் வாசிக்கக் கூடாது எனப்படுகிறது).
அவன் மனிதனுக்குள் விதையாக நிலை பெற்றான். மனிதன் இதை சாரமாக தன்னுள் கொண்டிருக்கிறான்.
கர்ப்பம் ஏற்படுவது முதற் பிறப்பு எனப்படுகிறது. பிறப்பு (ப்ரசவம்) என்பது, இரண்டாம் பிறப்பு எனப்படுகிறது. ஒருவர் வயோதிகராகி, இந்த உலகைவிட்டு நீங்கி மீண்டும் பிறப்பது மூன்றாம் பிறப்பு எனப்படுகிறது.
புகழ் பெற்ற ரிஷியான வாமதேவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘‘நான் (தாயின்) கர்பத்தில் வாசம் செய்தபொழுது, இந்த எல்லா தேவர்களின் பிறப்பையும் அறிந்திருந்தேன். இரும்புச் சங்கிலிகள் போன்று வலிமையுடைய நூற்றுக்கணக் கான உடல்கள் என்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தன. ஆனால், நான் ஓர் பருந்தைப்போல, என் பலத்தால் அவற்றை உடைத்தெறிந்து விட்டு சீக்கிரமாக கீழுள்ள வழியால் வெளிவந்து விட்டேன்’’. இவ்வாறு வாமதேவர் அழிவற்றவானார்.
மூன்றாம் அத்யாயம் - ஒரு பகுதி மட்டுமே கொண்டது. ப்ரஹ்மன், இந்திரன் ஹிரண்யகர்பன், தேவர்கள், பஞ்சபூதங்கள், எல்லாஉயிரினங்கள், மனிதர்கள், காய்கறிகள், அசையாத பொருள்கள், இவை எல்லாமே ப்ரஹ்மம் என்கிறது இந்த உபநிஷத்.
அறிவே இவற்றின் அடிப்படை. அறிவு-உணர்வே ப்ரஹ்மம் - ‘‘ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம’’ - இது இந்த உபநிஷத்தில் காணப்படும் ஓர் மஹாவாக்யம். இந்த வாக்கியம், முழு இருப்பின் (அண்டத்தின் நிலைப்பை) இயல்பை வேதாந்த மெய்ப்பொருள் வாயிலாக மிக சிறப்பாக முன் வைக்கிறது.
மேற்கண்டவாறு ப்ரஹ்மத்தை அறிபவன் அழிவற்ற தன்மையை அடைகிறான்.
இதன் சாந்தி மந்திரம்:-
வாங்மே மநஸி ப்ரதிஷ்டி2தா மநோ மே வாசி ப்ரதிஷ்டி2தமாவிராவீர்ம ஏதி4 வேத3ஸ்ய ம ஆணீஸ்த2: ஶ்ருதம் மே மாஹாஸீரநேநாதீ4தேநா ஹோராத்ராந் ஸந்த3தா4ம்ய்ருதம் வதி3ஷ்யாமி ஸத்யம் வதி3ஷ்யாமி தன்மாமவது தத்3வக்தாரமவது அவது மாமவது வக்தாரம் || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
என் பேச்சு (வாக்கு) மனதில் இடம் கொண்டுள்ளது. என் மனமும் வாக்கும் வேதம் பேசும் உண்மையை உணரச் செய்கின்றன. வேதச் சொற்கள் என்னை கைவிடாமல் இருக்கட்டும். நான் உண்மையையே நினைக்கக் கடவேன். உண்மையையே பேசக்கடவேன். அது என்னையும் என் ஆசிரியரையும் காப்பாற்றட்டும்.
7. மாண்டுக்யோபநிஷத்
1. வேதத்துடனான தொடர்பு-இந்த உபநிஷத், அதர்வண வேதத்துடன் தொடர்பு கொண்டது.
2. கட்டமைப்பு மற்றும் அளவு- இது மிக சிறியதும் குறுகியதுமான உபநிஷத். இதில் 12 மந்திரங்கள் மட்டுமே உள்ளன.
3. தனித்தன்மை- அத்வைத ஸித்தாந்தத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவரும், சங்கரரின் ஆசார்யருமான ‘கௌடபாதா’ இந்த உபநிஷத் தொடர்பாக ஓர் காரிகையை வெளியிட்டார். இதுவே சங்கரரின் அத்வைத ஸித்தாந்தத் திற்கு அடிப்படையாக அமைந்தது.
4. சிறப்பான அம்சங்கள் மற்றும் உபநிஷத் தரும் செய்தி-
அ. ப்ரணவமாகிய ‘‘ஓம்காரம்’’ நான்கு பகுதிகளைக் கொண்டது. இதில், மூன்று பகுதிகளைக் குறிக்கும் எழுத்துக்கள் உண்டு. நான்காவது பகுதி எழுத்தால் குறிக்க படாதது. அதுவே உண்மையில் ஆத்மா.
ஆ. இந்த உபநிஷத் முடிவாக வழங்கும் அறிவுரை-’’ தன்னால் ஒருவர் தனக்குள் நுழையவேண்டும்’
இந்த உபநிஷத் வாயிலாக கற்பிக்கப்படுபவை:-
1. ‘ஓம்’ என்பது, இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை உள்ளடக்கியது. காலத்திகு அப்பாற்பட்டதை யும் தன்னுள் கொண்டது.
2. காணப்படும் பொருள்வகையான, இருப்பு எல்லாம் ப்ரஹ்மமே; ஆத்மாவும் ப்ரஹ்மமே.
3. ‘‘உண்மை’’ என்னும் தத்துவம், நான்கு உணர் வெனும் நிலைகளில் வெளிப்படுகிறது. அவை, விழித் திருப்பது, கனவு காண்பது, கனவற்ற ஆழ்ந்த உறக்கம் மற்றும் இவற்றிற்கு மேம்பட்ட உயர்வான ஓர் நிலை. இந்த நான்கு நிலைகள், ப்ரஹ்மத்தின் நான்கு பாதங்களாக வர்ணிக்கப் படுகின்றன. இவற்றுள், முதல் மூன்று நிலைகள், ‘‘ஓம்’’ என்னும் ஓங்காரத்தின் மூன்று எழுத்துக்களையும், நிசப்த மானது நான்காவதான ‘‘அர்த்த மந்திரத்’’தையும் குறிக்கும்.
‘‘ஓம்’’ என்பதை ப்ரஹ்மத்துடன் ஒப்பிடப்படுகிறது இந்த உபநிஷத். இதை இயற்றியவரான மாண்டுக்ய மஹரிஷியின் பெயரால் வழங்கப்படுகிறது. ‘‘மண்டூகம்’’ என்றால் தவளை. தவளையானது, தாவிக்குதித்துச் செல்லும் இயல்பைக் கொண்டது. தவளையைப் போலவே, ஒருவர், விழித்திருக்கும் நிலை, கனவு காணும் நிலை மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகியவற்றிலிருந்து இவற்றின் வரம்பைக் கடந்து, மேலான நிலைக்குத் தாவிச்செல்லவேண்டும். ‘‘அக்ஷர உபாஸனை’’ என்ற பெயர் கொண்ட இந்த உபாஸனை, ‘‘ஓம்’’ என்பதை த்யானித்து, ஒருவர் உறுதியாக நான்காவது நிலையான ‘துரீய’ நிலைக்குச் செல்லலாம்’.
‘‘ஓம்’’ என்பதில் உள்ள எழுத்துக்கள் குறிப்பது, விளக்கப்படுகிறது. (ஓம்=அ, உ, ம) முதல் எழுத்தான ‘அ’ என்பது விழித்திருக்கும் நிலையை விளக்குகிறது. இது ‘‘வைஶ்வானரன்’’ எனப்படும். இந்த நிலையில் இவன் பருத்த நிலையில் உள்ள எல்லாப் பொருள்களையும் அநுபவிக்கிறான்.
ஆ. இரண்டாம் எழுத்தான, ‘உ’ ‘தைஜஸம்’ என்பது, கனவு நிலையைக் குறிக்கும். இது உள்நோக்கிச் செல்லும் உணர்வு. இது நுண்ணிய பொருள்களை அநுபவிக்கிறது. இந்த நிலையில், இவன் எல்லோருடனும் சமமானவனா கிறான். ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் மட்டும், இவன் குடும்பத்தில் பிறக்கிறார்கள்.
இ. மூன்றாம் எழுத்தான, ‘ம’ என்பது, ‘ப்ரஜ்னன்’ எனப்படுகிறது. இது கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கும். இந்நிலையில் விருப்பங்களோ கனவுகளோ இல்லை. ஒருவர் உணர்வு மற்றும் பேரானந்தத்துடன் ஒன்றாகிறார்.
ஈ. அர்த்த மந்திரத்தில், நான்காவது பகுதி:- வரம்புகளைக் கடந்த நிலை. இது எண்ணங்கள், இரட்டைகள், அறிவு எல்லாவற்றையும் கடந்த ஓர் நிலை. இது மங்கள மானது. இரண்டாவதாக ஒன்றும் இல்லாதது. இது துரீய நிலை எனப்படுகிறது.
எவனொருவன் இந்த எல்லா நிலைகளையும் அறிந்துள்ளானோ, அவன், ‘தனக்குள்’ நுழைகிறான். அண்ட மளாவிய ஆத்மா, இரண்டு அம்சங்கள் (கூறுகளைக்) கொண்டது. இதில் நுண்ணியது வைஶ்வாநரன் எனப் படுகிறது. மிகவும் ஸ்தூலமானது (பருத்தது) ‘விராட்’ எனப்படுகிறது.
இந்த உபநிஷத்திலுள்ள மஹா வாக்யமானது- ‘‘அயம் ஆத்மா ப்ரஹ்ம’’ - தனிப்பட்ட ஜீவன் மிக உயர்ந்த ஜீவனிடமிருந்து பிரிக்கப்படாத இயல்பை, இந்த மஹாவாக்யம் காட்டித் தருகிறது.
சாந்தி மந்திரம்-
ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா ப4த்3ரம் பஶ்யேமாக்ஷபி4யஜயத்ரா: | ஸ்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாம் ஸஸ்தநூபி4ர் வ்யஶமே தே3வஹிதம் யதா3யு: ஸ்வஸ்தி ந: இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வதே3வா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: |
‘‘ஓம்! தேவதைகளே! எங்கள் செவிகள் மங்களமான வற்றை மட்டுமே கேட்கட்டும். எங்கள் விழிகள் மங்களமான வற்றை மட்டுமே காணட்டும். நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாழ்நாட்களை திடமான கை கால்களுடன் உங்கள் புகழைப் பாடியவண்ணம் வாழக்கடவோமாக’’
8. தைத்திரீய உபநிஷத்
1. வேதத்துடனான தொடர்பு- கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் தைத்திரீய ஆரண்யகம். இந்த உபநிஷத்தின் தோற்றம் மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. கட்டமைப்பு மற்றும் அளவு- இதில் மூன்று, ‘வல்லி’கள் (பகுதிகள்) உள்ளன. இவற்றில் முறையே 12, 9 மற்றும் 10 அநுவாகங்கள் உள்ளன.
3. தனித்தன்மை - அ. மாணவர்கள் தாங்கள் கல்வி கற்று முடிந்தபிறகு, பாடசாலையை விட்டு வெளியே செல்கையில், இந்த உபநிஷத்திலுள்ள மந்திரங்கள் ஓதப்படத் தக்கவை. எந்த வேறுபாடும் இல்லாமல், எல்லா மாணாக்கர் களாலும், எல்லாக் காலங்களிலும் ஓதப்படத் தக்கவை.
ஆ. உபநிஷத்துக்களில் காணப்படும் தத்துவங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றை உணர்த்தும், கையகப்படுத்தும், ஓர் திசைகாட்டியாக உதவுகிறது.
4. சிறப்பம்சங்கள் மற்றும் உபநிஷத் தரும் செய்தி-
அ. இதில் காணப்படும் முக்யமான அறிவிப்பு, ‘ப்ரஹ்மத்தை அறிந்தவன், மிக உயர்ந்த நிலையை அடைகிறான்’ என்பது. (ப்ரஹ்ம விதாப்நோதி பரம்)
ஆ. ஆறு வேதாங்கங்களில் ஒன்றான ‘சிக்ஷை’ என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த சிக்ஷையானது, வேதங்களைக் கற்பதற்கான சரியான உச்சரிப்பு, சொல்லிற்குத் தரப்படும் ஒலியழுத்தம், சொல்லை உச்சரிக்கையில் பயன்படுத்தப்பட வேண்டிய வலிமை, தெளிவாக எடுத்துரைத்தல் ஆகிய வற்றைக் கற்றுத்தருகிறது.
இ. மிக அதிக அளவில் ஓதப்படும் வேதங்களுள் இதுவும் ஒன்று,
1. சிக்ஷா வல்லி- குருகுலத்தில் கல்வி கற்று முடித்த மாணவர்கள் குருகுலத்தை விட்டுச் செல்கையில், ஆசிரியர் அவர்களுக்கு நல்கும் அழகான நல்லுபதேசம் இதில் காணப்படுகிறது. இது தற்காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டமளிப்பு விழா சொற்பொழிவு போன்றது.
ஆசிரியர் ப்ரஹ்மத்தை இவ்வாறு துதிக்கிறார். ‘‘நான் தமக்குள் நுழையக் கடவேன்; தாம் என்னுள் நுழையக்கடவீர்’’ ‘‘வ்யாஹ்ருதிகள்’’ எனப்படும் மெய்யுணர்வை வெளிக் காட்டும் அசைகளானவை ‘பூ: புவ: சுவ: மற்றும் ம:’ என்பவை. இவை விளக்கப்படுகின்றன. ‘பூ:’ என்பது உலகம், அக்நி, ரிக்வேதம் மற்றும் ப்ராணனைக் குறிக்கிறது. ‘புவ:’ என்பது ஆகாயம், காற்று, சாமவேதம், அபானன் என்னும் ப்ராணன் ஆகியவற்றைக் குறிக்கிறது. ‘சுவ:’ என்பது ஸ்வர்க்கம், சூரியன், யஜுர் வேதம் மற்றும் வ்யானன் என்னும் ப்ராணனைக் குறிப்பிடுகிறது. ‘ம:’ என்பது சூரியன், சந்த்ரன், எல்லா வேதங்களையும் பெருமைப்படுத்தும் ப்ரஹ்மம், மற்றும் உணவு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
  இவ்வாறு, ப்ரஹ்மத்தின் 16 அம்சங்களைக் காண் கிறோம். இவை ப்ரச்னோபநிஷத்தில் பேசப்பட்டுள்ள 16 கலைகளை ஒத்ததாகும்.
மாணவர்கள் அடையாளக் குறியீடுகளாக உள்ள இந்த வ்யாஹ்ருதிகளைக் குறித்துத் த்யானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
‘இந்த ச்ருதியானது ஐந்து பகுதிகளாக (பங்க்திகள்) வகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த அண்டம், ப்ரஹ்மம்’ என்று கற்பிக்கப்படுகிறது. ‘‘ஓம்’’ என்பதும் ப்ரஹ்மம். இந்த அண்டமே, ‘‘ஓம்’’ என்பது. ‘‘ஓம்’’ என்பதே எல்லா வேதங் களிலும் உள்ள முதல் மந்திரம். அதுவே சப்தம் (ஒலி) ப்ரஹ்மம் அதுவே ப்ரஹ்மத்தின் உறைவிடமாகும்.
ஆசிரியர், தம் மாணாக்கர்களுக்கு மேலும் இவ்வாறு வலியுறுத்துகிறார். ‘‘உண்மையையே பேசுங்கள்; தர்மங்களை சரியாக ஆற்றி உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வேதங்களைக் கற்றறிவதிலிருந்து நழுவாதீர்கள். உங்கள் அன்னை உங்களுக்கு தெய்வமாக இருக்கட்டும். உங்கள் தந்தை உங்கள் தெய்வமாக இருக்கட்டும். உங்கள் ஆசிரியர் உங்களுக்கு தெய்வமாக இருக்கட்டும். விருந்தினர் உங்களுக்கு தெய்வமாக இருக்கட்டும்’’.
2. ஆனந்தவல்லி:-
அ. இதில் விளக்கப்படும் உண்மைகள், ‘ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்கள், மிக உயர்ந்த, ‘அறிந்த நிலை’யை அடைகிறார்கள். ப்ரஹ்மமே உண்மையானது; அவனே அறிவு; அவனே முடிவற்றவன். ‘ஸத்யம், ஞானம், அநந்தம், ப்ரஹ்ம’. எவனொருவன் ‘இந்த ப்ரஹ்மமானது தன் இதயத்தில் ஓர் ரகசியமான இடத்தில் ஆகாசமாக உள்ளான்’ என்பதை உணர்கிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும் அநுபவிக்கிறான். ஏனெனில், ப்ரஹ்மம் எல்லா இடத்திலும் உள்ளது.
ஆ. ஆத்மாவிலிருந்தே எல்லா நுண்ணிய மற்றும் பருத்த பொருள்கள் வெளிக்கிளம்பியுள்ளன. உயிரும் சுவாசமும் தவத்திற்கு (எளிமைக்கு) அடித்தளம் ஆனவை, உணவு உயிர்வாழ்வதற்கு ஆதாரமானது. இந்த உபநிஷத், உணவு மற்றும் பொருள்வகையான வாழ்க்கையின் முக்கியத்வத்தை மதிக்கிறது. இவை ஆன்மீக வாழ்விற்கு வழி வகுக்கும் சாதனங்களாகும்.
இ. இந்த உபநிஷத்தில், ஐந்து விதமான மூடு நிலைகள் வர்ணிக்கப்பட்டுள்ளன. அவை 1. அன்னமய கோசம் - உணவால் அமைக்கப்பட்ட, பருத்த நிலையிலுள்ள உறை அல்லது கோசம். 2. ப்ராணமயகோசம்- உயிர் வாழ்வதற்குத் தேவையான முக்கியமான காற்றால் ஆனது. 3.மனோமய கோசம் - மனதால் அமைக்கப்பட்டது. 4.விஞ்ஞானமயகோசம் - அறிவால் அமைக்கப்பட்டது. 5.இறுதியாக ஆனந்தமயகோசம் - பேரின்பத்தால் அமைக்கப்பட்டது.
இந்த எல்லா உறைகளுக்குள்ளும் உள்ளாக, மனித னுக்குள் ‘‘ஆத்மா’’ உறைகிறான். பேரின்பம் என்பது ஆத்மா (ஜீவன்) மற்றும் ப்ரஹ்மத்தின் இயல்பாகும். ப்ரஹ்மத்தின் ஆனந்தம். ‘ப்ரஹ்மானந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இது எல்லைகாண இயலாத ஆனந்தமாகும்.
படிப்படியாக உயரும் ஆனந்தத்தின் அளவு இவ்வாறு விளக்கப்படுகிறது:- வலிமை மிக்க ஒர் வாலிபனின் ஆனந்தம், பிறகு ஓர் கந்தர்வனின் ஆனந்தம், பிறகு தேவர்களின் ஆனந்தம், பிறகு இந்திரனின் ஆனந்தம், பிறகு ப்ருஹஸ்பதி மற்றும் ப்ரஜாபதியின் ஆனந்தம், அதற்குப்பின்பு வருவது எண்ணிப்பார்க்க இயலாததாக, அறிவிற்கு எட்டாத தாக, இருக்கும் ப்ரஹ்மத்தின் ஆனந்தமான ப்ரஹ்மானந்தம்.
ஈ. படைப்பின் ரகசியம் இந்த வல்லியில் (பகுதியில்) விளக்கப்பட்டுள்ளது. ப்ரஹ்மம் ‘‘நான் பலவாகக் கடவேன்’’ (பஹுஸ்யாம்) என்று ஸங்கல்பித்து, இந்த அண்டத்தைப் படைத்தது. பின்பு, அதில் உள்ள எல்லாவற்றின் உட்புகுந்தது. இது அண்டத்தில் இறைவனின் உள்ளுறை இயல்பை விளக்குகிறது.
3) ப்ருகு வல்லி:- வருணதேவன் தன் மகனான ப்ருகுவிற்கு, சாதனை அல்லது ப்ரஹ்ம வித்யையை கற்றுத் தந்ததால், இந்த வல்லி, ‘‘ப்ருகுவல்லி’’ என்று அழைக்கப் படுகிறது. இதில் சாதனையாக இருக்கும் தபஸ் அல்லது எளிமை குறித்த அறிவுரை உள்ளது. முன்பு விளக்கப்பட்ட ஐந்து கோசங்களும் இதில் காணப்படுகின்றன.
ப்ருகுவானவன், ஆனந்தமய கோசத்திற்குள்ளாக, ப்ரஜ்யாத்மன் இருப்பதைக் கற்கிறான். - இதுவே உள்ளுக்குள் உறையும் ஆத்மா. அதுவே ப்ரஹ்மம். அதுவே ப்ரஹ்மம்! அதுவே உயிர் மற்றும் நிலைப்பின் அடிப்படை தத்துவம். அது பேரின்பமே வடிவாகக் கொண்டது. ப்ரஹ்மம், ஆனந்தம் மற்றும் ஆனந்தமயன், ஆகியவை, ஒரே பொருளைக் குறிக்கும்.
இந்த உபநிஷத்தில் நிறைவாக அறிவிக்கப்படுவது, ‘ப்ரஹ்மம் எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவன் அண்டத்தில் உள்ள எல்லாவற்றிலும் உள்ளான். ஒருவர் அவனை இவ்வாறே த்யானிக்கவேண்டும்.
இராமானுசர் தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில், ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கு விளக்கமளிக்கையில், இந்த உபநிஷத் சொற்றொடர்களை மிகப்பெரிய அளவில் பயன் படுத்தியுள்ளார்.
தைத்திரீய உபநிஷத்-இந்த பெயர் பெற்ற வரலாறு
ஆயிரக்கணக்கான சாகைகளோடு, பரந்து விரிந் திருக்கும் வேதத்தை, கற்பதற்கு சற்றே எளிதாக்கும் வண்ணம், அதை, ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று நான்கு வேதங்களாகப் பிரித்து உதவி புரிந்தார், பகவான் வேத வ்யாஸர். இவருடைய சீடர்களில் ஒருவர் வைசம்பாயனர். வைசம்பாயனருடைய மருமகன் மற்றும் சீடர் யாஜ்ஞவல்க்யர் என்ற பெயர் கொண்ட மஹா ஞானி, அறிவாளி.
யாஜ்ஞவல்க்யர் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கங்களுக்கு ஏற்ப, காடுகளில் வசித்து, தன் குருவான வைசம்பாயனரிடம் எல்லா வித்யைகளையும் கற்றறிந்தார். ஒரு சமயம், மேருமலை அடிவாரத்தில் நடந்த அறிஞர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, எல்லோரு டைய கடுமையான கேள்விகளுக்கும் சற்றும் அயராமல் பதிலளித்து வெற்றி அடைந்து, ‘சிறந்த ஞானி’ என்னும் விருதைப் பெற்றார். தம்முடைய மாணாக்கரின் திறமையைக் கண்டு பெருமைப்படுவதற்கு பதில், பொறாமை கொண்டார், வைசம்பாயனர்.
யாஜ்ஞவல்க்யர், குருகுல வாசம் முடிந்து வீடு திரும்பும் காலம் நெருங்கியது. அவர் மனதில் ஓர் போராட்டம்.! வேதங்களின் இரண்டு பாகங்களான பூர்வமீமாம்ஸை மற்றும் உத்தரமீமாம்ஸை ஆகியவற்றை தெளிவாக வேறுபடுத்திக் காட்டவேண்டுமென்று ஆவல் கொண்டார். புரட்சிகரமாக, தொன்றுதொட்டு வரும் பழக்கங்களுக்கு மாறாக யாஜ்ஞவல்கியர், வேள்வி சடங்குகள் குறித்து ஆணையிடும் வேதத்தின் பகுதியை, இந்த சடங்குகளை விளக்கும் இலக்கிய தத்வார்த்தமான பகுதிகளில் இருந்து பிரிக்க நினைத்தார். ஆண்டாண்டு காலமாக ஒன்றோடொன்று இணைந்து இருந்த வேதத்தின் இரண்டு பகுதிகளைப் பிரிக்க நினைத்தார்.
ஏற்கெனவே சீடர் மீது கசப்பான எண்ணம் கொண்டி ருந்த வைசம்பாயனர், யாஜ்ஞவல்க்யரின் இந்த முயற்சியை பெரும் குற்றமாகக் கணக்கிட்டு, தம்மிடம் அவர் கற்ற வித்யையையெல்லாம், ‘‘உமிழ்ந்து விடவேண்டும்’’ என்று ஆணையிட்டார். குருவின் ஆணையை மீறாமல், யாஜ்ஞ வல்க்யர் தாம் கற்ற எல்லாவற்றையும் உமிழ்ந்தார். இந்த உமிழப்பட்ட வித்யையானது, நெருப்புக் கோளங்களாக ஒளிர்ந்தது. இவை வீணே போகக்கூடாது என்று எண்ணிய வைசம்பாயனர் தன்னுடைய பணிவான மாணவன் ஒருவனை அழைத்து, அதை விழுங்கச் சொன்னார். அவர் உடனே ஓர் தைத்ரீய பறவையாக மாறி, அதை விழுங்கினான். இவர் பெயராலேயே தைத்ரீய உபநிஷத் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இது வைசம்பாயனர் பணிவடக்க முள்ள தம் மாணவனுக்கு தந்த ஏற்றமாகும்.
அண்டத்தின் தோற்றத்தை விளக்க முற்படும் ‘‘ஸத்வித்யை’’ தொடர்பானது, ஆரம்பணாதிகரணம் (ப்ரஹ்ம ஸூத்ரம் 2-1-15 தொடக்கமாக) என்பது. ஒற்றுமை மற்றும் வேறுபாடு ஆகிய இரண்டையும் ஸமன்வயப்படுத்தும் வாக்யங்கள், இந்த உபநிஷத்தில் ஏராளமாக உள்ளன. இவற்றை அத்வைத கொள்கை உடைய சங்கரரோ, த்வைத கொள்கை உடைய மத்வரோ அதிக அளவில் பயன்படுத்த வில்லை. ஆனால், விசிஷ்டாத்வைத கொள்கை உடைய ஸ்வாமி ராமாநுஜரோ, இந்த உபநிஷத்தில் காணப்படும் வாக்கியங்களை பெரும் அளவில், தம்முடைய ஸ்ரீபாஷ்யத்தில் பயன்படுத்தி யுள்ளார்.
இந்த உபநிஷத்திலிருந்து, இராமாநுசர் பல சொற்றொடர்களை எடுத்தாண்டிருந்த பொழுதும், முக்கியமாக இடம் பெற்றிருப்பவை ஆனந்தவல்லி மற்றும் ப்ருகுவல்லி சொற்றொடர்கள். இவற்றில் ‘‘ப்ரஹ்மமே மிக உயர்ந்த உண்மை; அதை அடைவதே மேலான இலக்கு என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளவற்றை, தம் ஸ்ரீபாஷ்யத்தில் இணைத்துள்ளார், இராமாநுசர். ப்ருகுவல்லியில், வருணன் தன் மகனுக்கு த்யானத்தின் முக்கியத் வத்தை எடுத்துச் சொல்வது சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது.
ப்ரஹ்மமே முதலில் இருந்தது; அதுவே தன்னை அண்டமளாவிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டது. அது எல்லா உணர்வுள்ள, உணர்வற்றவற்றில் உட்புகுந்து, அவற்றின் சரீர ஆத்மா (உடலுருக்கொண்ட ஆத்மா) என்று பெயர் ஏற்படும்படி செய்தது. ப்ரஹ்மமே உணவு, வாழ்வு, மனம், அறிவு, ஆநந்தம், ஆகியவையாக இருப்பது. மற்றும் ப்ரஹ்மம் மனிதனின் இதயத்தில் உள்ள குகையில் வசிப்பது. ஆகியவை இராமாநுசரால் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
இந்த விளக்கங்களின் சாயலை, நாம், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த பாசுரங்களில் காண்கிறோம். இறைவனைக் குறித்த நினைவு சிறிது நேரம் தடைப்பட்டாலும், அது விரஹம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளார்கள். (எம்பெருமானுடன் கூடியிருக்கும் ஸம்ச்லேஷ தசை மற்றும் அவனை விட்டுப் பிரிந்த விச்லேஷ தசை). இந்த உபநிஷத்தைப் பொருத்தமட்டில், விளக்கம் தருவதில் மிகச் சிறந்த ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியவர், இராமானுசர்.
சாந்தி மந்திரம்-
ஶந்நோமித்ர: | ஶம்வருண: ஶந்நோ ப4வத்வர்யமா | ஶந்ந இந்த்3ரோ ப்3ருஹஸ்பதி: | ஶந்நோ விஷ்ணுருருக்ரம: | நமோ ப்3ரஹ்மணே நமஸ்தே வாயோ| த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி | த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்ம வதி3ஷ்யாமி| ருதம் வதி3ஷ்யாமி | ஸத்யம் வதி3ஷ்யாமி | தன்மாமவது தத்3வக்தாரமவது | அவது மாம் | அவது வக்தாரம் || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
‘‘மித்திரன் எமக்கு நிறைவான விளைவுகளை உண்டு பண்ணட்டும். வருணன் எங்களுக்கு நிறைவான விளைவு களை உண்டு பண்ணட்டும். இந்திரனும் ப்ருஹஸ்பதியும் எங்களுக்கு நிறைவான விளைவுகளை உண்டு பண்ணி எமக்கு நன்மை, மகிழ்ச்சி போன்றவற்றை நல்கட்டும்’’
9. சாந்தோக்ய உபநிஷத்
1. வேதத்துடனான தொடர்பு:- கேனோபநிஷத் தைப் போலவே, இதுவும் சாம வேதத்துடன் தொடர்பு கொண்டது.
2. கட்டமைப்பு மற்றும் அளவு:- இதில் எட்டு அத்யாயங்கள் உள்ளன. (ப்ரபாடகங்கள்) அவை, 13, 24, 19, 17, 24, 16, 26, 15 மொத்தம் 152 (? 154) காண்டங்கள் உள்ளன,
3. தனித்தன்மை:- சாமவேதமானது, அதன் இசை வடிவான தன்மையாலும், ஆன்மீக வெளிப்பாட்டாலும், பெருமை பெற்றிருப்பது போல சாந்தோக்ய உபநிஷத்தும் அதே தன்மையையும், பெருமையையும் பெற்றுள்ளது. தெய்வீகமான இனிமையான பாடல்கள் , ஒருவரை மிக உயர்ந்த தெய்வீகமான அநுபவத்திற்கு உயர்த்திவிடும் என்பது யாஜ்ஞவல்கியரின் கருத்து.
4. சிறப்பம்சங்கள் மற்றும் உபநிஷத் தரும் செய்தி:- அ. வேதவ்யாஸர், வேதாந்த ஸூத்ரங்களை எழுதுகையில், அவருக்கு மிகவும் விருப்பமான மேற்கோள் நூலாக இருந்தது சாந்தோக்ய உபநிஷத் ஆகும். அவர், இந்த உபநிஷத் சொற்றொடர்களை ஏராளமாக பயன்படுத்தி அதற்கு தனிப்பெருமை சேர்க்கிறார். இந்த உபநிஷத்தில், புகழ் பெற்ற தஹர வித்யை போன்றவையும், புகழ்பெற்ற மஹா வாக்கிய மான, ‘தத்த்வமஸி’ என்பதும் அடங்கியுள்ளன.
ஆ. ‘எதை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகிறது? ‘‘இதயத்தின் உள்ளுக்குள் இருக்கும் தனி இடத்தில் இருப்பது என்ன?’ என்ற கேள்விகளுக்கு இந்த உபநிஷத் பதிலளிக்கிறது.
இ. ப்ருஹதாரண்யக உபநிஷத்தைப் போலவே, இதிலும், ‘‘ஆநந்தம்’’ என்பதன் பண்பு மனநிறைவாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.
ஈ. நாம் ப்ரஹ்மத்தை அறிந்தால், எல்லாம் அறியப் பட்டதாகிறது. மண்ணை அறிந்தால், மண்ணாலான குடம் மட்பாண்டங்கள் போன்றவை அறியப்பட்டதாகின்றன. தங்கத்தை அறிந்தால், தங்க நகைகள் அறியப்பட்டவை யாகின்றன.
சாந்தோக்ய உபநிஷத் பெயர் விளக்கம்:-
  சாமவேதத்தின் தலவகார சாகையின் ஓர் பகுதியான சாந்தோக்ய ப்ராஹ்மணம், சாந்தோக்ய உபநிஷத் என்கிற பெயரிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சாந்தோக்ய ப்ராஹ்மணத்தில் உள்ள 10 அத்யாயங்களில், எட்டு அத்யாயங்கள் மட்டுமே உபநிஷத்தாக அமைக்கப் பட்டுள்ளன. ‘‘சந்தா’’ என்னும் பெயரை அடிப்படையாகக் கொண்டது, சாந்தோக்யம் என்னும் உபநிஷத். சந்தஸ் என்பது எதுகை மோனையுடன் இசையுடன் பாடப்படுவதைக் குறித்தாலும், அது, எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்றும் பொருள்படும். இந்த உபநிஷத்தை வடிவமைத்த முனிவர், இவ்வாறு மந்திரங்களை எதுகை மோனையில் அமைக்கையில், அது இந்த படைப்பை, பல்வேறு காரணிகளும், இயல்பும், வெளிக் கொணர்வதைக் கண்டார். அவற்றையெல்லாம் சித்தரிக்கும் வண்ணம், எதுகை மோனையுடனும் இசையுடனும் அமைக்கப்பட்டுள்ளதே உத்கீதம். உத்கீதமானது, சாந்தோக்யத்தின் ஒரு பகுதி.
  முதல் அத்யாயம்:- ஓம்கார-உத்கீத உபாஸனை. ‘‘ஓம்’’ என்பது ஒற்றை எழுத்தாக ஓதப்படுகையில், இது மிக உயர்ந்த ஒன்றின் அடையாளக்குறியீடு மற்றும் சிறப்பான அடையாளமாக அமைகிறது. இது ‘‘உத்கீதை’’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ‘ஓம்’ என்னும் ‘அசையை’ உத்கீதமாக வணங்குபவன் விருப்பங்கள் ஈடேறப்பெற்றி ருப்பவனாக, வளத்தைப் பெருக்குபவனாகத் திகழ்கிறான். ‘‘ஓம்’’ என்ற ஒலியையே வழிபடுபவன், மிக உயர்ந்த ஒன்றையே வணங்குகிறான்.
ஒரு காலத்தில், தேவர்களுக்குள்ளும், அசுரர் களுக்குள்ளும் போர் மூண்டபோது, தேவர்கள், ‘உத்கீதை’யை த்யானித்தார்கள். ஆனால், அவர்களால் அசுரர்களை வெல்ல இயலவில்லை. ஆனால், அவர்கள் முக்ய ப்ராணனை தம் வாக்கின் ‘‘மேல்படிந்ததாக’-ஆதிக்கம் செலுத்துவதாக வழிபட்டதால், அசுரர்களை வெல்லும் வலிமையைப் பெற்றார்கள்.
சௌனகரின் புதல்வனான அதிதன்வன், ‘‘உத் கீதையை அறிந்தவர்கள் வாழ்க்கை, மற்றவர்கள் வாழ்க்கையை விட மேம்பட்டதாக இருக்கும். உத்கீதையை அறிந்தவன், இவ்வுலகிலும், மற்ற உலகிலும் பெரும் சிறப்பை அடை வான்’’ என்று கூறியுள்ளார்.
இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அத்யாயங்கள் உபாஸனைகளை விளக்குகின்றன.
காயத்ரி மந்திரம் மிகவும் முக்கியமானது. இதன் சாரம் வேதத்தில் காணப்படுகிறது. படைப்பானது, காயத்ரியின் பெருமையைப் பேசுகிறது. இதன் ஆத்மாவான புருஷன், மிக உயர்ந்தவன். காயத்ரியால் சுட்டிக்காட்டப்படும் ப்ரஹ்மம், இதயத்திலுள்ள ஓர் இடத்தில் வசிப்பவன். இவ்வாறு அறிந்தவன் அழிவற்ற செல்வத்தை அடைகிறான்.
இதயத்திலுள்ள இந்த இடம், ஐந்து வாசல்களைக் கொண்டது. இதை அறிந்தவர் மேலுலகங்களை அடைகிறார். - இந்த வாசல்களைக் காப்பவர்கள்:-
அ. கிழக்கு வாசல்-ப்ராணன் - தேவதை-சூரியன்;
ஆ. தெற்கு வாசல்- வ்யானன் - தேவதை- சந்திரன்;
இ. மேற்கு வாசல்-அபானன் - தேவதை- அக்நி;
ஈ. வடக்கு வாசல்-சமானன் - மனம்;
உ. மேலுள்ள வாசல்-உதானன் - காற்று (ஆகாசம்)
‘சாண்டில்யர் என்னும் அறிஞர்’, ‘‘என்னுள் இருக்கும் ஆத்மா ப்ரஹ்மம்; நான் இந்த உலக வாழ்க்கை முடிந்தவுடன், அதை அடைவேன்; இதை நம்புபவர்கள் தாங்கள் சிந்தித்த பலனைப் பெறுவார்கள்’’ என்று கூறியுள்ளார்.
  இதில், புகழ்பெற்ற ஸத்யகாமாவின் கதை உள்ளது. தான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதை குருவிடம் மறைக்காமல் கூறியதால், குருவின் நம்பிக்கையைப் பெற்றான். இவன், தன் குரு: வெளியூருக்குச் சென்றிருக்கை யில், அவருடைய பசுமாட்டு மந்தையை பராமரித்து, அதன் எண்ணிக்கையை 400 லிருந்து, 1000 ஆக உயர்த்தினான். அந்த ஆநிரையில் இருந்த ஓர் காளைமாடு, ஸத்யகாமனுக்கு ப்ரஹ்மத்தைக் குறித்த உபதேசத்தை அளித்தது.
ஸத்யகாமாவின் கதை நமக்கு உணர்த்தும் உண்மைகள்:-
1. ப்ராஹ்மணன் என்னும் தகுதி, பிறப்பால் வருவதல்ல; நன்னடத்தையால் வருவது.
2. மனிதரல்லாத ஏதோ ஓர் இருப்பினம் கூட, ஆசிரியராக இருக்கலாம்!
ஐந்தாம் அத்யாயம் - இந்த அத்யாயத்தில் மரணத்திற்குப் பிறகு ஆத்மா செல்லும் பல்வேறு பாதைகள் விவரிக்கப்படுகின்றன. இதைத்தவிர, இந்த அத்யாயத்தில் வைஶ்வாநர வித்யையும் உள்ளது.
அ. ஹிரண்யகர்பன் வரையிலான தேவர்களை வழிபடுபவர்கள், ‘ஸுஷும்நா’ நாடி வழியாக, உச்சந்தலை யிலிருந்து வெளியேறி, தேவயாந பாதைவழியாக, ப்ரஹ்ம லோகத்தை அடைகிறார்கள்.
ஆ. முன்னோர்களை வழிபடுபவர்கள், தானம் செய்பவர்கள் போன்றவர்கள் முதலில் பித்ருலோகம் சென்று, பிறகு சந்த்ரலோகத்தை அடைகிறார்கள். இவர்களுக்கு மறு பிறப்பு உண்டு.
இ. தீய கர்மங்களை ஆற்றுபவர்கள் தாழ்ந்த பிறவிகளை அடைகிறார்கள்.
ஈ. ப்ரஹ்மத்தை வழிபடுபவர்கள், உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆத்மா, ப்ரஹ்மத்தை அடைகிறது. இவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
வைஶ்வாநர வித்யையைக் குறித்து அறிய விரும்பிய ஐந்து மாணவர்கள், உத்தாலக ஆருணி என்பவரிடம் சென்றனர். உத்தாலகரும் இந்த வைஶ்வாநர வித்யையில் அதிகம் தேர்ச்சி பெற்றிராததால், அவரும் இவர்களுடன் இணைந்து, கேகய நாட்டைச் சேர்ந்த அஶ்வபதி என்பவரிடம் சென்றார்கள். அவர் வைஶ்வாநர வித்யையை இவர்களுக்குப் போதித்தார்.
‘வைஶ்வாநரனே அண்டத்திற்குக் காரணமாக உள்ளவன். அவன் மேலுலகத்தைத் தன் தலையாகவும், ஆகாயத்தைத் கொப்பூழாகவும், சந்த்ர சூரியர்களைத் தன் விழிகளாகவும், ஆழங்காண இயலாத தன்மை உடையவ னாகவும், த்யானிக்கப்பட வேண்டும்’’ என்று கற்பித்தார்.
ஆறாம் அத்யாயம்:- ஶ்வேதகேது மற்றும் ‘‘தத்த்வமஸி’’: இந்த அத்யாயமே இந்த உபநிஷத்தின் தேர்ந்த சாரம் என்று கூறலாம். ஏனெனில், இதில்தான் அண்டத்தின் படைப்பு மற்றும் அழிவு குறித்த பாடங்கள் உள்ளன. இந்த பாடம், ‘‘ஸத்வித்யை’’ எனப்படுகிறது.
இந்த உபநிஷத்தின் முக்ய கதாபாத்ரமாக இருப்பவன் ஶ்வேதகேது என்பவன். உத்தாலகரின் மகனான இவன், பன்னிரண்டு வருடகாலம் குருகுல வாசம் செய்து விட்டு, வீடு திரும்பினான். ‘‘எனக்கு எல்லாம் தெரியும்’’ என்னும் கர்வம், அவன் முகத்திலும், நடத்தையிலும் வெளிப்படுவதைக் கண்ட உத்தாலகர், தம் மகனை நல்வழிப்படுத்த எண்ணம் கொண்டார்.
ஶ்வேதகேதுவை அழைத்து, ‘‘மகனே! எதைக் கேட்பதால் எல்லாம் கேட்கப்பட்டதாகிறது? எதை அறிந்தால் எல்லாம் அறியப்பட்டதாகிறது’’ என்பதை உன் ஆசிரியரிடமிருந்து கற்றறிந்தாயா?’’ என்று வினவினார். இதற்கு பதிலளிக்க இயலாத ஶ்வேதகேது, தன் தந்தையைப் பணிந்து, மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் இயல்பை போதிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல், சிறப்பு வாய்ந்தது. இதில், மிகத் தெளிவான உதாரணங்களும், புகழ்வாய்ந்த, ‘‘தத்த்வமஸி’’ என்னும் மஹா வாக்கியமும் இடம் பெற்றுள்ளன.
ஶ்வேதகேதுவிற்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்கள்:-
1. ஆரம்பத்தில், ‘‘ஸத்’’ என்பது மட்டுமே இருந்தது; தனியாக இருந்தது; இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை. அந்த ‘ஸத்தானது’ ‘‘நான் பலவாகக் கடவேன்! என ஸங்கல்பித்தது. அது ஒளியையும், நீரையும் படைத்தது. அதிலிருந்து அண்டத்தின் தோற்றம் ஏற்பட்டது.
2. ஆழ்ந்த உறக்கமாகிய ஸுஷுப்தி என்னும் நிலையில், ஆத்மா ப்ரஹ்மத்தை அடைகிறான்.
பல கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் அளிக்கப் பட்ட பிறகு, உத்தாலகர், இவ்வாறு நிறைவு செய்தார்:- ‘‘இந்த முழு அண்டமும் மிக உயர்ந்த தேவனை உயிராகக் கொண்டது. அவனே அண்டமளாவிய ஆத்மா!’’
‘தத்த்வமஸி’- அது நீயாக இருக்கிறாய்’’
இந்த மஹா வாக்கியத்திற்கு, மூன்று ஆசார்யர்கள் அளித்த விளக்கம்:-
சங்கரர் - அது நீயாக உள்ளாய்-நீ அவனே.
இராமானுசர் - நீ (ஆத்மா) இறைவனின் உடல்;
மத்வர்-நீ அவனுடைய தாஸன்.
உத்தாலகரால் எடுத்துக் காட்டப்பெற்ற உவமைகள்-
ஶ்வேதகேதுவிற்கு, தத்துவங்கள் நன்றாக விளங்க வேண்டும் என்பதற்காக, உத்தாலகர், பல உவமைகளை முன் வைத்தார்:-
1. தேனீக்களும் தேனும்:- தேனீக்கள் பல மலர் களின் தேனைச் சேகரித்து வந்து தேன் கூட்டில் நிரப்புகின்றன. அந்த கூட்டிலுள்ள தேனுக்கு, தான் எந்த மலரிலிருந்து வந்தோம் என்பது தெரியாது. நமக்கு அந்த தேன் எல்லாமே, அடிப்படைக்காரணமான மலரிலிருந்து வந்தது என்பது தெரியும். தேனின் எல்லா சிறு துணுக்குகளில் உள்ள ஜீவனே அண்டத்தின் ஜீவன். நீ ஶ்வேதகேது! அதன் உடலாக இருக்கிறாய் - தத்த்வமஸி!!
ஆறுகள்:- கடலிலிருந்து மேலெழும் நீராவி, மழை மேகமாகி, மழையாகி, ஆறுகளாகி கடலில் கலக்கின்றன. ஆனால், அவைகளுக்கு தாம் யார், எங்கிருந்து வந்தோம் என்ற நினைவு இருப்பதில்லை. இதே போல், இந்த அண்டத் திலுள்ள இருப்பினங்கள், தாம் எங்கிருந்து தோன்றினோம் என்பதை அறிவதில்லை.
மரம்:- மரம் வெட்டுண்டு காய்ந்து அழிகிறது. ஆனால் அதில் உள்ள உயிர் (ஆத்மா) அழிவதில்லை. அழிவற்ற அந்தத் துகளே ஆத்மா. அதுவே, ‘‘ஸத்’’ எனப்படும் அண்டமளாவிய ஆத்மாவைச் சென்றடைவது.
ந்யக்ரோதா (ஆலமரம்) பழம்:- இப்பழத்தின் கொட்டையைத் தன் மகனிடம் காட்டி, ‘இதில் என்ன காண்கிறாய்?’’ என்று கேட்க, ‘‘ஏதுமில்லை’’ என்றான் ஶ்வேதகேது. ‘இதில்தான் பெரிய ந்யக்ரோதா மரம் அடங்கியுள்ளது; இவை எல்லா வற்றிற்கும் ஆத்மாவாக உள்ளது அண்டமளாவிய ஆத்மா.
உப்பு:- உப்பு, நீரில் கரைந்தபிறகு, அது முழுவதும் உப்பையே சுவையாகக் கொண்டுள்ளது. உப்பு தனியாகக் காணப்படுவதில்லை. இவ்வாறு தனியாகக் காணப்படாத போதிலும், எல்லா இடங்களிலும் ஊடுருவியிருப்பதே அண்டமளாவிய ஆத்மா.
கண் கட்டப்பட்ட மனிதன்:- இரு கண்களும் துணியால் கட்டி மறைக்கப்பட்ட ஒருவன், வழியறியாமல் கூச்சலிடுகிறார். நல்லவர் ஒருவர் வந்து, அந்த கண்கட்டை அவிழ்த்து விடுகிறார். இப்பொழுது தெளிவான பார்வைபெற்ற மனிதன், தான் போக வேண்டிய ஊருக்கு வழிகேட்டறிந்து போய்ச் சேர்ந்துவிடுகிறான். இதேபோல், உண்மையறியாமல் திசை தடுமாறும் மனிதனுக்கு, ஓர் சிறந்த குரு அல்லது ஆசார்யர், அஜ்ஞானம் என்னும் இருளைப் போக்கி ஜ்ஞான மருளும் வழிகாட்டியாக விளங்குகிறார்.
இந்த உபநிஷத்தில், இந்தப் பகுதியில் ‘‘தத்த்வமஸி’’ என்னும் மஹாவாக்யம் ஒன்பது இடங்களில் காணப் பெறுகிறது.
ஏழாம் அத்யாயம்:- இதில் ‘தஹரவித்யை’ விளக்கப் படுகிறது. ‘பூம வித்யை’ முக்யமாக ஆராயப்படுகிறது.
சனத்குமாரர், நாரதருக்கு முடிவான பேருண்மையான ப்ரஹ்மத்தைக் குறித்து கற்பிக்கின்றார். முக்ய ப்ராணன், விருப்பங்கள், நினைவு, ஆகாசம், வெப்பம், நீர், பிறப்பு இறப்பு, சிந்தனை, நோய், வலிமை, அறிவு, உணர்ச்சி, உறுதி, மனம், பெயர்கள், மந்திரங்கள், வேள்விகள் ஆகிய அனைத்தும் ஆத்மாவிலிருந்து கிளம்புவதைக் கற்பித்தார். இதை அறிந்த மனிதன், மரணம், நோய், வலி மற்றும் துன்பத்தால் தாக்கப் படுவதில்லை என்றும் போதித்தார். ‘‘பூமா’’ என்பது சுகம்; அதுவே அறியப்படவேண்டும். எங்கே ஒருவர் வேறு எதையும் காண்பதில்லையோ, வேறு எதையும் கேட்ப தில்லையோ, வேறு எதையும் அறிவதில்லையோ, அதுவே, ‘‘பூமா’’ என்று அறிவுறுத்தினார்.
எட்டாம் அத்யாயம்:- ‘தஹர வித்யை’ பெரிய அளவில் விளக்கப்படுகிறது. இந்த மனித உடலானது, ப்ரஹ்மம் வசிக்கும் இடம்; இது, ப்ரஹ்மபுரம் எனப்படுகிறது. இதன் உள்ளே தாமரை மலர் போன்ற ஓர் அறை உள்ளது. இதன் உள்ளே ஓர் சின்னஞ்சிறிய வெற்றிடம் உள்ளது. இதன் பெயர் ‘‘அந்தராகாசம்’’. இதுவே நிலையான மெய்மையான ப்ரஹ்மத்தின் இருப்பிடம். அந்த சின்னஞ்சிறு அந்தராகாசம், அதன் உள்ளே இருப்பதும் அறியப்படவேண்டும். இதனுள் வசிக்கும் ப்ரஹ்மமானது, தீமையற்றது; மூப்பற்றது; பசி மற்றும் தாகமற்றது; அதுவே உண்மை எனப்படுவது. இந்த அந்தராகாசமானது கீழுலகும், மேலுலகும் ஒன்று சேர்ந்த அளவிற்கு விரிந்து பரந்தது. த்யானிக்கப்படுவதற்காக அது சிறிய அளவு உள்ளதாக கொள்ளப்படுகிறது.
இந்த அத்யாயத்தில், தேவர்கள் தலைவனான இந்திரன் மற்றும் அசுரர்கள் தலைவனான விரோசனன், ஆகியோருக்கு ப்ரஜாபதி அளித்த அறிவுரையின் விளக்கம் உள்ளது. இதில், ‘‘நான் எனப்படும் ஆத்மா எது?’’ என்பது படிப்படியாக விளக்கப்படுகிறது. இதில் விளக்கியபடி, ப்ரஹ்மத்தை வழிபடுபவர்கள், அதை அடைந்தபிறகு மீண்டும் திரும்பி வருவதில்லை என்று உபதேசிக்கப் படுகிறது.
சாந்தி மந்திரம்:-
ஆப்யாயந்து மமாங்கா3நி வாக் ப்ராணஶ்சக்ஷு: ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி ஸர்வம் ப்3ரஹ்மௌபநிஷத3ம் மாஹம் ப்3ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்3ரஹ்மநிராகரோத3நிராகரணமஸ்வநிராகாரணம் மே(அ)ஸ்து ததா3த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த4ர்மாஸ்து மயி ஸந்து தே மயி ஸந்து || ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ||
என்னுடைய கைகால்கள் வலிமை பெற்று விளங்கட்டும்; என்னுடைய பேச்சு, ப்ராணன், கண்கள், செவிகள், உள் உரம் மற்றும் எல்லா புலனுறுப்புகள், தம்முடைய வலிமையில் ஏற்றம் பெறட்டும். எல்லாமே உபநிஷத்துலுள்ள ப்ரஹ்மமே! நான் ப்ரஹ்மத்தை மறுக்காமல் இருக்கக்கடவேன்! ப்ரஹ்மம் என்னை மறுக்காமல் இருக்கட்டும். *
10. ப்ருஹதாரண்யகோபநிஷத்
1. வேதத்துடனான தொடர்பு:- சதபதப்ராஹ்மணம்; ஶுக்ல யஜுர் வேதம். உபநிஷத் வார்த்தைகளை விளக்கு வதற்காக, காண்வ சாகை அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
2. கட்டமைப்பு மற்றும் அளவு:- இதில் 8 அத்யா யங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பல ப்ராஹ்மணங்களும், துணை ப்ராஹ்மணங்களும் உள்ளன. இதுவே மிகப்’பெரிய’ உபநிஷத். இது பழங்காலத்து உரைநடை பாணியில் அமைந்துள்ளது
3. தனித்தன்மை:- அ. எல்லா உபநிஷத்துக்களின் சாரமான பொருள், இதில் காணப்படுகிறது. ஆ. ஈசாவாஸ்யம், கேனோபநிஷத் மற்றும் கடோபநிஷத்தில் உள்ள பகுதிகள், இந்த உபநிஷத்திலுள்ள ‘‘ஜ்யோதிர் ப்ராஹ்மணம்’’ என்னும் பகுதியில் காணப்படுகின்றன.
4. சிறப்பம்சம்:- அ) மிகவும் புகழ்பெற்ற உபநிஷத் உரையாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஆ) இந்த உரையாடல்களில் பெண்கள் பங்கேற்றுள்ளது ஓர் சிறப்பு அம்சம். இ) புகழ்பெற்ற மஹா வாக்யங்களான, ‘‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’’ மற்றும், ‘‘நேதி நேதி’’ என்பவை இதில் காணப்படுகின்றன. ஈ) ப்ராணனின் உயர்வு மற்றும் மிக உயர்ந்ததன் அறிவு விளக்கப்பட்டுள்ளது.
அத்யாயங்கள்
பத்து உபநிஷத்துக்களில் பத்தாவது இதுவே. ‘‘ப்ருஹத்’’ என்றால், ‘பெரியது’ என்று பொருள்படும். ‘‘ஆரண்யம்’’ என்றால், ‘‘காடு’’ என்று பொருள். வேதங்களின் முடிவான பகுதிகள், ‘ஆரண்யகங்கள்’ எனப்படுகின்றன. இவை குருமார்களால், தங்கள் சீடர்களுக்கு காடுகளில் ஏகாந்தமாக கற்பிக்கப்படுகின்றன. உபநிஷத்துக்கள் பொதுவாக ஆரண்யகங்களின் பகுதிகளாகவே உள்ளன. இந்த அடிப்படையில், எல்லா உபநிஷத்துக்களுமே, ‘‘ஆரண்ய கங்கள்’ என்று அழைக்கப்படலாம். எனவே, இந்த ‘பெரிய’ உபநிஷத் ‘‘ப்ருஹதாரண்யகோபநிஷத்’’ என்னும் பெயரைப் பெறுகிறது.
இந்த உபநிஷத், ஶுக்ல யஜுர் வேதத்தின் ஒரு பகுதியான, ‘சதபத’ ப்ராஹ்மணத்தின் நிறைவு பகுதிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உபநிஷத் காண்வ சாகை மற்றும் மாத்யந்தின சாகை ஆகிய இரண்டு சாகைகளைக் கொண்டிருந்த போதிலும், எல்லா விளக்கங்களும் காண்வ சாகை அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.
இதில் உள்ள எட்டு அத்யாயங்களில், முதல் இரண்டு, நேராக ப்ரஹ்மத்தைக் குறித்துப் பேசாமல், ‘ப்ரவர்க்யா’ என்னும் சோம யாகத்தைக் குறித்துப் பேசுவதால், எல்லா பாஷ்ய காரர்களும், இந்த முதல் இரண்டு அத்யாயங்களை விட்டு விட்டு, மேலுள்ள அத்யாயங்களுக்கே பாஷ்யம் அருளியுள்ளார்கள்.
மூன்றாம் அத்யாயத்தில், அஶ்வமேத யாகம் பேசப் படுகிறது. அதன்பின், ப்ரஹ்மம், அண்டத்தின் ஆத்மாவாக, அதுவே காரண காரியங்களாக இருப்பதும், அது ஆத்மா வாகவும், உணர்வுள்ள மற்றும் உணர்வற்றவை அதன் ப்ராகாரங்களாகவும் இருப்பது, இதில் விளக்கப்பட்டுள்ளது.
ப்ரஹ்மமானது, எல்லா ஜீவர்களின் ஆத்மாவாக இருப்பதால், ‘‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’’ என த்யானிக்கப் படுகையில், ‘‘அஹம்’’ என்பது ஜீவனின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதைப் புரிந்துகொண்டு த்யானிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உணர்ந்து த்யானிப்பது, முக்தியை அடைவிக்கும் எனப்படுகிறது.
மேலும், இந்த சதபத ப்ராமணம், வாக்கு, மனம் மற்றும் ப்ராணனின் முக்யத்வத்தை எடுத்துரைக்கிறது.
நான்காவது அத்யாயத்தில், ஆறு ப்ராஹ்மணங்கள் உள்ளன. இதில் முதல் ப்ராஹ்மணம் ‘‘பாலாகி ப்ராஹ்மணம்’’ எனப்படுகிறது. பாலாகி என்பவர், தன்னுடைய வித்யையில் மிகவும் கர்வம் கொண்டு, தன்னை ஓர் ப்ரஹ்ம ஞானியாக பறை சாற்றிக்கொள்ள, ‘‘அஜாத சத்ரு’’ என்னும் அரசனை, அடைந்தார். அஜாத சத்ரு ஓர் சிறந்த ஞானி. அவன் பாலாகியிடம், உள்ளுறை ஆத்மா இருக்கும் இடத்தைக் குறித்துப் பேசுமாறு கூறி ஆயிரம் பசுமாடுகளைப் பரிசாக அளித்தான். பாலாகி, ‘உள்ளுறை ஆத்மா இருக்கும் இடமாக, சூரியன், சந்திரன், மின்னல்’ ஆகியவற்றைக் கூற, அஜாதசத்ரு அதை சரியில்லையென்று ஒதுக்கிவிட்டான். பின்பு பாலாகி யின் மனதைப் புண்படுத்தாதவாறு, இதமாக ஜீவனின் இருப் பிடத்தை விளக்கினான். ‘‘ஜீவன் செல்லுவதும் உறங்குவதும் ப்ரஹ்மத்திடம்’. ‘ஸத்யா’ என்று குறிப்பிடப் படுபவர்கள் ஜீவர்கள். அவர்களைக் காட்டிலும் மிக உயர்ந்த வனான, ‘‘ஸத்யஸ்ய ஸத்யம்’’ என்று வழங்கப்படும் பரமாத்மாவிடம் செல்வதை விளக்கிக் கூறினான் அஜாதசத்ரு.
இந்த அத்யாயத்தில், நான்காவது ப்ராஹ்மணம் ‘மைத்ரேயி ப்ராஹ்மணம்’ எனப்படுகிறது. இது, யாஜ்ஞ வல்கியர் தன் மனைவியும் சிஷ்யையுமான மைத்ரேயிக்கு வழங்கும் அறிவுரையாக உள்ளது. உலகியல் இருப்பின் மீது பற்றற்ற தன்மை ஏற்படுகையில், ப்ரஹ்மத்தை த்யானிப்பது எளிது; இந்த மனப்பான்மை பெண்களுக்கு ஏற்படுமாகில், அவர்களும் ப்ரஹ்ம வித்யையைக் கற்பதற்கு தகுதி பெற்றவர்கள் என்று எடுத்துரைத்தார். பின்பு, அவர் மைத்ரேயிக்கு, ஆத்மா மற்றும் அண்டத்தின் மிக உயர்ந்த இறைவனைக் குறித்த அறிவை போதித்தார். ‘‘இதுவே ஆத்ம ஜ்ஞானம்; இதைப் பெறுவதே முக்திக்கு வழிவகுக்கும்’ என்று எடுத்துரைத்தார்.
ஐந்து மற்றும் ஆறாவது அத்யாயங்களில், ‘கார்கி ப்ராஹ்மணம்’ மற்றும் ‘அந்தர்யாமி ப்ராஹ்மணம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு முறை யாஜ்ஞவல்கியர், சக்ரவர்த்தி ஜனகரின் சபைக்குச் சென்றிருந்தார், அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த வேள்வியில் பங்குபெற வந்த ஞானிகளுக்குள் ‘‘யார் ப்ரஹ்ம ஞானி’’ என்ற கேள்வி எழ, அவர்களுக்குள் விவாதம் மூண்டது. யாஜ்ஞவல்கியர், சிறந்த ப்ரஹ்ம ஞானியின் முன்பு தாம் தலைவணங்கக் காத்திருப்பதாகச் சொன்னார். இதைச் செவியுற்ற அறிஞர்கள், ஒவ்வொருவராக கேள்விகளைக் கேட்கலாயினர். அவர்கள், அஸ்வலா, அர்த்தபாகா, புஜ்யு, உஷஸ்தன் மற்றும் ககோலா ஆகியோர். அனைவரின் வினாக்களுக்கும் யாஜ்ஞவல்கியர் அவர்கள் மனநிறைவு கொள்ளும் வண்ணம் பதிலளித்தார்.
பின்பு, சிறந்த பெண்ணான கார்கி, கேள்வி கேட்கலானாள். இவள் பெயராலேயே ‘கார்கி ப்ராஹ்மணம்’ என வழங்கப்படுகிறது. அவள் கேட்ட எல்லாக் கேள்வி களுக்கும் சரியாக பதிலளித்த பின்பும், அவள் கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு இருப்பதைக் கண்டு, யாஜ்ஞவல்கியர், இனி மேற்கொண்டு கேள்விகளைக் கேட்டால், அவருடைய சிரம் கீழே விழுந்து விடுமென்று எச்சரிக்க, கார்கியும் மௌனமாக அமர்ந்து விட்டாள்.
அடுத்து வரும் பகுதி ‘அந்தர்யாமி ப்ராஹ்மணம்’ எனப்படுகிறது. இது, இந்த உபநிஷத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இங்கே, கேள்வி கேட்பவர், உத்தாலகர். இவர், யாஜ்ஞவல்கியரிடம், ‘‘அண்டத்திலுள்ள எல்லாவற்றையும் உள்ளிருந்து கட்டுப்படுத்தும் அந்தர்யாமியை அறிவீரா?’’ என்று கேட்டார். யாஜ்ஞவல்கியர், ‘‘நீர், நிலம், நெருப்பு, ஸ்வர்க்கம், சூரியன், சந்த்ரன், ஒளி, இருள், ப்ராணங்கள், புலனுறுப்புகள், மனம் ஆகிய அனைத்தையும், உணர்வுள்ள மற்றும் உணர்வற்ற அனைத்தையும், உள்ளிருந்து கட்டுப் படுத்துபவன் அந்தர்யாமி’’ என்பதை தெளிவாக்கினார்.
கார்கி மீண்டும் எழுந்து, இரண்டு கேள்விகளை எழுப்பினாள். ‘‘முழு அண்டத்திற்கு ஆதாரமாக இருப்பது எது? அதற்கும் ஆதாரமாக இருப்பது எது?’’ என்று கேட்டாள். யாஜ்ஞவல்கியர், அவை, முறையே ‘‘ஆரம்பத்திலிருந்து மூலப்ரக்ருதியான ஆகாசம்’’ மற்றும் ‘‘மிக உயர்ந்த ப்ரஹ்மமான அக்ஷரம்’’ என்று பதிலளித்தார். இவர் பதிலால் மிகவும் மனம் நிறைவடைந்த கார்கி, அவையோர் முன்பு, இவரே மிக சிறந்த ‘ப்ரஹ்மஜ்ஞானி’ என்று அறிவித்தாள்.
ஆனால், விதக்தன் என்பவன், மேலும் கேள்விகளைக் கேட்கத் துணிந்தான். அவன் வினாக்களுக்கு சலிப்படை யாமல் விடையளித்த யாஜ்ஞவல்கியர், அவன் வரம்பு மீறி வினாக்கள் எழுப்புவதைக் கண்டு, அவன் வினாக்களாலேயே அவனை மடக்கி, அவனை பதிலளிக்க இயலாமல் செய்தார். தோற்றவனான, விதக்தனின் தலை நிலத்தில் வீழ்ந்தது.
இந்த அத்யாயத்தில், யாஜ்ஞவல்கியர், ஜனகருக்கு, ஆழ்ந்த உறக்கத்தில் ஆத்மா, பரமாத்மாவின் அணைப்பில் இருப்பதையும், மரணமடைகையில், பரமாத்மா அந்த உடலிலிருந்து ஜீவாத்மாவை உடனழைத்துச் சென்று, அதன் கர்மத்திற்கேற்ப வேறு உடலைத் தருவதையும் விளக்குகிறார்.
எட்டாவது அத்யாயத்தில், ஐந்து ப்ராஹ்மணங்கள் உள்ளன. இதில் சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும்’ ‘ப்ராண வித்யை’ மற்றும் ‘பஞ்சாக்நி வித்யை’ ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. பஞ்சாக்நி என்பது நெருப்பை குறிப்பதல்ல; ஓர் உடலிலிருந்து புறப்பட்ட ஜீவன் செல்லும் ஐந்து இடங்கள், ஐந்து வேள்வித் தீக்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த ஐந்து இடங்களானவை:- ஸ்வர்க்கம், மேகம், ப்ருத்வி, புருஷன் மற்றும் பெண்ணின் யோநி வழியாக கர்ப்பத்தை அடைவது.
இந்த அத்யாயத்தில், அர்ச்சிராதி மார்க்கம், பித்ரு யாநம், கர்பகதி ஆகியவை வர்ணிக்கப்பட்டுள்ளன.
இந்த அத்யாயத்தில் கடைசி ப்ராஹ்மணம் ‘வம்ச ப்ராஹ்மணம்’ எனப்படுகிறது. இது, ஒருவர், தன்னுடைய ஆசார்யரிலிருந்து தொடங்கி முதல் ஆசார்யரான பரமாத்மா வரையிலும் நினைத்து த்யானம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது.
இந்த உபநிஷத்தின் தேர்ந்த கருத்தாக அறியப் படுவதாவது:- ப்ரஹ்மமே அண்டத்திற்குக் காரணமாகவும், காரியமான அண்டமாகவும் உள்ளது; உணர்வுள்ள மற்றும் உணர்வற்றவை; அதன் உடலாக அல்லது ப்ராகாரங்களாக இருப்பவை. படைப்பு என்பது உணர்வற்ற மற்றும் உணர்வுள்ளவை, பெயர் மற்றும் வடிவங்கள் உடையனவாக வகைப்படுத்தப்படுவதேயாகும். இது வடமொழியில், ‘‘நாம ரூப வ்யாகரணம்’’ எனப்படுகிறது. ப்ரஹ்மமானது இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட எல்லாவற்றின் உட்புகுந்து வசித்து, அவற்றை உள்ளிருந்து நியமிக்கிறது. இந்த ப்ரஹ்மத்தை அன்புடன் வழிபடுவதே, உலகியல் விருப்பங்களிலிருந்து விடுபட்டு முக்திக்கு வழி ஏற்படுத்தித் தரும்.
சாந்தி மந்த்ரம்:-
‘‘ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத் பூர்ண மித3ச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவ ஶிஷ்யதே ||’’
	 ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
‘எல்லாமே முழுமையானது; முழுமையானதிலிருந்து முழுமையானது வெளிப்படுகிறது; முழுமையானதிலிருந்து முழுமையானது எடுக்கப்பட்ட பிறகும், முழுமையானது இருந்தபடியே இருக்கிறது’.
11. கௌஷீதகி உபநிஷத்
  கௌஷீதகி உபநிஷத் மிகவும் பழமையான உபநிஷத்துக்களில் ஒன்றாகும். ஆருணி என்பவரின் புதல்வனான ஶ்வேதகேதுவிடம், சித்ராகார்க்யாயணி என்பவர், மிக உயர்ந்த ஒன்றைக்குறித்து கேட்ட கேள்விகளுக்கு, ஶ்வேதகேது அளித்த பதில்களால் ஆக்கப்பெற்றிருப்பது இந்த உபநிஷத். இதில், நான்கு அத்யாயங்கள் உள்ளன.
இந்த உபநிஷத்தானது, முக்தி பெறுவதில் ஜ்ஞானத்தின் பங்கை வலியுறுத்துகிறது. ப்ரஹ்மத்தை அறியாதவர்கள், தங்கள் புண்ய பாவ கர்மங்களுக்கு ஏற்ப, மரணத்திற்குப் பிறகு, சந்திரலோகத்தை அடைந்து, மீண்டும் திரும்பி, இந்த பூலோகத்தில் வந்து பிறப்பதை விளக்குகிறது. ப்ரஹ்மத்தைக் குறித்த அறிவு ஏற்பட்ட ஒருவர், நற்கர்மங்கள் மற்றும் தீய கர்மங்களின் தளையிலிருந்து விடுபட்டு, முக்திடையவதை இந்த உபநிஷத் விளக்குகிறது.
எல்லா அறிவும் நிரம்பிய, வயது வரம்பற்ற, அழிவற்ற, ஆனந்தமயமான, ப்ராஜ்ஞாத்மாவைக் குறித்துப் பேசுகிறது. ப்ரஹ்மத்தை த்யானிப்பதால் இந்த மிக உயர்ந்த ப்ராஜ்ஞனை அடைய இயலும் என்கிறது. முக்ய ப்ராணனின் பெருமையை விளக்குகிறது.
சூரியன், சந்த்ரன் மற்றும் இதர தேவதைகளின் வழிபாடும், மகன் தந்தைக்கு ஆற்றும் சடங்குகளும், இந்த உபநிஷத்தில் இடம் பெறுகின்றன.
12. மஹோபநிஷத்
  படைப்பைக் குறித்துப் பேசுகிறது இந்த உபநிஷத். ஆரம்பத்தில் நாராயணன் ஒருவனே இருந்தான்; தனியாக இருந்ததால், அவன் மகிழ்ச்சியடையவில்லை. எனவே, அவன் தன் ஸங்கல்பத்தால் அவ்யக்தம் என்பது தோன்றியது. அதிலிருந்து ப்ரஹ்மன், போன்ற 14 புருஷர்கள் தோன்றி னார்கள். மூலப்ரக்ருதி என்னும் ஓர் பெண் தோன்றினாள். ஐந்து புலனுறுப்புகளும், ஐந்து செயல் உறுப்புகளும் தோன்றின. அஹங்காரம், மனம், காமம், கர்மம் ஆகியவை தோன்றின. ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் தோன்றின.
மிக உயர்ந்த புருஷனின் (நாராயணனின்) நெற்றி வியர்வையிலிருந்து நீர்நிலைகள் தோன்றின. இதிலிருந்து ஓர் தங்கமயமான அண்டம் தோன்றியது, அதிலிருந்து நான்முக ப்ரஹ்மன் தோன்றினான். நாராயணன், நான்கு வடிவங் களாகத் தன்னை விரிவுபடுத்திக் கொண்டு, நான்கு திசைகளை நோக்கி இடம் கொண்டான். இவ்வாறு இந்த அண்டமே அவனுடைய வெளிப்பாடு ஆயிற்று!
இந்த உபநிஷத்தில், வ்யாஸரின் மகனான, சுகர் தன்னுடைய தந்தையிடமிருந்து, தன் கேள்விகளுக்கு மனநிறைவு கொள்ளும்படியான பதில்கள் கிடைக்காததால், மிதிலைக்குச் சென்று, ஜனகமஹாராஜாவிடம் தகுந்த பதில்களைப் பெற்ற நிகழ்ச்சியும், நியதா என்னும் சிறுவன், மூன்று கோடி புனித ஸ்தலங்களை தரிசித்த பிறகு, இந்த துன்பம் என்னும் தளையிலிருந்து விடுபடுவதற்கு வழியை அறியாததை, ரிபு என்பவரிடம் கூறிய கதை, இந்த உபநிஷத்தில் காணப்படுகிறது. ரிபு என்பவர் நியதாவிற்கு உபதேசித்த அறிவுரைகள், இதில் உள்ளன.
13. மைத்ராயணி உபநிஷத்
இந்த உபநிஷத், சற்றே பிற்பட்ட கால கட்டத்தைச் சேர்ந்தது. இந்த உபநிஷத்தின் முக்கியமான ஆசிரியர் மைத்ரி என்பவர். இது ‘மைத்ராயணா’ என்னும் சாகையைச் சேர்ந்தது. இதில் நான்கு ப்ரபாடகங்கள் உள்ளன. இது ஆத்மாவைக் குறித்து த்யானிப்பதைப் போதிக்கிறது.
முதல் ப்ரபாடகம், ‘‘ப்ருஹத்ரதா’ என்னும் அரசன், வனம் சென்று, ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து, ‘சக்யான’ என்னும் முனிவரிடம் இருந்து ஆத்மாவைக் குறித்த அறிவை போதிக்கும்படி, வரம் பெற்றதை விளக்குகிறது.
இரண்டாம் ப்ரபாடகத்தில், சக்யனர் உடம்பு மற்றும் ஆத்மாவின் தன்மையை அரசனுக்கு விளக்கிய பின்பு, தன்னுடைய குருவான மைத்ரேயர் தனக்குக் கற்பித்த, ப்ரஹ்ம வித்யையை அவனுக்குக் கற்பித்தார். இப்பகுதியில் ப்ரஜாபதியானவர், ‘வாலகில்யா’ என்பவரை நோக்கி ஆற்றிய உரையும் உள்ளது.
மூன்றாம் ப்ரபாடகத்தில், ஆத்மாவானது, நற்கர்மம் மற்றும் தீய கர்மங்களின் அடியாக பல பிறவிகளைப் பெற்று உழல்வது விளக்கப்பட்டுள்ளது.
நான்காம் ப்ரபாடகத்தில், ‘அவரவர்களுக்கு உரிய தர்மத்தைப் பின்பற்றுவதின் அவசியமும், ஸத்வ குணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டியதின் அவசியமும்’ விளக்கப் பட்டுள்ளது. மனம், என்பதே பந்தத்திற்கும், முக்திக்கும் காரணமாக இருப்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
14. மஹா நாராயண உபநிஷத்
  இந்த உபநிஷத், படைப்பவனான இறைவன், அண்டத்தைப் படைத்தபிறகு, அதிலுள்ள ஒவ்வொன்றிலும் உட்புகுந்து நியமிப்பவனாக இருப்பதை வர்ணிக்கிறது. இவனே மிக உயர்ந்தவற்றைக் காட்டிலும் உயர்ந்தவனாக, அழிவற்றவனாக, எல்லையற்ற வடிவங்கள் உடையவனாக, ஆதிஅந்தம் அறியப்படாதவனாக, வர்ணிக்கப்படுகிறான். இவன் கண்களால் காணப்படுவதில்லை; த்யானத்தால் இதயத்தில் இருப்பதாக அறியப்படுகிறான். இவனை இவ்வாறு அறிந்தவர்கள், அழிவற்ற நிலையை அடைகிறார்கள்.
  இந்த உபநிஷத், யஜுர் வேத ஸம்ஹிதையில் உள்ள ‘பரமாத்ம ஸூக்தம்’ என்பதில் உள்ள ரகசியமான அறிவை போதிக்கிறது. தைத்ரீய ப்ராஹ்மணத்தில் உள்ள ஹிரண்ய கர்பனுடைய துதியைக் கூறுகிறது.
திரிபாத் விபூதி மஹா நாராயண உபநிஷத்
இதில் நாராயணன் படைப்பிற்கு காரணமாக இருப்பது விளக்கப்படுகிறது. நாராயணன், ப்ரஹ்மனைப் படைத்ததும், ப்ரஹ்மன் மற்றவர்களை படைத்ததும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
நாராயணன், எல்லா வல்லமை படைத்திருப்பதும், எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதும், எல்லா தேவதை களும் அவனுடைய வடிவங்களாக இருப்பதும், அவன் எல்லாக் காலங்கள், இடங்கள் மற்றும் திசைகளை ஊடுருவி நிலை பெற்றிருப்பதையும் விளக்குகிறது. இவ்வாறு அறிந்தவர்கள் நாராயணனையே அடைவார்கள், என்பது, இந்த உபநிஷத்திலும் யஜுர் வேதத்திலுள்ள உபநிஷத்துக்களும் கூறுகின்றன.
‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உச்சரிப்பவர்கள், நெடுங்காலம் வாழ்ந்து, பின்பு மோக்ஷத்தை அடைவது, இந்த உபநிஷத்திலும் சாம வேதத்திலுள்ள உபநிஷத்துக்களிலும் தெளிவாக்கப் பட்டுள்ளது.
‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்னும் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் தளைகளிலிருந்து விடுபட்டு, நாராயணனின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை அடைகிறார்கள். நாராயணன், எல்லோருக்கும் உள்ளுறைபவன்; அனைத் தையும் கட்டுப்படுத்துபவன். அவனே, ‘‘ஓம்’’ எனப்படுபவன். இதுவே இந்த உபநிஷத்திலும், அதர்வ வேதத்திலுள்ள உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டுள்ளது.
அஷ்டாக்ஷர மந்திரத்தை காலையில் உச்சரிப்பவ னால், முந்தைய இரவு செய்யப்பட்ட பாவங்கள் அழிகின்றன. மாலையில் ஜபித்தால், அன்றைய தினம் முழுவதும் செய்யப்பட்ட பாவங்கள் அழிகின்றன. மதியம் சூரியனை நோக்கியவாறு உச்சரிப்பதால், வேதங்கள் குறிப்பிடும் எல்லா பெரிய சிறிய பாவங்களும் அழிந்து, இவ்வாறு செய்பவர் இறுதியில் அந்த நாராயணனையே அடைகிறான்.
15. ஶ்வேதாஶ்வதர உபநிஷத்
  இந்த உபநிஷத், இதைக் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் பெயரையே பெறுகிறது. இதில் 6 அத்யாயங்கள் உள்ளன. மொத்தம் 113 ச்லோகங்கள் உள்ளன (செய்யுள் பகுதிகள் உள்ளன).
இது, த்யானம் மேற்கொள்ளப்பட வேண்டிய இடம், முறை, அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை விளக்குகிறது. எல்லா இடத்திலும், ஊடுருவியுள்ள ப்ரஹ்மம், எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. கருணையே வடிவமானது. இதுவே உள்ளிருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஒளி. இது முக்தியை விரும்புபவர்கள், த்யானிப்பதற்கு ஏற்றவண்ணம் கட்டை விரல் அளவில் அவர்கள் இதயத்தில் வாசம் செய்கிறது. இவ்வாறு அறிந்த ஒருவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.
அவன் நுண்ணியதைக் காட்டிலும் நுண்ணியன். மிகப் பெரியதைக் காட்டிலும் பெரியவன்; காண்பவன்; கேட்பவன்; அறிபவன் அவனே. ஆயினும் அவனை யாரும் காணவோ, கேட்கவோ அறியவோ இயல்வதில்லை.
இந்த உபநிஷத்தில், ஓர் மிக பெயர்பெற்ற உபமானக் கதை இடம் பெற்றுள்ளது. ‘‘ஒரு மரத்தின் கிளையில் இரண்டு அழகான பறவைகள் அமர்ந்துள்ளன. அதில் ஒன்று மரத்தின் கனிகளை உண்டு அநுபவிக்கிறது. மற்றது கனியை உண்ணாமல், உயர்ந்து விளங்குகிறது. கனியை உண்ணும் பறவையே, கர்மத்தின் பலனை அநுபவிக்கும் ஜீவாத்மா. உண்ணாமல் இருக்கும் பறவையே கர்மவசப்படாத பரமாத்மா!! இவை இரண்டும் வசிக்கும் மரமே இந்த உடல்.
இந்த உபநிஷத், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கற்றுத் தரப்படவேண்டும் என்னும் கட்டளை காணப் படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையின் பல ச்லோகங்கள், இந்த உபநிஷத் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டவை.
16. ஸுபாலோபநிஷத்
இந்த உபநிஷத், ப்ரஹ்மனுக்கும், ‘‘ஸுபாலா’’ என்னும் பெயர்கொண்ட அறிஞருக்கும் (முனிவருக்கும்) இடையில் நடைபெறும் உரையாடல் வடிவத்திலுள்ளது. இதில் பத்து பாடங்கள் உள்ளன.
முதல் பாடத்தில், இரண்டு பகுதிகள் உண்டு. இவை அண்டத்தின் நிலைப்பு மற்றும் அழிவைப் பேசுகிறது.
இரண்டாம் பாடத்திலுள்ள 3,4 மற்றும் 5-வது பகுதிகள், அண்டமளாவிய ஆத்மா அல்லது ப்ரஹ்மத்தை விவரிக்கிறது. இது, இதயத்திலுள்ள தாமரையில் அமர்ந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது கூறப்படுகிறது.
மூன்றாம் பாடத்தில், உள்ள 6-வது பகுதியில், புருஷனான நாராயணனைக் குறித்த விளக்கங்கள் உள்ளன.
நான்காம் பாடத்தில் உள்ள 7-வது பகுதியில், உள்ளிருந்து நியமிக்கும், அழிவற்ற இருப்பினமான இறைவன், நாராயணன் என்று பேசப்படுகிறது.
ஐந்தாவது பாடத்திலுள்ள 8, 9 மற்றும் பத்தாம் பகுதிகள், உடலில் இருக்கும் ஆத்மாவைக் குறித்துப் பேசுகிறது. இதை உணரும் வழிமுறைகள் கற்றுத் தரப் படுகின்றன.
இந்த பகுதி முழுவதும் ரைக்வர் என்பவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளன.
ஆறாவது பாடத்திலுள்ள 11-வது பகுதி, ரைக்வரால் கேட்கப்பட்ட ‘‘மேல் நோக்கிச் செல்லும் பாதை’’ விவரிக்கப்படுகிறது.
ஏழாவது பாடத்திலுள்ள 12, மற்றும் 13-வது பகுதிகள், உண்ணத்தக்க உணவைப் பற்றியும், ‘‘சமாதி’’ நிலையைப் பற்றியும் பேசுகிறது.
எட்டாவது பாடத்திலுள்ள 14-வது பகுதியில், மிக உயர்ந்த ஒன்றிற்கு அப்பால் எதுவும் இல்லை என்பதை அறிவிக்கிறது.’
ஒன்பதாவது பாடத்திலுள்ள 15-வது பகுதியில், ரைக்வர் எழுப்பிய வினாவிற்கு அறிவால் முக்தி கிடைப்பது விவரிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் பாடத்திலுள்ள ‘‘ப்ரஹ்ம வித்யை’’ என்பது, விரிவாக விளக்கப்பட்டு, முக்தி பெற வழிவகுக்கும் இந்த கோட்பாடு யாருக்கெல்லாம் கற்றுத் தரவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
17. நரஸிம்ஹ தாபநீய உபநிஷத்
  இதில் இரண்டு உபநிஷத்துக்கள் உள்ளன.
1. நரஸிம்ஹ பூர்வ தாபநீய உபநிஷத்.
2. நரஸிம்ஹ உத்தர தாபநீய உபநிஷத்.
1. நரஸிம்ஹ பூர்வ தாபநீய உபநிஷத்-இது ஐந்து உபநிஷத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அ. இதில், பாதி மனிதன் பாதி சிங்கமாகிய நரஸிம்ஹனின் வடிவம் வர்ணிக்கப்படுகிறது.
ஆ. இதில் மரண பயத்தை வெல்லும் நரஸிம்ஹ மந்திரம் உள்ளது.
இ. தேவர்கள், நரஸிம்ஹ மந்திரத்தைக் குறித்து எழுப்பிய வினாக்களுக்கு, ப்ரஹ்மனும் முனிவர்களும் அளித்த பதில்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
ஈ. இதில், நரஸிம்ஹ மந்திரத்தின் பகுதிகளான, ப்ரணவ மந்திரம், சாவித்ரி மந்திரம், யஜுர் லக்ஷ்மி மந்திரம் மற்றும் நரஸிம்ஹ காயத்ரி ஆகியவை ப்ரஹ்மனால் தேவர்களுக்கு உபதேஸிக்கப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
உ. இதில், ப்ரஹ்மன் ரிஷிகளுக்கு மஹாசக்ரம் அல்லது ஸுதர்சன சக்ரத்தின் பெருமையை விளக்குவது காணப்படுகிறது.
2. நரஸிம்ஹ உத்தர தாபநீய உபநிஷத்-
இதில், ஒன்பது அத்யாயங்கள் உள்ளன. இதில் முதல் அத்யாயத்தில், ‘ஓம்’’ என்பதில் அமைந்துள்ள ‘அ,உ,ம’ என்ற எழுத்துக்களின் விபரம் காணப்படுகிறது. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் மற்றும் தூரிய நிலை ஆகியவை விவரிக்கப்படுகின்றன. இதில் உள்ள மற்ற அத்யாயங்களில் ‘‘ஓம்’’ என்னும் மந்திரம், தூரிய நிலை, நரஸிம்ஹனை வழிபட்டு தேவர்கள் அசுரர்களை வென்றது, ‘‘ஓம்’’ என்பதை த்யானிப்பது, நரஸிம்ஹனை த்யானிப்பது, இதனால் ப்ரஹ்மத்தை அடைவது, ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
ஸம்ஹிதைகள்
வேதங்களின் முதல் பகுதியாகவும், மிகப் பழமை யானதாகவும் இருப்பவை ஸம்ஹிதைகள். ‘ஸம்ஹிதைகள்’ என்றால், ‘தொகுப்பு’ என்று பொருள்படும். வேதத்தின் இந்தப் பகுதியில், புனிதமான வழிபாட்டிற்குரிய மந்திரங்கள் உள்ளன. இந்த மந்திரங்கள், தேவர்கள் மற்றும் அவர் தம் தேவியரை புகழ்ந்து போற்றுவதாக உள்ளன. வேதங்களின் மற்ற பகுதிகளான ப்ராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிஷத்துக்களுக்கு ஆதாரமாக இருப்பவை ஸம்ஹிதைகள்.
இந்த ஸம்ஹிதைகளில், அண்டத்தைப் படைத்த மிக உயர்ந்த பரப்ரஹ்மத்தைத் துதிக்கும் பாடல்கள் உள்ளன. இவற்றில், மந்திரங்கள் துதிப்பாடல்களாக அமைந்துள்ளன. மிக உயர்ந்த பரப்ரஹ்மத்தைத் தவிர அதன் சரீரமாய் இருக்கும் தேவதைகளும் வணங்கப்படுகின்றன. துதிப்பாடல்கள் வடிவில் அமைந்த மந்திரங்கள், பல்வேறு வேள்விகள் நடத்தப்படுகையில், குறிப்பிட்ட தேவதையை மகிழ் விக்கவும் பாடப்படுகின்றன. இந்த மந்திரங்கள், தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்காகவும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சரியாக ஆற்று வதற்கான திறமையை வழங்கவும் ஓதப்படுகின்றன. இவற்றில், அண்டத்தின் படைப்பைக் குறித்த குறிப்புகள், தெய்வீகம், இயற்கையின் குணங்கள், அன்றாட வாழ்க்கை மற்றும் நடத்தையை விவரிக்கும் மந்திரங்கள் உள்ளன. சூதாட்டத்தின் தீமையை விளக்கும் மந்திரங்களும் உள்ளன. இந்த மந்திரங்கள் வேதத்தில் கற்பிக்கப்பட்டுள்ளபடி, சரியான முறையில், சரியான ஒலியோடு உச்சரிக்கப்பட வேண்டும்.
ஸம்ஹிதைகளில் இந்திரன், வருணன், யமன், சூரியன் மற்றும் திரிமூர்த்திகள் என்றழைக்கப்படும் ப்ரஹ்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனை வழிபடும் மந்திரங்கள் உள்ளன.
மொத்தம் ஐந்து ஸம்ஹிதைகள் உள்ளன. அவை ரிக்வேத ஸம்ஹிதை, ஸுக்ல யஜுர் வேத ஸம்ஹிதை, கிருஷ்ண யஜுர் வேத ஸம்ஹிதை, சாம வேத ஸம்ஹிதை மற்றும் அதர்வ வேத ஸம்ஹிதை என்று தொகுக்கப் பட்டுள்ளன..
நான்கு வேதங்களிலும் சேர்ந்து ஸம்ஹிதைகளுக்கு 1,180 சாகைகளும், 20,379 மந்திரங்களும் உள்ளன. இவற்றுள் ரிக் வேதத்தில் 10,552 மந்திரங்கள் (சாகைகள்) யஜுர் வேதத்தில் 1,975. சாம வேதத்தில் 1,875. அதர்வண வேதத்தில் 5,977 மந்திரங்கள். இந்த மந்திரங்கள் அமைதியாக மனதில் உச்சரிக்கப்படுகையில் மிகவும் பயனுள்ளவை யாகின்றன என்கிறது அக்நி புராணம்.
ப்ராஹ்மணங்கள்
ப்ராஹ்மணங்கள், வேதத்தின் இரண்டாவது பகுதி யாகும். இவை உரைநடையில் அமைந்துள்ளன. இவை ஸம்ஹிதையில் உள்ள மந்திரங்களின் பொருளை விளக்கு கின்றன. வேள்விகள் நடத்தப்படவேண்டிய முறையைத் தெரிவிக்கும் இவை, கர்ம காண்டத்துடன் தொடர்பு கொண்டவை. சடங்குகளை விவரிப்பவை. இந்த சடங்கு களின் பொருள், பல வழிகளில் விளக்கப்படுகிறது. இவை களை, வேதங்களின் ‘‘சமய சித்தாந்தவியல் கட்டுரைகள்’’ என்னலாம். இவை வேள்வி, சடங்குகள் ஆற்றப்பட வேண்டியதற்கு தக்க வழிமுறைகள், சட்டங்கள், ஒழுங்கு முறைகள், ஆகியவற்றை மிக நுணுக்கமாக விளக்குகின்றன. சமய தொடர்பான கடமைகளை எடுத்துரைக்கின்றன. எந்த பலனுக்காக, எந்த வேள்வி நடத்தப்படவேண்டும் என்பதை தெளிவாக்குகிறது.
மந்திரங்கள் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும், அவற்றிற்கு என்ன பொருள், எந்த தேவதைக்கு படைக்கப்பட வேண்டும், அதற்கான வழிமுறை, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை மிக விரிந்த அளவில் விளக்குகின்றன.
வேதங்களின் அழிவற்ற தன்மை, பண்டை வீரர்களின் பெருமை, அண்டத்தின் படைப்பு ஆகியவற்றை ப்ராஹ் மணங்கள் விளக்குகின்றன.
ப்ராஹ்மணங்களில் விதிக்கப்பட்ட வழிமுறைகளை சற்றும் பிசகாமல் பின்பற்றி ஒருவர் வேள்வி நடத்துவா ரானால், அவர் விரும்பும் பலன் உறுதியாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த மந்திரங்களின் பொருளுணர்ந்து ஒருவர் உச்சரிப்பாராகில், அவர், இயற்கையையும், அதை நிர்வகிக்கும் தேவதைகளைக் கட்டுப்படுத்துமளவிற்கு வலிமை பெற்றவர் ஆகிறார்.
ப்ராஹ்மணங்களில் அதிக முக்யத்வத்தைப் பெறுவது, அக்நி தேவதை. ப்ராஹ்மணங்கள், ‘‘விதி’’ மற்றும், ‘‘அர்த்தவாதம்’’ என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. விதியில், வேள்விகள் நடத்த வேண்டிய முறை விளக்கப்பட்டுள்ளது. அர்த்தவாதம், சடங்குகள், தேவதை களின் பெருமை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடுகிறது.
வேதத்திலுள்ள ஸம்ஹிதைகள் ஒவ்வொன்றும் ஓர் ப்ராஹ்மணத்துடன் தொடர்பு கொண்டதாக 1,180 ப்ராஹ் மணங்கள் இருந்தன. ஆனால், இப்பொழுது இருப்பவை 22 ப்ராஹ்மணங்கள் மட்டுமே.
இவை:- 1. ஐதரேய ப்ராஹ்மணம்; 2. சாந்தோக்ய மந்த்ர ப்ராஹ்மணம்; 3. தேவதத்யாய ப்ராஹ்மணம்; 4. கோபத ப்ராஹ்மணம்; 5. ஜைமிநீய ஆர்ஷேய ப்ராஹ்மணம்; 6.ஜைமிநீய ப்ராஹ்மணம், 7. ஜைமிநீய உபநிஷத் ப்ராஹ்மணம்; 8. காண்வ சதபத ப்ராஹ்மணம்; 9. கடக ப்ராஹ்மணம்; 10. கௌஷீதகி ப்ராஹ்மணம்; 11. கௌதும ஆர்ஷேய ப்ராஹ்மணம்; 12. சாமவிதான ப்ராஹ்மணம்; 13.ஸம்ஹிதோபநிஷத் ப்ராஹ்மணம்; 14. சதபத ப்ராஹ்மணம்; 15. சட்விம்ஶ ப்ராஹ்மணம்; 16. சாங்காயன ப்ராஹ்மணம்; 17. தைத்திரீய ப்ராஹ்மணம்; 18. தைத்திரீய சார்தி ப்ராஹ்மணம்; 19. தாண்டிய ப்ராஹ்மணம்; 20. வாதூல அன்வாக்யான ப்ராஹ்மணம்; 21. வம்ச ப்ராஹ்மணம்; 22.அழிந்துபோன ப்ராஹ்மணங்களின் பகுதிகள்’.
ஆரண்யகங்கள்
வேதத்தில், த்யானம் தொடர்பானவை ஆரண்யகங்கள். இவை ப்ராஹ்மணங்களின் பகுதியாக கருதப்படுகிறது. இது, காடுகளில் பயிலப்படும் நூலாகும். இவை அண்டமளாவிய பொருள்வகைக்கு அப்பாற்பட்ட வற்றைக் குறிக்கும் சொற் களின் பொருளை விளக்குகின்றன. இவற்றைக் குறித்த அடையாளக் குறியீடுகள், தத்துவங்கள் மற்றும் மறைந் திருக்கும் அர்த்தங்களைக் காட்டித் தருகின்றன. ஸம்ஹிதை யில் உள்ள மந்திரங்களின் ஆழ் பொருளைக் கற்றுத் தருகின்றன. உபாஸனங்களைக் கற்பிக்கின்றன.
வடமொழியில் ‘‘ஆரண்யம்’’ என்றால், ‘காடுகள்’. ஆரண்யகங்களில் உண்மையைத் தேடி, தனிமையான வாழ்வை மேற்கொள்ள விரும்பும் தவயோகிகளுக்கு ஆரண்யகங்கள் உதவுகின்றன. இது மூன்றாவது ஆச்ரமமான வானப்ரஸ்தத்தை நாடும் பக்தனுக்கானது. இறைவனை வழிபடும் முறைகளை வெகு விரிவாக எடுத்துரைக்கின்றன. ‘‘விதேஹி பக்தி’’ என்பதை வர்ணிக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில், எவ்வாறு அமர்ந்து, எந்தத் திசைநோக்கி, எந்த மந்திரங்களை உச்சரிக்கவேண்டும் என்பதை போதிக்கின்றன. இதனால், ஸம்ஹிதை மற்றும் ப்ராஹ்மணங்களில் காணப் படும் மந்திரங்களின் ஆழ்பொருள், வானப்ரஸ்தர்களுக்கு தெளிவாகிறது. ஆரண்யகங்கள், வேதாந்தம் அல்லது உபநிஷத்துகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. ஆரண்ய கங்கள் உபநிஷத்துடன் சேர்ந்து ‘ஞானகாண்ட’ மாகின்றன.
தற்காலத்தில் காணப்படும் ஆரண்யகங்கள்:- 1.ஐதரேய ஆரண்யகம்; 2. காடக ஆரண்யகம்; 3. மைத்ராயணீய ஆரண்யகம்; 4. சாங்காயன ஆரண்யகம்; 5. தைத்ரீய ஆரண்யகம்; 6. தாலவாகார ஆரண்யகம்.